Thursday, March 26, 2009

கருணாநிதிக்கு நீண்ட ஆயுள் வேண்டி துணைவியார் ராஜாத்தி ஹோமம்

முதல்வர் கருணாநிதிக்கு நீண்ட ஆயுள் வேண்டி சீர்காழி அடுத்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அவரது மனைவி ராஜாத்தி ஆயில்ய ஹோமம் நடத்தினார்.

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு 60 வயது முடிந்தவர்களுக்கு சஷ்டியப்த பூஜை, 70 வயது முடித்தவர்களுக்கு பீமரத சாந்தி, 80 வயதுக்கு சதாபிஷேகம் மற்றும் நீண்ட கால ஆயுள் வேண்டி ஆயில்ய ஹோமம் நடத்துவது சிறப்பு.

முதல்வர் கருணாநிதிக்கு நீண்ட ஆயுள் வேண்டி ஆயில்ய ஹோமம் கோவில் நந்தி மண்டபத்தில் விஸ்வநாத குருக்கள் தலைமையில் நடத்தப்பட்டது. முதல்வரின் துணைவியார் ராஜாத்தி பெயரில் ஹோமம் நடந்தது. இரவு 7.30 மணியளவில் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஆயில்ய ஹோம பிரசாதத்தை ராஜாத்தி பெற்றுக் கொண்டார்.

செய்தி: நன்றி: தினமலர்

From Thatstamil

No comments: