Sunday, August 10, 2008

சென்னை திரும்பினார் ஜெயலலிதா

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 4 மாத ஓய்வுக்கு பின் நேற்றிரவு சென்னை திரும்பினார்.

இதெல்லாம் செய்தியா என கேட்கக்கூடாது :-) இனிமேல் அறிக்கைகளும் விவாதங்களும் தமிழக அரசியல் களமும் இன்னும் சூடு பெறலாம். Watch out this space..!




கடந்த ஏப்ரல் 7ம் தேதி கோடநாடு சென்றார். அங்கு சுமார் 4 மாதம் ஓய்வுக்குப் பின் நேற்றிரவு கோவையில் இருந்து பாரமவுண்ட் பயணிகள் விமானம் மூலம் சென்னைக்கு 9.05 மணிக்கு வந்து சேர்ந்தார்.

காரில் வெளியே வந்த அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், ஜெயக்குமார், செங்கோட்டையன், முத்துச்சாமி, தம்பிதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் சேகர்பாபு, கலைராஜன், மைத்ரேயன், சுலோச்சனா சம்பத் உள்ளிட்டோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். ஜெயலிதாவுடன் சசிகலா, பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி, உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோர் வந்தனர்.

செய்தி: படம்: நன்றி: தினகரன் 11 ஆகஸ்டு 2008

பி.கு: நீங்கள் கூகிள் ரீடர் அல்லது அது போன்ற செயலிகளால் பதிவுகளைப் படிப்பவரா ? வலைப்பதிவில் புதிதாக இடப்பட்டுள்ள 'சொன்னாங்க..சொன்னாங்க,,!!' மற்றும் 'படம்..பப்படம்' பகுதியைக் காண வலைப்பதிவு முகவரிக்கு செல்லவும்.

No comments: