tag:blogger.com,1999:blog-77321272793614822023-11-16T10:36:06.190-08:00Sambar Vadai - சாம்பார் வடைசெய்திகளும் செய்திகளும்
This blog mostly has references to news reports from various newssites. The material and images, if used, the copyright belongs to the owners of the newssites.Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.comBlogger259125tag:blogger.com,1999:blog-7732127279361482.post-68364409378055757952010-09-13T23:58:00.000-07:002010-09-14T00:01:41.158-07:00கழக அரசை வீழ்த்த வெறிக் கூச்சலிடும் வீணர்காள் ! கேளீர் !<a href="http://epaper.dinakaran.com/pdf/2010/09/14/20100914a_005101002.jpg"><img SRC="http://epaper.dinakaran.com/pdf/2010/09/14/20100914a_005101002.jpg" WIDTH=300 HEIGHT=500></a><br />
<br />
நன்றி: <a href="http://epaper.dinakaran.com">தினகரன்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7732127279361482.post-20869838579078936102010-08-04T23:46:00.000-07:002010-08-05T01:34:04.536-07:00தினமலர் வாரமலர் அந்துமணி ஃபோட்டோதினமலர் வாரமலர் அந்துமணி ஃபோட்டோ<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiG8HgTyMHQ3CV1PvFDU3CgehcPUJGq0tIxNXz7ncvFVLChdx_NZwHMYSkP7O8n272b-PNklSx84Xc03zDpVz-6Vb63aam-XSJAbioRllf8qV5pGMznnu2r5PHAzOaKphUceuF1bQrIg/s1600/anthumani2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiG8HgTyMHQ3CV1PvFDU3CgehcPUJGq0tIxNXz7ncvFVLChdx_NZwHMYSkP7O8n272b-PNklSx84Xc03zDpVz-6Vb63aam-XSJAbioRllf8qV5pGMznnu2r5PHAzOaKphUceuF1bQrIg/s320/anthumani2.jpg" /></a></div><br />
படத்தில் வலது ஓரத்தில் நீலக் கலர் துணி தலையில் கட்டியிருப்பவர் தான் தினமலர் வாரமலர் அந்துமணி - என்கிற - ரமேஷ் என்கிற கி.ராமசுப்பு.<br />
<br />
<a href="http://img.dinamalar.com/data/large/large_55542.jpg">படம்</a> நன்றி: <a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=55542">தினமலர்</a><br />
<br />
<br />
<a href="http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=1128&ncat=2"><b>அந்துமணி பா.கே.ப.,</b></a><br />
<br />
<br />
உறவுக்காரர், அலுவலகத்தில் உடன் பணியாற்றுகிறவர், ஒரே கல்லூரியில் படிக்கிறவர்...<br />
— இப்படி, பல விதங்களில் ஆண்களுடன் இந்நாளைய பெண்கள் பழக நேரிடுகிறது. "ஆகா! இவர் நமக்கு லட்சியக் கணவராகத் திகழ்வார்...' என்று, சிலரைப் பற்றிய எண்ணங்களை பெண்கள் தம் மனதில் வளர்த்துக் கொள்ளக் கூடும்; அது, தப்பில்லை!<br />
ஆண்களை வகைப்படுத்தி, "உஷார்!' என்று எச்சரிக்கிறது ஒரு ஆங்கில பத்திரிகை. இன்னின்னாரை நம்பி ஏமாறாதீர்கள் என்று அது தந்துள்ள பட்டியலை, உ.ஆ., ஒருவர் உதவியுடன் படித்து, தெரிந்து கொண்டேன். பட்டியல் இதோ:<br />
<br />
<b>* திருமண சோம்பேறி!</b><br />
<br />
இந்த நபர் காலையில் எழுந்து பல் விளக்க எவ்வளவு சோம்பல் படுவாரோ, அதே அளவுக்குக் கல்யாண விஷயத்திலும் சோம்பேறித்தனமாக இருப்பார். "படிப்பு முடியட்டும்... வேலை முடியட்டும்... பிரமோஷன் கிடைக்கட்டும்... தங்கச்சிக்கு திருமணம் ஆகட்டும்...' என்று, திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார். இவரை நம்பினால், உங்கள் திருமணத்தையும், மணிவிழாவையும் ஒன்றாக நடத்த வேண்டியிருக்கும்!<br />
<br />
<b>* சிக்கன சிங்காரம்!</b><br />
<br />
ஒரு முறை உங்களை வெளியே அழைத்துச் சென்று திரும்பி வந்தவுடனே, என்னென்ன செலவாயிற்று என்று கணக்கு எழுதுகிறவர் இவர். இவரிடம் ஒரு மைல் தள்ளி நில்லுங்கள்; இதே போல, நோட்டு, நோட்டாக பறக்க விடுகிறவரிடமும் எச்சரிக்கை தேவை. ஒரு நாள் உங்களையே பறக்க விட்டு விடுவார் இவர்.<br />
<br />
<b>* புத்தக புழு!</b><br />
<br />
ஏராளமாகப் படிப்பவர், அறிவு ஜீவி; ஆனால், பெண் மனம் இவருக்குப் புரியாது; புரிந்தாலும் கவலைப்படமாட்டார்.<br />
<br />
<b>* "தேக' பக்தர்!</b><br />
<br />
"காபி சாப்பிடப் போகிறாயா? அதற்கு முன் இந்த மாத்திரையை போட்டுக் கொள்ளும்படி டாக்டர் சொன்னார் இல்லையா? டைரியில் கூட குறித்து வைத்திருக்கிறேன்!' என்று பதறுவார். எப்போதும் பயம், படபடப்பு. உங்களுக்கு தலைவலி வந்தால், அவருக்கு நெஞ்சுவலி வந்து விடும். இவரை திருத்துவது நன்று; துறப்பது அதனினும் நன்று!<br />
<br />
<b>* சாப்பாட்டு ராமன்!</b><br />
<br />
"ஓட்டல் சாப்பாட்டினால் நாக்கே செத்து விட்டது!' என்று சொல்லி அடிக்கடி உங்கள் வீட்டு சமையலில் எதையாவது ருசி பார்த்தபடி இருக்கிறாரா? ஜாக்கிரதை! கல்யாணத்துக்குப் பிறகும் இவர் சமையலறையை விட்டுக் கிளம்ப மாட்டார்!<br />
<br />
<b>* பொழுது போக்காளர்!</b><br />
இவருக்குத் தேவை ஒரு சினேகிதி தான்; மனைவி அல்ல!<br />
<br />
<b>* மிஸ்டர் நாகரீகன்!</b><br />
<br />
"அது பண்பாடில்லை; இது, "பேஷன்' இல்லை. அப்படி சிரிக்காதே! இப்படிப் பேசாதே...' என்று அடிக்கடி உபதேசம் செய்து, உங்களை திருத்திக் கொண்டே இருப்பார். இவருடன் வாழ்வது கொடிது; கொடிது!<br />
<br />
— இப்படி எர்ச்சரிக்கை செய்து இருக்கிறது அந்தப் பத்திரிகை. இன்னும் திருமணமாகாத வாசகியருக்கு இந்த எச்சரிக்கை பெரிதும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.<br />
சரி... பெண்களுக்கு எச்சரிக்கை விட்டு எழுதியிருப்பது போல, எந்த வகையான பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? எவ்வகையான பெண்களுடன் திருமண பந்தம் வைத்துக் கொள்ளக்கூடாது என, ஆண்களுக்கு அறிவுரை ஏதும் அதே புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதா என புரட்டிப் புரட்டிப் பார்த்தேன்.<br />
ம்... ஹூம்... ஒன்றும் இல்லை!Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7732127279361482.post-51305865974871307872010-07-13T02:47:00.000-07:002010-07-13T02:51:48.750-07:00தேர்தலுக்கு தயாராகுங்கள்.. : ஜெயலலிதா<b>தேர்தலுக்கு தயாராகுங்கள்.. தொண்டர்கள விரும்பும் கூட்டணி அமையும்: ஜெயலலிதா</b><br />
<br />
தமிழகத்தில் அதிமுக தொண்டர்கள விரும்பும் வகையில் கூட்டணி அமையும் என்றும், கட்சியினர் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகுமாறும் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.<br />
<br />
ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு, மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட காரணங்களை முன் வைத்து திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று கோவையில் ஜெயலலிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.<br />
<br />
வ.உ.சி. மைதானத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் தொண்டர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.<br />
<br />
<b>காலருகே விழுந்த காய்:</b><br />
<br />
கண்டனக் கூட்டம் ஆரம்பித்து அதிமுக நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்தபோது, மேடையில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவை நோக்கி, நெல்லிக்காய் அளவுக்கு ஒரு காய் பறந்து வந்து ஜெயலலிதாவின் காலருகே விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.<br />
<br />
பின்னர் பேசிய ஜெயலலிதா,<br />
<br />
முதல்வர் கருணாநிதியை எதிர்த்து யார் பேசினாலும் தாக்கப்படுகிறார்கள். செம்மொழி என்ற பெயரில் நடந்த தன்னல மாநாட்டை விமர்சித்தால் தாக்கப்படுகிறார்கள். இங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. போலீஸாருக்கேப் பாதுகாப்பு இல்லை. ரவுடிகளால் போலீஸார் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது.<br />
<br />
மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளது. ஆரோக்கியமான குடிநீர் கிடைப்பதில்லை. போதிய பாதுகாப்பு மக்களுக்கு்க கிடைப்பதில்லை.<br />
<br />
<b>போலி வாக்குகள் பதிவு செய்யப்பட்டன:</b><br />
<br />
இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. கொலை மற்றும் கொள்ளைகள் தினந்தோறும் நடக்கின்றன. வாக்குச்சாவடிகளை ரவுடிகள் ஆக்கிரமித்து, தங்கள் கட்டுப்பாடுகளில் எடுத்துக்கொண்டார்கள். போலி வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது ஒரு ஆபத்தான நிலைமை.<br />
<br />
விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்வெட்டால் விவசாயிகளும் பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை.<br />
<br />
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. இந்த விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்.<br />
<br />
<b>இந்தியாவே தலைகுனியும் சூழ்நிலை!:</b><br />
<br />
ஒரு காலத்தில் இந்தியாவின் பெருமைமிகு மாநிலமாக விளங்கிய தமிழ்நாடு இன்று தரம் தாழ்ந்து விட்டது. தமிழ்நாட்டைப் பார்த்து இந்தியாவே தலைகுனியும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலை நீடித்தால் நாம் அனைவரும் அழிந்துவிடுவோம்.<br />
<br />
விவசாயப் பொருட்களின் உற்பத்தி கடுமையாக குறைந்துவிட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை ஆன்-லைன் வர்த்தகம் மூலம் முடக்கப்பட்டுள்ளது. பதுக்கல் போன்ற சமூக விரோதச் செயல்களில் ஆளுங்கட்சியினர் ஈடுபடுகின்றனர். ரவுடிகள், சமூக விரோதிகள், பதுக்கல்காரர்களை பாதுகாக்கும் அரசாக திமுக அரசு உள்ளது.<br />
<br />
<b>1 ரூபாய் அரிசித் திட்டத்தில் பெரும் ஊழல்:</b><br />
<br />
தமிழக அரசின் 1 ரூபாய் அரிசித் திட்டத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. அந்த திட்டத்தில் வரும் நல்ல அரிசிகளை திமுகவினர் வெளி மாநிலத்துக்கு கடத்துகிறார்கள். அதற்கு அரசு அதிகாரிகளும் துணை போகின்றனர். பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதில் திமுகவுக்கும் பங்கு உண்டு.<br />
<br />
<b>கோவையில் மாநாடு-திமுகவினர் ரூ. 2,000 கோடி வசூல்:</b><br />
<br />
கோவையில் நடந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் திமுகவினர் ரூ. 2,000 கோடி வசூல் செய்துள்ளனர். மாநாட்டில் உணவு வழங்குவதில் ரூ. 2 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.<br />
<br />
<b>எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்:</b><br />
<br />
இது தேர்தல் ஆண்டு. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம். தமிழக மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றவுள்ளனர். அதுதான் உங்களது வாக்குரிமை.<br />
<br />
யாரும் இம்முறை வாக்குரிமையை இழக்கத் தயாராக இல்லை. 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பிறகு வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்.<br />
<br />
சரியான வாக்காளர்களுக்கு சரியான கட்சிகளுக்கு வாக்களிக்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் முன் அணிவகுத்து நிற்கும் கட்சிகள், அரசியல் தலைவர்கள் குறித்து தெளிவாக புரிந்து வைத்திருக்க வேண்டும்.<br />
<br />
<b>கணக்கு போட்டு பார்க்க இதுதான் சரியான தருணம்:</b><br />
<br />
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இதுகுறித்து தெரிந்து கொள்ள இதுதான் தக்க தருணம். அரசின் தோல்விகளையும், சாதனைகளையும் கணக்குப் போட்டுப் பார்க்க இதுதான் சரியான தருணம்.<br />
<br />
தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழ்நாட்டை காப்பதற்காக, தமிழக மக்களின் நலனுக்காக, இந்த திமுக அரசு தூக்கி எறியப்பட வேண்டும். இந்த சக்தி மக்கள் மற்றும் தொண்டர்களாகிய உங்கள் கையில்தான் உள்ளது.<br />
<br />
<b>அதிமுக- தேமுதிக கூட்டணி தயார்?:</b><br />
<br />
யாருடைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல், கழக தொண்டர்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும். எம்.ஜி.ஆர். ஆட்சி அமையும் காலம் நெருங்கி விட்டது. தொண்டர்களாக நீங்கள் எதிர்பார்த்த கூட்டணி அமையும். கூட்டணி விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் பணியை ஆரம்பியுங்கள். ஜனநாயக முறையில் திமுகவுக்கு வேட்டு வைக்கும் பணியை நீங்கள் ஆற்ற வேண்டும்.<br />
<br />
மீ்ண்டும் புரட்சித் தலைவர் ஆட்சி அமைவது உங்களது கையில்தான் உள்ளது. அதை நீங்கள் செய்ய வேண்டும் என்றார்.<br />
<br />
முன்னதாக கூட்டத்தில் ஜெயலலிதா பல்வேறு முழக்கங்களை முழங்க அதை கூடியிருந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திருப்பிக் கூறினர்.<br />
<br />
நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும் என்று ஜெயலலிதா கூறியிருப்பதன் மூலம் அதிமுக- தேமுதிக கூட்டணி முடிவாகி விட்டதையே சூசகமாக அவர் கூறியிருப்பதாக தெரிகிறது.<br />
<br />
<b>எம்.ஜி.ஆருக்கு செங்கோல் வழங்கிய தினம்:</b><br />
<br />
நிகழ்ச்சியின் இறுதியில் கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஜெயலலிதாவுக்கு வெள்ளியால் ஆன செங்கோலை வழங்கினார்.<br />
<br />
மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின்போது எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா செங்கோல் வழங்கிய தினம் இன்று என்பதால் இந்த செங்கோலை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.<br />
<br />
செய்தி: நன்றி: <a href="http://thatstamil.oneindia.in/news/2010/07/13/new-alliance-will-be-formed-tn-say.html">தட்ஸ்தமிழ்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7732127279361482.post-53791065393298789582010-06-17T23:17:00.001-07:002010-06-17T23:19:51.639-07:00நஞ்சை எண்ணாதே - நம்பிக் கெடாதே - கருணாநிதி கடிதம்நன்றி: தினகரன்<br />
<br />
<a href="http://epaper.dinakaran.com/pdf/2010/06/18/20100618a_00510100201.jpg"><img SRC="http://epaper.dinakaran.com/pdf/2010/06/18/20100618a_00510100201.jpg" WIDTH=300></a><br />
<br />
Click on the link for full imageSambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7732127279361482.post-85226219795305142122010-05-18T01:36:00.000-07:002010-05-18T01:37:49.588-07:00சிறுதாவூர் சீமாட்டிக்கு இந்த சீற்றம் ஏனோ ? - கருணாநிதிசோதிடம், பூஜை எல்லாம் ஜெயலலிதாவுக்குத்தான் கைவந்த கலை. இளம்பிராயம் முதல் இவை எதையும் நம்பாத என்னைப்பற்றி மணவிழா மேடையில் வசைபாடியிருக்கிறார். சிறுதாவூர் சீமாட்டிக்கு இந்த சீற்றம் ஏனோ என்றுதானே கேட்கத்தோன்றுகிறது. சிறுதாவூர் புகார் மனு கொடுத்தவர்கள் மீது வராத கோபம், என்மீது வரலாமா? என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.<br />
<br />
<br />
<b>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:</b><br />
<br />
நம்முடைய எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்றையதி னம் அவரது கட்சிக்காரர்கள் இல்லத்தில் சில திருமணங்களை நடத்தி வைத்துவிட்டு பேசும்போது-மணமக்களை வாழ்த்துவதற்கு செலவழித்த நேரத்தைவிட - என்னை வசைபாடுவதற்காக அதிக நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.அது மணவிழாவானாலும், ஆர்ப்பாட்டமானாலும், எந்த விழாவானாலும் அவரது பேச்சுக்கு மய்யமாக நான் மட்டும் தான் இருக்கிறேன் போலும்! எத்தனையோ பேர் எனக்கு சாபம் கொடுத்து முடித்துவிட்டார்கள். ஏன் இந்த அம்மையாரே பலமுறை எனக்கு கொடுத்த சாபம் எதுவும் பலிக்கவில்லை.<br />
<br />
நான் சின்னஞ்சிறுவனாக திருவாரூரில் எனது உறவினர் கிருஷ்ணன் (முரசொலி சொர்ணத்தின் தந்தையார்) இல்லத்தில் தங்கி படித்துக்கொண்டிருந்த போது-அண்ணன் கிருஷ்ணன் என்னை அணுகி, தம்பி சோதிடம் இல்லை, சாத்திரம் இல்லை என்றெல்லாம் நீ இந்த சிறுவயதிலேயே பிரசாரம் செய்கிறாயே, எனக்கு தெரிந்த சோதிடர் ஒருவர் இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் அப்படியே உள்ளதை உள்ளவாறு சொல்கிறார் என்றும், அடுத்தநாள் அவர் வீட்டிற்கு வருவதாக சொல்லியிருக்கிறார் என்றும், அந்த நேரத்தில் நீயும் இருந்து அவர் சொல்வதை கேட்க வேண்டும் என்றும் கூறினார்.<br />
<br />
நானும் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அன்று மாலையில் ஒரு அம்மையார் என்னை சந்தித்தார். அவர் என்னிடம், "ஏம்பா, நீ தான் இந்த வீட்டுக்காரரின் பிள்ளையா?'' என்று கேட்டார். அவர் யார் என்பதை புரிந்து கொண்டேன். அவரது கேள்விக்கு பதிலாக ஆமாம் என்று கூறினேன். எத்தனை பேர் உடன் பிறந்தவர்கள் என்று அந்த அம்மையார் கேட்க, நானும் தோராயமாக "மூன்று பிள்ளைகள், இரண்டு பெண்கள்'' என்று சொன்னேன்.<br />
<br />
இதுபோலவே வேறு சில கேள்விகளையும் என்னைக்கேட்டு, என்னிடம் பதிலை தெரிந்து கொண்டு போய் விட்டார்கள். அடுத்த நாள் காலையில், சோதிடரும், முதல் நாள் என்னை சந்தித்த அந்த அம்மையாரும் கிருஷ்ணன் அண்ணன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.<br />
<br />
கிருஷ்ண அண்ணன், அவரது துணைவியார், நான் மற்றும் சுற்றிலும் அமர்ந்தோம். சோதிடர் அவருக்கே உரிய சிலவற்றை செய்துவிட்டு - கிருஷ்ண அண்ணனிடம் என்னைக்காட்டி, இவர் தானே உங்கள் மைந்தர் என்றார். கிருஷ்ண அண்ணனிடம் நான் ஏற்கனவே சொல்லி வைத்திருந்ததால் அவர் எதிலும் பேசாமல் ஒத்துக்கொள்வதைப்போல அமர்ந்திருந்தார். அடுத்து சோதிடர் உங்களுக்கு எத்தனை ஆண் குழந்தைகள் என்று சொல்லட்டுமா என்று கேட்க-சோதிடருக்கு எதிரே இருந்த சோதிடரின் மனைவி தன் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு-மூன்று விரல்களை நீட்ட-அதைப்பார்த்து கொண்டே - உங்களுக்கு மூன்று பிள்ளைகள் தானே? என்றார். கிருஷ்ண அண்ணன் அதற்கும் எதுவும் பேசவில்லை. அடுத்து எத்தனை பெண் குழந்தைகள் என்று சொல்லட்டுமா என்று கேட்டு தனது மனைவியை பார்க்க அந்த அம்மையார் எதுவும் காட்டிக்கொள்ளாமல் இரண்டு விரல்களை நீட்டிக் காட்டிட, சோதிடர்; உடனே இரண்டு பெண் குழந்தைகள் தானே என்றார். கிருஷ்ண அண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது. அவருக்கு கோபம் வந்தால் வாயில் வார்த்தைகள் இப்படித்தான் வரும் என்றில்லை. சரமாரியாக சோதிடரை திட்டத்தொடங்கி விட்டார்.<br />
<br />
சோதிடரின் மனைவி நேற்று இந்த பிள்ளையாண்டான் தான் இந்த விவரங்களையெல்லாம் சொன்னதாக என்னைக்காட்டிவிட-சோதிடர் என்பக்கம் திரும்பி "இந்த சிறுவயதிலேயே இப்படியெல்லாம் செய்கிறாயா? நீ உருப்படவே மாட்டாய்'' என்று பெரிய சாபத்தை கொடுத்துவிட்டு போய் விட்டார். அந்த சாபம் பலித்ததா என்பதற்கு இந்த உலகமே சாட்சி!<br />
<br />
அந்த சோதிடர் விட்ட சாபமே பலிக்கவில்லை என்கிற போது-ஜெயலலிதா விடுகின்ற சாபமா பலிக்கப்போகிறது? நான் எழுதிய "சிலப்பதிகார காப்பியம்'' என்ற நாடகத்திலேயே இந்த சோதிடம் பற்றி ஒரு அத்தியாயமே எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறேன்.<br />
<br />
அப்படிப்பட்ட நான் ஏதோ சோதிடரின் வார்த்தையை கேட்டு என் வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைக்கப்போவதாக அறிவித்தேனாம். யாரோ சோதிடர் அந்த வீட்டிலே நான் தங்கியிருந்தால் என் உயிருக்கு ஆபத்து என்று சொன்னதால்தான் வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைத்து விட்டேனாம்.<br />
<br />
அம்மையார் ஜெயலலிதா மணவிழா மேடையிலே முழங்கியிருக்கிறார். எந்தச்சோதிடன் சொன்னான் என்று ஜெயலலிதா நிரூபிக்கத்தயாரா? இன்னும் சொல்கிறேன், என்னுடைய பிறந்த நாளுக்கு பிறகு நான் இப்போதுள்ள வீட்டின் பத்திரத்தைத்தான்; என் மறைவுக்குப்பிறகு அந்த வீட்டை மருத்துவ மனையாக பயன்படுத்த ஒப்படைக்க இருக்கிறேன். இதுஎதுவும் தெரியாமல் ஜெயலலிதா எந்த சோதிடன் சொன்னதையோ கேட்டுக்கொண்டு மணவிழாவிலே சென்று புலம்பியிருக்கிறார்.<br />
<br />
அது மாத்திரமல்ல, தலைமைச்செயலக கட்டிட திறப்பு விழாவினைக்கூட சோதிடன் சொன்னதை கேட்டுக் கொண்டு தான் சீக்கிரமாக திறந்து வைத்து விட்டேனாம்! எந்தச்சோதிடன்? சொல்லத் தயாரா?<br />
<br />
மார்ச் மாதத்திற்கு மேல் பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே உட்கார்ந்திருந்தால் நீங்கள் திரும்ப ஆட்சிக்கு வரவே முடியாது என்று சோதிடன் சொன்னதை கேட்டுவிட்டுத்தான் தலைமை செயலகத்தை மாற்றியிருக்கிறேனாம். மார்ச் திங்கள் முடிந்து ஏப்ரல் திங்கள் முடிந்து மே திங்கள் நடைபெறுகிறது. புதிய தலைமைச்செயலகத்தின் பணிகள் முற்றுப்பெற இன்னும் மூன்று நான்கு மாதங்களாக போகிறது. அதுவரை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தான் உட்கார்ந்திருக்க போகிறேன். இப்போது ஜெயலலிதாவின் புளுகு என்னவாகப் போகிறது?<br />
<br />
ஏன், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது புதிய தலைமைச்செயலகம் ஒன்றை கோட்டூர்புரத்தில் கட்டுவதாக சொல்லி சோதிடர்களையெல்லாம் அழைத்து வந்து பூஜை புனருத்தாரணங்கள் எல்லாம் செய்து அடிக்கல் நாட்டியதாக ஏடுகள் எல்லாம் பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டதே, என்னவாயிற்று? அந்தச்சோதிடம் பலித்ததா?<br />
<br />
அது மாத்திரமல்ல, கடற்கரை சாலையிலே பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்-அமைச்சராக இருந்த போது வைக்கப்பட்ட கண்ணகி சிலையை அன்றாடம் பார்த்துக்கொண்டே தலைமைச்செயலகம் சென்றால், ஆட்சி நீடிக்காது என்று யாரோ சோதிடன் சொன்ன சொல்லை கேட்டுக்கொண்டு இரவோடு இரவாக லாரியை விட்டு இடிக்கச்சொல்லி, அந்தச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி அருங்காட்சியகத்தில் கொண்டுபோய் ஒரு மூலையில் போட்டு வைத்தார்களே, அந்தச் சோதிடன் சொன்னது பலித்து அவருடைய ஆட்சி நீடித்ததா? அந்த கண்ணகி சிலையை அதே இடத்தில் வைத்து அன்றாடம் நான் பார்த்துக்கொண்டு தானே தலைமைச்செயலகம் செல்கிறேன், என்னுடைய ஆட்சிக்குத் தான் இடைஞ்சல் வந்து விட்டதா?<br />
<br />
ஏன், இன்றைக்கு (நேற்று) வந்துள்ள ஏடுகளில் ஜெயலலிதா ராகு-கேது-பூஜா செய்ய காளகஸ்தி போவதாகவும், அதற்காக 300 காவலர்கள் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும் செய்தி வந்திருக்கின்றது. இந்த சோதிடம், யாகம், பூஜை, புனருத்தாரணம் எல்லாம் அவருக்கே கைவந்த கலையே தவிர, இளம் பிராயம் முதல் இதில் எதையும் நம்பாத என்னைப்பற்றி மணவிழா மேடையிலே ஏறிக்கொண்டு சோதிடர் பேச்சை கேட்டுக்கொண்டுதான் வீட்டை தானம் செய்கிறேன். தலைமைச்செயலகத்தை மாற்றினேன் என்றெல்லாம் வசைபாடியிருக்கிறார் என்றால், சிறுதாவூர் சீமாட்டிக்கு இந்த சீற்றம் ஏனோ என்று தானே கேட்க தோன்றுகின்றது! சிறுதாவூர் பற்றி புகார் மனு கொடுத்தவர்கள் மீது வராத கோபம்; என்மீது வரலாமா? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.<br />
<br />
<br />
செய்தி: நன்றி: <a href="http://thatstamil.oneindia.in/news/2010/05/18/karunanidhi-jaya-astorloger-assembly-siruthavur.html">தட்ஸ்தமிழ்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7732127279361482.post-58888072103643947052010-05-17T00:33:00.000-07:002010-05-17T00:34:42.913-07:00ஜோதிடர் பேச்சைக் கேட்டுத்தான் கோபாலபுரம் வீட்டை தானம் தருகிறார் கருணாநிதி - ஜெ.இனியும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. ஆட்சிக்கும், உயிருக்கும் ஆபத்து என்று ஜோதிடர் கூறியதால்தான் கோபாலபுரம் வீட்டை தானம் தருவதாக கூறி அங்கிருந்து வெளியேறப் போகிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.<br />
<br />
<br />
திருமணங்களை நடத்தி வைத்து ஜெயலலிதா பேசுகையில் சிறுதாவூர் நிலப் பிரச்சினை, தன் மீதான வழக்குகள், முதல்வர் கருணாநிதி தனது கோபாலபுரம் வீட்டை மருத்துவமனையாக மாற்றுவதன் பின்னணி, புதிய சட்டசபைக் கட்டடத்திற்கு அவசரம் அவசரமாக மாறியதற்கான பின்னணி உள்ளிட்டவை குறித்து பரபரப்பாக பேசினார்.<br />
<br />
ஜெ.வின் பேச்சிலிருந்து சில பகுதிகள்..<br />
<br />
வாழ்க்கை என்பதே ஒரு சவால். வெற்றி - தோல்வி, இன்பம் - துன்பம், சாதகம் - பாதகம் ஆகியவை, கலந்தது தான் வாழ்க்கை. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை, துணிச்சலுடன் எதிர்கொள்ள, நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். பிரச்சினைகளைக் கண்டு, துவண்டு விடக் கூடாது. அவற்றை துணிவுடன் எதிர்த்தால், வெற்றி நிச்சயம்.<br />
<br />
சவால்களை எதிர்கொள்ளும் மனோபாவம் தான், வெற்றிக்கு வழி வகுக்கும். சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல், பாரதிக்கு இருந்ததால் தான், அவர் மகாகவியானார். பகுத்தறிவுக் கொள்கைகளை, மக்களிடம் துணிந்து பரப்பியவர், தந்தை பெரியார்.<br />
<br />
வாழ்க்கை என்ற பயணத்தில், எல்லாமே நமக்கு சாதகமாக நடந்துவிட்டால், பிரச்சினை இல்லை. ஆனால், அப்படிப்பட்ட வாழ்க்கை, யாருக்கும் அமைவதில்லை. சவால்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அந்தச் சவால்களையே நமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வது தான், வாழ்க்கையில் வெற்றி அடையும் ரகசியம்.<br />
<br />
சவாலை எதிர்த்து போராடும் துணிவே, நம்மை வாழ வைக்கிறது. இன்று வாழ்க்கையை தொடங்கியிருக்கும், 5 திருமண ஜோடிகளுக்கு மட்டுமல்ல, இன்றைய அரசியலுக்கும் பொருந்தும்.<br />
<br />
திடீரென்று கருணாநிதி தான் வள்ளலாகி மாறிவிட்டதாக ஒரு தோற்றம் அளிக்கப்பார்க்கிறார். தான் குடியிருக்கும் வீட்டையே தானம் செய்யப் போகிறாராம். முதலில் என்னுடைய காலத்திற்குப் பிறகு, என் மனைவி காலத்திற்குப் பிறகு என்று சொன்னவர் இப்போது ஒரு ஜோதிடர் கூறிய அறிவுரையை கேட்டு அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி வேறு எங்கோ குடியேறப்போகிறார்.<br />
<br />
இந்த வீட்டில் ஜூன் மாதத்திற்கு மேல் தங்கக் கூடாது. அப்படி தங்கினால் ஆட்சி பறி போய் விடும் என்பதால்தான் அவசரம் அவசரமாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.<br />
<br />
அதேபோல, திடீரென்று அரைகுறையாக ஒரு புதிய தலைமை செயலகம் சட்டமன்ற வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய கட்டிடத்தை அவசர கதியில் யாராவது கட்ட நினைப்பார்களா?. சென்னைக்கு திருஷ்டிப் பரிகாரமாக அமைந்திருக்கிறது இந்தக் கட்டிடம். கேரளா மாநிலத்தில் அவ்வளவு கலை ரசனையோடு பண்பாட்டிற்கு ஏற்றவாறு அழகான ஒரு கட்டிடத்தைக் கட்டி இருக்கிறார்கள். அங்கே தான் சட்டப் பேரவையும், தலைமைச் செயலகமும் செயல்படுகிறது. கர்நாடகாவைப் பாருங்கள், விதான சவுதா, காலாகாலத்திற்கு கம்பீரமாக தோற்றமளித்து மெஜஸ்ட்டிக்காக நிற்கிறது.<br />
<br />
ஆனால் கருணாநிதியிடம் ஒரு ஜோதிடர், பழைய சட்டமன்றத்தில் ஜூன் மாதத்திற்கு மேல் தங்கினால் ஆட்சி பறி போய் விடும். மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கே வர முடியாது என்று கூறியுள்ளார். இதனால்தான் அவசர அவசரமாக கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டிடத்தை கட்டி முடித்ததாக அறிவித்து திறப்பு விழா நடத்தி அங்கே போய் சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.<br />
<br />
இந்த இரு மாற்றங்களிலும் கருணாநிதியிடம் பொதுநலம் தெரியவில்லை. மாறாக சுயநலம்தான் மேலோங்கி நிற்கிறது.<br />
<br />
என் மீது புனைந்த சொத்துக் குவிப்பு வழக்கை நான் தாமதப்படுத்தி 13 ஆண்டுகளாக என்னால் தான் தாமதப்படுத்தப்பட்டு இன்னும் நடந்து கொண்டிருக்கிறதாம். 1997-ம் ஆண்டில் கருணாநிதி முதல்-அமைச்சராக வந்த போது இந்த வழக்கை என் மீது போட்டார். அதன் பிறகு 1997-ல் இருந்து 2001-ம் ஆண்டு வரை அவர் தானே முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது ஏன் இந்த வழக்கை முடிக்கவில்லை?<br />
<br />
2001-ம் ஆண்டு நான் மீண்டும் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சராக வந்தேன். நான் நினைத்திருந்தால் என் மீது புனைந்த வழக்குகளை எல்லாம் வாபஸ் பெற்றிருக்க முடியாதா?. ரத்து செய்திருக்க முடியாதா?. ஒரு நொடிப் பொழுதில் செய்திருக்க முடியும்.<br />
<br />
1997 முதல் 2001 வரை 4 ஆண்டு காலம் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது அவர் தான் அந்த வழக்கை முடிக்காமல் தாமதப்படுத்தினார். பின் 2001-ல் நான் முதல்-அமைச்சர் ஆனேன். 2003-ம் ஆண்டு அந்த வழக்கு முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது.<br />
<br />
அப்போது திடீரென்று தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு போட்டு, இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனு செய்தார்கள். அதனால் அந்த வழக்கு சென்னை நீதிமன்றத்தில் இருந்து கர்நாடகா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் ஒரு வருடம் தாமதப்படுத்தப்பட்டது. இது என்னால் நடந்த ஒரு தாமதமா?.<br />
<br />
அதன் பின்னர் பெங்களூருக்கு மாற்றப்பட்டது. அங்கே வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, இரண்டு வழக்குகளை ஒன்றாக இணைத்தார்கள் அந்தத் தனி நீதிமன்றத்தில். அதை எதிர்த்து மீண்டும் 2005-ம் ஆண்டு அதே அன்பழகன் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு போடப்பட்டது.<br />
<br />
2005-ம் ஆண்டு மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றதால் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடையாணை வழங்கியது. அந்தத் தடையாணை எத்தனை ஆண்டு காலம் இருந்தது?. இந்த ஆண்டு வரை ஐந்து ஆண்டு காலம் அந்தத் தடையாணை நீடித்தது. ஆக, அந்த வழக்கை முடிக்க விடாமல் நீட்டிக்க வைத்தது கருணாநிதி தானே தவிர நானல்ல.<br />
<br />
அதைப் போலத் தான் சிறுதாவூர் பிரச்சினை. ஆரம்பத்திலேயே நான் இதைப் பற்றிப் பேசிய போது நான் இதை தெளிவுபடுத்தினேன். நான் எந்த நிலத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளவில்லை. சிறுதாவூரில் எனக்குச் சொந்தமாக ஒரு சென்ட் நிலம் கூட இல்லை. வாடகைக்கு எடுத்த வீட்டில் நான் அங்கே தங்கியிருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அதை ஏற்காமல் என்னைப் பற்றி அவதூறு பரப்பவேண்டும் என்பதற்காகவே ஒரு விசாரணைக் கமிஷன் போட்டார்கள். சரி, அந்த விசாரணைக் கமிஷன் போட்ட பிறகு அந்த விசாரணைக் கமிஷன் தன்னுடைய அறிக்கையை இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே சமர்ப்பித்துவிட்டது. அதை சட்டமன்றத்தில் வைக்கவில்லை.<br />
<br />
சிறுதாவூர் கமிஷன் அறிக்கை வெளி வந்தால் உண்மை தெரிந்துவிடும் என்று நான் ஒரு அறிக்கை விட்டேன். என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை தமிழில் கூட மொழி பெயர்க்கவில்லை. ஆங்கில அறிக்கையை திடீரென்று சட்டமன்றத்தில் வைத்துவிட்டார்கள். அதில் நான் நிரபராதி என்று கூறப்பட்டிருக்கிறது.<br />
<br />
நான் நிரபராதி என்று தெரிந்து கொண்டே, தெரிந்து வைத்துக் கொண்டே என் மீது களங்கம் சுமத்தி இருக்கிறார்.<br />
<br />
பணபலம், படைபலம், அதிகார பலம் ஆகியவற்றை, துணிவுடன் எதிர்கொள்ளும் திறமை, கழகக் கண்மணிகளாகிய உங்களுக்கு, நிச்சயம் உண்டு. அதனால் தான், "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்'', என்று பாடிய எம்.ஜி.ஆர்., அதற்கு அடுத்த வரியில், "அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம், உன்னைச் சேரும்'' என்று பாடினார்.<br />
<br />
நீங்கள் எல்லாம், திறமைசாலிகள் மட்டும் அல்ல, மக்கள் மீது பாசமும், நேசமும், அன்பும், மனித நேயமும், சேவை மனப்பான்மையும் உடையவர்கள், என்பதை நான் அறிவேன்.<br />
<br />
திறமையும், உங்களது சேவை மனப்பான்மையும், நிச்சயம் வெற்றிக்கு வழி வகுக்கும். உங்களது திறமையை, நிரூபிப்பதற்கான நேரம், வந்துவிட்டது.<br />
<br />
வரவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலில், எம்.ஜி.ஆர். தோற்றுவித்த, அ.தி.மு.க. ஆட்சி, தமிழகத்தில் அமைய, இப்பொழுதே தயாராகுங்கள். நாளைய தமிழகம், நம் கையில் என்றார் ஜெயலலிதா.<br />
<br />
அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பெரும் திரளானவர்கள் கலந்து கொண்ட இந்த திருமண விழாவால் அப்பகுதியில் அதிமுக தொண்டர்கள் மயமாக காணப்பட்டது.<br />
<br />
செய்தி: நன்றி: <a href="http://thatstamil.oneindia.in/news/2010/05/17/jayalalitha-admk-cadres-polls.html">தட்ஸ்தமிழ்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7732127279361482.post-48624479457648961212010-03-01T01:05:00.000-08:002010-03-01T01:06:04.071-08:00பாசமழையில் நனைந்த மு.க.ஸ்டாலின்துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 58-வது பிறந்த நாளை மிகவும் எளிமையான முறையில் கொண்டாடினார். முதலமைச்சரும் தனது தந்தையுமான கருணாநிதியின் காலில் விழுந்து ஸ்டாலின் ஆசி பெற்றார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-eY6CbdUB4lqS84OUeKXHzmDNNVmlXYbFU8_z3VqX0RTDrb_IBb2F5tRkzkD4fvn0MpxhFMwO-TcKD0P2-5_351Ftx-4h6nIuD9Pf04ILKbYfd9C_JWC_gTPmlnz8e6iFbx6i8Ih8uw/s1600-h/pg1-stalin.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-eY6CbdUB4lqS84OUeKXHzmDNNVmlXYbFU8_z3VqX0RTDrb_IBb2F5tRkzkD4fvn0MpxhFMwO-TcKD0P2-5_351Ftx-4h6nIuD9Pf04ILKbYfd9C_JWC_gTPmlnz8e6iFbx6i8Ih8uw/s320/pg1-stalin.gif" /></a></div><br />
அவருக்கு தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களும் நிர்வாகி களும் முக்கிய பிரமுகர்களும் சர்வ கட்சி தலைவர்களும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.திமுக பொருளாளரும் துணை முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 58-வது பிறந்த நாள் இன்று. இதனையொட்டி ஸ்டாலின் அதி காலையிலேயே எழுந்து புத்தாண்டு அணிந்த 6 மணி அளவில் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து திமுக தலைவரும் முதலமைச்சரும் தனது தந்தையுமான கருணாநிதி, தாயார் தயாளு அம்மாள் ஆகியோரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.<br />
<br />
அதன் பின்னர் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு வந்து குடும்பத் துடன் கேக் வெட்டி பிறந்தநாளை மிக எளிமையான முறையில் கொண்டாடினார். இதனை தொடர்ந்து காலை 6.45 மணி முதல் அவரது வீட்டிற்கு தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர் களும் பொது மக்களும் முக்கிய பிரமுகர்களும், சர்வகட்சி தலைவர் களும், காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.<br />
<br />
அவர்களுள் மத்திய மாநில அமைச்சர்கள், டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள், அரசு துறை செயலாளர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரையுலகினர் ஆகி யோர் அடங்குவர்.வந்திருந்த தொண்டர்களும், பிரமுகர்களும் வரிசையில் நின்று பூங்கொத்து, மாலை, சால்வை ஆகியவற்றை ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து கூறினார்கள்.<br />
<br />
<b>காலை 9.45 மணிக்கு அவரது சகோதரரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேரில் வந்து ஸ்டாலினை கட்டித் தழுவி வாழ்த்தினார்.</b> இதேபோல கனிமொழி எம்பி, மு.க.தமிழரசு ஆகியோரும் நேரில் வந்து ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் வாழ்த்துக் கூற வந்த தொண்டர்களுக்கும், பொது மக்க ளுக்கும் பிரியாணி மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.<br />
<br />
சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் டி.யசோதா, ஞானசேகரன் எம்எல்ஏ, ஜே.எம்.ஆருண் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வை.சிவபுண்ணியம், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி, பிஜேபியின் குமாரவேலு மற்றும் தொழிலதிபரும், கல்வியாள ருமான எம்ஏஎம் ராமசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்த சர்வகட்சி தலை வர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறிப்பிடத் தகுந்தவர்களாவர்.<br />
<br />
திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பாக 58 வகையான சீர்வரிசை பொருட்களுடன் துணை முதல் வருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மத குருமார்களும் நேரில் வந்து துணை முதல்வருக்கு ஆசி கூறினர்.திமுகவின் இளைஞரணி, மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் சீருடையில் வந்து வாழ்த்தினர். அவர்கள் 58 வகையான பழ வகைகளை ஸ்டாலி னுக்கு வழங்கினர். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மயில் நடனம், பேண்டு வாத்தியம், முரசு, நாதஸ்வரம் உள்ளிட்ட கலைக் குழுவினரும் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.<br />
<br />
பெரியார், ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் வேடமணிந்தும் வந்து தொண்டர்கள் துணை முதல்வரை வாழ்த்தினார்கள். பிறந்த நாள் விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்க பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட தால் ஸ்டாலின் இல்லம் உள்ள ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன்<br />
<br />
சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் கூட்டம் காணப்பட்டது. போலீசார் மிகவும் சிரமப்பட்டு அவர்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பினர்.வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஸ்டாலின் வீட்டு எதிரே 2 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.<br />
<br />
தனது பிறந்த நாள் விழாவுக்கு யாரும் ஆடம்பரமாக விளம்பரம் செய்யக் கூடாது, ஆடம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்தி இருந்தார். அதற்கிணங்க எந்த பகுதியிலும் ஆடம்பர பேனர் களை காணமுடியவில்லை. அவரது இல்லம் அமைந்துள்ள பகுதியில் கட்சி கொடிகளை மட்டுமே கட்டியிருந்தனர்.<br />
<br />
பகல் 1 மணி வரையிலும் தனது இல்லத்தில் தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ளும் ஸ்டாலின் அதன் பின்னர் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சிறுமலர் பள்ளிக்குச் சென்று அதன் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கு அறுசுவை உணவுடன் விருந்து அளிக்கிறார். பின்னர் மீண்டும் தனது இல்லத்திற்கு வந்து மாலை வரை தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்வார்.<br />
<br />
படம்: செய்தி: நன்றி: <a href="http://www.maalaisudar.com/newsindex.php?id=33830%20&%20section=1">மாலைச்சுடர்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7732127279361482.post-52795889352736896862010-01-21T21:00:00.000-08:002010-01-21T21:00:26.155-08:00கருணாநிதிக்கு மோசடி செய்ய தெரியவில்லை: ஜெயலலிதாநான் சபாநாயகருக்கு வணக்கம் செலுத்துவது போலவும், பதிலுக்கு சபாநாயகர் வணக்கம் வைப்பது போலவும் திமுகவின் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள படம் பழையது. இந்த மோசடியையும் கருணாநிதிக்கு சரியாக செய்யத் தெரியவில்லை. இது போன்ற மலிவான மோசடிக்கு கருணாநிதி வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.<br />
<br />
<IMG SRC="http://thatstamil.oneindia.in/img/2010/01/22-speaker-jayalalitha2-200.jpg"><br />
படம்: நன்றி: <a href="http://thatstamil.oneindia.in/news/2010/01/22/jaya-slams-karunanidhi-speaker-issue.html">தட்ஸ்தமிழ்</a><br />
<br />
சபாநாயகருக்கு நான் வணக்கம் கூறியபோது பதிலுக்கு அவர் வணக்கம் சொல்லவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார் ஜெயலலிதா. இதற்கு முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்திருந்தார்.<br />
<br />
மேலும், திமுகவின் முரசொலி நாளிதழில் சபாநாயகர் ஜெயலலிதாவைப் பார்த்து வணக்கம் சொல்வதைப் போன்ற ஒரு படமும் வெளியிடப்பட்டிருந்தது.<br />
<br />
<b>இதுகுறித்து ஜெயலலிதா அளித்துள்ள விளக்க அறிக்கை:</b><br />
<br />
நான் வணக்கம் தெரிவித்தால், முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சி பதில் வணக்கம் தெரிவிக்கக் கூட சபாநாயகர் மறுக்கிறார் என்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தேன். எனது அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு அறிக்கையை கருணாநிதி வெளியிட்டாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.<br />
<br />
தனக்கும், தன் கட்சிக்கும் ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்கும் நோக்கத்தில், நான் சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சபாநாயகருக்கு வணக்கம் தெரிவிப்பது போலவும், அதற்கு சபாநாயகர் பதில் வணக்கம் தெரிவிப்பது போலவும் ஒரு வண்ணப் புகைப்படம் நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.<br />
<br />
<b>அது கருஞ்சிவப்பு-நான் அணிந்திருந்தது கரு நீலம்..</b><br />
<br />
வண்ண புகைப்படத்தில் நான் அணிந்திருக்கும் புடவையின் நிறம் கருஞ்சிவப்பு. ஆனால், கடந்த 11ம் தேதி அன்று நான் சட்டசபையில் விவாதத்தில் கலந்து கொள்ளும் போது கருநீல நிறம் கொண்ட புடவை அணிந்திருந்தேன்.<br />
<br />
நான் அன்று சட்டசபையில் பேசிய காட்சிகள் அனைத்து, டிவிகளிலும் ஒளிபரப்பப்பட்டன. டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்தால் நான் கருநீலப் புடவை அணிந்திருப்பது தெளிவாக தெரியும்.<br />
<br />
கருணாநிதியால் தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் இதற்கு முன், நான் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம். இதிலிருந்து கருணாநிதியின் மிகப் பெரிய மோசடி வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.<br />
<br />
கடந்த 11ம் தேதி அன்று நடைபெற்ற சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, நான் சபைக்குள் நுழைந்த போதும், வெளியே வந்த போதும் சபாநாயகருக்கு வணக்கம் தெரிவித்தேன். அதற்கு அவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை. இது தான் என் குற்றச்சாட்டு.<br />
<br />
இதற்கு முன் நான் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது சபாநாயகர் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று நான் கூறவில்லை. அப்பொழுதெல்லாம் நான் வணக்கம் தெரிவித்தபோது சபாநாயகர் வணக்கம் தெரிவித்து இருக்கிறார். (இதை ஜெயலலிதா இப்போது தான் சொல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது)<br />
<br />
<b>சபாநாயகரைக் கடிந்தார் முதல்வர்..</b><br />
<br />
கடந்த 8ம் தேதி அன்று நான் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது கூட சபாநாயகருக்கு வணக்கம் தெரிவித்த போது அவர் பதில் வணக்கம் தெரிவித்தார். இவ்வாறு பதில் வணக்கம் தெரிவித்ததற்காக சபாநாயகரை கருணாநிதி கடுமையாக கடிந்து கொண்டிருக்கிறார்.<br />
<br />
இதனால் தான் கடந்த 11ம் தேதி நான் வணக்கம் தெரிவித்தபோது சபாநாயகர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை.<br />
<br />
கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் தற்போது பத்திரிகைகளில் வெளியாகியுள்ள புகைப்படம், இதற்கு முன் நான் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம். கடந்த 8ம் தேதி அன்று நான் கலந்து கொண்ட புகைப்படமாகக் கூட இது இருக்கலாம்.<br />
<br />
இது மிகப்பெரிய மோசடி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கிணங்க, அனைத்து விஷயங்களிலும் கருணாநிதி இது போன்று தான் மோசடி செய்கிறார்<b>. இந்த மோசடியையும் கருணாநிதிக்கு சரியாக செய்யத் தெரியவில்லை.</b><br />
<br />
பத்திரிகைகளுக்கு வண்ணப்படத்தை கொடுத்து மாட்டிக் கொண்டு விட்டார். இது போன்ற மலிவான மோசடிக்கு கருணாநிதி வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.<br />
<br />
செய்தி: நன்றி: <a href="http://thatstamil.oneindia.in/news/2010/01/22/jaya-slams-karunanidhi-speaker-issue.html">தட்ஸ்தமிழ்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7732127279361482.post-67467146867639786962010-01-16T00:52:00.000-08:002010-01-16T00:52:16.514-08:00பணிகளை ஸ்டாலின் தொடர வேண்டும் : கருணாநிதிநாங்கள் விட்டுச் செல்கிற பணிகளை, துணை முதல்வர் தொடர வேண்டும்,'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.<br />
<br />
<br />
திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. திருவள்ளுவர் விருது - ஐராவதம் மகாதேவன், பெரியார் விருது - நக்கீரன் கோபால், அம்பேத்கர் விருது- கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், அண்ணா விருது - அவ்வைநடராஜன், காமராஜர் விருது - சொக்கர், பாரதியார் விருது - ராமச்சந்திரன், பாரதிதாசன் விருது- தமிழ்தாசன், திரு.வி.க.விருது - அண்ணாமலை என்ற இமையம், கி.ஆ.பெ.விசுவநாதர் விருது - தாயம்மாள் அறவாணன் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி விருது வழங்கி பேசியதாவது: திருவள்ளுவர் விருது பெற்ற ஐராவதம் மகாதேவன், கல்வெட்டுகளில் தமிழக வரலாறையும், முன்னோடிகளின் வரலாறையும் பதித்தவர். பரமசிவனை எதிர்த்து வாதாடியவர் நக்கீரன். பெரியார் விருது பெறும் நக்கீரன் கோபால் என்னை எதிர்த்தும் கொடி உயர்த்துவார். அது நியாயமான காரியம் என்றால் ஏற்றுக் கொள்வேன். அண்ணா விருதும் பெறும் அவ்வை நடராஜன் தமிழுக்காக அரும்பணிகளை ஆற்றி வருகிறார். தமிழ் மீது அளவற்ற அன்பும், பற்றும் கொண்டவர். காமராஜர் விருது பெறும் சொக்கர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் தவறை சுட்டிக்காட்டுபவர். பாரதிதாசன் விருது பெறும் தமிழ்தாசன் பேசும் போது, "நெல்சன் மண்டேலா, ஜோதிபாசு, பெரியார் போன்றவர்கள் அரசியலில் இல்லாவிட்டாலும் சமுதாய பணிகளில் ஈடுபட்டனர்' என்ற உவமையை கூறினார்.<br />
<br />
<br />
நான் அரசியலிலிருந்து விலகி விடுவேனோ என்ற அச்சம் தமிழ்தாசனை அப்படி பேச வைத்துள்ளது. ஜோதிபாசு உடல்நலம் பெற்று மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என நான் வாழ்த்துகிறேன். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவர் வழியில் நடக்க விரும்புகிறேன். கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற தாயம்மாள் அறவாணன் பேசும் போது, "தனது கணவர் அறவாணன் எனது தமிழ் தொண்டுக்கு உதவியாக இருந்தார்' என, கூறினார். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் உண்டு என்பது போல ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆண் இருந்துள்ளார் என்பது எனக்கு கிடைத்த உண்மை. நானும் அன்பழகனும் முக்கியமானவர்களுக்கு கொடுத்த விருதுகளை தொடர்ந்து மற்றவர் களுக்கு, துணை முதல்வர் விருதுகளை வழங்குவார். எனக்கு துணையாக இருப்பதால் தானே துணை முதல்வர். நானும் அன்பழகனும் விட்டுச் செல்கிற பணிகளை துணை முதல்வர் ஆற்ற வேண்டும், தொடர வேணடும். இவ்வாறு பேசினார்.<br />
<br />
செய்தி: நன்றி: <a href="http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6290">தினமலர்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7732127279361482.post-85068906091718623202010-01-11T23:34:00.000-08:002010-01-12T20:17:12.446-08:00சரித்திரக் கீர்த்தி மிக்க சட்டசபை - கருணாநிதி"சரித்திரக் கீர்த்திமிக்க இந்த சட்டசபையில் இருந்து வெளியேறப் போகிறோம். அடுத்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடர், புதிய சட்டசபையில் நடப்பதற்கு ஏற்ற வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன" என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.<br />
<br />
சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று, இந்த சட்டசபையில் நடக்கும் கடைசி கூட்டம் என்பதால், துணை முதல்வர் ஸ்டாலின் பதிலுரை நிகழ்த்தியதும், முதல்வர் கருணாநிதி, இந்த சட்டசபையின் வரலாறு பற்றி பேசியதாவது:நான் உட்பட நாம் எல்லாம் சேர்ந்து, இந்த அவையில் இருந்து வெளியேறப் போகிறோம். நம்மை யாரும் வெளியேற்றாமலேயே நமது விருப்பப்படி வெளியேறப் போகிறோம். சிலபேர் வெளியேறுவதற்காக வந்து, அப்படி வெளியேறியவர்களையும் சேர்த்து, அழைத்துக் கொண்டு வெளியேறப் போகிறோம்.<br />
<br />
இங்கு நடக்கும் இறுதிக் கூட்டத் தொடர் இது என்பதால், இந்த சபையின் வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது இந்த நேரத்தில் பொருத்தமாக இருக்கும்.டில்லியில் உள்ள செங்கோட்டை, ஷாஜகானால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மொகாலய பேரரசின் மிகப்பெரிய சின்னம்.<br />
<br />
<br />
அதைப்போல, சென்னையில் உள்ள இந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை, 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சின்னம். 1640ல் செயின்ட் ஜார்ஜ் நினைவு தினமான ஏப்ரல் 23ம் தேதி, இந்தக் கோட்டை கட்டப்பட்டதால், இதற்கு இப்பெயரிடப்பட்டது. கடந்த 1678ல் இக்கோட்டை வளாகத்தில் மிகத் தொன்மையான, "புனித மேரி ஆலயம்' கட்டப்பட்டது. அந்த ஆலயத்தில் தான், 1753ல் ராபர்ட் கிளைவ் திருமணம் நடந்தது. 1687 முதல் 1692 வரை, கவர்னராக "யேல்' இருந்த போது தான், ஆசியாவிலேயே மிக உயரமான கோட்டைக் கொடிமரத்தில், கம்பெனி கொடிக்குப் பதிலாக பிரிட்டிஷ் கொடி பறக்கவிடப்பட்டது.கடந்த 1919ல், அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன், தற்போதைய சட்டசபைக் கூட்ட மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. எனவே, இதற்கும் ஒரு நூற்றாண்டு விழா கொண்டாடலாம் போல் தெரிகிறது.<br />
<br />
<br />
ஓமந்தூராருக்குப் பின், குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் ஆகியோர் இந்த கோட்டையில் முதல்வராக வீற்றிருந்திருக்கின்றனர். 1969ல் அண்ணாவின் மறைவுக்குப் பின் முதல்வராக பொறுப்பேற்ற நான், 1971, 1989, 1996, 2006ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக பதவி வகித்துள் ளேன்.அதன்பின், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த தமிழக சட்டசபையில், சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்மானங்கள், சட்டங்கள், முடிவுகள் எல்லாம் மேற்கொள்ளப் பட்டுள்ளன.வாக்காளர் பட்டியலில் பெண்களும் இடம்பெற வழி செய்யும் தீர்மானம், 1921ல் நிறைவேறியது. ஆதிதிராவிடர்களை, "பஞ்சமர், பறையர்' என்ற சொற்களால் குறிப்பிடுவது அரசு ஆவணங்களில் தவிர்க்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் 1922ல் நிறைவேறியது.<br />
<br />
<br />
ஆலயங்கள் நுழைவுச் சட்டம் நிறைவேறியதும் இந்த சபையில் தான்.இந்த சபையில், தமிழக மக்களுக்காக சிந்தித்து செயல்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களது கருத்துக்களுக்கு மதிப்பளித்து அதற்கேற்ப சட்டங்களை வகுப்பது, ஆட்சியை நடத்துவது என்ற முறை அன்று இருந்தது. அது இன்றைக்கும் இருக்க வேண்டுமென்ற முனைப்போடு தான், ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ளோம்.ஒரு கருத்தைச் சொன்னால், அதனால் எத்தகைய எதிரொலி ஏற்படும், எத்தகைய நிலைமைகள் உருவாகும், ஆகவே அந்தக் கருத்துக்களை சொல்லாமல் இருப்பது நல்லதல்லவா என்றெல்லாம் எண்ணிப் பார்த்து, அக்கருத்துக்களை சொல்வது தான் சிலாக்கியமானது என்பதை உணர்ந்து, நான் அறிந்தவரையில் எனது வாழ்வில் கடைபிடித்து வருகிறேன்.<br />
<br />
அதை இந்தச் சட்டசபையிலும் கடைபிடித்து வருகிறேன். இந்த சபையில் எத்தனையோ நல்ல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. அவை எனனென்ன என்று பேசி மறுபடியும் அதே நிகழ்ச்சியின் தொடர்ச்சியை ஏற்படுத்த விரும்பவில்லை.அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் மறந்துவிட்டு, நாம் குடி செல்லும் புதிய இடத்திலாவது அந்த நிலை இல்லாமல் நாட்டைப் பற்றிய நினைவு, மக்களை பற்றிய நினைவுடன் நமது பணியை அங்கு துவங்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.<br />
<br />
செய்தி: நன்றி: <a href="http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=16111">தினமலர்</a><br />
<br />
More Links<br />
<br />
<a href="http://www.assembly.tn.gov.in/History/history_fort.htm">TN Assembly</a><br />
<br />
<a href="http://www.assembly.tn.gov.in/History/chronology.htm">Chronology - Fort.St.George</a><br />
<br />
<a href="http://www.assembly.tn.gov.in/History/history.htm">State Legislature - Origin and Evolution</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7732127279361482.post-88811181018772487982009-12-10T23:41:00.000-08:002009-12-10T23:45:37.928-08:00மஞ்சள் மயமாகும் ரேஷன் கடைகள்தூசியும் துப்பட்டையுமாகக் காட்சியளிக்கும் ரேசன் கடைகள் புதுப்பொலிவு பெறத் தொடங்கியுள்ளன.<br />
<br />
<img SRC="http://epaper.dinakaran.com/pdf/2009/12/11/20091211a_01010100401.jpg" WIDTH=400><br />
<br />
மளிகைக் கடைகள் எல்லாம் டிபார்ட்மென்டல் ஸ்டோர், செயின் ஸ்டோர்ஸ், மெகா ஷாப்பிங் மால் என்று மாறிவரும் காலம் இது. ஆனால், அதிகமான மக்கள் வந்து செல்லும் ரேசன் கடைகளோ, அதே அழுக்கு பிடித்த கடைகளாகவும், சாக்குப்பை தூசியும் மண்ண்ணெய் வாடையும் வீசும் இடமாகவும்தான் இருக்கின்றன. இந்த நிலையை மாற்றுவதற்கு கூட்டுறவுத் துறை எடுத்துள்ள முயற்சியின் காரணமாக, ரேசன் கடைகளும் அழகு பெற ஆரம்பித்துள்ளன.<br />
<br />
நவீனமயத்தின் முதல் கட்டமாக, ரேசன் கடைகளில் ரசீது இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, கடைகளை பொலிவுபடுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.<br />
<br />
சென்னை மற்றும் புறநகரில் 11 ரேசன் கடைகள் ஒரே மாதிரியான தோற்றத்தில் புது பொலிவு பெற்றுள்ளன. அண்ணாநகரில் 5 கடைகளும், ராயபுரம் காசி தோட்டம் பகுதியில் 2 கடைகளும், வண்ணாரப்பேட்டை மணிகண்டன் தெருவில் 2 கடைகளும், செங்குன்றத்தில் 2 கடைகளும் புதுப்பொலிவு பெற்றுள்ளன.<br />
<br />
<b>மஞ்சள் நிற பெயின்ட்</b> அடித்து, பளிச்சென புத்தம்புது கடைகளைப் போல காட்சி அளிக்கின்றன. பில் போடும் இடம் வரவேற்பு அறையை போல அமைக்கப்பட்டுள்ளது.<br />
வங்கிகளை போல கண்ணாடி கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தரை சமதளமாக சீராக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள் முறையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன. பாமாயில், ஆட்டா மாவு போன்றவற்றை அடுக்கி வைக்க இரும்பு ரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன. பெயர் பலகையும் புதிய வடிவம் பெற்றுள்ளது. பணியாளர்களுக்கு சீருடையும் வழங்கப்பட்டுள்ளது.<br />
<br />
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திரநாத் ஸ்வைன் கூறுகையில், ‘‘உணவுப் பொருள்களை விநியோகிக்கும் ரேசன் கடைகள் சுத்தமாக இருப்பது அவசியம். மாறிவரும் உலகில் மக்கள் விரும்பும் வகையில் கடைகளின் தோற்றம் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு ரேசன் கடைகள் பொலிவூட்டப்படுகின்றன’’ என்றார். <br />
<br />
செய்தி: படம்: நன்றி: <a href="http://epaper.dinakaran.com">தினகரன்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7732127279361482.post-91814507242223403762009-12-08T23:44:00.000-08:002009-12-08T23:44:58.067-08:00அரசியலில் இருந்து கலைஞர் ஓய்வு பெறக்கூடாது: மு.க.ஸ்டாலின்முதல்- அமைச்சர் கருணாநிதி சமீபத்தில் ஒரு விழாவில் பேசும்போது, கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பொதுமக்களில் ஒருவராக இருப்பேன் என்று கூறினார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.<br />
<br />
துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு அளிக்கும் பதில் என்ன என்பதை அறிய பலரும் ஆவலாக இருந்தனர்.<br />
<br />
இந்த நிலையில் கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக, துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று எழும்பூரில் உள்ள கூவம் ஆற்றில் நடைபெறும் சீரமைப்பு பணியை நேரில் பார்த்தார்.<br />
<br />
அப்போது பத்திரிகையாளர்கள், முதல்-அமைச்சர் கருணாநிதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு, அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருக்கிறாரே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர்.<br />
<br />
இதற்கு துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-<br />
<br />
ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் கலைஞர். அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெறக்கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம்.<br />
<br />
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.<br />
<br />
செய்தி: நன்றி: <a href="http://www.maalaimalar.com/2009/12/08113747/CNI0260801209.html">மாலைமலர்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7732127279361482.post-34203943624890302292009-11-22T20:48:00.001-08:002009-11-22T20:51:24.349-08:00சிதம்பரம் நடராஜர் கோவிலில் ராசாத்தி சாமி தரிசனம்சிதம்பரம் நடராஜர் கோவிலில், முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனுடன் சாமி தரிசனம் செய்தார். <br />
<br />
முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யனுடன் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். <br />
<br />
தி.மு.க., நகரச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். <br />
<br />
கோவிலில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்தார். பின், கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தராஜ பெருமாள், ஆதிமூலநாதர் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றார்.<br />
<br />
செய்தி: நன்றி: <a href="http://www.dinamalar.com/General_detail.asp?news_id=19117">தினமலர்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7732127279361482.post-73091972475635176722009-11-19T00:45:00.000-08:002009-11-19T00:45:14.048-08:00தனக்கு வந்தால் 'அலறல் வலி'.. பிறர்க்கு வந்தால் 'மெளன வலியா?'- ஜெ. கேள்விதமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கருணாநிதிக்கு அது 'மௌன வலி'யாகத்தான் இருக்கும். <span style="background-color: yellow;">தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது டெல்லி வரை ஓங்கி ஒலிக்கக் கூடிய 'அலறல் வலி'யாக இருக்கும்</span> என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.<br />
<br />
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், நம் மௌன வலி யாருக்கு தெரியப் போகிறது என்று கூறியிருந்தார்.<br />
<br />
இதையடுத்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:<br />
<br />
'நம் மௌன வலி; யாருக்குத் தெரியப் போகிறது?' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டு தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் சந்தர்ப்பவாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி.<br />
<br />
தன்னுடைய அறிக்கையில் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்ததாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் நின்றால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த கருணாநிதி, 1983ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக என்று கூறி தான் வகித்துவந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1984ம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.<br />
<br />
இதிலிருந்தே தேர்தல் தோல்வியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சுயநலத்துடன் கருணாநிதியால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் அது என்பது தெளிவாகிறது.<br />
<br />
1991ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் எனது தலைமையில் அதிமுக 164 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றி அடைந்த நேரத்தில், ஒற்றை எண்ணில் ஒரே இடத்தில் வெற்றி பெற்று படுதோல்வியை தழுவிய கருணாநிதி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.<br />
<br />
அப்போதும் அவமானம் தாங்காமல் தனி நபராக ஆளும் கட்சியை எதிர்கொள்ள துணிவில்லாமல் கருணாநிதி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாரே தவிர எந்த லட்சியத் திற்காகவோ கொள்கைக்காகவோ தியாகம் செய்யவில்லை.<br />
<br />
அடுத்ததாக இலங்கைத் தமிழர்களுக்காக இருமுறை ஆட்சியை இழந்ததாக கூறியிருக்கிறார் கருணாநிதி. உண்மை நிலை என்ன வென்றால் 1976ம் ஆண்டு ஊழல் புரிந்ததற்காகவும், 1991ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காகவும் தான் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.<br />
<br />
இவ்வளவு வாய்கிழியப் பேசும் கருணாநிதி, 2008ம் ஆண்டு தான் தாங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசின் உதவியோடு இலங்கை ராணுவம் அங்குள்ள தமிழர்களை கொன்று குவித்தபோது என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பற்றி ஒருவரி கூட தெரிவிக்கவில்லையே.<br />
<br />
ஒரு வேளை அவர் நடத்திய கபட நாடகங்களான அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், மனிதச் சங்கிலி போராட்டம் என்று அறிவித்து அனைவரையும் கொட்டும் மழையில் நனையவிட்டு தான் மட்டும் தன் மகனுடன் சீருந்தில் பவனி வந்தது; பிரதமருக்கு தந்தி கொடுங்கள் என்று அறிவித்தது,<br />
<br />
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என அறிவித்தது, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது; உலகத்தில் இதுவரை யாருமே நடத்தியிராத 3 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றை மனதில் வைத்துத்தான் அறப் போராட்டங்கள் நடத்தியதாக தனது அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார் போலும்.<br />
<br />
கருணாநிதிக்கு உண்மையான தமிழர் பற்று இருந்திருக்குமானால், 2008ம் ஆண்டு துவக்கத்திலேயே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். இதை கருணாநிதி செய்திருப்பாரேயானால் அப்பொழுதே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். தமிழினம் அழிவது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.<br />
<br />
<div style="background-color: yellow;">இதைச் செய்யாததன் மூலம் தமிழினத்திற்கு மிகப் பெரிய துரோகத்தை கருணாநிதி இழைத்து விட்டார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட கருணாநிதி முக்கிய காரணமாகி விட்டார்.<br />
</div><br />
தன்னலம் காரணமாக தன் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்கும் வகையில் பிரபாகரன் தீவிரவாதி அல்ல, என் நண்பன் என்று தான் கூறியதையும், நாங்களே அடிமைகளாக இருக்கிறோம் என்று கூறி இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் தன்னுடைய இயலாமையை தெரிவித்ததையும் மறந்து <span style="background-color: yellow;">தற்போது பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி</span>.<br />
<br />
வீரம் என்கிற போராடும் மன வலிமை தன்னிடம் இல்லை என்பதையும், தன் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் செயல்படும் விவேகம் தன்னிடத்தில் மேலோங்கி நிற்பதையும் தனது அறிக்கையின் மூலம் கருணாநிதி தெளிவுபட கூறியிருக்கிறார்.<br />
<br />
தமிழர்களுக்கு தமிழினத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் கருணாநிதிக்கு அது 'மௌன வலி' ஆகத்தான் இருக்கும். தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது டெல்லி வரை ஓங்கி ஒலிக்கக் கூடிய 'அலறல் வலி' ஆக இருக்கும். இதுதான் கருணாநிதியின் தத்துவம்.<br />
<br />
இந்த மௌன வலியை மக்கள் நம்பத் தயாராக இல்லை. தமிழனத்திற்கு கருணாநிதி இழைத்த துரோகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா<br />
<br />
<br />
செய்தி: நன்றி: <a href="http://thatstamil.oneindia.in/news/2009/11/19/jayalalitha-questions-karunanidhi.html">தட்ஸ்தமிழ்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7732127279361482.post-41026969696748529012009-11-17T20:38:00.000-08:002009-11-17T20:46:22.379-08:00விடுதலைப் புலிகள் - விளைவுகளை எண்ணி மவுனமாக அழுகிறோம் - கருணாநிதி<b>முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை</b>:<br />
<br />
ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல் இலங்கை பிரச்னைக்காக திமுக குரல் எழுப்பியதோடு நில்லாமல், இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும் நடத்திய அறப்போராட்டங்களும் சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை தூக்கி எறிந்த நிகழ்வுகளும் இரு முறை ஆட்சியையே இழந்த சம்பவங்களும் நடந்தன. தி.மு.க. சார்பில் நிதியாக தமிழர்களிடமிருந்து சேர்த்துக் கொடுத்த மாசறு காசுகள் செல்லாக் காசுகளாக மாறிய நிகழ்ச்சியும்; டெசோ இயக்கத்தின் சார்பில் நானும், வீரமணியும், பழ. நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் பேரணிகளை நடத்தியதை தொடர்ந்து மதுரையில் டி.யு.எல்.எப். சார்பாக அமிர்தலிங்கம், புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் ரத்தின சபாபதி, டி.இ.எல்.எப். ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். வரதராஜப்பெருமாள், பிளாட் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்ட மாநாட்டில் என்.டி. ராமராவ், வாஜ்பய், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணியம் சுவாமி மற்றும் பலர் போராளிகளிடையே சகோதர ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். <span style="background-color: yellow;">அந்த மாநாட்டிற்கு எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர் என்பவர் வந்திருந்தாரே தவிர, பிரபாகரன் வரவில்லை</span>.<br />
<br />
முதலமைச்சராக இருந்து கொண்டே, இந்தியாவிற்கு திரும்பி வந்த அமைதிப் படையை வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்து, தமிழ்நாட்டின் உணர்வை நான் வெளிப்படுத்திய நிகழ்வு இலங்கையில் நடந்த விடுதலைப் போராட்டத்திற்கு நமது தாய் மண்ணிலிருந்து நீட்டப்பட்ட ஆதரவுக் கரம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. <span style="background-color: yellow;">ஆனால் அங்கிருந்த ஒரு சிலருக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு மிக லேசாகவே தெரிந்தது. வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு போர் முனையில் விவேகத்தையும் பயன்படுத்தவேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை அலட்சியப்படுத்தி விட்டார்கள்</span>. ஜனநாயக ரீதியான ஒரு வாய்ப்பு வாசற்படி வரையில் வந்தபோது, அதை எட்டி உதைத்து விட்டனர்.<br />
<br />
அண்மையில் சென்னை வந்த இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘<span style="background-color: yellow;">இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம்</span>. <span style="background-color: yellow;">தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாண முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார். 2003ல் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையிலிருந்து தானாக வெளியேறினார். 2005 டோக்கியோ பேச்சுவார்த்தையிலும் தமிழர் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார். 2005 அதிபர் தேர்தலில் தமிழர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கச் செய்தார். தேர்தலில் பங்கேற்று இருந்தால் தமிழர் மனநிலை என்ன என்பதை நாடு அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்கு தர பிரபாகரன் தவறி விட்டார்</span>’’ என்று கூறியிருக்கிறார்.<br />
<br />
அதை கூர்ந்து கவனித்தால் <span style="background-color: orange;">விடுதலைப் புலிகள் போர் தந்திரத்தை எதிர்கால கணிப்போடு கையாளவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். சகோதர யுத்தத்தின் காரணமாக மாத்தையாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றியும், டெலோ சிறீ சபாரத்தினத்தை சவமாக ஆக்கியும், பத்மநாபாவை கொன்றும், தொடக்கத்திலிருந்து போராளி துணைவராக விளங்கிய அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் பலியாக்கியும், ரெலோ இயக்கத்தை சேர்ந்த மனோ மாஸ்டர் என்ற பஞ்சலிங்கத்தையும் தலைவர் குலசேகரம் தேவசேகரத்தையும், தலைசிறந்த அரசியல் அறிஞர் நீலன் திருச்செல்வத்தையும், சுந்தரம் எனப்பட்ட சிவசண்முகமூர்த்தியையும், ஜார்ஜ், சபாலிங்கம், சாம் தம்பிமுத்து, கலா தம்பிமுத்து மற்றும் பிளாட் இயக்க யோதீஸ்வரனையும், வாசுதேவாவையும் மரணக் குழியிலே தள்ளியும் விடுதலை புலிகள் தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு தொலைத்துவிட்ட காரியங்களாக அமைந்தன என்பதை இந்த போர்முனை சரித்திரம் சொல்லி புலம்பிக் கொண்டுதானிருக்கிறது</span>. யார் மீதும் குற்றம் சொல்வதற்காக நான் இதை எழுதவில்லை. இலங்கையில் 2004 தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த ஒரு சில நாட்களுக்குள் கிழக்கு இலங்கையில் பிரபாகரன், கருணா படைகளிடையே யுத்தம் ஏற்பட்டு அதிலே 20 போராளிகளும் 2 சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள்.<br />
<br />
<span style="background-color: orange;">நம்மை நாமே கொன்று குவித்துக் கொண்டது மாத்திரமல்ல. முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறிய காரணத்தால் நம் பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால் நம் தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரை இழக்க நேரிட்டது</span>?<br />
<br />
இளம் சிறார்கள் எத்தனை பேர் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர்? அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள்? எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாடு பஞ்சைகளாக, பராரிகளாக செல்ல நேரிட்டது? தங்கள் வாழ்க்கையை தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று? எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது? இதற்கெல்லாம் காரணம் என்ன?<br />
<br />
<span style="background-color: red;">பிரபாகரன் மனைவி மக்கள் கதிதான் என்ன? இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழர் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்கள் அற்ப ஆயுளில் போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில்தான் இதனை எழுத நேரிட்டது</span>.<br />
<br />
என்னையும், தம்பி மாறனையும் 1989ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி டெல்லிக்கு அழைத்து ஈழப் பிரச்னை குறித்து இரண்டு நாள் உரையாடி, ‘நீங்களும், மாறனும், வைகோவும் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு பிரபாகரனுடன் பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் செலவிடுங்கள். தேவையான ஏற்பாடுகளை செய்து தருகிறேன். அவர் கோரிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்’ என்றெல்லாம் எங்களுக்கு சொல்லி உறுதியளித்தார். <span style="background-color: yellow;">அந்த இளந்தலைவர் இந்திய மண்ணில் அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். அது ஈழ விடுதலைப் போராட்ட தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று</span>.<br />
<br />
அடுத்து 2005ல் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சேவும் அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் போட்டியிட்டார்கள். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் புலிகளுடன் அமைதிப் பேச்சை தொடருவேன் என்றார் ரணில்.<br />
<br />
அந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று விடுதலைப் புலிகள் அறிவுறுத்தினர். அப்போது ரணில் சொன்னதைதான் இப்போது பேட்டியிலும் குறிப்பிட்டுள்ளார். அந்த தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றார். அவருக்கு 48,87,152 (50.29 சதவிகிதம்) வாக்குகளும், ரணிலுக்கு 47,06,366 (48.43 சதவிகிதம்) வாக்குகளும் கிடைத்தன. 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வி அடைந்தார். <span style="background-color: yellow;">ஏழு இலட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்த காரணத்தால் ஏற்பட்ட முடிவை பார்த்தால், விடுதலைப் புலிகள் அவசரப்பட்டு அன்று எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எங்கே போய் முடிந்தன என்பது புரியும்</span>. அதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? நம் மௌன வலிதான் யாருக்கு தெரியப் போகிறது? இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.<br />
<br />
<br />
செய்தி: நன்றி:<a href="http://www.dinakaran.com/daily/thamilagam/tn301.asp">தினகரன்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7732127279361482.post-58168065960446320742009-11-10T21:33:00.001-08:002009-11-10T21:38:51.878-08:00கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும்: துரைமுருகன்ஜாதிகளை ஒழிக்கப் பாடுபட்ட முதல்வர் கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.<br />
<br />
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் 100 வீடுகள் கொண்ட சமத்துவப்புரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் நேற்று திறந்து வைத்தார்.<br />
<br />
இந்த விழாவில் பேசிய துரைமுருகன்,<br />
<br />
ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூட தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு ஆலய பிரவேசம் செய்தார். இப்படி பல தலைவர்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும் என ஒவ்வொரு விதத்தில் போராடி விட்டு அவர்கள் தங்களது இடங்களுக்கே திரும்பி சென்று விட்டனர்.<br />
<br />
ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி மட்டும்தான் இதிலிருந்து வித்தியாசமாக யோசித்து சமத்துவபுரம் என்ற உன்னதத் திட்டத்தை கொண்டு வந்து எல்லா ஜாதி மக்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்தி ஜாதி ஒழிக்க பாடுபடுகிறார்.<br />
<br />
இதற்காக <span style="background-color: yellow;">முதல்வர் கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும். ஆனால் தரமாட்டார்கள். காரணம் இவர் தமிழன் என்பதால்தான்</span>.<br />
<br />
ஏன்?, இந்தியாவில் தரப்படும் <span style="background-color: yellow;">சாகித்ய அகடாமி</span> விருதுக்கு கூட தகுதியானவர் தான் கருணாநிதி. அவர் எழுதாத இலக்கியங்களா... அவரைப் போல யார் எழுதியிருக்கிறார்கள்?. அப்படிப்பட்ட தலைவருக்கு அவ்விருது கூட வழங்கப்படவில்லை. <span style="background-color: yellow;">காரணம் இவர் தமிழன்</span>.<br />
<br />
மு.க.ஸ்டாலினை பாரட்டும் தகுதி எனக்கு இருக்கிறது. சிறு வயது முதலே அவரது வளர்ச்சியை, நடவடிக்கையை பார்த்து வருபவன் நான். அண்ணா, கலைஞருடன் இருந்திருக்கிறேன். <span style="background-color: yellow;">தற்போது ஸ்டாலினுடன் இருப்பதை பெருமையாக இருப்பதை கருதுகிறேன்</span>. வேறு கட்சி நிழல் கூட படாமல், வளர்ந்து விட்டவன் நான் என்றார்.<br />
<br />
செய்தி: நன்றி: <a href="http://thatstamil.oneindia.in/news/2009/11/10/tn-karunanidhi-should-be-given-noble.html">தட்ஸ்தமிழ்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7732127279361482.post-15257486558615104162009-11-03T22:36:00.000-08:002009-11-03T22:36:43.054-08:00செயல்படாத எதிர்கட்சித் தலைவர்கள் - முதலிடம் ஜெ.இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வரலாறு காணாத வகையில் செயலிழந்து போயுள்ளன அல்லது சிதறிப் போய்க் கிடக்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஆளுங்கட்களின் செயல்பாடுகள் கேட்க நாதியில்லாமல் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
உட்கட்சிப் பூசல், கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதில் ஏற்படும் சிரமங்கள், ஆளுங்கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சிகளுக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரசியல் திறனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.<br />
<br />
இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை தலைவர் பித்யூத் சக்ரவர்த்தி கூறுகையில், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் முழுமையாக சிதறிப் போய்க் கிடக்கின்றன. <br />
<br />
மத்தியிலும் கூட இதே நிலைதான். எதிர்க்கட்சி என்பது அரசைக் கட்டுப்படுத்துவதில், கண்காணிப்பதில் கடிவாளம் போல இருக்கும் என்ற தோற்றம் தற்போது மறைந்து விட்டது. மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி எதிர்க்கட்சிகள் செயலிழந்து போய்க் கிடக்கின்றன.<br />
<br />
மத்தியப் பிரதேசத்தில், 2வது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் திறமையாக செயல்பட வேண்டிய காங்கிரஸ் அங்கு உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவிப்பதால் எதிர்க்கட்சியாக அதன் செயல்பாடு பூஜ்யமாக உள்ளது.<br />
<br />
ராஜஸ்தானில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளுக்கு நிகராக எதிர்க்கட்சியான பாஜக இல்லை. தேங்கிப் போய்க் கிடக்கிறது பாஜக.<br />
<br />
தமிழகத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. இங்கு கிட்டத்தட்ட எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு தோற்றம் அளிக்கிறது. வழக்கமான முறையிலான எதிர்ப்புகளையோ அல்லது போராட்டங்களையோ, அரசின் மீதான விமர்சனங்களோ கூட இங்கு கேட்பதில்லை. அடுத்து வரப் போகும் சட்டசபைத் தேர்தல் குறித்தும், இடைத் தேர்தல் குறித்தும், கூட்டணிகள் குறித்துமே அத்தனை பேரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.<br />
<br />
கடந்த ஆறு மாதங்களாகவே முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைவர் சென்னையில் இல்லை. சமீபத்தில்தான் அவர் கொடநாடு போய் திரும்பி வந்தார்.<br />
<br />
பிரதான எதிர்க்கட்சியின் செயல்பாடு கடந்த ஆறு மாதங்களாக இல்லாததால் திமுக அரசின் செயல்பாடு எந்தவிதத்திலும் பாதிப்பை சந்திக்கவில்லை. கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. மேலும் வெற்று அறிக்கைகள் மூலம் மட்டுமே அரசை விமர்சித்து வரும் ஜெயலலிதாவால் ஆளும் கட்சி்க்கு எந்த நெருக்கடியும் இல்லை.<br />
<br />
இதேபோல கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் முறையே காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை திறமையான எதிர்க்கட்சிகளாக செயல்படாத நிலை காணப்படுகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் இன்னும் முழுமையான எதிர்க்கட்சியாக செயல்படாமலேயே உள்ளது என்றார் சக்ரவர்த்தி.<br />
<br />
அதேசமயம், மேற்கு வங்கம், உ.பி ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்களின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக உள்ளன. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் அரசின் தவறுகளை விமர்சிப்பதற்குப் பதில், வளர்ச்சி நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் செயல்படுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.<br />
<br />
அதேபோலத்தான் உ.பியில் சமாஜ்வாடிக் கட்சி ஆக்கப்பூர்வமாக செயல்படாமல், வளர்ச்சி நடவடிக்கைகளே செயல்படாத வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.<br />
<br />
மேற்கு வங்க அரசு எதைச் செய்தாலும் அதைக் கடுமையாக எதிர்க்கிறார் மமதா பானர்ஜி. இதனால் அங்கு வளர்ச்சி நடவடிக்கைள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.<br />
<br />
இந்தியாவிலேயே உருப்படியான எதிர்க்கட்சி உள்ள மாநிலம் எது என்றால் ஜம்மு காஷ்மீரைத்தான் சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். அங்கு மெஹபூபா முக்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி தேவையில்லாத பிரச்சினகைளுக்கெல்லாம் போராட்டம் நடத்தாமல், மக்கள் விரோத நடவடிக்கைகளை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்து வருகிறது.<br />
<br />
தீவிரவாத மனப்போக்குள்ளவர்களையும், தேசியத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களையும் அனுசரித்து நடந்து கொள்கிறது மக்கள் ஜனநாயகக் கட்சி. இன்னும் சொல்லப் போனால் தீவிரவாத மனப்போக்குள்ளவர்களை மாற்றி தேசியத்திற்கு அது அழைத்து வரும் பணியையும் கூடவே செய்கிறது.<br />
<br />
மக்கள் ஜனநாயகக் கட்சி எப்போதும் விழிப்புடன் இருப்பதால் ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி தவறுகள் செய்யாமல் தவிர்ப்பதில் அக்கறையுடன் உள்ளது. இப்படி ஆளுங்கட்சி தனது பணியில் கவனத்துடன் இருப்பதாலும், எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி ஆளுங்கட்சியை தொடர்ந்து கண்காணித்து வருவதாலும் அங்கு தவறுகள் நடப்பது வெகுவாக குறைந்துள்ளது. <br />
<br />
கடந்த 2002ம் ஆண்டிலிருந்தே ஜம்மு காஷ்மீரில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.<br />
<br />
செய்தி: நன்றி:<a href="http://thatstamil.oneindia.in/news/2009/11/04/india-opposition-goes-missing-action-most.html">தட்ஸ்தமிழ்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7732127279361482.post-82237381366341988812009-10-25T21:22:00.000-07:002009-10-25T21:23:01.406-07:00தன் முகமூடியை தானே கிழித்த கருணாநிதி - ஜெகலைஞர் உயிர் காக்கும் திட்டம் தொடர்பான விளம்பரத்தில் எம தர்மனின் படத்தை வெளியிட்டதன் மூலம் முதல்வர் கருணாநிதியின் கடவுள் நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது. இதன் மூலம் தன் முகமூடியை தானே கிழித்துக் கொண்டுள்ளார் கருணாநிதி என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.<br />
<br />
<b>இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:</b><br />
<br />
பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் படித்தவர், காஞ்சிப் பாசறையில் வளர்ந்தவர் என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி, <a href="http://sambarvadai.blogspot.com/2009/10/blog-post_4143.html"><span style="background-color: yellow;">தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் எமதர்மர் உயிரைப் பறிப்பதைப் போலவும், அதை இவர் தடுப்பது போலவும் சித்தரித்து தன்னுடைய முகமூடியை தானே கிழித்துக் கொண்டு</span></a> தன்னுடைய சுயரூபத்தை தன்னுடைய உண்மைத் தன்மையை தானே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.<br />
<br />
குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ளும் திமுகவினரையும், தீ மிதிக்கும் கட்சிக்காரர்கள் மற்றும் அமைச்சர்களையும் அவ்வப்போது கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இந்து சமயக் கடவுள்களை கொச்சைப் படுத்தியும், நிந்தித்தும் தன்னை ஒரு நாத்திகர் போல் காட்டிக் கொண்டிருந்தார் கருணாநிதி.<br />
<br />
ஆனால் கருணாநிதி குடும்பத்தினரோ இறைவழிபாட்டில் தனிக் கவனம் செலுத்துவதிலும், ஜோதிடர்களை கலந்தாலோசித்து அவர்கள் சொல்லும் பரிகாரங்கள் அத்தனையையும் செய்வதிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து வருகின்றனர்.<br />
<br />
கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவதும் இதனால் ஏற்பட்டதே. அதனால்தான் மஞ்சள் துண்டு அணிவதன் மர்மத்தை கருணாநிதி இன்று வரை வெளிப்படுத்தவில்லை. பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தவர் என்றால் கருப்பு துண்டுதானே அணிய வேண்டும் என்று பலர் வினாக்களை எழுப்பியும் அதற்கு சரியான விளக்கத்தை கருணாநிதி இன்று வரை அளிக்கவில்லை.<br />
<br />
கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று வழிபட்டதை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன.<br />
<br />
இவருடைய வேடத்தை மெய்ப்பிக்கும் விதமாக திருக்குவளையில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை கருணாநிதி பெற்றுக் கொண்ட காட்சிகள் புகைப்படத்துடன் பத்திரிகைகளில் வெளிவந்தன.<br />
<br />
ஆனால் தற்போது பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக எமதர்மர் உயிரை பறிப்பது போலவும், அதை கருணாநிதி தடுப்பது போலவும் தமிழக அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.<br />
<br />
இவ்வளவு நாள் இலைமறை, காய்மறையாக இருந்த கருணாநிதியின் கடவுள் நம்பிக்கை தற்போது வெட்டவெளிச் சத்திற்கு வந்திருக்கிறது. தனது முகமூடியை தானே கிழித்துக் கொண்டிருக்கிறார்.<br />
<br />
தானும், தன் குடும்ப உறுப்பினர்களும் தொடர்ந்து வளம் கொழிக்கும் அரசுப் பதவிகளை வகிக்க வேண்டும். அதன் மூலம் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இடம் பெற வேண்டும், என்பதுதான் கருணாநிதியின் ஒரே குறிக்கோள், ஒரே கொள்கை.<br />
<br />
இதற்காக எந்தக் கொள்கையையும் கருணாநிதி விட்டுவிடத் தயாராக இருக்கிறார் என்பது அவருடைய நடவடிக்கைகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. அதனுடைய உச்சக்கட்டம்தான் உயிரைப் பறிக்கும் எமதர்மனையே தடுப்பவராக தன்னை காட்டிக் கொண்டிருக்கிறார். இதன் மூலம்தான் கொள்கை பிடிப்பு இல்லாதவர், உறுதியற்ற தன்மை உடையவர் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.<br />
<br />
தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணாவின் கொள்கைகளையும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளையும், ஜனநாயகக் கோட்பாடுகளையும், தமிழர்களின் உரிமைகளையும் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருப்பவர் தானே கருணாநிதி .கருணாநிதியின் இந்த இரட்டை வேடத்தை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா<br />
<br />
<br />
செய்தி: நன்றி: <a href="http://thatstamil.oneindia.in/news/2009/10/25/tn-jaya-slams-karunanidhi-for-kalaignar-health.html">தட்ஸ்தமிழ்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7732127279361482.post-54418588003027160442009-10-21T23:22:00.000-07:002009-10-21T23:40:20.031-07:00காலம் / எருமை மாடு படம் போட்டு 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'<b>காலம் / எருமை மாடு படம் எல்லாம் போட்டு 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'</b><br />
<br />
காலம் ? காலன் ??<br />
<br />
<span style="background-color: yellow;">திட்டம் நல்ல திட்டம் தான். ஆனா அரசு எமன்/எருமை படம் எல்லாம் போட்டு ? அதுவும் பகுத்தறிவு பேசும் அரசு ? தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத அரசு ? ஹும்</span>. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDyuz1Elqk2mxcvFqkeS-stuoqeSBSmwFOaffYKYeBRfCCKjCBDxpvplLFYDql9DBRpLMIgqHiFYHHHFnc0DDYxMp_2XKDbT5FuVPxxIWs8dRmZe2_0nlSY75o27ZmcbvnWvxAF0Dctg/s1600-h/kk.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDyuz1Elqk2mxcvFqkeS-stuoqeSBSmwFOaffYKYeBRfCCKjCBDxpvplLFYDql9DBRpLMIgqHiFYHHHFnc0DDYxMp_2XKDbT5FuVPxxIWs8dRmZe2_0nlSY75o27ZmcbvnWvxAF0Dctg/s320/kk.jpg" /></a><br />
</div><br />
<br />
படம்: நன்றி: <a href="http://dkn.dinakaran.com/">தினகரன்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7732127279361482.post-17396521577902538802009-10-21T06:48:00.001-07:002009-10-21T06:49:32.007-07:00அதிமுகவுடன் கூட்டணி இல்லை - கம்யூனிஸ்ட் கட்சிகள்அதிமுகவுடன் இடது சாரி கட்சிகளுக்கு நிரந்தரமான கூட்டணி இல்லை என்றும் நாடாளுமன்ற தேர்தலில் வெறும் தேர்தல் உடன்பாடு மட்டுமே வைத்துக் கொண்டன என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்து உள்ளன.<br />
<br />
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, இடது சாரி கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன.எனினும், இந்தக் கூட்டணி தேர்தலில் பெரிய அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை.<br />
<br />
இதனையடுத்து, பாமக அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இது பற்றி அண்மையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.<br />
<br />
அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியதால் எந்த பாதிப்பும் இல்லை என்று ஜெயலலிதா பதில் அளித்தார். இடதுசாரி கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றனவா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது பற்றி நீங்கள் அவர்களைத்தான் கேட்க வேண்டும் என கூறினார்.<br />
<br />
இந்நிலையில் கூட்டணி பற்றி ஜெயலலிதா கூறிய கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், அதிமுகவுடன் செய்து கொண்ட உடன்பாடு கடந்த தேர்தலுடன் முடிந்து விட்டது என்று கூறினார்.அது தேர்தல் உடன்பாடே தவிர கூட்டணி அல்ல என்று அவர் தெரிவித்தார்.<br />
<br />
மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத போக்கை கடைபிடித்தால் இடதுசாரி கட்சிகள் ஒத்த கருத்துக்கள் உள்ள கட்சியுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்று வரதராஜன் கூறினார்.<br />
<br />
இதுபற்றி கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், கடந்த தேர்தலில் தனது கட்சி அதிமுகவுடன் வெறும் தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்துக்கொண்டது என்றும், அக்கட்சியுடன் நிரந்தர கூட்டணி ஏதுமில்லை என்றும் பதில் அளித்தார்.<br />
<br />
ஏற்கனவே பாமக வெளியேறி விட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் இடதுசாரி கட்சிகளும் இல்லை என்று தெளிவாகியிருப்பதையடுத்து அந்த கூட்டணியில் தற்போது மதிமுக மட்டுமே உள்ளது.<br />
<br />
செய்தி: நன்றி: <a href="http://www.maalaisudar.com/newsindex.php?id=31889%20&%20section=1">மாலைச்சுடர்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7732127279361482.post-77102683629409972492009-10-15T05:38:00.000-07:002009-10-15T05:38:19.799-07:00எம்பிக்கள் பயணத்தின் பின்னணிதிமுக கூட்டணி எம்பிக்களின் இலங்கை பயணத்தின் பின்னணி பற்றிய பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்துக்கு முன்பு இலங்கை அதிபர் ராஜபக்சே பல்வேறு நிபந்தனைகளுடன் முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் பற்றியும் தற்போது தெரிய வந்துள்ளது..<br />
.<br />
இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களை சந்திப்பதற்காக இலங்கை சென்ற திமுக கூட்டணி எம்பிக்கள் குழு நேற்று சென்னை திரும்பியது.<br />
<br />
சர்வதேச அளவில் கடும் நெருக்கடி எழுந்த போதும், முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திக்க இதுவரை யாரையும் அனுமதிக்காமல் இருந்த அதிபர் ராஜபக்சே, தமிழக எம்பிக்கள் குழுவை மட்டும் எப்படி அனுமதித்தார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன.<br />
<br />
இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சே அண்மையில் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்திய அரசின் சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும் பிரதிநிதிகளை அனுப்பினால் அவர்களை முகாம்களில் உள்ள தமிழர்களை சந்தித்து நிலைமைகளை கண்டறிய அனுமதி அளிப்பதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார். <br />
<br />
இந்த பிரதிநிதிகள் குழுவில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோ, தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளோ இடம் பெறக்கூடாது என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.இந்த கடிதத்தை முதலமைச்சர் கருணாநிதி, பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வந்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.<br />
<br />
இந்த சந்திப்பின் போது இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழு , இந்திய அரசின் சார்பாகவோ, தமிழக அரசின் சார்பாகவோ செல்லத் தேவையில்லை என்று சிதம்பரத்தின் வாயிலாக முதலமைச்சரிடம் பிரதமர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.<br />
<br />
அதன்படி திமுககாங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் இக்குழுவில் இடம் பெற்றனர். அதே சமயம் இக்குழுவில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இடம்பெற காங்கிரஸ் தரப்பில் முதலில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.<br />
<br />
கூட்டணி கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரை குழுவில் இடம் பெற செய்ய டெல்லியில் பேசி முதலமைச்சர் கருணாநிதி அனுமதி பெற்று தந்ததாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே தமிழக எம்பிக்கள் குழுவில் திருமாவளவன் இடம் பெற்றார் எனத் தெரிகிறது. இந்த எம்.பி.க்கள் குழு இலங்கை செல்லும் முன் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.<br />
<br />
அப்போது இலங்கையில் அந்நாட்டு அரசுப் பிரதிநிதிகள் வழிகாட்டுதலின் பேரில்தான் செயல்பட வேண்டும் என்றும், அங்கு யாரையும் தன்னிச்சையாக சந்தித்து பேசவோ, விவரங்களை சேகரிக்கவோ கூடாது என்றும் பத்திரிகையாளர்கள் யாரையும் சந்தித்து பேசக்கூடாது என்றும் கருணாநிதி எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.<br />
<br />
குறிப்பாக திருமாவளவனை எம்.பி.க்கள் குழுவை விட்டு எங்கும் வெளியே போகக்கூடாது என்று முதல்வர் தெரிவித்து அனுப்பியதாக பரபரப்பாக பேசப்படுகிறது.<br />
<br />
5 நாள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பிய எம்.பி.க்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசக்கூடாது என்பதற்காகவே கருணாநிதி விமான நிலையத்திற்கு முன்கூட்டியே சென்று சுமார் 40 நிமிடம் காத்திருந்து அவர்களை அழைத்து கொண்டு அறிவாலயம் வந்ததாகவும் கூறப்படுகிறது.<br />
<br />
அந்த குழு வந்த சிறிது நேரத்திலேயே அவர்கள் யாரையும் பத்திரிகையாளர்களை சந்திக்க அனுமதிக்காமல் முதலமைச்சர் கருணாநிதி நிருபர்களை சந்தித்து பேசியதிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.<br />
<br />
5 நாட்கள் பயண விவரங்களை எம்.பி.க்கள் குழு வந்த 40 நிமிடத்திலேயே எப்படி அறிக்கையாக தயாரித்து தர முடிந்தது என்ற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது. இது தொடர்பாக திருமாவளவனை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளனர். ஆனால் பத்திரிகையாளர்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.<br />
<br />
இந்த நிகழ்வுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக வைத்து பார்க்கும் போது தமிழக எம்பிக்கள் குழுவின் இலங்கை பயணம் அந்நாட்டு அரசுக்கு சார்பாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை என்றே அரசியல் பொது நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்<br />
<br />
செய்தி: நன்றி: <a href="http://www.maalaisudar.com/newsindex.php?id=31870%20&%20section=1">மாலைச்சுடர்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7732127279361482.post-82960833089511181872009-10-14T04:14:00.000-07:002009-10-14T04:50:10.183-07:00திமுக- காங்கிரஸ் எம்.பிக்கள் with ராஜபக்சேஇலங்கை சென்றுள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழுவினர் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து அளவளாவினர். அவருக்குப் பொன்னாடை போர்த்தினர். தமிழ் மக்களை விரைவில் அவரவர் இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.<br />
<br />
அப்போது தமிழர் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பிறகே முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அந்தப் பகுதிகளில் மீண்டும் குடியமர்த்தப்படுவர் என தமிழக குழுவிடம் ராஜபக்சே தெரிவித்தார்.<br />
<br />
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.<br />
<br />
முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக குழுவினர், கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களிடம் குறை கேட்டனர்.<br />
<br />
மாலையில், வவுனியாவில் உள்ள மானிக் பார்ம் வளாகத்தில் உள்ள 5 முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை தமிழக குழுவினர் பார்வையிட்டனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு நிகழ்ச்சி, முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது. பின்னர் குழுவினர் பல பிரிவுகளாக சென்று தமிழ் அகதிகளிடம் குறை கேட்டனர்.<br />
<br />
பின்னர் இந்திய வம்சாவளி தமிழ் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலையகப்பகுதிக்கு தமிழக குழுவினர் திங்கட்கிழமை சென்றிருந்தனர். இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பின் பேரில் அங்கு சென்றனர்.<br />
<br />
திங்கள்கிழமை ஹட்டன் நகருக்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.<br />
<br />
தேயிலை தோட்டங்கள் நிறைந்த நுவரேலியாவுக்கும் தமிழக குழுவினர் சென்றனர். தொண்டமான் பெயரில் அமைந்துள்ள தோட்டப்பயிர் பயிற்சி மையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். இரவில், மலையக பகுதியில் தமிழக குழுவினர் தங்கினார்கள்.<br />
<br />
அதிபர் ராஜபக்சேவை தமிழக குழுவினர் திங்கட்கிழமை சந்தித்து பேசுவதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, நேற்று அந்த சந்திப்பு நடந்தது.<br />
<br />
ராஜபக்சேவை சந்தித்த திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழுவினரை ராஜபக்சே, அவரது தம்பி பசில் ராஜபக்சே ஆகியோர் வரவேற்றனர். ராஜபக்சேவுக்கு தமிழக குழுவினர் பொன்னாடை போர்த்தினர். பசில் ராஜபக்சேவை, டி.ஆர். பாலு, கட்டித் தழுவிக் கொண்டார்.<br />
<br />
தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பின்னர் திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் ராஜபக்சேவிடம் வலியுறுத்தினர். சந்திப்பின் போது இலங்கை அமைச்சர் [^] ஆறுமுகம் தொண்டமானும் உடனிருந்தார்.<br />
<br />
முகாம் நிலை குறித்து திருப்தி!:<br />
<br />
இந்த சந்திப்பு குறித்து இலங்கை அரசின் தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், அதிபரை சந்தித்த தமிழக குழுவினர், இடம் பெயர்ந்தோருக்கான அகதிகள் முகாம்கலில் உள்ள வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்துக் கொண்டனர்.<br />
<br />
தங்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு அழைப்பு விடுத்ததற்காகவும், போதிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தற்காகவும் அவர்கள் அதிருபருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். தங்களை சந்திக்க அனுமதி அளித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.<br />
<br />
தமிழ் மக்களை மறு குடியமர்த்தும் நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர்கள், அதுதொடர்பாக இலங்கை அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளையும் பாராட்டினர்.<br />
<br />
மழைக்காலம் நெருங்கி வருவதால், அதற்குள் தமிழர்களை இடம் பெயரச் செய்ய வேண்டியது அவசியம் என்றும் திமுக - காங்கிரஸ் [^] கூட்டணிக் குழுவினர் அதிபரைக் கேட்டுக் கொண்டனர். அதற்குத் தேவையான நடவடிக்கை [^]கள் எடுக்கப்பட்டுள்ளதாக ராஜபக்சே தெரிவித்தார்.<br />
<br />
அவர்களிடம் அதிபர் பேசுகையில், எந்தவகையான தீர்வாக இருந்தாலும் அது அனைத்து சமுதாயத்தினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.<br />
<br />
இலங்கை பன்முக இனப் பிரிவுகளால் ஆன ஒரு நாடாகும். கொழும்பு நகரில் கிட்டத்தட்ட 65 ஆயிரம் தமிழர்கள் [^] வாழ்கிறார்கள்.<br />
<br />
தமிழகத்திலிருந்து எம்.பிக்கள் குழு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இங்குள்ள மக்களின் நிலையை நீங்களே வந்து பார்த்து புரிந்து கொள்வது அவசியமாகும். ஏனென்றால் இடம் பெயர்ந்தோர் முகாம்கள் குறித்து வெளியில் அவதூறு பரப்பப்படுகிறது. விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள். தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை சரி பார்த்துக் கொள்ள இந்தப் பயணம் உதவியிருக்கும் என்றார்.<br />
<br />
பின்னர் அதிபரின் ஆலோசகரும், தம்பியுமான பசில் ராஜபக்சே கூறுகையில், இன்னும் 2 நாட்களில் முகாம்களில் உள்ள இட நெருக்கடி, கூட்ட நெரிசல் குறையும் என்றார்.<br />
<br />
செய்தி: நன்றி: <a href="http://thatstamil.oneindia.in/news/2009/10/14/lanka-dmk-front-team-meets-rajapakse.html">தட்ஸ்தமிழ்</a>Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7732127279361482.post-16240872738779274442009-10-09T02:11:00.001-07:002009-10-09T03:12:07.462-07:00அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசுஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு<br />
<br />
<br />
செய்தி: நன்றி: <br />
<br />
<a href="http://timesofindia.indiatimes.com/world/us/Obama-wins-Nobel-Peace-Prize/articleshow/5105622.cms">Times of India</a><br />
<br />
<a href="http://news.bbc.co.uk/2/hi/europe/8298580.stm">BBC</a><br />
<br />
<a href="http://thatstamil.oneindia.in/news/2009/10/09/world-us-president-barack-obama-wins-nobel-peace.html">Thatstamil</a><br />
<br />
<b>அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு</b><br />
<br />
2009ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் [^] பாரக் ஒபாமாவுக்கு வழங்கப்படுகிறது.<br />
<br />
அமைதி நோபல் பரிசுக்காக மொத்தம் 205 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து பாரக் ஒபாமாவை நோபல் விருதுக் கமிட்டி தேர்வு செய்து அறிவித்துள்ளது.<br />
<br />
இதுகுறித்து நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள செய்தியில், மக்களுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியமைக்காகவும், சர்வதேச ரீதியில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்க பாடுபட்டமைக்காகவும், சர்வதேச நாடுகளிடையே நல்லெண்ணத்தை உருவாக்க பாடுபட்டமைக்காகவும் பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
நோபல் பரிசு பெறும் ஒபாமாவுக்கு 1.4 மில்லியன் டாலர் பரிசும், தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7732127279361482.post-41655976446699006352009-10-08T23:18:00.000-07:002009-10-08T23:20:14.485-07:00நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு கருணாநிதி பாராட்டுநோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.<br />
<br />
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-<br />
<br />
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பிறந்து, பரோடா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பி.எஸ்.சி. பட்டம் பெற்று, பின்னர் அமெரிக்க நாட்டிலுள்ள ஓகையோ பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆய்வு முடித்து, முனைவர் பட்டம் பெற்றவர் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.<br />
<br />
அமெரிக்க நாட்டில் வாழும் இவர் இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் நகரில் எம்.ஆர். மூலக்கூறு உயிரியல் ஆய்வுக் கூடத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிறார்.<br />
<br />
இவர் உயிரினங்கள் அனைத்திலும் வேதியியல் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துகிற புரோட்டின்களை உருவாக்கும் ரிபோசெம் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தாமஸ் ஏ.ஸ்டெல்ட்ஸ், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஆடா இயோனத் ஆகியோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.<br />
<br />
இந்த ஆய்வின் மூலம் நோய்களை எதிர்க்கும் புதிய நச்சு நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை உருவாக்குதல் தொடர்பான இவரது கண்டு பிடிப்புக்காக 2009-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக நிறுவப்பட்டுள்ள நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.<br />
<br />
பெருமைக்குரிய இச்செய்தி கேட்டு முதல்-அமைச்சர் கருணாநிதி மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்து, விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனை மனதாரப் பாராட்டுவதாக அறிவித்துள்ளார்.<br />
<br />
மேலும் ஏற்கனவே நோபல் பரிசு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த சர்.சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகிய 2 விஞ்ஞானிகளை அடுத்து 3-வது தமிழ் விஞ்ஞானியாக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகிய நோபல் பரிசினைப் பெற்றுள்ளதன் மூலம் தமிழ்ச் சமுதாயமே மிகவும் பெருமையடைகிறது என்றும், இப்பெருமைக்குரிய விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு தமிழக அரசின் சார்பில் தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வதாகவும் முதல்-அமைச்சர் கருணாநிதி தனது பாராட்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.<br />
<br />
செய்தி: நன்றி: <a href="http://www.maalaimalar.com/2009/10/08144741/CNI0330801009.html">மாலைமலர்</a><br />
<br />
<b><a href="http://www.maalaimalar.com/2009/10/08120204/CNI0120801009.html">வேதியியலில் நோபல் பரிசு: சாதனையின் சிகரத்தில் தமிழர் ராமகிருஷ்ணன்</a></b><br />
<br />
அமெரிக்கர்களையும், ஐரோப்பியர்களையும் மட்டுமே அதிக அளவில் எட்டிப்பார்த்து வந்த நோபல்பரிசை தன்பக்கம் ஈர்த்து வெற்றி கண்டிருக்கிறார் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.<br />
<br />
இதுவரை 5 இந்தியர்கள் மட்டுமே இந்த பரிசை பெற்றிருந்த நிலையில் 6-வது நபராக ராமகிருஷ்ணன் சேர்ந்துள்ளார். ஏற்கனவே விருது பெற்ற வர்களில் சர்.சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகியோர் தமிழர்கள். ராமகிருஷ்ணனும் இதில் இடம் பிடித்துள்ளார்.<br />
<br />
மற்ற இந்தியர்கள் வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்றிருக்கும் நிலையில் தமிழர்கள் 3 பேருமே அறிவியல் துறை ஆராய்ச்சி மூலம் நோபல் பரிசு பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
இதில் ராமகிருஷ்ணன் வேதியியல் துறையில் பெற்றுள்ளார். ராமகிருஷ்ணனின் ஆராய்ச்சி சாதாரணமானது அல்லது. உலகில் மிக உயரிய ஆராய்ச்சிகளில் இதுவும் ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.<br />
<br />
பலகோடி செல்களை கொண்டதுதான் நமது உடல். மைக்ராஸ்கோப் மூலம் மட்டுமே பார்க்கக்கூடிய இந்த செல்லில் நியூகிளியஸ், நியூகிளியோலஸ், விசிகில், வேக்குல் உள்ளிட்ட 13 வகையான பொருட்கள் உண்டு. அதில் ரிபோசம் என்ற பொருளும் ஒன்று.<br />
<br />
இந்த பொருட்கள் ஒவ் வொன்றும் ஒவ்வொரு வேலையை செய்கின்றன. அதில் ரிபோசம் புரோட்டீனை உற்பத்தி செய்யும். இதுதான் உடல்கூறு வேதியியல் பணிகளை கட்டுப்படுத்துகிறது. இது எப்படி வேலை செய்கிறது என்பதை கண்டுபிடித்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்க முடியும்.<br />
<br />
எனவே ரிபோசம் செயல் பாட்டை ராமகிருஷ்ணன் யாடோயோனத், தாமஸ் ஸ்டீட்ஸ் ஆகிய விஞ்ஞானிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.<br />
<br />
அதில் ரிபோசம் செயல்பாட்டை முழுமையாக கண்டுபிடித்து அது தொடர்பான முப்பரிமாண வரை படத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.<br />
<br />
ரிபோசம் 25 நானோ மீட்டர் அளவு கொண்டது. அதாவது 1 மில்லி மீட்டரில் 10 லட்சம் பங்கில் ஒன்றுதான் 25 நானோ மீட்டர். இவ்வளவு குறுகிய அளவுள்ள பொருளின் பணியை துல்லியமாக கணித்து முப்பரிமாண படம் உருவாக்கி இருப்பது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. எனவேதான் 3 விஞ்ஞானிகளுக்கும் உலகில் உயரிய விருதான நோபல் பரிசை வழங்கி இருக்கிறார்கள்.<br />
<br />
ராமகிருஷ்ணனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் சிதம்பரம். அங்குள்ள அக்ரகாரத்தில் அவரது வீடு உள்ளது. பள்ளி பருவத்திலேயே சிறந்த மாணவராக திகழ்ந்து உள்ளார்.<br />
<br />
1952-ம் ஆண்டு பிறந்த ராமகிருஷ்ணன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.யூ.சி. படித்துள்ளார். குஜராத் மாநிலம் பரோடா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. படித்தார். அடுத்து அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்காக சென்றவர் ஓகியோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்றார்.<br />
<br />
அடுத்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றியதுடன் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். பின்னர் யேல் பல்கலைக்கழகம், புரூக்கெலன் தேசிய ஆய்வுக்கூடம், யாத் பல்கலைக்கழகம் ஆகிய வற்றிலும் பணியாற்றினார்.<br />
<br />
1999-ம் ஆண்டு இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்த அவர் அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதில் ரிபோசம் பற்றி தனது குழுவினருடன் 9 ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதில்தான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்து உள்ளது.<br />
<br />
ராமகிருஷ்ணன் 1977-ம் ஆண்டில் இருந்து இதுவரை 95 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டு உள்ளார். ரிபோசம் பற்றி மட்டும் 3 கட்டுரைகள் எழுதி உள்ளார்.<br />
<br />
நோபல் பரிசு கிடைத்து இருப்பது பற்றி ராமகிருஷ்ணன் கூறியதாவது:-<br />
<br />
வேதியியல் ஆராய்ச்சியில் பங்களிப்பு செய்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். இத்துறையில் நோபல் பரிசு பெறும் மூவரில் என்னையும் தேர்ந்தெடுத்தது வியப்பு அளிக்கிறது. இந்த பரிசால் நான் கவுரவிக்கப்பட்டதாக உணர்கிறேன்.<br />
<br />
மரபணுக்களில் உள்ள தகவல்கள் மூலம் புரதங்களை எவ்வாறு உருவாக் குவது என்பதை கண்டறிந்துள்ளேன். இந்த கண்டு பிடிப்பு பல நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்க உதவும். இந்த பரிசுக்காக எனது பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர் களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.<br />
<br />
சிதம்பரத்தில் உள்ள அனந்தீஸ்வரர் கோவில் அக்ரஹாரத்தில் எங்கள் வீடு உள்ளது. 3 வயது வரை சிதம்பரத்தில் இருந்தேன். அதன் பிறகு எனது தந்தைக்கு பரோடாவில் வேலை கிடைத்ததால் எனது பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பை பரோடாவில் படித்தேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தையுடன் சிதம்பரத்தில் உள்ள பிறந்த வீட்டை சென்று பார்த்தேன்.<br />
<br />
எனது மகள் டாக்டராகவும், மகன் இசைக்கலைஞராகவும் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.<br />
<br />
இந்திய அறிவியல் துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக உணர்கிறேன். இந்திய அரசு அடிப்படை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். அதன் மூலம் சுகாதாரம், தொழில் நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்.<br />
<br />
இவ்வாறு அவர் கூறினார்.Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7732127279361482.post-87852086284754379332009-10-07T03:48:00.000-07:002009-10-07T03:51:31.197-07:00தமிழருக்கு நோபல் பரிசு - வேதியியல்தமிழ்நாடு சிதம்பரத்தில் பிறந்த டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
Born in 1952 in Chidambaram, Tamil Nadu, Ramakrishnan completed his PhD in Physics in 1976 from Ohio University, US.<br />
<br />
He is the Group Leader at the Structural Studies Division, MRC Laboratory of Molecular Biology, Cambridge, UK.<br />
<br />
செய்தி: நன்றி: <a href="http://news.rediff.com/report/2009/oct/07/ramakrishnan-wins-chemistry-nobel.htm">Rediff.com</a><br />
<br />
UK based Indian origin scientist Venkatraman Ramakrishnan has won the 2009 Nobel Prize for Chemistry along with American Thomas A Steitz and Isreali scientist Ada E Yonath.<br />
<br />
The trio were awarded for their study of the structure and function of the ribosome, one of life's core processes.<br />
<br />
Ribosomes produce proteins, which in turn control the chemistry in all living organisms. As ribosomes are crucial to life, they are also a major target for new antibiotics.Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com0