Thursday, March 26, 2009

பாமக சேர்ந்ததால் அதிமுக கூட்டணி வெல்லும் - சோ

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட போவதாக பாமக பொது்க்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை சீட்டும், 1 மாநிலங்களவை சீட்டும் கொடுக்கப்பட இருக்கிறது.

இது குறித்து தயாநிதி மாறன் கூறுகையில்,

இந்த முடிவு எங்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. 2004 தேர்தலை போல் இம்முறையும் வெற்றி பெறுவோம். கடந்த முறை பல சுமைகளை தூக்கிவந்தோம். தற்போது சுமை வெகுவாக குறைந்துவிட்டது என்றார்.

அதிமுக வெல்லும்-சோ:

துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ கூறுகையில், அதிமுக தென் தமிழகத்தில் மிக பலமானதாகத் திகழ்கிறது. பாமகவுக்கு வட தமிழ்நாட்டில் செல்வாக்கு இருக்கிறது. தற்போது பாமக, அதிமுக கூட்டணிக்கு வந்திருப்பதால் தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.

காங். இருந்தாலே வெற்றி தான்-மொய்லி:

மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி கூறுகையில், தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் எந்த திராவிடக் கட்சியோடு கூட்டணி அமைக்கிறதோ அந்தக் கூட்டணியே வென்று வந்திருக்கிறது. பாமக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி திமுக-காங்கிரஸ் கூட்டணியே வெல்லும் என்றார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

No comments: