Tuesday, October 30, 2007

இப்போ என்ன பண்றாங்க ?

குமுதத்தின் லைட்ஸ் ஆன் சினிமா பகுதியில் மறந்து போன நடிக-நடிகையர் படம் போட்டு தற்போது என்ன செய்து வருகிறார்கள் என கட்டம் கட்டி வெளியிடுகிறார்கள்.

அதுபோல கீழ் காணும் பிரபலங்கள் இப்போ என்ன பண்றாங்க ? யாருக்கானும் தெரிந்தால் பின்னூட்டவும். பிரபலங்கள் லிஸ்டை நீட்டவும் நீட்டலாம்.

1. தயாநிதி மாறன் (தினகரன் அலுவலகம் செல்லுவது தவிர...) - இவரின் சேவை மீண்டும் (தமிழ்)நாட்டுக்குத் தேவை

2. சடகோபன் ரமேஷ் (முன்னாள் தமிழக / இந்திய கிரிக்கெட் வீரர் சினிமாவிலா ?)

3. எழுத்தாளர் சிவசங்கரி (இந்திய மொழிகளில் நாவலாசிரியர்கள் (அல்லது இலக்கியம் ?) பற்றிய ஆய்வுக்குப் பிறகு ?), அதே மாதிரி இந்துமதி, விமலா ரமணி போன்ற முந்தைய தலைமுறை பெண் எழுத்தாளர்கள்

4. யூகி சேது (டிவியில் பிரபலமான அரட்டை நிகழ்ச்சிக்குப் பிறகு, பஞ்ச தந்திரத்திற்குப்
பிறகு)

5. எம்.எஸ்.உதயமூர்த்தி (ஒரு காலத்தில் தன்னம்பிக்கை என்றால் கூப்பிடு இவரை என்ற அளவில் பல கட்டுரைகளும் மேடைப்பேச்சுகளும் வழங்கியவர்)

6. ஆர்.வி.உதயகுமார் (பொன்னுமணி, சின்னக்கவுண்டர், சிங்காரவேலன், எஜமான் எல்லாம் ஞாபகம் இருக்குல்ல)

7. பாலு ஜுவல்லர்ஸ் உரிமையாளர்கள், மற்றும் இன்னபிற நிதி நிறுவன தலைவர்கள் - அனுபவ், ஈஸ்வரி பைனான்ஸ் மற்றும் பல 24% வட்டிதருவதாகச் சொன்னவர்கள்

8. கவுண்டமணி (ரொம்ப மிஸ் பண்றோமுங்க)

9. குற்றாலீஸ்வரன் (இளம் வயதில் நீச்சலில் சாதனை புரிந்த வீரர்)

10. பூர்ணம் விஸ்வநாதன் (மகாநதிக்குப் பிறகு காணவில்லை)

11. நடிகர் ராமராஜன் (ஒரு காலத்தில் சில்வர் ஜூபிளி நாயகன், பிறகு மக்களவை எம்.பி - சிலகாலம் முன்பு குமுதத்தில் மிகவும் கஷ்டப்படுவதாக ஒரு பேட்டி.. ஆனால் அதன் பின் ?)

12. சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏ.வி.ரமணன் (எப்டி இருந்த நிகழ்ச்சி இப்போ
எப்டி ஆயிடுச்சு)

கிருஷ்ணசாமியை காத்த ராமர்

பரமக்குடி அருகே அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமியை ராமர் டாலர் வடிவத்தில் வந்து காப்பாற்றியதாக அவருடன் சென்ற கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவத்தின் போது, கிருஷ்ணசாமியை தாக்கியவர்கள் அவரது மார்பில் வேல் கம்பியால் குத்தியதாகவும், அவர் அணிந்திருந்த டாலரில் வேல் கம்பு பட்டு அது உடைந்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.

ராமர் டாலரை கிருஷ்ணசாமி அணிந்திருக்காவிடில் வேல் கம்பு இன்னும் ஆழமாக கிருஷ்ணசாமியின் உடலில் பாய்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்றும் அந்த பிரமுகர் தெரிவித்துள்ளார்.

சேது சமுத்திர திட்ட பிரச்சனையில் ராமர் இருக்கிறாரா? இல்லையா? என்ற சர்ச்சை பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் உயிரை ராமர் டாலர் வடிவத்தில் வந்து காப்பாற்றியதாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

News Source: Maalaisudar

Monday, October 29, 2007

கொடியும் மஞ்சள் !

இதை Innovation என்று சொல்வதா இல்லை Lateral thinking என்று சொல்வதா ? ஒரு தண்ணி லாரி முன்பு மக்கள் அலைமோதுவதும், அதற்காக பெரிய க்யூவில் நிற்பதும், அதனால் வரும் தள்ளு முள்ளுகளும் பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த வித தள்ளுமுள்ளுகளை கொஞ்சம் தவிர்க்க நிச்சயம் இந்த 17 பேர் ஒரே நேரத்தில் தண்ணீர் பிடிக்க உதவும் அமைப்பு உதவும். மேலும் குடத்தை வைக்க சிறிய பிளாட்ஃபார்ம் இருப்பதால் அங்கிருந்து தூக்கி நேரே இடுப்பில் வைக்கவும் இலகுவாக இருக்கும்.

பாராட்ட வேண்டிய டிசைன். இதுதான் இந்தியா / தமிழகம் போன்ற பகுதிகளுக்குத் தேவையான மக்களுக்கு உதவும் Innovation.

செய்தி / படங்கள் நன்றி: தினமலர்








செய்தி / படங்கள் நன்றி: தினமலர்

சென்னை: சத்ய சாய் அறக்கட்டளை சார்பாக சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் வாகனத்தை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.

கிருஷ்ணா நதிநீர் திட்டம் கடந்த 1983ம் ஆண்டு துவக்கப்பட்டது. எனினும், செப்டம்பர் 1996ல் சென்னைக்கு கிருஷ்ணா நீர் வந்து சேர்ந்தது. அப்போது முதல் இந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி வரை 27.07 டி.எம்.சி., தண்ணீர் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.512 கோடியை தமிழக அரசு தன் பங்காக ஆந்திரா அரசுக்கு வழங்கி உள்ளது. மேலும், தமிழகத்தில் நடந்த பணிகளுக்காக ரூ.214 கோடியை செலவு செய்துள்ளது.

கிருஷ்ணா நதிநீர் திட்டப்படி 1996 முதல் கணக்கிட்டால் ஆண்டுக்கு 12 டி.எம்.சி., தண்ணீர் வீதம் 120 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்திருக்க வேண்டும். 27.07 டி.எம்.சி., தான் கிடைத்துள்ளது. இதற்கு காரணம், ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லை வரையிலான 151 கி.மீ., துார கால்வாயில் ஏற்பட்ட உடைப்புகளால் ஏராளமான தண்ணீர் வீணாகியது தான்.

கண்டலேறு அணையில் துவங்கி தமிழக எல்லை வரையிலான கால்வாய்களில் ஏற்படும் இழப்பை தடுக்க வேண்டியது அவசியம் என்ற கருத்து சத்ய சாய் பாபாவை ஈர்த்தது. அதனடிப்படையில் இந்த கால்வாயை பலப்படுத்தும் பணியில் சத்ய சாய் நிறுவனம் இறங்கியது. ரூ.200 கோடி செலவில் 18 மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகளால் ஒரு சொட்டு நீர் கூட சேதாரமின்றி தமிழக எல்லைக்கு வந்து சேர காரணமாய் அமைந்தது. இதன்மூலம் சென்னை நகர மக்களின் தாகம் தீர்க்க நிரந்தர தீர்வாகவும் இது அமைந்தது.

இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து `ஜீரோ பாயின்ட்' முதல் பூண்டி நீர்த்தேக்கம் வரையிலான 25 கி.மீ., துாரம் கால்வாயையும், சத்ய சாய் நிறுவனம் ஏற்றுக் கொண்டு பணிகள் நடந்து வருகின்றன. தொடர்ச்சியாக போரூர், செம்பரம்பாக்கம், ரெட்ஹில்ஸ் ஏரிகளின் கரைகளையும் பலப்படுத்தித் தர சத்ய சாய் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. சென்னையின் சில மேடான பகுதிகளில், குறிப்பாக குடிசைப் பகுதிகளில், சென்னை குடிநீர் வாரியம், வாகனங்கள் மூலமாக அன்றாடம் குடிநீர் வழங்கிக் கொண்டு இருக்கிறது. தினமும் ஒன்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள 850 லாரி நடைகள் மற்றும் ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள 400 லாரி நடைகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இவ்வாறு குடிநீர் வழங்குவதற்காக சத்யசாய் பாபா, குடிநீர் வழங்கும் வாகனத்தை குடிசை வாழ் மக்களுக்காக வழங்கி உள்ளார். ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த டேங்கர் வாகனத்தைச் சுற்றி 17 குழாய்கள் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் குடங்களை மேடையில் வைத்து குழாய் மூலம் தண்ணீர் பெறலாம். இந்த அமைப்பில் ஒரே நேரத்தில் 17 பேர் துளி நீர் கூட சிந்தாமல், வீணாக்காமல் குடிநீர் பெறலாம்.

தற்போது சென்னை எட்டாவது மண்டலத்தில், 116வது வட்டத்தில் உள்ள சாய் நகர் (பக்ஸ் சாலை) பகுதிக்கு சென்னை குடிநீர் வாரியம் தினமும் ஆறு ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு லாரி நடைகள் மூலம் குடிநீர் வழங்கி வருகிறது. இப்பணியை தற்போது சத்ய சாய் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தில் இருந்து குடிநீரை பெற்று ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த வாகனம் மூலம் 116வது வார்டு பகுதியில் சாய் நகர் பகுதிக்கு நான்கு நடைகள் இலவசமாக வழங்க உள்ளது. இதனால், சாய் நகர் பகுதியில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் 200 குடும்பங்கள் பயன்பெறும். இந்த வாகனத்தின் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் இந்த வாகனத்தில் இருந்து குடத்தில் தண்ணீர் பிடித்தார். நிகழ்ச்சியின் போது, தலைமைச் செயலர் திரிபாதி, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் தீனபந்து ஆகியோர் உடனிருந்தனர்.சத்ய சாய் அறக்கட்டளையைச் சேர்ந்த சீனிவாசன், ரமணி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Friday, October 26, 2007

மகள் தந்தைக்காற்றும் உதவி ?

தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஓடிப்போய் திருமணம் செய்த பரபரப்பு ஆங்கில/தெலுங்கு மீடியாக்களில் பரபரக்க, தமிழ் வலைப்பதிவு உலகில் இதன் தாக்கத்தைக் காணோமே ?

ஒரு பெரிய மெகாஸ்டார் என்ற விதத்தைவிட ஒரு தந்தையாக அவர் மனம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். பெற்று வளர்த்த பெற்றோருக்குத் தெரியாதா தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பாக வாழ்க்கை அமைக்க ? அல்லது அப்படியே காதல் திருமணம் செய்ய விரும்பினாலும், பெற்றோரின் சம்மதத்தைப் பெறும் வகையில் நடந்து கொஞ்ச காலம் காத்திருந்து அவர்கள் சம்மதத்தையும் பெற்று செய்திருக்கலாமே ?

அப்படியென்ன ஓடிப்போய் திருமணம் செய்து பெற்றோர் பெயரை சந்தி சிரிக்க வைப்பது ?
மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து வந்து கஷ்டப்பட்டு முன்னேறிய - 30 வருடங்கள் உழைத்து புகழை ஈட்டிய ஒருவரது நிலையை ஒரே நாளில் சுக்குநூறாக்கி இந்தியா/உலகு முழுவதும் குடும்பத்திற்கு கெட்ட பெயர் விளைவித்து அப்படியென்ன ஒரு காதல் கத்தரிக்காய் !

ஓடிப்போதல் என்னும் இந்த கான்செப்ட் தமிழ் சூழலில் பல்லாண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும், இந்த மாதிரி கதைகள் கொண்ட தமிழ் சினிமாக்களை பார்த்து, வெற்றிப்படமாக்கும் தமிழர்கள் - தங்கள் வீட்டில் / சுற்றத்தில் இதுபோல் ஒரு சம்பவம் நடந்தால் எப்படிப் பார்க்கின்றனர்.

என்னதான் 21ஆம் நூற்றாண்டு, சமூக மாற்றங்கள் எனப் பேசினாலும், வீடு/சுற்றத்தில் இது போல நடந்தால் எத்தனை பேருக்கு இதனை ஏற்க மனம் வரும். அல்லது பெற்றோருக்கு அடங்க மறுக்கும் பெண்கள் அதிகமாகிவிட்டார்களா ?

மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு எமது ஆறுதல்கள். நீரும் உமது குடும்பத்தாரும் மீண்டும் சகஜ நிலைக்கு வர எமது பிரார்த்தனைகள்.

Sunday, October 21, 2007

டில்லியில் ராம்லீலா - சோனியா ஆரத்தி

ராவணன் ஒழிக்கப்பட்டதன் நினைவாக இந்த ராம் லீலா விழா கொண்டாடப்படுகிறது. ராவணனின் பிரமாண்ட உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகள் பிரியங்கா மற்றும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரும் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர்




செய்தி / படம்: நன்றி: தினமலர்

புதுடில்லி : தசரா பண்டிகையின் நிறைவு நாளையொட்டி, ராம் லீலா நிகழ்ச்சி நேற்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தசரா பண்டிகையின் நிறைவு விழா, நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ராம் லீலாவாக கொண்டாடப்பட்டது. ராவணன் ஒழிக்கப்பட்டதன் நினைவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதனால், தீமை ஒழிந்து நன்மை பிறக்கும் விழாவாக இதை மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

தலைநகர் டில்லி மற்றும் கோல்கட்டாவில் கொண்டாட்டம் "களை' கட்டியது. டில்லி ராம் லீலா மைதானத்தில் இந்நிகழ்ச்சி, நேற்று மாலை வெகு விமரிசையாக துவங்கியது. ராவணனின் பிரமாண்ட உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது.

விதவிதமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. ராமரின் வாழ்க்கையை விவரிக்கும் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராம் லீலா நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகள் பிரியங்கா மற்றும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரும் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர். ராம் லீலா நிகழ்ச்சியை முன்னிட்டு, டில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Wednesday, October 17, 2007

ரூ.642 கோடிக்கு நிலம் கைமாறல் - சென்னையில்

நேற்று விருது வாங்கிய ரஜினி இதைக் குறிப்பிட்டுதான் சொன்னாரா என தெரியவில்லை. சென்னையிலேயே (ஏன் தென்னிந்தியாவிலேயே) மிக அதிக விலைக்குப்போன ஒரு ரியல் எஸ்டேட் டீல் பற்றிய செய்தி.

சென்னை போட் க்ளப் / சேமியர்ஸ் சாலையில் இருக்கும் தங்கள் இடத்தை சென்னை ஆர்ச்டையோசீஸ் நிதெஷ் ஷெட்டியின் நிறுவனத்திற்கு ரூ.642 கோடிக்கு விற்றுள்ளனர். (66 வருட லீஸ்)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ரஜினி சொன்னது"பிள்ளைங்க அடையாறு போட்க்ளப்புல நிலமா வாங்கி தரச்சொன்னாங்க.. தாடிய எடுத்துட்டு மீசைக்கும், தலைக்கும் டை (சாயம்) அடிச்சுட்டு வந்தாத் தான் இந்த நிகழ்ச்சிக்கு வருவேன்னாங்க"
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ரஜினியாலேயே போட் கிளப் பகுதியில் நிலம் வாங்குவது குதிரைக்கொம்பு எனப் படுகையில் நிதேஷ் ஷெட்டி குருப் (இது பெங்களூர் குருப்) வாங்கியுள்ளது என்றால் பின்னணியில் யார் யார் உள்ளனரோ ?

642 கோடி (ரிஜிஸ்ட்ரேஷன் தவிர)என்றால் இன்னும் கட்டிடம் கட்டும் செலவு. இங்கு என்ன வரும்.. வெறென்ன மால் மற்றும் கடை, கண்ணி (கன்னிகளும் தான்), மல்டிப்ளெக்ஸ், காசு கொழிக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் தான்.

செய்தி / நன்றி: த எகனாமிக் டைம்ஸ் / சென்னை மெட்ரொ ப்ளொக்கர்ஸ்.

Nitesh estates has pipped heavyweights such as Unitech, DLF and HDFC Realty with a Rs 642-crore offer to bag a church property in the heart of Chennai city.

The deal gives the Bangalore-based real estate and construction player — managed by the 31-year-old Nitesh Shetty — access to a nine-acre plot just off the city’s high-profile Boat Club area.

At Rs 642 crore excluding registration, the transaction is the costliest land deal in south India and jostles for a place among the biggest deals nationally. The Chennai archdiocese had put the land parcel on Chamiers Road on a 66-year lease and called bid for the same, with some 30 expressions of interest coming in the initial round itself.

The just-concluded transaction could well be the fifth-largest land deal in India after Adani’s Rs 2,250-crore pact with HDIL, DLF’s Rs 1,675-crore acquisition of DCM Shriram property in Delhi, Unitech’s Rs 1,586-crore purchase in Noida and DLF’s Rs 702-crore acquisition of National Textile Mills’ land in Mumbai. Earlier this year, hospitality major Leela Group purchased a three-acre plot at Chanakyapuri in Delhi for Rs 635 crore.

The Chennai deal follows Citigroup’s $250-million investment into Nitesh Estates, as reported by ET last week. When contacted, a Chennai archdiocese representative declined to comment. Hugh Britto, senior vice-president, business development, at Nitesh Estates offered no comments. The deal size could well be in excess of Rs 700 crore, including registration value.

Sources said realty bigwigs like Sobha Developers and RMZ were in the fray. Unitech had tied up with local player Arihant for the bid. Unconfirmed bids suggested interest from corporate giants like Reliance Retail and ITC. It is believed that Nitesh could look at developing over one million sq ft of mixed use development on plot. The nearly a decade-old Nitesh group is in the midst of an expansion acorss key cities. It is also planning a foray into the hospitality industry and has plans to set up at least five luxury hotels.

Last year, Nitesh inked a definite deal to bring Ritz Carlton to India with the first property in Bangalore. While Nitesh is not the exclusive partner to Ritz Carlton in India, it could well be the preferred party for future expansion, sources said. The Ritz Carlton arrangement as well as an earlier investment by the $26-billion global hedge fund Och-Ziff have catapulted Nitesh into national limelight in recent times. Citigroup’s $250 million infusion was the biggest by the global financial powerhouse in the domestic realty sector.

Monday, October 15, 2007

ஜெ. மறு பரிசீலனைக்குத் தயாராக வேண்டும்

நான் நினைத்தேன். இந்த வார குமுதத்தில் சாவித்திரி கண்ணன் எழுதிவிட்டார்.

என்னைக் கேட்டால் பேசாமல் அதிமுகவினர் விஜய்காந்தை தலைவராக்கிவிடலாம். எம்.ஜி.ஆரின் வழி என்றும் சொல்லிக் கொள்ளலாம். திமுக எதிர்ப்பிலும் வீரியம் இருக்கும். மக்கள் ஆதரவும் இருக்கும். ஞாநி ஏன் இதைப் பற்றி எழுதல ? :-)

செய்தி / நன்றி: குமுதம்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஜெ. மறு பரிசீலனைக்குத் தயாராக வேண்டும் - சாவித்திரி கண்ணன்

தமிழகத்தின் பிரதான கட்சிகள் இரண்டில் ஒன்று அ.தி.மு.க. இன்று அது பலமான ஒரு எதிர்க்கட்சி. ஆனால் அந்த எதிர்க்கட்சிப் பாத்திரம் இன்று அதனிடமிருந்து பறி போய்விட்டது... என்று எண்ண வேண்டியுள்ளது.

பல நேரங்களில் ஜெயலலிதா எங்கேயிருக்கிறார்? என்ன செய்கிறார்...? தங்களை பாதிக்கும் சில பிரச்னைகளில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? என்பவை மக்களுக்கு அறிந்துகொள்ள முடியாத ரகசியமாக இருக்கிறது.

சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் சில இந்து இயக்கங்கள் நீதிமன்றம் சென்றபிறகு அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் அதிரடியாக களத்தில் இறங்கினர். உச்சநீதிமன்றம் சென்று பந்துக்கு தடை பெற்றனர்.

கருணாநிதி பந்த் நடத்தவில்லை என்று பணிவாகப் பின்வாங்கி, உண்ணாவிரதம், பந்த் என இரண்டையும் ஒரு சேர நடத்திவிட்டார். திங்கட்கிழமை நடந்து முடிந்த இந்தச் சம்பவத்திற்கு சனிக்கிழமை விலாவாரியாக அறிக்கை தருகிறார் ஜெயலலிதா.

இத்தனை தாமதம் ஏன்? தமிழகமக்களுக்கு ஜெயலலிதாவிடமிருந்து விடை கிடைக்காத கேள்வி களில் இதுவும் ஒன்று.

இதில் மட்டும் என்றில்லை, இந்த ஆண்டு இந்த ஆட்சியில் மக்கள் சந்தித்த மாநகராட்சிக்கு நடந்த மறுதேர்தல், குளறுபடியான கூட்டுறவு தேர்தல், சேலம் கோட்டம், முல்லைப்பெயரியாறு விவகாரம், பாலாறு பிரச்சினை, தூத்துக்குடி டைட்டானியம் ஆலை பிரச்னை...என எல்லாவற்றிலுமே அவர் மிக காலதாமதமாகவே தமது கருத்துக்களை பிரசவித்தார்.

சென்னை மாநகராட்சித் தேர்தலிலும், கூட்டுறவு தேர்தல்களிலும் அ.தி.மு.க. அங்கத்தினர்கள் பங்கேற்காமல் தவிர்த்தது அக்கட்சியை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி யுள்ளது. இது ஜனநாயக அமைப்பில் சந்திக்க வேண்டிய சவால்களிலிருந்து ஓடி ஒளிவதற்கு ஒப்பாகும்.

இதுவரை தமிழக அரசியலில் தி.மு.க. மற்றும் கருணாநிதி மீதான அதிருப்தியே ஜெயலலிதாவிற்கு அதிர்ஷ்டமாக கைகொடுத்துள்ளது. ஆனால் இன்று, ‘கருணாநிதியை விட் டால் ஜெயலலிதாதான்’ என்ற நிலைமை அடுத்த தேர்தல் வருவதற்குள்ளாகவே அடியோடு மாறிவிடக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன. விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் விஜயகாந்தும், சலசலப்பேற்படுத்திக் கொண்டிருக்கும் சரக்குமாரும் மாற்றுக்கட்சிகளையெல்லாம் தங்கள் அணுகுமுறையில் மாற்றம் செய்து கொள்ள நிர்பந்தித்துள்ளனர்.

ஒரு அரசியல் தலைவர் என்பவர் அணுகுவதற்கு எளிதானவராக இருக்க வேண்டும். அவரது கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களாலே கூட அவரை அணுகுவது சுலபமில்லை. கூட்டணிகட்சித் தலைவர்களுக்கம் எளிதில் சாத்தியமில்லை.

உள்ளாட்சித் தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட இடங்களில் கூட போட்டியிட வழியில்லாமல் அ.தி.மு.க.வினரால் தடுக்கப்பட்டனர் விடுதலைச் சிறுத்தைகள். மூன்று நாள் முயற்சி எடுத்தும் கூட்டணிக் கட்சித் தலைவியிடம் புகார் செய்யக்கூட வகையின்றி புறக்கணிக்கப்பட்டார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். எனவே திசைமாறி பறந்துவிட்டார். சமீபத்தில் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான அத்வானி, அ.தி.மு.க. தலைவரை சந்தித்துப் பேச ஆசைப்பட்டார். அனுமதி மறுக்கப்பட்டது.

அகில இந்திய அளவில் மூன்றாம் அணி அமைத்தார் ஜெயலலிதா. அந்த மூன்றாம் அணித்தலைவர்களில் சிலரும் இப்படிப்பட்ட மூக்கறுப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது என பகிரங்கமாக அறிக்கை தந்தனர்.

அறிக்கைகளின் மூலம் மட் டுமே அறியப்படுபவராக ஒரு கட்சித்தலைவர் இருந்தால் அவர் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ளார் என்பதே அர்த்தம்!.

அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு தி.மு.க.வும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு அதி.மு.க.வும் அழியாமல் தொடர்கிறதென்றால் அதற்கு அவர்கள் கட்சியை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்ததுதான் காரணம். நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், என்.வி.நடராஜன், சி.பி.சிற்றரசு, அன்பழகன், கருணாநிதி என்ற அடுத்த கட்டத் தலைவர்களைஅண்ணா அரவணைத்து தயார் செய்யா விட்டால் தி.மு.க. என்ற இயக்கம் அவரோடு தீர்ந்துபோயிருக்கும். அதே போல எம்.ஜி.ஆரும் எண்ணற்ற இரண்டாம் கட்டத் தலைவர்களை எழுச்சியோடு உருவாக்கினார்.

ஆனால் எம்.ஜி.ஆருக்குப்பிறகு அ.தி.மு.க.விற்கு தலைமை தாங்கிய ஜெயலலிதா அந்த இயக்கத்தை அடிமைகளின் கூடாரமாக வைத்திருக்கவே ஆசைப்படுகிறார். எம்.ஜி.ஆர். கட்சியையே குடும்பமாக பாவித்தார். ஜெயலலிதாவோ தன் தோழியின் குடும்பத்திற்கே இன்று கட்சியை அர்ப்பணித்துவிட்டார்.

கடந்த இருபதாண்டுகளில் அ.தி.மு.க. இழந்து வந்த தலைவர்கள் மற்றும் தளபதிகளின் பட்டியல் வெகு நீளமானது. அடுத்தடுத்த கட்டங்களாக க.ராஜாராம், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், கோவைத் தம்பி, ஆர்.எம்.வீரப்பன், அரங்கநாயகம் போன்ற மூத்தத் தலைவர்கள் ஒதுக்கப்பட்டனர். இப்போதும் பொன்னையன் போன்ற பல திறமையாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவிற்கு தன் செல்வாக்கு மற்றும் திறமையில் மட்டுமே அதீத நம்பிக்கை இருக்கலாம். உண்மையில் அவரது தன்நம்பிக்கைதான் அவருடைய பலம். அதுவே பலவீனமும் கூட! நினைத்ததை பேசும் மனோதிடம் உள்ளவர்தான்! சினிமாவில் வேஷமிட்டவர்தான் எனினும் நிஜத்தில் வேஷத்தை விரும்பாதவர். அவருக்கு எதிரி என்றால் எதிரிதான்! எதிரியிடம் நண்பனாக நடிக்கும் அரசியல் அவரால் முடியாது. இந்து மதத்தில் அவருக்கு மரியாதை உண்டு. கடவுள் நம்பிக்கையையும் எதற்காகவும் ஒளித்துக் கொண்ட தில்லை ஜெயலலிதா. ஆனால் ஒட்டு வங்கிக்காக மதவெறி அரசியலை கையியெலடுக்க விரும்பாதவர். இப்படி சில சிறப்புகள் அவருக்கு இருந்தாலும் வரலாற்றில் எந்த தனிப்பட்ட தலைவர் ஒருவரின் வெற்றிக்கும் அவர் தன்னைச் சார்ந்து வருபவர்களின் உழைப் பையும், திறமைகளையும் சாத்தியப்படுத்திக்கொண்டதே காரணமாயிருந்துள்ளது. ஜெயலலிதா தன்னையும், இயக்கச் செயல்பாடுகளையும் மறுபரிசீலினைக்கு உட்படுத்தியே ஆகவேண்டும். இல்லையெனில் அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் உள்ள செல்வாக்கு மக்களின் பரிசீலனைக்கு உட்பட்டே தீரும்..

Thursday, October 11, 2007

படம் - நெற்றியில் பொட்டில்லா கனிமொழி

அண்ணன் வழியில் தங்கையும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு. என்ன - எப்போதும் நெற்றியில் பொட்டுடன் வரும் கனிமொழி, இதற்கு மாத்திரம் பொட்டிடாமல் வந்து அவரும் அரசியலில் பால பாடம் கற்றுவிட்டார்.

பொட்டு இடுவது இடாதது அவரின் சொந்த விருப்பம். நீ யார் அதைக் கேட்க என சொல்ல வருவீர்களனால் - இங்கேயே ஜகா வாங்கிற்றேன். இதுவரை எத்தனை பொது நிகழ்ச்சிகளில் அவர் பொட்டுடன் வந்துள்ளார். எத்தனை நிகழ்ச்சிகளில் பொட்டில்லாமல் வந்துள்ளார் என ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற வாழ்த்துக்கள்.

செய்தி, படம் / நன்றி: தினமலர்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


சென்னை: ""சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கிடைக்க போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது,'' என்று கனிமொழி பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மகளிர் அணி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. மகளிர் அணி மாநில செயலர் பாத்திமா முசாபர் தலைமை வகித்தார். ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 200 ஏழை பெண்களுக்கு இலவச புடவைகள், 20 ஏழைகளுக்கு தையல் மிஷின்கள், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை ஆகியவற்றை ராஜ்யசபா எம்.பி., கனிமொழி வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: மத நம்பிக்கை இல்லாத என்னை இந்த விழாவிற்கு ஏன் அழைத்தார்கள் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. மத நம்பிக்கை என்பது எல்லாரையும் ஒன்றாக இணைக்கும் விஷயம். மனித நேயத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பெண்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். எந்த மதமும் மக்கள் நலனுக்காகதான் உள்ளது. மக்களை மேன்மை படுத்துகிறது. மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தருகிறது. மக்களை அடக்கி, ஒடுக்கி வைக்க மதம் உருவாகவில்லை என்பதை அடிப்படையில் புரிந்துக் கொள்ள வேண்டும். மதத்தின் பெயரால் பல நன்மையான காரியம் செய்யப்படுகிறது. ஒரு முன்னேற்ற பாதையில் செல்லும் போது அதை தடுப்பதற்காக மதகோட்பாடு பூதாகரமாக எழுகிறது. இந்த தருணத்தில் சுய பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. முதல்வர், சிறுபான்மை மக்கள் மீது அக்கறை கொண்டவர். தமிழக அரசும் சிறுபான்மை மக்களுக்கு அரணாக உள்ளது. அதன் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் கிடைக்க போராட வேண்டிய அவசியம் உள்ளது.

போர் குணமிக்கவர்கள் பெண்கள்:சச்சார் கமிட்டி அறிக்கையை பார்க்கும் போது மனம் பதறுகிறது. பல கேள்விகள் எழுகிறது. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு சமூகம் பின் தங்கியே இருக்கிறது என்பது வேதனையை தருகிறது. பெண்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைக்காக போராடுபவர்கள். எந்த மதமும், இயக்கமும் பெண்களை அடக்கி ஒடுக்கி வைக்க நினைப்பதில்லை. பெண்கள் முன்னேற வேண்டும் என்ற அக்கறையில் தான் செயல்படுகிறது. நமது சமூகத்தில் பெண்கள் அடக்கி வைக்கப்படுகின்றனர். அதனால், அவர்கள் போராட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெண்கள் போர் குணமிக்கவர்கள்; தைரியமிக்கவர்கள். இதையெல்லாம் மறந்து விட்டு பெண்கள் வாழ நினைப்பதில் அர்த்தமில்லை. ஆண்கள் அடக்கியாள வேண்டும். பெண்கள் அடங்கி போக வேண்டும் என்று உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்காதீர்கள். அப்படி சொன்னால் இப்படி தான் வாழ வேண்டும் என்ற சிறிய வட்டத்திற்குள் அவர்கள் வாழ கற்றுக் கொள்வார்கள். இதனால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கும். இவ்வாறு கனிமொழி பேசினார்.

அந்துமணியின் அப்பாவுக்கு விருது

அந்துமணி ரமேஷின் அப்பா - திரு டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி விருது பெற்ற விபரம் - இன்றைய தினமலரில் - படத்தில் இடமிருந்து மூன்றாம் இடத்தில்.

செய்தி-படம் / நன்றி: தினமலர்

அந்துமணிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என கேட்க வேண்டாம். எல்லாம் சும்மா பதிவு விளம்பரம் தான் :-)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


பத்திரிகையாளர்களை பாராட்டுவதே இல்லை

சென்னை :"பத்திரிகையாளர்கள் எவ்வளவு பணி செய்தாலும் இந்த சமுதாயம் அவர்களை பாராட்டுவதில்லை' என "தினமலர்' நாளிதழின் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

சென்னை புரோபஸ் கிளப் மற்றும் ரஷ்ய கலாசார மற்றும் அறிவியல் மையத்தின் சார்பில் சர்வதேச முதியோர் தினம் மற்றும் ரஷ்ய கலாசார மற்றும் அறிவியல் மையத்தின் 35வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் புரோபஸ் சிறப்பு விருது, "தினமலர்' நாளிதழின் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது. விருதினை முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல் வழங்கினார்.

கலை தம்பதியினர் மனோகர் மற்றும் மகிமாவுக்கும் புரோபஸ் சிறப்பு விருது வழங்கப்பட்டது. புரோபஸ் அங்கீகார விருது பாலசுப்ரமணியத்திற்கு வழங்கப்பட்டது."புரோபஸ் வே ஆப் சக்சஸ்புல் ஏஜிங்' நுõலினை வைத்தீஸ்வரன் வெளியிட முதல் பிரதியை முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல் பெற்றுக் கொண்டார். "புரோபஸ் வழங்கும் அருசுவை விருந்து' நுõலினை ஸ்டேப் பாங்க் ஆப் இந்தியா உதவி பொதுமேலாளர் வசுதா சுந்தரராஜன் வெளியிட முதல் பிரதியை இன்னர் வீல்ஸ் கிளப்பின் துணை தலைவர் நந்தினி பெற்றுக் கொண்டார். விழாவில் 75 வயதான சென்னை புரோபஸ் கிளப் உறுப்பினர்களும், 50 வருட திருமண வாழ்க்கையை நிறைவு செய்த தம்பதிகளும் கவுரவிக்கப்பட்டனர். புரோபஸ் கிளப்பால் நடத்தப்பட்ட செஸ் போட்டி மற்றும் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் "தினமலர்' நாளிதழின் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

என் வாழ்நாளில் இது ஒரு மறக்க முடியாத நாள். சென்னையில் கற்றவர்களும், பல துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களும் கூடி ஒரு பரிசை வழங்குவது அளவில்லா மகிழ்ச்சியளிக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், எனது சங்க கால நாணய ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் கொடுத்தது. அதே போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக பத்திரிகையாளர்களுக்கு நண்பர்களே கிடையாது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்களை கண்டால் வெறுப்பார்கள். அதனால் அவர்கள் வெறுப்பிற்கு ஆளாக வேண்டாம் என கருதி கூடுமானவரை ஒதுங்கியே இருப்பது வழக்கம்.பத்திரிகையாளர்கள் எவ்வளவு பணி செய்தாலும் இந்த சமுதாயம் அவர்களை பாராட்டாதது பெரிய குறை. ஒவ்வொரு பிரச்னையும் பத்திரிகையில் எழுதினால் தான் அதற்கு ஒரு முடிவு வருகிறது.

உதாரணமாக, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மாம்பலம் பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது என்றால், பத்திரிகையில் கலர் படத்துடன் செய்தி வெளியிட்டால் தான் நடவடிக்கை எடுக்கிறார்கள். இது பத்திரிகையின் முக்கியமான பணி. இந்தப் பணியை வேறு யாரும் செய்வதில்லை. தினசரி இதுபோன்ற பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். இந்த பணிக்கு 25 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களை அழைத்து பாராட்டு பத்திரம் கொடுத்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.இவ்வாறு டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல் :

முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல் பேசுகையில், "சாதனைகளை பாராட்டும் புரோபஸ் கிளப்பின் தன்மையை பாராட்டுகிறேன். மனிதர்களின் சாதனைகளை கொண்டாடுவதன் மூலமாக ஆக்கப்பூர்வமான சக்தியை உருவாக்குகிறோம். நாமும் சந்தோஷமாக இருந்து, மற்றவர்களுக்கு சந்தோஷத்தை வழங்கினால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். துடிதுடிப்புடன் இருக்கும் வரை நாம் வயதானவர்களாக ஆவதில்லை' என்றார்.ரஷ்ய கலாசார மற்றும் அறிவியல் மையத்தின் இயக்குனர் ஸ்டானிஸ்லேவ் சிமகோவ் சிறப்புரையாற்றினார். புரோபஸ் கிளப்பின் தலைவர் பாலாம்பாள் வரவேற்றார். செயலர் ஆதிமூலம் நன்றி கூறினார்.

Wednesday, October 10, 2007

ரொட்டி உணவும் - கெட்டி வாழ்வும் - கி.வீரமணி

தமிழர் தலைவர் (?) கி.வீரமணி எல்லோரையும் ரொட்டி (பிரட்) சாப்பிடச் சொல்லியுள்ளார். வாரத்தில் சில நாட்கள் அரிசி உணவைத் தவிர்த்து பிரட் சார்ந்த உணவு (சாண்விச், பர்கர் போன்றவை) சாப்பிட்டால் எல்லோரும் நலமாக வாழலாம் என்கிறார்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் புரா திட்டத்தை அமுல்படுத்துவது இருக்கட்டும். ஏற்கனவே நாட்டில் கோதுமை தட்டுப்பாடு என வீணாய்ப் போன கோதுமையை இறக்குமதி செய்து பலரும் வாங்கிக் கட்டிகொண்டிருக்கையில் தமிழர்கள் அரிசி உணவைக் குறைத்தால் இன்னும் என்னென்ன நிலைமை வரும் ?

தமிழர்தம் உணவான இட்லிவடைக்கும் சாம்பார் வடைக்கும் இப்படியுமொரு threatஆ :-)

பதியுங்கள் உங்கள் கருத்துகளை.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

செய்தி / நன்றி : விடுதலை

ரொட்டி உணவும் - கெட்டி வாழ்வும்!

இன்று (அக்டோபர் 8) உலக ரொட்டி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டில் உள்ள 365 நாள்களும் ஒவ்வொரு நாளில் ஒரு குறிப்பிட்ட பொருளை மய்யப்படுத்தி உலக நாள்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது!

பொதுவாக உணவு நாள் என்று அழைக்காமல், ரொட்டியை மய்யப்படுத்தி இப்படி ஒரு நாளா என்று சிலருக்குக் கேட்கத் தோன்றும்.

அரிசியையே முக்கிய உண்ணும் உணவுப் பொருளாகக் கருதுபவர்களைவிட உலகில் ரொட்டியை முக்கிய உணவாக (ளுவயயீடந குடிடின) உண்ணும் மக்கள் பல கோடிக் கணக்கில் உள்ளனர்.
ரொட்டியை உணவாகக் கொண்ட பழக்கம் இருந்த காரணத்தால்தான் 2000 ஆண்டுகளுக்கு முன் கிறித்தவர்கள் அவர்தம் கடவுளை வேண்டும் பிரார்த்தனையில்கூட, `இன்றைக்குத் தேவைப்படும் ரொட்டியை எங்களுக்குத் தாரும் பிதாவே என்று ரொட்டியைத்தான் கேட்டார்கள்! (அதிலே கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய செய்தி, ரொட்டியை அன்றாடம் தரச் சொல்லிக் கேட்கிறார்கள்; ஒட்டுமொத்தமாக சேமித்து இப்போது குளிர்பதன பெட்டியில் அல்லவா அடைத்து வைத்து) உண்டு, மகிழ்கின்றனர்!

பிரெஞ்சுப் புரட்சி வரலாற்று லூயி மன்னன் மனைவி மேரி அன்டாயினெனட் என்பவர் மக்கள் ரொட்டி கிடைக்கவில்லையே என்று பஞ்சத்தில் வாடியபோது, ``அவர்களை கேக் சாப்பிடச் சொல்லுங்கள் என்ற பொறுப்பற்ற விசித்திரமான அறிவுரை கூறிய சம்பவங்கள் வரலாற்றில் ஏராளம் உண்டு!

`கால் வயிற்றுக் கஞ்சி என்பது நம் நாட்டில் நாம் பயன்படுத்தும் சொல்லாட்சி. ஆனால், மேலைநாடுகளில், `ஒரு சிறு ரொட்டித் துண்டுக்கும் வழி இல்லை என்பது அவர்களின் சொல் வழக்கு; காரணம் அவர்களது உணவு ரொட்டிதான்!

இந்த ரொட்டியைத் தயாரிப்பதில்கூட ஒவ்வொரு வகையிலும் புத்தம் புது முறைகளைக் கையாண்டு, விதவிதமாகத் தயாரித்து நுகர்வோரை ஈர்க்கின்றனர்!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் முதல் முறையாக 1980 களில் சென்றபோது, அங்கு பெரிய பேரங்காடிகளில் ரொட்டி வாங்கிச் செல்வோரைக் கண்டு நானும், எனது நண்பர்களும் பெரிதும் ஆச்சரியப்பட்டுப் போனோம்! காரணம், ஒவ்வொருவர் கையிலும் ஒரு கைத்தடி போல் இரண்டு மடங்கு நீளமுள்ள ரொட்டியை வாங்கி லாவகமாகத் தூக்கிச் செல்கின்றனர். நாம் அரிசி வாங்கி சமைப்பதற்கு எடுத்துச் செல்வதுபோல அங்கே அவர்கள் அந்த நீண்ட ரொட்டியை வாங்கிக் கொண்டு சமையல் அறைப் பகுதியில் அப்படி மாட்டிவிட்டு ஒவ்வொரு வேளைக்கும், ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப வெட்டியெடுத்து, அதனுடன் உருளைக்கிழங்கை (குசநஉ குசநைள) தட்டு நிறைய வைத்துக்கொண்டு சாப்பிட்டுப் பசியாறுகின்றனர்! (`உருளைக்கிழங்கு வாய்வு என்றெல்லாம் கதை பேசுவது இல்லை!)

நமக்குக்கூட இந்த ரொட்டி உணவு ஒருவேளையாவது எடுத்துக்கொள்ளும் பழக்கம் வந்தால் மிகவும் நல்லது!

சிறுசிறு வகையில் பசி போக்கிட சான்ட்விச் (ளுயனேறஉ) என்பதை இப்போது இரண்டு துண்டு ரொட்டி (ளுடஉந) அதனுள் கோழி இறைச்சியோ, மாட்டு இறைச்சியோ அல்லது காய்கறிகள் மட்டும் சாப்பிடுவோர் அந்த சிறு `சான்ட் விச்சுக்குள் தக்காளி, வெள்ளரிப் பிஞ்சு இவற்றை இடையில் வைத்து சாப்பிடும் பழக்கம் இப்போது அலுவலகப் பணியாளர்கள், அவசரப் பணியாளர்கள் மத்தியில் அதிகம் பரவிக் கொண்டுள்ளது!

ரொட்டியில் பல வகையில் தயாரித்து, ஒரே வகையில் அனுதினமும் சாப்பிட்டால் அலுத்துப் போகும் என்பதால், `ரொட்டிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று பரவசப்பட்டுப் பாடும் வகையில் தயாரிக்கின்றனர்.

சிங்கப்பூரில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முதியவர்கள் கூட்டாகச் சேர்ந்து ரொட்டி தயாரிக்கத் தொடங்கி, இன்று அங்கே அவர்களால் தயாரிக்கப்படும் ரொட்டி மிகப்பெரிய வரவேற்புக்கு ஆளாகியுள்ளது!

வல்லத்தில் உள்ள நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பெரிதும் கிராமத்துப் பெண்களைக் கொண்டது - இந்த ரொட்டி தயாரிக்கும் தொழிலை நன்கு கற்றுக் கொண்டு, அவரவர் ஊருக்குச் சென்று, வங்கிகளில் கடன் பெற்று ரொட்டி தயாரித்து எளிய விலைக்கு - குறைந்த லாபத்துடன் வருவாயைப் பெற்று வசதியாக வாழ்வதைப் பார்த்து மகிழ்ச்சியடையலாம்!

`இனி ஒரு விதி செய்வோம்; அதை எந்த நாளும் காப்போம் வாரத்திற்கு குறைந்தபட்சம் 2 நாள்களுக்காவது ரொட்டி உணவை உண்போம்; அரிசிக்கு சற்று விடுமுறை அளிப்போம். அதன்மூலம் சர்க்கரை வியாதி ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்போம்.
இதனால் மகளிருக்குக் கூட இந்த சமையலறைப் பாரம் கொஞ்சம் குறையும் வாய்ப்பு ஏற்படக் கூடும்!


இட்லி தயாரிப்புக்கு எடுக்கும் நேரம், நினைப்பு, உழைப்பு இவற்றைவிட கடையிலிருந்து நல்ல ரொட்டியை வாங்கிக்கொண்டு வந்து கூடி உண்டு மகிழலாமே!
`என்ன தொடங்கலாமா? `நாளைமுதல் என்று சொன்னால் நடைமுறைக்கு வராது; `இன்று முதல் என்று கூறி மாற்றத்தைத் தொடங்கி மகிழுங்கள்.

இல்லத்தரசிகளுக்கு சற்று ஓய்வு தர இதுவும் ஒருவகை உதவியே. அதிலும் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களுக்கு `ரொட்டி பெரிதும் கைகொடுக்குமே

Tuesday, October 9, 2007

முதல்வருக்கு வைகோ பதிலடி

சேது சமுத்திர திட்டம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி எழுப்பிய கேள்விகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதில் அளித்துள்ளார்.

யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தாமல், அதே நேரத்தில் பெரிய கப்பல்கள் போகும் வகையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் குறித்து முதலமைச்சர் கருணாநிதிக்கு சில கேள்விகளை விடுத்து, என் குற்றச்சாட்டை அவர் மறுத்து நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன் என்று செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் நான் பேசியதற்கு முதலமைச்சர் கருணாநிதி, என் குற்றச்சாட்டை மறுக்க முடியாமல் சாமர்த்தியமாக திசை திருப்பி ஒரு விளக்கத்தை அளித்து உள்ளார்.

என் கேள்வி இதுதான், அண்ணா மறைந்த பின்பு 69 முதல் 98 செப்டம்பர் வரை கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலங்களில் எந்தப் பிரதமரிடமாவது டெல்லியில் சேதுகால்வாய்த் திட்டம் தமிழ்நாட்டுக்குத் தேவை என்று எழுத்து மூலமாக வற்புறுத்தி நேரடியாகப் பேசி இருக்கிறாரா? 69ல், 71ல், 89ல், 96ல் நான்கு முறை முதல்வரானபோது இந்தத் திட்டத்தை வலியுறுத்தி எந்தப் பிரதமரிடமும் இவர் கோரிக்கை வைக்கவே இல்லை.
தமிழர்களின் நூற்றாண்டு காலக்கோரிக்கையான அண்ணாவின் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வற்புறுத்தினாரா? கிடையவே கிடையாது. தமிழ்நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமையை அவர் செய்யவே இல்லை என்பது தான் என் குற்றச்சாட்டு.

அப்படி அவர் இதற்காக வாதாடியதாக நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன்' என அறிவித்தேன். தமிழக முதல்வர் 7ம் தேதி அன்று விடுத்துள்ள அறிக்கையில், என் கேள்வியையே திரித்து, "சேதுத் திட்டத்துக்காக கருணாநிதி இதுவரை எந்தப் பிரதமரிடமாவது எழுத்து மூலமாக கோரிக்கை வைத்ததை நிரூபித்தால், நான் அரசியலைவிட்டே விலகிக் கொள்கிறேன்' என்று நான் பேசியதாகக் கூறி விளக்கம் அளித்து உள்ளார்.

2002, மே 8ம் தேதி, அவர் பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தையும், 2002, அக்டோபர் 15ல் எழுதிய கடிதத்தையும் சாட்சிக்கு அழைத்து உள்ளார். இதனால் ஒன்று தெளிவு ஆகிறது. என் குற்றச்சாட்டை அவரால் மறுக்க முடியவில்லை. அதனால்தான் 1998ல் பிரதமர் வாஜ்பாய் அறிவித்த திட்டம் குறித்து, நான்கு ஆண்டுகள் கழித்து 2002ல் அவர் கடிதம் எழுதியதைக் காட்டுகிறார்.

ஆனால் அவரிடம் அரசியல் பெருந்தன்மை அணு அளவும் கிடையாது என்பதால்தான் அவர் எழுதிய அந்தக் கடிதத்தில் கூட 98ஆம் ஆண்டு, செப்டம்பர் 15ல் திமுக நடத்திய அண்ணாபெரியார் பிறந்தநாள் விழாப் பேரணியில், சென்னைக் கடற்கரையில் பிரதமர் வாஜ்பாய் "சேதுக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும்' என்று உறுதி அளித்ததைக் குறிப்பிடவே இல்லை.

நான் எழுப்பிய இன்னொரு குற்றச்சாட்டுக்கும், கேள்விக்கும் முதல்வரிடம் பதிலே இல்லை. அதுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. 2004ல் அமைந்தபோது அதற்கான குறைந்தபட்ச செயல்திட்டத்தை மன்மோகன் சிங்கும், பிரணாப் முகர்ஜியும் தயாரித்த போது, நான் நேரடியாக அவர்களைச் சந்தித்து சேதுக்கால்வாய்த் திட்டத்தை அக்குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி எழுத்து மூலமாக கோரிக்கை விண்ணப்பம் தந்து, அதில் இடம்பெறச் செய்தேன். ஆனால் சேதுக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கருணாநிதி சொல்லவும் இல்லை, கோரிக்கை தரவும் இல்லை. இதுகுறித்து மன்மோகன் சிங்கிடம் பேசவும் இல்லை.

ஆனால் அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நாகூசாமல் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம், சேதுக்கால்வாய்த் திட்டத்தை வற்புறுத்தியதாக ஒரு பச்சைப் பொய்யைத் துணிந்து அவிழ்த்து விட்டார். அன்றுவரை அவர் எங்கும் பேசாத ஒன்று இது. அப்படி அவ்வாறு மன்மோகன் சிங் அரசிடம் வற்புறுத்தியதாக நிரூபித்தால், நான் பொதுவாழ்வை விட்டே விலகுகிறேன் என அறைகூவல் விடுத்து இருந்தேன். முதலமைச்சர்
கருணாநிதி தந்து உள்ள விளக்கங்களில் இதற்குப் பதிலே இல்லை.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல வளமான வர்ணனை வார்த்தைகளுக்கு இடையில் பொய்களைச் சொருகுவதில் ஈடு இணையற்ற வல்லவர் கருணாநிதி ஆவார். அதனால்தான் 2002 மே மாதம் 8ந் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தில் "நான் பல சமயங்களில் பொறுப்பில் இருந்த பல பிரதமர்களிடம் இதைக் குறித்து வலியுறுத்தி உள்ளேன்' என்று அப்பட்டமான ஐமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைப் பதித்து விட்டார்.

சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதில் துளி அளவும் கருணாநிதிக்கு அக்கறை இல்லை என்பதால்தான் 2001, பிப்ரவரி 1ம் தேதி, சென்னையில் எண்ணூர் துணைத் துறைமுகத்தை பிரதமர் வாஜ்பாய் தொடங்கி வைத்த விழாவில், பங்கு ஏற்றுப் பேசிய அன்றைய முதல்வர் கருணாநிதி, தனது உரையில் துறைமுகங்களைப் பற்றிப் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி வலியுறுத்தவும் இல்லை. அதுபற்றிக் குறிப்பிடவும் இல்லை.

இத்திட்டம் குறித்துப் பேச வேண்டிய பொருத்தமான இடம் என்பதையும் பிரதமரிடம் வற்புறுத்த வேண்டியது கடமை என்பதையும், திட்டமிட்டே நிராகரித்து விட்டார் என்பது தான் உண்மை. ஆனால் கருணாநிதி தன் கடமையை மறந்தாலும், சேதுக் கால்வாய்த் திட்டத்தை அங்கே நினைவுறுத்தத் தவறினாலும், வாஜ்பாய் தன்னுடைய உரையில், "தமிழக மக்களின் நீண்டநாள் கனவாக இருந்துவரும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தோம். அந்த உறுதியை நாங்கள் மறக்கவில்லை. நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று குறிப்பிட்டார்.

சேதுக் கால்வாய்த் திட்டம் எப்படியும் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும். எந்த மதத்தினரின் உள்ளத்தையும் புண்படுத்திப் பேசாமல், கருமமே கண்ணாகச் செயல் ஆற்றுவது தான் இந்த வேளையில் தேவையான அணுகுமுறை ஆகும். உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இத்திட்டம் குறித்து மாற்று வழியைப் பரிசீலிப்பதாகச் சொல்லி மூன்று மாத காலம் அவகாசம் பெற்று இருக்கிறது. மாற்று வழி என்ற யோசனையையும் புறக்கணிக்கவில்லை' என்று ஒரு கட்டத்தில் தமிழக முதல்வருக்கு கூறினார்.

அமைக்கப்படுகின்றன சேதுக்கால்வாய் 14 மீட்டர் முதல் 15 மீட்டர் ஆழத்துக்குக் குறையாமல் அமைந்தால் தான் பெரிய கப்பல்கள் அக்கால்வாயில் செல்ல முடியும். ஆனால் தற்போது அமைக்கப்படுகிற சேது சமுத்திரக் கால்வாய் 10 மீட்டர் முதல் 12 மீட்டர் வரைதான் ஆழப்படுத்தப்படுவதாகத் தெரிய வருகிறது.

அப்படியானால் 80,000 டன் முதல், ஒரு லட்சம் டன் எடை உள்ள கப்பல்கள், பன்னாட்டுக் கப்பல்கள் இக்கால்வாய் வழியாகச் செல்லவே முடியாது. 30,000 அல்லது அதிகபட்சம் 40,000 டன் எடை உள்ள சிறிய கப்பல்கள் மட்டுமே இக்கால்வாயில் செல்ல முடியும் என்பதால், எந்த நோக்கத்துக்காக சேதுக் கால்வாய்த் திட்டம் அமைக்கப்படுகிறதோ, அந்த நோக்கமே நிறைவேறாமல் போய்விடும்.

மீனவ மக்களின் கவலையையும், ஐயத்தையும் போக்கிடும் வகையில், தகுந்த விளக்கங்களைத் தருவதுடன், பெரிய கப்பல்கள் செல்லுகிற விதத்தில் சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றி தமிழகத்தின் பொருளாதாரத்துக்கு வளம் சேர்க்க வழி காண வேண்டும்.

Source / Nandri: Maalaisudar

Monday, October 8, 2007

மற்றுமோரு படம் - இப்போ ஸ்டாலின்

தேர்தல் இப்போது இல்லை என்பதால், இப்தார் நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வரவில்லை'' என்று, அமைச்சர் ஸ்டாலின் பேசினார். இப்தார் நிகழ்ச்சி ஸ்டாலின் பங்கேற்பு.

(((இன்னும் திமுக தலைவர் தான் பாக்கி. ஆக ஸ்டாலினும் தயாராகிவிட்டார்.)))


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


இப்தார் நிகழ்ச்சி ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: ""தேர்தல் இப்போது இல்லை என்பதால், இப்தார் நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வரவில்லை'' என்று, அமைச்சர் ஸ்டாலின் பேசினார். தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் திருப்பூர் அல்தாப் தலைமை வகித்தார்.

அமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் இப்தார் நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைக்கிறீர்கள். சிறப்பு விருந்தினராக நான் வரவில்லை. உங்களில் ஒருவனாக வந்துள்ளேன். சில தலைவர்களுக்கு தேர்தல் வந்தால் தான் இப்தார் நினைவுக்கு வரும். ஓட்டுகளை பெறுவதற்காக இப்தார் நிகழ்ச்சி நடத்துவர். பிரதான எதிர்க்கட்சித் தலைவரே முன்னின்று இப்தார் விருந்து நடத்துவதாக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை. தேர்தல் நடக்கவுள்ளது என்றால் அவர் வந்திருப்பார். இப்போது தேர்தல் இல்லை என்று தெரிந்ததும் அவர் வரவில்லை.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, மைதீன்கான், தமிழக அரசின் சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச்செயலர் சையது சத்தார், கவிஞர் சல்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்

செய்தி / படம் நன்றி: தினமலர்

ராமதாஸ், கார்த்தி சிதம்பரம்

விஜயகாந்த்

கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி

கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி..

தொடர்புடைய சுட்டிகள் - இங்கே மற்றும் இங்கே


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எடியூரப்பா முதல்வர், குமாரசாமி துணை முதல்வர்

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்றாலும் பதவி என்றால் எதற்கும் இறங்கி வருவார்கள் - எதுவும் நடக்கும் - இன்னும் 20 மாதங்களுக்கு நல்ல வசூல் இருதரப்பினருக்கும்.

இந்த செய்தி உண்மையா ?
பார்க்க ரீடிஃப்

எடியூரப்பா முதல்வர், குமாரசாமி துணை முதல்வர் ?

எடியூரப்பா முதல்வர், குமாரசாமி துணை முதல்வர்

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்றாலும் பதவி என்றால் எதற்கும் இறங்கி வருவார்கள் - எதுவும் நடக்கும் - இன்னும் 20 மாதங்களுக்கு நல்ல வசூல் இருதரப்பினருக்கும்.

இந்த செய்தி உண்மையா ?
பார்க்க ரீடிஃப்

Wednesday, October 3, 2007

இந்தி மொழி வளர்ச்சி : டி.ஆர்.பாலு பாராட்டு

"இந்தி மொழியை வளர்ப்பதற்கு உண்டான உறுதியான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்பது பாராட்டுக்குரியது' என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

கப்பல் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் போர்ட் பிளேர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு பேசியதாவது:

இந்தியாவின் தேசிய மொழியான இந்தியை வளர்ப்பதற்கு உண்டான உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதற்காக கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகளை பாராட்டுகிறேன். எனது அமைச்சகம் சார்ந்த அறிக்கைகள், கடிதங்கள், ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்து கடிதப் போக்குவரத்துகளுமே இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மூலம் தான் நடைபெறுகின்றன. ஆண்டுக்கு இருமுறை இந்தி மொழி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்தி மொழி ஷீல்டு திட்டம் மூலம் இந்தி தெரியாத அதிகாரிகளுக்கும் இந்தி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதற்காக இணைச் செயலர் அந்தஸ்து அதிகாரியை தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்தியை வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தி ஆலோசனைக் குழுவின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. இந்த குழுவின் சார்பில் அளிக்கப்படும் ஆலோசனைகள், பரிந்துரைகள் அனைத்தையும் அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கும்படி அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பாலு பேசினார்.

Source / Nandri : Dinamalar