Tuesday, February 10, 2009

முதல்வர் கருணாநிதிக்கு இன்று முதுகெலும்பில் ஆபரேஷன்

முதல்வர் கருணாநிதிக்கு இன்று முதுகெலும்பில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மேலும் பத்து நாட்களுக்கு முதல்வர் ஓய்வில் இருப்பார்.

அறுவை சிகிச்சை வெற்றியடைந்து முதல்வர் பூரண நலத்துடன் குணமடைய பிரார்த்திப்போம்.

நான்கு அறுவை சிகிச்சை டாக்டர்கள், நான்கு மயக்க மருந்து நிபுணர்கள் அறுவை சிகிச்சையின்போது உடன் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு அறுவை சிகிச்சை நடைபெறும்.

டெல்லி எய்ம்ஸ் டாக்டர் ஜெய்ஸ்வால் தலைமையிலான டாக்டர்கள் குழு முதல்வருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்கிறது.

முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் குழுவில், எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.எஸ்.கே.மார்த்தாண்டம், டாக்டர் ஏ.ஜெய்ஸ்வால், டாக்டர் மயில்வாகனன், டாக்டர் கார்த்திக் கைலாஷ், டாக்டர் எஸ்.தணிகாசலம், டாக்டர் ஐ.எஸ்.நாயுடு, டாக்டர் மகேஷ் வகாமுடி, டாக்டர் பாஸ்கர், டாக்டர் பி.எஸ்.சண்முகம், டாக்டர் ராஜ் பி.சிங், டாக்டர் ஏ.வி.சீனிவாசன், டாக்டர் சவுந்தரராசன், டாக்டர் கே.ஆர்.பழனிசாமி, முதல்வரின் தனி டாக்டரான டாக்டர் பி.கோபால் ஆகியோரும் குழுவி்ல் இடம் பெற்றுள்ளனர் என அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஓரிரு நாட்களில் முதல்வர் நடமாட ஆரம்பிப்பார். இருப்பினும் முழுமையாக குணமடைய குறைந்தது பத்து நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Surgery Successful

3 comments:

வெண்காட்டான் said...

முழுப்பொய். எமது சகோதரர்கள் ஈழத்தமிழருக்காக தனியாக நின்று குரல்கொடுக்கும் தமிழினப்புலி சிசீ தமிழினசிங்களச்சிங்கம் கரு நா நிதிக்கு இல்லதா இடத்தில் ஆப்ரேசன் செய்து கொல்லப்பார்க்கிறார்கள் வைகோவும் ராமதாசும்

PALDURAI said...

avarukku back bone kooda irruka.enna kuttikaranam adikkuraru .ivaru evlo naal tamilargal thala yila milakai araichathu pothatha.ennum arraikanuma. inraya ilaya samuthayam ivari pathi nallave kanithu vaithullathu.ennum kollu peran varikkum ivaru sothu sekkanumila nanrdaga kunamaki varatum.avaru pottirukura manjal thundu avari kaapathatum.

pal from thiruchy

PALDURAI said...

dear venkattan

kavali pada vendam.periya samrajyangal ellam ippo irunht aidam theriyam poiduchu.In the congress,DMK,Rajapakse ellarum oru nall mannukulla poi viduvargal.mootha tamil makkal eppothume irrupargal

vaalka tamil vaalka tamil eelam,vaalka tamil nadu