Tuesday, November 10, 2009

கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும்: துரைமுருகன்

ஜாதிகளை ஒழிக்கப் பாடுபட்ட முதல்வர் கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் 100 வீடுகள் கொண்ட சமத்துவப்புரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் நேற்று திறந்து வைத்தார்.

இந்த விழாவில் பேசிய துரைமுருகன்,

ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூட தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு ஆலய பிரவேசம் செய்தார். இப்படி பல தலைவர்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும் என ஒவ்வொரு விதத்தில் போராடி விட்டு அவர்கள் தங்களது இடங்களுக்கே திரும்பி சென்று விட்டனர்.

ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி மட்டும்தான் இதிலிருந்து வித்தியாசமாக யோசித்து சமத்துவபுரம் என்ற உன்னதத் திட்டத்தை கொண்டு வந்து எல்லா ஜாதி மக்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்தி ஜாதி ஒழிக்க பாடுபடுகிறார்.

இதற்காக முதல்வர் கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும். ஆனால் தரமாட்டார்கள். காரணம் இவர் தமிழன் என்பதால்தான்.

ஏன்?, இந்தியாவில் தரப்படும் சாகித்ய அகடாமி விருதுக்கு கூட தகுதியானவர் தான் கருணாநிதி. அவர் எழுதாத இலக்கியங்களா... அவரைப் போல யார் எழுதியிருக்கிறார்கள்?. அப்படிப்பட்ட தலைவருக்கு அவ்விருது கூட வழங்கப்படவில்லை. காரணம் இவர் தமிழன்.

மு.க.ஸ்டாலினை பாரட்டும் தகுதி எனக்கு இருக்கிறது. சிறு வயது முதலே அவரது வளர்ச்சியை, நடவடிக்கையை பார்த்து வருபவன் நான். அண்ணா, கலைஞருடன் இருந்திருக்கிறேன். தற்போது ஸ்டாலினுடன் இருப்பதை பெருமையாக இருப்பதை கருதுகிறேன். வேறு கட்சி நிழல் கூட படாமல், வளர்ந்து விட்டவன் நான் என்றார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

No comments: