Monday, March 1, 2010

பாசமழையில் நனைந்த மு.க.ஸ்டாலின்

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 58-வது பிறந்த நாளை மிகவும் எளிமையான முறையில் கொண்டாடினார். முதலமைச்சரும் தனது தந்தையுமான கருணாநிதியின் காலில் விழுந்து ஸ்டாலின் ஆசி பெற்றார்.


அவருக்கு தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களும் நிர்வாகி களும் முக்கிய பிரமுகர்களும் சர்வ கட்சி தலைவர்களும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.திமுக பொருளாளரும் துணை முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 58-வது பிறந்த நாள் இன்று. இதனையொட்டி ஸ்டாலின் அதி காலையிலேயே எழுந்து புத்தாண்டு அணிந்த 6 மணி அளவில் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து திமுக தலைவரும் முதலமைச்சரும் தனது தந்தையுமான கருணாநிதி, தாயார் தயாளு அம்மாள் ஆகியோரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

அதன் பின்னர் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு வந்து குடும்பத் துடன் கேக் வெட்டி பிறந்தநாளை மிக எளிமையான முறையில் கொண்டாடினார். இதனை தொடர்ந்து காலை 6.45 மணி முதல் அவரது வீட்டிற்கு தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர் களும் பொது மக்களும் முக்கிய பிரமுகர்களும், சர்வகட்சி தலைவர் களும், காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

அவர்களுள் மத்திய மாநில அமைச்சர்கள், டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள், அரசு துறை செயலாளர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரையுலகினர் ஆகி யோர் அடங்குவர்.வந்திருந்த தொண்டர்களும், பிரமுகர்களும் வரிசையில் நின்று பூங்கொத்து, மாலை, சால்வை ஆகியவற்றை ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து கூறினார்கள்.

காலை 9.45 மணிக்கு அவரது சகோதரரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேரில் வந்து ஸ்டாலினை கட்டித் தழுவி வாழ்த்தினார். இதேபோல கனிமொழி எம்பி, மு.க.தமிழரசு ஆகியோரும் நேரில் வந்து ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் வாழ்த்துக் கூற வந்த தொண்டர்களுக்கும், பொது மக்க ளுக்கும் பிரியாணி மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் டி.யசோதா, ஞானசேகரன் எம்எல்ஏ, ஜே.எம்.ஆருண் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வை.சிவபுண்ணியம், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி, பிஜேபியின் குமாரவேலு மற்றும் தொழிலதிபரும், கல்வியாள ருமான எம்ஏஎம் ராமசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்த சர்வகட்சி தலை வர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறிப்பிடத் தகுந்தவர்களாவர்.

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பாக 58 வகையான சீர்வரிசை பொருட்களுடன் துணை முதல் வருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மத குருமார்களும் நேரில் வந்து துணை முதல்வருக்கு ஆசி கூறினர்.திமுகவின் இளைஞரணி, மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் சீருடையில் வந்து வாழ்த்தினர். அவர்கள் 58 வகையான பழ வகைகளை ஸ்டாலி னுக்கு வழங்கினர். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மயில் நடனம், பேண்டு வாத்தியம், முரசு, நாதஸ்வரம் உள்ளிட்ட கலைக் குழுவினரும் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

பெரியார், ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் வேடமணிந்தும் வந்து தொண்டர்கள் துணை முதல்வரை வாழ்த்தினார்கள். பிறந்த நாள் விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்க பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட தால் ஸ்டாலின் இல்லம் உள்ள ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன்

சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் கூட்டம் காணப்பட்டது. போலீசார் மிகவும் சிரமப்பட்டு அவர்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பினர்.வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஸ்டாலின் வீட்டு எதிரே 2 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.

தனது பிறந்த நாள் விழாவுக்கு யாரும் ஆடம்பரமாக விளம்பரம் செய்யக் கூடாது, ஆடம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்தி இருந்தார். அதற்கிணங்க எந்த பகுதியிலும் ஆடம்பர பேனர் களை காணமுடியவில்லை. அவரது இல்லம் அமைந்துள்ள பகுதியில் கட்சி கொடிகளை மட்டுமே கட்டியிருந்தனர்.

பகல் 1 மணி வரையிலும் தனது இல்லத்தில் தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ளும் ஸ்டாலின் அதன் பின்னர் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சிறுமலர் பள்ளிக்குச் சென்று அதன் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கு அறுசுவை உணவுடன் விருந்து அளிக்கிறார். பின்னர் மீண்டும் தனது இல்லத்திற்கு வந்து மாலை வரை தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்வார்.

படம்: செய்தி: நன்றி: மாலைச்சுடர்