Wednesday, February 27, 2008

தயாநிதிக்கு கருணாநிதி எச்சரிக்கை

அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து அவருக்கு முதலமைச்சர் கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"தோளில் தூக்கி வளர்த்தோரும் வாளைத் தூக்குகின்றார்; வசைமாரி பொழிகின்றார்' என்று அவரை மிக கடுமையாக சாடியுள்ள கருணாநிதி, திராவிட இயக்க தருவை வீழ்த்த நினைத்தால் கண்ணில் விரலை விட்டு ஆட்ட கழக பாசறை வீரர்கள் உண்டு என எச்சரித்துள்ளார்.

முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்திற்கும், மறைந்த முரசொலிமாறன் குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. சுமங்கலி கேபிள் விஷன் (எஸ்சிவி) நிறுவனத்திற்கும், ஹாத்வே நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட போட்டியில் போலீசார் எஸ்சிவி கேபிள் டிவி ஆபரேட்டர்களை கடத்திச் சென்று மிரட்டுவதாக அண்மையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லிக்கு சென்ற அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்தித்து இது பற்றி அவரிடம் விளக்கியதாக கூறப்படுகிறது. கேபிள் டிவி பிரச்சனையில் தனக்கும் தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனுக்கும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்ப தாகவும், அதனால் தங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சோனியாவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், தயாநிதி மாறனுக்கு முதலமைச்சர் கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக திமுகவின் கட்சி பத்திரிகையான முரசொலி நாளிதழில் அவர் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கவிதையில், "நான் பெற்ற பிள்ளையை தூற்றும் பிரகலாதன்' என்று தயாநிதிமாறனை பெயர் குறிப்பிடாமல் முதலமைச்சர் கருணாநிதி மிகக்கடுமையாக சாடியுள்ளார்.

தோளில் தூக்கி வளர்த்த மாறன் சகோதரர்கள் திமுகவுக்கு எதிராக செயல்படுவது குறித்து குறிப்பிட்டுள்ள கருணாநிதி, திராவிட இயக்கத்தை வீழ்த்த நினைத்து கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு அலைந்தால், அவர்களது கண்ணில் திமுகவினர் விரலை விட்டு ஆட்ட நேரிடுமென எச்சரித்துள்ளார்.

தயாநிதிமாறனுக்கு எச்சரிக்கை விடுத்து கருணாநிதி எழுதியுள்ள கவிதை வருமாறு:

நாடு போற்றிய நல்லறிவாளனே

ஏடு புகழ் என்னருங் கண்மணியே!

தோகாவில் திறன்காட்டி இந்தியத் திருநாட்டின் கீர்த்தி

தொல் புவியில் நிலைநாட்டியவனே!

இங்கிலாந்துப் பிரதமரை சந்தித்துப் பேசியபின்;

"இத்தனைக்கும் காரணம் இந்த மாமன் தான்' என்று;

எழுதி நீ அனுப்பிய கடிதத்தில்

இறுதி வாசகமாய் "நான் உங்கள் வளர்ப்பன்றோ' என்று

அன்றைக்கு நீ இலண்டன் மாநகர் இருந்து மடல் எழுதி

நன்றியினைக் குன்றின் மேல் இட்ட விளக்காக

ஏற்றி வைத்து; இன்றைக்கும் எனை அழவைக்கும் அன்பே, ஆரமுதே!

தூற்றுகின்றான் நான் பெற்ற பிள்ளையினை; நீ பெற்ற பிரகலாதன்!மகனே
ஆயினும் தவறு செய்யின் மன்னிக்காமல் கண்டிக்கின்ற

மனு நீதிச் சோழன் பிறந்த மண்ணுக்குச் சொந்தக்காரன் நான்;

தோளுக்கு நிகராக வளர்ந்தோரின் பகை கண்டுள்ளேன் இன்று நான்

தோளில் தூக்கி வளர்த்தோரும் வாளைத் தூக்குகின்றார்;

வசைமாரி பொழிகின்றார்

மானம் போற்றுதற்கும் திருக்குறள் தரும் மறை நீதி

மறையாமல் காப்பதற்கும் இந்தத் தமிழ்

மண்ணில் நிலைத்த திராவிட இயக்கத் தருவை வீழ்த்த நினைத்து

கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு அலைவோரின்

கண்ணில் விரலை விட்டு ஆட்டுதற்கும் கழகப் பாசறை வீரர்கள்

எண்ணற்றோர் உண்டு; எதிரிகள் ஓடி ஒளியட்டும் இதனை

எச்சரிக்கையாகக் கொண்டு!



செய்தி: நன்றி:
மாலைச்சுடர்

Monday, February 25, 2008

மு.க.முத்து - 60

தனது மூத்த மகன் மு.க.முத்து மணி விழாவில் கருணாநிதி கலந்து கொண்டு வாழ்த்தினார்.

முத்துவுக்கு 60 வயது நிறைவடைவதையொட்டி நேற்று மணி விழா நடந்தது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பாரதி அவென்யூவில் உள்ள மு.க.முத்துவின் மகள் தேன்மொழி ரங்கநாதன் வீட்டில் இதையொட்டி எளிய விழா நடைபெற்றது.

இதில் கருணாநிதியின் மறைந்த முதல் மனைவியும் மு.க.முத்துவின் தாயாருமான பத்மாவதி அம்மாளின் உருவப்படத்திற்கு தயாளு அம்மாள் விளக்கேற்றி வைத்தார்.

மேலும் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி. ஆகியோரும் முத்து தம்பதியை வாழ்த்தினர்.

இதில் முதல்வரின் அக்கா சண்முகசுந்தரம்மாள், மகள் செல்வி, மருமகன் முரசொலி செல்வம், முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன், முதல்வரின் மகன் தமிழரசு ஆகியோரும் பங்கேற்றனர்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்


படம்: நன்றி: தினமலர்

Thursday, February 21, 2008

ராமதாஸ் கருணாநிதி சந்திப்பு




2009 மக்களவை தேர்தலிலும் திமுகவுடனான தமது கட்சி கூட்டணி தொடரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். ஆளும் கட்சியுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் இன்று ராமதாஸ் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசிய பிறகு இவ்வாறு கூறினார்.

வேளாண்மை, மகளிர் முன்னேற்றம், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு தனித்தனி பட்ஜெட் சமர்ப்பிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பல்வேறு பிரச்சனைகளில் முதல்வர் கருணாநிதிக்கும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும் மோதல் ஏற்பட்டது. கூட்டணியில் பிளவு ஏற்படும் நிலைமை ஏற்பட்டது.
இந்த நிலையில் முதலமைச்சர் கருணாநிதியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார்.

கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று காலை 9.05 மணியளவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார். 9.45 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு ராமதாஸ் பேட்டி அளித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய திமுக கூட்டணியிலேயே பாமக நீடிக்கும் என்று அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளு மன்ற தேர்தலில் இதே கூட்டணியில் பாமக நீடிக்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ் இவ்வாறு கூறினார்.

"நூற்றுக்கு இருநூறு சதவீதம் உறுதியாகச் சொல்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதே திமுக கூட்டணியில்தான் பாமக நீடிக்கும் என்று நான் பல முறை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதனை இப்போதும் உறுதிப்படுத்துகிறேன்'' என்று ராமதாஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: முதலமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க போவதாக ஏற்கனவே நான் அறிவித்திருந்தேன். தமிழகம் முழுவதும் கட்அவுட்கள், விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் என பட்டித்தொட்டி முதல் சிற்×ர், பேரூர் வரை நீக்கமற நிறைந்து தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது.

இதனைக் கண்டித்து முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டபோது நான் அவரை நேரில் சந்தித்து பாராட்டும், நன்றியும் தெரிவிப்பேன் என்று அறிவித்ததற்கு இணங்க இன்று நான் முதல்வரை சந்தித்தேன்.

வரும் 26ந் தேதி முதல் மார்ச் 1ந் தேதி வரை தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு மது ஒழிப்பு பிரச்சார இயக்கம் நடத்த உள்ளேன். இது குறித்தும் படிப்படியாக மதுவை தமிழ்நாட்டில் முழுமையாக ஒழிப்பது குறித்தும் முதலமைச்சரிடம் சில ஆலோசனைகளை தெரிவித்தேன்.

மது ஒழிப்பு தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் வெளியிட்டுள்ள அரசாணை ஒன்றையும் முதலமைச்சரிடம் வழங்கி இதே அடிப்படையில் தமிழகத்தில் நாமும் மது ஒழிப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என்று கூறினேன்.

இது தவிர, 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் உறுதிபடுத்தப்பட்டிருப்பது நமக்கு கிடைத்த வெற்றி. எனவே இதற்காகவும் முதல்வருக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தேன்.

மொழிப் பாடங்களைத் தவிர அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட மற்ற பாடங்களையும் தமிழ் வழியில் கற்பிக்க வேண்டும் என்ற கருத்தை முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன்.
இந்தியாவின் 18 தேசிய மொழிகளை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கருத்து மத்திய அரசின் செயல் திட்டத்தில் அப்படியே உள்ளது; இன்னும் அது நடைமுறைப்படுத்தப் படவில்லை.

எனவே நீங்கள் (முதலமைச்சர்) முயற்சி எடுத்தால்தான் இதனை செயல்படுத்த முடியும்; உடனே முயற்சி மேற்கொள்ளுங்கள் என்றும் முதல்வரிடம் கூறினேன். விரைவில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாகவும் இரண்டு, மூன்று யோசனைகளை முதலமைச்சரிடம் தெரிவித்தேன்.

மத்திய பட்ஜெட் தாக்கலாகும் முன்பு நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார்கள். அதே போல ஒரு வரைவு அறிக்கையை நாமும் தயார் செய்து பட்ஜெட்டிற்கு முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினேன். அதற்கு, பார்க்கலாம் என்று முதலமைச்சர் விடை அளித்தார்.

மேலும் விவசாயம், மகளிர் முன்னேற்றம், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு தனித்தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் ஆலோசனை தெரிவித்தேன்.

தேசிய அனல் மின் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டிற்கு ஒரு மின் உற்பத்தி நிலையம் கூட அறிவிக்கப்படவில்லை. தற்போது சங்கரலிங்கம் என்ற தமிழர்தான் அதன் தலைவராக இருக்கிறார். இதனைப் பயன்படுத்தி தமிழகத்திற்கு புதிய அனல் மின் நிலையம் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தையும் முதலமைச்சரிடம் நான் கூறினேன்.

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டின் துவக்க நாளாக தமிழக அரசு அறிவித்ததற்கும் முதலமைச்சருக்கு நன்றி கூறினேன். பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு உயர்த்தினாலும் தமிழ் நாட்டில் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்றும் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தேன் என்றார் ராமதாஸ்.


செய்தி: நன்றி: மாலைச்சுடர்

Wednesday, February 20, 2008

ஜெ. 60 ஒரு பார்வை

இன்று மாசி மகம். ஜெ. தனது 60ஆவது பிறந்தநாள், சஷ்டியப்தபூர்த்தி (எ) மணிவிழாவை திருக்கடையூர் அபிராமி அம்மன் - அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ருத்ர ஏகாதசி, ஹோமங்கள், அபிஷேகங்களுடன் கொண்டாடுவதாக செய்தி. வாழ்த்துக்கள்..!



படம்: நன்றி: தினமலர்

பொதுவாக சஷ்டியப்தபூர்த்தி (எ) மணிவிழா என்பது கணவன் - மனைவி - தம்பதியினர்தானே கொண்டாடுவார்கள். திருமணம் செய்துகொள்ளாத ஆணோ, பெண்ணோ இந்த மாதிரி செய்துகொண்டு பார்த்ததில்லை. இது என்ன புது மாதிரி மாலை மாற்றல் என புரியவில்லை. இது மாதிரி நீங்கள் எங்காவது பார்த்திருந்தால் தெரியப்படுத்தவும்.

{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

இனிமேலாவது ஜெ. என்ன செய்யவேண்டும் (எமது wish list)

* உ.பி.ச மற்றும் சுற்றத்தினரை கட்சியிலோ (ஆட்சியில் இருந்தால் அரசிலோ தலையிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

* நல்ல இரண்டாம் கட்டத்தலைவர்களை தயார் செய்யவேண்டும். அவர்களுக்கு வாய் திறந்து பேசவும் கருத்துகளைச் சொல்லவும் உரிமை கொடுக்கவேண்டும்

* 'தான்' என்ற நிலையிலிருந்து முடிவு எடுக்காமல் மற்ற தோழமை மற்றும் கூட்டணி கட்சிகளை, தலைவர்களை அரவணைத்துச் செல்லவேண்டும்

* தனக்குக் குடும்பமோ, வாரிசுகளோ இல்லையென்ற (அறியப்பட்ட) நிலையில் சொத்து சேர்த்தோ, கமிஷன் வாங்கியோ கட்சிக்கும்/அரசுக்கும் கெட்ட பெயர் சேர்க்கும் ஆட்களை தூர விலக்கவேண்டும்

* யாரோ கொடுத்த அறிக்கைகளை தினமும் விடுக்காமல், பொதுமக்களையும், பத்திரிக்கையாளர்களையும், தொழிலதிபர்களையும், தலைவர்களையும் தினமும் சந்தித்து மக்கள் தொடர்பில் நல்ல பெயர் எடுக்கவேண்டும்.

* கோபத்தைக் கட்டுப்படுத்தி தனக்குப் பிடிக்காதவர்களை பழிவாங்கியே தீருவது போன்ற நிலைகளை மாற்றிக்கொள்ளவேண்டும்

* தமிழ்நாட்டுக்கு மிகவும் சிறந்தவகையில் மழைநீர் சேகரிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தியது
மாதிரி அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டு நதீநீர்ப் பங்கீட்டில் நல்ல முன்னேற்றம் காணவேண்டும்.

* அடிக்கடி ஹைதராபாத், சிறுதாவூர், கோடநாடு என எஸ்ஸாக இருக்காமல் தனது இருப்பை மக்களுக்காக மாற்றவேண்டும்.

இதெல்லாம் நடக்குமா, தமிழகத்தில் சாத்தியமா ? இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு
ஜெ.வின் பீமரத சாந்தியில் 70ஆவது பிறந்தநாளில் தெரியும்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


செய்தி: நன்றி: மாலைச்சுடர் 20-02-2008

சிறப்பு பூஜை


நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் காலசம்ஹார மூர்த்தி, பாலாம்பிகையுடன் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார். இங்கு சிவபெருமான் மார்கண்டேயருக்கு சிரஞ்சீவி வரம் கொடுத்ததாக ஐதீகம்.

60 வயது துவங்குபவர்கள் சஷ்டியப்த பூர்த்தி மற்றும் ஆயுள் ஹோமம் செய்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

ஜெயலலிதா, மக நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் நட்சத்திரப்படி நாளை அவரது பிறந்தநாள் விழா இதையொட்டி, சஷ்டியப்த பூர்த்திக் கான சிறப்பு பூஜைகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருக்கடையூர் கோயிலில் அதே ஊரைச் சேர்ந்த குருக்கள் தான் பூஜை செய்வது வழக்கம். வேறு குருக்கள் அங்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் ஜெயலலிதாவுக்காக மன்னார்குடியைச் சேர்ந்த கணேச குருக்கள் தலைமையில் வேத விற்பன்னர்கள் இந்த பூஜையை மேற்கொள்கிறார்கள்.

இன்றிரவு ருத்ராபிஷேகத்துடன் பூஜை தொடங்குகிறது. பின்னர் காலசம்ஹார மூர்த்தி அபிஷேகம் நடைபெறுகிறது. சஷ்டியப்த பூர்த்தி, ஆயுள் ஹோமம், முதல் கால பூஜை இன்றிரவு நடைபெறுகிறது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.

பின்னர் மக நட்சத்திரம் நாளை துவங்கும் போது, 2வது கால பூஜையில் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். ஜெயலலிதா தங்குவதற்காக பிள்ளை பெருமாள் நல்லூர் விருந்தினர் மாளிகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Monday, February 18, 2008

முலாயம் பிரதமர் வேட்பாளர்



போயஸ் தோட்டத்து அம்மா கூட பிரதமாரவணும்னு கனவு கண்டாங்க போலிருக்கே. நாயுடுவும் (இரட்டை விரலைக் காட்டி) இன்ன பிறரும் அந்த ஆசைக்கு ஆப்பு வெச்சுட்டாங்க. தமிழ்நாட்டுக்கு 2011ல் பல முதல்வர்கள் மாதிரி இந்தியாவுக்கும் 2009ல் பல பிரதமர்கள் வருவாங்க போல.

ஏற்கனவே அத்வானிதான் பிரதமர் வேட்பாளர்னு பாஜக அறிவிச்சாங்க. அப்புறம் மாயாவதி தான் பல மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்திவருவதால் தானே பிரதமர் அப்படீன்னாங்க. மன்மோகன் சிங் - அவரைப் பத்தி யாரும் பிரதமர்னு சொல்ல மாட்டேங்கிறாங்களே :-)

என்னவோ போங்க ..!!!!!

:::::::::::::::::::::::::::::::::::::::::::

3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அதன் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வரு மான முலாயம் சிங் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு 100 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்றும், முலாயம் சிங் யாதவ் தலைமையில் அடுத்த ஆட்சி அமையும் என்றும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய முலாயம் சிங் யாதவ், ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அந்தந்த மாநிலங்கள் வளர்ச்சி பெற்று வருவதாக தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில் மட்டுமே தங்கள் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


படம்: நன்றி: தினமலர்

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

Sunday, February 17, 2008

கருணாநிதி கலக்கம்

அரசியலில் தனது மூத்த மகனை ஆதரிப்பதா? அல்லது மு.க.ஸ்டாலினுக்கு மகுடம் சூட்டுவதா? என்பது குறித்து முதலமைச்சர் கருணாநிதி கலங்குவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வருகிற 20ந் தேதி மந்திரிசபையில் மாறுதல் செய்ய முதல்வர் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தனக்கு வேண்டியவர்களுக்கு மந்திரி பதவி வேண்டும் என்று ஸ்டாலின் நிர்பந்தம் செய்ததால், மந்திரி சபை மாறுதலை கைவிட்டு விட்டு இலாகா அளவில் மாறுதல் செய்ய முதல்வர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
.
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஜப்பான் சென்று வந்தார். அப்போது சென்னை பெருநகர மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ஜப்பான் வங்கியின் நிதியுதவி குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ஜப்பான் நிதி உதவி வழங்க ஒப்பந்தம் ஏற்பட்டது. ஜப்பான் பயணத்துக்கு பிறகு சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலினை வரவேற்க சென்னை நகரில் ஒட்டப் பட்டிருந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

ஒகேனக்கல் குடிநீர் திட்டமும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டமும் மு.க.ஸ்டாலின் முயற்சியின் காரணமாக வெற்றி பெற்றது போன்ற வாசகங்களை அந்த போஸ்டர்கள் கொண்டிருந்தன.

தான் முதலமைச்சராக இருக்கும் போதே, தன்னுடைய திட்டங்களுக்கு மகன் உரிமை கொண்டாடுவதை முதல்வராய் ஏற்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

அத்துடன் ஸ்டாலினின் மகன் உதயநிதி புதுக்கோட்டை சென்ற போது அவரை வரவேற்று வைக்கப் பட்டிருந்த போஸ்டர்கள் மட்டுமின்றி மணமக்கள் அவர் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் கட்சி மேலிடத்தை அதிர்ச்சியடையச் செய்ததாக கூறப்படுகிறது.

இதேபோல மற்ற வாரிசுகளும் செய்யஆரம்பித்தால் கட்சியில் பெரும் பூகம்பம் ஏற்படும் என்பதை உணர்ந்தேதான் ஆடம்பர விளம்பரங் களுக்கு முதல்வர் கருணாநிதி தடை விதித்து அண்மையில் அறிக்கை விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் முதல்வரின் மூத்த மகனான அழகிரி கட்சிக்கு உழைக்கும் நபர்களுக்குத்தான் உதவி செய்கிறார். அதனால் கட்சி பலம் பெறுகிறது என்ற எண்ணம் கட்சித் தலைமைக்கு அண்மைக் காலமாக ஏற்பட்டு வருகிறது.

ஆனால் உள்ளாட்சித்துறை அமைச்சரோ தனது துதிபாடிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது கட்சித் தலைமையை சிந்திக்க வைத்திருப்ப தாக கூறப்படுகிறது.

தென் மாவட்டங்களை தன் கைப்பிடியில் வைத்திருக்கும் அழகிரி அண்மையில் சென்னைக்கு மூன்று நாள் முகாமிட்டு நடத்திய ஆலோ சனைக்கு பிறகு கேபிள் டிவி பிரச்சனையில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற மூத்த மகன் அழகிரிக்கு ஆதரவு கொடுப்பதா? அல்லது இளைய மகன் ஸ்டாலினுக்கு மகுடம் சூட்டுவதா என்று முதல்வர் குழம்புவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனிடையே வருகிற 20ந் தேதி தமது அமைச்சரவையில் மாறுதலை செய்ய முதல்வர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. புகார்களுக்கு ஆளான அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க அவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் உள்ளாட்சித்துறை அமைச்சர் தனக்கு வேண்டிய சிலருக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. எனவே வம்பே வேண்டாம் என்று கருதிய கட்சித் தலைமை மந்திரி சபை மாறுதலை கைவிட்டதாக கூறப் படுகிறது.

அமைச்சர்களின் இலாக் காக்களின் மாற்றம் மட்டுமே செய்வது என்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

News: Maalaisudar

Friday, February 15, 2008

வீரமணிக்கு வசந்தகுமார் கண்டனம்

பெரியார் , திராவிட கழகத்திற்கு சேர்த்து வைத்துள்ள சொத்தை சுகபோகமாகவும், சொகுசாகவும் அனுபவிப்பதற்காகவே பிறந்து வளர்ந்துள்ள வீரமணி மாநிலத்தில் யார் ஆட்சியில் அமர்ந்துள்ளார்களோ அவர்களுக்கு வெண்ஜாமரம் வீசுவது வீரமணி கண்ட பகுத்தறிவு கொள்கையாகும்.

சென்னை, பிப்.15: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தந்தை சுதந்திர போராட்ட வீரர். தேசப்பக்தி குடும்பத்தில் பிறந்த விஜயகாந்தோடு காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசுவது தேசவிரோத செயல் அல்ல என்று வர்த்தக காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பி னருமான எச்.வசந்தகுமார் கூறியிருக்கிறார்.
.
இந்த சந்திப்பை குறை கூறிய திராவிட கழக பொதுச் செயலாளர் வீரமணிக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். எச்.வசந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அருண் குமார்விமான பயணத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை ஏதேச்சையாக விமானத்தில் சந்தித்துள்ளார்.
இரண்டு அரசியல் முக்கிய தலைவர்கள் முதல் முறையாக சந்திக்கிற போது நாட்டைபற்றி பேசிக்கொள்வது வழக்கமான ஒன்றுதான்.

இதுகூட புரிந்து கொள்ள இயலாத பகுத்தறிவு காவலர் கி. வீரமணி , அவர்களுடைய சந்திப்பிற்கு புதிய காரணம் கண்டுபிடித்து அங்கலாய்த்து இருக்கிறார். மத்தியில் ஆளும் ஐக்கிய முன்னணியிலோ, தமிழகத்தில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியிலோ அங்கம் வகிக்காத வீரமணி, தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அருண் குமார் பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் அற்றவர்.

சுயமரியாதை சுடர் தந்தை பெரியார் , திராவிட கழகத்திற்கு சேர்த்து வைத்துள்ள சொத்தை சுகபோகமாகவும், சொகுசாகவும் அனுபவிப்பதற்காகவே பிறந்து வளர்ந்துள்ள வீரமணி மாநிலத்தில் யார் ஆட்சியில் அமர்ந்துள்ளார்களோ அவர்களுக்கு வெண்ஜாமரம் வீசுவது வீரமணி கண்ட பகுத்தறிவு கொள்கையாகும்.

கடந்த ஆட்சியின் போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டப்பேரவை யிலேயே நான் பாப்பாத்தி தான் என்று பேசியபோது ஆனந்தப்பட்ட வீரமணி, ஏதேச்சையாக விமானப் பயணத்தின் போது சந்தித்த தலைவர் அருண் குமாரை பார்ப்பனர் என்று குறிப்பிட்டிருப்பது அவருடைய பெரியாரிச தத்துவத்தின் மேதாவி தனத்தை காட்டுகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் தந்தை சுதந்திர போராட்ட வீரர். தேசபக்தி குடும்பத்தில் பிறந்தவர் விஜயகாந்த். அவரோடு காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசுவது தேச விரோத செயல் அல்ல.

காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சியையும் காங்கிரஸ் தொண்டர்களிடையே எழுச்சியையும் உருவாக்கு வதற்காகவே பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் அருண் குமார்.
கூட்டணி பற்றி முடிவு எடுப்பது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியாதான்.
ஏதேச்சையாக விமான பயணத்தில் விஜயகாந்த்தை சந்தித்ததனாலேயே கூட்டணி மாறிவிடும். அல்லது கூட்டணிக்கு துரோகம் செய்கிறார் என்ற அபூர்வ கண்டுபிடிப்பு வீரமணியின் பகுத்தறிவை பறைசாற்றுவதாக உள்ளது.

கருணாநிதியின் கவனத்தை ஈர்க்க கருணாநிதியுடைய எத்தனையோ சாதனைகளை பாராட்டுவதை விட்டுவிட்டு, விமான பயணத்தின் போது சந்தித்துக்கொண்ட தலைவர்களின் நற்பண்பை கலகம் மூட்டும் விதமாக கருத்து வெளியிட்டிருப்பது பகுத்தறிவு வாதிக்கு உகந்ததல்ல என்பதை வீரமணி உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

News: Maalaisudar

Monday, February 11, 2008

ஸ்மார்ட் ஸ்டாலின்

முதல்வர் கருணாநிதி மஞ்சள் துண்டு அணியாத படம் (அரிது அல்லவா ?)

அதைவிட ஸ்டாலின் தான் மிகவும் ஸ்மார்டாக இருக்கிறார். முன்பு பாங்காக், இப்போ ஜப்பான் என உலகம் சுற்றும் வாலிபராக மிகவும் ஸ்மார்டாக காட்சியளிக்கிறார். கலைஞரும் மிக ஸ்மார்டாகத் தான் இந்தப் படத்தில் தெரிகிறார்.

(முதல்வர் ஏன் நேத்திக்கு டெல்லிக்கு மோண்டேக் சிங் அலுவாலியாவைச் சந்திக்கப் போவலை ?)

படம்: நன்றி: தினமலர்

முழுப்படத்தைப் பார்க்க படத்தின் மீது க்ளிக்கவும்



உள்ளாட்சித்துறை அமைச்சரை - உள்துறை அமைச்சர் என போடும் தினமலர் உதவி ஆசிரியருக்கு குட்டு.!

அரங்கத்தில் மழையில் ரிக்கார்ட் டான்ஸ் ?

மானாட மயிலாட மார்பாட மழையாட

ஞாயிறன்று கலைஞர் டிவியில் தங்கத்தாரகை நமீதா புகழ் மானாட மயிலாட மார்பாட மழையாட நிகழ்ச்சியைக் காணத்தவறியவர்கள் நிச்சயம் ரீப்ளே (அடுத்த சனிக்கிழமை?) பார்த்துவிடுங்கள்

தொலைக்காட்சி ஆட்டத்திலேயே மழைபெய்ய அரங்கத்தினுள்ள் நீர் சொரிய ஜோடிகள் குத்தாட்டம் போட, இன்னும் ரிக்கார்ட் டான்ஸ்/ காபரே அளவிற்கு ஆடை வீச்சு தான் பாக்கி.

வாழ்க தமிழ் தொலைக்காட்சி.. வளர்க அவர்தம் டிஆர்பி ரேட்டிங்.

(ராமதாஸ் இந்த வார நிகழ்ச்சியைப் பார்த்தாரா என தெரியவில்லை :)

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


Photo: The Hindu

விஜய்காந்த் புத்தரா ?: கருணாநிதி கடும் தாக்கு

நான் தான் புத்தர், மற்றவர் எல்லாம் அயோக்கியர் என்ற ரீதியில் விஜயகாந்த் தொடர்ந்து பேசிக் கொண்டு திரிவல் நல்லதல்ல என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேமுதிகவைச் சேர்ந்த ஒருவரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள கோவில்பட்டிக்குச் சென்ற அந்த கட்சியின் தலைவர் தான் திருமண விழாவில் அரசியல் பேசக் கூடாது என்று இருந்ததாகவும், தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி அலங்கோலத்தைப் பார்க்கும் போது பேச வேண்டிய அவசியம் வந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டு ஆட்சியிலே அப்படி என்ன அலங்கோலம்?. விருத்தாச்சலம் தொகுதி மக்கள் இவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பியது எதற்காக?!

ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்தபோது சட்டப்பேரவையிலே வந்து ஆட்சியின் அலங்கோலத்தை அங்கே வந்து பட்டியலிட்டிருந்தால் அதற்கு பதில் கிடைத்திருக்குமே?. ஆறு பேர்களைக் கொண்ட மதிமுக சார்பில் ஆளுநர் உரையிலே பேசுகிறார்கள், ஏன் சுயேச்சை உறுப்பினர் கூட ஒருவர் அங்கே பேசுகிறார்.

ஒரு கட்சியை நடத்தும் தலைவர், நான் தான் ஆட்சிக்கே வரப்போகிறேன் என்று சொல்லுபவர், சட்டப்பேரவையிலே வந்தல்லவா அவர் தமிழகத்தில் காணும் அலங்கோலங்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு எங்கேயோ சந்து முனையிலே போய் நின்று கொண்டு சிந்துபாடினால் என்ன செய்வது.

தமிழகத்திலே அப்படி என்ன அலங்கோல ஆட்சி நடக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறதே அதை அலங்கோலம் என்கிறாரா? விவசாயிகளுக்கு சுமார் ரூ.7,000 கோடி அளவிற்கு கூட்டுறவு கடன்கள் ரத்து செய்யப்பட்டதை அலங்கோலம் என்று கூறுகிறாரா?

மகளிருக்கு இலவச எரிவாயுவுடன் கூடிய அடுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறதே, அதை அலங்கோலம் என்கிறாரா?

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத ஏழை, எளியவர்களுக்கெல்லாம் தொடர்ந்து வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கி வழங்கப்பட்டு வருகிறதே, அது அவருக்கு அலங்கோலமாகத் தெரிகிறதா.

தொழிலாளர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியிலே போனஸ் என்பதே இல்லாத நிலைமை இருந்ததை மாற்றி, தற்போது அவர்கள் எல்லாம் போனஸ் பெறுகின்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறோமே, அது தேமுதிக தலைவருக்கு அலங்கோலமாகத் தெரிகிறதா?

நிலமற்ற ஏழை எளிய விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் வழங்கப்பட்டு வருகிறதே, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டுமென்பதற்காக தமிழகத்திலே புதிய புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கச் செய்து பல்லாயிரக்கணக்கானோர்க்கு வேலை கிடைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதே. அதையும் மீறி இன்னும் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு மாதந்தோறும் அரசே நிதி உதவி அளித்து வருகிறதே.

இவைகள் அனைத்தும் தேமுதிக தலைவருக்கு அலங்கேலமாகத் தெரிகிறது என்றால் அவர் கருத்தில் கோளாறு இருக்கிறது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது.

அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை சுரண்டுவதாகவும், நெல்லையிலே உள்ள மக்களிடம் அந்தத் தலைவர் கூறியிருக்கிறார். ஆட்சிக்கு வர வேண்டும், முதல்வராக வேண்டுமென்றெல்லாம் நினைக்கும் அவர் ஏதோ ஒரு சாதாரணப் பேச்சாளரைப் போல குற்றச்சாட்டுகளை பொறுப்பில்லாமல் கூறக் கூடாது. மக்களைக் சுரண்டுகிறோம் என்றால் எந்த மக்களை எப்படி என்று விளக்கம் தர வேண்டாமா?

உருப்படியாக எந்த காரியமும் செய்யப்படவில்லை என்று பேசியிருக்கிறாரே, மேலே பட்டியலிடப்பட்டுள்ள காரியங்கள் எல்லாம் உருப்படியானவைகளாக அவருக்குத் தெரியவில்லையா.

சென்னையிலே ரூ.9,700 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கிடவும் ரூ.1,340 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கிடவும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதே. அது தேமுதிக தலைவருக்கு உருப்படியான காரியமாகத் தெரியவில்லையா?

கடந்த 8ம் தேதி நடைபெற்ற ஒரே நாள் அமைச்சரவை கூட்டத்தில் ரூ.16,000 கோடி மதிப்பீட்டில் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பளிக்கத்தக்க விதத்தில் ஒப்புதல் அளிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதே. அது உருப்படியான காரியமில்லையா? தமிழ்நாட்டு மக்களே.. நீங்கள் தான் இது பற்றி தீர்ப்பு வழங்க வேண்டும்.

திமுகவிற்கு மக்கள் நலனில் அக்கறையில்லை என்கிறார் தேமுதிக தலைவர். இந்த பணிகள் எல்லாம் மக்கள் நலனில் அக்கறையில்லாமலா செய்யப்பட்டுள்ளது. பொய் சொல்வதற்கும் ஒரு எல்லை இல்லையா. திருமணம் ஆகாமல் ஆண்டு கணக்கில் காத்திருக்கும் பெண்களுக்கெல்லாம் வாழ்வளிக்க வேண்டுமென்பதற்காக திருமண நிதி உதவி திட்டம் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் ரூ.15,000 வீதம் பல்லாயிரணக்கானவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதே. மக்கள் நலனில் அக்கறை இல்லாத செயலா இது.

அது போலவே கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா ரூ.6,000 வீதம் நிதி உதவி அரசின் சார்பில் அளிக்கப்படுகிறதே. அது மக்கள் நலனில் அக்கறையில்லாத செயலா?

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது எந்த ஆட்சியிலே கழக ஆட்சியில் அல்லவா? அது மக்கள் நலனில் அக்கறை இல்லாத செயலா? இந்தியாவிலே எந்த மாநிலத்திலேயாவது அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக தமிழகத்திலே அமைக்கப்பட்டுள்ளது போல வாரியங்கள் அமைக்கப்பட்டு, அந்த தொழிலாளர்களுக்கெல்லாம் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறதா?

மக்களுக்கு இந்த ஆட்சியிலே எந்த நன்மையும் இல்லை என்று எந்த ஆதாரத்தை வைத்து அவர் கூறுகிறார்.

தேசிய கட்சியும் தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று மத்திய அரசை ஆளும் கட்சி மீதும் குறை கூறியிருக்கிறார். தேசிய கட்சி தமிழக மக்களுக்கு ஏன் ஒன்றும் செய்யவில்லை தமிழை செம்மொழியாக அறிவித்திருப்பது தற்போதுள்ள மத்திய அரசு தானே!

சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் கொடுத்தது எந்த ஆட்சியிலே. தற்போதைய ஆட்சியிலே தானே! கடல் நீரை குடிநீராக்கும் திட்டதிற்கு ரூ.1,000 கோடி தர ஒப்புதல் கொடுத்திருப்பதும் இன்றைய மத்திய ஆட்சி தானே. எல்லாவற்றையும் ஒரேயடியாக மறைத்து விட்டு நான் தான் புத்தர், மற்றவர் எல்லாம் அயோக்கியர் என்ற ரீதியில் பேசுவது நல்லதா.

எழுப்பப்படும் குற்றசாட்டுகளை புள்ளி விவரங்களோடு மறுத்திருப்பதில் கூறினால் அவருக்கு வேடிக்கையாக இருக்கிறதாம்! அவரிடம் ஆதாரம் இருந்தால், புள்ளி விவரங்கள் தெரிந்தால், தான் கூறுகின்ற குற்றச்சாட்டுகளோடு அவற்றையும் இணைத்துச் சொல்வதுதானே! எந்த விவரமும் இல்லாமல் வாயில் வந்ததை எல்லாம் பேசுவேன் என்ற பாணியில் பேசினால் என்ன செய்வது.

நடிகரைப் பார்ப்பதற்காக கூடுகின்ற ரசிகர்கள் கூட்டத்தை எல்லாம் தனது கட்சிக்காரர்களின் கூட்டம் என்று எண்ணி கொண்டு எல்லோரையும் இழிவாகப் பேச நினைப்பது தவறு.

கச்சத்தீவு பற்றி எல்லாம் கோவில்பட்டி கூட்டத்தில் பேசியிருக்கிறார். எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க நியாயமில்லை. அந்த வகையில் கச்சத்தீவு பற்றி உண்மை விவகாரங்கள் அவருக்கு தெரிந்திருக்காது. தெரிந்தவர்களிடமாவது கேட்டு பேசியிருக்கலாமே!

தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்று தற்போது அறிவிக்கப்பட்டு சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதை பற்றியும் பேசி ஏன் இத்தனை ஆண்டு காலம் கொண்டு வரவில்லை என்று கண்டுபிடித்து ஒரு கேள்வியைக் கேட்டு இருக்கிறார்.

நல்ல வேளை! அண்ணாவின் நினைவிடத்தைப் பார்த்து, ஏன் 1967 வரையில் சென்னை ராஜ்யம் என்பதை மாற்றி தமிழ்நாடு எனப் பெயரிடவில்லை எனக் கேட்காமல் போனாரே.

தமிழ்ப்புத்தாண்டு தை முதல் நாள் என்பதை நடைமுறைப்படுத்த தான் இப்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை ஏன் முன்பே கொண்டு வரவல்லை என்கிறாரே, இவர் ஏன் முன்பே கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கேட்டு நாம் சிரிக்கலாம் அல்லவா!

ஊழல் பற்றி எல்லாம் அவர் கூட்டத்திலே பேசி இருக்கிறார். எந்த திட்டத்திலே ஊழல். ஒப்பந்த புள்ளிகள் கோருவதிலே கூட திறந்த வெளி ஒப்பந்தப்புள்ளிகள் என்று குறிப்பிட்டு, எல்லாவற்றிலும் வெளிப்படையாக ஆட்சி நடைபெறுகிறது. வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை வாங்குவதற்கான சட்டப் பேரவை உறுப்பினர்கள் குழுவிலே இடம் பெறவே மறுத்து விட்டு, இப்போது ஊழல் என்று உரைக்கலாமா!

பேசுகிறவர்கள், அவர்களே ஒரு முறை தம்முடைய முகத்தை கண்ணாடிக்கு முன் நின்று பார்த்துக் கொண்டால் நல்லது. யார் ஊழல் வாதி என்பது அப்போது தெளிவாக அவருக்குப் புரியும். அதை விடுத்து பிறர் மீது புழுதியை வாரி இறைக்க நினைப்பது சரியல்ல.

சிமென்ட் பிரச்சினை பற்றி பேசும் போது 20 லட்சம் டன் சிமென்ட் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் 1500 டன் சிமென்ட் தான் விற்பனையாகியிருக்கிறது என்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். 20 லட்சம் டன் சிமென்ட் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று அரசு சார்பில் எப்போதும் கூறவில்லை. ஒரு லட்சம் டன் அதாவது 20 லட்சம் மூட்டைகள் சிமென்ட் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று தான் அரசு சார்பில் கூறப்பட்டது.

20 லட்சம் டன் சிமென்டிற்கும் 20 லட்சம் மூட்டைக்கும் வேறுபாடு தெரியாமல் பேசுவதா. எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று இல்லை. பண்ருட்டியார் போன்ற தெரிந்தவர்கள் யாரிடமாவது கேட்டு கொண்டு, அதை குறித்து வைத்து கொண்டு பேச கூடாதா.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கே யார் வேண்டு மென்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம். தலைவர் ஆகலாம். அதிலே எந்த தவறும் கிடையாது. முன்பெல்லாம் கட்சி ஆரம்பிப்பது என்றால், மக்களுக்காக பணியாற்றி உழைத்து தியாகம் செய்து சிறைக்கு சென்று பாடுபட்டு கொள்கைகளை வகுத்து அவற்றை மக்களிடம் எடுத்து சென்று பரப்பித் தான் கட்சியை வளர்க்க வேண்டி இருந்தது.

தற்போது அத்தகைய நிலையெல்லாம் தேவையில்லை என்றாகிவிட்டது. அதைப் பற்றி நமக்கு விருப்பு வெறுப்பில்லை. ஆனால் அப்படி கட்சி ஆரம்பித்து தலைவராக வருபவர்கள் உண்மை நிலையை பேசி, நியாயம், நேர்மையோடு பேசினால் அது நாட்டிற்கும் நல்லது. மக்களுக்கும் நல்லது, ஏன் அவர்களுக்கும் நல்லது, இல்லையேல் சிரிப்புக்கு ஆளாக நேரிடும். உயர்ந்திட நினைக்கும் ஒரு மனிதனிடம் வளர வேண்டியது அடக்கமே தவிர ஆணவமல்ல எனக் கூறியுள்ளார் முதல்வர்.

தொண்டர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்:

அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,

கழகத்தின் பொறுப்புகளிலே இருப்போர், குறிப்பாக அறிவிக்கப்பட வேண்டிய செய்திகளுக்கு மட்டுமின்றி எல்லா செய்திகளையுமே பெரிய பெரிய பேனர்கள் எழுதியும், சுவரொட்டிகளை ஒட்டியும் அவற்றில் யார் உருவங்கள் தான் இடம் பெறுவது என்றில்லாமல் பத்திரிகைககளில் ஒரு பக்க விளம்பரங்கள் கொடுத்து அபரிமிதமாக ஆடம்பர செயல்களில் ஈடுபடுவது என்பது மக்களின் பெரும் பகுதியினருடைய மன எரிச்சலை உருவாக்கக்கூடியது.


எதுவும் அளவுக்கு மீறினால் அதன் விளைவு கழக வளர்ச்சியில் ஏற்படும் வளைவு என்றாகிவிடும்.

எனவே தவிர்க்க முடியாத நிகழ்வுகளையன்றி வேறு எந்த நிகழ்வுகளையொட்டியும் அவற்றில் என் உருவப்படத்தைக் கூட வெளியிடுவதை தவிர்ப்பதின் மூலம் இயக்கத்தினர் எல்லோருக்கும் வழிகாட்டிகளாக விளங்க வேண்டும் என கழகத் தோழர்கள் அனைவருக்கும் இந்த கண்டிப்பான வேண்டுகோளை விடுக்கின்றேன் எனக் கூறியுள்ளார் கருணாநிதி.

News: Thatstamil

Sunday, February 10, 2008

கோயிலுக்கு செல்கிறார் கருணாநிதி

தமிழக முதல்வர் கருணாநிதி வேலூரை அடுத்துள்ள திருமலைக்கோடியில் அமைந்துள்ள ஆலயத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

வேலூரில் "தங்கக் கோயில்' என அழைக் கப்படும் ஸ்ரீ லட்சுமி நாராயணி ஆலயத்துக்கு வரும் 16-ம் தேதி செல்லும் அவர், இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக் காக காத்திருக்கும் 320 ஏழை குழந்தைகளுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையி லான நிதியுதவியை வழங்கவுள்ளார்.

முதல்வர் கருணாநிதி தனிப்பட்ட முறையில் பகுத்தறிவாளராக இருந்தாலும் ஆன்மிகத் தலைவர்களைச் சந்தித்து சமூக நலப் பணிகளுக் கான திட்டங்களை ஏற்கத் தயங்குவதில்லை.
சென்னைக்குக் கிருஷ்ணா நீர் கிடைக்க ரூ.200 கோடியில் திட்டம் நிறைவேற நன்கொடை அளித்து உதவிய சத்திய சாய்பாபாவுடன் ஒரே மேடையில் கலந்து கொண்டார் முதல்வர். அத்து டன், சுனாமி பாதித்த மக்களுக்கு வீட்டு வசதி செய்து தந்த மாதா அமிர்தானந்தமயி பங்கேற்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

News: Dinamani

From Deccan Chronicle

MK to visit Vellore temple


Chennai, Feb. 10: Tamil Nadu’s atheist Chief Minister M Karunanidhi will visit Vellore on February 16 to take part a function at Sri Lakshmi Narayani Amman Golden temple to distribute financial assistance to 320 children for heart surgeries. The chief minister who had earlier shared the dais with religious figures Sri Sathya Sabi Baba and Mata Amritanandamayi for public causes will attend a function at Vellore with Sri Sakthi Amma, the founder of Sri Narayani Peedam, that was instrumental in constructing a golden temple in a100-acre complex at a place called Sripuram.

In January last year the chief minister attended a mega function in Chennai to thank Sri Sa Baba for the help extended by the Sai Baba Trust for relining of Telugu Ganga canal from Kandaleru in Andhra Pradesh to bring drinking water to Chennai at a cost of Rs 200 crore. Sai Baba himself visited the chief minister at his residence and invited him for the function.

In February, 2007 the chief minister visited Nagapattinam where he shared a dais with Mata Amritanandamayi to hand over the keys of houses built by her Trust for tsunami victims. In Vellore the chief minister will hand over cheques to children who are in need of heart surgeries. “We have selected children across the state and other states. The assistance will range from Rs 50,000 to Rs 1 lakh. We also have tie-up with some hospitals to offer packages to the children,” said Mr Sampath, manager of the Peedam. The temple at Thirumalaikodi, seven kilometers away from Vellore, is a major tourist attraction. Constructed to cover 55,000 sq ft, each and every part of the temple is covered with golden plates, with a total of 15,000 kg of gold being used for the purpose.

“Every day 30,000 to 35,000 devotees are visiting our temple. On Saturdays and Sundays the numbers increase two fold. All the devotees get delicious prasadam,” Mr Sampath added. The founder of the temple, 31-year-old Sri Sakthi Amma is a male. “He came to this place when he was 16 and attained enlightment. Amma has devotees all over the world and doing a great service to the humanity,” Mr Sampath said. After distributing financial assistance to the needy at the temple venue, the chief minister will lay foundation stone for Thiruvalluvar university in Chekkadu.

Friday, February 8, 2008

ஞாநி குமுதத்திலா? ஓ... !!

இப்போது என் கருத்தை வெளியிட முடியாத நிலை விகடனில் வந்ததால், நான் குமுதத்தில் எழுத வந்திருக்கிறேன்.




ஓ பக்கங்கள் பகுதி, நம்மை ‘ஓ’ என்று சொல்லவைக்கும் பல்வேறு வகையான விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான பகுதி என்று சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆனந்த விகடனில் இதை எழுதத் தொடங்கியபோது அறிவித்திருந்தேன்.

சென்ற வார குமுதம் முதல் பக்க அறிவிப்பைக் கண்டதும் ‘ஞாநி குமுதத்திலா? ஓ!’ என்று பல வட்டாரங்களிலிருந்தும் மாறுபட்ட தொனிகளில் பலரும் ‘ஓ’ போடுகிறார்கள்! நியாயம்தான். குமுதம் 61 வருடங்களாக வெளிவந்துகொண்டிருக்கும் பத்திரிகை. நான் 33 வருடங்களாக முழு நேர எழுத்தாளனாக இருப்பவன். இதுவரை குமுதத்தில் நான் கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு எதுவும் எழுதியதில்லை. ஒரே ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன், சுமார் 30 வருடங்களுக்கு முன்னால்! அதுவும் குமுதத்தில் வெளியான தமிழ் நாடகத் துறை பற்றிய சுஜாதாவின் கட்டுரையைக் கண்டித்து! அந்தக் கடிதத்தை குமுதம் 16.8.1979 இதழில் என் புகைப்படத்துடன் கட்டுரை போல வெளியிட்டதால், எனக்கு இந்தியன் எக்ஸ்பிரஸில் வேலை பறிக்கப்பட்டது !

இனி ஆங்கில நிருபர் வேலை வேண்டாமென்றும் முழு நேர தமிழ் எழுத்தாளனாவதென்றும் முடிவு செய்தேன். அப்போது புதிய பத்திரிகையான ஜூனியர் விகடனில் வேலைக்குச் சேர்ந்தேன். என் வேலை நீக்கத்துக்கு எதிராக எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தபோது அன்றைய குமுதம் உதவி ஆசிரியர் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன், ‘நான் குமுதத்துக்கு கடிதம்தான் எழுதினேனே தவிர, கட்டுரை எதுவும் எழுதவில்லை’ என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஒரு சாட்சிக் கடிதம் கொடுத்தார். நான்கு வருடம் நடந்த வழக்கில் நான் ஜெயித்தேன்.

அப்போது என் கருத்தை குமுதம் வெளியிட்டதால், என் எக்ஸ்பிரஸ் நிருபர் வேலை போயிற்று. இப்போது என் கருத்தை வெளியிட முடியாத நிலை விகடனில் வந்ததால், நான் குமுதத்தில் எழுத வந்திருக்கிறேன். கடைசியாக நான் ஜல்லிக்கட்டு பற்றி எழுதிய ‘ஓ’ பக்கக் கட்டுரை, கடைசி நிமிடத்தில் அச்சாகாமல் நிறுத்தப்பட்டது. காரணம் பப்ளிக் செண்ட்டிமெண்ட்டுக்கு விரோதமாக அது இருந்ததாம். அது மட்டுமா? நான் எழுதிய, எழுதுகிற, எழுதப் போகும் பல விஷயங்கள் அப்படித்தானே! எந்த செண்ட்டிமெண்ட்டுக்கும் விரோதமாக இருப்பதைப் பற்றிக் கவலைப்படுவது ஒரு எழுத்தாளனின் வேலை அல்ல. பகுத்தறிவுக்கும் பொதுநலனுக்கும் விரோதமாக எது இருந்தாலும் அதை உரக்கச் சொல்வதே நம் பணி.

அப்படி உரக்கச் சொல்வதுதான் சிலருக்கு சங்கடமாக இருக்கிறது. சில மாதங்கள் முன்பு என் ‘ஓ’ பக்கக் கட்டுரையைக் கண்டித்து, தி.மு.க.வின் புதிய நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான கவிஞர் தமிழச்சி ஏற்பாட்டில் ஓர் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவில் சுமார் மூன்று மணி நேரம் எனக்கு நடத்தப்பட்ட அந்த சஹஸ்ரநாம லட்சார்ச்சனையில், ஒரே ஒருவர்தான் என்னைக் கண்டிக்கும் சக்திகளின் அசலான பிரச்னை என்ன என்பதைத் தன் பேச்சில் தொட்டதாக எனக்குப் பட்டது.
எல்லாருக்கும் புரிகிற மாதிரி நான் எழுதுவதுதான் (அவர்களுக்கு) ஆபத்து என்றார் அவர். பத்தாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்காத பத்திரிகைகளில் மட்டுமே நான் எழுதுவதுதான் ( அவர்களுக்கு) நல்லது என்றார். லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் பத்திரிகைகளில் நான் எழுதுவதுதான் அவர்களுக்கு சிக்கலாக இருக்கிறது என்ற பின்னணியில் நான் இடப்பெயர்ச்சியானதற்கு, பாவம் ஜல்லிக்கட்டு மாடுகள் என்ன செய்யும் ?!

முழு நேரப் பத்திரிகையாளனாகப் பணி புரியும் இந்த 33 வருடங்களிலும் சென்னையில் பெரும்பாலும் வாடகை வீடுகளில்தான் வசித்து வருகிறேன். கீழ்ப்பாக்கத்தில் ஒரு மாதம். மேற்கு மாம்பலத்தில் ஒரு வருடம். ராயப்பேட்டையில் சுமார் 20 வருடங்கள். அடுத்த மூன்றாண்டுகள் திருவான்மியூரில் சொந்த வீடு. பிறகு மறுபடியும் 3 வருடம் அடையாறில் வாடகை வீடு. மறுபடியும் 3 வருடம் சொந்த வீடு. கடன்கள் இல்லாத வாழ்க்கைக் கனவுக்காக அதை விற்றுவிட்டு திரும்பவும் அடையாறு, திருவல்லிக்கேணி என்று மாறி மாறி வாடகை வீடுகள்.

வசதிகளும் சிரமங்களும் வாடகை வீட்டிலும் உண்டு; சொந்த வீட்டிலும் உண்டு. நாம் விரும்பிய மாதிரியான சொந்த வீடோ வாடகை வீடோ அமைய, நாம் தரவேண்டிய விலை மிகப் பெரியது. ஒவ்வொரு உரிமையாளரும் ஒரு விதம்; இது உங்க வீடு மாதிரி என்று வாடகைதாரரிடம் முழு அன்புடன் வீட்டை ஒப்படைக்கும் அபூர்வங்கள் முதல், ஏரியா தாதாக்களுக்கு பயந்து கொண்டு தன் சொந்த வீட்டில் யாரையாவது குடி வைப்பதற்குக் கூட அனுமதி கேட்கும் கோழைகள் வரை பல ரகம்.

புது வீட்டுக்குக் குடி வந்ததும், ‘ஓவரா ஆணி அடிக்காதே’, ‘ஓவரா சத்தம் போடாதே’, ‘டேங்க்கை ஒரு தடவையாவது நிரப்பாம, வெறுமே அஞ்சு நிமிஷத்துல அணைச்சா எப்பிடி’ முதலான முணுமுணுப்புகள் இரு தரப்பிலும் ஒலிக்கத்தான் செய்யும். ‘உங்களைப் பாக்க வரணும்னா ரெண்டு மணி நேரம் ஆகும், இப்ப சிட்டி செண்ட்டருக்கு வந்துட்டீங்களா, அடிக்கடி பாக்க முடியுது’, ‘தொலைவா இருந்தாலும் சுத்தமான காத்து, நல்ல தண்ணி’ போன்ற விதவிதமான சந்தோஷங்களும் இருக்கத்தான் செய்யும்.

எழுத்தாளனுக்குப் பத்திரிகை என்பது வாடகை வீடு. வீட்டுக்காரருக்கும் குடியிருப்பவருக்கும் இசைந்து வராத சமயங்களில் இடப்பெயர்ச்சிகள் தவிர்க்க முடியாதவை.

காதல்

பொங்கல் நேரத்து ஜல்லிக்கட்டு வீரம் சீசன் முடிந்து இப்போது பிப்ரவரி 14 காதல் சீசன் தொடங்குகிறது.

தமிழர்களின் வாழ்க்கையில் காதலும் வீரமும்தான் எல்லாம்; சங்க இலக்கியமே சாட்சி என்று நெடுங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இன்றைய வீரம் மாட்டுடன் மோதுவதில் இல்லை. இரட்டை டம்ளர் டீக்கடைகளுடன் மோதுவதுதான் அசல் வீரம்.

ஜல்லிக்கட்டை வீரத்தின் அடையாளமாகக் கருதி உச்ச நீதிமன்றம் வரை சென்று மத அடிப்படையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும்படி மன்றாடி, நூற்றுக்கணக்கான இளைஞர்களைப் படுகாயத்துக்குள்ளாக்கி, வீரத்துக்கு ‘மரியாதை’ செலுத்தியிருக்கும் தி.மு.க. அரசு, காதலுக்கு என்ன மரியாதை செய்திருக்கிறது ? அல்லது செய்யப்போகிறது ?

காதலைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும், நிறையவே காதலித்திருக்கிறேன். என்னை விட நன்றாகக் காதலை அறிந்திருக்கக் கூடியவர் முதலமைச்சர் கலைஞர். திருமணத்துக்குப் பிறகு கூட காதலிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. அவருடைய அன்றைய காதலி, (தற்போது துணைவி) அவர் மனைவியிடம் நடிகை மனோரமாவால் அம்பலப்படுத்தப்பட்ட வரலாற்று நிகழ்ச்சியை அண்மையில் அவரே பொது மேடையில் நினைவு கூர்ந்தார்.

காதலின் வலிமையையும் வலியையும் அவர் அறிந்திருந்தால் போதுமா? இன்று தமிழ்க் காதலர்களின் நிலை என்ன?

ஒரு பூங்காவிலும், ஒரு கடற்கரையிலும் காதலர்களுக்கு நிம்மதியான இடம் இல்லை. சென்னை மெரீனாவில் காலம் காலமாக இருந்து வந்த லவ்வர்ஸ் வாக் எனப்படும் காதலர் பாதை என்ற உட்சாலையை, பியூட்டிஃபிகேஷன் என்ற பெயரில் ஒழித்தே விட்டார்கள்.

பதினெட்டு வயதில் தேசத்தின் ஆட்சியை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று தீர்மானிக்கும் உரிமை உள்ள நம் இளைஞர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்கும் உரிமையோ துணிச்சலோ இல்லை. காவல் நிலையங்களில் தஞ்சம் புகும் காதலர்களுக்கு உதவ வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு போடப்படுகிறது.

என்றேனும் ஒரு நாள் முற்றிலுமாக ஜாதியை ஒழிக்க ஒரே சிறந்த வழி காதல் மட்டும்தான்.எனவே ஜாதி மீறிய காதல் திருமணம் செய்வோருக்கும் அவர்கள் வாரிசுகளுக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, வங்கிக் கடன், வீட்டு வசதி என்று அனைத்துத் துறைகளிலும் தனியே கணிசமான இட ஒதுக்கீட்டை கலைஞர் கருணாநிதி அறிவிக்க வேண்டும்.

முதலில் நம் கல்லூரிப் பாடப் புத்தகங்களில் திருக்குறளின் இன்பத்துப் பாலுக்கு இருந்து வரும் நடைமுறைத் தடையை நீக்க வேண்டும். காதல் என்றால் என்ன என்று தெரியாமல், வணிக சினிமா காட்டும் வக்கிரக் காதலால் குழம்பித் தடுமாறி ஆண் பெண் உறவுகளை சிக்கலாக்கிக் கொள்ளும் நம் இளைஞர்களுக்கு உதவுவதற்காக +2 முதல் கல்லூரி வரை கல்வி வளாகங்களில் உளநல ஆலோசகர்களை அரசு செலவில் நியமிக்க வேண்டும். தொடர்ந்து தங்கள் குடும்பங்களில் காதல் திருமணங்களை ஊக்குவிக்கும் குடும்பங்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து தமிழ்நாட்டின் சிறந்த குடும்ப விருது வழங்க வேண்டும்.

இந்த யோசனைகளில் பாதியையாவது பிப்ரவரி _ 14 காதலர் தினத்தன்று அரசு ஆணையாக அறிவித்தால், நிச்சயம் அந்த வாரப் பூச்செண்டை கலைஞர் கருணாநிதிக்கே தருவேன் என்று காதல் நெஞ்சங்களின் சார்பில் உறுதியளிக்கிறேன்..

செய்தி: படம் நன்றி: Kumudam