Friday, October 26, 2007

மகள் தந்தைக்காற்றும் உதவி ?

தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஓடிப்போய் திருமணம் செய்த பரபரப்பு ஆங்கில/தெலுங்கு மீடியாக்களில் பரபரக்க, தமிழ் வலைப்பதிவு உலகில் இதன் தாக்கத்தைக் காணோமே ?

ஒரு பெரிய மெகாஸ்டார் என்ற விதத்தைவிட ஒரு தந்தையாக அவர் மனம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். பெற்று வளர்த்த பெற்றோருக்குத் தெரியாதா தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பாக வாழ்க்கை அமைக்க ? அல்லது அப்படியே காதல் திருமணம் செய்ய விரும்பினாலும், பெற்றோரின் சம்மதத்தைப் பெறும் வகையில் நடந்து கொஞ்ச காலம் காத்திருந்து அவர்கள் சம்மதத்தையும் பெற்று செய்திருக்கலாமே ?

அப்படியென்ன ஓடிப்போய் திருமணம் செய்து பெற்றோர் பெயரை சந்தி சிரிக்க வைப்பது ?
மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து வந்து கஷ்டப்பட்டு முன்னேறிய - 30 வருடங்கள் உழைத்து புகழை ஈட்டிய ஒருவரது நிலையை ஒரே நாளில் சுக்குநூறாக்கி இந்தியா/உலகு முழுவதும் குடும்பத்திற்கு கெட்ட பெயர் விளைவித்து அப்படியென்ன ஒரு காதல் கத்தரிக்காய் !

ஓடிப்போதல் என்னும் இந்த கான்செப்ட் தமிழ் சூழலில் பல்லாண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும், இந்த மாதிரி கதைகள் கொண்ட தமிழ் சினிமாக்களை பார்த்து, வெற்றிப்படமாக்கும் தமிழர்கள் - தங்கள் வீட்டில் / சுற்றத்தில் இதுபோல் ஒரு சம்பவம் நடந்தால் எப்படிப் பார்க்கின்றனர்.

என்னதான் 21ஆம் நூற்றாண்டு, சமூக மாற்றங்கள் எனப் பேசினாலும், வீடு/சுற்றத்தில் இது போல நடந்தால் எத்தனை பேருக்கு இதனை ஏற்க மனம் வரும். அல்லது பெற்றோருக்கு அடங்க மறுக்கும் பெண்கள் அதிகமாகிவிட்டார்களா ?

மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு எமது ஆறுதல்கள். நீரும் உமது குடும்பத்தாரும் மீண்டும் சகஜ நிலைக்கு வர எமது பிரார்த்தனைகள்.

4 comments:

அமர பாரதி said...

//30 வருடங்கள் உழைத்து புகழை ஈட்டிய ஒருவரது நிலையை ஒரே நாளில் சுக்குநூறாக்கி இந்தியா/உலகு முழுவதும் குடும்பத்திற்கு கெட்ட பெயர் விளைவித்து அப்படியென்ன ஒரு காதல் கத்தரிக்காய் !
// என்ன ஒழைப்பு என்ன புகழ் அப்பிடியெல்லாம் ஒன்னியும் இல்ல. ஒரு மகள், ஒரு மேஜர் பெண் தான் விரும்பிய துணையை கல்யானம் செய்து கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்திய அப்பனெல்லாம் ஒரு அப்பனா?

Unknown said...

அமர பாரதி !! அப்படி போடு ங்கோன்னீயா..

என்னதான் 30 வருஷ உழைப்பா ல வந்திருந்தாலும்.. பொண்ணோட மனச புரிஞ்சிக்காத அவ காதல எதிர்த்த சிரஞ்சீவி ஒரு அப்பனா ?

அந்த பொண்ணு என்ன பிச்சைகாரனயா கல்யாணம் பண்ணிகிடுத்து ? படிச்ச பய புள்ள ய தான ... எந்த விதத்துல சிரஞ்சீவி தேஞ்சு பூடுவாறூ ? காதல ஏத்துகிட்டு ஆசீர்வாதம் பண்ணலாமே..

- இஞ்சி தின்ற குரங்கு

Deekshanya said...

நல்லா சொன்னீங்க.. அப்படி அம்மா அப்பாவ கேவலப்படுத்தி,முக்கியமா மனசு உடையவைத்து - எப்படி சந்தோஷமா வாழமுடியும்னு தெரியலை!
பாவம் சிரு!

மங்களூர் சிவா said...

//
Deekshanya said...
நல்லா சொன்னீங்க.. அப்படி அம்மா அப்பாவ கேவலப்படுத்தி,முக்கியமா மனசு உடையவைத்து - எப்படி சந்தோஷமா வாழமுடியும்னு தெரியலை!
பாவம் சிரு!

//
repeateyyy