Thursday, September 24, 2009

உன்னைப் போல் ஒருவன் - ஜெ பாராட்டு

உன்னைப் போல் ஒருவன் படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக ஸ்ருதி கமல்ஹாசனை போனில் பிடித்து பாராட்டித் தள்ளி விட்டாராம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதனால் ஸ்ருதி படா குஷியாக காணப்படுகிறார்.

கலைஞானி கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. படம் பார்த்தவர்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் அதைப் பார்க்க்த தொடங்கியிருப்பதால் தியேட்டர்களில் கூட்டத்திற்கு அளவே இல்லை.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய அம்சமான இசையமைப்பாளர் ஸ்ருதிக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறதாம்.

திரையுலகப் பிரமுகர்கள் மற்றும் பல்துறையினரும் ஸ்ருதியின் சிறப்பான இசையை பாராட்டிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையி்ல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்ருதியைப் போனில் பிடித்து பாராட்டித் தள்ளியுள்ளாராம். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பேசிய அவர் ஸ்ருதியின் இசையைப் பாராட்டியதோடு, மிகப் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என ஆசிர்வதித்தாராம்.

இதனால் ஸ்ருதி பெரும் உற்சாகமாகியுள்ளார். முதல் படத்திலேயே இத்தனை பாராட்டுக்கள் கிடைத்திருப்பதால் அடுத்தடுத்து செய்யப் போகும் பணிகளில் முழுக் கவனத்தை செலுத்த அவர் தீர்மானித்துள்ளாராம்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

சில சந்தேகங்கள்:

* ஜெயலலிதா இந்தப் படத்தை எப்படிப் பார்த்தார் ? கோடநாட்டு எஸ்டேட்டில் ரிலிசாகியிருக்கிறதா ? இல்லை கோயமுத்தூருக்கு இரவு வேளையில் சென்று தனிக்காட்சியா ?

* ஸ்ருதியைப் பாராட்டியதில் பெண்ணினம் என்னும் அக்கறையா இல்லை சட்டைக்குள் குறுக்காக ஓடும் சமாச்சாரமா ?

* மகளுக்கு மட்டும் பாராட்டா ? கோபாலபுரத்தையும் மு.கவின் குரலையும் உபயோகித்த தந்தைக்கு பாராட்டு கிடையாதா ?

No comments: