Thursday, May 1, 2008

கருணாநிதி, ஜெயலலிதாவை அழைக்க நடிகர் சங்கம் முடிவு

தமிழ் திரையுலகின் 75ம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் நடக்க உள்ளது. அதில் கலந்துகொள்ள, முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை அழைக்க உள்ளோம்

75ம் ஆண்டு சினிமா நிறைவு விழா


சென்னை, மே 1: சென்னையில் நடக்கும் தமிழ் திரையுலகின் 75ம் ஆண்டு நிறைவு விழாÕவுக்கு முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருவரையும் அழைக்க தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. நடிகர்கள் என்னத்தே கண்ணையா, எம்.எல்.ஏ. தங்கராஜ், குள்ளமணி உட்பட 50 பேர் ஓய்வூதியம் பெற்றனர். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அளித்த பேட்டி:

நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில் நடிப்பு பயிற்சிக் கூடம் தொடங்கப்படுகிறது. மே 15ம் தேதி விண்ணப்பம் வழங்கப்படுகிறது. ஜூலை 15ல் வகுப்புகள் தொடங்கும். ஓராண்டு பயிற்சியில், நடிப்பு சம்பந்தமான கலைகள் கற்றுத்தரப்படும்.

ஆகஸ்ட் மாதம் நாடகப் போட்டி நடக்கிறது. இந்த முறை, முன்னணி நடிகர்கள் பங்கேற்கும் நாடகங்களும் நடக்கும். நானும் ஒரு நாடகத்தில் நடிக்கிறேன்.

நடிகர் சங்கமும் ஜேப்பியார் அறக்கட்டளையும் இணைந்து, 194 பேருக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. நடிகர் சங்கத்தில் இப்போது ரூ.3.12 கோடி இருப்பு உள்ளது. இதைப் பயன்படுத்தாமல், வேறுவகையில் நிதி திரட்டி, நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்டப்படும். வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டுவதற்கு துணைபுரிந்த சன் டி.வி. மற்றும் ராடன் நிறுவனங்களுக்கு நன்றி.

வெளிநாட்டில் மட்டும் நிகழ்ச்சி நடத்துகிறீர்கள். இங்கு நடத்தமாட்டீர்களா? என்று பலர் கேட்கிறார்கள். தமிழ் திரையுலகின் 75ம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் நடக்க உள்ளது. அதில் கலந்துகொள்ள, முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை அழைக்க உள்ளோம். இவ்வாறு சரத்குமார் கூறினார்.

செய்தி: நன்றி: தினகரன்

No comments: