Wednesday, May 30, 2007

மதுரை சம்பவம்: அழகிரிக்கு தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை - கனிமொழி பேட்டி

தி.மு.க.வின் ராஜ்ய சபா வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள கனிமொழி அளித்த பேட்டி வருமாறு :-

தி.மு.க.வில் எல்லோரும் சேர்ந்து என்னை ராஜ்ய சபா வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். இதை வாரிசு திணிப்பு என்று விமர்சிப்பது சரியல்ல. உலகில் எல்லா நாடுகளிலுமே வாரிசுகள் அரசியலுக்கு வருகிறார்கள்.

தி.மு.க. ஜனநாயக கட்சி. இங்கு ஒருவரை கொண்டு வருவது என்பதை கட்சித் தலைவர் மட்டும் தீர்மானிப்ப தில்லை. கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அனுபவ சாலிகளின் கருத்துபடியே அத்தகைய முடிவுகள் எடுக்கப் படுகின்றன.

திணிப்பு என்று சொல்வதை என்னால் ஏற்க முடியாது. யாரையும் உயர்ந்த இடத்தில் திணித்து வெகு காலம் உட்கார வைக்க முடியாது. கட்சி தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டால்தான் அவர் நிலைக்க முடியும். அண்ணன் மு.க.ஸ்டாலினை தொண்டர்கள் ஏற்காமல் இருந்திருந்தால் இந்த அளவு செல்வாக்குடன் இருக்க முடியாது.

ராஜ்ய சபா எம்.பி.யானதும் எனது செயல்பாடுகள் ஆக்கப் பூர்வமாக இருக்கும். ஏதோ ஆறு வருடம் எம்.பி.யாக இருந்தேன் என்று மட்டும் இல்லாமல் கட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் உழைப்பேன்.

திராவிட கொள்கைகள் என் ரத்தத்தில் ஊறியுள்ளது தி.முக.வும் கலைஞரும் வலி யுறுத்தும் இட ஒதுக்கீடு, தமிழ் மொழி ஆளுமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இது வரை தமிழ்நாட்டில் மேடைகளில் பேசினேன். இனி டெல்லியிலும் போய் பேசுவேன்.

தி.மு.க.வில் தற்போது நெருக்கடி ஏற்பட்டதால் தான் என்னை ராஜ்யசபா வேட்பாள ராக அறிவித்துள்ளனர் என் பதிலும் உண்மை இல்லை. கட்சியில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை.
எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட விரிசலை நான் தீர்த்து வைத்தற்காக இந்த பரிசு தரப்பட்டுள்ளது என்று சொல்லப்படுவதிலும் உண்மை இல்லை. குடும்பம் என்றால் சின்ன உரசல்கள் இருக்கத்தான் செய்யும். குடும் பத்தின் அழகே அன்பும் மோத லும் சேர்ந்த கலவைதான்.

எல்லோரும் கவனிக்கிற இடத் தில் இருப்பதால் எங்கள் குடும்பத்தில் நடப்பவை மிகைப்படுத்தப்படுகின்றன. ஒற்றுமைக்காக நான் பாடு பட்டேன் என்பதெல்லாம் கற்பனை.
தி.மு.க.வுக்கும், டெல்லிக்கும் இடையே பலமான உறவு பாலத்தை ஏற்படுத்த என்னை எம்.பி.யாக்கவில்லை. அதற்கு தி.மு.க.வில் பல ஆண்டுகளாக டெல்லியில் பணியாற்றி வரும் முக்கியமான தலைவர்கள் இருக்கிறார்கள். அதற்காக என்னை அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க. இல்லை. தி.மு.க. என்பது செழுமையான கட்சி.

எங்கள் குடும்பத்தில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசல் எப்படி நடந்தது ஏன் நடந்தது என்றெல்லாம் நினைத்து பார்த்தால் எதுவும் புரியவில்லை.தனிப்பட்ட முறையில் எனக்கும் மாறன் சகோதரர் களுக்கும் உள்ள உறவு எப் போதும் போல் உள்ளது. அவர் களுடன் பேசி சில நாட்கள் ஆகிறது. கால ஓட்டத்தில் அவரவர் வேலையை பார்க்க போய் விட்டார்கள். நாங்கள் எங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு குடும்பங்களும் இணைவது பற்றி காலமும் தலைவரும் தான் தீர்மானிக்க வேண்டும்.

`தினகரன்' பத்திரிகை கருத்து கணிப்பை தவிர்த்திருக்கலாம். கருத்து கணிப்பு நடத்தப்பட்ட காலத்தில் எனக்கும் அரசிய லுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. ஆனால் அதில் என்னையும் சேர்த் திருந்ததுதான் வேடிக்கை.

மதுரை சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. எனவே விரிவாக எதையும் பேச முடியாது.
அடுத்து நான் மத்திய மந்திரி ஆவேனா என்று கேட்டால் `இல்லை' என்பதுதான் இப் போதைய என் பதில். படிப் படியாக போகலாமே.

அண்ணன்கள் தங்களு டைய தங்கையின் வளர்ச்சிக்கு எந்தெந்த வகையில் உதவு வார்களோ அந்த வகையில் என்னுடைய அண்ணன்கள் அழகிரி, ஸ்டாலின் ஆகியோர் எனக்கு உதவி வருகிறார்கள். மதுரை சம்பவத்துக்கும் எனது அண்ணனுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

Nandri: Maalaimalar

Tuesday, May 29, 2007

அழகிரியிடம் ஆசி பெற்ற கனிமொழி!!

முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியை ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடும் முதல்வரின் மகள் கவிஞர் கனிமொழி மதுரைக்குச் சென்று சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார்.
ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களில் ஒருவராக கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மத்திய அமைச்சர் பதவியும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.


Photo Nandri: Thatstamil

கனிமொழியை எம்பியாக்கி அமைச்சர் பதவி தர வேண்டும் கருணாநிதியை நெருக்கியது அழகிரி தான் என்று கூறப்படுகிறது. டெல்லியை விட்டு மாறனை விரட்டிவிட்டு அந்த இடத்தில் கனிமொழியை கொண்டு வருவதில் மிகுந்த தீவிரம் காட்டியது அழகிரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று மதுரைக்கு விரைந்த கனிமொழி, அழகிரியை சந்தித்தார். அவரிடமும், அண்ணி காந்தி அழகிரியிடமும் ஆசி பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி பேசுகையில்,
பெண்களின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து பாடுபடுவேன், உழைப்பேன்.
அரசியலில் நான் தீவிரமாக நுழைய இந்த எம்.பி. பதவி உதவும். இதற்காக வாய்ப்பு கொடுத்த திமுக தலைமைக்கு எனது நன்றிகள். அரசியல் மூலமாக சமூகத்திற்கு நிறைய செய்ய முடியும் என்றார் கனிமொழி.

அப்போது செய்தியாளர்கள், அழகிரியால்தான் இந்தப் பதவி கிடைத்ததா என்று கேட்டபோது குறுக்கிட்ட அழகிரி, திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.

உங்களுக்குக் கட்சிப் பதவி கிடைக்குமா என்று அழகிரியிடம் கேட்டபோது,
அஞ்சா நெஞ்சன் பதவிக்கு கெஞ்சா நெஞ்சன் என்று கலைஞர் ஏற்கனவே கூறியிருக்கிறார். எனக்குப் பதவி மீது ஆசை கிடையாது. பதவியில் இல்லாமலும் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்றார் அழகிரி.

அண்ணன், தங்கையின் சந்திப்பின்போது அமைச்சர் தங்கம் தென்னரசுவும் உடன் இருந்தார். பின்னர் கனிமொழி சென்னைக்குக் கிளம்பிச் சென்றார்.

Nandri: Thatstamil

சில புகைப்படங்கள்

1. மாறன் போயி பாலு வந்தார்..



சென்ற மாதம் வரை டில்லித் தலைவர்களுடன் கலைஞர் சந்திக்கும்போது புகைப்படத்தில் கூட நின்று போஸ் கொடுக்கும் தயாநிதி மாறன் போயி தற்போது டி.ஆர்.பாலு (மற்றும் ஆ.ராசா) அந்த இடத்தைப் பிடித்துள்ளனர்.





படம் நன்றி: டெக்கான் க்ரோனிக்கிள்



அது யாருங்க பாலு பக்கத்துல நிக்கிறது ?



அப்புறம்: பொன்னாடையை போர்த்திவிட்டவுடன் சோனியா அம்மையார் கருணாநிதியைப் பார்க்க - அவர் அம்மையாரின் இடது கையைப் பிடித்து கேமிரா இருக்கும் பக்கம் திருப்பினார். இது தொலைக்காட்சியில் பார்த்தது.



2. இந்த பொன்னாடைகளை தலைவர்கள் என்ன செய்கிறார்கள் ? யாருக்காவது தெரியுமா ?



படம் நன்றி: Dinamalar

3. கோடநாடு எஸ்டேட்டிலிருந்து கோடை விடுமுறை(?)யை முடித்துக்கொண்டு வந்துள்ள ஜெ. மிகவும் புத்துணர்ச்சியுடன் வந்துள்ளது போல எனக்குப் படுகிறது. டிவியிலும் அவர் சற்று மெலிந்து அழகு கூடியது போலத் தான் தெரிந்தது. உங்களுக்கு ?



படம் நன்றி: Dinathanthi

Sunday, May 27, 2007

தினகரனின் தலைப்பு குளறுபடி

"மானத்தை தவறவிட்டு 2 மணிநேரம் துபாயில் வித்த நடிகைகள்" என்ற தலைப்பில் இன்றைய 12ஆம் பக்க செய்தி. என்னவென்று உள்ளே படித்துப் பார்த்தால் செய்தி வேறு.

தலைப்பு "விமானத்தை தவறவிட்டு 12 மணிநேரம் துபாயில் தவித்த நடிகைகள்" என்று இருந்திருக்க வேண்டும். லே-அவுட் ஆர்டிஸ்டின் தவறா அல்லது இதை கவனிக்காமல் அச்சுக்கு அனுப்பிய பொறுப்பாசிரியர் தவறா ?





12 மணி நேரம் துபாயில் தவித்த நடிகைகள் விமானத்தை தவறவிட்டு

சென்னை, மே 28: கலைநிகழ்ச்சிக்காக துபாய் சென்ற நடிகைகள் விமானத்தை தவறவிட்டதால் 12 மணிநேரம் தவித்தனர்.

துபாயில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடிகர், நடிகைகள் கலந்துகொண்ட நட்சத்திர கலை விழா வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் நடிகர் பரத், நடிகைகள் சந்தியா, சங்கீதா, சமிக்ஷா, தாரிகா, மும்தாஜ், கனிகா, பாடகி அனுராதா ஸ்ரீராம், பாடகர் கார்த்திக், நடன இயக்குனர் கந்தாஸ் உட்பட 40 கலைஞர்கள் கலந்துகொண்டனர். இரவு 7.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிவரை நடந்தது. 18 ஆயிரம் பேர் நிகழ்ச்சியை ரசித்தனர்.

நிகழ்ச்சி முடிந்து நேற்றுமுன்தினம் துபாயிலிருந்து சென்னைக்குப் புறப்பட தாரிகா, சமிக்ஷா, சங்கீதா, கனிகா மற்றும் பாடகர், பாடகிகள் விமான நிலையத்துக்கு வந்தனர். பாஸ்போர்ட் சோதனை மற்றும் உடமைகள் சோதனை முடிந்து அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானம் புறப்படுவதற்கு நேரம் இருந்ததால் தாரிகாவும், சமிக்ஷாவும் ஷாப்பிங் செய்யச் சென்றனர். பொருட்களை வாங்குவதில் மும்முரமாக இருந்ததில் விமானத்துக்கு வரவேண்டியதை இருவரும் மறந்துவிட்டனர். நேரமாகிக்கொண்டே இருந்ததால் மைக்கில் இருவரின் பெயரையும் சொல்லி, உடனே விமானத்துக்கு வரும்படி அறிவிக்கப்பட்டது. மதியம் ஒன்றே முக்காலுக்கு புறப்பட வேண்டிய விமானம் அவர்களுக்காக இரண்டே கால் மணிவரை காத்திருந்தது.

அப்போதும் வராததால் இருவரது லக்கேஜையும் இறக்கி வைத்துவிட்டு விமானம் புறப்பட்டது.
ஷாப்பிங் முடிந்து திரும்பி வந்த சமிக்ஷா, தாரிகா விமானம் புறப்பட்டுவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து தவித்தனர். விமானம் சென்றுவிட்டதால் சுமார் 12 மணி நேரம் அவர்கள் அங்கேயே காத்திருந்து, மறுநாள் விமானத்தில் சென்னை வந்தடைந்தனர்.

இதுபற்றி சமிக்ஷாவிடம் கேட்டபோது, ‘‘விமானம் புறப்படுவதற்கு நேரம் இருந்ததால் நானும், தாரிகாவும் ஷாப்பிங் போனோம். திரும்பி வந்தபோது விமானம் புறப்பட்ட தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். அடுத்த விமானத்தில் புறப்பட்டு விடலாம் என்று விமான நிலையத்திலேயே ஜாலியாக சுற்றிக்கொண்டிருந்தோம். நேரம் செல்லச் செல்ல பயம் வந்துவிட்டது. அங்கும் இங்கும் நடந்து கால்களும் வலிக்கத் தொடங்கியது. சுமார் 12 மணி நேரக் காத்திருப்புக்கு பிறகு மறுநாள் விமானத்தில் சென்னை வந்தோம். வாழ்க்கையில் இது மறக்க முடியாத நிகழ்ச்சி. இனிமேல் ஷாப்பிங்கே செல்லக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்’’ என்றார்.

Nandri: Dinakaran
http://www.dinakaran.co.in/epaperdinakaran/firstpage.aspx

Friday, May 25, 2007

திமுக அரசின் செல்வாக்கு சரிவு: லயோலா

திமுக அரசின் செல்வாக்கு சரிவு: கருணாநிதியை
விட ஜெ. பெட்டர் லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு


திமுக அரசின் செல்வாக்கு கடும் சரிவைக் கண்டுள்ளாக லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியை விட ஜெயலலிதா பல வகையிலும் சிறந்தவராக விளங்குவதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை லயோலா கல்லூரி அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடும். பொதுவாக திமுகவுக்கு சாதமாகவே இக்கல்லூரியின் கருத்துக் கணிப்பு அமையும். இந்த நிலையில் கடந்த ஒரு வருட திமுக ஆட்சி குறித்து நடத்திய கருத்துக் கணிப்பில் திமுகவுக்கு பாதகமான முடிவுகளை இக்கல்லூரி வெளியிட்டுள்ளது.

இக்கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழு இன்று வெளியிட்டது. இதில் திமுக அரசுக்கு மக்கள் செல்வாக்கு மிகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 3ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் விவரம் வருமாறு, கடந்த ஒரு ஆண்டு திமுக அரசு மீது மக்களுக்கு கடும் அதிருப்தி எழுந்துள்ளது. 39.9 சதவீதம் பேர் ஆட்சியின் போக்கு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். நடு நிலை வாக்காளர்கள் மத்தியில் திமுக மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது. 25.7 சதவீத நடுநிலை வாக்காளர்கள் திமுக மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதேசமயம், திமுகவின் சொந்த செல்வாக்கு சரியவில்லை. அது 31.8 சதவீதமாக உள்ளது.
இப்போது யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு திமுகவுக்கு என 31.8 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு என்று 27.6 சதவீதம் பேரும், தேமுதிகவுக்கு என்று 15.2 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

இக்கல்லூரி கடந்த முறை நடத்திய கருத்துக் கணிப்பை விட இந்த முறை திமுக மற்றும் தேமுதிகவின் செல்வாக்கு சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த முறை திமுகவுக்கு 34 சதவீதம் பேரும், தேமுதிகவுக்கு 17 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

திமுக ஆட்சி சிறப்பாக இருப்பதாக 58.9 சதவீதம் பேரும், குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை என்று 26.4 சதவீதம் பேரும், மோசம் என 14.7 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

எதிர்க்கட்சியாக அதிமுகவின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக 46.9 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மோசம் என்று 17.7 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சி மற்றும் இப்போதைய திமுக ஆட்சியில் எது பெஸ்ட் என்ற கேள்விக்கு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக்கே மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

தாமதிக்காமல் முடிவு எடுப்பதில் சிறந்தவர் ஜெயலலிதா என 53.3 சதவீதம் பேரும், கருணாநிதி என 45.6 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எடுத்த முடிவில் உறுதியாக இருப்பவர், கட்சிக்குள் குடும்ப ஆதிக்கத்தை அனுமதிக்காதவர், உட்கட்சி ஜனநாயகத்தை காப்பவர் உள்ளிட்டவற்றில் சிறந்தவர் ஜெயலலிதா என்றும் கருத்துக் கணிப்பில் தெரிந்துள்ளது. இவற்றில் ஜெயலலிதாவை விட கருணாநிதிக்கு குறைந்த ஆதரவே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா கொண்டு கேபிள் டிவியை அரசுடமையாக்கும் திட்டத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு காணப்படுகிறது. 62.6 சதவீதம் பேர் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தேவையில்லை என 14.3 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சரத்குமார் கட்சி ஆரம்பிப்பார் என 35.6 சதவீதம் பேர் கூறியுள்ளனர். நாடார் சமுதாய அமைப்புகளுடன் சேர்ந்து ஆரம்பிப்பார் என 19.2 சதவீதம் பேரும், ரசிகர்களின் துணையுடன் ஆரம்பிப்பார் என 16.4 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர் கட்சி தொடங்குவது சந்தேகம் என 30 சதவீதம் பேர் கூறியுள்ளனர்

Nandri: Thatstamil
http://thatstamil.oneindia.in/news/2007/05/25/survey.html

More from Maalai Sudar:
http://www.maalaisudar.com/2505/hed_news_2.shtml

சன் டிவி அதிகாரிக்கு கொலை மிரட்டல்

சன் டிவியின் துணைத் தலைவரும், தலைமை நிகழ்ச்சி அதிகாரியுமான ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

நேற்று காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ஹன்ஸ் ராஜ் சக்ஸேனா, ஆணையர் லத்திகா சரணைச் சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.

அதில், தனது செல்போனைத் தொடர்பு கொண்ட ஒருவர், உடனடியாக சன் டிவியிலிருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை, கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று மிரட்டியதாக தனது புகாரில் கூறியுள்ளார் சக்ஸேனா.

இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். அதில், பி.சி.ஓ.விலிருந்து அந்த தொலைபேசி அழைப்பு வந்தது தெரிய வந்தது. விரைவில் கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது கண்டுபிடிக்கப்படும் என லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.

புதிதாக தொடங்கப்படவுள்ள கலைஞர் டிவிக்கு சன் டிவியிலிருந்தே ஆட்களை இழுக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் சன் டிவியின் துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது

Nandri: Thatstamil
http://thatstamil.oneindia.in/news/2007/05/25/threat.html

Tuesday, May 22, 2007

மத்திய மந்திரியை தெரியாத பிரதமர்!

'பிரதமருக்கு ரகுபதி யார் என்றே தெரியவில்லையே!' என்று அதிர்ச்சி அடைந்த அந்த தமிழக அமைச்சர், ரகுபதியை சுட்டிக்காட்ட, அவரை அழைத்து ஒரு நிமிடம் பேசினார் மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் அமைச்சரவையில் 80 அமைச்சர்கள் உள்ளனர். அனைவரையும் நினைவில் வைத்திருப்பது கடினம். சிலசமயம் சிலருடைய முகங்கள் நினைவிற்கு வராது; சிலருடைய பெயர்கள் திடீரென மறந்துபோகும்.

வாஜ்பாய் பிரதமராகயிருந்தபோது, பார்லிமென்ட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு அவருடைய சக அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் பெயர் மறந்து போனது. வேறு ஏதோ ஒரு பெயரைச் சொல்ல, அனைவரும் ஷாக் ஆயினர்.

சோனியாவை சந்திக்க காங்கிரஸ் தலைவர்கள் வரும்போது, அவர்களைப் பற்றிய குறிப்போடு, அவர்களுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் அனுப்பப்படும். வருபவர் யாரென்று சோனியா தெரிந்து கொள்வதற்காக அப்படி அனுப்புவது வழக்கம். தேவகவுடா பிரதமராக இருந்தபோது கூட, இதே கதிதான். இந்த லிஸ்டில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர் மன்மோகன் சிங்.

தி.மு.க.,வைச் சேர்ந்த ராதிகா செல்வி உள்துறை இணை அமைச்சராக பதவியேற்றார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டபோது, ரகுபதியைச் சந்திக்க விருப்பப்பட்டார். ஆனால், யார் ரகுபதி என்பது பிரதமருக்கு தெரியவில்லை. வேறு வழியில்லாமல், விழாவில் அமர்ந்திருந்த ஒரு அமைச்சரிடம், "இங்கே யார் ரகுபதி?' என்று வாய்விட்டே கேட்டு விட்டார். "பிரதமருக்கு ரகுபதி யார் என்றே தெரியவில்லையே!' என்று அதிர்ச்சி அடைந்த அந்த தமிழக அமைச்சர், ரகுபதியை சுட்டிக்காட்ட, அவரை அழைத்து ஒரு நிமிடம் பேசினார் மன்மோகன் சிங்.

Nandri: Dinamalar
http://www.dinamalar.com/2007may23/pakkavadhiyam.asp

அன்பழகன் துணை ஜனாதிபதி ?

தி.மு.க.வுக்கு துணை ஜனாதிபதி பதவி? சோனியா காந்தி ஆலோசனை



சோனியாவின் இந்த திட்டத்தை தி.மு.க. ஏற்கும் பட்சத்தில் அமைச்சர் அன்பழகன் துணை ஜனாதிபதி ஆக்கப் படலாம் என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப் படுகிறது. 85 வயதாகும் அன்பழகன் திராவிட இயக்கத் தலைவர்களில் மூத்தவர்.



ஜனாதிபதி அப்துல்கலா மின் பதவிக்காலம் வரும் ஜுலை மாதம் 24-ந் தேதி முடிகிறது. எனவே ஜுலை 15-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. புதிய ஜனாதிபதி யார் என் பது ஜுலை 22-ந் தேதி அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும்.



ஜனாதிபதி அப்துல்கலாம் பதவி காலம் முடிவது போல துணை ஜனாதிபதி பைரோன் சிங் செகாவத்தின் 5 ஆண்டு பதவிக் காலமும் வரும் ஆகஸ்டு மாதம் முடி கிறது. எனவே புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டியதுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் கட்சித் தலைவர்கள் ஆலோ சனை நடத்தி வருகிறார்கள்.



துணை ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபை களில் உள்ள எம்.பி.க்கள் மட்டுமே ஓட்டுப் போட்டு தேர்வு செய்வார்கள். இரு சபைகளிலும் மொத்தம் 776 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அதிக எம்.பி.க்களை வைத்துள்ளது.



எனவே துணை ஜனாதிபதி பதவிக்கு சோனியா யாரை கை காட்டுகிறாரோ அவர் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க.வுக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்க சோனியா ஆலோசித்து வருவதாக தெரியவந்துள்ளது.



சமூக நீதி உள்ளிட்ட பல விஷயங்களில் தி.மு.க.வுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒத்துப்போகிறது. ஜனாதிபதி தேர்தலின் போது தி.மு.க.வின் ஒத்துழைப்புடன் மாயாவதியை தங்களுக்கு ஆதரவாக கொண்டு வந்து விடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதற்கு பதிலாக துணை ஜனாதிபதி பதவி கொடுத்து தி.மு.க.வுடனான நட்புறவை வலுப்படுத்த சோனியா நினைக்கிறார்.



சோனியாவின் இந்த திட்டத்தை தி.மு.க. ஏற்கும் பட்சத்தில் அமைச்சர் அன்பழ கன் துணை ஜனாதிபதி ஆக்கப் படலாம் என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப் படுகிறது. 85 வயதாகும் அன்பழகன் திராவிட இயக்கத் தலைவர்களில் மூத்தவர்.



1967 முதல் 1971ம் ஆண்டு வரை பாராளுமன்றத்தில் பணியாற்றி அனுபவம் பெற்றவர். டெல்லியில் உள்ள பிற கட்சி தலைவர்களுடன் நன்கு நல்லுறவு கொண்டிருப்பவர். முதல்-அமைச்சர் கருணாநிதியின் நம்பிக்கைக்கு உரியவர் களில் முதன்மை இடத்தில் இருப்பவர்.

எனவே அன்பழகன் துணை ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்க பிரகாசமான வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக டெல்லி யில் பேசப்படுகிறது.



Nandri: Maalai Malar

http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=203989

கலைஞர் டி.வி: பொறுப்பு - சரத்குமார்

ஆகஸ்டு 15-ந்தேதி புதிய டி.வி உதயம்: கருணாநிதி அறிவிப்பு

மதுரையில் நடந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து தி.மு.க.வுக்கும், சன் டி.வி. குழுமத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தி.மு.க.வுக்கு ஆதரவு தொலைக்காட்சி எதுவும் இல்லாத சூழ்நிலையில் அக்குறையை போக்க புதிய தொலைக்காட்சி ஒன்று உதயமாக உள்ளது.
புதிய தொலைக்காட்சிக்கு "கலைஞர் டி.வி.'' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராஜ் டி.வி. நிறுவனம் இந்த புதிய தொலைக்காட்சியைத் தொடங்குகிறது. இதனுடைய சின்னமாக "உதயசூரியன்'' இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"கலைஞர் டி.வி.'' மக்களின் தேவையையும் விருப்பங் களையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்- அமைச்சர் கருணாநிதி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற் றும் வகையில் புதிய தொலைக் காட்சி உதயமாக உள்ளது. இந்த புதிய டி.வி.சானல் ஜுன் 3-ந் தேதி ஒளிபரப்பை தொடங்கும் என்று ஒரு தக வல் வெளியாகி இருந்தது. அது தவறு. ஜுன்-3ந் தேதி புதிய தொலைக்காட்சி பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

புதிய தொலைக் காட்சியின் நிகழ்ச்சிகள் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி முதல் ஒளி பரப்பாகும். இதில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் விபரம் இறுதி செய்யப்பட்டு வரு கிறது. தொலைக்காட்சித் துறையில் சிறந்த நிபுணர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஒளிபரப்புத் துறையில் நன்கு அனுபவம் பெற்றவர்கள் எங்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.

புதிய தொலைகக்காட்சியை தி.மு.க. நிர்வகிக்காது. ராஜ் டி.வி. குழுமம் அதை நிர்வகிக்கும். இதை "கலைஞர் டி.வி.'' என்று எல்லாரும் சொல்கிறார்கள்.

இந்த புதிய தொலைக் காட்சியில் நான் பங்கேற்கும் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி எதுவும் வராது. சில மாநிலங்களில் இதற்கான முயற்சி நடந்தது. என்னையும் இதில் ஈடுபடுத்த சிலர் அணுகி னார்கள்.

ஆனால் டி.வி.மூலம் ஆட்சி நடத்த இயலாது என்பது என் கருத்து.

தி.மு.க. தலைமை நிலையமான அறிவாலயத்தில் இருந்து சன் டி.வி.யை வெளியேறும்படி நானோ வேறு யாருமோ சொல்லவில்லை. அவர்கள் (சன் டி.வி. நிர்வாகம்) விரும்பும் வரை அறிவாலயத்தில் தங்கி இருக்கலாம். அவர்களை நான் வெளியேற சொன்னதாக சொல்வது தவறானது.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

"கலைஞர் டி.வி.'' ஒளிபரப்புக்கான அனுமதி பெற மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் நேற்று விண் ணப்பிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து விரைவில் மத்திய அரசு அனு மதி வழங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ராஜ் டி.வி. குழுமத்திடம் ஏற்கனவே "டெலிபோர்ட்'' வசதி உள்ளது. எனவே எந்த நேரத்திலும் அவர்களால் புதிய டி.வி. சானலை தொடங்கி விட முடியும்.

தற்போது ராஜ் டி.வி. நிகழ்ச்சிகள் தாய்காம் சாடி லைட் மூலம் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் 2 டிரான்ஸ் பாண்டர்களை ராஜ் டி.வி. பயன்படுத்தாமல் கைவசம் வைத்து இருக்கிறது. அதில் ஒன்றை "கலைஞர் டி.வி.க்கும்'' மற்றொன்றை "குழந்தைகள் சானலுக்கும் பயன்படுத்த ராஜ் டி.வி. திட்ட மிட்டுள்ளது.

கலைஞர் டி.வி. தலைமை நிர்வாகியாக சரத்குமார் என்பவர் பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் தலைமையில் தொழில் நுட்பக் குழு மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் குழு "கலைஞர் டி.வி.'' யை மிகச்சிறப்பாக கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தினமும் 9 தடவை செய்திகள் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

இது தவிர பல புதிய நிகழ்ச்சிகள் அதிரடியாக வர உள்ளன. இதற்காக அனுபவம் வாய்ந்த மெகா தொடர் தயாரிப்பாளர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

"கலைஞர் டி.வி.'' ஒளிபரப்பு தொடங்க இன்னும் 2 மாதங்கள் கால அவகாசம் இருப்பதால் அதற்குள் எல்லா ஏற்பாடுகளையும் திட்டமிட்டப்படி நடத்தி முடிக்க வேலைகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது.

Nandri: Maalai Malar
http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=203983

Sunday, May 20, 2007

வாரிசு பற்றி பத்திரிக்கையில் முக்கிய செய்தி

வாரிசு பற்றி பத்திரிக்கையில் முக்கிய செய்தி :-)



இது வேற வாரிசுங்கோவ் - ஆனா அழகான வாரிசு - தகுதியை வளர்த்துக்கொண்டுள்ள வாரிசு. முழுவிபரத்தையும் படிக்க இங்க க்ளிக்குங்க:

கலைஞர் டிவி: ஜூன் 3ம் தேதி முதல் ஒளிபரப்பு

"கலைஞர் டிவி'யில் பணியாற்றுவதற்காக தொழில்நுட்ப பணியாளர் களுக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடந்தது. இதில், "சன் டிவி' ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். தற்போது வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளத்துடன் அவர்களுக்கு பணி நியமன உத்தரவும் நேற்றே வழங்கப்பட்டது. இதேபோல நிருபர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களுக்கான நேர் முகத் தேர்வு இன்று முதல் நடக்க உள்ளது. சன் "டிவி'யின் செய்திப்பிரிவில் பணியாற்றும் முக்கிய நபர்கள் பலர், "கலைஞர் டிவி'யில் பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

***********************************************************
சென்னை: "கலைஞர் டிவி' என்ற பெயரில் தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ ஊடகமாக புதிய "டிவி' சேனலை ராஜ் "டிவி' துவக்க இருக்கிறது. வரும் ஜூன் 3ம் தேதி முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளன்று இந்த புதிய சேனல் துவக்கப்பட உள்ளது.

இதுவரை ஆளுங்கட்சியின் "டிவி' போல் செயல்பட்டு வந்த "டிவி' சேனலின் ஊழியர்கள், இந்த புதிய "டிவி'க்கு படையெடுத்துள்ளனர்.தி.மு.க.,வுக்கு ஆதரவான "டிவி'யாக "சன் டிவி' செயல்பட்டு வந்தது. அதன் நிர்வாகத்துக்கும் தி.மு.க.,வுக்கும் இடையே பிளவு ஏற்பட்டதால், கட்சிக்கு அதிகாரப்பூர்வ, "டிவி' சேனல் இல்லாத நிலை ஏற்பட்டது. அ.தி.மு.க.,வுக்கு ஜெயா "டிவி,' பா.ம.க.,வுக்கு மக்கள் "டிவி' என தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு "டிவி' இருக்கும் நிலையில், தி.மு.க.,வுக்கும் தனியாக "டிவி சேனல்' வேண்டும் என்று கட்சி மேலிடம் கருதியது. முதல்வர் கருணாநிதியின் சட்டசபை "பொன்விழா' நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ராஜ் "டிவி'க்கு அனுமதி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் பிரதமர், சோனியா உட்பட தேசிய தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய சன் "டிவி' கடுமையாக முயற்சித்த போதிலும், அதற்கு அனுமதியளிக்கவில்லை.ஜெயா, சன், ராஜ் ஆகிய மூன்று சேனல்கள் மட்டுமே தற்போது தமிழில் செய்திகளை ஒளிபரப்பி வருகின்றன. தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஒளிபரப்புவதற்காக தனி சேனல் ஒன்றை துவக்க அக்கட்சியின் மேலிடம் விரும்பியது. இது தொடர்பாக ராஜ் "டிவி' நிர்வாகத்துடன் தி.மு.க., சார்பில் ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் ஆகியோர் பேசியுள்ளனர்.

ஏற்கனவே "டிவி' சேனல் நடத்தும் அனுபவம் பெற்ற நிறுவனம் என்பதால், ராஜ் "டிவி' நிர்வாகமே தி.மு.க.,வின் அதிகாரப் பூர்வ சேனலை நடத்த அனுமதித்து இருப்பதாக தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர். புதிய "டிவி'யை துவக்குவதற்கான மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் இதர தொழில்நுட்ப வசதிகளை செய்து தரும் பொறுப்பு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிய "டிவி'க்கு "கலைஞர் டிவி' என பெயரிடப்பட்டுள்ளது. கட்சியின் தேர்தல் சின்னமான உதயசூரியனே புதிய "டிவி'யின் "லோகோ'வாக இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. பெரிய அளவில் புதிய "டிவி'யை நடத்த வேண்டும் என்பதற்காகவும், "சன் டிவி' மற்றும் "ஜெயா டிவி'யுடன் போட்டி போட்டு செய்திகளை காண்பிக்க வேண்டும், என்பதற்காகவும் அனுபவமுள்ள செய்தியாளர்களை சேர்க்கும் முயற்சியில் ராஜ் "டிவி' நிர்வாகம் உதவி வருகிறது. "சன் டிவி'யில் வேலை பார்த்து வரும் பெரும்பாலான ஊழியர்கள், "கலைஞர் டிவி'க்கு தாவ தயாராகி விட்டனர்.

"கலைஞர் டிவி'யில் பணியாற்றுவதற்காக தொழில்நுட்ப பணியாளர் களுக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடந்தது. இதில், "சன் டிவி' ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். தற்போது வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளத்துடன் அவர்களுக்கு பணி நியமன உத்தரவும் நேற்றே வழங்கப்பட்டது. இதேபோல நிருபர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களுக்கான நேர் முகத் தேர்வு இன்று முதல் நடக்க உள்ளது. சன் "டிவி'யின் செய்திப்பிரிவில் பணியாற்றும் முக்கிய நபர்கள் பலர், "கலைஞர் டிவி'யில் பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக ராஜ் "டிவி' நிர்வாகத்துடன் "டிவி' ஊழியர்கள் மொபைல் போனில் ரகசியமாகத் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.இந்த புதிய சேனல் வரும் ஜூன் 3ம் தேதி முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளன்று செயல்பட துவங்குகிறது.

* ராஜ் "டிவி' குழுமத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: தி.மு.க.,வும் ராஜ் "டிவி' குழுமமும் இணைந்து வெகுவிரைவில் ஒரு "டிவி' சேனலை ஆரம்பிக்க உள்ளன. இந்த புதிய சேனலுக்கு "கலைஞர் டிவி' என்று பெயரிடப்பட்டுள்ளது. தி.மு.க., மூத்த தலைவர் களுடன் பேசிய பின் தான், "டிவி' சேனல் ஆரம்பிப்பதற்கான திட்டம் உருவாக்கப் பட்டது. இத்திட்டம் முழு நிறைவு பெற்று செயல்பட துவங்கியுள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வழிகாட்டுதலின்படி இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேனல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவராலும் பாராட்டப்படும் வகையில் இருக்கும். முழுக்க முழுக்க செய்தி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் கலந்த முன்னணி சேனலாக இந்த சேனல் திகழும். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

தற்போது, பெரும்பாலான கேபிள் இணைப்புகள், "சன் டிவி' நிர்வாகம் வசம் உள்ளதால், புதிய சேனலை முக்கியத் துவம் கொடுத்து, "பிரைம் பேண்டில்' ஒளிபரப்புவார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. "அண்ணா அறிவாலயத் தில்' உள்ள சன் "டிவி' அலுவலகத்தை விரைவாக காலி செய்யவும் தி.மு.க., சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. கேபிள் இணைப்புகள் தரும் நிறுவனத்தை மட்டும் அறிவாலயத்திலேயே வைத்துக் கொள்ள தி.மு.க., விரும்புகிறது. சன் "டிவி' இயங்கிய அதே இடத்தில் இருந்தபடி, "கலைஞர் டிவி' செயல்படும் என்றும் தெரிகிறது. புதிய சேனலுக்கு முக்கியத் துவம் தராத பட்சத்தில், கேபிள் இணைப்புகளையும் தி.மு.க.,வே வழங்கும் வகையில் திட்டங்கள் தயாராகி வருகின்றன.

.* சேனல் மாறுகின்றன பிரபல தொடர்கள்: "கலைஞர் டிவி'யில் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒளிபரப்பாக வேண்டிய நிகழ்ச்சிகள் கூட இறுதி செய்யப்பட்டு விட்டன. இப்போது, வேறு சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்கள், "கலைஞர் டிவி'க்கு இடம் மாற முடிவு செய்துள்ளன. குறிப்பாக பெண்களை கவர்ந்த நடிகை ராதிகா நடித்து வரும் பிரபல தொடர், பிரபல மூன்றெழுத்து சினிமா நிறுவனம் தயாரித்து பிற்பகலில் ஒளிபரப்பாகி வரும் தொடர், ஆகியவை விரைவில், "கலைஞர் டிவி'யில் ஒளிபரப்பாகும். இதே போல் பிரபல பட்டிமன்றம், அரட்டை அரங்கம் போன்ற நிகழ்ச்சிகள், சமீபத்தில் திரைக்கு வந்த பிரபலமான சினிமாக்கள் ஆகியவையும், "கலைஞர் டிவி'க்கு இடம் மாறுகின்றன.

Nandri: Dinamalar
http://www.dinamalar.com/2007may21/specialnews1.asp?newsid=2

ஜொலிக்காத கூழாங்கல் - கருணாநிதி கவிதை

பொதுவாக கருணாநிதி எழுதும் கவிதைகளை உடனே வெளியிடும் தினகரன் / தமிழ் முரசு, இந்த கவிதையை வெளியிடவில்லை.
தயாநிதி மாறன் மீது கடும் தாக்கு

"பட்டை தீட்டி பார்த்தும்
ஜொலிக்காத கூழாங்கல்'

கருணாநிதி கவிதை

சென்னை, மே 19:

பட்டை தீட்டிப்பார்த்தும் பலனில்லை என்றும் ஜொலிக்காத கூழாங்கற்கள் குப்பைக்கே போகும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குறித்து ஒரு சூசகமான கவிதையை எழுதியுள்ளார்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி தாம் சொல்ல நினைக்கிற மிக முக்கியமான விஷயங்களை கவிதையாக வெளிப்படுத்துவது அவரது இயல்பு. தமக்கு மிக நெருக்கமானவர்களை எச்சரிக்கவும், அவர்களின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டவும் இந்த கவிதை ஆயுதத்தை அவ்வப்போது கருணாநிதி கையில் எடுப்பது காலங்காலமான நடைமுறை. எதிர்க்கட்சித் தலைவர்களை மிக கடுமையாக சாட வேண்டும் என்றாலும், இதுபோன்ற கவிதைகளைத்தான் அவர் துணைக்கு அழைப்பார்.

மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் தம்முடைய உள்ளத்தில் உள்ளதை வெளிக்கொண்டு வருவதற்கு இதுபோன்ற கவிதைகள் கருணாநிதிக்கு பெரிதும் துணை நிற்கும். அந்த வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பிரச்சனையில் அவரது உள்ளத்தை உருக்கிக்கொண்டிருந்த கருத்தை வெளிப்படுத்த "நினைவுகளின் போர்ப்பாட்டு' என்ற தலைப்பில் கவிதை ஒன்றை இன்றைய "முரசொலி' நாளேட்டில் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.

மாறன், அமிர்தம், செல்வம் மருமகப்பிள்ளைகள் மான்குட்டிகளாய்
மார் மீதும் தோள் மீதும் பாய்ந்து விளையாடிய காட்சியெல்லாம்
ஓய்ந்து போயினவே என் இளமையோடு; அவை ஒழிந்தே போயினவே;
தேய்ந்த என் முதுமைத் தோள்களிலே தாங்கும் வலிமை இல்லாததினால்!
துரோகத்தால் எனைத் துளைத்துச் சென்ற தோழர்கள் சிலரும்
தோள் மீது கை போட்டுத் துணைக்கு வந்துவிட்டோம் என்பதும் கனவுதானே!
""பலிக்காத கனவுகளால் மனம் வலிக்காது
ஜொலிக்காத கூழாங்கற்கள் குப்பைக்கே போகும்
பட்டை தீட்டிப் பார்த்தாலும் பலனில்லை''

இப்படி தயாநிதி மாறன் குறித்து மறைமுகமாக கவிதை மூலம் தம் மன வேதனையை கருணாநிதி வெளியிட்டுள்ளார் என்று தெரிகிறது.

Nandri: Maalai Sudar
http://www.maalaisudar.com/1905/hed_news_4.shtml

Friday, May 18, 2007

கனிமொழிக்கு காமர்ஸ் ?

கனிமொழிக்கு காமர்ஸ் ?

முதல்வரின் மகளுக்கு மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து அளிக்கப்படும் என்றும் காமர்ஸ் துறை (வணிகம்?) கொடுக்கப்படும் என்று செய்தி.

அப்படித்தான் சொல்கிறது இன்றைய டெக்கான் க்ரோனிக்கிள்
க்ளிக்கவும் http://www.deccan.com/chennaichronicle/home/homedetails.asp

DMK: Commerce for Kanimozhi

Chennai, May 17: Ms Kanimozhi, the poet daughter of DMK chief minister M. Karunanidhi, is likely to be inducted shortly into the UPA government with a Cabinet rank in one of the economic affairs ministries, possibly commerce, which is now held by Mr Kamal Nath, informed sources said.

The move could take place once the Congress decides on its nominee to succeed President Abdul Kalam, sources added. Should the present choice of Pranab Mukherjee stick, it is said that finance minister P. Chidambaram could be moved to external affairs and Mr C. Rangarajan, chairman of the Prime Minister’s Economic Advisory Council, may take over the finance ministry. It is said that commerce and industries minister Kamal Nath who has a running battle going with his minister of state Jairam Ramesh over a variety of issues, might be relieved from commerce and allowed to retain industries. The commerce portfolio could then be Ms Kanimozhi’s by the end of the year or sooner, sources said.

“When the UPA government was formed the DMK was allotted a quota of three Cabinet ministers and four ministers of state. After the exit of Dayanidhi Maran, Kalaignar (Karunanidhi) has not filled up the Cabinet post and has only decided on Ms Radhika Selvi as minister of state, taking the total number of DMK’s junior ministers to five. The Cabinet post has been kept vacant for Ms Kanimozhi and she might get the nod soon after the Presidential election, a couple of months after becoming a member of the Rajya Sabha,” sources said.

“Sure, there may be a lot of criticism that Kalaignar is inducting his daughter in the Rajya Sabha and sending her at once into the Central Cabinet. But then, (health minister) Dr Anbumani Ramadoss (PMK) and Dayanidhi Maran too were greenhorns when they were made Union ministers as first-time MPs,” said a DMK senior leader. Initially, it was believed that Ms Kanimozhi would get the forests and environment ministry after Mr A. Raja was moved to Mr Maran’s IT and communications ministry but later it was decided on an economic affairs ministry so that she could be part of influential Cabinet committees on economic and political affairs. With Mr S. Reghupathy (DMK) having been moved from home to forests and environment as the minister of state, it became certain that Ms Kanimozhi would take charge of some other ministry.


Despite being born into a political family, Ms Kanimozhi has kept away from active party work and was content focusing on socio-cultural issues and people’s problems until now. However, the articulate economics graduate is now on a fast-track learning to prepare for a new career as a politician. She was a keen watcher in the visitors’ gallery during the just concluded Budget session of the Tamil Nadu Assembly.

Even while she was getting ready for entering the Rajya Sabha through the biennial election slated for June 15, the sudden exit of her nephew Dayanidhi Maran as the high profile IT and communications minister after a family spat, created a void in the Capital that the First Family has decided to quickly fill up.

Although he was apprehensive until recently that her entry into politics might raise the pitch of opposition criticism, spearheaded by Ms Jayalalithaa of the AIADMK, that he has been promoting his family interests, Mr Karunanidhi recently okayed the political initiation of 39-year-old Kanimozhi. He had planned a firm grounding for his pet daughter in the Rajya Sabha before she could be considered for bigger responsibilities but the Maran affair hastened the decision to get her into the Cabinet, sources said.

While Ms Kanimozhi herself seems hesitant about jumping into national politics so soon and suddenly, sources close to her said she has been assured the support of her influential brothers, state local administration minister M. K. Stalin and southern strongman M. K. Azhagiri, in taking over the position left vacant by a disowned Dayanaidhi Maran —to be Mr Karunanidhi’s loyal representative in the Capital. Mr Maran’s late father Murasoli Maran was the commerce and industries minister in the United Front government and was the architect of the revolt of the developing and underdeveloped nations against the rich at the Doha WTO meet.

Wednesday, May 16, 2007

அழகிரிக்கு மந்திரி பதவி ?

மாநிலங்களவை தேர்தலில் திமுக அதிரடி திட்டம்
அழகிரிக்கு மந்திரி பதவி


சென்னை, மே 16:
முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியை மத்திய அமைச்சராக நியமிக்க திமுக மேலிடம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. நடைபெறவிருக்கும் மாநிலங் களவை தேர்தலில் அவர் திமுக சார்பில் போட்டியிடுவார் என்றும், தயாநிதி மாறன் வகித்த துறையின் அமைச்சராக அவர் விரைவில் நியமிக் கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. அதிமுக சார்பில் 2 பேரும், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தலா ஒருவரும் போட்டியிடும் இந்த தேர்தலின் வேட்பாளர்கள் யார் என்ற விவரமும் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்க ளவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள 18 பேரில் அதிமுகவைச் சேர்ந்த பி.ஜி. நாராயணன், கோகுல இந்திரா, ஆர்.காமராஜ், எஸ்.எஸ். சந்திரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.எஸ்.ஞான தேசிகன், திமுகவைச் சேர்ந்த கே.பி.கே. குமரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் 24ந் தேதியோடு முடிவடைகிறது. காலியாகும் இந்த பதவிகளுக்கு அடுத்த மாதம் 15ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து புதிய உறுப்பினர்களைதேர்ந்தெடுப்பார்கள்.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாக 165 எம்எல்ஏக்கள் இருப்பதால், இக்கூட்டணி சார்பாக நான்கு எம்பிக்களை தேர்ந்தெடுக்க முடியும். அதிமுக மற்றும் மதிமுக சார்பாக 67 எம்எல்ஏக்கள் இருப்பதால் அந்த கூட்டணி இரண்டு இடங்களை பிடிக்க முடியும். திமுக கூட்டணியில் அக்கட்சி இரண்டு எம்பி பதவிகளில் போட்டி யிடுவது என்றும், ஒரு இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குவது என்றும், முடிவெடுக்கப் பட்டுள்ளது.மற்றொரு இடத்தில் காங்கிரஸ் போட்டியிடும்.

திமுக சார்பாக முதலமைச்சரின் மகன் மு.க.அழகிரி அல்லது மகள் கனிமொழிக்கு வாய்ப்பு அளிக்கப் படும் என்று கூறப்பட்டது. ஆனால் அண்மையில் மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதை அடுத்து நிகழ்ந்துள்ள சம்பவங்களை அடுத்து, மு.க. அழகிரிக்கு ஒரு அதிகாரம் வாய்ந்த பதவியை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்தினர் வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பதவியை அழகிரிக்கு வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதன் காரணமாக இப்போதைய சூழ்நிலையில் கனிமொழியை விட அழகிரி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் அவருக்கு மத்தியில் கேபினெட் அந்தஸ்தில் அமைச்சர் பொறுப்பு வழங்கவும் மேலிடம் முடிவு செய்திருப்ப தாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் தயாநிதி மாறன் வகித்த தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையையே அவருக்கு பெற்றுத்தர கட்சி முடிவு செய்திருப்பதாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ராசாவுக்கு அந்த பதவியை அளித்திருப்பது தற்காலிகமான முடிவுதான் என்றும், கேபினெட் அந்தஸ்தில் மந்திரி பதவி தற்போது யாருக்கும் அளிக்கப்படாதது இதை உறுதி செய்வதாக உள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

எஞ்சிய ஒரு சீட்டுக்கு மீண்டும் கே.பி. குமரன் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் திமுகவின் அமைப்பு செயலாளரான டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, கே.பி. ராமலிங்கம், கம்பம் செல்வேந்திரன், இந்திர குமாரி ஆகியோர் இதற்கு போட்டி போடுவதாகவும் கூறப்படுகிறது.

For more click link below

நன்றி: மாலை சுடர்
http://www.maalaisudar.com/1605/hed_news_1.shtml

Tuesday, May 15, 2007

சூடும் சுவையும் நிறைந்த சட்டசபை

தமிழக சட்டசபையின் நீண்ட நெடிய பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று மறுதேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப் பட்டது.

13வது சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல்கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 20ந் தேதி ஆளுனர் உரையுடன் தொடங்கியது. 27ந் தேதி வரை 6 நாட்கள் அந்த கூட்டத் தொடர் நடந்தது. பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ந் தேதி தொடங்கி, நேற்று மே 14ந் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத் தொடர் 35 நாட்கள் நடைபெற்றது.

ஆளுனர் உரையுடன் தொடங் கிய கூட்டத் தொடரில் விவாதங் களில் பங்கேற்காத பிரதான எதிர்க் கட்சியான அதிமுக, பட்ஜெட் கூட்டத்தொடரின் அனைத்து நாட்களிலும் கலந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்றது.

உள்ளாட்சி தேர்தல் முறைகேடு களை கண்டித்து, அந்தத்துறை குறித்த மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்ற 2 நாட்களும் அதிமுக உறுப்பினர்களும், அதன் தோழமை கட்சியான மதிமுக உறுப்பினர்களும் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்தனர். விவாதத்தில் கலந்து கொண்ட பின்னர், வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினின் பதிலுரையை புறக்கணித்தனர்.

இதே போல இடஒதுக்கீட்டு சட்டம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு வந்த போது, பாமக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க அந்த கட்சியின் உறுப்பினர்கள் தினமும் சட்டமன்றத்துக்கு சைக்கிளில் வந்ததும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 41 நாட்கள் நடந்த இந்த கூட்டத் தொடர்களில் சுமார் 166 மணி நேரம் அவை நடந்தது.

ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு முதலமைச்சர் 1 மணி, 23 நிமிட நேரம் பதிலளித்தார். பட்ஜெட் மீது நடந்த விவாதத்துக்கு நிதி அமைச்சர் 57 நிமிடம் பதிலளித்தார். 51 மானிய கோரிக்கைகள் மீது விவாதம் 26 நாட்கள் நடைபெற்றது. இதில் 223 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். காவல் துறை மானிய கோரிக்கை மற்றும் தொழில்துறை மானிய கோரிக்கை மீது முதலமைச்சர் மொத்தம் 2 மணி 22 நிமிடம் பதிலளித்தார்.
மானிய கோரிக்கை மீது மற்ற அமைச்சர் கள் 18 மணி நேரம் பதிலளித்தனர். இதில் 1 மணி 50 நிமிடம் உள்ளாட்சிதுறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார். இதுதான் அமைச்சர்கள் பதிலுரையில் அதிக நேரமாகும்.

இந்த கூட்டத் தொடர்களில் மிக அதிக நேரம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசியுள்ளனர். இவர்கள் 61 முறை, 18 மணி 55 நிமிடம் பேசினார்கள். இதற்கு அடுத்தபடியாக அதிமுக உறுப்பினர்கள் 52 பேர், 18 மணி, 18 நிமிடம் பேசியுள்ளனர். மூன்றாவதாக பாமக உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிட்டியது. இவர்கள் 45 முறை, 11 மணி 52 நிமிடம் பேசினார்கள்.
ஆளுங்கட்சியான திமுக உறுப்பினர்கள் 53 முறை விவாதத்தில் பங்கேற்ற போதிலும், 11 மணி 13 நிமிடம் தான் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. பிரதிநிதித்துவத்துக்கு தகுந்தமாதிரி மற்ற கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா இந்தக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஒரே ஒருநாள் வந்து லாபியில் கையெழுத்துப் போட்டுவிட்டு சென்றுவிட்டார்.

ஒரே உறுப்பினரை கொண்ட தேமுதிக இந்த விவாதங்களில் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் உறுப்பினர் விஜயகாந்த் சில நாட்கள் மட்டுமே அவைக்கு வந்த போதிலும், அவர் எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை.

அதிமுக உறுப்பினர் எஸ்.வி. சேகர் இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது. அவர் ஆரம்பத்தில் ஓரிரு நாட்கள் அவைக்கு வந்த போதிலும், விவாதம் எதிலும் பேசவில்லை. அதே போல மதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.கண்ணப்பனும் சில நாட்கள் மட்டுமே அவைக்கு வந்தார். இலங்கை தமிழர் பிரச்சனையில் பேசியது தவிர, அவர் முக்கிய விவாதம் எதிலும் கலந்து கொள்ளவில்லை.

அதிக வினாக்களை தொடுத்தவர்கள் வரிசையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோவை தங்கம் முதலிடத்தில் உள்ளார். இவர் 4,210 வினாக்களை தொடுத் துள்ளார். இதற்கு அடுத்தபடியாக அதிமுக உறுப்பினர்கள் ம. குணசேகரன் (3772 வினாக்கள்), டி. ஜெயகுமார் (1992 வினாக்கள்) ஆகியோர் உள்ளனர். அடுத்த இரண்டு இடத்தை பாமக உறுப்பினர்கள் தமிழரசு, ஆறுமுகம் ஆகியோர் பிடித்தனர்.

மொத்தம் 19 சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மா னங்களும், 43 தகவல் கோரல் முறையில் பிரச்சனைகளும் அனுமதிக்கப்பட்டன. 30 சட்டமுன்வடிவுகள் அறிமுகம் செய்யப் பட்டு, 29 நிறைவேற்றப் பட்டன. அரசினர் தனி தீர்மானம் ஒன்றும் நிறைவேறியது. கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று சபாநாயகர் மீது அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதிக்கப் பட்டு, தோற்கடிக்கப்பட்டது.

பொதுவாக எதிர்க்கட்சி உறுப்பினர் களுக்கு பேசுவதற்கு மிக அதிக நேரம் ஒதுக்கப்பட்டது. இடையில் ஒருநாள் ஏற்பட்ட அமளியை அடுத்து சில நாட்கள் அதிமுகவுக்கு ஒருநாளைக்கு ஒரு உறுப்பினர் மட்டும் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அலுவல் ஆய்வு குழுவில் எடுத்த முடிவின்படி 2 உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதிமுக உறுப்பினர்களின் நேர விஷயத்தில் கறாராக இருந்த சபாநாயகர், தோழமை கட்சி உறுப்பினர்கள் விஷயத் தில் அத்தகைய கண்டிப்பை கடைப் பிடிக்கவில்லை என்பது கண்கூடாக தெரிந்த உண்மை. அதே சமயம் துணை சபாநாயகரோ, யாருக்கும் தயவு தாட்சண்யம் காட்டாமல் ஒதுக்கப்பட்ட நேரத்துடன் உறுப்பினர்களின் பேச்சை நிறுத்தி, கட்டுப்பாட்டுடன் சபையை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நீண்ட நெடிய பேரவை கூட்டத் தொடரின் போது நடந்த அமளியில் அதிமுகவைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் கூட்டத் தொடர் முழுமைக்கும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்பும் ஒருநாள் நடந்த அமளியில் அதிமுக உறுப்பினர் சி.வி. சண்முகம் கூட்டத் தொடர் முழுமைக்கும் நீக்கிவைக்கப்பட்டார்.

அந்த நேரங்களில் முதலமைச்சர் அவையில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவர் அவையில் இருந்த நேரங் களில், விவாதங்களில் சூடு பறந்தால், அதை தமக்கே உரிய சமயோசிதத்துடன், நகைச்சுவையுடன் குறுக்கிட்டு, நெருப்பு மீது தண்ணீர் தெளித்து சூட்டை தணிப்பது போல இயல்புநிலைக்கு கொண்டுவந்த நிகழ்வுகளுக்கும் இந்த கூட்டத் தொடரில் பஞ்சமில்லை.
பொதுவாக ஆளும்கட்சியும், எதிர்க் கட்சியும், எலியும், பூனையுமாக கருதப்படும் நிலையில், முதலமைச் சரின் நகைச்சுவை மிளிர்ந்த “கமெண்ட் களை' எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புன்னகையுடன் ரசித்துக் கேட்டு கொண்டிருந்ததையும், எதிர்க்கட்சி யினரின் குற்றச்சாட்டுகளை, அமைச் சர்கள் பல நேரங்களில் சிரித்து கொண்டே கேட்டு கொண்டிருந்ததை யும் இந்த கூட்டத் தொடர் முழுமைக் கும் காண முடிந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக சில மூத்த அமைச்சர்களும், எதிர்க்கட்சி வரிசையில் சில மூத்த உறுப்பினர்களும் அவையிலேயே சகஜமாக உரையாடியதும் அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்து வதாக அமைந்தது. ஆனால் இந்த நாகரீகம் கட்சிகளின் தலைமைகளுக்கு இடையே இல்லாதது ஏக்கத்தையும் ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பல விவாதங்களில் கலந்து கொண்ட துடன், பல நேரங்களில் விவாதங் களின் போது இடையில் குறுக்கிட்டு, நகைச்சுவையுடன் கருத்துக்களை எடுத்துரைத்ததன் வாயிலாக அவருள் ஒளிந்திருந்த இப்படியொரு திறமை வெளிப்பட்டது.

முதலமைச்சரின் சட்டமன்ற பணி பொன்விழாவுக்காக இடையில் 2 நாட்கள் நடந்த சிறப்பு கூட்டத்தை தவிர, பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்ற நாட்களில் அவைக்கு வந்து விவாதத்தில் கலந்து கொண்டது பாராட்டத்தக்கதாகும்.

நன்றி: மாலை சுடர்
http://www.maalaisudar.com/1505/pol_news_4.shtml

சாம்பாரும் வடையும்

சாம்பாரும் வடையும்

இது இட்லி வடைக்கு போட்டி இல்லை :-)

சாம்பார் என்றவுடன் நினைவுக்கு வருபவர் ஜெமினி

வடை என்றவுடன் நினைவுக்கு வருவது தமிழகத்தின் டீக்கடைகள்

இது ஒரு மொக்கைப் பதிவு.

என்ன எழுதலாம் ?

என்ன எழுதலாம் ?

இந்த வலைப்பதிவைத் துவக்கியபிறகு என்ன மாதிரி பதிவுகள் போடலாம் என யோசித்தபோது தோன்றியவை - தமிழர்களுக்கு செய்திகளின் மீதுள்ள ஆர்வம் புரிந்தது. அதுவும் தமிழ்நாட்டில் ஏதாவது நடந்தால் அது உடனடியாக வலையுலகில் புயலை உருவாக்கி பின்னர் கரையைக் கடக்கிறது.

ஆகவே இந்த வலைப்பதிவில் பெரும்பாலும் செய்திகளும், சில சுவாரசியமான விஷயங்களும் பகிரப்படும்.

பின்னூட்டமிடுபவர்களுக்கு உடனடியாக பதில் வராது (நேரமின்மையே காரணம்)

உங்கள்
சாம்பார் வடை

Saturday, May 12, 2007

முதல் முயற்சி

இது முதல் முயற்சி.

அனைவருக்கும் சாம்பார் வடையின் வணக்கங்கள்