Thursday, February 12, 2009

முதல்வர் கருணாநிதி குணமடைய தி.மு.க.,வினர் சிறப்பு யாகம்

தண்டுவட அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல்வர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டி, திருக்கோவிலூர் தி.மு.க.,வினர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தினர்.



தி.மு.க., பேரூராட்சி தலைவர் ஆண்டாள் தலைமையில், நகரச் செயலர் செல்வராஜ், கோவில் அறங்காவல் குழுத் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு பூஜையை துவக்கி அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, கடஸ்தாபனம் என யாகசாலை பூஜைகள் நடந்தன. நீண்ட ஆயுளுக்காக நடத்தப்படும் ஏகாதசை ருத்ராஜபம் என 108 திரவியங்களை யாக சாலையிலிட்டு விசேஷ பூஜைகள் செய்தனர்.


இளைஞரணி நிர்வாகிகள் ஜானிபாஷா, குணா, ஒன்றிய நிர்வாகிகள் சங்கர், ஏகாம்பரம், நகர பொருளாளர் தங்கராஜ், கவுன்சிலர்கள் மாயஜோதி, வள்ளி, கலைவாணி, நிர்மலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: படம்: நன்றி: தினமலர்

No comments: