Thursday, December 25, 2008

கலைஞர் டிவி - சரத் ரெட்டி - ஜெயலலிதா அறிக்கை

வலைப்பதிவுலகில் லக்கிலுக் மற்றும் கேபிள் சங்கர் சொன்ன கிசுகிசு தற்போது ஜெயலலிதா அறிக்கை மூலம் சபைக்கு வந்திருக்கிறது. கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் ரெட்டி தாக்கப்பட்டது பற்றி ஜெயலலிதாவின் அறிக்கை. சன் டிவியிலிருந்து கலைஞர் டிவிக்கு சென்ற பல செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சி தொக்குப்பாளர்கள் கடந்த 2 நாட்களாக கலைஞர் டிவியில் காணப்படுவதில்லை. மாறன் பிரதர்ஸின் monopoly வந்தால் மற்றவர்களுக்கு என்ன கதி ?

படம்: நன்றி: Dinakaran (கலைஞர் டிவி சீரியல் விளம்பரம் தினகரனில் 2 நாள் முன்பு வந்தது :-)) !!!)

!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!

சென்னை: "அ.தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர்ந்தால், கருணாநிதி குடும்பத்தினரின் அராஜகச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.


அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த முதல் தேதி கருணாநிதியின் இல்லத்தில் நடந்த கோமாளிக் கூத்து குறித்து நான் ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அதில், "அரசு கேபிள் நிறுவனம் இனி செயல் அற்றதாக இருக்குமா அல்லது கேபிள் வியாபாரத்தில் மீண்டும் தங்களது ஏகபோக உரிமையை நிலைநாட்டும் வகையில் அரசு கேபிள் நிறுவனத்திற்கு கட்டளை இடப்படுமா?' என்று வினவியிருந்தேன். தாங்க முடியாத இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள், இதுகுறித்து முதல்வரிடம் புகார் கொடுக்க கடந்த 23ம் தேதி சென்னை வந்துகொண்டிருந்த போது, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கருணாநிதியை நம்பிய கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் இன்று பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


காசுக்காக எதையும் செய்யக்கூடிய கருணாநிதியை சந்திப்பதன் மூலம் அரசு கேபிள் "டிவி' ஆபரேட்டர்களுக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. இதே நிலைமை தான் கருணாநிதியை நம்பி, கலைஞர் "டிவி'க்கு வந்த சரத் ரெட்டிக்கும் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி குடும்ப இணைப்பை அடுத்து, சரத் ரெட்டி மீதுள்ள ஆத்திரத்தில், கடந்த 20ம் தேதி இரவு 12 மணிக்கு, அவருடைய இல்லத்திற்குச் சென்று அவரை மிரட்டியுள்ளனர்.


இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, சரத் ரெட்டியிடம் இருந்து புகார் எதுவும் வரவில்லை எனக் கூறப்பட்டதாக செய்தி வந்துள்ளது. தற்போது சரத் ரெட்டி, எலும்பு முறிவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். "போலீசாரிடம் புகார் எதுவும் கொடுக்க வேண்டாம்; இதை நான் பார்த்துக்கொள்கிறேன்' என சரத் ரெட்டியின் வக்கீலிடம், கருணாநிதி தெரிவித்ததாக தகவல்கள் வந்துள்ளன. கலைஞர் "டிவி'க்கு சென்ற மீதமுள்ள 250 நபர்கள், தங்களுக்கு என்ன கதி ஏற்படுமோ என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். கருணாநிதி ஒரு நம்பிக்கை துரோகி என்பதை சரத் ரெட்டி இப்போது புரிந்துகொண்டிருப்பார்.


கருணாநிதியை பொறுத்தவரை, குடும்ப நலன், உறவினர்களின் நலன், பணம் ஆகியவை தான் முக்கியம். அரசாங்கம், சட்டம் என்பதெல்லாம் மக்களுக்காக இருக்கிறதா அல்லது கருணாநிதியின் குடும்பத்திற்காக இருக்கிறதா என்று புரியாத சூழ்நிலை தற்போது தமிழகத்தில் நிலவுகிறது. குடும்பங்களின் ஆட்சி உருவானால் சுயநலத்திற்கே முன்னுரிமை தரப்படும் என்பதை மக்கள் புரிந்து, திருமங்கலம் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளரை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, அ.தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். எனது தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் நிம்மதியாக தங்களது தொழிலைச் செய்யவும், ஏழை, எளிய மக்கள் அனைவரும் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை கண்டுகளிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: Dinamalar

Monday, December 22, 2008

காஞ்சி மடத்திலிருந்து புதிய தமிழ் ஆன்மீக சானல்

காஞ்சி காமகோடி பீடத்திலிருந்து தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஸ்ரீசங்கரா என்ற பெயரில் புதிய ஆன்மீக தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் நடந்த விழாவில், ஸ்ரீ சங்கரா டிவியை கர்நாடக ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் தொடங்கி வைத்தார்.


படம்: செய்தி: நன்றி: Thatstamil

இந்த விழாவில் மதத் தலைவர்கள், மடாதிபதிகள், துறவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநரும், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திரரும், நமது வாழ்வில் ஆன்மீகம் மிகவும் முக்கியமானது. மதங்களைக் கடந்து ஆன்மீகம்தான் நமது வாழ்க்கைப் பாதையை தெளிவாக்குகிறது என்றனர்.

சானல் புரமோட்டரான ஹரிகிருஷ்ணா கூறுகையில், நேயர்களுக்கு சிறந்த ஆன்மீக நிகழ்ச்சிகளைக் கொடுப்பதே இந்த சானலின் நோக்கம். வயது, மொழியைக் கடந்து, நல்ல ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கான வடிகாலாக இந்த சானல் திகழும் என்றார்.

தினசரி காலை ஆன்மீக இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கும். தொடர்ந்து கோ பூஜை, சுப்ரபாதம் ஆகியவை இடம் பெறும்.

இதைத் தொடர்ந்து ஆரோக்கியம், ஜோதிடம், பஜன்கள், கர்நாடக இசை, வேதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையிலான ஆன்மீக தொடர்களும் இதில் இடம் பெறும்.

தேவி தரிசனம் என்ற நிகழ்ச்சி வயோதிகர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக தினசரி காலை இடம் பெறும். மாலையில் தேவதா தரிசனம் என்ற நிகழ்ச்சி இடம் பெறும்.

அதேபோல சஹஸ்ரநாமம், ஆரத்தி ஆகியவையும் இடம் பெறும். பல்வேறு ஆன்மீகவாதிகளின் உரைகளும் இடம் பெறும்.

குழந்தைகளுக்காக காட் டூன் ('God-toons') என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். கல்வி நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.

இதுதவிர இந்து புராணங்களில் உள்ள கதைகளை அடிப்படையாக வைத்து அனிமேஷன் தொடர்களையும் ஒளிபரப்பு செய்ய ஸ்ரீ சங்கரா டிவி உத்தேசித்துள்ளது.

Wednesday, December 17, 2008

எந்திரன் @ சன் டிவி

ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். ஆனால் கூத்தாடிகளே ஒன்று பட்டால் ஊருக்குக் கொண்ட்டாட்டமா ? இல்லை திண்டாட்டமா ? இல்லை குடும்பத்திற்குக் கொண்டாட்டமா ?











படங்கள்: செய்தி: நன்றி:

தினகரன்
சென்னை பதிப்பு 18 டிசம்பர் 2008


ரஜினிகாந்த் & ஐஸ்வர்யா ராய் நடிக்கும் "எந்திரன்" படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்


சென்னை, டிச.18: ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ (ரோபோ) படத்தை தயாரிப்பதாக இந்தியாவின் மிகப்பெரிய மீடியா நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் அறிவித்துள்ளது.

சன் டிவி நெட்வொர்க் குழுமத்தின் ஒரு அங்கமான சன் பிக்சர்ஸ், பெரும் பொருட்செலவில் இந்தியாவிலேயே மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் இந்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். பிரமாண்டம், புதுமை, உருவாகும் விதம் என அனைத்து வகையிலும் இது மிகப்பெரிய படமாக உருவாகும். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா தெரிவித்தார்.

வெற்றிப் படங்களை வெளியிட்டு வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான எந்திரனில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் பணியாற்ற உள்ளனர். கிராபிக்ஸ் காட்சிகள், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மற்றும் சண்டைகாட்சிகள் இதுவரை இந்திய திரையுலகம் பார்த்திராத வகையில் புதுமையாக உருவாக்கப்படுகிறது என்று சக்சேனா கூறினார்.

ரஜினிகாந்த், ஷங்கர், சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் ஆகியோர் முன்னிலையில் சக்சேனா இந்த தகவல்களை வெளியிட்டார்.

இதுபற்றி கலாநிதி மாறன் கூறுகையில், ‘‘சன் பிக்சர்ஸ்க்கு இது மிகப்பெரிய படம். இந்தப் படம் இந்தியாவிலேயே மாபெரும் படமாக அமையும் என்று உணர்வுபூர்வமாக நம்புகிறேன். ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். சர்வதேச அளவில் மிகப்பெரிய உயரத்தை எந்திரன் படம் தொடும்’’ என்றார்.

இயக்குனர் ஷங்கர் கூறும்போது, ‘கலாநிதிமாறன் மற்றும் சன் பிக்சர்ஸ் உடன் இணைவதில் பெருமைப்படுகிறேன். ரஜினிகாந்துடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்தப் படம் சன் டி.வியுடன் சேரும்போது, பலத்த எதிர்பார்ப்புடன் விளம்பர வெளிச்சமும் உச்சபட்சமாகும்’’ என்றார்.

ரஜினிகாந்த் கூறும்போது, ‘‘இது இந்தியாவின் மிகப்பெரிய படம். கலாநிதி மாறனுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’’ என்றார்.

Monday, December 8, 2008

'பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை' - கருணாநிதி


பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றிட தவறியதில்லை.
மகாகவி பாரதி தொடங்கி, மூதறிஞர் ராஜாஜி, வ.வே.சு. ஐயர், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், உ.வே.சா, கல்கி, ஏ.எஸ்.கே. ஐயங்கார், வெ.சாமிநாத சர்மா, ஆசிரியர் சாவி, நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி போன்று நீண்ட பட்டியல் உண்டு





படத்திற்கும் செய்திக்கும் சம்பந்தமில்லை :-)

கருணாநிதி அறிக்கை:
மறக்க வேண்டியது தீது ஒன்றுதான்




சென்னை, டிச.9: முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
கலையில், இலக்கியத்தில், நாட்டுப் பற்றுக்கான தியாகத்தில் ஈடுபட்டு மறைந்துவிட்டோரின் குடும்பங்களின் வழித்தோன்றல்களை பெருமைப்படுத்துவதும், அவர்களின் குடும்பம் வாடாமல் தழைத்திட செய்வதும் கடமையென கொண்டு ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆவன செய்து வருகிறேன். திராவிட இயக்கத்தில் இளமைக் காலம்தொட்டே என்னை ஒப்படைத்துக் கொண்டவன் என்றாலும், பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றிட தவறியதில்லை.


மகாகவி பாரதி தொடங்கி, மூதறிஞர் ராஜாஜி, வ.வே.சு. ஐயர், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், உ.வே.சா, கல்கி, ஏ.எஸ்.கே. ஐயங்கார், வெ.சாமிநாத சர்மா, ஆசிரியர் சாவி, நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி போன்று நீண்ட பட்டியல் உண்டு. எடுத்துக் காட்டாக கூறுவதென்றால், Ôஅக்கிரகாரத்து அதிசய மனிதர்Õ என்று வ.ரா.வை சிறப்பித்து, அவர் மறைந்த பிறகும், சாவி மூலம் அந்தக் குடும்பத்துக்கு சிறப்பு செய்தவனாவேன். 1990ம் ஆண்டு நான் ஆட்சியில் இருந்த போது, வ.ரா. துணைவியார் புவனேஸ்வரி அம்மையாரை தலைமைச் செயலகத்துக்கே வரச் செய்து, மாதந்தோறும் அவருக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்குவதற்கான உத்தரவை ஒப்படைத்தேன். 17.8.90 அன்று கலைவாணர் அரங்கில், வ.ரா. நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் கொண்டாடினோம்.


திருவள்ளுவர் உருவத்தை அழகுற வரைந்து கொடுத்த ஓவியர் வேணுகோபால் சர்மா குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு நிதி வழங்கிய பெருமை நமது அரசுக்கு உண்டு. 17.2.1985 அன்று நான் எழுதிய Ôகுறளோவியம்Õ நூல் வெளியீட்டு விழாவுக்கு வேணுகோபால் சர்மாவை அழைத்து வரச் செய்தேன். அந்த நூல் எழுதியதன் மூலம் எனக்கு கிடைத்த தொகையில் ரூ.10 ஆயிரத்தை என் சொந்த சார்பில், நிதியாக அல்ல, காணிக்கையாக அளித்தேன். வேணுகோபால் சர்மா நோய்வாய்ப்பட்டுள்ளார் என்று அவருடைய புதல்வர் கூறியதும், ரூ.10 ஆயிரம் வழங்கினேன். அரசின் சார்பில் ரூ.3 லட்சம் நிதி வழங்கினேன்.
தமிழுக்கு செம்மொழித் தகுதியை வழங்கக் கோரிய பரிதிமாற் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரிகள் வாழ்ந்த வீட்டைப் புதுப்பித்து, அவரது வழித் தோன்றல்களின் எதிர்காலத்துக்கான உதவிகளைச் செய்து, சிறப்பித்தவன் நான்.

கழகத்தின் கலை உலகக் காவலராக இருந்து பின்னர் காமராஜரின் தளபதியாக ஆனபிறகும், Ôதம்பி, நீ எங்கிருந்தாலும் வாழ்கÕ என்று அண்ணாவால் வாழ்த்தப் பெற்ற சிவாஜி இப்போதும் என் இதயத்தில் இருப்போரில் ஒருவர். எங்கள் நட்பின் அடையாளமாகத்தான் இப்போது அந்த குடும்பம் என்னைச் சூழ்ந்து குலவிடுகிறது. தமிழக கலைக் குடும்பத்தில் எனக்கு நட்பு பகை எனும் நானாவித நிலைகள். அனைத்தையும் சந்தித்து கலைக்குடும்பம் ஒன்றையன்று வாழ்த்தி மகிழ்கிறதல்லவா.

Ôமறப்போம் மன்னிப்போம்Õ அரசியலில் மட்டுமல்ல, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போதித்த அண்ணா, இதையும் மனித நேயம் வளர்க்கும் இரண்டு மருந்து மாத்திரைகளாக நமக்கு வழங்கியுள்ளார் அல்லவா? அதன் வலிமைதான் இது. மன்னித்து மறக்க வேண்டியது, ÔதீதுÕ எனும் ஒன்றைத்தான் என்பதை நான் தெரிந்து, தெளிந்து நடப்பது போல், உடன் பிறப்பே, நீயும் நடக்க வேண்டும்.

இதற்கிடையே, 6.12.2008 காலையில் Ôதாத்தா எனக்கு பிறந்த நாள் இன்று, வாழ்த்து என்னைÕ என்று அண்ணாவின் பேரன் மலர் வண்ணன் வரவே, என் மனதில் பன்னீர் தெளித்தது போன்ற உணர்வு. மலர் வண்ணன் மனைவியுடன் இந்த தாத்தாவிடம் வாழ்த்து பெற வந்தபோதும், சிவாஜி குடும்பத்தினர் கொள்ளுபேரன், பேத்தியென மன மகிழ வந்து மணவிழா அழைப்பிதழ் தந்தபோதும், நமது குடும்பத்தில் உள்ள பேரன் பேத்திகளையும், கொள்ளுப் பேரன் பேத்திகளையும், சிதற விடாமல் குடும்பம் செழிப்புற்று தழைக்கும் என்று பெரியோர் சொன்ன சொல் பலித்ததையும் எண்ணி மகிழ்கிறேன்.பெருங்குடும்பமாம் நமது கழகத்தின் உடன் பிறப்புகளையும் வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: Dinakaran

Friday, December 5, 2008

பாராளுமன்ற தேர்தலுக்கு அதிமுக சிபிஎம் கூட்டு

உறுதியானது அ.தி.மு.க.,வுடனான ‌மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி

சென்னை : லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ்காரத் அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் முடிவில் அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை உறுதி செய்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

செய்தி: நன்றி: Dinamalar and TimesOfIndia

செய்தி: நன்றி: Maalaisudar

சென்னை, டிச.5: வரும் மக்களவை தேர்தலில் அதிமுகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று ஜெயலலிதா, பிரகாஷ் கரத் ஆகியோர் இன்று கூட்டாக அறிவித்தனர். ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்று சந்தித்த போது, இந்த உடன்பாடு ஏற்பட்டது.
.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சனையால் மத்திய அரசுக்கு இடதுசாரி கட்சிகள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, காங்கிரஸ் அணியுடன் அக்கட்சிகள் தங்கள் தோழமையை முறித்துக் கொண்டன.

இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பிஜேபி அல்லாத மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேரும் முயற்சியில் இரு கம்யூனிஸ்ட் கட்சி களும் ஈடுபட்டன. இதற்காக தமிழ்நாட்டில் அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்வது குறித்து அக்கட்சி கள் ஆலோசனை செய்து வந்தன.

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பியது. அக்கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பேசினார்.

ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டியது. அக்கட்சி தலைவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இருமுறை சந்தித்து இது குறித்து பேசினார்கள்.

இந்நிலையில், கடந்த வாரம் புதுடெல்லியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் தமிழக அரசியல் கூட்டணி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், மாநில செயலாளர் என்.வரதராஜன் மற்றும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கள், மாநில குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கூட்டணி வாய்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க பிரிவினர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் அதிமுக வுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என கூறியதாக தெரிகிறது. தேமுதிக வுடன் கூட்டணி அமைத்து போட்டி யிடலாம் என அவர்கள் கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

எனினும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ள நிலையில், இடதுசாரி கட்சிகள் இணக்கமாகவும், ஒரே அணியில் இருக்க வேண்டு மென்ற கருத்துடனும், அதிமுகவுடன் அணி சேர்வதே நல்லது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த ஆலோசனை இரண்டாவது நாளாக இன்றும் தேசிய செயற்குழு கூட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், மாநில செயலாளர் என்.வரதராஜன், பொலிட் பீரோ உறுப்பினர் கே.வரதராஜன் ஆகியோர் இன்று பகல் 12.30 மணியளவில் போயஸ் கார்டனில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சென்றனர். அவர்களை ஜெயலலிதா இன்முகத்துடன் வாசலில் வந்து வரவேற்றார். ஜெயலலிதாவுக்கு கரத் பூச்செண்டு அளித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அவர்கள் கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தினார்கள். கூட்டணி குறித்து, மார்க்சிஸ்ட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஜெயலலிதா விடம் அவர்கள் தெரிவித்தனர்.

சுமார் ஒருமணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், இரு கட்சிகளும் வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை ஜெயலலிதாவும், பிரகாஷ் கரத்தும் கூட்டாக செய்தியாளர் களிடம் தெரிவித்தனர்.

Monday, December 1, 2008

குடும்பம் ஒரு கழகம்

அஞ்சுகம் அம்மாளின் முகத்தில் ஒரு புன்சிரிப்பு தென்படுகிறதே ? கவனித்தீர்களா ? இதெல்லாம் குருபெயர்ச்சியின் லீலையா ? எதற்கும் இந்தப் படத்தைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். (படத்தைக் கிளிக்கி பெரிதாக பார்க்கவும்)

செய்தி: படங்கள்: நன்றி: தினகரன் 2-டிசம்பர்- 2008





முதல்வர் கருணாநிதியை கலாநிதி மாறன், தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஏற்பாட்டால் நடந்த இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு கலாநிதி மாறன், அவரது சகோதரர் தயாநிதி மாறன் எம்.பி., மு.க.அழகிரி, அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க. தமிழரசு, முதல்வரின் மகள் செல்வி ஆகியோர் 2 கார்களில் வந்தனர். முதல்வருடன் அவர்கள் சுமார் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது தயாளு அம்மாள், மருமகன் செல்வம், அவரது மகள் டாக்டர் எழில், மருமகன் டாக்டர் ஜோதிமணி, ஸ்டாலின் மனைவி சாந்தா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், அழகிரி மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி, மருமகன் வெங்கடேசன், இன்னொரு மகள் அஞ்சுகம், மருமகன் விவேக், முதல்வரின் மகன் மு.க.தமிழரசு, அவரது மகன் அருள்நிதி, கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

சந்திப்பு முடிந்து அனைவரும் 5.30 மணிக்கு வெளியில் வந்தனர். அப்போது முதல்வரிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி கேட்டனர். பத்திரிகையாளர்கள் அதிகமாக இருந்ததால், ‘அறிவாலயத்தில் முதல்வர் நிருபர்களை சந்திப்பார்’ என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன் பின்னர் அவர்கள் சிஐடி காலனியில் உள்ள ராஜாத்தியம்மாள் வீட்டுக்கு சென்றனர்.
மாலை 6.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

இந்த சந்திப்பு உங்களுக்கு எப்படி இருக்கிறது?

சந்தோஷமாக இருக்கிறது.

இந்த சந்திப்பு எதனால் நடந்தது?

இதயத்தால் நடந்தது.

தயாநிதி மாறனுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதா?

அதுபற்றி எல்லாம் இப்போது பேச விரும்பவில்லை.

உணர்வுபூர்வமாக எப்படி இருந்தீர்கள்?

எனக்கு கோபம் வரும் போதும், வருத்தம் வரும் போதும் எப்படி இருந்தேனோ அப்படித்தான் மகிழ்ச்சியின் போதும் இருந்தது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கூட அறிக்கை மோதல் நடந்தது. இதனிடையே இந்த திடீர் சந்திப்புக்கு என்ன காரணம்?

இதற்கு மூல காரணமாக இருந்து நிறைவேற்றி வைத்து எல்லோருக்கும் மகிழ்ச்சி தந்த பொறுப்பு மு.க.அழகிரியை சார்ந்தது. அவருடன் இணைந்து மு.க.ஸ்டாலின் செயல்பட்டு, இந்த நல்ல முடிவு ஏற்பட்டது.


குருபெயர்ச்சியால் ஏற்பட்ட விளைவா இது?

எங்கள் குருவையே நாங்கள் எதிர்த்த பிறகு, அந்த குருவுடன் இணைந்து செயல்பட்டதுதான் திராவிட இயக்க வரலாறு.



பேரன்கள் எல்லோரையும் பார்த்ததில் ஏற்பட்ட உணர்வு எப்படியிருந்தது?


கண்கள் பனித்தது. இதயம் இனித்தது.

அழகிரியின் மனமாற்றத்துக்கு என்ன காரணம்?

மனமிருந்தது எனவே மாற்றம் ஏற்பட்டது.

மதுரையில் சன்டிவி, கே டிவி தெரியாத நிலை இருந்தது. இதன் பிறகு சுமூக தீர்வு ஏற்படுமா?

கேளாதீர்கள். கிளறாதீர்கள்.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை. அப்படி இதை எடுத்து கொள்ளலாமா?

அது உங்கள் பொறுப்பு. அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

அடுத்தகட்டமாக அரசியல் ரீதியாக தொலைகாட்சி ரீதியாக என்ன செய்வீர்கள்?

கலந்து பேசி தேவைப்படும் உரிய முடிவுகளை எடுப்போம்.

இந்த இணைப்பு விழாவுக்கு கனிமொழி வரவில்லையே?

எம்.பி.க்கள் குழுவுடன் விமான நிலையம் சென்று விட்டார். அதன் பிறகு தான் இவர்கள் வந்தார்கள். இப்போது திரும்பி வந்து கொண்டிருக்கிறார்.

தயாநிதி மாறன் மீண்டும் அரசியல் பணிகளில் ஈடுபடுவதாக தெரிவித்தாரா?

பேசுவதற்கு அவ்வளவு நேரம் கிடைக்கவில்லை.

நாளை டெல்லி செல்லும் எம்.பி.க்கள் குழுவில் பங்கேற்பாரா?

மனித சங்கிலிக்கு வந்தார் அல்லவா.

இனிமேலாவது எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம் என்று வாக்குறுதி தந்திருக்கிறீர்களா?

இந்த கேள்வி ஒன்று போதும். அவர்களின் உள்ளங்களை ஒன்றுபடுத்த.

சமரசத்தின் பின்னணி என்ன?

அழகிரி, ஸ்டாலின்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.