Monday, December 8, 2008

'பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை' - கருணாநிதி


பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றிட தவறியதில்லை.
மகாகவி பாரதி தொடங்கி, மூதறிஞர் ராஜாஜி, வ.வே.சு. ஐயர், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், உ.வே.சா, கல்கி, ஏ.எஸ்.கே. ஐயங்கார், வெ.சாமிநாத சர்மா, ஆசிரியர் சாவி, நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி போன்று நீண்ட பட்டியல் உண்டு





படத்திற்கும் செய்திக்கும் சம்பந்தமில்லை :-)

கருணாநிதி அறிக்கை:
மறக்க வேண்டியது தீது ஒன்றுதான்




சென்னை, டிச.9: முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
கலையில், இலக்கியத்தில், நாட்டுப் பற்றுக்கான தியாகத்தில் ஈடுபட்டு மறைந்துவிட்டோரின் குடும்பங்களின் வழித்தோன்றல்களை பெருமைப்படுத்துவதும், அவர்களின் குடும்பம் வாடாமல் தழைத்திட செய்வதும் கடமையென கொண்டு ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆவன செய்து வருகிறேன். திராவிட இயக்கத்தில் இளமைக் காலம்தொட்டே என்னை ஒப்படைத்துக் கொண்டவன் என்றாலும், பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றிட தவறியதில்லை.


மகாகவி பாரதி தொடங்கி, மூதறிஞர் ராஜாஜி, வ.வே.சு. ஐயர், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், உ.வே.சா, கல்கி, ஏ.எஸ்.கே. ஐயங்கார், வெ.சாமிநாத சர்மா, ஆசிரியர் சாவி, நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி போன்று நீண்ட பட்டியல் உண்டு. எடுத்துக் காட்டாக கூறுவதென்றால், Ôஅக்கிரகாரத்து அதிசய மனிதர்Õ என்று வ.ரா.வை சிறப்பித்து, அவர் மறைந்த பிறகும், சாவி மூலம் அந்தக் குடும்பத்துக்கு சிறப்பு செய்தவனாவேன். 1990ம் ஆண்டு நான் ஆட்சியில் இருந்த போது, வ.ரா. துணைவியார் புவனேஸ்வரி அம்மையாரை தலைமைச் செயலகத்துக்கே வரச் செய்து, மாதந்தோறும் அவருக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்குவதற்கான உத்தரவை ஒப்படைத்தேன். 17.8.90 அன்று கலைவாணர் அரங்கில், வ.ரா. நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் கொண்டாடினோம்.


திருவள்ளுவர் உருவத்தை அழகுற வரைந்து கொடுத்த ஓவியர் வேணுகோபால் சர்மா குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு நிதி வழங்கிய பெருமை நமது அரசுக்கு உண்டு. 17.2.1985 அன்று நான் எழுதிய Ôகுறளோவியம்Õ நூல் வெளியீட்டு விழாவுக்கு வேணுகோபால் சர்மாவை அழைத்து வரச் செய்தேன். அந்த நூல் எழுதியதன் மூலம் எனக்கு கிடைத்த தொகையில் ரூ.10 ஆயிரத்தை என் சொந்த சார்பில், நிதியாக அல்ல, காணிக்கையாக அளித்தேன். வேணுகோபால் சர்மா நோய்வாய்ப்பட்டுள்ளார் என்று அவருடைய புதல்வர் கூறியதும், ரூ.10 ஆயிரம் வழங்கினேன். அரசின் சார்பில் ரூ.3 லட்சம் நிதி வழங்கினேன்.
தமிழுக்கு செம்மொழித் தகுதியை வழங்கக் கோரிய பரிதிமாற் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரிகள் வாழ்ந்த வீட்டைப் புதுப்பித்து, அவரது வழித் தோன்றல்களின் எதிர்காலத்துக்கான உதவிகளைச் செய்து, சிறப்பித்தவன் நான்.

கழகத்தின் கலை உலகக் காவலராக இருந்து பின்னர் காமராஜரின் தளபதியாக ஆனபிறகும், Ôதம்பி, நீ எங்கிருந்தாலும் வாழ்கÕ என்று அண்ணாவால் வாழ்த்தப் பெற்ற சிவாஜி இப்போதும் என் இதயத்தில் இருப்போரில் ஒருவர். எங்கள் நட்பின் அடையாளமாகத்தான் இப்போது அந்த குடும்பம் என்னைச் சூழ்ந்து குலவிடுகிறது. தமிழக கலைக் குடும்பத்தில் எனக்கு நட்பு பகை எனும் நானாவித நிலைகள். அனைத்தையும் சந்தித்து கலைக்குடும்பம் ஒன்றையன்று வாழ்த்தி மகிழ்கிறதல்லவா.

Ôமறப்போம் மன்னிப்போம்Õ அரசியலில் மட்டுமல்ல, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போதித்த அண்ணா, இதையும் மனித நேயம் வளர்க்கும் இரண்டு மருந்து மாத்திரைகளாக நமக்கு வழங்கியுள்ளார் அல்லவா? அதன் வலிமைதான் இது. மன்னித்து மறக்க வேண்டியது, ÔதீதுÕ எனும் ஒன்றைத்தான் என்பதை நான் தெரிந்து, தெளிந்து நடப்பது போல், உடன் பிறப்பே, நீயும் நடக்க வேண்டும்.

இதற்கிடையே, 6.12.2008 காலையில் Ôதாத்தா எனக்கு பிறந்த நாள் இன்று, வாழ்த்து என்னைÕ என்று அண்ணாவின் பேரன் மலர் வண்ணன் வரவே, என் மனதில் பன்னீர் தெளித்தது போன்ற உணர்வு. மலர் வண்ணன் மனைவியுடன் இந்த தாத்தாவிடம் வாழ்த்து பெற வந்தபோதும், சிவாஜி குடும்பத்தினர் கொள்ளுபேரன், பேத்தியென மன மகிழ வந்து மணவிழா அழைப்பிதழ் தந்தபோதும், நமது குடும்பத்தில் உள்ள பேரன் பேத்திகளையும், கொள்ளுப் பேரன் பேத்திகளையும், சிதற விடாமல் குடும்பம் செழிப்புற்று தழைக்கும் என்று பெரியோர் சொன்ன சொல் பலித்ததையும் எண்ணி மகிழ்கிறேன்.பெருங்குடும்பமாம் நமது கழகத்தின் உடன் பிறப்புகளையும் வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: Dinakaran

3 comments:

ஆதவன் said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

Unknown said...

இது போன்ற பெரியோர்களை ஜாதி வட்டத்துக்குள் கொண்டு வர வேண்டுமா?

RAMASUBRAMANIA SHARMA said...

OUR HONORABLE CM IS A GREAT POLITICAL EXPERT....NO MORE COMMENTS.....