Thursday, September 6, 2007

ரஜினி, கமலுக்கு தமிழக அரசு விருது

ரஜினி, கமலுக்கு தமிழக அரசு விருது
ஜோதிகா, ப்ரியாமணிக்கும் விருது


தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சந்திரமுகி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரஜினிகாந்த்திற்கும், வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த கமல்ஹாசனுக்கும் சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் கிடைத்துள்ளன. இதேபோல ஜோதிகா, ப்ரியா மணி ஆகியோருக்கு சிறந்த நடிகைகளுக்கான விருது கிடைத்துள்ளது.

2005 மற்றும் 2006ம் ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்.

2005ம் ஆண்டுக்கான விருது பெறும் கலைஞர்கள்:

சிறந்த நடிகர் ரஜினிகாந்த் (சந்திரமுகி)
சிறந்த நடிகை ஜோதிகா (சந்திரமுகி)
சிறந்த வில்லன் பிரகாஷ் ராஜ்.
சிறந்த நகைச்சுவை நடிகர் விவேக்.
சிறந்த இயக்குநர் ஷங்கர்.

சிறந்த படங்கள் சந்திரமுகி, கஜினி.
2வது இடம் அந்நியன்.
3வது இடம் தவமாய் தவமிருந்து.

சிறந்த குணச்சித்திர நடிகர் ராஜ்கிரண்.
சிறந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

2005ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்களுக்கான சிறப்புப் பரிசை விஜய், சூர்யா பெறுகிறார்கள். சிறந்த நடிகைக்கான சிறப்புப் பரிசை மீரா ஜாஸ்மின் பெறுகிறார்.

2006ம் ஆண்டுக்கான விருதுகள்:

சிறந்த நடிகர் கமல்ஹாசன்
சிறந்த நடிகை ப்ரியா மணி
சிறந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு.
சிறந்த இயக்குநர் திருமுருகன்.
சிறந்த படம் வெயில்.
2வது இடம் பருத்தி வீரன்.
3வது இடம் திருட்டுப் பயலே.

சிறந்த குணச்சித்திர நடிகர் நாசர்.
சிறந்த வில்லன் பசுபதி.
சிறந்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

2006ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்களுக்கான சிறப்புப் பரிசை கார்த்தியும், பக்ரூவும் பெறுகிறார்கள். சிறந்த நடிகைக்கான சிறப்புப் பரிசு சந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

2006ம் ஆண்டுக்கான கலை வித்தகர் விருதுகள்

அண்ணா விருது ராம.நாராயணன்.
கலைவாணர் விருது விவேக்.
ராஜா சாண்டோ விருது தங்கர் பச்சான்.
பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் தாமரை.
எம்.ஜி.ஆர். விருது அஜீத்.
கவியரசு கண்ணதாசன் விருது பா.விஜய்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விருது விக்ரம்.
தியாகராஜ பாகவதர் விருது டி.எம்.செளந்தரராஜன்.


சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்கி கலைஞர்களைக் கெளரவிப்பார் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Nandri: Thatstamil

No comments: