Monday, August 31, 2009

காங்கிரசில் இணைந்தார் ரோஜா..!

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நடிகை ரோஜா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் அடையாளமாக முதல்வர் ராஜசேகர் ரெட்டியை சந்தித்தார்.தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவி பதவி வகித்து வரும் நடிகை ரோஜா, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார்.முதல்வரை சந்திக்கச் சென்ற நடிகை ரோஜாவை ராஜசேகர ரெட்டி வரவேற்றார். ரோஜா, ராஜசேகர ரெட்டிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.நடிகை ரோஜா- முதல்வர் ராஜசேகர ரெட்டி சந்திப்புக்கு, திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் கருணாகர ரெட்டி ஏற்பாடு செய்தார்.


முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்துளீர்களே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டீர்களா? என, நடிகை ரோஜாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில்:"மாநிலத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்துள்ளார். ஆந்திராவில் விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் இதை நடைமுறைப்படுத்த உள்ளதாக முதல்வர் அறிவித்திருந்தார். அதற்கு பாராட்டு தெரிவிக்க அவரை சந்தித்தேன். தெலுங்கு தேசம் கட்சியை எனது பிள்ளைகளை காப்பது போன்று அதிக அக்கறையுடன் பார்த்துக் கொண்டேன். தெலுங்கு தேசம் கட்சி தான் என்னை கண்ணியத்துடன் கவுரவிக்க தவறி விட்டது.இவ்வாறு அவர் கூறினார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக எப்போது சேரப்போகிறார் என்பதற்கு பதிலளிக்கவில்லை.

செய்தி: நன்றி: தினமலர்

http://www.dinamalar.com/new/Political_detail.asp?news_id=13660

செப்டம்பர் 08,2009

ஐதராபாத்:தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பிய நடிகை ரோஜா, மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.ஆந்திராவில், சித்தூர் மாவட்டம், நகரி, சந்திரகிரி ஆகிய இரண்டு சட்டசபைத் தொகுதிகளிலும், தெலுங்கு தேச வேட்பாளராக போட்டியிட்டு, தோல்வியைக் கண்டவர் ரோஜா. 10 ஆண்டு காலமாக அதே கட்சியில் நீடித்தவர், திடீரென காங்., கட்சியில் இணைய திட்டம் போட்டார்.


ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைவதற்கு சில தினங்களுக்கு முன், அவரைச் சந்தித்து, காங்., கட்சியில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.நேற்று, ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்த ரோஜா, காங்., கட்சியில் சேர்ந்தார்.பின், நிருபர்களிடம், "தெலுங்கு தேச கட்சியிலிருந்து நான் விலகுவதாக, அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் அனுப்பி விட்டேன். 10 ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

Tuesday, August 25, 2009

அனைத்து பள்ளிகளிலும் இந்தி - கபில் சிபல்

"அனைத்து பள்ளிகளிலும் இந்தியை கற்றுக் கொடுப்பதன் மூலம், அனைவரிடமும் ஒருங்கிணைப்பு ஏற்படும். அது நம்மை அறிவில் சிறந்தவர்களாக வெளியுலகிற்கு அடையாளம் காட்டும்' என, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.


டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்ற கபில்சிபல், மேலும் பேசியதாவது:

கல்விமுறையில் நமது பழைய நடைமுறைகளை மாற்றி, புதிய முறையில் சிந்திக்கத் தூண்டும் கல்வியே இப்போது தேவை. அறிவு சார்ந்த உலகை நாம் உருவாக்குவதன் மூலம், அதிலிருந்து மற்றவர்களும் கற்றுக் கொள்வர். பள்ளிகளில், மற்ற மொழிகளை கற்றுத் தருவது போல், இந்தி மொழியையும் கற்றுத் தரவேண்டும். பெரும்பாலான குழந்தைகள், தங்களது தாய்மொழியில் புலமை பெற்றவர்களாக உள்ளனர். அவர்கள், மற்ற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலம் வளமாக அமைய, கல்விமுறையில், அடிப்படையான, அவசியமான மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்.


இந்தி மொழியை மாணவ மாணவிகள் கற்பதன் மூலம், நாட்டில் உள்ள மற்றவர்களுடன் அவர்களால் எளிதாக உரையாட முடியும். இதன் மூலம் சமூக ஒருங்கிணைப்பு ஏற்படும். அதுபோலவே, ஆங்கில மொழியையும் கற்று, உலக நாடுகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மிடையே உள்ள திட்டவரையறைகளை குழந்தைகள் மீது திணிக்காமல், அவர்களது நலனில் ஒவ்வொருவரும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கபில் சிபல் பேசினார்.

செய்தி: நன்றி: தினமலர்

Thatstamil

Wednesday, August 12, 2009

நாளை கிருஷ்ண ஜெயந்தி - ஜெ. வாழ்த்து

நாளை நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி,

பூமியில் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை மிக உயர்ந்த தர்மம் என்னும் தத்துவத்தை பகவத் கீதை மூலம் உபதேசித்த கிருஷ்ணன் பிறந்த நாளில் இந்த உலகம் உயர்வடைய அனைவரும் பிரார்த்திப்போம்.

மனிதன் மனிதனாக மட்டுமல்லாமல் மற்ற மனிதனுக்காகவும் வாழ வேண்டும் என்ற உன்னத தத்துவதை நமக்கு அருளிய நலம் தரும் நாராயணன் அருளால் அனைவரது வாழ்க்கையும் சிறக்கட்டும். இருள் மறைந்து ஒளி மலரட்டும்.

எங்கெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும். குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ள ஜனநாயகம் மலரட்டும் என மனமார வாழ்த்துகிறேன் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Monday, August 10, 2009

சுனாமி எச்சரிக்கை..?? !!

அந்தமானுக்கு வடக்கே 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்களே செய்தியை பலருக்கும் சொல்லி எச்சரிக்கையாக இருக்கச் சொல்லவும். H1N1 தவிர இது வேற பயமுறுத்துகிறது.

சீனாவைத்தாக்கியுள்ள டைஃபூன் மிகுந்த சேதத்தை விளைவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்:
http://edition.cnn.com/2009/WORLD/asiapcf/08/10/india.earthquake/index.html

http://timesofindia.indiatimes.com/news/india/Earthquake-strikes-off-Andamans-tsunami-alert-cancelled/articleshow/4879908.cms

http://www.hindu.com/thehindu/holnus/000200908110320.htm

http://www.reuters.com/article/newsOne/idUSTRE5794XW20090810

Big quake hits off India's Andamans, no tsunami
Mon Aug 10, 2009 7:09pm EDT

By Sanjit Kumar Roy

PORT BLAIR, India (Reuters) - A major earthquake of magnitude 7.6 struck in the Indian Ocean off India's Andaman Islands early on Tuesday, but a tsunami alert for India, Myanmar, Indonesia, Thailand and Bangladesh was later canceled.


Three hours after the earthquake there were no reports of a tsunami or of any casualties from the tremor, officials said.

"We all ran out as fast as possible and have not gone back inside, fearing another quake. Everything was shaking, we are all very, very scared," Subhasis Paul, who runs a provision store in Diglipur island in North Andaman, told Reuters by telephone.

"People are calling each other out of their homes and everyone is huddled together outside," Paul said from Diglipur, about 300 km (185 miles) north of Port Blair, the capital of the Andaman and Nicobar Islands.

The small chain of islands lie hundreds of miles east of India in the Indian Ocean.

The U.S. Geological Survey said the quake, initially reported as a magnitude 7.7, struck at 1:55 a.m. (1955 GMT on Monday). It was relatively shallow, at a depth of 33 km (20.6 miles), and was centered 260 km (160 miles) north of Port Blair.

The U.S. National Oceanic and Atmospheric Administration's Pacific Tsunami Warning Center said there could be a destructive wave along coasts up to 1,000 km (600 miles) from the epicenter, but it later withdrew its warning.

"Sea level readings indicate that a significant tsunami was not generated," it said in a statement.

Officials at the tsunami alert center in southern India said chances of a tsunami were remote.

"The earthquake has not caused displacement of water necessary to generate a tsunami either in the deep sea or near coastal locations," said Rajesh, a senior official at the Indian National Center for Ocean Information Services.

"We are monitoring the situation, but everything appears normal so far. It seems we have been lucky," added Rajesh, who goes by one name.

A 7.6 magnitude quake is classified by the USGS as a major earthquake and is capable of widespread, heavy damage.

A massive quake in the Indian Ocean in 2004 caused a tsunami that killed some 228,000 people, the majority in the Indonesian province of Aceh on the northern tip of Sumatra island.

WOKEN BY A JOLT

"I was on the balcony, and it felt very strange for a while, like my chair was leaning to one side," said Reuters correspondent Martin Petty in Bangkok. "So I got out of there sharpish. Aftershocks went on for a good few minutes."

Wednesday, August 5, 2009

தி.மு.க.அரசு செய்த நல்ல காரியங்கள் - கருணாநிதி பட்டியல்

தி.மு.க. அரசு நல்ல காரியம் செய்யவில்லையா? சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் கருணாநிதி பதில்


படம் நன்றி: தினகரன்

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வரும் 9ம் தேதி நடக்கிறது. சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை அங்கு தங்கியுள்ள முதல்வர் கருணாநிதியை சந்தித்து, கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஆச்சார்யா நேற்று வழங்கினார். அருகில் பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர்பத்ரி, கன்னட மற்றும் பண்பாடு இயக்குனர் மனோபலேகர்.



சென்னை, ஆக. 6: முதல்வர் கருணாநிதி பெங்களூரில் ஓய்வு எடுத்து வருகிறார். கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

தி.மு.க.வின் மூன்றரை ஆண்டு கால ஆட்சிக்கு நீங்கள் எவ்வளவு மார்க் போடுவீர்கள் என்ற கேள்விக்கு, மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத தி.மு.க. அரசுக்குப் பூஜ்யம் மதிப்பெண்தான் கொடுப்பேன் என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். அவரது கேள்விகளுக்கு பொதுவாக நீங்கள் பதில் சொல்வதில்லையென்ற போதிலும், ஐந்து தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தவாவது என்ன நல்ல காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று விளக்கலாம் அல்லவா?

தி.மு.க. ஆட்சி அமைந்த போதெல்லாம் ஆற்றிய பணிகள் சிலவற்றை மட்டும் தருகிறேன். அவை நல்ல காரியங்களா அல்லவா என்பதை மக்களே கூறட்டும்.

  • மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்குத் தமிழ்நாடு என்ற பெயர்,
  • சுயமரியாதைத் திருமணச் சட்டம்,
  • பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 25 லிருந்து 31 சதவீதமாகவும் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 16 லிருந்து 18 சதவீதமாகவும் உயர்த்தியது.

  • வன்னியர், சீர்மரபினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு,
  • பழங்குடியினர்க்கு தனியாக ஒரு சதவீதம்,
  • மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் வருமான வரம்பிற்குட்பட்டு பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்க்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி,
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கும், வருமான வரம்பிற்குட்பட்டு பெண்களுக்கும் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.
  • பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்,
  • உருது அகாடமி,
  • சென்னை திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர். பெயர்,
  • தென் குமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியது,
  • தை திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என சட்டம் இயற்றப்பட்டு;
  • தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாட எல்லா குடும்பங்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கான இலவச பொருட்கள் வழங்கப்பட்டது.

  • காமராஜர் பிறந்த நாள்,பள்ளிகளில் கல்வி விழா கொண்டாடப்படுகிறது.
  • முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும் அருந்ததியருக்கு 3 சதவீதமும் உள்ஒதுக்கீடு.
  • அனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகும் சட்டம்.
  • கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து.
  • பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிடச் சட்டம்.
  • அரசுப்பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு,
  • உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு,
  • 10 லட்சம் மகளிர் பயன்பெறும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம்.
  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின்கீழ் நிதியுதவி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
  • ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 10 லட்சத்து 78 ஆயிரத்து 612 ஏழை மகளிருக்கு ரூ.487 கோடியே 56 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது;

    ஆனால் தே.மு.தி.க. தலைவர், ஒரு கர்ப்பிணிக்குக் கூட உதவி செய்யவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார்.

  • 10 லட்சத்து 48 ஆயிரம் மகளிர் உறுப்பினரைக் கொண்ட 61 ஆயிரத்து 687 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மொத்தம் ரூ.4 ஆயிரத்து 126 கோடியே 78 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழை செம்மொழியாக அறிவிக்கச் செய்தது,
  • நூறாண்டுக் கனவை நனவாக்கி செம்மொழித் தமிழாய்வு மையம் சென்னையில் அமைப்பு.
  • தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 10, 12ம் வகுப்புகளின் அரசுத் தேர்வு கட்டணங்களும் ரத்து.
  • தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை, விருதுகள் வழங்குதல், பரிவுத் தொகைகள் வழங்குதல்.
  • பேருந்துகள் நாட்டுடைமை, போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கம்,
  • 1500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களை முக்கியமான சாலைகளோடு இணைக்க இணைப்புச் சாலைதிட்டம்.

  • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு இந்தியாவிலேயே முதன் முதலாக நிதி ஒதுக்கும் திட்டம்,
  • 1 கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் மாதம் 20 கிலோ அரிசி.
  • ரேஷன் கடைகளில் பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா, கோதுமை மாவு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
  • ரூ.70 மதிப்புடைய 10 சமையல் பொருள்கள், ரூ.50க்கு வழங்கப்படுகிறது.
  • வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு 8 ஆயிரத்து 361 மருத்துவ முகாம்களில் 84 லட்சத்து 71 ஆயிரத்து 493 ஏழைகள் பயன்.
  • 598 சிறார்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 17 தனியார் மருத்துவமனைகளின் மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
  • கடும் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 500 ரூபாய் என உயர்த்தப்பட்டது.
  • ரூ.1,524 கோடி செலவில் 7 ஆயிரத்து 585 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
  • அதேபோல, அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.140 கோடி செலவில் 280 பேரூராட்சிகளிலும், நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.

  • தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் 343 பாலங்கள் ரூ.214 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன;

  • ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன.

  • அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்;

  • சென்னையில் உலகத் தரத்திலான ரூ.150 கோடி மதிப்பீட்டில் மாநில நூலகம்,
  • ரூ.400 கோடி செலவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச்செயலக வளாகம்,
  • ரூ.100 கோடி ரூபாய் செலவில் அடையாறு பூங்காத் திட்டம்.
  • வட சென்னை மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
  • ரூ.908 கோடி நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
  • ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம்;
  • ரூ.1330 கோடி மதிப்பீட்டில் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்,
  • ரூ.630 கோடி செலவில் ராமநாதபுரம் பரமக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
  • சென்னையில் டைடல் பூங்கா அமைத்தது.
  • குடிசை மாற்று வாரியம்,
  • குடிநீர் வடிகால் வாரியம்,
  • கண்ணொளி வழங்கும் திட்டம்,
  • பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்,
  • கை ரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கும் திட்டம்,
  • ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டம்.
  • தாழ்த்தப்பட்டோர்க்கு இலவச கான்கிரீட் வீடுகள்,
  • இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள்,
  • எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன;

  • புன்செய் நிலவரி அறவே நீக்கம்,
  • உழவர் சந்தைகள் திட்டம்.
  • ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி,
  • விவசாயக் கடன் வட்டி4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • 1 லட்சத்து 74 ஆயிரத்து 941 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரத்து 134 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டுள்ளது;

  • 6 லட்சத்து 50 ஆயிரத்து 517 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
  • ஏறத்தாழ 3 லட்சம் படித்த இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

  • சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள்.
  • தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.
  • கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் மூன்று புதிய அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி என்ற கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 5 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கம்.
  • திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, இராமநாதபுரம் ஆகிய 6 இடங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

  • இந்திய வரலாற்றிலேயே எந்தவொரு மாநிலத்திலும் செய்யப்படாத அளவிற்கு ஒரு கோடி ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த அரசு ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ள தே.மு.தி.க. தலைவருக்கு இந்த விளக்கங்கள் போதும் என்று நினைக்கிறேன்.

    செய்தி: நன்றி: தினகரன்

  •