Thursday, December 10, 2009

மஞ்சள் மயமாகும் ரேஷன் கடைகள்

தூசியும் துப்பட்டையுமாகக் காட்சியளிக்கும் ரேசன் கடைகள் புதுப்பொலிவு பெறத் தொடங்கியுள்ளன.



மளிகைக் கடைகள் எல்லாம் டிபார்ட்மென்டல் ஸ்டோர், செயின் ஸ்டோர்ஸ், மெகா ஷாப்பிங் மால் என்று மாறிவரும் காலம் இது. ஆனால், அதிகமான மக்கள் வந்து செல்லும் ரேசன் கடைகளோ, அதே அழுக்கு பிடித்த கடைகளாகவும், சாக்குப்பை தூசியும் மண்ண்ணெய் வாடையும் வீசும் இடமாகவும்தான் இருக்கின்றன. இந்த நிலையை மாற்றுவதற்கு கூட்டுறவுத் துறை எடுத்துள்ள முயற்சியின் காரணமாக, ரேசன் கடைகளும் அழகு பெற ஆரம்பித்துள்ளன.

நவீனமயத்தின் முதல் கட்டமாக, ரேசன் கடைகளில் ரசீது இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, கடைகளை பொலிவுபடுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் 11 ரேசன் கடைகள் ஒரே மாதிரியான தோற்றத்தில் புது பொலிவு பெற்றுள்ளன. அண்ணாநகரில் 5 கடைகளும், ராயபுரம் காசி தோட்டம் பகுதியில் 2 கடைகளும், வண்ணாரப்பேட்டை மணிகண்டன் தெருவில் 2 கடைகளும், செங்குன்றத்தில் 2 கடைகளும் புதுப்பொலிவு பெற்றுள்ளன.

மஞ்சள் நிற பெயின்ட் அடித்து, பளிச்சென புத்தம்புது கடைகளைப் போல காட்சி அளிக்கின்றன. பில் போடும் இடம் வரவேற்பு அறையை போல அமைக்கப்பட்டுள்ளது.
வங்கிகளை போல கண்ணாடி கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தரை சமதளமாக சீராக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள் முறையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன. பாமாயில், ஆட்டா மாவு போன்றவற்றை அடுக்கி வைக்க இரும்பு ரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன. பெயர் பலகையும் புதிய வடிவம் பெற்றுள்ளது. பணியாளர்களுக்கு சீருடையும் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திரநாத் ஸ்வைன் கூறுகையில், ‘‘உணவுப் பொருள்களை விநியோகிக்கும் ரேசன் கடைகள் சுத்தமாக இருப்பது அவசியம். மாறிவரும் உலகில் மக்கள் விரும்பும் வகையில் கடைகளின் தோற்றம் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு ரேசன் கடைகள் பொலிவூட்டப்படுகின்றன’’ என்றார்.

செய்தி: படம்: நன்றி: தினகரன்

Tuesday, December 8, 2009

அரசியலில் இருந்து கலைஞர் ஓய்வு பெறக்கூடாது: மு.க.ஸ்டாலின்

முதல்- அமைச்சர் கருணாநிதி சமீபத்தில் ஒரு விழாவில் பேசும்போது, கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பொதுமக்களில் ஒருவராக இருப்பேன் என்று கூறினார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு அளிக்கும் பதில் என்ன என்பதை அறிய பலரும் ஆவலாக இருந்தனர்.

இந்த நிலையில் கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக, துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று எழும்பூரில் உள்ள கூவம் ஆற்றில் நடைபெறும் சீரமைப்பு பணியை நேரில் பார்த்தார்.

அப்போது பத்திரிகையாளர்கள், முதல்-அமைச்சர் கருணாநிதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு, அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருக்கிறாரே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர்.

இதற்கு துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-

ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் கலைஞர். அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெறக்கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

செய்தி: நன்றி: மாலைமலர்

Sunday, November 22, 2009

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ராசாத்தி சாமி தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில், முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனுடன் சாமி தரிசனம் செய்தார்.

முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யனுடன் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார்.

தி.மு.க., நகரச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

கோவிலில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்தார். பின், கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தராஜ பெருமாள், ஆதிமூலநாதர் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

செய்தி: நன்றி: தினமலர்

Thursday, November 19, 2009

தனக்கு வந்தால் 'அலறல் வலி'.. பிறர்க்கு வந்தால் 'மெளன வலியா?'- ஜெ. கேள்வி

தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கருணாநிதிக்கு அது 'மௌன வலி'யாகத்தான் இருக்கும். தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது டெல்லி வரை ஓங்கி ஒலிக்கக் கூடிய 'அலறல் வலி'யாக இருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், நம் மௌன வலி யாருக்கு தெரியப் போகிறது என்று கூறியிருந்தார்.

இதையடுத்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

'நம் மௌன வலி; யாருக்குத் தெரியப் போகிறது?' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டு தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் சந்தர்ப்பவாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

தன்னுடைய அறிக்கையில் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்ததாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் நின்றால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த கருணாநிதி, 1983ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக என்று கூறி தான் வகித்துவந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1984ம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

இதிலிருந்தே தேர்தல் தோல்வியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சுயநலத்துடன் கருணாநிதியால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் அது என்பது தெளிவாகிறது.

1991ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் எனது தலைமையில் அதிமுக 164 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றி அடைந்த நேரத்தில், ஒற்றை எண்ணில் ஒரே இடத்தில் வெற்றி பெற்று படுதோல்வியை தழுவிய கருணாநிதி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

அப்போதும் அவமானம் தாங்காமல் தனி நபராக ஆளும் கட்சியை எதிர்கொள்ள துணிவில்லாமல் கருணாநிதி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாரே தவிர எந்த லட்சியத் திற்காகவோ கொள்கைக்காகவோ தியாகம் செய்யவில்லை.

அடுத்ததாக இலங்கைத் தமிழர்களுக்காக இருமுறை ஆட்சியை இழந்ததாக கூறியிருக்கிறார் கருணாநிதி. உண்மை நிலை என்ன வென்றால் 1976ம் ஆண்டு ஊழல் புரிந்ததற்காகவும், 1991ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காகவும் தான் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

இவ்வளவு வாய்கிழியப் பேசும் கருணாநிதி, 2008ம் ஆண்டு தான் தாங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசின் உதவியோடு இலங்கை ராணுவம் அங்குள்ள தமிழர்களை கொன்று குவித்தபோது என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பற்றி ஒருவரி கூட தெரிவிக்கவில்லையே.

ஒரு வேளை அவர் நடத்திய கபட நாடகங்களான அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், மனிதச் சங்கிலி போராட்டம் என்று அறிவித்து அனைவரையும் கொட்டும் மழையில் நனையவிட்டு தான் மட்டும் தன் மகனுடன் சீருந்தில் பவனி வந்தது; பிரதமருக்கு தந்தி கொடுங்கள் என்று அறிவித்தது,

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என அறிவித்தது, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது; உலகத்தில் இதுவரை யாருமே நடத்தியிராத 3 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றை மனதில் வைத்துத்தான் அறப் போராட்டங்கள் நடத்தியதாக தனது அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார் போலும்.

கருணாநிதிக்கு உண்மையான தமிழர் பற்று இருந்திருக்குமானால், 2008ம் ஆண்டு துவக்கத்திலேயே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். இதை கருணாநிதி செய்திருப்பாரேயானால் அப்பொழுதே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். தமிழினம் அழிவது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.

இதைச் செய்யாததன் மூலம் தமிழினத்திற்கு மிகப் பெரிய துரோகத்தை கருணாநிதி இழைத்து விட்டார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட கருணாநிதி முக்கிய காரணமாகி விட்டார்.

தன்னலம் காரணமாக தன் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்கும் வகையில் பிரபாகரன் தீவிரவாதி அல்ல, என் நண்பன் என்று தான் கூறியதையும், நாங்களே அடிமைகளாக இருக்கிறோம் என்று கூறி இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் தன்னுடைய இயலாமையை தெரிவித்ததையும் மறந்து தற்போது பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி.

வீரம் என்கிற போராடும் மன வலிமை தன்னிடம் இல்லை என்பதையும், தன் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் செயல்படும் விவேகம் தன்னிடத்தில் மேலோங்கி நிற்பதையும் தனது அறிக்கையின் மூலம் கருணாநிதி தெளிவுபட கூறியிருக்கிறார்.

தமிழர்களுக்கு தமிழினத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் கருணாநிதிக்கு அது 'மௌன வலி' ஆகத்தான் இருக்கும். தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது டெல்லி வரை ஓங்கி ஒலிக்கக் கூடிய 'அலறல் வலி' ஆக இருக்கும். இதுதான் கருணாநிதியின் தத்துவம்.

இந்த மௌன வலியை மக்கள் நம்பத் தயாராக இல்லை. தமிழனத்திற்கு கருணாநிதி இழைத்த துரோகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா


செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Tuesday, November 17, 2009

விடுதலைப் புலிகள் - விளைவுகளை எண்ணி மவுனமாக அழுகிறோம் - கருணாநிதி

முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல் இலங்கை பிரச்னைக்காக திமுக குரல் எழுப்பியதோடு நில்லாமல், இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும் நடத்திய அறப்போராட்டங்களும் சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை தூக்கி எறிந்த நிகழ்வுகளும் இரு முறை ஆட்சியையே இழந்த சம்பவங்களும் நடந்தன. தி.மு.க. சார்பில் நிதியாக தமிழர்களிடமிருந்து சேர்த்துக் கொடுத்த மாசறு காசுகள் செல்லாக் காசுகளாக மாறிய நிகழ்ச்சியும்; டெசோ இயக்கத்தின் சார்பில் நானும், வீரமணியும், பழ. நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் பேரணிகளை நடத்தியதை தொடர்ந்து மதுரையில் டி.யு.எல்.எப். சார்பாக அமிர்தலிங்கம், புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் ரத்தின சபாபதி, டி.இ.எல்.எப். ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். வரதராஜப்பெருமாள், பிளாட் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்ட மாநாட்டில் என்.டி. ராமராவ், வாஜ்பய், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணியம் சுவாமி மற்றும் பலர் போராளிகளிடையே சகோதர ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். அந்த மாநாட்டிற்கு எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர் என்பவர் வந்திருந்தாரே தவிர, பிரபாகரன் வரவில்லை.

முதலமைச்சராக இருந்து கொண்டே, இந்தியாவிற்கு திரும்பி வந்த அமைதிப் படையை வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்து, தமிழ்நாட்டின் உணர்வை நான் வெளிப்படுத்திய நிகழ்வு இலங்கையில் நடந்த விடுதலைப் போராட்டத்திற்கு நமது தாய் மண்ணிலிருந்து நீட்டப்பட்ட ஆதரவுக் கரம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. ஆனால் அங்கிருந்த ஒரு சிலருக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு மிக லேசாகவே தெரிந்தது. வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு போர் முனையில் விவேகத்தையும் பயன்படுத்தவேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை அலட்சியப்படுத்தி விட்டார்கள். ஜனநாயக ரீதியான ஒரு வாய்ப்பு வாசற்படி வரையில் வந்தபோது, அதை எட்டி உதைத்து விட்டனர்.

அண்மையில் சென்னை வந்த இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாண முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார். 2003ல் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையிலிருந்து தானாக வெளியேறினார். 2005 டோக்கியோ பேச்சுவார்த்தையிலும் தமிழர் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார். 2005 அதிபர் தேர்தலில் தமிழர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கச் செய்தார். தேர்தலில் பங்கேற்று இருந்தால் தமிழர் மனநிலை என்ன என்பதை நாடு அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்கு தர பிரபாகரன் தவறி விட்டார்’’ என்று கூறியிருக்கிறார்.

அதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர் தந்திரத்தை எதிர்கால கணிப்போடு கையாளவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். சகோதர யுத்தத்தின் காரணமாக மாத்தையாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றியும், டெலோ சிறீ சபாரத்தினத்தை சவமாக ஆக்கியும், பத்மநாபாவை கொன்றும், தொடக்கத்திலிருந்து போராளி துணைவராக விளங்கிய அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் பலியாக்கியும், ரெலோ இயக்கத்தை சேர்ந்த மனோ மாஸ்டர் என்ற பஞ்சலிங்கத்தையும் தலைவர் குலசேகரம் தேவசேகரத்தையும், தலைசிறந்த அரசியல் அறிஞர் நீலன் திருச்செல்வத்தையும், சுந்தரம் எனப்பட்ட சிவசண்முகமூர்த்தியையும், ஜார்ஜ், சபாலிங்கம், சாம் தம்பிமுத்து, கலா தம்பிமுத்து மற்றும் பிளாட் இயக்க யோதீஸ்வரனையும், வாசுதேவாவையும் மரணக் குழியிலே தள்ளியும் விடுதலை புலிகள் தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு தொலைத்துவிட்ட காரியங்களாக அமைந்தன என்பதை இந்த போர்முனை சரித்திரம் சொல்லி புலம்பிக் கொண்டுதானிருக்கிறது. யார் மீதும் குற்றம் சொல்வதற்காக நான் இதை எழுதவில்லை. இலங்கையில் 2004 தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த ஒரு சில நாட்களுக்குள் கிழக்கு இலங்கையில் பிரபாகரன், கருணா படைகளிடையே யுத்தம் ஏற்பட்டு அதிலே 20 போராளிகளும் 2 சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள்.

நம்மை நாமே கொன்று குவித்துக் கொண்டது மாத்திரமல்ல. முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறிய காரணத்தால் நம் பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால் நம் தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரை இழக்க நேரிட்டது?

இளம் சிறார்கள் எத்தனை பேர் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர்? அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள்? எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாடு பஞ்சைகளாக, பராரிகளாக செல்ல நேரிட்டது? தங்கள் வாழ்க்கையை தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று? எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது? இதற்கெல்லாம் காரணம் என்ன?

பிரபாகரன் மனைவி மக்கள் கதிதான் என்ன? இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழர் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்கள் அற்ப ஆயுளில் போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில்தான் இதனை எழுத நேரிட்டது.

என்னையும், தம்பி மாறனையும் 1989ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி டெல்லிக்கு அழைத்து ஈழப் பிரச்னை குறித்து இரண்டு நாள் உரையாடி, ‘நீங்களும், மாறனும், வைகோவும் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு பிரபாகரனுடன் பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் செலவிடுங்கள். தேவையான ஏற்பாடுகளை செய்து தருகிறேன். அவர் கோரிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்’ என்றெல்லாம் எங்களுக்கு சொல்லி உறுதியளித்தார். அந்த இளந்தலைவர் இந்திய மண்ணில் அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். அது ஈழ விடுதலைப் போராட்ட தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று.

அடுத்து 2005ல் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சேவும் அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் போட்டியிட்டார்கள். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் புலிகளுடன் அமைதிப் பேச்சை தொடருவேன் என்றார் ரணில்.

அந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று விடுதலைப் புலிகள் அறிவுறுத்தினர். அப்போது ரணில் சொன்னதைதான் இப்போது பேட்டியிலும் குறிப்பிட்டுள்ளார். அந்த தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றார். அவருக்கு 48,87,152 (50.29 சதவிகிதம்) வாக்குகளும், ரணிலுக்கு 47,06,366 (48.43 சதவிகிதம்) வாக்குகளும் கிடைத்தன. 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வி அடைந்தார். ஏழு இலட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்த காரணத்தால் ஏற்பட்ட முடிவை பார்த்தால், விடுதலைப் புலிகள் அவசரப்பட்டு அன்று எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எங்கே போய் முடிந்தன என்பது புரியும். அதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? நம் மௌன வலிதான் யாருக்கு தெரியப் போகிறது? இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


செய்தி: நன்றி:தினகரன்

Tuesday, November 10, 2009

கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும்: துரைமுருகன்

ஜாதிகளை ஒழிக்கப் பாடுபட்ட முதல்வர் கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் 100 வீடுகள் கொண்ட சமத்துவப்புரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் நேற்று திறந்து வைத்தார்.

இந்த விழாவில் பேசிய துரைமுருகன்,

ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூட தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு ஆலய பிரவேசம் செய்தார். இப்படி பல தலைவர்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும் என ஒவ்வொரு விதத்தில் போராடி விட்டு அவர்கள் தங்களது இடங்களுக்கே திரும்பி சென்று விட்டனர்.

ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி மட்டும்தான் இதிலிருந்து வித்தியாசமாக யோசித்து சமத்துவபுரம் என்ற உன்னதத் திட்டத்தை கொண்டு வந்து எல்லா ஜாதி மக்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்தி ஜாதி ஒழிக்க பாடுபடுகிறார்.

இதற்காக முதல்வர் கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும். ஆனால் தரமாட்டார்கள். காரணம் இவர் தமிழன் என்பதால்தான்.

ஏன்?, இந்தியாவில் தரப்படும் சாகித்ய அகடாமி விருதுக்கு கூட தகுதியானவர் தான் கருணாநிதி. அவர் எழுதாத இலக்கியங்களா... அவரைப் போல யார் எழுதியிருக்கிறார்கள்?. அப்படிப்பட்ட தலைவருக்கு அவ்விருது கூட வழங்கப்படவில்லை. காரணம் இவர் தமிழன்.

மு.க.ஸ்டாலினை பாரட்டும் தகுதி எனக்கு இருக்கிறது. சிறு வயது முதலே அவரது வளர்ச்சியை, நடவடிக்கையை பார்த்து வருபவன் நான். அண்ணா, கலைஞருடன் இருந்திருக்கிறேன். தற்போது ஸ்டாலினுடன் இருப்பதை பெருமையாக இருப்பதை கருதுகிறேன். வேறு கட்சி நிழல் கூட படாமல், வளர்ந்து விட்டவன் நான் என்றார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Tuesday, November 3, 2009

செயல்படாத எதிர்கட்சித் தலைவர்கள் - முதலிடம் ஜெ.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வரலாறு காணாத வகையில் செயலிழந்து போயுள்ளன அல்லது சிதறிப் போய்க் கிடக்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஆளுங்கட்களின் செயல்பாடுகள் கேட்க நாதியில்லாமல் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உட்கட்சிப் பூசல், கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதில் ஏற்படும் சிரமங்கள், ஆளுங்கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சிகளுக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரசியல் திறனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை தலைவர் பித்யூத் சக்ரவர்த்தி கூறுகையில், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் முழுமையாக சிதறிப் போய்க் கிடக்கின்றன.

மத்தியிலும் கூட இதே நிலைதான். எதிர்க்கட்சி என்பது அரசைக் கட்டுப்படுத்துவதில், கண்காணிப்பதில் கடிவாளம் போல இருக்கும் என்ற தோற்றம் தற்போது மறைந்து விட்டது. மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி எதிர்க்கட்சிகள் செயலிழந்து போய்க் கிடக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தில், 2வது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் திறமையாக செயல்பட வேண்டிய காங்கிரஸ் அங்கு உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவிப்பதால் எதிர்க்கட்சியாக அதன் செயல்பாடு பூஜ்யமாக உள்ளது.

ராஜஸ்தானில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளுக்கு நிகராக எதிர்க்கட்சியான பாஜக இல்லை. தேங்கிப் போய்க் கிடக்கிறது பாஜக.

தமிழகத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. இங்கு கிட்டத்தட்ட எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு தோற்றம் அளிக்கிறது. வழக்கமான முறையிலான எதிர்ப்புகளையோ அல்லது போராட்டங்களையோ, அரசின் மீதான விமர்சனங்களோ கூட இங்கு கேட்பதில்லை. அடுத்து வரப் போகும் சட்டசபைத் தேர்தல் குறித்தும், இடைத் தேர்தல் குறித்தும், கூட்டணிகள் குறித்துமே அத்தனை பேரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆறு மாதங்களாகவே முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைவர் சென்னையில் இல்லை. சமீபத்தில்தான் அவர் கொடநாடு போய் திரும்பி வந்தார்.

பிரதான எதிர்க்கட்சியின் செயல்பாடு கடந்த ஆறு மாதங்களாக இல்லாததால் திமுக அரசின் செயல்பாடு எந்தவிதத்திலும் பாதிப்பை சந்திக்கவில்லை. கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. மேலும் வெற்று அறிக்கைகள் மூலம் மட்டுமே அரசை விமர்சித்து வரும் ஜெயலலிதாவால் ஆளும் கட்சி்க்கு எந்த நெருக்கடியும் இல்லை.

இதேபோல கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் முறையே காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை திறமையான எதிர்க்கட்சிகளாக செயல்படாத நிலை காணப்படுகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் இன்னும் முழுமையான எதிர்க்கட்சியாக செயல்படாமலேயே உள்ளது என்றார் சக்ரவர்த்தி.

அதேசமயம், மேற்கு வங்கம், உ.பி ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்களின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக உள்ளன. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் அரசின் தவறுகளை விமர்சிப்பதற்குப் பதில், வளர்ச்சி நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் செயல்படுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேபோலத்தான் உ.பியில் சமாஜ்வாடிக் கட்சி ஆக்கப்பூர்வமாக செயல்படாமல், வளர்ச்சி நடவடிக்கைகளே செயல்படாத வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

மேற்கு வங்க அரசு எதைச் செய்தாலும் அதைக் கடுமையாக எதிர்க்கிறார் மமதா பானர்ஜி. இதனால் அங்கு வளர்ச்சி நடவடிக்கைள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்தியாவிலேயே உருப்படியான எதிர்க்கட்சி உள்ள மாநிலம் எது என்றால் ஜம்மு காஷ்மீரைத்தான் சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். அங்கு மெஹபூபா முக்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி தேவையில்லாத பிரச்சினகைளுக்கெல்லாம் போராட்டம் நடத்தாமல், மக்கள் விரோத நடவடிக்கைகளை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்து வருகிறது.

தீவிரவாத மனப்போக்குள்ளவர்களையும், தேசியத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களையும் அனுசரித்து நடந்து கொள்கிறது மக்கள் ஜனநாயகக் கட்சி. இன்னும் சொல்லப் போனால் தீவிரவாத மனப்போக்குள்ளவர்களை மாற்றி தேசியத்திற்கு அது அழைத்து வரும் பணியையும் கூடவே செய்கிறது.

மக்கள் ஜனநாயகக் கட்சி எப்போதும் விழிப்புடன் இருப்பதால் ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி தவறுகள் செய்யாமல் தவிர்ப்பதில் அக்கறையுடன் உள்ளது. இப்படி ஆளுங்கட்சி தனது பணியில் கவனத்துடன் இருப்பதாலும், எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி ஆளுங்கட்சியை தொடர்ந்து கண்காணித்து வருவதாலும் அங்கு தவறுகள் நடப்பது வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டிலிருந்தே ஜம்மு காஷ்மீரில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

செய்தி: நன்றி:தட்ஸ்தமிழ்

Sunday, October 25, 2009

தன் முகமூடியை தானே கிழித்த கருணாநிதி - ஜெ

கலைஞர் உயிர் காக்கும் திட்டம் தொடர்பான விளம்பரத்தில் எம தர்மனின் படத்தை வெளியிட்டதன் மூலம் முதல்வர் கருணாநிதியின் கடவுள் நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது. இதன் மூலம் தன் முகமூடியை தானே கிழித்துக் கொண்டுள்ளார் கருணாநிதி என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் படித்தவர், காஞ்சிப் பாசறையில் வளர்ந்தவர் என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் எமதர்மர் உயிரைப் பறிப்பதைப் போலவும், அதை இவர் தடுப்பது போலவும் சித்தரித்து தன்னுடைய முகமூடியை தானே கிழித்துக் கொண்டு தன்னுடைய சுயரூபத்தை தன்னுடைய உண்மைத் தன்மையை தானே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ளும் திமுகவினரையும், தீ மிதிக்கும் கட்சிக்காரர்கள் மற்றும் அமைச்சர்களையும் அவ்வப்போது கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இந்து சமயக் கடவுள்களை கொச்சைப் படுத்தியும், நிந்தித்தும் தன்னை ஒரு நாத்திகர் போல் காட்டிக் கொண்டிருந்தார் கருணாநிதி.

ஆனால் கருணாநிதி குடும்பத்தினரோ இறைவழிபாட்டில் தனிக் கவனம் செலுத்துவதிலும், ஜோதிடர்களை கலந்தாலோசித்து அவர்கள் சொல்லும் பரிகாரங்கள் அத்தனையையும் செய்வதிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து வருகின்றனர்.

கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவதும் இதனால் ஏற்பட்டதே. அதனால்தான் மஞ்சள் துண்டு அணிவதன் மர்மத்தை கருணாநிதி இன்று வரை வெளிப்படுத்தவில்லை. பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தவர் என்றால் கருப்பு துண்டுதானே அணிய வேண்டும் என்று பலர் வினாக்களை எழுப்பியும் அதற்கு சரியான விளக்கத்தை கருணாநிதி இன்று வரை அளிக்கவில்லை.

கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று வழிபட்டதை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன.

இவருடைய வேடத்தை மெய்ப்பிக்கும் விதமாக திருக்குவளையில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை கருணாநிதி பெற்றுக் கொண்ட காட்சிகள் புகைப்படத்துடன் பத்திரிகைகளில் வெளிவந்தன.

ஆனால் தற்போது பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக எமதர்மர் உயிரை பறிப்பது போலவும், அதை கருணாநிதி தடுப்பது போலவும் தமிழக அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வளவு நாள் இலைமறை, காய்மறையாக இருந்த கருணாநிதியின் கடவுள் நம்பிக்கை தற்போது வெட்டவெளிச் சத்திற்கு வந்திருக்கிறது. தனது முகமூடியை தானே கிழித்துக் கொண்டிருக்கிறார்.

தானும், தன் குடும்ப உறுப்பினர்களும் தொடர்ந்து வளம் கொழிக்கும் அரசுப் பதவிகளை வகிக்க வேண்டும். அதன் மூலம் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இடம் பெற வேண்டும், என்பதுதான் கருணாநிதியின் ஒரே குறிக்கோள், ஒரே கொள்கை.

இதற்காக எந்தக் கொள்கையையும் கருணாநிதி விட்டுவிடத் தயாராக இருக்கிறார் என்பது அவருடைய நடவடிக்கைகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. அதனுடைய உச்சக்கட்டம்தான் உயிரைப் பறிக்கும் எமதர்மனையே தடுப்பவராக தன்னை காட்டிக் கொண்டிருக்கிறார். இதன் மூலம்தான் கொள்கை பிடிப்பு இல்லாதவர், உறுதியற்ற தன்மை உடையவர் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணாவின் கொள்கைகளையும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளையும், ஜனநாயகக் கோட்பாடுகளையும், தமிழர்களின் உரிமைகளையும் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருப்பவர் தானே கருணாநிதி .கருணாநிதியின் இந்த இரட்டை வேடத்தை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா


செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Wednesday, October 21, 2009

காலம் / எருமை மாடு படம் போட்டு 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'

காலம் / எருமை மாடு படம் எல்லாம் போட்டு 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'

காலம் ? காலன் ??

திட்டம் நல்ல திட்டம் தான். ஆனா அரசு எமன்/எருமை படம் எல்லாம் போட்டு ? அதுவும் பகுத்தறிவு பேசும் அரசு ? தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத அரசு ? ஹும்.




படம்: நன்றி: தினகரன்

அதிமுகவுடன் கூட்டணி இல்லை - கம்யூனிஸ்ட் கட்சிகள்

அதிமுகவுடன் இடது சாரி கட்சிகளுக்கு நிரந்தரமான கூட்டணி இல்லை என்றும் நாடாளுமன்ற தேர்தலில் வெறும் தேர்தல் உடன்பாடு மட்டுமே வைத்துக் கொண்டன என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்து உள்ளன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, இடது சாரி கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன.எனினும், இந்தக் கூட்டணி தேர்தலில் பெரிய அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை.

இதனையடுத்து, பாமக அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இது பற்றி அண்மையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியதால் எந்த பாதிப்பும் இல்லை என்று ஜெயலலிதா பதில் அளித்தார். இடதுசாரி கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றனவா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது பற்றி நீங்கள் அவர்களைத்தான் கேட்க வேண்டும் என கூறினார்.

இந்நிலையில் கூட்டணி பற்றி ஜெயலலிதா கூறிய கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், அதிமுகவுடன் செய்து கொண்ட உடன்பாடு கடந்த தேர்தலுடன் முடிந்து விட்டது என்று கூறினார்.அது தேர்தல் உடன்பாடே தவிர கூட்டணி அல்ல என்று அவர் தெரிவித்தார்.

மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத போக்கை கடைபிடித்தால் இடதுசாரி கட்சிகள் ஒத்த கருத்துக்கள் உள்ள கட்சியுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்று வரதராஜன் கூறினார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், கடந்த தேர்தலில் தனது கட்சி அதிமுகவுடன் வெறும் தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்துக்கொண்டது என்றும், அக்கட்சியுடன் நிரந்தர கூட்டணி ஏதுமில்லை என்றும் பதில் அளித்தார்.

ஏற்கனவே பாமக வெளியேறி விட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் இடதுசாரி கட்சிகளும் இல்லை என்று தெளிவாகியிருப்பதையடுத்து அந்த கூட்டணியில் தற்போது மதிமுக மட்டுமே உள்ளது.

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

Thursday, October 15, 2009

எம்பிக்கள் பயணத்தின் பின்னணி

திமுக கூட்டணி எம்பிக்களின் இலங்கை பயணத்தின் பின்னணி பற்றிய பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்துக்கு முன்பு இலங்கை அதிபர் ராஜபக்சே பல்வேறு நிபந்தனைகளுடன் முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் பற்றியும் தற்போது தெரிய வந்துள்ளது..
.
இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களை சந்திப்பதற்காக இலங்கை சென்ற திமுக கூட்டணி எம்பிக்கள் குழு நேற்று சென்னை திரும்பியது.

சர்வதேச அளவில் கடும் நெருக்கடி எழுந்த போதும், முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திக்க இதுவரை யாரையும் அனுமதிக்காமல் இருந்த அதிபர் ராஜபக்சே, தமிழக எம்பிக்கள் குழுவை மட்டும் எப்படி அனுமதித்தார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சே அண்மையில் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்திய அரசின் சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும் பிரதிநிதிகளை அனுப்பினால் அவர்களை முகாம்களில் உள்ள தமிழர்களை சந்தித்து நிலைமைகளை கண்டறிய அனுமதி அளிப்பதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இந்த பிரதிநிதிகள் குழுவில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோ, தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளோ இடம் பெறக்கூடாது என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.இந்த கடிதத்தை முதலமைச்சர் கருணாநிதி, பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வந்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழு , இந்திய அரசின் சார்பாகவோ, தமிழக அரசின் சார்பாகவோ செல்லத் தேவையில்லை என்று சிதம்பரத்தின் வாயிலாக முதலமைச்சரிடம் பிரதமர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதன்படி திமுககாங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் இக்குழுவில் இடம் பெற்றனர். அதே சமயம் இக்குழுவில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இடம்பெற காங்கிரஸ் தரப்பில் முதலில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

கூட்டணி கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரை குழுவில் இடம் பெற செய்ய டெல்லியில் பேசி முதலமைச்சர் கருணாநிதி அனுமதி பெற்று தந்ததாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே தமிழக எம்பிக்கள் குழுவில் திருமாவளவன் இடம் பெற்றார் எனத் தெரிகிறது. இந்த எம்.பி.க்கள் குழு இலங்கை செல்லும் முன் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.

அப்போது இலங்கையில் அந்நாட்டு அரசுப் பிரதிநிதிகள் வழிகாட்டுதலின் பேரில்தான் செயல்பட வேண்டும் என்றும், அங்கு யாரையும் தன்னிச்சையாக சந்தித்து பேசவோ, விவரங்களை சேகரிக்கவோ கூடாது என்றும் பத்திரிகையாளர்கள் யாரையும் சந்தித்து பேசக்கூடாது என்றும் கருணாநிதி எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக திருமாவளவனை எம்.பி.க்கள் குழுவை விட்டு எங்கும் வெளியே போகக்கூடாது என்று முதல்வர் தெரிவித்து அனுப்பியதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

5 நாள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பிய எம்.பி.க்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசக்கூடாது என்பதற்காகவே கருணாநிதி விமான நிலையத்திற்கு முன்கூட்டியே சென்று சுமார் 40 நிமிடம் காத்திருந்து அவர்களை அழைத்து கொண்டு அறிவாலயம் வந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த குழு வந்த சிறிது நேரத்திலேயே அவர்கள் யாரையும் பத்திரிகையாளர்களை சந்திக்க அனுமதிக்காமல் முதலமைச்சர் கருணாநிதி நிருபர்களை சந்தித்து பேசியதிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

5 நாட்கள் பயண விவரங்களை எம்.பி.க்கள் குழு வந்த 40 நிமிடத்திலேயே எப்படி அறிக்கையாக தயாரித்து தர முடிந்தது என்ற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது. இது தொடர்பாக திருமாவளவனை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளனர். ஆனால் பத்திரிகையாளர்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்த நிகழ்வுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக வைத்து பார்க்கும் போது தமிழக எம்பிக்கள் குழுவின் இலங்கை பயணம் அந்நாட்டு அரசுக்கு சார்பாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை என்றே அரசியல் பொது நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

Wednesday, October 14, 2009

திமுக- காங்கிரஸ் எம்.பிக்கள் with ராஜபக்சே

இலங்கை சென்றுள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழுவினர் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து அளவளாவினர். அவருக்குப் பொன்னாடை போர்த்தினர். தமிழ் மக்களை விரைவில் அவரவர் இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

அப்போது தமிழர் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பிறகே முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அந்தப் பகுதிகளில் மீண்டும் குடியமர்த்தப்படுவர் என தமிழக குழுவிடம் ராஜபக்சே தெரிவித்தார்.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.

முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக குழுவினர், கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களிடம் குறை கேட்டனர்.

மாலையில், வவுனியாவில் உள்ள மானிக் பார்ம் வளாகத்தில் உள்ள 5 முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை தமிழக குழுவினர் பார்வையிட்டனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு நிகழ்ச்சி, முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது. பின்னர் குழுவினர் பல பிரிவுகளாக சென்று தமிழ் அகதிகளிடம் குறை கேட்டனர்.

பின்னர் இந்திய வம்சாவளி தமிழ் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலையகப்பகுதிக்கு தமிழக குழுவினர் திங்கட்கிழமை சென்றிருந்தனர். இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பின் பேரில் அங்கு சென்றனர்.

திங்கள்கிழமை ஹட்டன் நகருக்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.

தேயிலை தோட்டங்கள் நிறைந்த நுவரேலியாவுக்கும் தமிழக குழுவினர் சென்றனர். தொண்டமான் பெயரில் அமைந்துள்ள தோட்டப்பயிர் பயிற்சி மையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். இரவில், மலையக பகுதியில் தமிழக குழுவினர் தங்கினார்கள்.

அதிபர் ராஜபக்சேவை தமிழக குழுவினர் திங்கட்கிழமை சந்தித்து பேசுவதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, நேற்று அந்த சந்திப்பு நடந்தது.

ராஜபக்சேவை சந்தித்த திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழுவினரை ராஜபக்சே, அவரது தம்பி பசில் ராஜபக்சே ஆகியோர் வரவேற்றனர். ராஜபக்சேவுக்கு தமிழக குழுவினர் பொன்னாடை போர்த்தினர். பசில் ராஜபக்சேவை, டி.ஆர். பாலு, கட்டித் தழுவிக் கொண்டார்.

தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பின்னர் திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் ராஜபக்சேவிடம் வலியுறுத்தினர். சந்திப்பின் போது இலங்கை அமைச்சர் [^] ஆறுமுகம் தொண்டமானும் உடனிருந்தார்.

முகாம் நிலை குறித்து திருப்தி!:

இந்த சந்திப்பு குறித்து இலங்கை அரசின் தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், அதிபரை சந்தித்த தமிழக குழுவினர், இடம் பெயர்ந்தோருக்கான அகதிகள் முகாம்கலில் உள்ள வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்துக் கொண்டனர்.

தங்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு அழைப்பு விடுத்ததற்காகவும், போதிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தற்காகவும் அவர்கள் அதிருபருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். தங்களை சந்திக்க அனுமதி அளித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ் மக்களை மறு குடியமர்த்தும் நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர்கள், அதுதொடர்பாக இலங்கை அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளையும் பாராட்டினர்.

மழைக்காலம் நெருங்கி வருவதால், அதற்குள் தமிழர்களை இடம் பெயரச் செய்ய வேண்டியது அவசியம் என்றும் திமுக - காங்கிரஸ் [^] கூட்டணிக் குழுவினர் அதிபரைக் கேட்டுக் கொண்டனர். அதற்குத் தேவையான நடவடிக்கை [^]கள் எடுக்கப்பட்டுள்ளதாக ராஜபக்சே தெரிவித்தார்.

அவர்களிடம் அதிபர் பேசுகையில், எந்தவகையான தீர்வாக இருந்தாலும் அது அனைத்து சமுதாயத்தினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.

இலங்கை பன்முக இனப் பிரிவுகளால் ஆன ஒரு நாடாகும். கொழும்பு நகரில் கிட்டத்தட்ட 65 ஆயிரம் தமிழர்கள் [^] வாழ்கிறார்கள்.

தமிழகத்திலிருந்து எம்.பிக்கள் குழு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இங்குள்ள மக்களின் நிலையை நீங்களே வந்து பார்த்து புரிந்து கொள்வது அவசியமாகும். ஏனென்றால் இடம் பெயர்ந்தோர் முகாம்கள் குறித்து வெளியில் அவதூறு பரப்பப்படுகிறது. விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள். தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை சரி பார்த்துக் கொள்ள இந்தப் பயணம் உதவியிருக்கும் என்றார்.

பின்னர் அதிபரின் ஆலோசகரும், தம்பியுமான பசில் ராஜபக்சே கூறுகையில், இன்னும் 2 நாட்களில் முகாம்களில் உள்ள இட நெருக்கடி, கூட்ட நெரிசல் குறையும் என்றார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Friday, October 9, 2009

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு


செய்தி: நன்றி:

Times of India

BBC

Thatstamil

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

2009ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் [^] பாரக் ஒபாமாவுக்கு வழங்கப்படுகிறது.

அமைதி நோபல் பரிசுக்காக மொத்தம் 205 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து பாரக் ஒபாமாவை நோபல் விருதுக் கமிட்டி தேர்வு செய்து அறிவித்துள்ளது.

இதுகுறித்து நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள செய்தியில், மக்களுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியமைக்காகவும், சர்வதேச ரீதியில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்க பாடுபட்டமைக்காகவும், சர்வதேச நாடுகளிடையே நல்லெண்ணத்தை உருவாக்க பாடுபட்டமைக்காகவும் பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு பெறும் ஒபாமாவுக்கு 1.4 மில்லியன் டாலர் பரிசும், தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.

Thursday, October 8, 2009

நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு கருணாநிதி பாராட்டு

நோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பிறந்து, பரோடா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பி.எஸ்.சி. பட்டம் பெற்று, பின்னர் அமெரிக்க நாட்டிலுள்ள ஓகையோ பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆய்வு முடித்து, முனைவர் பட்டம் பெற்றவர் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.

அமெரிக்க நாட்டில் வாழும் இவர் இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் நகரில் எம்.ஆர். மூலக்கூறு உயிரியல் ஆய்வுக் கூடத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிறார்.

இவர் உயிரினங்கள் அனைத்திலும் வேதியியல் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துகிற புரோட்டின்களை உருவாக்கும் ரிபோசெம் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தாமஸ் ஏ.ஸ்டெல்ட்ஸ், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஆடா இயோனத் ஆகியோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆய்வின் மூலம் நோய்களை எதிர்க்கும் புதிய நச்சு நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை உருவாக்குதல் தொடர்பான இவரது கண்டு பிடிப்புக்காக 2009-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக நிறுவப்பட்டுள்ள நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.

பெருமைக்குரிய இச்செய்தி கேட்டு முதல்-அமைச்சர் கருணாநிதி மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்து, விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனை மனதாரப் பாராட்டுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே நோபல் பரிசு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த சர்.சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகிய 2 விஞ்ஞானிகளை அடுத்து 3-வது தமிழ் விஞ்ஞானியாக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகிய நோபல் பரிசினைப் பெற்றுள்ளதன் மூலம் தமிழ்ச் சமுதாயமே மிகவும் பெருமையடைகிறது என்றும், இப்பெருமைக்குரிய விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு தமிழக அரசின் சார்பில் தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வதாகவும் முதல்-அமைச்சர் கருணாநிதி தனது பாராட்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

செய்தி: நன்றி: மாலைமலர்

வேதியியலில் நோபல் பரிசு: சாதனையின் சிகரத்தில் தமிழர் ராமகிருஷ்ணன்

அமெரிக்கர்களையும், ஐரோப்பியர்களையும் மட்டுமே அதிக அளவில் எட்டிப்பார்த்து வந்த நோபல்பரிசை தன்பக்கம் ஈர்த்து வெற்றி கண்டிருக்கிறார் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.

இதுவரை 5 இந்தியர்கள் மட்டுமே இந்த பரிசை பெற்றிருந்த நிலையில் 6-வது நபராக ராமகிருஷ்ணன் சேர்ந்துள்ளார். ஏற்கனவே விருது பெற்ற வர்களில் சர்.சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகியோர் தமிழர்கள். ராமகிருஷ்ணனும் இதில் இடம் பிடித்துள்ளார்.

மற்ற இந்தியர்கள் வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்றிருக்கும் நிலையில் தமிழர்கள் 3 பேருமே அறிவியல் துறை ஆராய்ச்சி மூலம் நோபல் பரிசு பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ராமகிருஷ்ணன் வேதியியல் துறையில் பெற்றுள்ளார். ராமகிருஷ்ணனின் ஆராய்ச்சி சாதாரணமானது அல்லது. உலகில் மிக உயரிய ஆராய்ச்சிகளில் இதுவும் ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பலகோடி செல்களை கொண்டதுதான் நமது உடல். மைக்ராஸ்கோப் மூலம் மட்டுமே பார்க்கக்கூடிய இந்த செல்லில் நியூகிளியஸ், நியூகிளியோலஸ், விசிகில், வேக்குல் உள்ளிட்ட 13 வகையான பொருட்கள் உண்டு. அதில் ரிபோசம் என்ற பொருளும் ஒன்று.

இந்த பொருட்கள் ஒவ் வொன்றும் ஒவ்வொரு வேலையை செய்கின்றன. அதில் ரிபோசம் புரோட்டீனை உற்பத்தி செய்யும். இதுதான் உடல்கூறு வேதியியல் பணிகளை கட்டுப்படுத்துகிறது. இது எப்படி வேலை செய்கிறது என்பதை கண்டுபிடித்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்க முடியும்.

எனவே ரிபோசம் செயல் பாட்டை ராமகிருஷ்ணன் யாடோயோனத், தாமஸ் ஸ்டீட்ஸ் ஆகிய விஞ்ஞானிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.

அதில் ரிபோசம் செயல்பாட்டை முழுமையாக கண்டுபிடித்து அது தொடர்பான முப்பரிமாண வரை படத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.

ரிபோசம் 25 நானோ மீட்டர் அளவு கொண்டது. அதாவது 1 மில்லி மீட்டரில் 10 லட்சம் பங்கில் ஒன்றுதான் 25 நானோ மீட்டர். இவ்வளவு குறுகிய அளவுள்ள பொருளின் பணியை துல்லியமாக கணித்து முப்பரிமாண படம் உருவாக்கி இருப்பது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. எனவேதான் 3 விஞ்ஞானிகளுக்கும் உலகில் உயரிய விருதான நோபல் பரிசை வழங்கி இருக்கிறார்கள்.

ராமகிருஷ்ணனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் சிதம்பரம். அங்குள்ள அக்ரகாரத்தில் அவரது வீடு உள்ளது. பள்ளி பருவத்திலேயே சிறந்த மாணவராக திகழ்ந்து உள்ளார்.

1952-ம் ஆண்டு பிறந்த ராமகிருஷ்ணன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.யூ.சி. படித்துள்ளார். குஜராத் மாநிலம் பரோடா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. படித்தார். அடுத்து அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்காக சென்றவர் ஓகியோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்றார்.

அடுத்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றியதுடன் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். பின்னர் யேல் பல்கலைக்கழகம், புரூக்கெலன் தேசிய ஆய்வுக்கூடம், யாத் பல்கலைக்கழகம் ஆகிய வற்றிலும் பணியாற்றினார்.

1999-ம் ஆண்டு இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்த அவர் அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதில் ரிபோசம் பற்றி தனது குழுவினருடன் 9 ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதில்தான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்து உள்ளது.

ராமகிருஷ்ணன் 1977-ம் ஆண்டில் இருந்து இதுவரை 95 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டு உள்ளார். ரிபோசம் பற்றி மட்டும் 3 கட்டுரைகள் எழுதி உள்ளார்.

நோபல் பரிசு கிடைத்து இருப்பது பற்றி ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

வேதியியல் ஆராய்ச்சியில் பங்களிப்பு செய்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். இத்துறையில் நோபல் பரிசு பெறும் மூவரில் என்னையும் தேர்ந்தெடுத்தது வியப்பு அளிக்கிறது. இந்த பரிசால் நான் கவுரவிக்கப்பட்டதாக உணர்கிறேன்.

மரபணுக்களில் உள்ள தகவல்கள் மூலம் புரதங்களை எவ்வாறு உருவாக் குவது என்பதை கண்டறிந்துள்ளேன். இந்த கண்டு பிடிப்பு பல நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்க உதவும். இந்த பரிசுக்காக எனது பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர் களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

சிதம்பரத்தில் உள்ள அனந்தீஸ்வரர் கோவில் அக்ரஹாரத்தில் எங்கள் வீடு உள்ளது. 3 வயது வரை சிதம்பரத்தில் இருந்தேன். அதன் பிறகு எனது தந்தைக்கு பரோடாவில் வேலை கிடைத்ததால் எனது பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பை பரோடாவில் படித்தேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தையுடன் சிதம்பரத்தில் உள்ள பிறந்த வீட்டை சென்று பார்த்தேன்.

எனது மகள் டாக்டராகவும், மகன் இசைக்கலைஞராகவும் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.

இந்திய அறிவியல் துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக உணர்கிறேன். இந்திய அரசு அடிப்படை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். அதன் மூலம் சுகாதாரம், தொழில் நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, October 7, 2009

தமிழருக்கு நோபல் பரிசு - வேதியியல்

தமிழ்நாடு சிதம்பரத்தில் பிறந்த டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Born in 1952 in Chidambaram, Tamil Nadu, Ramakrishnan completed his PhD in Physics in 1976 from Ohio University, US.

He is the Group Leader at the Structural Studies Division, MRC Laboratory of Molecular Biology, Cambridge, UK.

செய்தி: நன்றி: Rediff.com

UK based Indian origin scientist Venkatraman Ramakrishnan has won the 2009 Nobel Prize for Chemistry along with American Thomas A Steitz and Isreali scientist Ada E Yonath.

The trio were awarded for their study of the structure and function of the ribosome, one of life's core processes.

Ribosomes produce proteins, which in turn control the chemistry in all living organisms. As ribosomes are crucial to life, they are also a major target for new antibiotics.

Tuesday, October 6, 2009

சோழவந்தானில் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடிப்பு

மதுரை அருகே சோழவந்தானில் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடிப்பு

மூவர் உயிர் இழந்ததாக செய்தி

Times of India

சோழவந்தான் ரயில்நிலையத்தில் குண்டுவெடிப்பு : 4 பேர் பலி : 25 பேர் படுகாயம்
அக்டோபர் 06,2009,19:10 IST

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்நிலையத்தில், நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 4 பேர் பலியாகினர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்று மாலை சுமார் 6 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. சம்பவத்தின் போது, ரயில் நிலையத்தில், ஈரோட்டிலிருந்து திருநெல்வேலி செல்லும் பாசஞ்ர் ரயில் நின்று கொண்டிருந்தது. குண்டுவெடிப்பில், ரயில் நிலைய கூரை கடுமையாக சேதமடைந்தது. குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சென்னையிலிருந்து மதுரை வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

செய்தி: நன்றி: Dinamalar


செய்தி: நன்றி: The Hindu

Three people were killed and two injured on Tuesday evening when an explosion rocked a railway station near Madurai in Tamil Nadu, police said.

The exact nature of the explosion was not clear. The blast occurred at the Sholavandan railway station, about 25 km from Madurai city, just when a passenger train entered the platform.

சோழவந்தான் ரயில் நிலையத்தில் வெடித்தது வெங்காய வெடி- போலீஸ்

மதுரை: சோழவந்தான் ரயில் நிலையத்தில் வெடித்தது குண்டு அல்ல. மாறாக பட்டாசு வியாபாரி கொண்டு வந்த வெங்காய வெடி மூட்டை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சோழவந்தான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 6.10 மணியளவில் பலத்த சப்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ரயில் நிலைய மேற்கூரை பிய்த்தெறியப்பட்டது.

இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தீவிரவாத செயலோ என்று பயந்து அந்த சமயத்தில் ரயில் நிலையத்தில் நின்றிருந்த நெல்லை பாசஞ்சர் ரயிலின் பயணிகள் இறங்கி ஓடினர்.

இந்த கோர விபத்தில், ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம், செல்லத்துரை (35), மேஸ்திரி ஆறுமுகம் (48),. சோழவந்தான் உலகநாதன் (6), காளியம்மாள் (70), ரயில்வே டெக்னீசியன் அழகுமலை (54), தஞ்சையைச் சேர்ந்த போட்டோகிராபர் ஆனந்தன் (26), அவரது மகன்
லோகேஷ் (1), சுப்பிரமணியன், மருதப்பன் ஆகியோர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்ததும் தென் மண்டல ஐஜி கிருஷ்ணமூர்த்தி, டிஐஜி பாலசுப்ரமணியம், புறநகர் மாவட்ட எஸ்.பி. மனோகர் உள்ளிட்டோர் விசாரணையில் இறங்கினர்.

முதலில் பலியானவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், ஒருவர் பரமசிவம். 35 வயதான இவர் சோழவந்தான் சுந்தரம் பிள்ளை என்பவரின் மகன், வெற்றிலை வியாபாரி.

இன்னொருவர் பெயர் ராமர். சோழவந்தானைச் சேர்ந்தவர். 40 வயதான இவர் பட்டாசு வியாபாரி ஆவார். வெங்காய வெடிகளை வாங்கிக் கொண்டு வந்தபோது, ரயிலிலிருந்து வெங்காய வெடி மூட்டையை பிளாட்பாரத்தில் இறக்கி வைத்தபோதுதான் அது வெடித்துச் சிதறியுள்ளது. இதனால்தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தது.

மொத்தம் 2 மூட்டை வெங்காய வெடிகளுடன் வந்துள்ளார் ராமர். ஒரு மூட்டையை ரயிலிலிருந்து இறக்கி வைத்தார். இன்னொரு மூட்டையை எடுப்பதற்காக எத்தனித்தபோது முதல் மூட்டை வெடித்து விட்டது. 2வது மூட்டை அப்படியே இருந்தது என்று டிஐஜி பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

தடயவியல் நிபுணர்களும், வெடிகுண்டு நிபுணர்களும் வெடிவிபத்து நடந்த இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்தனர்.

மேலும், இந்த சம்பவத்திற்கு தீவிரவாதிகளோ அல்லது நக்சலைட்டுகளோ காரணம் அல்ல என்றும் தெரிய வந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு...

இந்த சம்பவம் காரணமாக மதுரை - திண்டுக்கல் இடையிலான ரயில் போக்குவரத்து சுமார் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. பல ரயில்கள் மதுரை மற்றும் திண்டுக்கல்லோடு நிறுத்தி வைக்கப்பட்டன. அதன் பின்னரே ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.

முன்னதாக இந்த விபத்தில் 4 பேர் பலியாகிவிட்டதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி: நன்றி: thatstamil

ஜெயலலிதா மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகியது. நேற்று முன்தினம் திண்டிவனத்தில் நடந்த அவசர பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 1967 முதல் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இன்றுவரை கட்சிகள் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திக்கின்றன.

ஒரு தேர்தலில் ஒரு கட்சியோடு கூட்டணி அமைத்த கட்சி மறுதேர்தலில் இன்னொரு கட்சியோடு கூட்டணி அமைக்கும் காட்சிகள் நடந்துள்ளன. பா.ம.க. அந்த வகையில்தான் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்தித்து வந்துள்ளது.

2006 சட்டசபை தேர்தலின்போது திண்டிவனம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக எங்கள் கட்சியை சேர்ந்த கருணாநிதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகம் போட்டியிட்டார்.

வாக்குப்பதிவு நாளன்று சண்முகத்தின் ஊரில் ஏற்பட்ட தகராறில் அவரது உறவினர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் முதல் குற்றவாளியாக நானும், 2-வது குற்றவாளியாக எனது மகனும், 3-வது, 4-வது, 5-வது குற்றவாளிகளாக எனது பேரன், மற்றும் உறவினர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

6-வது குற்றவாளியாக வேட்பாளர் கருணாநிதியின் பெயரும், 7-வது குற்றவாளியாக ரகு என்பவரின் பெயரும் சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் 7-வது குற்றவாளியான ரகு முதல் குற்றவாளியாக மாற்றப்பட்டார். இந்த வழக்கு தற்போது ஐகோர்ட்டு விசாரணையில் உள்ளது. இதில் 4 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இதற்கிடையே கொடநாட்டில் தங்கி இருக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணியும், முன்னாள் எம்.பி. தன்ராஜ்யும் சந்தித்து பேசினர். அப்போது இந்த பிரச்சினை குறித்து கூறப்பட்டபோது இதுபற்றி பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று அவர் கூறி உள்ளார்.

ஆனால் நாங்கள் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த நிர்வாககுழு கூட்டத்தை கூட்டினோம். அதில் பங்கேற்ற பலரும் அ.தி.மு.க. கூட்டணியில் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் நிலையில் தொடரக்கூடாது என்று நிர்பந்தித்தனர்.

சுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதற்காகவே அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினோம். 2001-ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தபோதும் 3 மாதத்தில் வெளியே வந்தோம். அதன்பின்பு தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 3 வருடங்களுக்கு பிறகு வெளியே வந்தோம்.

2001-ம் ஆண்டுக்கு முன்னர் அ.தி.மு.க., தொண்டர்கள் பலத்துடன் பலமான கட்சியாக இருந்தது. தற்போது அந்த கட்சி பலவீனமாக ஆகிவிட்டது. ஏராளமான தலைவர்களுடன் கோஷ்டி பூசல்களும் சேர்ந்து கொள்ள தொண்டர்கள் சோர்ந்து போய்விட்டனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது இக்கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் கூட பணத்துக்கு விலைபோய் விட்டதாக இக்கட்சியின் பொதுச் செயலாளரே பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது ஒன்றே அக்கட்சியின் நிலையை தெளிவாக எடுத்து காட்டிவிடும்.

இப்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தலைமை பண்பும், ஆளுமை திறனும் இல்லாமல் போய்விட்டது. இதனால் கட்சி கலகலத்து காணப்படுகிறது. பாராளுமனற தேர்தல் முடிந்த பின்பு அவரை நான் நேரில் சந்திக்கவில்லை. டெலிபோனில்தான் பேசினேன்.


ஆனால் முதல்- அமைச்சர் கருணாநிதியை சந்திக்க விரும்பினால் 2 நிமிடத்திலும், பிரதமரை சந்திக்க விரும்பினால் 10 நிமிடத்திலும் பார்த்து விடலாம். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் சந்திக்க முடியாது.

தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் அனைத்தும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கும் நிர்பந்தத்தில் உள்ளன. நாங்கள் கட்சி தொடங்கிய பின்பு 1989, 1991, 1996 ஆகிய தேர்தல்களை தனித்தே சந்தித்தோம். 1996-ல் 4 தொகுதிகளை கைப்பற்றிய பின்புதான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தோம்.

அப்போது எங்களது கொள்கையோடு தி.மு.க.வின் கொள்கை ஒத்து போனதால் அ.தி.மு.க.வை விட்டு விலகி தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தோம். அதன் பின்பு தி.மு.க. தலைவர் எங்களை போயஸ் தோட்டத்துக்கு தள்ளிவிட்டார்.


இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தும் விலகிவிட்டோம். இனிவரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தால் நாங்களும் தேர்தலில் தனித்து போட்டியிவோம். அல்லது தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்வோம். இல்லையேல் 3-வது அணியை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.


அதுவரை எதிர்க்கட்சியாக எங்களின் கடமையை செய்வோம். முல்லை பெரியார் பிரச்சினையில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகி இருப்பது தாமதமான நடவடிக்கை. இருந்தாலும் அதனை வரவேற்கிறோம். தமிழகம் அண்டை மாநிலங்களை சகோதர மனப்பான்மையுடன்தான் பார்க்கிறது. ஆனால் கேரள அரசு அப்படி நடந்து கொள்வதில்லை. நதிநீர் இணைப்பு பிரச்சினைக்கு கர்நாடக மாநிலம்தான் எதிராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி: நன்றி: மாலைமலர்

AIADMK in shambles: Ramadoss (from Malaisudar)

Launching a tirade against AIADMK general secretary J Jayalalithaa, PMK founder S Ramadoss, who walked out of the AIADMK-led alliance on Sunday, today said that the former Chief Minister lacked leadership qualities and the party led by her was in a shambles.

Wednesday, September 30, 2009

டாஸ்மாக் மதுபானங்கள் ‘ரவுண்டாக’ விலை உயர்வு

இன்று முதல் அமல் - டாஸ்மாக் மதுபானங்கள் ரூ.3 வரை விலை உயர்வு

சேலம், அக்.1: தமிழ்நாட்டில் 6,500 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. மதுபான விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12500 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. டாஸ்மாக் கடைகளில் 34,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

பெரும்பாலான பிராந்தி வகை மதுபானங்கள் குவார்ட்டர் (180 மி.லி.) ரூ.67, ரூ.69, ரூ.57, ரூ.68, ரூ.59 எனவும், பீர் வகை மதுபானங்களும் 325 மி.லி. பாட்டில் ரூ.32, ரூ.47 என்றும், 650 மி.லி. பாட்டில் ரூ.66, ரூ.68 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், சில்லறை பிரச்னையைக் காரணம் காட்டி டாஸ்மாக் ஊழியர்கள் ரூ.67, ரூ.68 என்ற விலை உள்ள மதுபான பாட்டிலை ரூ.70க்கு விற்று வந்தனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் அடிக்கடி ‘சில்லறை தகராறு’ ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், மதுபானங்களின் விலையை ரூ.50, ரூ.60, ரூ.70 என பத்தின் மடங்காக உயர்த்தினால் கடைகளில் சில்லறை பிரச்னை வராது என்பதோடு, அரசுக்கும் கூடுதலாக ரூ.500 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் அரசுக்கு ஆலோசனை கூறினர். இதையடுத்து, எல்லா வகை மதுபானங்களின் விலையையும் ‘ரவுண்டாக’ உயர்த்தி டாஸ்மாக் நிறுவனம் அறிவித்து உள்ளது. அதன்படி, பிராந்தி, ரம் வகை மதுபானங்கள் குவார்ட்டர் ரூ.1 முதல் ரூ.3 வரையிலும், பீர் வகைகள் ரூ.3 வரையிலும் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.


புதிய விலை பட்டியல்


மதுபான வகைகள் குவார்ட்டர் ஆஃப்ஃபுல்

நெ.1 மெக்டவல் பிராந்தி 70 135 265
நெ.1 மெக்டவல் விஸ்கி 70 140 275
மானிட்டர் பிராந்தி 60 115 230
மானிட்டர் விஸ்கி 60 120 230
கார்டினல் கிரேப் பிராந்தி 70 140 275
மானிட்டர் டீலக்ஸ் பிராந்தி 60 120 240
மேன்ஷன் ஹவுஸ் பிராந்தி 80 160 325
ஹனி டே பிராந்தி 60 120 240
ஓல்டு மான்ஸ்ட்டர் ரம் 60 120 240
ஓல்டு சீக்ரெட் ரம் 60 120 240
ஓல்டு மாங்க் ரம் 60 120 240
டாப் ஸ்டார் ஸ்பெஷல்
பிராந்தி 60 120 235
ஓல்டு செப் ரம் 60 120 235
பிளாக் கேட் ரம் 60 120 240
வெனிலா ஓட்கா 70 140 285


செய்தி: நன்றி: தினகரன்

Thursday, September 24, 2009

உன்னைப் போல் ஒருவன் - ஜெ பாராட்டு

உன்னைப் போல் ஒருவன் படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக ஸ்ருதி கமல்ஹாசனை போனில் பிடித்து பாராட்டித் தள்ளி விட்டாராம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதனால் ஸ்ருதி படா குஷியாக காணப்படுகிறார்.

கலைஞானி கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. படம் பார்த்தவர்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் அதைப் பார்க்க்த தொடங்கியிருப்பதால் தியேட்டர்களில் கூட்டத்திற்கு அளவே இல்லை.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய அம்சமான இசையமைப்பாளர் ஸ்ருதிக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறதாம்.

திரையுலகப் பிரமுகர்கள் மற்றும் பல்துறையினரும் ஸ்ருதியின் சிறப்பான இசையை பாராட்டிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையி்ல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்ருதியைப் போனில் பிடித்து பாராட்டித் தள்ளியுள்ளாராம். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பேசிய அவர் ஸ்ருதியின் இசையைப் பாராட்டியதோடு, மிகப் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என ஆசிர்வதித்தாராம்.

இதனால் ஸ்ருதி பெரும் உற்சாகமாகியுள்ளார். முதல் படத்திலேயே இத்தனை பாராட்டுக்கள் கிடைத்திருப்பதால் அடுத்தடுத்து செய்யப் போகும் பணிகளில் முழுக் கவனத்தை செலுத்த அவர் தீர்மானித்துள்ளாராம்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

சில சந்தேகங்கள்:

* ஜெயலலிதா இந்தப் படத்தை எப்படிப் பார்த்தார் ? கோடநாட்டு எஸ்டேட்டில் ரிலிசாகியிருக்கிறதா ? இல்லை கோயமுத்தூருக்கு இரவு வேளையில் சென்று தனிக்காட்சியா ?

* ஸ்ருதியைப் பாராட்டியதில் பெண்ணினம் என்னும் அக்கறையா இல்லை சட்டைக்குள் குறுக்காக ஓடும் சமாச்சாரமா ?

* மகளுக்கு மட்டும் பாராட்டா ? கோபாலபுரத்தையும் மு.கவின் குரலையும் உபயோகித்த தந்தைக்கு பாராட்டு கிடையாதா ?

Wednesday, September 16, 2009

உலகின் மிக உயரமான மனிதர் - சுல்தான் கோசென்



(படத்தின் மீது க்ளிக்கவும்)

உயர்ந்த சாதனை: உலகின் மிக உயரமான மனிதர் இவர். பெயர் சுல்தான் கோசென். துருக்கியைச் சேர்ந்த இவர் கால் பந்து வீரர். 26 வயதாகும் சுல்தான், முன்பு 8 அடி உயரம் இருந்தார். முழுவதும் நிமிர முடியாமல் முதுகு பிரச்னையில் தவித்ததால், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பிறகு, உயரம் 8 அடி 1 அங்குலமாக மேலும் உயர்ந்து விட, உலக சாதனை படைத்து விட்டார். லண்டனின் டவர் பிரிட்ஜ் அருகே அவர் நேற்று கொடுத்த போஸ் இது.

படம்: நன்றி: தினகரன்

Monday, September 14, 2009

ஜெ.ஆதரவு: சங்கடத்தில் அழகிரி

நாடாளுமன்றத்தில் தனது துறை சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்காமல் ஒவ்வொரு முறையும் அமைச்சர் அழகிரி அவையை விட்டு ஓடி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி'' என்ற பெருமைக்குரிய மொழி தமிழ்மொழி. மிகத் தொன்மையும், வரலாற்றுப் பின்னணியும் கொண்ட மொழி தமிழ்மொழி. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி தன்னால் தான் செம்மொழி ஆக்கப்பட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் திமுக அரசின் முதல்வர் கருணாநிதி.

ஆனால், இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி மூலம் இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சர் பேச முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது உண்மையிலேயே மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.

நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சகம் சம்பந்தப்பட்ட வினாக்கள், கவனஈர்ப்பு தீர்மானங்கள், ஒத்திவைப்பு தீர்மானங்கள் ஆகியவற்றிற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தத் துறை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உண்டு.

அந்த வகையில் ரசாயனம் மற்றும் உரத்துறை தொடர்பான வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு, அந்தத் துறையின் அமைச்சர் மு.க.அழகிரியை சாரும்.

சென்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது ரசாயனம் மற்றும் உரத் துறை தொடர்பான வினாவை சபாநாயகர் எடுத்துக் கொள்ளப் போகிறார் என்ற உடனேயே, இந்தத் துறையின் அமைச்சரான அழகிரி அவையை விட்டு ஓடி ஒளிந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும், இதன் காரணமாக இந்தத் துறையின் இணையமைச்சர் பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும், பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இவ்வாறு துறை சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்காமல் ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சர் அவையை விட்டு ஓடுவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எரிச்சலடைந்து அமைச்சரை பரிகாசம் செய்வதாகவும், ‘ஓடி ஒளிந்து கொள்ளும் அமைச்சர்’ குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கேட்டு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி மக்களவைச் செயலகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும், இது போன்ற விசித்திரமான வேண்டுகோளை வைக்கும் முதல் மத்திய அமைச்சர் அழகிரிதான் என்றும், ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்று கூறி, அழகிரியின் கோரிக்கையை மக்களவைச் செயலகம் நிராகரித்து விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன.

இதன் காரணமாக ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் வாயில்லா பூச்சியாக செயல்பட வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை நீடித்தால், மத்திய அமைச்சர் தன்னுடைய ஆழ்ந்த கருத்துக்களை, சிந்தனைகளை, யோசனைகளை, அறிவாற்றலை எப்படி நாடாளுமன்றத்திலே எடுத்துரைக்க முடியும்? எப்படி வெளிப்படுத்த முடியும்?.

ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லாத பிற மொழிகளில் அதாவது பிராந்திய மொழிகளில் ஒருவர் பேசியதை பிறருக்குத் தேவைப்படும் மொழியில் மொழி பெயர்த்துக் கூறும் வசதி உறுப்பினர்களுக்கு மட்டும்தான் அளிக்கப்படுகிறது. அமைச்சர்களை பொறுத்தவரை அவர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று நாடாளுமன்ற அதிகாரிகள் கூறுவதாக செய்திகள் வருகின்றன.

உறுப்பினர்களுக்கே இந்த வசதி செய்து தரப்படும்போது அமைச்சருக்கு ஏன் இந்த வசதியை செய்து தரக் கூடாது? அப்படியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படி மத்திய அமைச்சராக செயல்பட முடியும்? அவர்கள் பொம்மையாக இருக்க வேண்டியதுதானா?.

தமிழ்! தமிழ்மொழி! செம்மொழி என்று சொல்லி தன் மகள் கனிமொழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொடுத்த திமுக அரசின் முதல்வர் கருணாநிதி, நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சருக்கு தமிழில் பேச உரிமை இல்லை என்பதை பார்த்துக் கொண்டு வாய்மூடி மவுனியாக இருக்கிறாரே? மத்திய அரசை தட்டிக் கேட்க மாட்டாரா?.
ஒருவேளை இதைத் தட்டிக் கேட்பதன் மூலம் தன் குடும்பத்தில் ஏதாவது சிக்கல் நேரிடும் என்று நினைக்கிறாரா? இல்லை, தன்னுடைய மகன் நாடாளுமன்றதில் பேசுவதை விட, பேசாமல் இருப்பதே மேல் என்று நினைக்கிறாரா? இல்லை அமைச்சர் பதவி என்பது வருமானம் ஈட்டுவதற்காகத்தான் என்று எண்ணி தன்னுடைய மகன் நாடாளுமன்றத்தில் பேசினால் என்ன, பேசாவிட்டால் என்ன என்று கருதுகிறாரா?.

எது எப்படியோ, தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்து கொண்டு தாய்மொழியாம் தமிழ்மொழியை பாதுகாக்க வேண்டிய தன்னுடைய கடமையிலிருந்து கருணாநிதி நழுவிவிட்டார்.

“உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற கொள்கை எல்லாம் வெறும் வாயளவில் மட்டும்தான் என்பதை தற்போது கருணாநிதி நிரூபித்து விட்டார்.

“வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்று எட்டளவில் சொல்லி எந்தப் பயனும் இல்லை. தமிழ் வீழ்கின்ற இந்தச் சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதே சிறந்த வழி என்று கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

செய்தி: நன்றி: Maalaisudar

நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கோரிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீர் ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அழகிரிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் வீழ்கின்ற சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதே சிறந்த வழி என்றும் அவர் ஆலோசனை கூறியிருக்கிறார்.
.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளி யிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:- கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி என்ற பெருமைக்குரிய மொழி தமிழ்மொழி. மிகத் தொன்மையும், வரலாற்றுப் பின்னணியும் கொண்ட மொழி தமிழ்மொழி. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி தன்னால் தான் செம்மொழி ஆக்கப்பட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி.

ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி மூலம் இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சர் பேச முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது உண்மை யிலேயே மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சகம் சம்பந்தப்பட்ட வினாக்கள், கவன ஈர்ப்பு தீர்மானங்கள், ஒத்திவைப்பு தீர்மானங்கள் ஆகியவற்றிற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தத் துறை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உண்டு. அந்த வகையில் ரசாயனம் மற்றும் உரம் தொடர்பான வினாக் களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு, அந்தத் துறையின் அமைச்சர் மு.க.அழகிரியை சாரும்.

சென்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது ரசாயனம் மற்றும் உரத் துறை தொடர்பான வினாவை பேரவைத் தலைவர் எடுத்துக் கொள்ளப் போகிறார் என்ற உடனேயே, இந்தத் துறையின் அமைச்சரான அழகிரி அவையை விட்டு ஓடி ஒளிந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்த தாகவும், இதன் காரணமாக இந்தத் துறையின் இணை அமைச்சர் பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும், பத்திரிகை களில் செய்திகள் வந்துள்ளன. இவ்வாறு துறை சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்காமல் ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சர் அவையை விட்டு ஓடுவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எரிச்சலடைந்து அமைச்சரை பரிகாசம் செய்வ தாகவும், ‘ஓடி ஒளிந்து கொள்ளும் அமைச்சர்’ குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கேட்டு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி மக்களவைச் செயலகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும், இது போன்ற விசித்திரமான வேண்டுகோளை வைக்கும் முதல் மத்திய அமைச்சர் அழகிரிதான் என்றும், ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்று கூறி, அழகிரியின் கோரிக்கையை மக்களவைச் செயலகம் நிராகரித்து விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன. இதன் காரணமாக ஒரு மத்திய அமைச்சர் நாடாளு மன்றத்தில் வாயில்லா பூச்சியாக செயல்பட வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலை நீடித்தால், மத்திய அமைச்சர் தன்னுடைய ஆழ்ந்த கருத்துக்களை, சிந்தனைகளை, யோசனைகளை, அறிவாற்றலை எப்படி நாடாளு மன்றத்திலே எடுத்துரைக்க முடியும்? எப்படி வெளிப்படுத்த முடியும்?
ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லாத பிற மொழிகளில் அதாவது பிராந்திய மொழிகளில் ஒருவர் பேசியதை பிறருக்குத் தேவைப்படும் மொழி யில் மொழி பெயர்த்துக் கூறும் வசதி உறுப்பினர்களுக்கு மட்டும்தான் அளிக்கப்படுகிறது. அமைச்சர்களை பொறுத்தவரை அவர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று நாடாளுமன்ற அதிகாரிகள் கூறுவதாக செய்திகள் வருகின்றன. உறுப்பினர்களுக்கே இந்த வசதி செய்து தரப்படும் போது அமைச்சருக்கு ஏன் இந்த வசதியை செய்து தரக் கூடாது? அப்படி யென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படி மத்திய அமைச்சராக செயல்பட முடியும்? அவர்கள் பொம்மையாக இருக்க வேண்டியதுதானா?

தமிழ்! தமிழ்மொழி! செம்மொழி என்று சொல்லி தன் மகள் கனிமொழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொடுத்த திமுக அரசின் முதல மைச்சர் கருணாநிதி, நாடாளு மன்றத்தில் ஓர் அமைச்சருக்கு தமிழில் பேச உரிமை இல்லை என்பதை பார்த்துக் கொண்டு வாய்மூடி மவுனியாக இருக்கிறாரே? மத்திய அரசை தட்டிக் கேட்க மாட்டாரா? ஒருவேளை இதைத் தட்டிக் கேட்பதன் மூலம் தன் குடும்பத்தில் ஏதாவது சிக்கல் நேரிடும் என்று நினைக்கிறாரா? இல்லை தன்னுடைய மகன் நாடாளுமன்றதில் பேசுவதை விட, பேசாமல் இருப்பதே மேல் என்று நினைக்கிறாரா? இல்லை அமைச்சர் பதவி என்பது வருமானம் ஈட்டு வதற்காகத்தான் என்று எண்ணி தன்னுடைய மகன் நாடாளு மன்றத்தில் பேசினால் என்ன, பேசா விட்டால் என்ன என்று கருதுகிறாரா?

எது எப்படியோ, தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்து கொண்டு தாய்மொழியாம் தமிழ்மொழியை பாதுகாக்க வேண்டிய தன்னுடைய கடமையிலிருந்து கருணாநிதி நழுவிவிட்டார். “உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற கொள்கை எல்லாம் வெறும் வாயளவில் மட்டும்தான் என்பதை தற்போது கருணாநிதி நிரூபித்து விட்டார்.

“வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்று எட்டளவில் சொல்லி எந்தப் பயனும் இல்லை. தமிழ் வீழ்கின்ற இந்தச் சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதே சிறந்த வழி.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tuesday, September 8, 2009

விஜய் தொண்டராக இருந்தாலே போதும் - இளங்கோவன்

நடிகர் விஜய் காங்கிரசின் அடிமட்டத் தொண்டராக இருக்க வேண்டியதில்லை, தொண்டராக இருந்தாலே போதும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இன்று அனைத்து அரசியல் கட்சிகளிலும் இளைஞர்கள் 10 சதவீதம் பேர் தான் உள்ளனர். 90 சதவீதம் இளைஞர்கள், அரசியலே வேண்டாம் என்று தான் நினைக்கின்றனர்.

ராகுல் காந்தி வருகைக்கு பின், தமிழகத்தில் நிறைய இளைஞர்கள் அரசியலுக்கு வருவார்கள் .

நடிகர் விஜய் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம். அவர் காங்கிரசில் இணைய எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அவர் அடிமட்ட தொண்டராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தொண்டராக இருந்தால் போதும்.

என் மகன் மேஜர், அவரும் காங்கிரசில் தான் உள்ளார். தேர்தலில் நிற்பதா, வேண்டாமா என்பதை அவர் தான் முடிவு செய்வார். ராகுல் சுற்றுப் பயணத்துக்கு பின் என் மாமூல் அரசியல் தொடரும் என்றார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Monday, September 7, 2009

கோமா நிலையில் அதிமுக - சுப்பிரமணிய சாமி

அதிமுக கோமா நிலைக்குப் போய் விட்டது என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.

ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி நெல்லையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஜனதா கட்சி போட்டியிடும். பாஜவில் ஏற்பட்ட உச்கட்சி குழப்பத்தால் அந்த கட்சிக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.

பாஜவில் ஜனநாயகம் இருப்பதால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் வெளியே தெரிகின்றன. காங் கட்சியில் ஜனநாயகம் இல்லை. அதிமுகவில் இப்போது எந்த தலைவர்களும் இல்லை. அந்த கட்சி கோமா நிலையில் உள்ளது.

இலங்கையில் புலிகள் பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டது. போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு இலங்கை அரசு மறுவாழ்வு ஏற்படுத்த கொடுக்க வேண்டும். இந்த பிரச்சனையில் இலங்கையை இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுக்காவிட்டால் இலங்கை கடும் விளைவுகளை சந்திக்கும்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எந்த வித பிரச்சனையும் இல்லை. இருப்பினும் இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தமிழகத்தில் இந்து கட்சிகள் அனைத்தும் விரைவில் ஓன்றிணைந்து இந்து மறுமலர்ச்சி ஏற்படும் என்றார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Sunday, September 6, 2009

தனிமனிதன் கோபப்பட்டால்....! - கமல்ஹாசன்

தனிமனிதன் கோபப்பட்டால் அதனை நாடு தாங்கிக் கொள்ள முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் பரபரப்பாக கூறியுள்ளார். ஜெயகாந்தன் போன்ற இலக்கிய வாதிகளுக்கு இருக்கும் சுதந்திரம் திரைக்கதை ஆசிரியர்களுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
.
"உன்னை போல் ஒருவன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது: நான் வழக்கறிஞராக வருவேன் என்று என் குடும்பத்தில் எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் நான் வேறு திசையில் பயணத்தை துவக்கினேன். அப்போது என் குடும்பத்தினர் இதற்காக மிகவும் வருந்தினர். ஆனால் இன்று பெருமைப்படுகின்றனர்.

அதே போல எனது மகள் அக்ஷரா எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை அவரே தீர்மானித்துக் கொள்வார்.குழந்தை வளர்ப்பு என்று வரும்போது மரத்தை வளர்ப்பது போலத்தான். தண்ணீர் ஊற்றி விட்டு வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டுமே நம் பொறுப்பு.

என் அப்பா கொடுத்த சுதந்திரத்தில் 90 சதவீதம் கூட என் பிள்ளைகளுக்கு நான் கொடுக்கவில்லை. பரந்த மனப்பான்மை என் அப்பா எனக்கு கற்றுக் கொடுத்தது. சிறு வயதிலேயே படிப்பை நிறுத்தி விட்டு நடனம் கற்றுக் கொள்ள அனுமதிப்பது பெரிய விஷயம். நடனம் கற்றுக் கொண்ட பின்னர் உதவி நடன ஆசிரியராக இருக்கிறேன் என்று பந்தாவாக கூறி கொள்வேன். அப்போது எல்லோரும் பிழைப்புக்கு என்ன செய்வாய் என்று கேட்பார்கள்.

சினிமாவை பிழைப்பாக கூட ஏற்றுக் கொள்ளாத காலத்தில் என் தந்தை எனக்கு சுதந்திரம் கொடுத்தார். என் மகள் ஸ்ருதி அமெரிக்காவுக்கு இசை படிக்க சென்றபோது ஒரு தந்தையாக எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. ஆனால் இப்போது பெருமிதமாக உள்ளது.

டிஜிட்டல் சினிமாதான் திரைப்படத் துறையின் எதிர்காலம். இதனை நான் தீர்க்கதரிசனமாக சொல்லவில்லை. தொழில்நுட்பத்தை புரிந்து கொண்டதால் கூறுகிறேன். சினிமாவை எளிமைப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்ட "மும்பை எக்ஸ்பிரஸ்' அதன் துவக்கம்.

திரைப்படங்களை உருவாக்குவது மட்டுமல்ல, வெளியிடுவது மற்றும் விநியோகிப்பதிலும் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும். "உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் இந்திப் படத்தின் தழுவல் என்றாலும் தமிழக சூழலுக்கேற்ப வசனங்கள் உட்பட பல மாற்றங்களை செய்திருக்கிறோம்.

இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் பிரச்சனைகள் வேறுபடுகிறது. எனினும் தீவிரவாதம் போன்ற பிரச்சனை நாடு முழுவதும் உள்ளது. தீவிரவாதம் இங்கேயும் இருக்கிறது. ஆனால் நமக்கு தெரியாமல் மறைந்திருக்கிறது. ஒரு தனிமனிதன் கோபப்பட்டால் நாடு தாங்காது என்பதை இந்த படத்தின் மூலம் காண்பித்திருக்கிறோம். மக்கள் தொகையின் ஒரு சதவீதம் பேர் கோபப்பட ஆரம்பித்தால் கூட நம்முடைய ராணுவத்தால் கூட கட்டுப்படுத்த முடியாது.

இந்த படத்திற்கான தலைப்பு ஜெயகாந்தன் எழுதிய நாவலின் தலைப்பாகும். அவரிடம் நேரில் சென்று இந்த தலைப்பை பயன்படுத்துவதற்கான அனுமதி கடிதம் பெற்றேன். பழமையை போற்றுவதில் தவறில்லை. அதே போல நல்ல எழுத்தாளர்களை திரைப்படத்தில் பயன்படுத்த விரும்புகிறேன். கவிஞர் மனுஷ்யபுத்ரன் மற்றும் இரா.முருகன் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். இந்திப் படத்தில் பாத்திரங்கள் கெட்ட வார்த்தைகளை அதிகம் பேசும். ஆபாசம் எது என்பதற்கு ஒரு வரையறை இல்லை.

தஞ்சை வாணன் கோர்வை, விரலி விடு தூது ஆகியவை ஆபாசமானவைதான். இன்று இன்டெர்நெட்டில் ஆபாசத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது. பொதுவாக ஜெயகாந்தன் போன்ற இலக்கியவாதிகளுக்கு இருக்கும் சுதந்திரம் திரைக்கதை ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை. எனக்கு 3 வயதாக இருந்த போது அமலில் இருந்த சென்சார் சட்டங்களைத்தான் இப்போதும் பயன்படுத்துகிறோம். சென்சார் சட்டங்களில் மாற்றம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தமிழில் தற்போது வருடத்திற்கு சில படங்களே வெற்றி பெறுகின்றனவே என்று நிருபர்கள் கேட்டபோது, கமல் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்னர் டிவியால் நாடகங்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டபோது, கோமல் சுவாமிநாதன், தமிழ் நாடகங்களே தமிழ் நாடகங்களை கெடுப்பதாக கூறினார். அதையே நான் இப்போது பதிலாக கூற விரும்புகிறேன். தமிழ் படங்களின் கருத்தை ரசிகர்கள் முடிவு செய்ய துவங்கி விட்டனர். இவ்வாறு கமல் பதிலளித்தார்.

திரையுலகில் பொன்விழா கொண்டாட்டம் பற்றி கேட்டபோது, நானே நடித்து விட்டு நானே கைதட்டி கொண்டால் நன்றாக இருக்காது. இந்த வாய்ப்பை எனக்கான அனுமதிச்சீட்டாக கருதி தொடர்ந்து சிறப்பாக நடிக்க விரும்புகிறேன் என்று கமல்தெரிவித்தார். எல்டாம்ஸ் சாலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி கேட்டபோது, இது குறித்து ஆதாரித்தோ அல்லது எதிர்த்தோ நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது என்று கூறினார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Monday, August 31, 2009

காங்கிரசில் இணைந்தார் ரோஜா..!

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நடிகை ரோஜா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் அடையாளமாக முதல்வர் ராஜசேகர் ரெட்டியை சந்தித்தார்.தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவி பதவி வகித்து வரும் நடிகை ரோஜா, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார்.முதல்வரை சந்திக்கச் சென்ற நடிகை ரோஜாவை ராஜசேகர ரெட்டி வரவேற்றார். ரோஜா, ராஜசேகர ரெட்டிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.நடிகை ரோஜா- முதல்வர் ராஜசேகர ரெட்டி சந்திப்புக்கு, திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் கருணாகர ரெட்டி ஏற்பாடு செய்தார்.


முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்துளீர்களே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டீர்களா? என, நடிகை ரோஜாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில்:"மாநிலத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்துள்ளார். ஆந்திராவில் விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் இதை நடைமுறைப்படுத்த உள்ளதாக முதல்வர் அறிவித்திருந்தார். அதற்கு பாராட்டு தெரிவிக்க அவரை சந்தித்தேன். தெலுங்கு தேசம் கட்சியை எனது பிள்ளைகளை காப்பது போன்று அதிக அக்கறையுடன் பார்த்துக் கொண்டேன். தெலுங்கு தேசம் கட்சி தான் என்னை கண்ணியத்துடன் கவுரவிக்க தவறி விட்டது.இவ்வாறு அவர் கூறினார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக எப்போது சேரப்போகிறார் என்பதற்கு பதிலளிக்கவில்லை.

செய்தி: நன்றி: தினமலர்

http://www.dinamalar.com/new/Political_detail.asp?news_id=13660

செப்டம்பர் 08,2009

ஐதராபாத்:தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பிய நடிகை ரோஜா, மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.ஆந்திராவில், சித்தூர் மாவட்டம், நகரி, சந்திரகிரி ஆகிய இரண்டு சட்டசபைத் தொகுதிகளிலும், தெலுங்கு தேச வேட்பாளராக போட்டியிட்டு, தோல்வியைக் கண்டவர் ரோஜா. 10 ஆண்டு காலமாக அதே கட்சியில் நீடித்தவர், திடீரென காங்., கட்சியில் இணைய திட்டம் போட்டார்.


ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைவதற்கு சில தினங்களுக்கு முன், அவரைச் சந்தித்து, காங்., கட்சியில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.நேற்று, ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்த ரோஜா, காங்., கட்சியில் சேர்ந்தார்.பின், நிருபர்களிடம், "தெலுங்கு தேச கட்சியிலிருந்து நான் விலகுவதாக, அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் அனுப்பி விட்டேன். 10 ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

Tuesday, August 25, 2009

அனைத்து பள்ளிகளிலும் இந்தி - கபில் சிபல்

"அனைத்து பள்ளிகளிலும் இந்தியை கற்றுக் கொடுப்பதன் மூலம், அனைவரிடமும் ஒருங்கிணைப்பு ஏற்படும். அது நம்மை அறிவில் சிறந்தவர்களாக வெளியுலகிற்கு அடையாளம் காட்டும்' என, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.


டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்ற கபில்சிபல், மேலும் பேசியதாவது:

கல்விமுறையில் நமது பழைய நடைமுறைகளை மாற்றி, புதிய முறையில் சிந்திக்கத் தூண்டும் கல்வியே இப்போது தேவை. அறிவு சார்ந்த உலகை நாம் உருவாக்குவதன் மூலம், அதிலிருந்து மற்றவர்களும் கற்றுக் கொள்வர். பள்ளிகளில், மற்ற மொழிகளை கற்றுத் தருவது போல், இந்தி மொழியையும் கற்றுத் தரவேண்டும். பெரும்பாலான குழந்தைகள், தங்களது தாய்மொழியில் புலமை பெற்றவர்களாக உள்ளனர். அவர்கள், மற்ற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலம் வளமாக அமைய, கல்விமுறையில், அடிப்படையான, அவசியமான மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்.


இந்தி மொழியை மாணவ மாணவிகள் கற்பதன் மூலம், நாட்டில் உள்ள மற்றவர்களுடன் அவர்களால் எளிதாக உரையாட முடியும். இதன் மூலம் சமூக ஒருங்கிணைப்பு ஏற்படும். அதுபோலவே, ஆங்கில மொழியையும் கற்று, உலக நாடுகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மிடையே உள்ள திட்டவரையறைகளை குழந்தைகள் மீது திணிக்காமல், அவர்களது நலனில் ஒவ்வொருவரும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கபில் சிபல் பேசினார்.

செய்தி: நன்றி: தினமலர்

Thatstamil

Wednesday, August 12, 2009

நாளை கிருஷ்ண ஜெயந்தி - ஜெ. வாழ்த்து

நாளை நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி,

பூமியில் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை மிக உயர்ந்த தர்மம் என்னும் தத்துவத்தை பகவத் கீதை மூலம் உபதேசித்த கிருஷ்ணன் பிறந்த நாளில் இந்த உலகம் உயர்வடைய அனைவரும் பிரார்த்திப்போம்.

மனிதன் மனிதனாக மட்டுமல்லாமல் மற்ற மனிதனுக்காகவும் வாழ வேண்டும் என்ற உன்னத தத்துவதை நமக்கு அருளிய நலம் தரும் நாராயணன் அருளால் அனைவரது வாழ்க்கையும் சிறக்கட்டும். இருள் மறைந்து ஒளி மலரட்டும்.

எங்கெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும். குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ள ஜனநாயகம் மலரட்டும் என மனமார வாழ்த்துகிறேன் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Monday, August 10, 2009

சுனாமி எச்சரிக்கை..?? !!

அந்தமானுக்கு வடக்கே 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்களே செய்தியை பலருக்கும் சொல்லி எச்சரிக்கையாக இருக்கச் சொல்லவும். H1N1 தவிர இது வேற பயமுறுத்துகிறது.

சீனாவைத்தாக்கியுள்ள டைஃபூன் மிகுந்த சேதத்தை விளைவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்:
http://edition.cnn.com/2009/WORLD/asiapcf/08/10/india.earthquake/index.html

http://timesofindia.indiatimes.com/news/india/Earthquake-strikes-off-Andamans-tsunami-alert-cancelled/articleshow/4879908.cms

http://www.hindu.com/thehindu/holnus/000200908110320.htm

http://www.reuters.com/article/newsOne/idUSTRE5794XW20090810

Big quake hits off India's Andamans, no tsunami
Mon Aug 10, 2009 7:09pm EDT

By Sanjit Kumar Roy

PORT BLAIR, India (Reuters) - A major earthquake of magnitude 7.6 struck in the Indian Ocean off India's Andaman Islands early on Tuesday, but a tsunami alert for India, Myanmar, Indonesia, Thailand and Bangladesh was later canceled.


Three hours after the earthquake there were no reports of a tsunami or of any casualties from the tremor, officials said.

"We all ran out as fast as possible and have not gone back inside, fearing another quake. Everything was shaking, we are all very, very scared," Subhasis Paul, who runs a provision store in Diglipur island in North Andaman, told Reuters by telephone.

"People are calling each other out of their homes and everyone is huddled together outside," Paul said from Diglipur, about 300 km (185 miles) north of Port Blair, the capital of the Andaman and Nicobar Islands.

The small chain of islands lie hundreds of miles east of India in the Indian Ocean.

The U.S. Geological Survey said the quake, initially reported as a magnitude 7.7, struck at 1:55 a.m. (1955 GMT on Monday). It was relatively shallow, at a depth of 33 km (20.6 miles), and was centered 260 km (160 miles) north of Port Blair.

The U.S. National Oceanic and Atmospheric Administration's Pacific Tsunami Warning Center said there could be a destructive wave along coasts up to 1,000 km (600 miles) from the epicenter, but it later withdrew its warning.

"Sea level readings indicate that a significant tsunami was not generated," it said in a statement.

Officials at the tsunami alert center in southern India said chances of a tsunami were remote.

"The earthquake has not caused displacement of water necessary to generate a tsunami either in the deep sea or near coastal locations," said Rajesh, a senior official at the Indian National Center for Ocean Information Services.

"We are monitoring the situation, but everything appears normal so far. It seems we have been lucky," added Rajesh, who goes by one name.

A 7.6 magnitude quake is classified by the USGS as a major earthquake and is capable of widespread, heavy damage.

A massive quake in the Indian Ocean in 2004 caused a tsunami that killed some 228,000 people, the majority in the Indonesian province of Aceh on the northern tip of Sumatra island.

WOKEN BY A JOLT

"I was on the balcony, and it felt very strange for a while, like my chair was leaning to one side," said Reuters correspondent Martin Petty in Bangkok. "So I got out of there sharpish. Aftershocks went on for a good few minutes."

Wednesday, August 5, 2009

தி.மு.க.அரசு செய்த நல்ல காரியங்கள் - கருணாநிதி பட்டியல்

தி.மு.க. அரசு நல்ல காரியம் செய்யவில்லையா? சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் கருணாநிதி பதில்


படம் நன்றி: தினகரன்

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வரும் 9ம் தேதி நடக்கிறது. சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை அங்கு தங்கியுள்ள முதல்வர் கருணாநிதியை சந்தித்து, கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஆச்சார்யா நேற்று வழங்கினார். அருகில் பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர்பத்ரி, கன்னட மற்றும் பண்பாடு இயக்குனர் மனோபலேகர்.



சென்னை, ஆக. 6: முதல்வர் கருணாநிதி பெங்களூரில் ஓய்வு எடுத்து வருகிறார். கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

தி.மு.க.வின் மூன்றரை ஆண்டு கால ஆட்சிக்கு நீங்கள் எவ்வளவு மார்க் போடுவீர்கள் என்ற கேள்விக்கு, மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத தி.மு.க. அரசுக்குப் பூஜ்யம் மதிப்பெண்தான் கொடுப்பேன் என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். அவரது கேள்விகளுக்கு பொதுவாக நீங்கள் பதில் சொல்வதில்லையென்ற போதிலும், ஐந்து தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தவாவது என்ன நல்ல காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று விளக்கலாம் அல்லவா?

தி.மு.க. ஆட்சி அமைந்த போதெல்லாம் ஆற்றிய பணிகள் சிலவற்றை மட்டும் தருகிறேன். அவை நல்ல காரியங்களா அல்லவா என்பதை மக்களே கூறட்டும்.

  • மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்குத் தமிழ்நாடு என்ற பெயர்,
  • சுயமரியாதைத் திருமணச் சட்டம்,
  • பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 25 லிருந்து 31 சதவீதமாகவும் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 16 லிருந்து 18 சதவீதமாகவும் உயர்த்தியது.

  • வன்னியர், சீர்மரபினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு,
  • பழங்குடியினர்க்கு தனியாக ஒரு சதவீதம்,
  • மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் வருமான வரம்பிற்குட்பட்டு பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்க்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி,
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கும், வருமான வரம்பிற்குட்பட்டு பெண்களுக்கும் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.
  • பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்,
  • உருது அகாடமி,
  • சென்னை திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர். பெயர்,
  • தென் குமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியது,
  • தை திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என சட்டம் இயற்றப்பட்டு;
  • தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாட எல்லா குடும்பங்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கான இலவச பொருட்கள் வழங்கப்பட்டது.

  • காமராஜர் பிறந்த நாள்,பள்ளிகளில் கல்வி விழா கொண்டாடப்படுகிறது.
  • முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும் அருந்ததியருக்கு 3 சதவீதமும் உள்ஒதுக்கீடு.
  • அனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகும் சட்டம்.
  • கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து.
  • பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிடச் சட்டம்.
  • அரசுப்பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு,
  • உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு,
  • 10 லட்சம் மகளிர் பயன்பெறும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம்.
  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின்கீழ் நிதியுதவி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
  • ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 10 லட்சத்து 78 ஆயிரத்து 612 ஏழை மகளிருக்கு ரூ.487 கோடியே 56 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது;

    ஆனால் தே.மு.தி.க. தலைவர், ஒரு கர்ப்பிணிக்குக் கூட உதவி செய்யவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார்.

  • 10 லட்சத்து 48 ஆயிரம் மகளிர் உறுப்பினரைக் கொண்ட 61 ஆயிரத்து 687 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மொத்தம் ரூ.4 ஆயிரத்து 126 கோடியே 78 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழை செம்மொழியாக அறிவிக்கச் செய்தது,
  • நூறாண்டுக் கனவை நனவாக்கி செம்மொழித் தமிழாய்வு மையம் சென்னையில் அமைப்பு.
  • தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 10, 12ம் வகுப்புகளின் அரசுத் தேர்வு கட்டணங்களும் ரத்து.
  • தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை, விருதுகள் வழங்குதல், பரிவுத் தொகைகள் வழங்குதல்.
  • பேருந்துகள் நாட்டுடைமை, போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கம்,
  • 1500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களை முக்கியமான சாலைகளோடு இணைக்க இணைப்புச் சாலைதிட்டம்.

  • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு இந்தியாவிலேயே முதன் முதலாக நிதி ஒதுக்கும் திட்டம்,
  • 1 கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் மாதம் 20 கிலோ அரிசி.
  • ரேஷன் கடைகளில் பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா, கோதுமை மாவு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
  • ரூ.70 மதிப்புடைய 10 சமையல் பொருள்கள், ரூ.50க்கு வழங்கப்படுகிறது.
  • வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு 8 ஆயிரத்து 361 மருத்துவ முகாம்களில் 84 லட்சத்து 71 ஆயிரத்து 493 ஏழைகள் பயன்.
  • 598 சிறார்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 17 தனியார் மருத்துவமனைகளின் மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
  • கடும் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 500 ரூபாய் என உயர்த்தப்பட்டது.
  • ரூ.1,524 கோடி செலவில் 7 ஆயிரத்து 585 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
  • அதேபோல, அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.140 கோடி செலவில் 280 பேரூராட்சிகளிலும், நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.

  • தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் 343 பாலங்கள் ரூ.214 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன;

  • ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன.

  • அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்;

  • சென்னையில் உலகத் தரத்திலான ரூ.150 கோடி மதிப்பீட்டில் மாநில நூலகம்,
  • ரூ.400 கோடி செலவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச்செயலக வளாகம்,
  • ரூ.100 கோடி ரூபாய் செலவில் அடையாறு பூங்காத் திட்டம்.
  • வட சென்னை மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
  • ரூ.908 கோடி நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
  • ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம்;
  • ரூ.1330 கோடி மதிப்பீட்டில் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்,
  • ரூ.630 கோடி செலவில் ராமநாதபுரம் பரமக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
  • சென்னையில் டைடல் பூங்கா அமைத்தது.
  • குடிசை மாற்று வாரியம்,
  • குடிநீர் வடிகால் வாரியம்,
  • கண்ணொளி வழங்கும் திட்டம்,
  • பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்,
  • கை ரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கும் திட்டம்,
  • ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டம்.
  • தாழ்த்தப்பட்டோர்க்கு இலவச கான்கிரீட் வீடுகள்,
  • இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள்,
  • எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன;

  • புன்செய் நிலவரி அறவே நீக்கம்,
  • உழவர் சந்தைகள் திட்டம்.
  • ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி,
  • விவசாயக் கடன் வட்டி4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • 1 லட்சத்து 74 ஆயிரத்து 941 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரத்து 134 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டுள்ளது;

  • 6 லட்சத்து 50 ஆயிரத்து 517 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
  • ஏறத்தாழ 3 லட்சம் படித்த இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

  • சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள்.
  • தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.
  • கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் மூன்று புதிய அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி என்ற கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 5 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கம்.
  • திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, இராமநாதபுரம் ஆகிய 6 இடங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

  • இந்திய வரலாற்றிலேயே எந்தவொரு மாநிலத்திலும் செய்யப்படாத அளவிற்கு ஒரு கோடி ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த அரசு ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ள தே.மு.தி.க. தலைவருக்கு இந்த விளக்கங்கள் போதும் என்று நினைக்கிறேன்.

    செய்தி: நன்றி: தினகரன்

  • Tuesday, July 28, 2009

    ஆத்துல ஒரு அம்மாமி - கருணாநிதி

    நானும் ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் பத்திரிகைகளிடம் பகைமை பாராட்டுவதில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அருகில் இருந்தும், தொலைவில் இருந்தும் உடன் பிறப்புகள் என் மீது அன்பைப் பொழிந்து கொண்டும், அண்ணனே, உனக்காக உயிரையே தரத் தயாராக இருக்கிறேன் என்ற உறுதிமொழிகளை வழங்கிக் கொண்டும், என் நாடி நரம்புகளில் பாசப்பெரு வெள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, சில வார ஏடுகள் (எல்லா ஏடுகளும் அல்ல) என்னைக் கேலி செய்தும், என் எழுத்துக்களை இழிவுபடுத்தி விமர்சித்தும், கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள் என ''கான மயிலாட கண்டிருந்த வான்கோழிபோல'' ஆடிப்பார்க்கும் அவலட்சணத்தின் அநாகரீகத்தின் உச்சமே அந்த ஏட்டாளர்களுக்கு மிச்சம்.

    இதோ!. என் துணைவி தயாளு அம்மையாரைப் பற்றி கேலிச் சித்திரம் போடவும், தயங்கிடவில்லை என்பதற்கு அடையாளமாக 24-6-2009 தேதிய ஆனந்த விகடனில் "கன்னா பின்னா'' கார்ட்டூன்களில் ஒன்று வெளிவந்துள்ளது.

    அக்ரகாரத்துக்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா? ''நாமும் கார்ட்டூன் வரைந்திட அவா ஆத்துல ஒரு அம்மாமி கிடைக்காமலா போய்டுவா?''.

    என்னிடத்தில் ஆழ்ந்த அன்பும் பற்றும் பாசமும் கொண்ட இளங்கவிஞர் தமிழ்தாசன் இந்தப் படங்கள் குறித்தே ஒரு கண்டனக் கடிதத்தை எனக்கெழுதி, அதே ஆனந்த விகடன் 25-4-1954ல் எழுதிய 'மனோகரா' திரைப்பட விமர்சனத்தையும் அந்த ஏட்டிலிருந்தே எடுத்து எனக்கு அனுப்பியுள்ளார். அதை அப்படியே இந்தக் கடிதத்துடன் இணைத்திருக்கிறேன். அதன் விவரம்:

    "தாயைத் தெய்வமாகக் கொண்டாடும், அவளை வழிபட்டு வணங்கும் தமிழ்ப் பெரு மரபிலே, ஒரு தமிழ் மகன் எத்தனை வீறுகொண்டு எழுந்தாலும், எப்பேர்ப்பட்ட எரிமலை போல் குமுறிக் கிளம்பினாலும், 'தாய்' என்ற ஒரே ஒரு மந்திரச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அடங்குவான்.

    இந்த மகத்தான உண்மையை வற்புறுத்துகிறது 'மனோகரா'.

    மனோகரனைச் சங்கிலிகளால் கட்டிச் சபை நடுவே இழுத்து வரச்செய்து, வசந்தசேனையிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறான் மன்னன். "என்ன குற்றம் செய்தேன், அரசே! பதில் சொல்லும்'' என்று இடி முழக்கம் செய்த இளவரசன், சங்கிலிகளை அறுத்துக் கொண்டு கத்தியை ஓங்கியவாறு சண்டமாருதமென முன்னேறும் சமயம், "இனி இந்தச் சூறாவளியை யாரால் நிறுத்த முடியும்? தொலைந்து போனான் அரசன்!'' என்று நாம் முடிவு கட்டும்போது, "என் மார்பிலே உன் கத்தியை முதலில் பாய்ச்சு! பிறகு என் சவத்தின் மீது நின்று கொண்டு உன் தந்தையுடன் சண்டை போடு!'' என்று கூறுகிறாள் அந்தப் பதிவிரதா ரத்னம்.

    தாய்மையின் வெற்றி மனோகரனை அடக்குவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவனை வீரனாக்கி, மாசற்ற மனம் படைத்தவனாகவும் ஆக்குகிறது.

    மனோகரனைத் தூணிலே சங்கிலியால் கட்டியிருக்கிறது. சாட்டை கொண்டு அவனை அடிக்கிறான் ஒரு பாதகன். வசந்தசேனையும் அவள் ஆரம்பக் காதலனும் மனோகரனின் பச்சிளம் பாலகனை எடுத்துவரச் செய்து, அவன் கண்ணெதிரிலேயே கத்திக்கு பலியாக்க விழைகிறார்கள்.

    எந்தக் கணவனை உத்தேசித்து இதுவரை பொறுமையை மேற்கொண்டாளோ, அவனே சிறையிலே விழுந்துவிட்ட பின், பொறுமையைக் கைவிடும்படி மகனுக்கு ஆக்ஞை கொடுக்கிறாள் தாய்.

    "மகனே, பொறுத்தது போதும்... பொங்கியெழு!'' என்று அவள் கூறியதும், எதிர்பார்த்தது நடைபெறுகிறது. சங்கிலி அறுகிறது; தாயின் துயர் துடைக்க, தாய் நாட்டை மீட்க, கொந்தளித்துக் கொண்டு பாய்கிறான் மனோகரன்.

    தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலே போட்டா போட்டி! தர்மம் சளைத்து விட்டது போன்று காண்கிறது; அதர்மம் வலுவடைந்து வருவது போலும் தோன்றுகிறது. கடைசியில் தர்மம் வென்று, அதர்மம் புல் முளைத்துப் போகிறது.

    சிவாஜி கணேசனும், கண்ணாம்பாவும் இவ்விரு பாத்திரங்களை ஏற்று, அவற்றிலே ஊறி, படமெங்கும் தங்கள் ஒளியைப் பரவி வீசிவிட்டார்கள்.

    வசந்த சேனை (டி.ஆர்.ராஜகுமாரி) கல் நெஞ்சம் படைத்த வஞ்சகி. ஹாஸ்ய பாத்திரமாக வரும் வஸந்தன் (எஸ்.ராதாகிருஷ்ணன்) பைத்தியக்காரன். அரசன் புருஷோத்தமன் (சதாசிவராவ்) நூற்றுக்கு நூறு மோகாந்த காரத்தில் மூழ்கிப் போனவன். இந்த பாகங்களை ஏற்று நடிப்பவர்கள் பிரதான பாத்திரங்களுடைய தரத்தைக் குன்றச் செய்யாமல் இருப்பது, இந்தப் படத்திலே ஒரு சிறந்த அம்சம்.

    நல்ல கதையாக இருந்தால், ஜீவசக்தியுள்ள சம்பாஷணைகள் இருந்தால், பிரதான நடிகர்கள் நன்றாக நடித்துவிட்டால், பொது ஜன அபிமானம் கிட்டாமல் போகாது என்பதற்கு "மனோகரா''வை எடுத்துக் காட்டலாம்.'' இவ்வாறு விகடன் விமர்சனம் எழுதியது 1954ல்!.

    வசனகர்த்தாவின் பெயரை மறைத்த விகடன்..

    அந்தத் தம்பியின் கடிதத்தின் முடிவில் அந்தத் தம்பியே எழுதியிருக்கிறார் -மனோகரா வசனங்களைப் புகழ்ந்துவிட்டு அந்த வசனங்களை எழுதியுள்ள உங்கள் பெயரை அந்த ஏடு வெளியிடவே இல்லையே என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் தம்பி தமிழ்தாசன்!.

    தம்பி தமிழ்தாசனுக்குச் சொல்கிறேன், மற்ற தம்பிமார்களுக்கும் கவனமூட்டுகிறேன். அந்த ஏடு 'மனோகரா' படத்துக்கு வசனம் எழுதிய என் பெயரையே மறைத்துவிட்டது என்ற கோபம் எனக்கு இருந்திருந்தால் அதே ஏடு நடத்திய ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவுக்கு நான் சென்றிருப்பேனா?.

    அதேபோல, ஆனந்த விகடன் சார்பில் வெளியிட்ட 'பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள குடியரசு தலைவராக இருந்த அப்துல்கலாம் வர மறுத்த நிலையிலும்கூட, நான் அந்த விழாவிலே கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அரசு நூலகங்களில் எல்லாம் அந்தப் புத்தகங்களை முப்பது லட்சம் ரூபாய்க்கு வாங்கிட வேண்டுமென்றும் ஆணையிட்டிருப்பேனா?

    அது மாத்திரமல்ல, ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த பாலசுப்பிரமணியம் மீது தமிழகச் சட்டமன்றத்தின் சார்பில், அதிமுக ஆட்சியிலே நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்யும் அளவிற்கு நிலைமை சென்ற நேரத்தில், அந்தச்செய்தியினை வெளியூருக்கு காரிலே சென்று கொண்டிருந்த நான் வானொலியிலே கேட்டு விட்டு- உடனடியாக திண்டிவனத்திலே என் காரை நிறுத்தச் சொல்லி -அந்தச் செய்கையைக் கண்டித்து அங்கிருந்தே அறிக்கை கொடுத்திருப்பேனா?.


    நானும் ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் பத்திரிகைகளிடம் பகைமை பாராட்டுவதில்லை. அப்படிப் பாராட்டும் பண்பு எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பேனா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.


    செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

    இந்திய ஜனாதிபதிக்கு உங்க புகாரை தெரிவிக்கணுமா ?

    உங்க புகார்களை இந்திய ஜனாதிபதிக்கு தெரிவிக்கணுமா ? ஒரு மெயில் தட்டி வுடுங்க.
    இல்ல இந்த தளத்துக்கு போய் ரிஜிஸ்டர் பண்ணி உங்க புகார சொல்லுங்க.

    தட்டுங்கள் திறக்கப்படலாம் !



    படம்: நன்றி: த ஹிண்டு

    NEW DELHI: With the click of a few buttons, complaints, petitions and prayers will now swiftly reach the President’s Office, find their way to the departments concerned, get tracked as they are processed and the information stored for later use.

    With the launch of a new website http://helpline.rb.nic.in on Friday, reaching out to the President has become easier. Launched by President Pratibha Patil at the Rashtrapati Bhavan, the website has been designed to simplify the process of grievance redress.

    “The Rashtrapati Bhavan mail box receives over 400 mails every day. The portal is expected to reduce the time taken to dispatch the mail to the Central and State government departments concerned, following up on the action taken and finally maintaining the record,” said Secretary to the President Cristy Fernandes.

    “We hope to process the applications within seven days of receiving them. And everybody who sends us a mail will be provided a unique registration number (URN), which will help them keep track of their application,” he said.

    The portal, Mr. Fernandes said, was the President’s idea. “On assuming office, the President expressed the wish to modernise everything possible, from infrastructure to the style of working.”

    The portal offers citizens a platform to voice their grievances. Of the total applications that the President’s Office receives, 70 per cent are through snail mail and the rest electronically.

    “People who are left with no options write to the President. There are some limitations that the office faces as far as keeping track of these applications, updating their status and preserving these applications is concerned. But with the launch of this portal, we hope to address these issues,” said Mr. Fernandes.

    The new system is being integrated with the Centralised Public Grievance Redress and Monitoring System which will monitor the progress of the petition.

    The portal, currently available in English, will gradually be available in Indian languages as well. It will allow lodging of lengthy e-petitions and enable supplementary attachment of scanned documents.

    செய்தி: நன்றி: த ஹிண்டு

    Thursday, July 23, 2009

    ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரியில் சாம்பார் வடை..!

    சொற்கள் வளர்ந்தால் தான் மொழி வளரும்: வைரமுத்து பேச்சு

    சென்னை: ""மொழி வளர வேண்டுமானால், மொழி பேசும் இனமும், மொழியில் உள்ள சொற்களும் வளர வேண்டும்,'' என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்."ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்' தயாரித்த ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. கவிஞர் வைரமுத்து அகராதியை வெளியிட, முதல் பிரதியை தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார்.


    விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது: ஆங்கிலேயர்கள் உள்நாட்டை இணைக்கும் தண்டவாளம், உலகத்தை இணைக்கும் ஆங்கிலம் ஆகிய இரு நல்ல விஷயங்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.சீனர்களும், ஜப்பானியர்களும் ஆங்கிலத்தை கற்கத் துவங்கியுள்ள நிலையில், இந்தியர்கள் ஆங்கி லத்தை முறைப்படி கற்றதால்தான் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் துறை யில் சிறந்து விளங்குகின்றனர்.கடந்த 1928ம் ஆண்டு முதலாவது ஆங்கில அகராதி வெளியானபோது, அம்மொழியில் நான்கு லட்சத்து 16 ஆயிரம் சொற்கள் இருந்தன. ஆனால், இன்று 26 எழுத்துக்களை கொண்ட ஆங்கிலத் தில் 10 லட்சம் சொற்கள் உள்ளன.அதே நேரத்தில், 247 எழுத்துக் களை கொண்ட தமிழில் மொத்தம் மூன்று லட்சம் சொற்கள் மட்டுமே உள்ளன. மொழி வளர இனம் வளர வேண்டும்; மொழியில் உள்ள சொற்கள் வளர வேண்டும்.புதிய சொற்களை தமிழில் கொண்டு வர தமிழில் உள்ள சொற்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு வைரமுத்து பேசினார்.

    தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பேசியதாவது:அகராதி என்ற சொல் திருக் குறளில் இருந்து உருவாகியுள்ளது. 6,500க்கும் மேற்பட்ட மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழிகள் பட்டியலில் தமிழ் 21வது இடத்தில் உள்ளது. மனிதன் கண்டுபிடித்த கருவிகளில் அதிக ஆற்றல் மிக்கது மொழிதான்.

    தனிப்பட்ட கண்டுபிடிப்பான ஆயுதங்கள், கருவிகளை அடுத்த தலைமுறை தூக்கி எறிந்துவிட்டு, அடுத்த கருவியை உருவாக்குகிறது. ஆனால், சமுதாய கண்டுபிடிப்பான மொழியை மாற்றுவது கடினம். மாற்ற முயற்சிக்கும் போது புதிய சொற்கள் உருவாகின்றன.இவ்வாறு ராஜேந்திரன் பேசினார்.ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் சர்வதேச மேலாண் இயக் குனர் நீல் டம்கின், ஆக்ஸ் போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் இந்திய மேலாண் இயக்குனர் மன்சர் கான், சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர், அகராதியின் ஆசிரியர் முருகன், ஆலோசகர் ஜெயதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    செய்தி: நன்றி: தினமலர்


    Oxford lexicon laps up sambhar, vada


    Newly-Released English-English-Tamil Dictionary Has Many Tamil Words



    Chennai: Pongal and sambhar. Samosa and vada. Ghatam and Carnatic music. We’re not talking about canteens at a sabha; they’re just some of the words that have found their way into Oxford University Press’ (OUP) English-English-Tamil dictionary, which was released at Anna University on Thursday.

    The dictionary is aimed at Tamil speakers who are learning English — users can look up the English word, find a meaning in English like in a regular dictionary, and if that’s not clear enough, refer to the Tamil explanation. Poet and lyricist Vairamuthu released the dictionary and presented the first copies to M Rajendran, vice-chancellor, Tamil University, and P Mannar Jawahar, vice-chancellor, Anna University.

    “A language grows only when people keep speaking it and it expands to include new words,” said Vairamuthu. “The English language has always been quick to include new words, which is why it has over 10 lakh words even though it has just 26 alphabets,” he said, giving examples of words like ‘cash’ and ‘mulligatawny’ that have been adapted from Tamil. “If you tie down a language by claiming to protect it, it cannot grow and stay relevant to everyday users.”

    As part of its 10-year-old bilingual dictionary programme, OUP has already published similar dictionaries in Hindi, Gujarati, Kannada, Bengali, Oriya and Marathi. “Finding the right team to compile a dictionary which is accurate, comprehensive and relevant was a challenge,” said OUP managing director Manzar Khan, responding to Rajendran’s question on why it took so long to publish a Tamil edition. Along with editor V Murugan and consulting editor V Jayadevan, the OUP team took five years to compile the dictionary.

    “Only a minuscule number of students and teachers use dictionaries in India because only monolingual dictionaries are available,” said Murugan. He added that each entry had about 12 components, including pronunciation, American English variation, usage notes and cross references. “It was hard to bring all this into the dictionary. But it should also be of help to students going abroad,” he said. With an eye on this user groups, the book has a number of engineering, medical and technical terms too.

    Neil Tomkins from OUP’s international division said their dictionaries focused on the evolution of words and not just their current usage. OUP’s dictionary team even looks up social networking and micro-blogging sites to keep in touch with language, its evolution and usage — which is why the dictionary includes words like SMS and browser, explained an OUP spokesperson.

    செய்தி: நன்றி: Times of India