Monday, March 31, 2008

பாமகவே ஆட்சிக்கு வரட்டும்..கருணாநிதி

தமிழகத்தில் பாமகவே ஆட்சிக்கு வந்து கள்ளுக்கடை, பிராந்திக் கடைகளை ஒழித்துக் கட்டி கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களைப் பிடித்து எண்ணைக் கொப்பரையில் போட்டுத் தண்டிக்கட்டும். எல்லாப் பெருமையும் அவர்களையே சேரட்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை,

கேள்வி: 2011ல் பா.ம.க. தலைமையிலான ஆட்சி அமையும் என்றும் அந்த ஆட்சியின் முதலமைச்சர் போடுகின்ற முதல் கையெழுத்து மது விலக்கு கொண்டு வரும் ஆணையாகத் தான் இருக்குமென்றும் பாமக தலைவர் கூறியுள்ளதைப் பற்றி?

பதில்: அந்த வாய்ப்பு அவருக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான், நாங்கள் மது விலக்கு பற்றி அவர் பேசுவதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களே ஆட்சிக்கு வந்து கள்ளுக்கடை, பிராந்திக் கடைகளை ஒழிக் கட்டும். கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களைப் பிடித்து எண்ணைக் கொப்பரையில் போட்டுத் தண்டிக்கட்டும். எல்லாப் பெருமையும் அவர்களையே சேரட்டும்.

கேள்வி: மத்திய பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.60,000 கோடி பயிர்க்கடன் ரத்து. மயக்க மடைந்த விவசாயிக்கு முகத்தில் தெளிக்கும் தண்ணீரைப் போன்றதென்றும், இதனால் எந்தப்பலனும் இல்லை என்றும் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?

பதில்: மயக்கம் அடைந்தவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவனை எழுப்புவது தான் முதல் கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்றிய மத்திய அரசைப் பாராட்டுவது தான் மனிதநேயப் பண்ணாடு. அதனால் எந்தப் பலனும் இல்லை என்று ஒரு 'டாக்டர்' சொல்லக்கூடாது!. மருத்துவ துறையின் பாலபாடமே 'முதல் உதவிதானே''!!

கேள்வி: திமுக அமைச்சர்கள், சரித்திரம் தெரியாமல் பேசுகிறார்கள் என்று ஒரு தலைவர் கூறியிருக்கிறாரே?

பதில்: திமுக அமைச்சர்களுக்கு மட்டுமல்ல, திமுகவின் சாதாரண தொண்டனுக்கும் கூட சரித்திரம் மிகத் தெளிவாகவே தெரியும்; உதாரணம் வேண்டுமானால்- மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற ஆணையிட்டதற்காகப் பிரதமர் பதவி யிலிருந்து இறங்கும் நிலை பெற்ற வி.பி.சிங்குக்கு தமிழ்நாட்டில் திமுக சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கி மாநில முழுவதும் பிரமாண்டமான கூட்டங்களை நடத்திய போது, வி.பி.சிங் கூட்டத்திற்கு யாரும் போகக் கூடாது, வீட்டிலிருந்து கூட அவரை யாரும் பார்க்கவும் கூடாது. கதவையும் திறக்க கூடாது என்று ஆணையிட்டு அறிக்கை விட்ட ஜனநாகத் தலைவர் ஒருவரும் தமிழகச் சரித்திரத்தில் இடம் பெற்றவர்தான் என்பதை அவர்கள் அறிவார்கள்.

கேள்வி: அண்மையில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ஏக்கருக்கு ரூ. 7,000 உயர்த்தித் தர வேண்டுமென்று தமிழகக் காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சொல்லியிருக்கிறாரே?

பதில்: தமிழக அரசு தன்னால் முடிந்த அளவிற்கு நிவாரணத் தொகையை உயர்த்தியுள்ள நிலையில், மத்திய அரசில் பிரதான ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர், மத்திய அரசிடமும், பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் வலியுறுத்தி மத்திய அரசின் மூலமாக அவர் கோருகின்ற தொகையைப் பெற்றுத் தந்தால் அவர் தெரிவித்த ஆலோசனையை சுலபமாக நிறைவேற்றிட இயலும். சொல்வது சுலபம், செய்வது கடினம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

நன்றி: Thatstamil

Thursday, March 27, 2008

தினமலர் ஆசிரியர், பதிப்பாளருக்கு 3 மாதம் சிறை - மாஜிஸ்திரேட் கோர்ட் தீர்ப்பு


பொய்ச் செய்தி வெளியிட்டதற்காக தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு 3 மாதம் சிறை


சென்னை, மார்ச் 28: பொய்ச் செய்தி வெளியிட்ட வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கும், வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2001ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பிட் அடிக்க தலைமை ஆசிரியர் சேதுராமன் உதவி செய்ததாகவும், அதனால் அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டதாகவும் அந்த பத்திரிகையில் வெளியான செய்தி பொய்யானது என்று கூறி தலைமை ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் பாக்கியஜோதி முன்பு தாக்கல் செய்த மனுவில் அவர் கூறியதாவது:

தினமலர் வெளியிட்ட பொய்ச்செய்தி, என்னை பெரிதும் பாதித்துவிட்டது. அது பொய்ச் செய்தி என்பதை சுட்டிக்காட்டி 2001 ஏப்ரலில் பதிவுத் தபால் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், தினமலர் ஆசிரியர் பதிலே சொல்லவில்லை.

செய்தி முழுவதும் பொய்யானது. என்னை யாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யவில்லை. பொதுமக்களிடம் எனக்கு இருந்த மரியாதையை குலைக்க உள்நோக்கத்துடன் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணை முடிந்து செவ்வாயன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தினமலர் பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இருவருக்கும் தலா 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.

“தினமலர் பத்திரிகை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது; எனினும் மேல்முறையீடு செய்ய அவகாசம்அளிக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணமூர்த்தியும் லட்சுமிபதியும் இப்போது கைது செய்யப்பட வேண்டியதில்லை“ என்று மனுதாரரின் வக்கீல்கள் சரவணன், ஏகாம்பரம் ஆகியோர் குறிப்பிட்டனர்.

செய்தி: படம்: நன்றி:: Dinakaran




{{{{{{{ The Hindu Report }}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

3-month jail for Tamil daily Editor, publisher

CHENNAI: A Magistrate Court in Egmore has sentenced Dinamalar Editor R. Krishnamurthy and its publisher R. Lakshmipathi to undergo three months’ simple imprisonment in a defamation case filed by a retired headmaster of a government school.

A. Sethuraman, who worked as headmaster of the Government Boys Higher Secondary School, Oothukottai, filed a complaint against Dinamalar for publishing a news item on March 16, 2001 stating that he helped students to indulge in copying in the public examination.

Following the publication of the report, he was placed under suspension.

The news item was wrong, malicious and baseless, he contended.

News: The Hindu

Wednesday, March 26, 2008

இந்தியாவில் குடியும் செக்ஸும்தான் கொண்டாட்டம் ?!

குடியை எதிர்த்து போர்க்கோலம் பூண்டுவரும் மருத்துவர் தமிழ்குடிதாங்கியவர்கள் (பாராட்டுக்கள் !) ஏன் இன்னும் சமூகத்தின் இன்னொரு நச்சான செக்ஸ் சம்பந்தப்பட்ட சமூக சீர்கேடுகளை எதிர்த்து போராட்டம் துவங்கவில்லை ? விரைவில் துவங்க வேண்டுகிறோம்.

{{{{{{{{{{{ ஜக்கி வாசுதேவ் கட்டுரை ஆரம்பம் }}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

கொண்டாட்டம் என்றாலே குடியும் செக்ஸும்தான் என்று இளைஞர்கள் நினைக்கும் அபாயம் இங்கே நேர்ந்துவிட்டது.

இந்தியா அண்மைக்காலமாக புதிய கலாசாரத்தைச் சந்தித்துக் கொண்டு இருப்பதை மறக்கக்கூடாது.

சில வருடங்களுக்கு முன்பெல்லாம், திருமணமான இளம் தம்பதிகள் நள்ளிரவில் தனியே கொண்டாட்டங்களுக்காகப் போனதில்லை. குடித்துவிட்டு ஆட்டமும் பாட்டமுமாக இருக்கும் இளைஞர்களை சாலைகளில் அவர்கள் எதிர்கொண்டதில்லை.

சுலபமாக எங்கும் மது கிடைக்க அரசாங்கமே வழி செய்திருக்கிறது. கொள்கைகளைவிட வணிகமே பிரதானம் என்று அமெரிக்க வழியில் இந்திய அரசும் இறங்கிவிட்டது.

முன்பு குடிப்பவர்கள் தாழ்வாகக் கருதப்பட்டார்கள். இப்போது குடிக்க மறுப்பவர்கள், வாழ்க்கையை ரசிக்கத்
தெரியாதவர்கள் என்று ஏளனமாகப் பார்க்கப்படுகிறார்கள்.

{{{{{{{{{{{ }}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

ஆண்களைத் தூண்டும் விதத்தில் தங்கள் உடல் பாகங்களை வெளிக்காட்டும் உடைகளைப் பெண்கள் அணிந்து வருவதும் புதிய கலாச்சாரத்தில் நாகரிகமாகக் கருதப்படுகிறது.

{{{{{{{{{{{{{{ }}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

படித்தவர்களும் சமூகத்தில் மேல்தட்டில் இருக்கும் வசதியானவர்களும் ஒரு புதிய கலாசாரத்தை இங்கே கொண்டுவரப்பார்க்கிறார்கள். மொத்த ஜனத்தொகையில் அவர்கள் மிக் சிறிய சதவிகிதம் தான். இதை அனுபவிக்க இயலாமல் விடுபட்டவர்கள்தாம் பெரும்பான்மை.

அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம்கூட முழுமையாகக் கிடைக்காமல் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்களின் பார்வையில் இது எப்படித் தோன்றும்? சமூகத்தின் தராசுத் தட்டுகள் சமமாக இல்லாது போகும்போது இருப்பவர்களை இல்லாதவர்கள் பிரமிப்பும், இயலாமையும் பொறாமையுமாகப் பார்க்கிறார்கள். குடிபோதையில் இருக்கும் போது கட்டாயத்தின் பேரில் அடக்கிவைத்த உணர்ச்சிகள் பீறிட்டுவிடுகின்றன.

மொத்த ஜனத்தொகையும் இந்தக்கலாசாரத்துக்குப் பழக்கமாகும் வரை இதுபோன்ற அசம்பாவிதங்கள் (அண்மையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது மும்பை, கொல்கத்தா, போன்ற பல இந்திய நகரங்களில் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் நிகழ்ந்தது வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டது.) இருக்கத்தான் செய்யும் . இதைக் கவனத்தில் கொண்டுதான் பெண்கள் நடந்துகொள்ளவேண்டும்.

ஒவ்வொரு மனிதனையும் அழுக்காறு, வன்முறை போன்ற தேவையில்லாத பகுதிகள் மூடியிருக்கின்றன. கவனமாக அவற்றைக் களைந்து எடுத்துவிட்டால் அவனுடைய வாழ்க்கை மரியாதைக்கு உரியதாகிவிடும்.

அதனால்தான் தியானத்தை நான் தீவிரமாகப் பரிந்துரைக்கிறேன். வெளிச் சூழ்நிலைகளின் திடீர்த் தூண்டுதல்களால் அலை பாயாத மனம் வேண்டும் என்றால் தியானம் அவசியம். மனிதர்கள் அனைவரும் ஆழ்ந்த சிந்தனைகள் கொண்டவர்களாக தியான நிலையில் இருந்தால் இந்த அவலங்கள் நேராது.

விஷப் பாதையைத் தவிர்க்க அமுதூட்டும் தியான வழிக்கு வாருங்கள் !
.... அமுதம் அருந்துவோம்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

( நன்றி: ஆனந்த விகடன் பிப்ரவரி 20, 2008 இதழ்)

http://www.vikatan.com/av/2008/feb/20022008/av0202.asp

Monday, March 24, 2008

தசாவதாரம - படத்தில் கருணாநிதி, ஜெயலலிதா, திருமாவளவன

கமல் 10 வேடங்களில் நடிக்கும் `தசாவதாரம்' படத்தில் கருணாநிதி, ஜெயலலிதா, திருமாவளவனின் அனல் பறக்கும் உரையும் இடம்பெறுகிறது


படம நன்றி: http://kamalhaasan.files.wordpress.com

கமல் பத்து வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் படம் நாடெங்கும் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் காட்சிகளும் கமலின் வித்தியாசமான வேடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் பணிகள் நடக்கின்றன.

பாடல் கேசட் வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இவ் விழாவுக்கு நடிகர் ஜாக்கிஷானை அழைத்துள்ளனர். அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, மம்முட்டி உள்ளிட்ட இந்திய முன்னணி நடிகர்களும் பங்கேற்கிறார்கள். இதற்கிடையில் தசாவதாரம் படத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் தோன்றும் வகையில் சில காட்சிகளை சேர்க்க முயற்சி நடக்கிறது.

கமலின் பத்து வேடங்களில் ஒரு வேடம் விஞ்ஞானி. இக்கேரக்டரில் நடிக்கும் கமல் புதிய கண்டுபிடிப்பை உலகுக்கு அறிமுகம் செய்கிறார். இதற்காக அவருக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமெரிக்கா ஜனாதிபதி ஜார்ஜ்புஷ் முன்னிலையில் பாராட்டு விழா நடப்பது போலவும் அதில் முதல்-அமைச்சர் கருணாநிதி பங்கேற்பது போலவும் காட்சிகள் இணைக் கப்படுகின்றன.

ஜெயலலிதா ஒரு கமலுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவது போன்ற காட்சியை இணைக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இவற்றை எப்படி காட்சிகளாக எடுத்து சேர்க்கிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் அனல் பறக்கும் மேடைபேச்சும் இப்படத்தில் இடம்பெறுகிறது.

நன்றி: மாலைமலர்

Wednesday, March 19, 2008

சென்னையை சீரழிக்க வரும் டைம்ஸ் ஆஃப் இண்டியா

புலி வருது புலி வருது கதையாக புலி வந்தே விட்டது. இனி மவுண்ட்ரோடு மஹாஹிண்டுவிற்கு புளியைக் கரைக்கும்.



என்ன கழுத.. இனிமே சென்னையிலும் குடியும் கூத்தும் அரைகுறை ஆடைப் பெண்களின் படங்களும் போட்டால்தான் அது பத்திரிக்கை என்ற கலாச்சாரம் பரவும். குடி பார்களுக்கு 12 மணிக்குமேல் அனுமதி இல்லையா - TOI தன் பங்கை செயலாற்றி வக்காலத்து வாங்கி கட்டுரை பதியும். டிஸ்கோதேக்களுக்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறாரா..இல்லையா என்பது வேறு. TOI நிச்சயம் இந்த மாதிரி சமாச்சராங்களுக்கு வக்காலத்து வாங்கி நாட்டில் என்னமோ குடியும் செக்ஸும் இல்லையென்றால் தனிமனிதனுக்கு உணவு கிடைக்காத லெவலில் TOI போராடும். அப்பப்போ சென்னை பற்றிய சாக்கடை/ டிராபிக்/மெட்ரோ ரயில் என எதையாவது பற்றி செய்தி போட்டு 'பாருங்க நாங்க வந்தப்புறம் தான் அரசாங்கமே மக்கள் பிரச்னையை கவனிக்குதுன்னு' விளம்பர செய்திகளும் வரும்.

செய்தியே இல்லாமல் சும்மா விளம்பரங்களும், படங்களும், சென்னை டைம்ஸ் என்ற இணைப்பில் யார் யார் மேல்தட்டு குடிகாரர்கள் எந்த 5 நட்சத்திர ஹோட்டல் மற்றும் பார்களில் குடித்துவிட்டு ஆடிக்கொண்டிருந்தார்கள் போன்ற படங்களும், இந்தி நடிக/நடிகையரின் காதல் களியாட்டங்கள் போன்ற செய்திகளே இடம்பெறும். யார் இதற்கு ஆசிரியர் பொறுப்பு ஏற்கப்போகிறார்கள் என தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். தமிழ் நாட்டு ஆட்டோ கலாச்சாரத்திற்கு TOI தயார் செய்து கொள்வது நல்லது.

ஒரு வேளை தினகரன்/தமிழ்முரசு விநியோகஸ்தர்களே டைம்ஸையும் விநியோகிப்பார்களோ ? இது நிச்சயம் தினகரனுக்கு பின்னாளில் கேடு விளைவிக்கலாம். தினகரன் தினமலருக்கு செய்த Poachingங்கை TOI தினகரனுக்கு செய்து இழுத்து மூட எதை வேண்டுமானாலும் செய்யும். டைம்ஸ் ஆஃப் இண்டியா என அப்படியே தமிழாக்கம் செய்த பத்திரிக்கையை வெளியிடும் தில்லும் அதற்கு உண்டு. பெங்களூரில் அப்படித்தான் விஜய் டைம்ஸ் என்ற பத்திரிக்கையைக் கொன்று கன்னடத்திலே டைம்ஸ் ஆஃப் இண்டியா வெளியிட்டு வருகிறார்களாம்.

இந்தி ஆதிக்கம் நிச்சயம் அதன் கட்டுரைகளில் இருக்கும். பலவித இந்தி வார்த்தைகள் அதன் கட்டுரைத் தலைப்பில் தட்டுப்படும். ஆங்கிலம் மூலமாக இந்தியை திணிக்கும். இந்திக்காரர்களின் கலாச்சாரத்தை திணிக்க முயற்சிக்கும். இதற்கு தமிழ்பாதுகாப்பு காவலர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என போகப் போகத் தெரியும்.

சென்னையில் வந்து குவியும் வட இந்தியர்களுக்கு ரொம்ப குஷியாக இருக்கும். ஸ்ரீலங்காரத்ன மேதகு என்.ராம் என்ன செய்யப் போகிறார் ?

மாமனார் குடும்பத்து செய்தித்தாளுக்குப் போட்டியாக வரும் TOIக்கு எப்படி தயாநிதி மாறன் தனது பத்திரிக்கையில் விளம்பரம் பண்ண ஒத்துக்கொண்டார் ?

இந்த செய்திக் கட்டுரை பழசு என்றாலும் இதன் சாரம் இப்போதும் பொருந்தும்.

படம்: நன்றி: தினகரன் (20- 3 - 2008) சென்னை பதிப்பு

Tuesday, March 18, 2008

நடிகர் ரகுவரன் காலமானார்

நடிகர் ரகுவரன் காலமானார்

தமிழ் சினிமா ஒரு சிறந்த நடிகரை இழந்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். காதலன், முதல்வன், பாட்ஷா, ஆஹா என பல்வேறு படங்களில் குணசித்திர, வில்லன் நடிப்பால் பலரையும் கவர்ந்தவர்.
..............................................

சென்னை : பிரபல கோலிவுட் சினிமா வில்லன் நடிகர் ரகுவரன் காலமானார். ஏழாவது மனிதன் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரகுவரன் பல படங்களில் வில்லன் நடிகராக நடித்துள்ளார். நடிகை ரோகினியை இவர் திருமணம் செய்துள்ளார். சமீப காலமாக உடல்நல குறைவால் அவதி பட்டு வந்த இவர் சென்னை மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் மிகவும் உடல்நலம் மோசமானதை அடுத்து அவர் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

செய்தி: தினமலர்
.........................................

Photo: Telegucinemastills.com
Raghuvaran from Wikipedia

Notable films
Sila Nerangalil (2008)
Ashoka (2008)
Bheema (2008)
Marudhamalai (2007)
Sivaji: The Boss (2007) Special Appearance
Deepavali (2007) Guest Appearance
Evadeithe Nakenti (2007)
Sivappathigaram (2006)
Sachien (2005)
Mass (2004)
Jana (2004)
Johny (2003)
Thirumalai (2003)
Anjaneya (2003)
Bala (2002)
Roja Kootam (2002)
Dhosth
Dhaya
Majunu (2001)
Grahan (2001)
Aazad (2000)
Mugavari (2000)
Kandukondain Kandukondain (2000)
Parthen Rasithen (2000)
En Swaasa Katre (1999)
Amarkalam (1999)
Lal Baadshah (1999)
Mudhalvan (1999)
Anaganaga Oka Roju (1997)
Arunachalam (1997)
Nerrukku Ner (1997)
Ratchagan (1997)
Ullasam
Suswagatham (1997)
Rakshak (1996)
Badsha (1995)
Muthu (1995)
Kadhalan (1994)
Daivathinte Vikrithikal (1992)
Shiva (1990)
Anjali (1990)
Izzatdaar (1990)
Raja Chinna Roja (1989)
Lankeshwarudu (1989)
Rudranetra (1989)
Shiva (1989)
En Bommukutty Ammavukku (1988)
Jebu Donga (1987)
Pasivadi Pranam (1987)
Poovizhi Vasalile (1987)
Mr. Bharath (1986)
Odai Nathiyaakirathu (1983)
Rugma (1983)
Ezhavathu Manithan (1982)

பத்திரப் பதிவு: அந்நியன் விக்ரம் Vs சிவாஜி ரஜினி

‘சிவாஜி’ திரைப்படத்தில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதையே கருவாக வைத்து நடித்த ரஜினியா இப்படி நிலம் வாங்கியிருக்கிறார் ?

நிலப்பதிவுக்கு விக்ரமும் அவர் மனைவியும் அலுவலகத்திற்கு நேரில் வந்ததுடன் மூன்று மணி நேரம் அலுவலக வாசலில் காத்திருந்தனர்.
‘இப்படி நான் அரசை ஏமாற்ற விரும்பவில்லை. உண்மையைத்தான் குறிப்பிடுவேன்’ என்று கூறிவிட்டாராம்.

------------------------------------

ரஜினி....

இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல்லுக்கு மயங்காதவர்களே இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். சினிமா துறையில் தனது கடின உழைப்பின் மூலம் முன்னேறி இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருப்பவர். திரையுலகில் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் ரோல் மாடலாக விளங்குபவர். தனது சொந்த சம்பாத்தியத்தில் வரும் பணத்தில் இப்போது நில புலன்களை வாங்கத் தொடங்கியிருக்கிறார் ரஜினி. அவர் சொத்துகள் வாங்குவது சந்தோஷம்தான் என்றாலும் அதிலுள்ள வில்லங்கங்கள்தான் இப்போது சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கின்றன.

சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டிக்கு அருகில் உள்ள ஆரணிப் பகுதியில் சுமார் ஒன்பது ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார் ரஜினி. இந்த நிலம் வாங்கிய விவகாரம் ரஜினிக்கு மட்டுமின்றி, அதைப் பதிவு செய்து தந்த பதிவுத்துறை அதிகாரிக்கும் சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் பற்றி நாம் கேள்விப்பட்டதும் முதலில் ரஜினி அங்கு நிலம் வாங்கியிருப்பது உண்மையா? என்பதை அறிந்துகொள்ள, அது தொடர்பான பத்திரப் பதிவு ஆவணங்களைத் தேடத் தொடங்கினோம். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அந்த ஆவணங்கள் நம் கைக்குக் கிடைத்தன.

அந்த ஆவணங்களில் ரஜினியின் புகைப்படம் ஒட்டி, ‘சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த், வயது 57’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் 8.93 ஏக்கர் நிலத்தை இருபத்தொரு லட்ச ரூபாய்க்கு அதாவது ஒரு சென்ட் நிலம் இரண்டாயிரத்து முந்நூற்று ஐம்பத்தொரு ரூபாய்க்கு வாங்கியதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்காக ஒரு லட்ச ரூபாய்க்கு முத்திரைத் தாள்களும் ரஜினிகாந்த் பெயரிலேயே வாங்கப்பட்டிருந்தன. அதாவது, ஒரு ஏக்கர் நிலம் இரண்டு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு வாங்கியதாகக் காட்டப்பட்டிருந்தது.

ரஜினி நிலம் வாங்கியிருக்கும் பகுதியில் இப்போது ஒரு ஏக்கர் ஐம்பது லட்ச ரூபாய்க்கு (மார்க்கெட் விலை) விற்கப்படுகிறது. ரஜினி வாங்கியபோது அதாவது ஒரு வருடத்திற்கு முன்பு, அங்கு ஒரு ஏக்கர் இருபத்தைந்து லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க, ரஜினி மட்டும் எப்படி ஒன்பது ஏக்கர் நிலத்தை இருபத்தொரு லட்ச ரூபாய்க்கு வாங்கினார் என்பதைத் தெரிந்துகொள்ள நாம் அந்தப்பகுதியைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் சிலரிடம் விசாரித்தோம்.

அவர்கள் நம்மிடம், “ரஜினி இந்த இடத்தை ஒரு ஏக்கர் இருபத்தொரு லட்ச ரூபாய்க்குத்தான் வாங்கினார். அதாவது, அந்த ஒன்பது ஏக்கர் நிலத்தை ஏறக்குறைய இரண்டு கோடி ரூபாய் கொடுத்தே வாங்கினார். ஆனால், இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கணக்குக் காட்டினால் பத்திரப்பேப்பர்கள் மற்றும் பதிவுக்கட்டணம் மட்டுமே பதினெட்டு லட்ச ரூபாய் வரும். எனவேதான் இருபத்தொரு லட்ச ரூபாய்க்கு கணக்குக் காட்டிவிட்டு, மீதித் தொகையை கணக்கில் வராத பணமாகக் கொடுத்துவிட்டார். இது பலரும் செய்கிற ஒரு காரியம்தான் என்றாலும் ரஜினி செய்திருக்கக் கூடாதுதான்!’’ என்று கூலாகக் கூறிவிட்டுச் சென்றனர்.

‘சிவாஜி’ திரைப்படத்தில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதையே கருவாக வைத்து நடித்த ரஜினியா இப்படி நிலம் வாங்கியிருக்கிறார்? என்ற குழப்பத்தோடு நாம் தீவிர விசாரணையில் இறங்கினோம். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகாவிலுள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் கௌரி பென், சந்திரிகா, சங்கீதா ஆகியோருக்குச் சொந்தமாக 8.93 ஏக்கர் நிலம் இருந்தது. இவர்கள் அனைவரும் சென்னை பெரம்பூரை அடுத்துள்ள கொளத்தூர் அஞ்சுகம் நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். கௌரி பென்னின் கணவரான ராவ்ஜி பட்டேல் தனது பெயரில் மேற்படி நிலத்திற்கு பவர் வாங்கி வைத்திருந்தார். அவரிடமிருந்து அந்த நிலத்தை 4.1.2007 _ அன்று (வியாழக்கிழமை) தனது பெயருக்கு வாங்கியிருக்கிறார் ரஜினி. ராகவேந்திரர் பக்தரான ரஜினி, அவருக்கு உகந்த நாளான வியாழனன்று தான் பத்திரப்பதிவையும் செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்டா எண்: 471 மற்றும் 132_ல் சர்வே எண்கள்: 884_ல் 1.11 ஏக்கரும், 886/1_ல் 1.22 ஏக்கரும், 905/3_ல் 0.56 ஏக்கரும், 883/1ஏ_ல் 0.13 1/2 ஏக்கரும், 885/1_ல் 5.90 1/2 ஏக்கரும் சேர்த்து நிலத்தின் மொத்த பரப்பளவு 8.93 ஏக்கராகும். இந்த நிலப்பதிவு ஆரணியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் வசந்தகுமார் என்பவர்தான் இந்த நிலப்பதிவை ரஜினிக்கு செய்துகொடுத்திருக்கிறார். அதாவது, 4.1.2007_அன்று மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிவரையிலான நேரத்தில் ரஜினி ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று இந்தப் பத்திரப்பதிவைச் செய்ததாகக் குறிப்பிட்டு பதிவு செய்திருக்கிறார் பதிவுத்துறை அதிகாரியான வசந்தகுமார். ஆனால், மேற்குறிப்பிட்ட நாளிலோ அல்லது வேறு எந்த நாளிலோ ரஜினி இந்த நிலப்பதிவுக்காக ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரவே இல்லை என்பது தான் நமக்குக் கிடைத்த அதிர்ச்சியூட்டும் தகவல்.

நாம் நிலம் இருக்கும் பகுதிக்குச் சென்றோம். கன்னிகைப்பேர் கிராமத்தின் மார்க்கெட் பகுதியிலிருந்து தெற்காகச் செல்லும் வெங்கல் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சாலையின் இடதுபக்கமாக அமைந்துள்ளது ரஜினியின் நிலம். ஒன்பது ஏக்கர் நிலத்தில் முன்பகுதியிலுள்ள ஐந்து ஏக்கரில் நெல் நாற்று நடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மீதி நான்கு ஏக்கர் நிலம் அப்படியே கரம்பாகப் போடப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் நிலம் வாங்கி, விற்றுக்கொடுக்கும் மணி மேஸ்திரி என்பவரிடம் நாம் நிலம் வாங்க வந்திருப்பதாகக் கூறி பேச்சுக் கொடுத்தோம். “இந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலம் ஐம்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் ரூபாய் வரை போகிறது. அதாவது ஒரு ஏக்கர் அறுபது லட்சம் வரை விற்கப்படுகிறது. ரஜினி இந்த இடத்தை ஏக்கர் இருபத்தொரு லட்ச ரூபாய் கொடுத்துத்தான் வாங்கினார். ஆனால், இப்போது எல்லாமே இரண்டு மடங்கு விலை ஏறிவிட்டது. உங்களுக்கு நிலம் வேண்டுமென்றாலும் சொல்லுங்கள். நானே பேசி குறைந்த விலையில் வாங்கித் தருகிறேன்’’ என்று அவர் கூறியதை ரகசியமாக டேப் செய்துகொண்டு அங்கிருந்து நகர்ந்தோம்.

அந்த ஊரைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவரிடம் நாம் பேசியபோது, “ரஜினி அந்த இடத்தை இருபத்தொரு லட்ச ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறியிருக்கிறாரே? அவர் வாங்கி ஒரு வருடம்தான் ஆகிறது. அவர் அந்த நிலத்திற்குக் கொடுத்ததைப்போல் ஐந்து மடங்கு அதாவது ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன். நிலத்தை எனக்குத் தருகிறாரா, கேளுங்கள்? இவங்க பேசற தர்ம நியாயத் தத்துவமெல்லாம் சினிமாவோட சரி’’ என்று சலிப்போடு கூறினார்.

அடுத்து நாம் ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றோம். காலை பத்துமணிக்கே நாம் அங்கு சென்று காத்துக்கொண்டிருந்தோம். நம்மைப்போலவே அந்த அலுவலக வாசலில் திருமணத்தைப் பதிவு செய்ய வந்தவர்கள், நில சம்பந்தமான பரிமாற்றம் செய்ய வந்தவர்கள் என சுமார் முந்நூறுக்கும் மேற்பட்டோர் காத்துக் கிடந்தனர். அலுவலகத்தில் சார்பதிவாளர் ராஜசேகரனோ, உதவியாளர் வசந்தகுமாரோ அங்கில்லை. அந்த அலுவலகத்திற்குக் கொஞ்சமும் தொடர்பே இல்லாத பத்மநாபன் என்பவர்தான் படுபிஸியாக பதிவு செய்ய வருபவர்களிடம் டாக்குமெண்டுகளை வாங்குவது, அவர்களிடம் கைரேகை வாங்கி பதிவுக்கு நம்பர் அலாட் செய்வது என்று பம்பரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

நாம் அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது பத்மநாபன்தான் அங்கே ‘ஆல் இன் ஆல்’ என்று கூறியதுடன் எந்தெந்தப் பதிவுக்கு எவ்வளவு கட்டிங் என்பதையும் கறாராகச் சொல்லி வசூலித்து அதிகாரிகளிடம் ஒப்படைப்பாராம். அதுமட்டுமின்றி நிலப் பதிவுக்காக ரஜினியின் வீட்டிற்கு வசந்தகுமார் சென்ற போது அவருடன் உதவியாளராகச் சென்றவர் இந்த பத்மநாபன்தான். பதிவு முடிந்ததும் ரஜினியுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்ட பத்மநாபன், அதை அலுவலகத்திலுள்ள அனைவரிடமும் பெருமையாகக் காட்டிக்கொண்டிருந்தாராம்.

இப்படி அந்த அலுவலகம் அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்க, அதிகாரிகள் யாரும் வரவேயில்லை. அலுவலக வாசலிலோ ‘மதியம் 3.30 மணிக்கு மேல் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது’ என்று போர்டு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சார்பதிவாளர் ராஜசேகரனோ, 3.40க்குத்தான் அலுவலகத்திற்கே வந்தார். நாம் அவரிடம் ‘3.30 மணிக்கு மேல் பதிவு செய்யக்கூடாது என்பது அரசாணை. ஆனால் நீங்களோ 3.40க்குத்தான் அலுவலகத்திற்கே வருகிறீர்கள். பொது மக்கள் காலையிலிருந்தே காத்துக்கிடக்கின்றனர். மக்களுக்குப் பணிசெய்யத்தான் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் நூற்றுக்கணக்கான பொது மக்கள் உங்களுக்காகக் காத்திருப்பது நியாயமில்லையே. மேலும் பொது மக்களிடமிருந்து பணம் வசூலித்து அரசு கஜானாவில் கட்ட வேண்டிய முக்கியமான வேலையை யாரோ ஒரு தனிநபரிடம் ஒப்படைத்திருக்கிறீர்களே?’ என்று கேட்டபோது, “நான் ஊருக்குப் போயிருந்தேன். வரும்போது பஸ் லேட்டாகிவிட்டது’’ என்றவரிடம் நாம் ‘உதவியாளர் வசந்தகுமார் கூட வரவில்லையே?’ என்றோம். ‘‘அவரும் ஊருக்குப் போனார். அவருக்கும் பஸ் லேட்டாகி விட்டது’’ என்று கூறினார். நாம், தொடர்ந்து, ரஜினிகாந்த் நிலப்பதிவைப் பற்றிக் கேட்டோம்.

”நான் அன்று மருத்துவ விடுப்பில் போயிருந்தேன். எனவே அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. மறுநாள் நான் வேலைக்கு வந்ததும் ரஜினியின் நிலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். இன்றுவரை நான் அந்தப் பத்திரங்களை கண்ணால் கூடப் பார்க்கவில்லை’’ என்றார்.

‘ரஜினி நிலம் பதிவு செய்ததாகச் சொன்னார்களே, ரஜினி வந்ததாகச் சொன்னார்களா?’ என்றதும், ‘‘அப்படி எதுவும் சொல்லவில்லை’’ என்று அவர் கூறிவிட, பக்கத்தில் இருந்த பத்மநாபனிடம் நாம் ‘நீங்கள்தானே வசந்தகுமாருடன் சென்று ரஜினிக்கு நிலத்தைப் பதிவு செய்துகொடுத்துவிட்டு வந்தீர்கள்?’ என்றோம். அதற்கு அவர் “ஆம்’’ என்பதாகத் தலையாட்டிவிட்டு, ‘‘அதை எல்லாம் பெருசு பண்ணாதீங்க சார்’’ என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து நாம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வெளி ஆள் ஒருவர் கோலோச்சிக் கொண்டிருப்பது தொடர்பாக விஜிலன்ஸ் அதிகாரி ஒருவரிடம் தொடர்புகொண்டு புகார் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டோம்.

அடுத்து நாம் பதிவுத்துறை உயர்அதிகாரி ஒருவரைச் சந்தித்து ரஜினியின் பத்திரப்பதிவு நகல்களைக் காட்டிப்பேசினோம். அவர் நம்மிடம், “ஒருவரின் வீட்டிற்குச் சென்று பதிவு செய்து தரவேண்டுமானால், பதிவு செய்யப்படவேண்டிய நபர் இருபத்து நான்கு மணி நேரத்திற்கு முன் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு கடிதம் மூலம் அதைத் தெரிவிக்க வேண்டும். சார்பதிவாளர் அந்தக் கடிதத்தைப் பதிவு செய்துகொண்டு அதனடிப்படையில் அவருடைய வீட்டிற்குச் செல்ல வேண்டும். அவருடன் ஓர் உதவியாளரையும் அழைத்துச் செல்லலாம். அங்கு செல்லும் போது அலுவலகத்திலிருந்து வாக்குமூலப் பதிவேட்டையும் எடுத்துச்சென்று சம்பந்தப்பட்டவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து அவரிடம் கையெழுத்து வாங்குவதுடன், அவர் நல்ல மனநிலையில் இருக்கிறாரா? சுயநினைவுடன்தான் இதை எழுதிக்கொடுக்கிறாரா? என்பனவற்றையும் ஒரு மருத்துவர் முலம் உறுதி செய்துகொண்டு, அதையும் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் ஒரு துண்டுக் காகிதத்தில் சம்பந்தப்பட்டவரின் கைரேகையைப் பதிவுசெய்து கொண்டுபோய் அலுவலகத்தில் உள்ள கைரேகைப் பதிவேட்டில் ஒட்ட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கைரேகைப் பதிவேட்டை வெளியில் எடுத்துச் செல்லக் கூடாது.

மேலும் இப்படி வீட்டிற்குச் சென்று செய்யப்பட்ட பதிவை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தப் பதிவுக்கு விடுமுறைப்பதிவு என்று பெயர். அதாவது, அலுவலகப் பணிகள் பாதிக்கப்படாமலும் காலையில் அலுவலக நேரத்திற்கு முன்போ அல்லது மாலையில் அலுவலகப் பணிகள் முடிந்த பிறகு அதுவும் மாலை ஆறுமணிக்கு முன்பாகவோ அல்லது விடுமுறை நாட்களிலோதான் இந்தப் பதிவைச் செய்யவேண்டும். இந்த விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் அது சட்டப்படி தவறு!’’ என்றார் அவர்.

இந்த விடுமுறைப்பதிவு கூட உடல்நலம் குன்றி வெளியில் வர முடியாமல் இருப்பவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், வயதானவர்கள், வீட்டை விட்டே வெளியில் வராத கோஷா பெண்கள். சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ள வி.வி.ஐ.பி.களுக்கு மட்டுமே செய்து தரலாம். இதில் ரஜினியை வி.வி.ஐ.பி.யாக வைத்துக்கொண்டாலும் மேற்கூறிய எந்த விதிமுறைகளும் அவருக்கான பதிவில் பின்பற்றப்படவில்லை. மாறாக, ரஜினியே நேரில் வந்து பதிவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மிகப்பெரிய நடிகரான ரஜினி, அந்த அலுவலகத்திற்கு வந்திருந்தால் மக்கள் கூட்டம் அலைமோதியிருக்கும். அது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அதே நேரத்தில் 9.5.2007 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் பகுதியில் முதலியார்குப்பம் கிராமத்தில் நடிகர் விக்ரம் 2.88 ஏக்கர் நிலத்தை மார்க்கெட் விலையான 26,32,000 ரூபாய்க்கே வாங்கினார். அதாவது ‘பத்திரத்தில் மார்க்கெட் விலையைக் குறிப்பிடத் தேவையில்லை. பலமடங்கு குறைவான ‘கைடு லைன்’ விலையைக் குறிப்பிட்டாலே போதும். அதனால் பதிவுச் செலவு மிச்சமாகும்’ என்று பலர் கூறியும் அவர் மறுத்துவிட்டாராம்.

‘இப்படி நான் அரசை ஏமாற்ற விரும்பவில்லை. உண்மையைத்தான் குறிப்பிடுவேன்’ என்று கூறிவிட்டாராம். அந்த நிலப்பதிவுக்கு விக்ரமும் அவர் மனைவியும் அலுவலகத்திற்கு நேரில் வந்ததுடன் மூன்று மணி நேரம் அலுவலக வாசலில் காத்திருந்தனர். அங்கு பெரிய கூட்டமே கூடிவிட்டதுடன் எல்லாரும் விக்ரமுடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். விக்ரம் வந்ததற்கே அவ்வளவு கூட்டம் என்றால், ரஜினி வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?! அது மட்டுமின்றி விக்ரம் வாங்கிய நிலத்தில் ஐந்து பனைமரம், ஐந்து தென்னைமரம், ஒரு புளியமரம் ஆகியவை உள்ளன. அவற்றுக்கும் விலையைக் குறிப்பிட்டு பணம் கொடுத்த விக்ரம், தான் வாங்கிய நிலத்திற்கான மொத்தப் பணத்தையும் பத்திரத்தில் குறிப்பிட்டே வாங்கியிருக்கிறார். அதேநேரத்தில், ரஜினியின் நிலப்பதிவு விவகாரத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.

அலுவலகத்திற்கு வராமலேயே வந்ததாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது சட்டப்படி கிரிமினல் குற்றம். இந்தக் குற்றத்திற்காக இந்தப் பதிவைச் செய்துகொடுத்த பதிவுத்துறை அதிகாரி வசந்தகுமார் பணிநீக்கம் செய்யப்படுவதுடன் அவர் மீது கிரிமினல் வழக்கும் தொடரப்படும். காரணம், பதிவுத்துறையின் சாட்சியமே சட்டத்தின் முக்கிய சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதாவது, ஒருவர் பதிவுத்துறை அலுவலகத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் அவர் மீது மிகப் பெரிய கிரிமினல் குற்றம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் அந்த வழக்கு நிற்காது. அதே போல் இந்தச் சொத்து இவருடையதுதான் என்று பதிவாளர் பதிவு செய்தபிறகே ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. எனவேதான் பதிவாளர் பதவியை ‘பதிவாளர் நம்பிக்கை’ அதாவது ‘ரிஜிஸ்ட்ரார் ஆஃப் அஷ்யூரன்ஸ்’ என்று அழைக்கின்றனர். இந்தப் பதவியின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதன் விளைவாக, வழக்கில் சிக்கி பதவி இழந்தவர்கள் பலருண்டு.

உதாரணத்திற்கு 1991/96_ல் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா மயிலாப்பூரில் உள்ள அமிர்தாஞ்சன் பங்களாவை வாங்கினார். அவரது ஆட்சிக்குப் பிறகு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதில் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக ஒரு பிரிவும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பதிவு செய்திருக்கிறார் என்றும் வழக்குகள் போடப்பட்டன. அதேபோல் அந்த இடத்தைப் பதிவு செய்துகொடுத்த அப்போதைய வடசென்னை மாவட்டப் பதிவாளர் ராஜகோபாலனும் அப்போது பதிவுத்துறை ஆவணங்களை எல்லாம் சம்பந்தப்பட்ட ஒரு வங்கிக்குக் கொண்டு வந்து பதிவு செய்து கொடுத்தார். ஆனால், அந்தப் பதிவு பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்டதாகப் பதிவுசெய்துவிட்டார். இதனால் அந்த அதிகாரி மீது வழக்குப் போடப்பட்டதுடன் அவர் பணிநீக்கமும் செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே சம்பந்தப்பட்ட அதிகாரி ராஜ கோபாலன் இறந்தும் போய்விட்டார்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், ஜெயலலிதாவுக்கு மேற்படி நிலத்தை ராஜகோபாலன் பதிவு செய்து கொடுத்தபோது அவருக்கு உதவியாளராகப் பணியாற்றியவர்தான் இந்த வசந்தகுமார். எனவேதான் அதே பாணியில் ரெக்கார்டுகளை எல்லாம் ரஜினியின் வீட்டிற்கு எடுத்துச்சென்று பதிவு செய்துகொடுத்துவிட்டு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் குறித்து வைத்துள்ளார். இப்போது இது தொடர்பாக விஜிலன்ஸ் துறைக்கு புகார் போயிருக்கிறது. அதைத்தொடர்ந்து வசந்தகுமார் பதவி நீக்கம் செய்யப்படுவதுடன் அவர் மீது வழக்கும் போடப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த வழக்கு தொடர்பாக ரஜினியிடமும் விசாரணை நடத்தப்படுமாம். அதில், தான் அந்த நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ஆரணியிலுள்ள பத்திரப் பதிவு அலுவலகத்திற்குச் சென்று வந்தது உண்மைதான் என்பதை ஆதாரங்களோடு ரஜினி நிரூபித்துவிட்டால் எந்த விதமான பிரச்னையுமில்லை என்கிறார்கள்.

சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் பலருக்கு முன்மாதிரியாக விளங்கும் ரஜினி, இதுபோன்ற விஷயங்களிலும் மிகச் சரியாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே கோடிக்கணக்கான அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பு பொய்யாகாமல், தான் நடந்துகொண்டதாக ரஜினி கூறினால், அதையும் நாம் வெளியிடத்தயாராக இருக்கிறோம். இனி பதில் கூற வேண்டியது ரஜினிதான்!

நன்றி: குமுதம் ரிப்போர்டர் 20-03-2008

Monday, March 17, 2008

அரசு மகளிர் பள்ளியில் சானிடரி நாப்கின் வெண்டிங் மெஷின்

கிருஷ்ணகிரி அருகே அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் சானிடரி நாப்கின் வெண்டிங் மெஷின் வைக்கப்பட்டுள்ளதால் மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 570 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்ற னர். மாதவிலக்கு நாட்களில் மாணவிகள் படும் சிரமங்களை நிலையை அறிந்த Ôயுனிசெப்Õ நிறுவனம், மாதவிலக்கின்போது ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் முறைகள் குறித்து 570 பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கும், அதில் பயிலும் சில மாணவிகளுக்கு பயிற்சி அளித்தது. அத்துடன், Ôபயப்பட எதுவுமில்லைÕ என்ற சிறிய புத்தகத்தை அச்சிட்டு அனைவருக்கும் விநியோகித்தது.

நாப்கினை வாங்க கிராமபுற மாணவிகள் மட்டுமல்லாமல் நகரில் வாழும் மாணவிகள் கூட வெட்கப்படுகின்றனர். இந்நிலையை போக்க, பள்ளிகளிலேயே இவர்களுக்கு சானிட்டரி நாப்கின் குறைந்த விலையில் கிடைக்க தேவையான நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் சந்தோஷ்பாபு எடுத்தார்.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் முறையாக மேகலசின்னம்பள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான சானிடரி நாப்கின் வெண்டிங் மெஷினை வைத்துள்ளனர். இதில் 25 நாப்கின்கள் வைக்கப்படுகின்றன. நாள்தோறும் 20 நாப்கின்களை மாணவிகள் எடுத்து செல்கின்றனர்.

இந்த மெஷினில் ஒரு ரூபாய் நாணயம் இரண்டை போட்டால் ஒரு நாப்கின் வெளியே வரும். இந்த பள்ளியில் உள்ள மாணவிகள் மட்டுமின்றி அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகளும் இங்கு வந்து சானிடரி நாப்கின்களை எடுத்து செல்ல அனுமதிக்கின்றனர். மேலும், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரியூட்ட எரியூட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் முரளி கூறும்போது, சோதனைமுயற்சியாக எங்கள் பள்ளியில் இந்த சானிடரி நாப்கின் வெண்டிங் மெஷின் வைக்கப்பட்டுள்ளது. இது எங்கள் பள்ளி மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்றார்.

செய்தி, படம்: நன்றி: தினகரன் - சென்னை பதிப்பு 18-3-2008 பக்கம் 14

Friday, March 14, 2008

ராமதாஸ் ஒரு 'ஸ்பின் பெளலர்' : கருணாநிதி

பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு 'ஸ்பின் பெளலர்' மாதிரி.. அவர் வீசும் பந்து எங்கேயோ போய் 'பிட்ச்' ஆனாலும் சுற்றி, சுழன்று வந்து விக்கெட்டை எடுக்காமல் விடாது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

உரிமை, சண்டை, மிரட்டல், கெடு என்று ஆரம்பித்து மகா பல்டி, மெகா பல்டி அடித்து திடீரென ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதாக அறிவித்தார் ராமதாஸ்.

திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது என்ற ராமதாசின் இந்த முடிவை முதல்வர் கருணாநிதி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக முரசொலியில் அவர் எழுதியுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: மாநிலங்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளிடையே இறுதியாக ஒரு சுமூகமான முடிவு ஏற்படும் வகையில் முடிவெடுத்த பா.ம.க.வின் நிறுவன தலைவர் பற்றி?

பதில்: கிரிக்கெட் போட்டியில் சுழல் பந்து வீச்சாளர் பந்தை வீசும்போது, பந்து எங்கேயோ விழுவதைப்போலதான் தெரியும். ஆனால் அதன் பிறகு அந்த பந்து `ஸ்டம்ப்' மீது தாக்கி பந்து வீச்சாளருக்கு வெற்றியைத் தேடி தரும்.

கேள்வி: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக அணியிலே ஒரு இடம் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டதாக முதலில் செய்தி வந்தது. அதன் பின்னர் அந்த இடத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், ஆனால் அதற்காக அம்மையாருக்கு நன்றி என்றும் மதிமுக கூறியிருக்கிறதே?

பதில்: அம்மையாரின் அங்கீகாரமாவது கிடைத்ததே. அதற்காக நன்றி சொல்வது தவறா என்ன?

கேள்வி: நாடாளுமன்றத்தில் அவையையே நடத்த முடியாத அளவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்வதைப் பற்றி மக்களவைத் தலைவர் மனம் நொந்து போய், மக்களவை விதிகள் புத்தகத்தையே காந்தி சிலை முன்பு போட்டு கொளுத்துங்கள் என்று சொல்லி இருப்பது பற்றி?

பதில்: மகாத்மா காந்தியே மக்களவை தலைவராக இருந்தாலும் இப்படித்தான் சொல்லியிருப்பார்.

கேள்வி: ஜெயலலிதா பிறந்த நாள் பரிசு வழக்கில் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: ஜெயலலிதாவிற்கு இப்போது வயது 60, அவர் முதல்வராக பொறுப்பில் இருந்த போது தனது 44 வயதை கொண்டாடிய போது, அதாவது 16 ஆண்டுகளுக்கு முன் 1992ம் ஆண்டு அவருடைய பிறந்த நாளுக்காக 57 நபர்களிடம் இருந்து 89 வரைவு காசோலைகள் மூலம் ரூ.2 கோடி பரிசுப் பணம் வந்ததாகவும், முதல்வர் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா அந்த பணத்தை தனது சொந்த கணக்கிலே முதலீடு செய்ததாகவும், கூறி சிபிஐதான் இந்த வழக்கை தொடர்ந்தது.

16 ஆண்டு காலமாக இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி கால நீடிப்பு பெற்று வருகிறார்கள். அந்த வழக்கில்தான் தற்போது மேலும் இந்த வழக்கை நீடிக்கச் செய்யும் வகையில் அந்த கட்சியை சேர்ந்த செங்கோட்டையன் தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவிலேதான் தற்போது சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவிற்கு அமெரிக்காவில் இருந்து வந்த ரூ.1 லட்சம் டாலரை தன் கணக்கிலே வரவு வைத்து கொண்டார். அதைப் பற்றி கேள்வி எழுந்தபோது அந்த பணம் யாரிடம் இருந்து தனக்கு வந்தது என்பதே தெரியாது என்றார்.

அப்படிப்பட்டவர் பிறந்த நாளையொட்டி ரூ.2 கோடி பரிசுப் பணம் வந்தது என்று சொல்வதிலே என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

தாமதப்படும் நீதி, மறுக்கப்படும் நீதி என்ற ஒரு பழமொழிதான் இந்த நேரத்தில் என் நினைவுக்கு வருகிறது.

கேள்வி: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பாலின் கொள்முதல் விலையை மட்டுமே, தான் உயர்த்தியதாகவும், விற்பனை விலையை உயர்த்தவில்லை என்றும் அறிக்கை கொடுத்திருக்கிறாரே?

பதில்: இது முழு பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைக்கும் மோசடி என்று அந்தத் துறையின் அமைச்சர் மதிவாணன் விளக்கமாகச் சொல்லியிருந்தபோதிலும் அது பல ஏடுகளிலே வெளிவரவில்லை. பால் விலையைப் பொறுத்தவரை ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் இரண்டு மோசடிகளைச் செய்த பெருமைக்குரியவர்.

தற்போது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழகம் முழுவதிலும் லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின கோரிக்கையை பரிசீலனை செய்து பேச்சுவார்த்தை பல மணி நேரம் நடத்தி இறுதியாகத்தான் கொள்முதல் விலையையும், நுகர்வோருக்கு கட்டுப்படியாகக் கூடிய அளவிற்கு விற்பனை விலையையும் லிட்டர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் அறிக்கை விடுத்துள்ள ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கொள்முதல் விலையை உயர்த்தாமலேயே விற்பனை விலையை மட்டும் உயர்த்திய நிகழ்ச்சி நடைபெற்றதுண்டு.

நாள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமேயானால் 1.7.1993ல் கொள்முதல் விலையை ஒருபைசா கூட உயர்த்தாமலேயே, விற்பனை விலையை மட்டும் லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் உயர்த்தியவர்தான் ஜெயலலிதா.

1991-96ம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது பசும்பால் கொள்முதல் விலை 2 ரூபாய் 26 காசு அளவிற்கு உயர்த்தப்பட்டது.

ஆனால் நுகர்வோரிடம் லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் என்று உயர்த்தி விற்பனை செய்ய ஆணை பிறப்பித்தவர்தான் ஜெயலலிதா.

இதையெல்லாம் மக்கள் மறந்து விட்டார்கள் என்று கருதிக் கொண்டு அறிக்கையிலேயே எப்போதும் போல் பொய் புராணம் தீட்டியிருக்கிறார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் கருணாநிதி

Nandri: Thatstamil

Thursday, March 13, 2008

சன் டிவியில் என்.டி.டி.வி ராமாயணம்

வரும் ஞாயிறு (16/March) காலை 10.30 மணி முதல் வாராவாரம் சன் டிவியில் புதிய ராமாயணம் (என்டிடிவி இமாஜின் தொலைக்காட்சியில் வரும் இந்தி ராமாயணத்தின் டப்பிங்) ஒளிபரப்பாகிறது.

தாத்தா ராமரைக் கிண்டலடித்தும் ராமர் பாலத்தை தகர்த்தெறியும் முயற்சியில் இருக்க பேரன்களோ ராமாயணத்தைத் தமிழர்களுக்கு திணிக்க ? (பின்ன இந்தி டப்பிங்கை எப்படி சொல்வது என தெரியவில்லை) இருக்கிறார்கள். இந்த ராமாயணத்திலாவது ராமரைப் பற்றியும், பாலத்தைப் பற்றியும் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம். தமிழ் டப்பிங் வசனங்கள் எப்படி இருக்கும் என தெரியவில்லை. பார்க்கலாம்.

செய்தி: நன்றி: என்.டி.டி.வி

Wednesday, March 12, 2008

வங்கக் கடலில் புயல் சின்னம் !?

குளோபல் வார்மிங்கா ? இல்லை நாட்டுல நல்லவங்க அதிகரிசுட்டாங்களா ? என்னங்க இது மார்ச்சு மாசத்துல புயல் சின்னம், பலத்த மழை அப்படீன்னு ? என்னமோ போங்க. தண்ணிப் பிரச்னை இல்லாம இருந்தா சரிதான்.

செய்தி: நன்றி: மாலைமலர்

வங்கக் கடலில் புயல் சின்னம்: பலத்த மழை எச்சரிக்கை: 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்

சென்னை, மார்ச். 12-

வங்கக் கடலில் தமிழ்நாடு மற்றும் இலங்கை கடலோர பகுதியின் தென்மேற்கு திசையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நேற்று உருவானது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து புயலாக மாறும் நிலையில் உள்ளது.

இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் 36 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கில் இருந்து கிழக்கு நோக்கி 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனால் தென் தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வடபகுதியை விட தென் பகுதி மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, தேனி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் சின்னம் உருவானதின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. தாழ் வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இன்றும் இந்த மழை நீடிக்கும் என தெரிகிறது.



படம்: நன்றி: சி.என்.என்

Friday, March 7, 2008

பெண்கள் நாட்டின் கண்கள் !?

பெண்கள் நாட்டின் கண்கள்..! அட.. அட.. அட... யாருங்க இங்க வாரிசு/குடும்ப அரசியல்னு பேசறது..






படங்கள் நன்றி: தமிழ் முரசு.

வாழ்க பெண்கள் ! வளர்க அவர்தம் அரசியல் !

மார்ச் 8 - பெண்கள் தினம்.

Thursday, March 6, 2008

ரூ.5க்கு பெண்கள் காண்டம்

விரைவில் விற்பனைக்கு வருகிறது ரூ.5க்கு பெண்கள் காண்டம்

ஆணுறை போல பெண்களுக்கும் காண்டம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை அதிகம் என்பதாலும், உபயோகிக்கும் முறை பற்றி பெரியளவில் பிரசாரம் செய்யப்படாததாலும் இந்தியாவில் பெண்கள் காண்டம் அதிகம் விற்பனையாகவில்லை.



இதனால், பெண்கள் காண்டத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம்(என்.ஏ.சி.ஓ) இறங்கியுள்ளது. முதல்கட்டமாக இங்கிலாந்து நிறுவனத்திடமிருந்து 15 லட்சம் பெண்கள் காண்டத்தை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம் வாங்குகிறது. அவை தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள பெண்களுக்கு அடுத்த 8 மாதத்தில் விநியோகிக்கப்படவுள்ளன.

இதுகுறித்து என்.ஏ.சி.ஓ இயக்குனர் சுஜாதா ராவ் கூறுகையில், 'கடந்த 2006ம் ஆண்டில் ஐ.நா சுகாதார நிறுவனவத்திடமிருந்து 5 லட்சம் காண்டம் வாங்கினோம். அதை வைத்து 13 மாநிலங்களில் உள்ள 60 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்தினோம். இதில் 60 சதவீத பெண்கள், காண்டத்தை மீண்டும் வாங்கினர். இவர்களில் 98 சதவீதம் பேர் உபயோகிக்கும் முறை எளிதாகவும், சவுகரியமாகவும் உள்ளதாக தெரிவித்தனர். இந்த ஆய்வு வெற்றிகரமாக முடிந்ததால், பெண்கள் காண்டம் பற்றி மேலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டுமிட்டுள்ளோம்' என்றார்.

பெண்கள் காண்டம் ரூ.5க்கு விற்பது எப்படி சாத்தியமாகும் என்பது பற்றி காண்டம் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் லேடக்ஸ் லிமிடெட் கம்பெனியைச் சேர்ந்த மனோஜ் கோபாலகிருஷ்ணா கூறுகையில், ÔÔபெண்கள் காண்டம் தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதை இந்தியாவில் தயாரிக்க கொச்சியில் தற்போது புதிய தொழிற்சாலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில் உள்ள பெண்கள் சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 1 கோடி பெண்கள் காண்டம் தயாரிக்கப்படும். இதை தயாரிக்க சராசரியாக காண்டம் ஒன்றுக்கு ரூ.40 செலவாகும். ஆனாலும் விலையைக் குறைத்து 5 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்ÕÕ என்றார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கூறுகையில், ÔÔஆணுறை உபயோகிக்க ஆண்கள் மறுக்கும்போது, பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கும், தேவையற்ற கர்ப்பத்தை தவிர்ப்பதற்கும் இந்த காண்டம் பயன்படும்ÕÕ என்றார்.


செய்தி: படம்: நன்றி: தமிழ்முரசு
6-மார்ச்- 2008 பக்கம்-6 சென்னை பதிப்பு

Monday, March 3, 2008

கனிமொழியுடன் அந்துமணி ஃபோட்டோ

எப்டிங்க இது ? தினமலர் வாரமலர் அந்துமணி கனிமொழி கூட ? பின்னாடி நல்லியார்.

எந்த நிகழ்ச்சியில் இந்த ஃபோட்டோ எடுக்கப்பட்டது என யாருக்காவது தெரியுமா ?



படம் நன்றி: தினமலர் வாரமலர்