Sunday, July 8, 2007

மீன், உளுந்துவடை, தயிர்சாதம்

ஓய்வெடுக்க பெங்களூரு வந்துள்ள கருணாநிதி, மீனை விரும்பி சாப்பிட்டு வருகிறார். தனது உணவில் பொங்கல், தயிர்சாதம், உளுந்துவடை, புலாவ், சாம்பார் ஆகியவற்றை சேர்த்து கொள்கிறார்.

<<<<<<<<< இந்த மாதிரி செய்தியெல்லாம் எப்படித் தான் சேகரிப்பாங்களோ ? >>>>>>>


முதல்வர் கருணாநிதி தோட்டத்தில் ஓய்வு

பெங்களூரு: ஓய்வெடுப்பதற்காக பெங்களூரு வந்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதி வீட்டில் இருந்து தோட்டத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக முதல்வர் கருணாநிதி ஓய்வெடுப்பதற்காக பெங்களூரு வந்துள்ளார். இவர் ஜெயநகர் 9வது பிளாக்கில் உள்ள தனது மகள் செல்வி வீட்டில் தங்கியுள்ளார். இவரது பாதுகாப்பிற்காக அந்த சாலையை சுற்றி தமிழகம் மற்றும் கர்நாடக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு வந்துள்ள கருணாநிதியை முதல் நாளன்று பெங்களூரு தமிழ் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்.

நேற்று பலர் அவரை சந்திக்க சென்றனர். ஆனால், அவர் வீட்டில் இல்லை. விசாரித்த போது அவர் தோட்டத்திற்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. ஓய்வெடுக்க வந்துள்ள கருணாநிதி, மீனை விரும்பி சாப்பிட்டு வருகிறார். தனது உணவில் பொங்கல், தயிர்சாதம், உளுந்துவடை, புலாவ், சாம்பார் ஆகியவற்றை சேர்த்து கொள்கிறார். நாளை வரை கருணாநிதி பெங்களூருவில் தங்கி ஓய்வெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nandri: Dinamalar

No comments: