Friday, December 5, 2008

பாராளுமன்ற தேர்தலுக்கு அதிமுக சிபிஎம் கூட்டு

உறுதியானது அ.தி.மு.க.,வுடனான ‌மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி

சென்னை : லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ்காரத் அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் முடிவில் அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை உறுதி செய்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

செய்தி: நன்றி: Dinamalar and TimesOfIndia

செய்தி: நன்றி: Maalaisudar

சென்னை, டிச.5: வரும் மக்களவை தேர்தலில் அதிமுகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று ஜெயலலிதா, பிரகாஷ் கரத் ஆகியோர் இன்று கூட்டாக அறிவித்தனர். ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்று சந்தித்த போது, இந்த உடன்பாடு ஏற்பட்டது.
.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சனையால் மத்திய அரசுக்கு இடதுசாரி கட்சிகள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, காங்கிரஸ் அணியுடன் அக்கட்சிகள் தங்கள் தோழமையை முறித்துக் கொண்டன.

இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பிஜேபி அல்லாத மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேரும் முயற்சியில் இரு கம்யூனிஸ்ட் கட்சி களும் ஈடுபட்டன. இதற்காக தமிழ்நாட்டில் அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்வது குறித்து அக்கட்சி கள் ஆலோசனை செய்து வந்தன.

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பியது. அக்கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பேசினார்.

ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டியது. அக்கட்சி தலைவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இருமுறை சந்தித்து இது குறித்து பேசினார்கள்.

இந்நிலையில், கடந்த வாரம் புதுடெல்லியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் தமிழக அரசியல் கூட்டணி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், மாநில செயலாளர் என்.வரதராஜன் மற்றும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கள், மாநில குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கூட்டணி வாய்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க பிரிவினர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் அதிமுக வுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என கூறியதாக தெரிகிறது. தேமுதிக வுடன் கூட்டணி அமைத்து போட்டி யிடலாம் என அவர்கள் கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

எனினும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ள நிலையில், இடதுசாரி கட்சிகள் இணக்கமாகவும், ஒரே அணியில் இருக்க வேண்டு மென்ற கருத்துடனும், அதிமுகவுடன் அணி சேர்வதே நல்லது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த ஆலோசனை இரண்டாவது நாளாக இன்றும் தேசிய செயற்குழு கூட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், மாநில செயலாளர் என்.வரதராஜன், பொலிட் பீரோ உறுப்பினர் கே.வரதராஜன் ஆகியோர் இன்று பகல் 12.30 மணியளவில் போயஸ் கார்டனில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சென்றனர். அவர்களை ஜெயலலிதா இன்முகத்துடன் வாசலில் வந்து வரவேற்றார். ஜெயலலிதாவுக்கு கரத் பூச்செண்டு அளித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அவர்கள் கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தினார்கள். கூட்டணி குறித்து, மார்க்சிஸ்ட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஜெயலலிதா விடம் அவர்கள் தெரிவித்தனர்.

சுமார் ஒருமணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், இரு கட்சிகளும் வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை ஜெயலலிதாவும், பிரகாஷ் கரத்தும் கூட்டாக செய்தியாளர் களிடம் தெரிவித்தனர்.

No comments: