தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நடிகை ரோஜா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் அடையாளமாக முதல்வர் ராஜசேகர் ரெட்டியை சந்தித்தார்.தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவி பதவி வகித்து வரும் நடிகை ரோஜா, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார்.முதல்வரை சந்திக்கச் சென்ற நடிகை ரோஜாவை ராஜசேகர ரெட்டி வரவேற்றார். ரோஜா, ராஜசேகர ரெட்டிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.நடிகை ரோஜா- முதல்வர் ராஜசேகர ரெட்டி சந்திப்புக்கு, திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் கருணாகர ரெட்டி ஏற்பாடு செய்தார்.
முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்துளீர்களே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டீர்களா? என, நடிகை ரோஜாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில்:"மாநிலத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்துள்ளார். ஆந்திராவில் விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் இதை நடைமுறைப்படுத்த உள்ளதாக முதல்வர் அறிவித்திருந்தார். அதற்கு பாராட்டு தெரிவிக்க அவரை சந்தித்தேன். தெலுங்கு தேசம் கட்சியை எனது பிள்ளைகளை காப்பது போன்று அதிக அக்கறையுடன் பார்த்துக் கொண்டேன். தெலுங்கு தேசம் கட்சி தான் என்னை கண்ணியத்துடன் கவுரவிக்க தவறி விட்டது.இவ்வாறு அவர் கூறினார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக எப்போது சேரப்போகிறார் என்பதற்கு பதிலளிக்கவில்லை.
செய்தி: நன்றி: தினமலர்
http://www.dinamalar.com/new/Political_detail.asp?news_id=13660
செப்டம்பர் 08,2009
ஐதராபாத்:தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பிய நடிகை ரோஜா, மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.ஆந்திராவில், சித்தூர் மாவட்டம், நகரி, சந்திரகிரி ஆகிய இரண்டு சட்டசபைத் தொகுதிகளிலும், தெலுங்கு தேச வேட்பாளராக போட்டியிட்டு, தோல்வியைக் கண்டவர் ரோஜா. 10 ஆண்டு காலமாக அதே கட்சியில் நீடித்தவர், திடீரென காங்., கட்சியில் இணைய திட்டம் போட்டார்.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைவதற்கு சில தினங்களுக்கு முன், அவரைச் சந்தித்து, காங்., கட்சியில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.நேற்று, ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்த ரோஜா, காங்., கட்சியில் சேர்ந்தார்.பின், நிருபர்களிடம், "தெலுங்கு தேச கட்சியிலிருந்து நான் விலகுவதாக, அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் அனுப்பி விட்டேன். 10 ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
Monday, August 31, 2009
காங்கிரசில் இணைந்தார் ரோஜா..!
Tuesday, August 25, 2009
அனைத்து பள்ளிகளிலும் இந்தி - கபில் சிபல்
"அனைத்து பள்ளிகளிலும் இந்தியை கற்றுக் கொடுப்பதன் மூலம், அனைவரிடமும் ஒருங்கிணைப்பு ஏற்படும். அது நம்மை அறிவில் சிறந்தவர்களாக வெளியுலகிற்கு அடையாளம் காட்டும்' என, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்ற கபில்சிபல், மேலும் பேசியதாவது:
கல்விமுறையில் நமது பழைய நடைமுறைகளை மாற்றி, புதிய முறையில் சிந்திக்கத் தூண்டும் கல்வியே இப்போது தேவை. அறிவு சார்ந்த உலகை நாம் உருவாக்குவதன் மூலம், அதிலிருந்து மற்றவர்களும் கற்றுக் கொள்வர். பள்ளிகளில், மற்ற மொழிகளை கற்றுத் தருவது போல், இந்தி மொழியையும் கற்றுத் தரவேண்டும். பெரும்பாலான குழந்தைகள், தங்களது தாய்மொழியில் புலமை பெற்றவர்களாக உள்ளனர். அவர்கள், மற்ற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலம் வளமாக அமைய, கல்விமுறையில், அடிப்படையான, அவசியமான மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்.
இந்தி மொழியை மாணவ மாணவிகள் கற்பதன் மூலம், நாட்டில் உள்ள மற்றவர்களுடன் அவர்களால் எளிதாக உரையாட முடியும். இதன் மூலம் சமூக ஒருங்கிணைப்பு ஏற்படும். அதுபோலவே, ஆங்கில மொழியையும் கற்று, உலக நாடுகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மிடையே உள்ள திட்டவரையறைகளை குழந்தைகள் மீது திணிக்காமல், அவர்களது நலனில் ஒவ்வொருவரும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கபில் சிபல் பேசினார்.
செய்தி: நன்றி: தினமலர்
Thatstamil
Wednesday, August 12, 2009
நாளை கிருஷ்ண ஜெயந்தி - ஜெ. வாழ்த்து
நாளை நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி,
பூமியில் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை மிக உயர்ந்த தர்மம் என்னும் தத்துவத்தை பகவத் கீதை மூலம் உபதேசித்த கிருஷ்ணன் பிறந்த நாளில் இந்த உலகம் உயர்வடைய அனைவரும் பிரார்த்திப்போம்.
மனிதன் மனிதனாக மட்டுமல்லாமல் மற்ற மனிதனுக்காகவும் வாழ வேண்டும் என்ற உன்னத தத்துவதை நமக்கு அருளிய நலம் தரும் நாராயணன் அருளால் அனைவரது வாழ்க்கையும் சிறக்கட்டும். இருள் மறைந்து ஒளி மலரட்டும்.
எங்கெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும். குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ள ஜனநாயகம் மலரட்டும் என மனமார வாழ்த்துகிறேன் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்
Monday, August 10, 2009
சுனாமி எச்சரிக்கை..?? !!
அந்தமானுக்கு வடக்கே 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்களே செய்தியை பலருக்கும் சொல்லி எச்சரிக்கையாக இருக்கச் சொல்லவும். H1N1 தவிர இது வேற பயமுறுத்துகிறது.
சீனாவைத்தாக்கியுள்ள டைஃபூன் மிகுந்த சேதத்தை விளைவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்:
http://edition.cnn.com/2009/WORLD/asiapcf/08/10/india.earthquake/index.html
http://timesofindia.indiatimes.com/news/india/Earthquake-strikes-off-Andamans-tsunami-alert-cancelled/articleshow/4879908.cms
http://www.hindu.com/thehindu/holnus/000200908110320.htm
http://www.reuters.com/article/newsOne/idUSTRE5794XW20090810
Big quake hits off India's Andamans, no tsunami
Mon Aug 10, 2009 7:09pm EDT
By Sanjit Kumar Roy
PORT BLAIR, India (Reuters) - A major earthquake of magnitude 7.6 struck in the Indian Ocean off India's Andaman Islands early on Tuesday, but a tsunami alert for India, Myanmar, Indonesia, Thailand and Bangladesh was later canceled.
Three hours after the earthquake there were no reports of a tsunami or of any casualties from the tremor, officials said.
"We all ran out as fast as possible and have not gone back inside, fearing another quake. Everything was shaking, we are all very, very scared," Subhasis Paul, who runs a provision store in Diglipur island in North Andaman, told Reuters by telephone.
"People are calling each other out of their homes and everyone is huddled together outside," Paul said from Diglipur, about 300 km (185 miles) north of Port Blair, the capital of the Andaman and Nicobar Islands.
The small chain of islands lie hundreds of miles east of India in the Indian Ocean.
The U.S. Geological Survey said the quake, initially reported as a magnitude 7.7, struck at 1:55 a.m. (1955 GMT on Monday). It was relatively shallow, at a depth of 33 km (20.6 miles), and was centered 260 km (160 miles) north of Port Blair.
The U.S. National Oceanic and Atmospheric Administration's Pacific Tsunami Warning Center said there could be a destructive wave along coasts up to 1,000 km (600 miles) from the epicenter, but it later withdrew its warning.
"Sea level readings indicate that a significant tsunami was not generated," it said in a statement.
Officials at the tsunami alert center in southern India said chances of a tsunami were remote.
"The earthquake has not caused displacement of water necessary to generate a tsunami either in the deep sea or near coastal locations," said Rajesh, a senior official at the Indian National Center for Ocean Information Services.
"We are monitoring the situation, but everything appears normal so far. It seems we have been lucky," added Rajesh, who goes by one name.
A 7.6 magnitude quake is classified by the USGS as a major earthquake and is capable of widespread, heavy damage.
A massive quake in the Indian Ocean in 2004 caused a tsunami that killed some 228,000 people, the majority in the Indonesian province of Aceh on the northern tip of Sumatra island.
WOKEN BY A JOLT
"I was on the balcony, and it felt very strange for a while, like my chair was leaning to one side," said Reuters correspondent Martin Petty in Bangkok. "So I got out of there sharpish. Aftershocks went on for a good few minutes."
Wednesday, August 5, 2009
தி.மு.க.அரசு செய்த நல்ல காரியங்கள் - கருணாநிதி பட்டியல்
தி.மு.க. அரசு நல்ல காரியம் செய்யவில்லையா? சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் கருணாநிதி பதில் 
படம் நன்றி: தினகரன்
பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வரும் 9ம் தேதி நடக்கிறது. சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை அங்கு தங்கியுள்ள முதல்வர் கருணாநிதியை சந்தித்து, கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஆச்சார்யா நேற்று வழங்கினார். அருகில் பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர்பத்ரி, கன்னட மற்றும் பண்பாடு இயக்குனர் மனோபலேகர்.
சென்னை, ஆக. 6: முதல்வர் கருணாநிதி பெங்களூரில் ஓய்வு எடுத்து வருகிறார். கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க.வின் மூன்றரை ஆண்டு கால ஆட்சிக்கு நீங்கள் எவ்வளவு மார்க் போடுவீர்கள் என்ற கேள்விக்கு, மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத தி.மு.க. அரசுக்குப் பூஜ்யம் மதிப்பெண்தான் கொடுப்பேன் என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். அவரது கேள்விகளுக்கு பொதுவாக நீங்கள் பதில் சொல்வதில்லையென்ற போதிலும், ஐந்து தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தவாவது என்ன நல்ல காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று விளக்கலாம் அல்லவா?
தி.மு.க. ஆட்சி அமைந்த போதெல்லாம் ஆற்றிய பணிகள் சிலவற்றை மட்டும் தருகிறேன். அவை நல்ல காரியங்களா அல்லவா என்பதை மக்களே கூறட்டும்.
ஆனால் தே.மு.தி.க. தலைவர், ஒரு கர்ப்பிணிக்குக் கூட உதவி செய்யவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார்.
இந்த அரசு ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ள தே.மு.தி.க. தலைவருக்கு இந்த விளக்கங்கள் போதும் என்று நினைக்கிறேன்.
செய்தி: நன்றி: தினகரன்
Tuesday, July 28, 2009
ஆத்துல ஒரு அம்மாமி - கருணாநிதி
நானும் ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் பத்திரிகைகளிடம் பகைமை பாராட்டுவதில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அருகில் இருந்தும், தொலைவில் இருந்தும் உடன் பிறப்புகள் என் மீது அன்பைப் பொழிந்து கொண்டும், அண்ணனே, உனக்காக உயிரையே தரத் தயாராக இருக்கிறேன் என்ற உறுதிமொழிகளை வழங்கிக் கொண்டும், என் நாடி நரம்புகளில் பாசப்பெரு வெள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, சில வார ஏடுகள் (எல்லா ஏடுகளும் அல்ல) என்னைக் கேலி செய்தும், என் எழுத்துக்களை இழிவுபடுத்தி விமர்சித்தும், கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள் என ''கான மயிலாட கண்டிருந்த வான்கோழிபோல'' ஆடிப்பார்க்கும் அவலட்சணத்தின் அநாகரீகத்தின் உச்சமே அந்த ஏட்டாளர்களுக்கு மிச்சம்.
இதோ!. என் துணைவி தயாளு அம்மையாரைப் பற்றி கேலிச் சித்திரம் போடவும், தயங்கிடவில்லை என்பதற்கு அடையாளமாக 24-6-2009 தேதிய ஆனந்த விகடனில் "கன்னா பின்னா'' கார்ட்டூன்களில் ஒன்று வெளிவந்துள்ளது.
அக்ரகாரத்துக்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா? ''நாமும் கார்ட்டூன் வரைந்திட அவா ஆத்துல ஒரு அம்மாமி கிடைக்காமலா போய்டுவா?''.
என்னிடத்தில் ஆழ்ந்த அன்பும் பற்றும் பாசமும் கொண்ட இளங்கவிஞர் தமிழ்தாசன் இந்தப் படங்கள் குறித்தே ஒரு கண்டனக் கடிதத்தை எனக்கெழுதி, அதே ஆனந்த விகடன் 25-4-1954ல் எழுதிய 'மனோகரா' திரைப்பட விமர்சனத்தையும் அந்த ஏட்டிலிருந்தே எடுத்து எனக்கு அனுப்பியுள்ளார். அதை அப்படியே இந்தக் கடிதத்துடன் இணைத்திருக்கிறேன். அதன் விவரம்:
"தாயைத் தெய்வமாகக் கொண்டாடும், அவளை வழிபட்டு வணங்கும் தமிழ்ப் பெரு மரபிலே, ஒரு தமிழ் மகன் எத்தனை வீறுகொண்டு எழுந்தாலும், எப்பேர்ப்பட்ட எரிமலை போல் குமுறிக் கிளம்பினாலும், 'தாய்' என்ற ஒரே ஒரு மந்திரச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அடங்குவான்.
இந்த மகத்தான உண்மையை வற்புறுத்துகிறது 'மனோகரா'.
மனோகரனைச் சங்கிலிகளால் கட்டிச் சபை நடுவே இழுத்து வரச்செய்து, வசந்தசேனையிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறான் மன்னன். "என்ன குற்றம் செய்தேன், அரசே! பதில் சொல்லும்'' என்று இடி முழக்கம் செய்த இளவரசன், சங்கிலிகளை அறுத்துக் கொண்டு கத்தியை ஓங்கியவாறு சண்டமாருதமென முன்னேறும் சமயம், "இனி இந்தச் சூறாவளியை யாரால் நிறுத்த முடியும்? தொலைந்து போனான் அரசன்!'' என்று நாம் முடிவு கட்டும்போது, "என் மார்பிலே உன் கத்தியை முதலில் பாய்ச்சு! பிறகு என் சவத்தின் மீது நின்று கொண்டு உன் தந்தையுடன் சண்டை போடு!'' என்று கூறுகிறாள் அந்தப் பதிவிரதா ரத்னம்.
தாய்மையின் வெற்றி மனோகரனை அடக்குவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவனை வீரனாக்கி, மாசற்ற மனம் படைத்தவனாகவும் ஆக்குகிறது.
மனோகரனைத் தூணிலே சங்கிலியால் கட்டியிருக்கிறது. சாட்டை கொண்டு அவனை அடிக்கிறான் ஒரு பாதகன். வசந்தசேனையும் அவள் ஆரம்பக் காதலனும் மனோகரனின் பச்சிளம் பாலகனை எடுத்துவரச் செய்து, அவன் கண்ணெதிரிலேயே கத்திக்கு பலியாக்க விழைகிறார்கள்.
எந்தக் கணவனை உத்தேசித்து இதுவரை பொறுமையை மேற்கொண்டாளோ, அவனே சிறையிலே விழுந்துவிட்ட பின், பொறுமையைக் கைவிடும்படி மகனுக்கு ஆக்ஞை கொடுக்கிறாள் தாய்.
"மகனே, பொறுத்தது போதும்... பொங்கியெழு!'' என்று அவள் கூறியதும், எதிர்பார்த்தது நடைபெறுகிறது. சங்கிலி அறுகிறது; தாயின் துயர் துடைக்க, தாய் நாட்டை மீட்க, கொந்தளித்துக் கொண்டு பாய்கிறான் மனோகரன்.
தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலே போட்டா போட்டி! தர்மம் சளைத்து விட்டது போன்று காண்கிறது; அதர்மம் வலுவடைந்து வருவது போலும் தோன்றுகிறது. கடைசியில் தர்மம் வென்று, அதர்மம் புல் முளைத்துப் போகிறது.
சிவாஜி கணேசனும், கண்ணாம்பாவும் இவ்விரு பாத்திரங்களை ஏற்று, அவற்றிலே ஊறி, படமெங்கும் தங்கள் ஒளியைப் பரவி வீசிவிட்டார்கள்.
வசந்த சேனை (டி.ஆர்.ராஜகுமாரி) கல் நெஞ்சம் படைத்த வஞ்சகி. ஹாஸ்ய பாத்திரமாக வரும் வஸந்தன் (எஸ்.ராதாகிருஷ்ணன்) பைத்தியக்காரன். அரசன் புருஷோத்தமன் (சதாசிவராவ்) நூற்றுக்கு நூறு மோகாந்த காரத்தில் மூழ்கிப் போனவன். இந்த பாகங்களை ஏற்று நடிப்பவர்கள் பிரதான பாத்திரங்களுடைய தரத்தைக் குன்றச் செய்யாமல் இருப்பது, இந்தப் படத்திலே ஒரு சிறந்த அம்சம்.
நல்ல கதையாக இருந்தால், ஜீவசக்தியுள்ள சம்பாஷணைகள் இருந்தால், பிரதான நடிகர்கள் நன்றாக நடித்துவிட்டால், பொது ஜன அபிமானம் கிட்டாமல் போகாது என்பதற்கு "மனோகரா''வை எடுத்துக் காட்டலாம்.'' இவ்வாறு விகடன் விமர்சனம் எழுதியது 1954ல்!.
வசனகர்த்தாவின் பெயரை மறைத்த விகடன்..
அந்தத் தம்பியின் கடிதத்தின் முடிவில் அந்தத் தம்பியே எழுதியிருக்கிறார் -மனோகரா வசனங்களைப் புகழ்ந்துவிட்டு அந்த வசனங்களை எழுதியுள்ள உங்கள் பெயரை அந்த ஏடு வெளியிடவே இல்லையே என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் தம்பி தமிழ்தாசன்!.
தம்பி தமிழ்தாசனுக்குச் சொல்கிறேன், மற்ற தம்பிமார்களுக்கும் கவனமூட்டுகிறேன். அந்த ஏடு 'மனோகரா' படத்துக்கு வசனம் எழுதிய என் பெயரையே மறைத்துவிட்டது என்ற கோபம் எனக்கு இருந்திருந்தால் அதே ஏடு நடத்திய ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவுக்கு நான் சென்றிருப்பேனா?.
அதேபோல, ஆனந்த விகடன் சார்பில் வெளியிட்ட 'பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள குடியரசு தலைவராக இருந்த அப்துல்கலாம் வர மறுத்த நிலையிலும்கூட, நான் அந்த விழாவிலே கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அரசு நூலகங்களில் எல்லாம் அந்தப் புத்தகங்களை முப்பது லட்சம் ரூபாய்க்கு வாங்கிட வேண்டுமென்றும் ஆணையிட்டிருப்பேனா?
அது மாத்திரமல்ல, ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த பாலசுப்பிரமணியம் மீது தமிழகச் சட்டமன்றத்தின் சார்பில், அதிமுக ஆட்சியிலே நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்யும் அளவிற்கு நிலைமை சென்ற நேரத்தில், அந்தச்செய்தியினை வெளியூருக்கு காரிலே சென்று கொண்டிருந்த நான் வானொலியிலே கேட்டு விட்டு- உடனடியாக திண்டிவனத்திலே என் காரை நிறுத்தச் சொல்லி -அந்தச் செய்கையைக் கண்டித்து அங்கிருந்தே அறிக்கை கொடுத்திருப்பேனா?.
நானும் ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் பத்திரிகைகளிடம் பகைமை பாராட்டுவதில்லை. அப்படிப் பாராட்டும் பண்பு எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பேனா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.
செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்
இந்திய ஜனாதிபதிக்கு உங்க புகாரை தெரிவிக்கணுமா ?
உங்க புகார்களை இந்திய ஜனாதிபதிக்கு தெரிவிக்கணுமா ? ஒரு மெயில் தட்டி வுடுங்க.
இல்ல இந்த தளத்துக்கு போய் ரிஜிஸ்டர் பண்ணி உங்க புகார சொல்லுங்க.
தட்டுங்கள் திறக்கப்படலாம் !
படம்: நன்றி: த ஹிண்டு
NEW DELHI: With the click of a few buttons, complaints, petitions and prayers will now swiftly reach the President’s Office, find their way to the departments concerned, get tracked as they are processed and the information stored for later use.
With the launch of a new website http://helpline.rb.nic.in on Friday, reaching out to the President has become easier. Launched by President Pratibha Patil at the Rashtrapati Bhavan, the website has been designed to simplify the process of grievance redress.
“The Rashtrapati Bhavan mail box receives over 400 mails every day. The portal is expected to reduce the time taken to dispatch the mail to the Central and State government departments concerned, following up on the action taken and finally maintaining the record,” said Secretary to the President Cristy Fernandes.
“We hope to process the applications within seven days of receiving them. And everybody who sends us a mail will be provided a unique registration number (URN), which will help them keep track of their application,” he said.
The portal, Mr. Fernandes said, was the President’s idea. “On assuming office, the President expressed the wish to modernise everything possible, from infrastructure to the style of working.”
The portal offers citizens a platform to voice their grievances. Of the total applications that the President’s Office receives, 70 per cent are through snail mail and the rest electronically.
“People who are left with no options write to the President. There are some limitations that the office faces as far as keeping track of these applications, updating their status and preserving these applications is concerned. But with the launch of this portal, we hope to address these issues,” said Mr. Fernandes.
The new system is being integrated with the Centralised Public Grievance Redress and Monitoring System which will monitor the progress of the petition.
The portal, currently available in English, will gradually be available in Indian languages as well. It will allow lodging of lengthy e-petitions and enable supplementary attachment of scanned documents.
செய்தி: நன்றி: த ஹிண்டு
