Monday, April 27, 2009

கருணாநிதியின் பல்டி - சீசன் 2

ஜெ. தனி ஈழம் அறைகூவல் விடுத்ததும் அடுத்து என்ன செய்யலாம் என்றிருந்த கருணாநிதி திடுமென்று வீட்டில் கூட சொல்லாமல் கொள்ளாமல் அண்ணா சமாதியில் சென்று உண்ணாவிரதம் என உட்கார, தமிழகத்தில் அனைத்து கடைகளும் அடைப்பு, பஸ் நிறுத்தம் என கடந்த 5 நாட்களுக்குள் இரண்டாவது முறையாக மக்களுக்கு தவிப்பு.

இது மாதிரி தினமும் ஒரு சீன் போட்டுக் கொண்டிருந்தால் நாற்பதும் நாமமே! திங்களன்று காலை எத்தனை மக்கள் தங்கள் அலுவல், வேலை, தொழில், கடை, கல்லூரி என துவங்கியிருப்பார்கள் ? பொதுமக்களுக்கு தொல்லை தரும் எந்த போராட்டமும், சீனும் இனி வேகாது.

இந்த சீசன் 2 ஸ்டண்டிற்கு இன்றைக்கு திருப்பூரிலும் பொள்ளாச்சி மீட்டிங்கிலும் ஜெ. வின் ரியாக்ஷன் என்ன என பார்ப்போம். பாவம் அவரும் போகுமிடமெல்லாம் 'கருணாநிதி' கருணாநிதி என கூவுகிறார். அதற்கு பதில் சொல்லி போட்டி மீட்டிங்குகள் நடத்த கருணாநிதிக்கு உடல் நலமில்லாத நிலையில் 2ஆம் கட்ட தலைவர்களும் திமுகவில் இல்லாதது நல்ல சவால் இல்லை.


இன்றைக்கு மன்மோகனுக்கும் சோனியாவிற்கும் கருணாநிதி அளித்த டென்ஷனுக்கு (படிக்க ஜூ.வி கவர் ஸ்டோரி) - நிச்சயம் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் அம்மா பக்கம் தான் என தெரிகிறது.



எதை கேட்டு கருணநிதி விரதத்தை கைவிட்டாரோ அந்த போர் நிறுத்தத்தை இலங்கை ராணுவம் நிச்சயம் தொடரப்போவதில்லை. From http://defence.lk

'Media illusionists' twist government statement: 'No Ceasefire offered'

Sri Lankan security forces will continue with the humanitarian operations to rescue the remaining 15,000 -20,000 people held hostage by LTTE while avoiding the use of heavy caliber weaponary as a strict measure coinciding with its 'Zero civilian casualty policy (ZCC)', a defence official stated refuting some immediate media jargons made misinterpreting the government declaration as a 'cession of hostilities' cum 'ceasefire'.

"This is a crude and an unethical way of media 'reportash', a blatant twist of the original statement, perpetrated to motivate the hell-bent terrorist sympathizers cum political clouts" the official said describing the logic behind the Government decision an exhibit of its grave concern to avoid any form of collateral-damage while surging into the remaining 10sq.km swathe of coast, South of Valayarmadam and Vellamullivaikkal.

"This is the same and an extension of what the security forces have been continuing since the fall of Mullaittivu, as terrorists resorted to taking thousands of civilians as hostage", the official said.

"Security forces are now reaching victory, 'combat mission reaching its conclusion' and in no form will leave a breather for the internationally banned terrorist outfit or its leaders who are much wanted for thousands of war crimes and crimes against humanity" the official said.

Further commenting on the government decision the official said, this decision was no reaction to any 'international pressure' but solely timed with the success of the ongoing 'Worlds largest hostage rescue operation'.



கடைசியில் கஷ்டம் என்னவோ (இலங்கை மற்றும் தமிழ்நாட்டு) தமிழ் மக்களுக்குத்தான் !

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் குருஜியின் விடியோ
நன்றி: சென்னை ஆன்லைன்

Thursday, April 16, 2009

காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. அதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரிக்கான வேட்பாளர்கள் :-

சிவகங்கை- ப.சிதம்பரம்,
ஈரோடு - இளங்கோவன்,
திண்டுக்கல் - சித்தன்,
தேனி - ஆரூண்,
கோவை - பிரபு,
மயிலாடுதுறை -மணிசங்கர் அய்யர்,
சேலம் - தங்கபாலு,
திருப்பூர் - கார்வேந்தன்,
ஆரணி - கிருஷ்ணசாமி,
கடலூர் - அழகிரி,
திருநெல்வேலி - ராமசுப்பு,
தென்காசி - வெள்ளைப் பாண்டியன்,
விருதுநகர் - சுந்தரவடிவேலு,
திருச்சி - சாருபாலா தொண்டைமான்


காஞ்சிபுரம் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார்.
புதுச்சேரியில் நாரயணசாமி காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

செய்தி: நன்றி: தினமலர்

Wednesday, April 15, 2009

இலங்கையில் தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டம் - நிஜமா ?

இன்றைய தினகரனில் வந்துள்ள முதல் பக்க போட்டோ இது. நெஜமாவே இலங்கைதானா இது ? தினகரனுக்கு மட்டும் இந்தப் படம் எங்கிருந்து கிடைத்தது ? நேற்று எடுத்த படமா இது ? யாரை திருப்திப்படுத்த இந்த போட்டோ ?



இலங்கையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்திருந்தது. இதனால் தமிழர்கள் உற்சாகத்துடன் புத்தாண்டைக் கொண்டாடினர். வவுனியாவில் உள்ள கோயிலில் நடந்த தேரோட்டத்தில் தேங்காய் உடைத்து மக்கள் வழிபடுகின்றனர்.

படம் நன்றி: தினகரன்

Tuesday, April 14, 2009

பா.ஜ.க வேட்பாளர்கள் - தென்சென்னை: இல.கணேசன்

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தென் சென்னையில் இல.கணேசனும், ராமநாதபுரத்தில் திருநாவுக்கரசரும் போட்டி.


தென்சென்னை இல.கணேசன்: தஞ்சாவூரில் பிறந்த இவர், அரசு பணியில் இருந்தார். அதை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணியாற்றினார். 2002ல் இருந்து 2006 வரை கட்சியின் தேசிய செயலாளர், துணை செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்தார். மாநில தலைவராக உள்ளார்.

ராமநாதபுரம் திருநாவுக்கரசர்: எம்ஜிஆர் அமைச்சரவையில் இளம் வயதில் அமைச்சர் பதவி வகித்தவர். அதிமுகவில் இருந்து வெளியேறி எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற கட்சியை நடத்தினார். 2002ம் ஆண்டு பா.ஜ.வில் இணைந்தார். வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் மத்திய இணை அமைச்சராக பணியாற்றினார்.

கன்னியாகுமரி- பொன் ராதாகிருஷ்ணன்(57): நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் வசிக்கிறார். பி.ஏ.,பி.எல். படித்துள்ளார். பா.ஜ. மாநில துணை தலைவர். மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார்.


கோவை- ஜி.கே.எஸ் செல்வக்குமார்(47): கோவை கணபதியை சேர்ந்த இவர், பா.ஜ. மாநில செயலாளராக பதவி வகிக்கிறார். விவசாயம் மற்றும் சிறு தொழிற்சாலை நடத்தி வருகிறார். எம்.ஏ., எம்.பில்., படித்துள்ளார். மாநில ஜிம்னாஸ்டிக் சங்க தலைவராக பதவி வகிக்கிறார்.



நீலகிரி - குருமூர்த்தி (28): பி.காம்., டி.ஐ.எஸ்.எம். படித்துள்ளார். மாவட்ட பா.ஜ. இளைஞரணி தலைவர். ஊட்டி, குன்னூர் ஆகிய பகுதிகளில் தேயிலை தூள் விற்பனை நிலையம் வைத்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பெட்போர்டு பகுதியில் வசித்து வருகிறார்


ஈரோடு - என்.பி.பழனிச்சாமி (48): வழக்கறிஞர். ஈரோட்டை அடுத்த நசியனூர் மேற்குபுதூரை சேர்ந்தவர். பா.ஜ. தேசிய பொதுக்குழு உறுப்பினராகவும், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராகவும் உள்ளார். கொங்கு வேளாள கவுண்டர்.

பொள்ளாச்சி - வி.எஸ்.ரமேஷ் (44): பி.ஏ., படித்துள்ளார். விவசாயம் மற்றும் தனியார் பள்ளி தாளாளர். கொங்கு வேளாளர். சொந்த ஊர் ஆனைமலையை அடுத்த சேத்துமடை. பா.ஜ. மாவட்ட தலைவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிகளை வகித்துள்ளார்.

புதுச்சேரி - எம்.விஸ்வேஸ்வரன் (53): எம்.காம் படித்துள்ளர். புதுச்சேரி லாஸ்பேட்டை பிருந்தாவனத்தை சேர்ந்தவர். பாஜ மாநில தலைவராக உள்ளார். முதலியார். மாநில பொதுச் செயலாளர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.


வடசென்னை தமிழிசை சவுந்திரராஜன்:காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரிஅனந்தனின் மகள். மருத்துவரான இவர் 1999 முதல் பா.ஜ.வில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் மருத்துவர். சிறந்த பேச்சாளர். மாநில பொதுச் செயலாளராக உள்ளார்.


கிருஷ்ணகிரி - ஜி. பாலகிருஷ்ணன்(53): ராயக்கோட்டை அருகில் உள்ள வீராதானூர். சிறு தொழிற்சாலை அதிபர். சிறுதொழிற்சாலை கூட்டமைப்பு சங்க முன்னாள் தலைவர், பா.ஜ. கட்சியில் மாவட்ட பொருளாளர்.



திருச்சி - லலிதா குமாரமங்கலம் (53): மறைந்த மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் தங்கை. கடந்த தேர்தலில் புதுச்சேரியில் தோல்வியடைந்துள்ளார்.


வேலூர் - ஏ.கே. ராஜேந்திரன் (52) : பி.காம். படித்துள்ளார். பேக்கரி மற்றும் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். தற்போது மாநில செயலாளர்.



பீட்டர் மாமா சொன்னது:


‘‘பி.ஜே.பி. வேட்பாளர் பட்டியல்ல, சிபிஆர் பெயரை காணோமே...’’ நண்பர் கேட்டார்.

‘‘அவருக்கும் மாநில தலைவருக்கும் இடையே நீண்ட நாளா இருந்துவந்த மோதல் காரணமா சீட் கொடுக்காம, கோவை மாவட்ட தலைவருக்கு சீட் கொடுத்திருக்காங்க... இல.கணேசன் முதல்முறையா தேர்தல்ல போட்டி போடுறார். அதைவிட எச்.ராஜா, சுகுமாறன் நம்பியார் ஆகியோருக்கும் சீட் இல்லை. அதை கவனிச்சீங்களா...’’

‘‘என்ன காரணம்னு நீயே சொல்லிடு பீட்டர்...’’

‘‘தேர்தல்ல கோடி கோடியா கொட்டினாலும் ஜெயிக்க முடியாது... எதுக்கு பணத்தை வீணாக்கணும்னுதான் அவங்க சீட் வேணாம்னு சொல்லிட்டாங்களாம்... கூட்டணி ஏதாவது செட்டாயிருந்தா, போட்டி போட்டு சீட் கேட்டிருப்பாங்க...’’ என்று பீட்டர் மாமா சொன்னார்.


செய்தி: நன்றி: தினகரன்

Monday, April 6, 2009

கலைஞரையும் எம்.ஜி. ஆரையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டேன் - கி.வீரமணி

கலைஞர் அவர்களையும் எம்.ஜி.ஆர் அவர்களையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டேன் என்று பழைய சம்வத்தை எடுத்துக்கூறி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்க மளித்து உரையாற்றினார்.

முரசொலி அறக்கட் டளை சார்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு கலைஞர் விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி 31.03.09 சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற் றது. இந்நிகழ்ச்சியிலே திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய முன்தினத் தொடர்ச்சி வருமாறு:-

அருமை நண்பர் சோலையை அடையா ளம் கண்டிருக்கின்றீர் கள் நண்பர் யோகா ஒளிப்பட நிபுணர். அவர் மற்றவர்களைப் படம் எடுத்து படம் எடுத்துப் பழக்கப்பட்டவர்கள். இன்றைக்குத்தான் அவர் கேமரா இல்லாமல் உட் கார்ந்திருக்கின்றார்.

அவரை மற்றவர்கள் படமெடுக்கின்ற காட்சியைப் பார்க்கின்ற பொழுது எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ஒரு தோழனை, ஒரு தொண்டனை அடையாளம் காட்டுவதிலே கலைஞருக்கு நிகர் கலைஞரே தவிர, வேறு யாரும் கிடையாது. (கைதட்டல்)

அந்த வகையிலே சோலையை அவர்கள் எப்படி அற்புதமாகக் கண்டறிந்தார்களோ அதே போல நடிகர் தியாகு அவர்கள். அவருக்கு முரசொலிமாறன் அவர்களு டைய பெயராலே அமைந்த அந்த சிறப்பு விருதினை அவர்களுக்கு இங்கே தந்திருக்கின்றார்கள். இவர்கள் எல்லாம் நன்றி செலுத்துகின்ற நேரத்திலே ஒரு செய்தியை சொல்ல விழைகின்றேன். சிறிது நேரம் எடுத் துக் கொண்டாலும் அவைகளைப் பதிவு செய்ய வேண்டும்.

திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம். ஜி. ஆர் பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி ஒரு குறிப்பிட்ட காலம் நடத்தி விட்டார். அவர் நடத்தி முடித்து வெற்றிபெற்றவுடனே அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
இதுவரையிலே பல பேருக்கு இது தெரியாத செய்தி. ஆனால் இரண்டு சாட்சியங்கள் இங்கே இருக்கின்றார்கள். எனவே அதைச் சொல்லி இதைப் பதிய வைக்க வேண்டியது மிக முக்கியம்.

அவருக்கே ஒரு எண் ணம் தோன்றியது. தான் அ.தி.மு.க கட்சியைத் தொடங்கி தி.மு.க வைப் பிளந்தது நியாயமல்ல என்று உறுத்திய காரணத்தாலே மீண்டும் கலைஞர் அவர்களோடு சேர வேண்டும் என்று எம். ஜி. ஆர் அவர்கள் விரும்பினார். அதற்கு யாரைப் பிடிக்க வேண்டும் என்று பார்த்தார். யார் சொல்ல வேண்டும்? யார் முயற்சி எடுக்க வேண்டும்?
இனி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரே ஒரு அமைப்பு தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்த நேரத் திலே என்னைப் பார்க்க எம்.ஜி.ஆர் அவர்கள் ஒருவரை அனுப்பினார்.

நேரே வந்து பார்க்க வேண்டும். இந்த காரியத்திற்காக என்று சொல்லி அவரிடம் சென்று இதைச் சொல்லி நீங்கள் அழைத்து வாருங்கள் என்று சொன்னார்கள்.

அப்படி வந்தவர் யார் என்றால், எழுத்தாளர் சோலை இதோ இங்கு இருக்கின்ற சோலை தான் அன்றைக்கு விடுதலை அலுவலகத்திற்கு வந்தார். இதுவரை நான் யாரிடத்திலும் சொல்ல வில்லை.

சோலை அவர்களை வைத்துக் கொண்டு சொல்கின்றேன். அவரே நேற்று சொன்னார் - என் சார்பாக நீங்கள் பேசி விடுங்கள். இதையும் பதிவு செய்து விடுங்கள். திராவிடர் இயக்க வரலாறு தெரியாதவர் கள் எல்லாம் இன்றைக்கு ஏதேதோ உளறிக்கொண்டு இருக் கின்றார்கள். அவர்களுக்கு இது தெரிய வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லுங்கள் என்று சொன்னார்.
உடனடியாக நான் எம்.ஜி.ஆர் அவர்களை முதல் முறையாக இராமா வரம் தோட்டத்திற்குப் போய் சந்திக்கின்றேன். எம்.ஜி.ஆர் இரண்டரை மணி நேரம் விளக்கமாகப் பேசினார். சிற் றுண்டி அளித்து பேசிக் கொண்டிருந்தார். சோலை அவர்கள் வெளியே இருந்தார். இவர்கள் இவ்வளவு நேரம் பேசுகிறார்களே என்று எண்ணிக்கொண்டிருந்தார். இவரைப் பார்த்த சில நண்பர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர் எதற்கு இங்கே வந்தார் என்று கேட்டார்கள்.

அதற்கு சோலை பதில் சொல்லியிருக்கிறார். அவர் ஏதோ கல்வி நிலையம் சம்பந்தமாக வந்திருக்கின்றார் என்று இவர் சொன்னார்.

பேசிக்கொண்டிருக்கின்ற பொழுது எம். ஜி. ஆர் சொன்னார், கலைஞர் அவர்களிடம் சொல்லுங்கள் - நான் கலைஞர் அவர்களைத்தான் என்றைக்கும் தலைவராக ஏற்றுக் கொண்டிருக் கின்றவன்.

எப்படியோ சூழ்நிலை - பிரிந்துவிட்டோம். ஆனால் இரு இயக்கங்களும் ஒன்றாக வேண்டும். நானும் அவரை எதிர்த்தேன். வெற்றி பெற்றுவிட்டேன். என்னுடைய மனம் - ஈகோ தன்முனைப்பு முடிந்துவிட்டது. இதற்கு மேல் அதைத் தொடரவேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை.

எனவே நீங்கள் சென்று கலைஞரிடம் சொல்லுங்கள்.

நம்மிடையே பிரிவு தேவையில்லை. மீண்டும் ஒன்றாகலாம் என்று சொன்னார்.
நான் நேரடியாக கலைஞர் அவர்களிடம் சென்றேன். கலைஞர் அவர்கள் அப்பொழுது எதிர்கட்சித் தலைவர்.

கலைஞர்அவர்கள் ஆலிவர் சாலையில் உள்ள அவர்களுடைய வீட்டிலே இருக்கின்றார் கள். நான் அப்பொழுது வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்பொழுது கலைஞர் அவர்களிடத்திலே சொன்னேன்.

நீங்கள் கலைஞர் அவர்களைப் பார்த்து விட்டு எனக்கு தொலைபேசியிலே பதில் சொன்னால் போதும் என்று எம்.ஜி.ஆர் தான் சென்னார்.

நல்ல பதிலைச் சொல் லுங்கள் என்றும் சொன் னார். கலைஞர் அவர்களிடத்திலே இந்த செய்திகளை எல்லாம் நீண்ட நேரம் நான் சொன்னேன். அதைக் கேட்டுவிட்டுச் சொன்னார்கள்.
இதுவரை இது போன்று சிலர் முயற்சி எடுத்திருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். அதில் நீங்கள் எந்த பட்டியலோ - அது எனக்குத் தெரியாது.
இருந்தாலும் உங்களுடைய முயற்சி என்பதை நான் வரவேற்கின்றேன். நல்லெண்ணத்தோடு அவர்கள் சொல்லியிருந் தால் அதை நான் மறுக்கத் தயாராக இல்லை. அதை எப்படிக்காட்டு வது? எப்படிச் சொல்லுவது? என்று சொன்னால் நாளைய மறுநாள் சட்டமன்றத்திலே எதிர்கட்சித் தலைவருடைய உரை இருக்கிறது. அதிலே எம்.ஜி.ஆர். அவர்களை நான் கடுமையாகத் தாக்கிப் பேசப்போவதில்லை.

ஆகவே, அந்த ஒரு குறிப்பிலேயே அவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லி எம்.ஜி.ஆர் அவர்களிடத்திலே இதைச் சொல்லச் சொன்னார்கள்.

நான் தொலைபேசி மூலமாக சோலை அவர்களிடத்திலே சொல்லி விட்டு ஊருக்குப் புறப் பட்டேன். பிறகு பல சூழல்கள். அந்தச் சூழல்கள் நழுவிப் போனது.

ஒரு முறை இருவரும் சந்தித்தார்கள். கலைஞர் அவர்கள் கொள்கைக் காக எப்படி இருக்கக் கூடியவர்கள்? அவர் தலைமைப் பதவியை விரும்பியவர் அல்ல என்ற ஒரு செய்தியை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒருமுறை கலைஞரும், எம்.ஜி.ஆரும் சந் தித்தார்கள். இருவரும் சந்தித்துப் பேசிய நேரத்திலே கூட நீங்களே தலைவராக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொன்னார். அதற்கு கலைஞர் ஒப்புக்கொண்டார். அடுத்தபடியாக நீங்கள் உருவாக்கிய கொடி கூட இருக்கலாம். அதைப்பற்றி ஒன்று மில்லை. நீங்கள் முதலமைச்சராக இருங்கள். அதைப்பற்றி ஒன்றுமில்லை. ஆனால் ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பு கொண்டு வந்தீர்களே - அந்த ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பை நீங்கள் கைவிட வேண்டும் அதற்குத் தயாரா? என்று எம். ஜி.ஆர். அவர்களிடத்தில் அன்றைக்கும் கொள்கைக்காக கேட்டவர் தான் நமது கலைஞர் அவர்கள்.

இதற்குப் பிறகு ஒப்புக் கொண்டு வந்தார். ஆனால் பல்வேறு சூழ்நிலைகள் - அது நடக்கவில்லை. அன்றைக்கு அது நடந்திருந்தால் இன்றைக்கு ஒரு திருப்பமே திராவிடர் இயக்கத்தில் ஏற்பட்டிருக்கும் என்பது மிக முக்கியமானது. அதற்குக் காரணமானவர் சோலை அவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

என்றாலும் கூட, திராவிடர் இயக்கம் என்று சொன்னால் இன்றைக்கு ஒன்றுதான் என்று சொல்லக்கூடிய அளவிலே சமுதாயத்திற்கு திராவிடர் கழகம். அரசி யலிலே திராவிட முன்னேற்றக் கழகம். அதற்குரிய போர்க்கருவிகள் தான் விடுதலை- அதற்குரிய போர்க்கருவி தான் முரசொலி. அதை ஆதரிக்கக்கூடிய நாளேடுகள் இருக்கின்றன. இறுதியிலே ஒன்றைச் சொல்ல விழைகின்றேன். எங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் விருது கொடுத்திருக்கின்றீர்கள்.
உங்கள் அனுமதியோடு ஒன்றே ஒன்றை நான் சொல்ல விரும்புகின்றேன்.

தமிழ் ஏடுகளிலே பெரும்பாலும் இதழாளர்கள் நம்மவர்கள் பெரும்பாலும் பயிற்சி பெற்றவர்களாக இல்லை.

அந்தப்பயிற்சியைப் பெறக்கூடிய அளவிலே பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் - நீங்கள் உருவாக்கிக் கொடுத்த பல்கலைக் கழகம்.

எனவே அந்தப் பல் கலைக் கழகத்திலே பெரியார் பெயராலே தமிழ் இதழியலாளர்கள் பயிற்சி என்ற ஒன்றை துவக்கி - அந்தப் பயிற்சிக்கு சோலை போன்றவர்கள் மற்றும் பல அனுபவம் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இவர்களை எல்லாம் பயன்படுத்தி - அந்த அமைப்பிற்கு புரவலராக கலைஞர் அவர்கள் இருப் பார்கள். ஏனென்றால் இந்தியா வினுடைய மூத்த பத்திரிகையாளர் கலைஞர் அவர்கள் இருக்கின்றார்கள்.

செய்தி: நன்றி: Viduthalai

Sunday, April 5, 2009

தி.மு.க. வேட்பாளர்கள் பயோ-டேட்டா



லோகசபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுளளனர். அவர்களின் பயோ டேட்டா வருமாறு:

மதுரை
பெயர்: மு.க.அழகிரி (58)
தொழில்: அரசியல்
படிப்பு: பி.ஏ.,
ஜாதி: இசை வேளாளர்
கட்சி பொறுப்பு: தென் மண்டல அமைப்புச் செயலர்.
குடும்பம்: மனைவி காந்தி, மகள்கள் கயல்விழி, அஞ்சுக செல்வி, மகன் தயாநிதி அழகிரி.


நாமக்கல்
பெயர்: எஸ்.காந்திசெல்வன்
ஊர்: போதுப்பட்டி, நாமக்கல்
ஜாதி: கொங்கு வேளாள கவுண்டர்
தொழில்: லாரி தொழில், முழு நேர அரசியல்
அரசியல் அனுபவம்: 1984ல் நாமக்கல், அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் நடந்த மாணவர் மன்ற தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு சேர்மனாக தேர்வு செய்யப்பட்டு, தன் அரசியல் பயணத்தை துவக்கினார். 1986 - 91 நாமக்கல் நகராட்சி கவுன்சிலர்1987ல் நகர வங்கி (அர்பன் பேங்க்) இயக்குனர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இருந்துள்ளார். ஸ்டாலின் ஆதரவாளர்.


கிருஷ்ணகிரி
பெயர்: இ.ஜி.சுகவனம்
சொந்த ஊர்: எமக்கல்நத்தம்
வயது: 53
படிப்பு: டி.பார்ம்.,
ஜாதி: 24 மனை தெலுங்கு செட்டியார்
தொழில்: மெடிக்கல் ஸ்டோர், விவசாயம் மற்றும் முழு நேர அரசியல்.
அரசியல் அனுபவம்: 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு வென்றார். 2004ம் ஆண்டு கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் நஞ்சேகவுடுவை எதிர்த்து போட்டியிட்டு வென்றார்.


தர்மபுரி
பெயர்: தாமரைச் செல்வன்
வயது: 45
சொந்த ஊர்: இலக்கியம்பட்டி
கல்வி: பி.எஸ்சி., பி.எல்.,
ஜாதி: வன்னியர்
தொழில்: சென்னை ஐகோர்ட் வக்கீல். ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி லட்சுமணனிடம் ஜுனியராக பணியாற்றியவர்.
அரசியல்: தர்மபுரி ஒன்றிய முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர்.


திருவண்ணாமலை
பெயர்: வேணுகோபால்
வயது: 73
படிப்பு : எஸ்.எஸ்.எல்.சி.,
தொழில்: விவசாயம்
அரசியல் அனுபவம்:1967ல் திருவண்ணாமலை காங்கிரஸ் ஒன்றிய சேர்மன். 71ல் தி.மு.க.,வில் சேர்ந்து தட்ராம்பட்டி சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ., ஆனார். திருப்பத்தூர், வந்தவாசி லோக்சபா தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி. கடந்த 15 ஆண்டுகளாக மாவட்ட அவைத் தலைவர்.


அரக்கோணம்
பெயர்: எஸ். ஜெகத்ரட்சகன்
வயது : 59
சொந்த ஊர் : வழுதாவூர். தற் போது சென்னை அடையா ரில் வசித்து வருகிறார்.
கல்வி : எம்.ஏ., பி.லிட்., பிஎச்.டி.,
ஜாதி : வன்னியர்
தொழில் : பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் பல பொறியியல் கல்லூரிகள், நிகர் நிலைப் பல்கலைக் கழகம் நடத்தி வருகிறார்.
அரசியல் அனுபவம் : மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் மிகவும் நெருக்கமாக இருந்தவர். ஆர்.எம். வீரப்பனுக்கு நெருக் கமானவர். 1999 - 2004ல் அரக்கோணம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001ம் ஆண்டு வீரவன்னியர் பேரவை துவக்கினார். ஜனநாயக முற்போக்கு கழகம் கட்சியை துவக்கி நடத்தினார். கடந்த வாரம் தி.மு.க.,வில் இணைந்தார்.


நாகை
பெயர் : ஏ.கே.எஸ்.விஜயன் (48)
படிப்பு: பி.ஏ.,
சாதி: ஆதிதிராவிடர்
தொழில்: விவசாயம்
கட்சி பதவி: ஆரம்ப காலத்தில் இருந்து தி.மு.க., உறுப்பினர், சித்தமல்லி ஒன்றிய துணைச் செயலர், கோட்டூர் ஒன்றிய செயலர். 2004ல் இருந்து நாகை மாவட்ட தி.மு.க., செயலர். 1999ல் தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் எம்.பி., யானார். 2004ல் கம்யூ., கூட்டணியில் மீண்டும் வெற்றி பெற்றார். மூன்றாவது முறையாக மீண்டும் தி.மு.க.,வில் சீட் வழங்கப்பட்டுள்ளது.
முகவரி: சித்தமல்லி, மன்னார்குடி தாலுகா


பொள்ளாச்சி
பெயர் : கு.சண்முகசுந்தரம்
சொந்த ஊர் : பெருமாள்புதூர்
பிறந்த தேதி : 12.08.1970 (39)
கல்வித்தகுதி : பி.இ.,
சாதி: கொங்கு வேளாள கவுண்டர்
கட்சியில் பொறுப்பு : 20 ஆண்டுகளாக அடிப்படை உறுப்பினர்.
தொழில் : திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி.
பிற தகவல் : அமைச்சர் நேரு சகோதரரின் கல்லூரி தோழன் மற்றும் தொழில் பங்குதாரர்.


கள்ளக்குறிச்சி

பெயர்: ஆதி.சங்கர் (51)
படிப்பு: பி.எஸ்சி., பி.எல்.,
ஜாதி: முதலியார்
தொழில்: வக்கீல்
கட்சி பதவி: மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப் பாளர்,தலைமை செயற்குழு உறுப்பினர்.தற்போது, தலைமை தீர்மானக் குழு உறுப்பினர்
வகித்த பதவிகள்: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்,1999-04 ஆண்டு வரை கடலூர் தொகுதி எம்.பி.,
ஊர்: திருக்கோவிலூர்.


கன்னியாகுமரி
பெயர்: ஹெலன் டேவிட்சன் (38)
படிப்பு : எம்.எஸ்சி., பி.எட்.,
தொழில்: வீட்டு நிர்வாகம் மற்றும் கணவரின் டைல்ஸ் கடைக்கு இயக்குனர்.
ஜாதி: ஆர்.சி., கிறிஸ்தவ நாடார்
ஊர்: குருசடி
கட்சி பொறுப்பு: ஐந்து ஆண்டுகளாக மகளிர் தொண்டரணி குமரி மாவட்ட அமைப்பாளர். கணவர் டேவிட்சன் நாகர்கோவில் நகர தி.மு.க., இளைஞரணி துணை செயலராகவும், 51வது வட்ட செயலராகவும் உள்ளார். மாமனார் லாரன்ஸ், அண்ணாதுரை காலம் முதல் தி.மு.க.,வில் பணியாற்றியவர்.


ஸ்ரீபெரும்புதூர்
பெயர்: டி.ஆர்.பாலு
வயது: 67
படிப்பு: பி.எஸ்சி., எல்.சி.இ.,
சொந்த ஊர்: தலச்சேரி, திருவாரூர் மாவட்டம்.
அரசியல்: ஐந்தாவது முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். மிசா காலத்தில் ஒரு ஆண்டு சிறையில் இருந்தார். 1986 - 1992ல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். 1996, 98, 99 ஆகிய தேர்தல்களில் தென் சென்னையில் போட்டியிட்டு, பெட்ரோலியத்துறை, சுற்றுச்சூழல், கப்பல் துறைகளில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.


மத்திய சென்னை
பெயர்: தயாநிதி
வயது: 42
படிப்பு: பி.ஏ.,
தொழில்: மீடியா அதிபர்
அரசியல்: மறைந்த முரசொலிமாறனின் மகன். 2004ல் தகவல் தொழில்நுட்பத் துறையில் மத்திய அமைச்சராகப் பணியாற்றி உள்ளார்.


ராமநாதபுரம்
பெயர்: சிவக்குமார் (எ) ஜே.கே.ரித்தீஷ்குமார் (36)
தொழில்: நடிகர்
படிப்பு: பி.சி.இ., (பி.இ.,)
ஜாதி: மறவர்
ஊர்: மணக்குடி
கட்சி பொறுப்பு: ராமநாதபுரம் 23வது வார்டு பிரதிநிதி.


தூத்துக்குடி
பெயர் : எஸ்.ஆர்.,ஜெயதுரை(41)
தொழில்: சென்னை தி.நகரில் சித்தா ஆயுர்வேத இயற்கை யுனானி மருத்துவமனை வைத்துள்ளார்.
படிப்பு: பி.எஸ்சி., விலங்கியல். இயற்கை மருத்துவம் மற்றும் யோகாவில் முதுகலை பட்டய படிப்பு (பி.ஜி.டி. ஒய்.என்.,)
ஜாதி: இந்து நாடார்
ஊர்: தூத்துக்குடி மாவட்டம் ஏரலை அடுத்த மொட்டச்சி குடியிருப்பு (எ) மங்களபுரம்.
கட்சி பொறுப்பு: 1988 முதல் தி.மு.க., இளைஞரணியில் இருந்து வருகிறார். கிளைக்கழக தலைவராக இருந்து தற்போது கட்சியின் பொதுக் குழு உறுப்பினராக உள்ளார்.
குடும்பம்: மனைவி செல்வி, மகள்கள் சுதாராணி(9), சுஜா(7), ரோஜாஸ்ரீ (4).


தென் சென்னை
வேட்பாளர் பெயர்: ஆர்.எஸ்.பாரதி,
பெற்றோர் பெயர்: ராமன்-விஜயலட்சுமி.
பிறந்த தேதி : 15.08.1947 (சுதந்திர தினம் அன்று)
கல்வி தகுதி: பி.ஏ., பி.எல்.,
மனைவி பெயர்: டாக்டர் சம்பூரணம்.
பிள்ளைகள் : இரண்டு மகன்கள்.
முகவரி : எண்: 18, 29வது தெரு, தில்லை கங்கா நகர், ஆதம்பாக்கம்.
கட்சி பணி: கடந்த 1965ம் ஆண்டு கட்சியில் இணைந்தார், மாணவர் அணி செயலர், சட்டத் துறை செயலர் மற்றும் பல.
வகித்த பதவி : கடந்த 1986ம் ஆண்டு முதல் ஆலந்தூர் நகராட்சித் தலைவர்.


பெரம்பலூர்
பெயர்: து.குமரேசன் (எ) நெப்போலியன்
சொந்த ஊர்: திருச்சி மாவட் டம் லால்குடி அடுத்த பெருவளநல்லூர்.
கல்வி: பி.ஏ., (வரலாறு)
ஜாதி: ரெட்டியார்
குடும்பம்: பெற்றோர் துரைசாமி-சரஸ்வதி, மனைவி ஜெயசுதா, மகன்கள் தனுஷ்(11), குணாள் (8)
தொழில்: திரைப்பட நடிகர் மற்றும் சென்னை ஜீவன் டெக்னாலஜி சாப்ட்வேர் நிறுவன அதிபர்.
அரசியல் அனுபவம்: 2001-06ம் ஆண்டுகளில் சென்னை வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ.,


கரூர்
பெயர்: கே.சி.பழனிச்சாமி
பிறந்த தேதி: 24-4-1935
பிறந்த ஊர்: கரூர் மாவட்டம் காவாலிப்பாளையம்
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு
ஜாதி: 24மனை தெலுங்கு செட்டியார்
குடும்பம்: பெற்றோர் சின்னப்பனார்- வெங்கிட் டம்மாள், மனைவி பா.அன்னம்மாள், மகன் கே.சி.பி.சிவராமன் (தொழிலதிபர்), மகள் பி.கலையரசி. உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி.
தொழில்: கரூர் மாவட்டம் மாயனூரில் பாலித்தீன் சிமென்ட் பைகள் தயாரிக்கும் கே.சி.பி., பேக்கேஜிங் லிமிடெட் நிறுவனம். புதுச்சேரி மாநிலம் திருவண்டார்கோவிலில் காகித ஆலை.
அரசியல் அனுபவம்: 1971ம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் கம்யூ., உறுப்பினர். 1971 முதல் தி.மு.க., உறுப்பினர். 1986-1991 வரை கரூர் நகராட்சித் துணைத் தலைவர். 1990, 1997 இருமுறை பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அறங்காவலர் குழுத்தலைவர். 2004ல் கரூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.,யாகியுள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக தி.மு.க., சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ளார்.


தஞ்சாவூர்
பெயர்: பழனிமாணிக்கம்.
பிறந்த தேதி : 15.08.1950
பிறந்த ஊர்: புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணி.
ஜாதி: கள்ளர்
படிப்பு: எம்.ஏ., பி.எல்.,
குடும்பம்: பெற்றோர் சுப்பையா வன்னியர் - மரகதம் அம்மாள், மனைவி - மகேஷ்வரி, மகள் - பிரீத்தி எம்.பி. பி.எஸ்., படித்து வருகிறார்.
அரசியல் அனுபவம்: கல்லூரி பருவத்தில் இருந்து தி.மு.க., உறுப்பினர். தஞ்சாவூர் வக்கீல் சங்க செயலர், தி.மு.க., மாநில மாணவரணி செயலர், விவசாய அணி துணைச் செயலர், மத்திய அரசின் வேளாண் நிலைக்குழு தலைவர், தி.மு.க., லோக்சபா கொறடா.தற்போது மத்திய நிதித்துறை இணையமைச்சர்.1996ல் காங்., வேட்பாளர் துளசியய்யா வாண்டையாரையும், 1998ல் ம.தி.மு.க., வேட்பாளர் எல்.கணேசனையும், 1999, 2004ல் தேர்தல்களில் அ.தி.மு.க., வேட்பாளர் தங்கமுத்துவையும் வென்று எட்டாவது முறையாக மீண்டும் தேர்தல் களத்தில் உள்ளார்.


திருவள்ளூர்(தனி)
பெயர்: காயத்ரி
வயது: 31
பிறந்த தேதி:13.10.1978
ஜாதி: ஆதிதிராவிடர்
சொந்தஊர்: பூந்தமல்லி
கல்வி: எம்.ஏ., பி.எல்., எம்.பி.ஏ., (படிக்கிறார்)
பொறுப்பு:பூந்தமல்லி நகராட்சி தி.மு.க., வார்டு கவுன்சிலர்
குடும்பம்: கணவர், மூன்று மகள்கள் கணவர் பெயர்:ஸ்ரீதரன் (தி.மு.க., பூந்தமல்லி ஒன்றிய துணை செயலர்)
கணவர் தொழில்: செங்கல் சூளை உள்ளிட்ட தொழில்கள்.


நீலகிரி
பெயர்: ராஜா
வயது: 46
பிறந்த தேதி:10-5-1963
சொந்த ஊர்: பெரம்பலூர் அருகே வேலூர் கிராமம்.
பெற்றோர்: ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை
மனைவி: பரமேஸ்வரி
மகள் : மயூரி
ஜாதி: ஆதிதிராவிடர்
கல்வித்தகுதி: எம்.ஏ., எம்.எல்.,
தொழில்: வக்கீல்
அரசியல் அனுபவம்: 1996ல் நடந்த லோக்சபா தேர்தலில் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக அரசியல் பிரவேசம். கன்னி முயற்சியிலேயே வெற்றி. 1998ல் அ.தி.மு.க., வேட்பாளரிடம் தோல்வி. 1999ல் மீண்டும் எம்.பி.,யானார். வாஜ்பாய் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர். 2001ல் சுகாதாரத் துறை இணை அமைச்சராக மாற்றம். 2006ல் வனத்துறை, தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்.

செய்தி: படம்: நன்றி: தினமலர்