Tuesday, January 13, 2009

அழகிரிக்கு திமுகவை காக்கும் பொறுப்பு தரப்படும் - கருணாநிதி

காத்திரு தம்பி அழகிரி! கட்டளை வரும்.

நானும் பேராசிரியரும் கலந்து பேசி, அந்த கட்டளை பிறப்பிக்கப்படும். அது நீ கழகத்தைக் காப்பாற்றுகின்ற கட்டளையாக அமையும். உன்னுடைய குணம் பார்த்து, வலிவு பார்த்து, நலம் பார்த்து, பலம் பார்த்து, நிச்சயமாக தர வேண்டிய நேரத்தில் நானும், பேராசிரியரும் கலந்து பேசி தீர்மானிப்போம் என்று திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளார்.

திருமங்கலம் வெற்றிச் செய்தியோடு மு.க.அழகிரி, வெற்றி பெற்ற வேட்பாளர் லதா அதியமானுடன் மதுரையிலிருந்து நேற்று மாலை சென்னை வந்தார்.

அவர்களுடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினும் உடன் வந்தார். விமான நிலையத்தில் இருந்து லதா அதியமானை திறந்த வேனில் அழைத்துக் கொண்டு அழகிரி, ஸ்டாலின் ஊர்லவமாக வந்தனர்.


படம்: நன்றி: Dinakaran

வழியெங்கும் திமுகவினர் பெரும் திரளாக கூடி வரவேற்பளித்தனர். அண்ணா அறிவாலயம் வந்ததும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.

பின்னர் முதல்வர் கருணாநிதியிடம் லதா அதியமான் வாழ்த்து பெற்றார்.

செய்தி: நன்றி:thatstamil

2 comments:

RAMASUBRAMANIA SHARMA said...

"THIRU" AZAGIRI...VERU...D.M.K. VERA...IN MADURAI...AVAR THAN D.M.K.....every body knows that...already, Thiru Azagiri avargal...is the driving force for D.M.K. in MADURAI...along with its security...nothing new in it...

Unknown said...

திமுகவை அழிக்க இதைவிட சிறந்த வழி கிடையாது. மதுரையின் இன்றைய நிலைமையை பார்த்தல் போதும் அழகிரி கையில் பதவி கிடைத்தல் நாட்டின் கதி என்ன என்பது தெரிந்துவிடும். நம்ப மறுப்பவர்கள் ஒரு முறை மதுரை சென்று அவர் வீடு இருக்கும் சுற்றுப்புற சாலைகளை பார்த்தாலே போதும். மதுரையின் ஒவ்வொரு சாலையும் ஒவ்வொரு கடையும் அவர் அராஜகத்தின் பறை சாற்றும்.