இலங்கை சென்றுள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழுவினர் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து அளவளாவினர். அவருக்குப் பொன்னாடை போர்த்தினர். தமிழ் மக்களை விரைவில் அவரவர் இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
அப்போது தமிழர் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பிறகே முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அந்தப் பகுதிகளில் மீண்டும் குடியமர்த்தப்படுவர் என தமிழக குழுவிடம் ராஜபக்சே தெரிவித்தார்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.
முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக குழுவினர், கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களிடம் குறை கேட்டனர்.
மாலையில், வவுனியாவில் உள்ள மானிக் பார்ம் வளாகத்தில் உள்ள 5 முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை தமிழக குழுவினர் பார்வையிட்டனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு நிகழ்ச்சி, முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது. பின்னர் குழுவினர் பல பிரிவுகளாக சென்று தமிழ் அகதிகளிடம் குறை கேட்டனர்.
பின்னர் இந்திய வம்சாவளி தமிழ் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலையகப்பகுதிக்கு தமிழக குழுவினர் திங்கட்கிழமை சென்றிருந்தனர். இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பின் பேரில் அங்கு சென்றனர்.
திங்கள்கிழமை ஹட்டன் நகருக்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.
தேயிலை தோட்டங்கள் நிறைந்த நுவரேலியாவுக்கும் தமிழக குழுவினர் சென்றனர். தொண்டமான் பெயரில் அமைந்துள்ள தோட்டப்பயிர் பயிற்சி மையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். இரவில், மலையக பகுதியில் தமிழக குழுவினர் தங்கினார்கள்.
அதிபர் ராஜபக்சேவை தமிழக குழுவினர் திங்கட்கிழமை சந்தித்து பேசுவதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, நேற்று அந்த சந்திப்பு நடந்தது.
ராஜபக்சேவை சந்தித்த திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழுவினரை ராஜபக்சே, அவரது தம்பி பசில் ராஜபக்சே ஆகியோர் வரவேற்றனர். ராஜபக்சேவுக்கு தமிழக குழுவினர் பொன்னாடை போர்த்தினர். பசில் ராஜபக்சேவை, டி.ஆர். பாலு, கட்டித் தழுவிக் கொண்டார்.
தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பின்னர் திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் ராஜபக்சேவிடம் வலியுறுத்தினர். சந்திப்பின் போது இலங்கை அமைச்சர் [^] ஆறுமுகம் தொண்டமானும் உடனிருந்தார்.
முகாம் நிலை குறித்து திருப்தி!:
இந்த சந்திப்பு குறித்து இலங்கை அரசின் தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், அதிபரை சந்தித்த தமிழக குழுவினர், இடம் பெயர்ந்தோருக்கான அகதிகள் முகாம்கலில் உள்ள வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்துக் கொண்டனர்.
தங்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு அழைப்பு விடுத்ததற்காகவும், போதிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தற்காகவும் அவர்கள் அதிருபருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். தங்களை சந்திக்க அனுமதி அளித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ் மக்களை மறு குடியமர்த்தும் நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர்கள், அதுதொடர்பாக இலங்கை அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளையும் பாராட்டினர்.
மழைக்காலம் நெருங்கி வருவதால், அதற்குள் தமிழர்களை இடம் பெயரச் செய்ய வேண்டியது அவசியம் என்றும் திமுக - காங்கிரஸ் [^] கூட்டணிக் குழுவினர் அதிபரைக் கேட்டுக் கொண்டனர். அதற்குத் தேவையான நடவடிக்கை [^]கள் எடுக்கப்பட்டுள்ளதாக ராஜபக்சே தெரிவித்தார்.
அவர்களிடம் அதிபர் பேசுகையில், எந்தவகையான தீர்வாக இருந்தாலும் அது அனைத்து சமுதாயத்தினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.
இலங்கை பன்முக இனப் பிரிவுகளால் ஆன ஒரு நாடாகும். கொழும்பு நகரில் கிட்டத்தட்ட 65 ஆயிரம் தமிழர்கள் [^] வாழ்கிறார்கள்.
தமிழகத்திலிருந்து எம்.பிக்கள் குழு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இங்குள்ள மக்களின் நிலையை நீங்களே வந்து பார்த்து புரிந்து கொள்வது அவசியமாகும். ஏனென்றால் இடம் பெயர்ந்தோர் முகாம்கள் குறித்து வெளியில் அவதூறு பரப்பப்படுகிறது. விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள். தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை சரி பார்த்துக் கொள்ள இந்தப் பயணம் உதவியிருக்கும் என்றார்.
பின்னர் அதிபரின் ஆலோசகரும், தம்பியுமான பசில் ராஜபக்சே கூறுகையில், இன்னும் 2 நாட்களில் முகாம்களில் உள்ள இட நெருக்கடி, கூட்ட நெரிசல் குறையும் என்றார்.
செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்
Wednesday, October 14, 2009
திமுக- காங்கிரஸ் எம்.பிக்கள் with ராஜபக்சே
Tuesday, September 8, 2009
விஜய் தொண்டராக இருந்தாலே போதும் - இளங்கோவன்
நடிகர் விஜய் காங்கிரசின் அடிமட்டத் தொண்டராக இருக்க வேண்டியதில்லை, தொண்டராக இருந்தாலே போதும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இன்று அனைத்து அரசியல் கட்சிகளிலும் இளைஞர்கள் 10 சதவீதம் பேர் தான் உள்ளனர். 90 சதவீதம் இளைஞர்கள், அரசியலே வேண்டாம் என்று தான் நினைக்கின்றனர்.
ராகுல் காந்தி வருகைக்கு பின், தமிழகத்தில் நிறைய இளைஞர்கள் அரசியலுக்கு வருவார்கள் .
நடிகர் விஜய் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம். அவர் காங்கிரசில் இணைய எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அவர் அடிமட்ட தொண்டராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தொண்டராக இருந்தால் போதும்.
என் மகன் மேஜர், அவரும் காங்கிரசில் தான் உள்ளார். தேர்தலில் நிற்பதா, வேண்டாமா என்பதை அவர் தான் முடிவு செய்வார். ராகுல் சுற்றுப் பயணத்துக்கு பின் என் மாமூல் அரசியல் தொடரும் என்றார்.
செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்
Monday, August 31, 2009
காங்கிரசில் இணைந்தார் ரோஜா..!
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நடிகை ரோஜா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் அடையாளமாக முதல்வர் ராஜசேகர் ரெட்டியை சந்தித்தார்.தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவி பதவி வகித்து வரும் நடிகை ரோஜா, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார்.முதல்வரை சந்திக்கச் சென்ற நடிகை ரோஜாவை ராஜசேகர ரெட்டி வரவேற்றார். ரோஜா, ராஜசேகர ரெட்டிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.நடிகை ரோஜா- முதல்வர் ராஜசேகர ரெட்டி சந்திப்புக்கு, திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் கருணாகர ரெட்டி ஏற்பாடு செய்தார்.
முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்துளீர்களே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டீர்களா? என, நடிகை ரோஜாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில்:"மாநிலத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்துள்ளார். ஆந்திராவில் விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் இதை நடைமுறைப்படுத்த உள்ளதாக முதல்வர் அறிவித்திருந்தார். அதற்கு பாராட்டு தெரிவிக்க அவரை சந்தித்தேன். தெலுங்கு தேசம் கட்சியை எனது பிள்ளைகளை காப்பது போன்று அதிக அக்கறையுடன் பார்த்துக் கொண்டேன். தெலுங்கு தேசம் கட்சி தான் என்னை கண்ணியத்துடன் கவுரவிக்க தவறி விட்டது.இவ்வாறு அவர் கூறினார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக எப்போது சேரப்போகிறார் என்பதற்கு பதிலளிக்கவில்லை.
செய்தி: நன்றி: தினமலர்
http://www.dinamalar.com/new/Political_detail.asp?news_id=13660
செப்டம்பர் 08,2009
ஐதராபாத்:தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பிய நடிகை ரோஜா, மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.ஆந்திராவில், சித்தூர் மாவட்டம், நகரி, சந்திரகிரி ஆகிய இரண்டு சட்டசபைத் தொகுதிகளிலும், தெலுங்கு தேச வேட்பாளராக போட்டியிட்டு, தோல்வியைக் கண்டவர் ரோஜா. 10 ஆண்டு காலமாக அதே கட்சியில் நீடித்தவர், திடீரென காங்., கட்சியில் இணைய திட்டம் போட்டார்.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைவதற்கு சில தினங்களுக்கு முன், அவரைச் சந்தித்து, காங்., கட்சியில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.நேற்று, ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்த ரோஜா, காங்., கட்சியில் சேர்ந்தார்.பின், நிருபர்களிடம், "தெலுங்கு தேச கட்சியிலிருந்து நான் விலகுவதாக, அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் அனுப்பி விட்டேன். 10 ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
Monday, June 15, 2009
காங்கிரசுக்கு தமிழக ஆட்சியில் பங்கு தர முடிவு ?
தமிழக ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருப்பதாகவும், இதனை யடுத்து காங்கிரஸ் கட்சியில் முக்கியமான சிலருக்கு அமைச்சர் பதவி அளிக்க திமுக இறங்கி வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஏதுவாக திமுகவில் சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப் படும் என்றும் இலாகாக்கள் மாற்றப் படும் என்றும் கூறப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுப்பப் பட்டு, அது தற்போது வலுவடைந்துள்ளது. இது குறித்து விவாதிக்க சென்னையில் இன்று நடக்கவிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
எம்எல்ஏக்கள் கூடி விவாதிப்பதற்கு பதிலாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் உள்ளிட்டோர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு அதுபற்றி விவாதிக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், தமிழ்நாடு காங்கிரசுக்கு பொறுப்பு வகிக்கும் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.
தமிழக அரசில் பங்கு கேட்க காங்கிரஸ் மேலிடமும் தற்போது விரும்புவதாகவும், அதுபற்றி ஆலோசனை நடத்தி திமுக தலைமைக்கு தெரிவிப்பது என்றும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அரசில் 7 அமைச்சர்களை பெற்றுள்ள திமுகவும், காங்கிரசுக்கு தமிழக அமைச்சரவையில் பங்கு கொடுக்க முடிவு செய்து தனது நிலையிலிருந்து இறங்கி வந்திருப்பதாகத் தெரிகிறது.
தற்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் நடைபெறும் திமுக அரசில் காங்கிரசும் பங்கு பெற்றால், அரசு மட்டுமல்லாமல் கூட்டணியும் வலுவடையும் என்றும், இதனைக் கொண்டு அடுத்த சட்டமன்ற தேர்தலை சுலபமாக எதிர்கொள்ளலாம் என்றும் திமுக கருதுவதாக தெரிகிறது.
திமுக அரசுக்கு மிகவும் இணக்கமாக செயல்படும் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கொறடா பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட முக்கிய சில எம்எல்ஏக் களுக்கு அமைச்சர் பதவி அளிக்க திமுக மேலிடம் முன்வந்துள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காங்கிரசை அரசில் சேர்க்கும் போது திமுகவைச் சேர்ந்த சில அமைச்சர் களின் பதவிகளும் பறிக்கப்படுவது தவிர்க்க இயலாததாக உள்ளது. ஏற்கனவே சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள முதலமைச்சர், அந்த அமைச்சர்களின் பதவிகளை பறிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அமைச்சர்களின் இலாகாப் பொறுப்புக்களில் அதிரடி மாற்றங்களும் செய்யப்படவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. கோ.சி. மணி, பொங்கலூர் பழனிச்சாமி, பரிதி இளம்வழுதி, கா. ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படு வார்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உடல்நலக்குறைவு காரணமாக கோ.சி. மணி அமைச்சர் பதவி யிலிருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது. பொங்கலூர் பழனிச் சாமியின் செயல்பாடுகள் அவரது சொந்த மாவட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால் கடந்த தேர்தலில் திமுக கூட்டணி கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங் களில் தோல்வி அடைய நேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அவரதுபதவிக்கு ஆபத்து ஏற்படும் என தெரிகிறது.
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் செய்தி விளம்பரத் துறை சரியாக செயல்படவில்லை என்ற புகாரை அடுத்து, அதற்கு பொறுப்பான பரிதி இளம்வழுதி மீது அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கா. ராமச்சந்திரனின் செயல்பாடுகள் பொது மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், கட்சியினர் மத்தி யிலும் அதிருப்தியை ஏற்படுத்தி யிருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல மேலும் சில அமைச்சர் களின் தலைகளும் உருளலாம் எனத் தெரிகிறது. சட்டமன்ற கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், இந்த மாற்றங்கள் கூட்டத் தொடர் முடிந்ததும் நிகழலாம் எனக் கூறப்படுகிறது.
செய்தி: நன்றி: மாலைச்சுடர்
Thursday, April 16, 2009
காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. அதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரிக்கான வேட்பாளர்கள் :-
சிவகங்கை- ப.சிதம்பரம்,
ஈரோடு - இளங்கோவன்,
திண்டுக்கல் - சித்தன்,
தேனி - ஆரூண்,
கோவை - பிரபு,
மயிலாடுதுறை -மணிசங்கர் அய்யர்,
சேலம் - தங்கபாலு,
திருப்பூர் - கார்வேந்தன்,
ஆரணி - கிருஷ்ணசாமி,
கடலூர் - அழகிரி,
திருநெல்வேலி - ராமசுப்பு,
தென்காசி - வெள்ளைப் பாண்டியன்,
விருதுநகர் - சுந்தரவடிவேலு,
திருச்சி - சாருபாலா தொண்டைமான்
காஞ்சிபுரம் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார்.
புதுச்சேரியில் நாரயணசாமி காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
செய்தி: நன்றி: தினமலர்
Thursday, February 19, 2009
காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா அழைப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பழைய நண்பர் என்ற முறையில் இந்த யோசனையை கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 61-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயலலிதா பேரவை சார்பில் அதன் மாநில செயலாளர் தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில் 61 ஜோடிகளுக்கு இன்று திருவான்மியூரில் இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அவர்களுடன் சேர்த்து கல்வராயன் மலை வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி- வசந்தி மற்றும் விழுப்புரம் எஸ்.எஸ்.பன்னீர்செல்வம் மகன் வினோத் - ஆனந்தவல்லி ஆகியோரின் திருமணங்களும் நடைபெற்றன.
இவற்றை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசியதாவது:- திருமணம் என்பதும் ஒரு கூட்டணி தான். இந்த திருமணக் கூட்டணி வெற்றிகரமாக அமைய மணமக்கள் பரஸ்பரம் விட்டுக்கொடுக்க வேண்டும். இந்த திருமண சீசன் நேரத்தில் தேர்தல் சீசனும் வந்து அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சு வார்த்தைகளை தொடங்கி இருக்கிறார்கள்.
கடந்த 33 மாத கால திமுக ஆட்சியில் வன்முறை, ஊழல், சட்ட விரோத நடவடிக்கைகள் மலிந்து விட்டன. ஆனால் இதுவரை இதில் ஈடுபட்டவர்கள் எந்த தண்டனையும் பெறாமல் சுதந்திரமாக உலா வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு திமுகவுக்கு தருகின்ற ஆதரவு தான். இந்த ஆட்சியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி இடைத்தேர்தல் அனைத்திலும் திமுகதான் வெற்றி பெற்றது. இந்த வெற்றிகள் உண்மை யான வெற்றிகள் அல்ல.
பண பலம், படை பலம், ரவுடிகள் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை பயன்படுத்தி தான் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கெல்லாம் காங்கிரஸ் தருகின்ற ஆதரவு தான் காரணம். இப்போது திமுகவுக்கு அசட்டு தைரியமும், நம்பிக்கையும் உள்ளது. இதேபோல வன்முறை, அராஜகம், அதிகார துஷ்பிரயோகம் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என்று திமுக கருதுகிறது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை திமுகவுடனான கூட்டணியை தொடர விரும்புவதாகவே தகவல்கள் வருகின்றன. இந்த கூட்டணியுடனே நாடாளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரசும், திமுகவும் நம்புகின்றன.
ஆனால் மக்களை இந்த கட்சிகள் அடியோடு மறந்துவிட்டன. உண்மை நிலவரம் என்னவென்றால் தமிழக மக்கள் திமுக மீது கடும் கோபத்திலும், வெறுப்பிலும், கொதிப்பிலும் உள்ளனர். மத்தியில் உள்ள திமுக அமைச்சர்களும் இமாலய ஊழல்கள் செய்வதை மக்கள் அறிவார்கள். குறிப்பாக 1 லட்சம் கோடி அளவிலான ஸ்பெக்ட்ரம் ஊழலை மக்கள் மறந்துவிடவில்லை.
இந்த நேரத்தில் மக்கள் மனதில் எழுகின்ற கேள்வி இதுதான். இத்தகைய ஊழல் மலிந்த திமுக மீது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் அந்த கேள்வி. அவ்வாறு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் திமுக மீது மக்களுக்கு உள்ள கோபம் காங்கிரசின் பக்கமும் திரும்பும்.
கடந்த காலத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் இப்போது நடக்கும் தவறுகளையும் மறந்து மீண்டும் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சி கருதிவிடக்கூடாது. அவ்வாறு கருதினால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களை சந்தித்து வாக்கு கேட்க முடியாத நிலை உருவாகி விடும். கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியும், அதிமுகவும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறோம். அந்தப் பழைய நட்புறவைப் பாராட்டி நண்பர் என்ற முறையில் ஒரு ஆலோசனை கூறுகிறோம்.
திமுக இப்போது புதை மணலில் சிக்கி மூழ்கிக்கொண்டிருக்கிறது. அதனை இனிமேல் யாராலும் காப்பாற்ற முடியாது. திமுக கதை முடிந்து விட்டது. புதை குழியில் மூழ்கும் திமுகவை கைகொடுத்து காங்கிரஸ் காப்பாற்ற நினைத்தால் அந்தக்கட்சியும் புதைகுழியில் சிக்கி அழியும் ஆபத்து உள்ளது.
எதிர்காலத்தின் மீது காங்கிரசுக்கு அக்கறை இருந்தால் திமுகவுடனான உறவை அக்கட்சி துண்டிக்க வேண்டும். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலங்களில் அதிமுகவும், காங்கிரசும் நல்ல உறவு கொண்டிருந்தன. இந்திராவை நான் அன்னையாகவே மதித்தேன். அதன் பின் ராஜீவ் காலத்திலும் காங்கிரசுடன் எங்களுக்கு நல்ல மரியாதையும் நட்புணர்வும் இருந்தது. எனவே தான் பழைய நண்பர் என்ற முறையில் இந்த ஆலோசனையை காங்கிரஸ் கட்சிக்கு கூறுகிறேன்.
இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிக்கொள்வேன். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கும் அதற்கு ஆதரவு தருகின்ற கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் கட்சி அல்ல, எந்த கட்சி திமுகவுடன் இணைந்து வந்தாலும் மக்கள் அவர்களை விரட்டியடிப்பார்கள்.
இத்தகைய நிலையை சந்திக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி விரும்பினால் திமுகவுக்கு அளிக்கும் ஆதரவை அந்த கட்சி வாபஸ் பெற வேண்டும். அத்துடன் மக்களிடம் நம்பிக்கையை பெறுவதற்கு இமாலய தவறுகள் செய்யும் திமுக ஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யவும் வேண்டும். தவறுகளை திருத்திக்கொண்டு காங்கிரஸ் கட்சி இவ்வாறு மக்களிடம் பரிகாரம் காண வேண்டும்.
அதிமுகவை பொறுத்தவரை வரும் நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். அந்த தீர்ப்புக்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். எந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிகளுக்குத்தான் லாபம். எந்த கட்சிகள் சேர வில்லையோ, அந்த கட்சிகளுக்குத் தான் நஷ்டம் என்றார் ஜெயலலிதா.
செய்தி: படம்: நன்றி: மாலைச்சுடர்
Monday, August 25, 2008
தேமுதிகவுடன் கூட்டணிக்குத் தயார் - தங்கபாலு
தேமுதிகவுடன் கூட்டணிக்குத் தயார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையை ஏற்கும் எந்தவொரு கட்சியையும் வரவேற்று அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு இன்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:
சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் குடும்பத்தினர் வீதியில் வறுமையில் வாடுவதாக செய்தி வந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு வீடு, நிதி உதவி மற்றும் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் காங்கிரஸ் அறக்கட்டளை மூலம் செய்யப்பட் டுள்ளன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அடுத்த மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150வது ஆண்டு விழா, சேலம் புதிய உருக்காலை திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா, ஈரோட்டில் நடை பெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் இருதலைவர் களும் கலந்து கொள்கிறார்கள். இது பற்றிய முழு விவரம் நாளை அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் கட்சியை மூழ்கும் கப்பல் என்று இடதுசாரிகள் கூறி வருகிறார்கள். காங்கிரஸ் ஒரு பிரமாண்டமான கப்பல். அது கடலில் மூழ்குபவர்களை காப்பாற்றக்கூடிய கப்பல். அந்த பாதுகாப்பான கப்பலில் பயணம் செய்த இடதுசாரிகள் திடீரென கடலில் குதித்து விட்டார்கள்.
இப்போது அவர்கள்தான் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பார்வையில் காங்கிரஸ் கட்சி மூழ்குவதுபோல தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் மதச்சார்பற்ற சக்திகள் கைகோர்த்து நிற்கின்றன. எனவே மத்தியில் காங்கிரஸ் தலைமை யிலான கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நடைபெறும்.
காங்கிரஸ் கூட்டணியில் தான் பாமக உள்ளது. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் இருக்க வேண்டும். திமுக தலைவர் கருணாநிதியும் அதைத்தான் கூறி வருகிறார். பாமக இந்த கூட்டணியில் இருந்தால் பலம் அதிகரிக்கும் என்று முதல்வரே கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே தமிழ்நாட்டில் எல்லா மதச் சார்பற்ற சக்திகளும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.
தமிழகத்தை பொறுத்தவரை தேமுதிகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. காங்கிரஸ் தலைமையை ஏற்கும் எந்தவொரு கட்சியையும் நாங்கள் வரவேற்று கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்.
மேற்கு வங்கம், கேரளா சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு எங்களை எதிர்ப்பது போல இடது சாரிகள் பாவனை செய்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் அவர்கள் மனம்மாறி விடுவார்கள். 3வது அணி என்பது ஒரு கற்பனையே. அதுசாத்தியமாகாது. அது இடதுசாரி களுக்கும் தெரியும். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றார் கே.வீ.தங்கபாலு.
செய்தி: நன்றி: Maalaisudar
Wednesday, July 9, 2008
காமராஜர் ஆட்சி அமைப்போம்: தங்கபாலு
"நான் எந்த கோஷ்டியையும் சாரதவன், காங்கிரஸ் தலைவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவேன். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி கொண்டுவர பாடுபடுவேன்" என்று தமிழக காங்கிரசின் புதிய தலைவர் கே.வி.தங்கபாலு கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக கே.வி.தங்கபாலு, நேற்று காலை 9.28 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் பொறுப்பேற்றார். அவரிடம் பொறுப் பை ஒப்படைத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி வாழ்த்து தெரிவித்தார்.
புதிய தலைவராக பொறுப்பேற்ற தங்கபாலுவுக்கு மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கே.பி.கிருஷ்ணமூர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், எம்.எல்.ஏ.க்கள் யசோதா, பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு, ஜி.ஏ.வடிவேலு, ஞானதேசிகன் எம்.பி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், காங்கிரஸ் தொண்டர்களிடையே தங்கபாலு பேசியதாவது:
எந்த குழப்பமும் இல்லாமல், கோஷ்டிகள் இல்லாமல் தமிழக காங்கிரஸ் தலைவராக செயல்படுவேன். சோனியாகாந்தியின் கரத்தை வலுப்படுத்துவதுதான் எனது லட்சியம். நான் எந்த கோஷ்டியையும் சாராதவன். எல்லா தலைவர்களுடனும் பணியாற்றியுள்ளேன். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும். அதற்காக, மக்களிடம் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை பெறும் வகையில் தமிழகம் முழுவதும் கிராமங்கள் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்வேன். எல்லா தலைவர்களிடமும் ஒற்றுமையை உருவாக்குவேன். எல்லோரும் என்னை வாழ்த்த வந்துள்ளனர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் சோனியாகாந்தியின் தலைமையிலான ஆட்சியை கொண்டுவர அனைவரும் பாடு படவேண்டும்.
இவ்வாறு தங்கபாலு பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சோனியாகாந்தியின் கட்டளையை ஏற்று 3வது முறையாக தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளேன். புதிய சூழலில் தமிழக காங்கிரசை பலப்படுத்தும் பணியை தொடருகி றேன். எல்லா தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்.
மத்தியிலும் மாநிலத்திலும் காமராஜரின் கொள்கைகளை, லட்சியங்களை நிறைவேற்றும் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி கொண்டுவர பாடுபடுவோம். தமிழக காங்கிரசில் எந்த குழு அரசியலும் கிடையாது. தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கட்சியாக காங்கிரஸ் இருக்கும். மாநில நிர்வாகிகள் நியமனம் குறித்து அனைத்து தலைவர்களிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு தங்கபாலு கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முதல்வர் கருணாநிதியை நேற்று மாலை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். இருவரும் 25 நிமிடம் பேசினர்.
செய்தி: படம்: நன்றி: தினகரன் 10 ஜூலை 2008 (சென்னை பதிப்பு)
