Thursday, December 25, 2008

கலைஞர் டிவி - சரத் ரெட்டி - ஜெயலலிதா அறிக்கை

வலைப்பதிவுலகில் லக்கிலுக் மற்றும் கேபிள் சங்கர் சொன்ன கிசுகிசு தற்போது ஜெயலலிதா அறிக்கை மூலம் சபைக்கு வந்திருக்கிறது. கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் ரெட்டி தாக்கப்பட்டது பற்றி ஜெயலலிதாவின் அறிக்கை. சன் டிவியிலிருந்து கலைஞர் டிவிக்கு சென்ற பல செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சி தொக்குப்பாளர்கள் கடந்த 2 நாட்களாக கலைஞர் டிவியில் காணப்படுவதில்லை. மாறன் பிரதர்ஸின் monopoly வந்தால் மற்றவர்களுக்கு என்ன கதி ?

படம்: நன்றி: Dinakaran (கலைஞர் டிவி சீரியல் விளம்பரம் தினகரனில் 2 நாள் முன்பு வந்தது :-)) !!!)

!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!~!

சென்னை: "அ.தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர்ந்தால், கருணாநிதி குடும்பத்தினரின் அராஜகச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.


அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த முதல் தேதி கருணாநிதியின் இல்லத்தில் நடந்த கோமாளிக் கூத்து குறித்து நான் ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அதில், "அரசு கேபிள் நிறுவனம் இனி செயல் அற்றதாக இருக்குமா அல்லது கேபிள் வியாபாரத்தில் மீண்டும் தங்களது ஏகபோக உரிமையை நிலைநாட்டும் வகையில் அரசு கேபிள் நிறுவனத்திற்கு கட்டளை இடப்படுமா?' என்று வினவியிருந்தேன். தாங்க முடியாத இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள், இதுகுறித்து முதல்வரிடம் புகார் கொடுக்க கடந்த 23ம் தேதி சென்னை வந்துகொண்டிருந்த போது, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கருணாநிதியை நம்பிய கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் இன்று பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


காசுக்காக எதையும் செய்யக்கூடிய கருணாநிதியை சந்திப்பதன் மூலம் அரசு கேபிள் "டிவி' ஆபரேட்டர்களுக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. இதே நிலைமை தான் கருணாநிதியை நம்பி, கலைஞர் "டிவி'க்கு வந்த சரத் ரெட்டிக்கும் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி குடும்ப இணைப்பை அடுத்து, சரத் ரெட்டி மீதுள்ள ஆத்திரத்தில், கடந்த 20ம் தேதி இரவு 12 மணிக்கு, அவருடைய இல்லத்திற்குச் சென்று அவரை மிரட்டியுள்ளனர்.


இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, சரத் ரெட்டியிடம் இருந்து புகார் எதுவும் வரவில்லை எனக் கூறப்பட்டதாக செய்தி வந்துள்ளது. தற்போது சரத் ரெட்டி, எலும்பு முறிவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். "போலீசாரிடம் புகார் எதுவும் கொடுக்க வேண்டாம்; இதை நான் பார்த்துக்கொள்கிறேன்' என சரத் ரெட்டியின் வக்கீலிடம், கருணாநிதி தெரிவித்ததாக தகவல்கள் வந்துள்ளன. கலைஞர் "டிவி'க்கு சென்ற மீதமுள்ள 250 நபர்கள், தங்களுக்கு என்ன கதி ஏற்படுமோ என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். கருணாநிதி ஒரு நம்பிக்கை துரோகி என்பதை சரத் ரெட்டி இப்போது புரிந்துகொண்டிருப்பார்.


கருணாநிதியை பொறுத்தவரை, குடும்ப நலன், உறவினர்களின் நலன், பணம் ஆகியவை தான் முக்கியம். அரசாங்கம், சட்டம் என்பதெல்லாம் மக்களுக்காக இருக்கிறதா அல்லது கருணாநிதியின் குடும்பத்திற்காக இருக்கிறதா என்று புரியாத சூழ்நிலை தற்போது தமிழகத்தில் நிலவுகிறது. குடும்பங்களின் ஆட்சி உருவானால் சுயநலத்திற்கே முன்னுரிமை தரப்படும் என்பதை மக்கள் புரிந்து, திருமங்கலம் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளரை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, அ.தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். எனது தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் நிம்மதியாக தங்களது தொழிலைச் செய்யவும், ஏழை, எளிய மக்கள் அனைவரும் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை கண்டுகளிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: Dinamalar

3 comments:

தமிழ் உதயன் said...

அப்படியே அம்மாவோட தோழி குடும்பம் பத்தி கலைஞர் குடுத்த அறிக்கைகள் ரீபிட் பண்ணுங்க பாஸ்....

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

நன்றி

தமிழ் உதயன்

ஜோதி said...

கலைஞர் குடும்பத்திற்க்கு உதவி செய்கிற யாருக்கும் நடக்கிற நிகழ்வுதான் இது கருணாநிதியின் பாதியை பெற்றிருப்பவர்கள்தான் கலாநிதியும்,தயாநிதியும் அழகிரியும்,ஸ்டாலினும் தயாராக இருக்கவேண்டும்

ஜோதி said...

கலைஞர் குடும்பத்திற்க்கு உதவி செய்கிற யாருக்கும் நடக்கிற நிகழ்வுதான் இது கருணாநிதியின் பாதியை பெற்றிருப்பவர்கள்தான் கலாநிதியும்,தயாநிதியும் அழகிரியும்,ஸ்டாலினும் தயாராக இருக்கவேண்டும்