Tuesday, December 25, 2007

தமிழ் சினிமா - வாரிசுக்கு சிபாரிசு - 1

இந்தத் தொடருக்கு பதிவு இட்ட அனைத்து பதிவர்களுக்கும் முதற்கண் நன்றி.. மற்றும் மன்னிப்பு கேளல். உங்களிடம் லிஸ்ட் கேட்டுவிட்டு நான் பதிய இத்தனை நாட்கள் ஆனதற்குத் தான் மன்னிப்பு. கேட்டவுடன் பதிவிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி. பலரும் நான் கேட்டதை சரியாகப் புரிந்துகொண்டிருந்தாலும் சிலர் சரியாக புரிந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

இந்த தமிழ் சினிமா - வாரிசுக்கு சிபாரிசு - ஆட்டத்தில் நான் என்ன எதிர்பார்த்தேன் என எழுதிவிடுகிறேன்.

இந்த லிஸ்டைக் கேட்டதற்குப் பொறி - ஜெயாடிவியோ சன் டிவியோ சில ஆண்டுகள் முன்பு வரை (?) ஒளிபரப்பி வந்த பிரபலங்கள் தங்களுக்குப் பிடித்த காட்சியை (திரைப்படத்தில்) கூறுவர். அந்தப் படத்தின் அந்த சிறப்பான காட்சியும் இடம்பெறும். இந்த நிகழ்ச்சியின் பெயர் மறந்துவிட்டது. அந்த நிகழ்ச்சியில் சில பிரபலங்கள் சொன்ன காட்சியைப் பார்த்தபிறகுதான் எனக்கே அந்தக் காட்சியின் சிறப்பம்சமும் நன்றாகப் புரிந்தது.

உதாரணத்திற்குச் சொன்னால் - சிவாஜியின் தெய்வமகன் படத்தில் மூன்று சிவாஜியும் ஒரு காட்சியில் ஒன்றாக வருவார்கள் ஆனால் மூவரின் நடிப்பும் வித்தியாசமாக இருக்கும். அதே போல தில்லானா மோகனாம்பாளில் ரயிலில் சிவாஜி கோஷ்டியும் பத்மினி கோஷ்டியும் பயணம் செல்லும்போது கண்களாலேயே ஜாடை காட்டுவது ஆகட்டும் - சிவாஜி, பத்மினி, பாலைய்யா மூவரும் பிச்சு உதறியிருப்பார்கள்.

எதற்குச் சொல்கிறேனென்றால் இந்தக் காட்சிகளின் சிறப்பு பற்றி மற்றவ்ர்கள் எடுத்துச் சொல்லியிருக்காவிட்டால் நானும் அவை நல்ல படம் என்ற ஒரு விதத்தில் மட்டுமே பார்த்திருப்பேனே ஒழிய அந்தப் படத்தின் சிறப்புகள், சிறந்த காட்சிகள் போன்றவற்றை மீண்டும் மீண்டும் அனுபவித்திருக்க முடியாது.

அதுபோல நாமும் நமது வாரிசுகளுக்கு நல்ல தமிழ் சினிமாக்களை (அல்லது நல்ல ரசிக்கவேண்டிய சில விஷயங்களை) நாம் கோடிட்டுக் காண்பிக்கவில்லையென்றால் அவர்களும் தங்கள் காலத்து ரசனைக்கேற்ப ரீ-மிக்ஸையும், கிராபிக்ஸையும் ஒசத்தியாககக் கொள்வார்களே ஒழிய தமிழிலும், அந்தக்காலத்திலேயேகூட பல விஷயங்கள் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது என்பது தெரியாமலேயே ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே நல்ல சினிமா என்று ஒதுங்கும் வாய்ப்பு அதிகமாகவே தெரிகிறது.

அதற்காகத்தான் வாரிசுகளுக்காக எந்தத் தமிழ்ப்படங்களின் சிடி/டிவிடி சேர்த்துவைப்பீர்கள், ஏன் ? எனவும் கேட்டிருந்தேன். என்னுடைய பட்டியலுக்குப் போகுமுன் இதுவரை எழுதியவர்களின் பட்டியல் இதோ. அவர்களுக்கு என் நன்றி. பலருடைய பட்டியலில் எனது தேர்வும் உள்ளது என்பதே அவர்களை நான் அழைத்ததற்கு - எனது கணிப்பும் அவர்களின் எண்ண ஓட்டமும் ஒன்றாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.

இதில் சிவப்பு வண்ணத்தில் நட்சத்திர முத்திரையுடன் இருப்பவை எனது பட்டியலிலும் உண்டு. அவை பற்றி இன்னொரு பதிவில்.

அழைத்துள்ள மற்றவர்களும் தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் தங்கள் படப்பட்டியலைப் பகிருவார்கள் என எதிர்பார்க்கிறேன். அவர்கள் பதிவிட்டிருந்தால் தெரிவிக்கவும். இந்தப் பதிவில் எல்லாவற்றையும் தொகுத்து இணைத்துவிடுகிறேன். மிக்க நன்றி.



லக்கிலுக்
1. உலகம் சுற்றும் வாலிபன் **
2. பேசும் படம்
3. அண்ணாமலை **
4. காதலிக்க நேரமில்லை **
5. இன்று போய் நாளை வா **


இட்லி வடை
1. திருவிளையாடல் **
2. வா ராஜா வா
3. சலங்கை ஒலி **
4. இந்தியன் **
5. 6லிருந்து 60வரை
6. எதிர் நீச்சல் **
7. சிந்து பைரவி **
8. தேடினேன் வந்தது ( பிரபு, கவுண்டமணி நடித்தது )
9. உத்தமபுத்திரன் **
10. கர்ணன் **
11. அன்பே சிவம்

அபுல் கலாம் ஆசாத்
1. ஆயிரத்தில் ஒருவன் **



கோவி.கண்ணன்
1. தில்லானா மோகனாம்பாள் **
2. திருவிளையாடல் **
3. ஒளவை சண்முகி **
4. முதல்மரியாதை **
5. கர்ணன் **
6. அஞ்சலி

டுபுக்கு
1. உன்னால் முடியும் தம்பி
2. சலங்கை ஒலி **
3. காதலிக்க நேரமில்லை **
4. திருவிளையாடல் **
5. தில்லுமுல்லு **

நா.கண்ணன்
பாரு! பாரு! பயோஸ்கோப்பு பாரு! பாரு!
1. பேசும் படம் - 01
2. பேசும்படம் - 02
3. பேசும்படம் - 03
4. பேசும்படம் - 04
5. பேசும்படம் - 05
6. பேசும்படம் - 06

பராசக்தி
ஜெமினியின் ஔவையார்
மனோகரா
கணவனே கண்கண்ட தெய்வம்
மிஸ்ஸியம்மா
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் **
மாயாபஜார் **
காத்தவராயன்
நாடோடி மன்னன் **
சம்பூர்ண ராமாயணம் **
வஞ்சிக்கோட்டை வாலிபன் **
பாகப்பிரிவினை **
வீரபாண்டியக் கட்டபொம்மன்
கல்யாணப்பரிசு **
சிவகங்கைச் சீமை
அடுத்த வீட்டுப் பெண் **
இரும்புத்திரை
கைதி கண்ணாயிரம்

செல்வம்

1) காத‌லிக்க‌ நேர‌மில்லை. **
2) இன்று போய் நாளை வா. **
3) தேன்மழை.
4) ச‌பாபதி.
5) ச‌பாஷ்மீனா

<<<< ரொம்பப் பெரிய லிஸ்ட் >>>>>>>>
குரல்வலை
எம்ஜிஆர்
நாடோடி மன்னன் **
ஆயிரத்தில் ஒருவன் **
மலைக்கள்ளன்
எங்க வீட்டுப் பிள்ளை **
உலகம் சுற்றும் வாலிபன் **

சிவாஜி
உத்தம புத்திரன் **
மனோகரா
பராசக்தி
அந்த நாள்
புதிய பறவை **
பாச மலர் **
பாவமன்னிப்பு **
பலே பாண்டியா **
ஆலயமணி
பாரதவிலாஸ் **
வீரபாண்டியகட்டபொம்மன்
கப்பலோட்டிய தமிழன் **

முட்டக்கண் ராமச்சந்திரன்
சாரங்கதாரா
சபாபதி
அடுத்த வீட்டு பெண் **

ஸ்ரீதர்
நெஞ்சம் மறப்பதில்லை
நெஞ்சில் ஓரு ஆலயம் **
தேனிலவு **
காதலிக்க நேரமில்லை**

ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன்
அதே கண்கள்
மூன்றெழுத்து
வல்லவன் ஒருவன்

பாலச்சந்தர்
நினைத்தாலே இனிக்கும்
எதிர் நீச்சல் **
சர்வர் சுந்தரம் **
சாது மிரண்டால்
மேஜர் சந்திரகாந்த்
அவர்கள்
வறுமையின் நிறம் சிவப்பு
மனதில் உறுதி வேண்டும்
சிந்து பைரவி **
உன்னால் முடியும் தம்பி.

ரஜினி

முள்ளும் மலரும்
பில்லா
ஜானி
தில்லு முல்லு **
படிக்காதவன்
குரு சிஷ்யன்
தம்பிக்கு எந்த ஊரு
மன்னன்
தளபதி
அண்ணாமலை **
பாட்ஷா
சந்திரமுகி


பாரதிராஜா
பதினாறு வயதினிலே **
நிழல்கள்
ஒரு கைதியின் டைரி
முதல் மரியாதை **
சிகப்பு ரோஜாக்கள் **
டிக் டிக் டிக்

மோகன்
விதி **
நூறாவது நாள்

கமல்
விக்ரம்
வாழ்வேமாயம்
மூன்றாம்பிறை **
சலங்கை ஒலி **
சத்யா
அபூர்வ சகோதரர்கள் **
சாணக்யன்
வெற்றிவிழா
நாயகன் **
மைக்கேல் மதன காமராஜன் **
குணா
சதிலீலாவதி
குருதிப்புனல்
காதலா காதலா
பஞ்சதந்திரம்
வசூல்ராஜா
விருமாண்டி
அன்பே சிவம்
வேட்டையாடு விளையாடு

மணிரத்னம்
மௌனராகம் **
அஞ்சலி
இருவர்
அலைபாயுதே

பாக்யராஜ்
அந்த 7 நாட்கள் **
இன்று போய் நாளை வா **
தூரல் நின்னு போச்சு
இது நம்ம ஆளு

விசு
சம்சாரம் அது மின்சாரம் **

விஜயகாந்த்
ஊமை விழிகள்
அம்மன் கோவில் கிழக்காலே **
வைதேகி காத்திருந்தாள்
கேப்டன் பிரபாகரன்
புலன்விசாரனை

பிறபடங்கள்
ஓர் இரவு
பஞ்சவர்ணக்கிளி
பாமா விஜயம் **
சாந்தி நிலையம்
வருஷம் 16
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு **
பூவிழி வாசலிலே
பூவே பூச்சூடவா
அக்னி நட்சத்திரம்
அரங்கேற்றவேளை
ஆண்பாவம்
கரும்புள்ளி ("என் உயிர் தோழன்" பாபு)
பாரதி
உதயம் (நாகார்ஜூன், அமலா, ரகுவரன்)
சூரியன்
நாட்டாமை
ஜென்டில் மேன் **
இந்தியன் **
ஜீன்ஸ்
முதல்வன்
அழகி
புதியபாதை
ஹவுஸ்புல்
காக்க காக்க
மௌனம் பேசியதே
நந்தா
கஜினி
கில்லி
காதல் மன்னன் (அஜீத்)
ஆசை
சேது **
தில்
மொழி
காதல்
பருத்தி வீரன்
ராம்
காதலுக்கு மரியாதை
கனா கண்டேன்
கண்ட நாள் முதல்
ஜீவா (சத்யராஜ், அமலா)
நடிகன்
பாதாள உலகம்
மாயாபஜார் **
மைடியர் குட்டிச்சாத்தான்
ஜெகன்மோகினி
பதிமூனாம் நம்பர் வீடு
உருவம்
48 மணி நேரம் (ரேவதி)
ஷாக்
<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Thursday, December 20, 2007

விஜயகாந்த் செல்வாக்கு உயர்வு - லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு

தமிழக அரசியலில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதாக லயோலா கல்லூரி மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
.
திமுக கூட்டணியில் பெருமளவு விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், அதிமுக எதிரணி அரசியலில் முதல் இடத்தில் உள்ளதாகவும் பெரும்பாலோர் தெரிவித்துள்ளனர்.

மாற்று அரசியல் பண்பாடு நோக்கி என்ற தலைப்பில் சென்னை லயோலா கல்லூரியின் ஊடகவியல் துறை மாநில அளவில் 6 மாதத்திற்கு ஒருமுறை கள ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் மாணவர்கள் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை திரட்டியுள்ளனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகால திமுக அரசு நடைமுறைப்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது.

75.3 சதவீதம் பேர் ஆதரவாகவும், இதில் தொலைநோக்கு இல்லை என்று 24.7 சதவீதம் பேர் எதிர்த்தும் கருத்து தெரிவித்துள்ளனர். ரூ.2 அரிசி 90.1, இலவச நிலம்64.5, இலவச டிவி43.3, முதியோர் உதவி தொகை 82.4, சத்துணவு முட்டை92.7, இலவச கேஸ்72.6, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு66.3.

இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் திருப்தி இருப்பதாக 51.5 சதவீதம் பேரும், திருப்தி இல்லை யென்று 48.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக கூட்டணியில் விரிசல்

திமுக கூட்டணியில் விரிசல் பெருமளவுக்கு ஏற்பட்டுள்ளதாக 73.6 சதவீதம் பேர் கருதுகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டு ஆட்சியில் திமுக சிறப்பாக செயல்பட்டுள்ளது என 51.2 சதவீதம் மக்கள் கருதுகின்றனர்.

எதிர்க்கட்சியாக அதிமுக 52.2 சதவீதமும், தேமுதிக 48.5 சதவீதமும், மதிமுக 39.3 சதவீதமும், பிஜேபி 12.9 சதவீதமும் நன்றாக செயல்பட்டிருப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
தோழமைக் கட்சியாக பாமக 40.8, காங்கிரஸ் 15.6, இடதுசாரிகள் 39.5 சதவீதம் நல்ல செயல்பாடு என கருத்து நிலவுகிறது.

காங்கிரசின் செயல்பாடு மோசம் என்று 50.7 சதவீதம் பேர் கருதுகின்றனர். திமுக ஆட்சி அடுத்த மூன்றரை ஆண்டு காலத்திற்கு நீடிக்கும் என்று 71.4 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

மூன்றாவது அணி

தமிழகத்தில் காங்கிரஸ்தேமுதிக சேர்ந்து மூன்றாவது அணி அமைத்தால் அதற்கு 36.7 சதவீதம் பேர் ஆதரவு உள்ளது. பிஜேபியும், தேமுதிகவும் சேர 12.6 சதவீதமே ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ், தேமுதிக, பாமக, மதிமுக கூட்டணிக்கு 5.2 சதவீதமும், பிஜேபி, தேமுதிக, பாமக, மதிமுகவுக்கு 4.3 சதவீதமும் ஆதரவு கிடைக்கிறது.

பலமான அணியாக மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை என 35.5 சதவீதம் பேர் கருதுகின்றனர்.

அடுத்த முதல்வர் யார்?

கருணாநிதிக்கு பின் அடுத்த முதல்வர் வாய்ப்பு ஜெயலலிதாவுக்கே அதிகமாக உள்ளது என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அவருக்கு 32.1 சதவீதம் ஆதரவு உள்ளது. ஸ்டாலினுக்கு 27.9 சதவீதம் பேரும், விஜயகாந்துக்கு 24.3 சதவீதம் பேரும், தயாநிதி மாறனுக்கு 6.2 சதவீதம் பேரும், ராமதாசுக்கு 5.7 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வராது என 53.8 சதவீதம் பேர் கருதுகின்றனர். குஜராத் தேர்தல் முடிவு காங்கிரசுக்கு சாதகமாக வந்தால் உடனடியாக தேர்தல் வரும் என்று 27.4 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேசிய அளவில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இல்லை என 34.1 சதவீதம் பேரும், அப்படி அமைந்தாலும் ஆட்சியை பிடிக்க முடியாது என 21.1 சதவீதம் பேரும் கருதுகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் இப்போது வந்தால் தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் அணியே வெற்றி பெறும் என 53.4 சதவீதம் பேர் கருதுகின்றனர். பிஜேபி அணி 19.3 சதவீதம், மூன்றாவது அணி 7 சதவீதம், கருத்து சொல்ல முடியாது 20.3 சதவீதம் என்ற அளவிலும் கருத்து நிலவுகிறது.

அடுத்த பிரதமர்

அடுத்த பிரதமராக சோனியாவுக்கே வாய்ப்புள்ளது என 37.8 சதவீதம் பேர் கூறுகின்றனர். வாஜ்பாய்க்கு 15.3, மன்மோகன் சிங்கிற்கு 13.7, ராகுலுக்கு 10.6, அத்வானிக்கு 6.6 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சேது சமுத்திர திட்டம்

சேது சமுத்திர திட்டம் மிகவும் பயனுள்ளது. அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று 72.4 பேர் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர்.

கடல் வளம் பாதிக்கும் என 11.2 சதவீதம் பேரும், வணிக ரீதியில் வெற்றி பெறாது என 8.1 சதவீதம் பேரும், இந்த பணத்தை கிராமப்புற சாலைகளை அமைக்க பயன்படுத்தலாம் என 6.9 சதவீதம் பேரும், மொத்தம் 26.2 சதவீதம் பேர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசு கேபிள் டிவி

அரசு கேபிள் டிவிக்கு ஆதரவு உள்ள போதிலும், அதை தொடங்குவதில் தேவையற்ற சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக 49.3 சதவீதம் பேர் கருதுகின்றனர். அரசின் செயல்பாடு நிதானமாக உள்ளது என 31.8 சதவீதம் பேர் கூறுகின்றனர்.

தொழில்நுட்ப ரீதியில் காலாவதியாகும் இந்த திட்டம் வீண் வேலை என 16.2 சதவீதம் பேர் கருதுகின்றனர். நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார்கள் 62.7 சதவீதம் பேர்.

எம்ஜிஆரே சிறந்த முதல்வர்

தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்களில் தாங்கள் அறிந்த வரை சிறந்த முதல்வராக பணியாற்றியவர் எம்.ஜி.ஆரே என 40.8 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

கருத்துக் கணிப்பின்படி முதல்வர்களில் தரவரிசை வருமாறு: எம்ஜிஆர் 40.8, காமராஜர் 29.9, கருணாநிதி 17.4, ஜெயலலிதா 7.6, அண்ணா 4.6.

விஜயகாந்துக்கு முதலிடம்

நடிகர்கள் அரசியலில் ஈடுபட எதிர்ப்பு பெருமளவு உள்ளது. எனினும் அரசியலில் குதித்துள்ள நடிகர்களில் விஜயகாந்துக்கு பேராதரவு உள்ளது.

அவருக்கு 47.9 சதவீதம் பேரும், சரத்குமாருக்கு 4.3 சதவீதம் பேரும், கார்த்திக்கிற்கு 4.1 சதவீதம் பேரும், விஜய டி.ராஜேந்தருக்கு 1.3 சதவீதம் பேரும் ஆதரவு அளிக்கின்றனர்.

நடிகர்கள் தனிக்கட்சி தொடங்க 45.3 பேர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். ஆதரவாக 34.8 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி அரசியலில் ஈடுபடலாமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழு நேர அரசியலில் ஈடுபடலாமா? என்ற கேள்விக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லையென்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர் தொடர்ந்து முழுநேர சினிமா தொழிலில் ஈடுபட வேண்டும் என்றும், நேரடியாக அரசியலில் வருவதை விரும்பவில்லை என்றும் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.
முழுநேர சினிமா தொழிலில் ஈடுபட 45.2 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

ஆன்மீகத்தில் ஈடுபடலாம் என 23.8 சதவீதம் பேரும், சமூக சேவையில் ஈடுபடலாம் என 14.2 சதவீதம் பேரும், நேரடி அரசியலில் குதிக்கலாம் என 11.3 சதவீதம் பேரும் யோசனை தெரிவித்துள்ளனர்.

ரஜினி வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என 51.4 சதவீதம் பேர் கூறுகின்றனர். இதுவரை நடித்தது போலவே நடிக்க வேண்டும் என்று 36.3 சதவீதம் பேரும், படங்களை இயக்கலாம் என 8.9 சதவீதம் பேரும், நடிப்பை சொல்லி தரலாம் என 2.2 சதவீதம் பேரும் கூறுகின்றனர்.

தமிழ் பெயர்களை வைக்கும் திரைப் படங்களுக்கு வரிச் சலுகையை கைவிட வேண்டும் என்று 52.7 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதற்கு ஆதரவாக 11.6 சதவீதம் பேர் உள்ளனர்.

நன்றி: செய்தி: மாலைச்சுடர்

Friday, December 14, 2007

கிளார்க் வீராசாமி: ராமதாஸ்

"வீராசாமியைப் பற்றி எனக்குத் தெரியாதா. மின் வாரியத்தில் கிளார்க்காக வேலை பார்த்தபோது ஆளும்கட்சி குறித்து எதிர்க் கட்சிக்கு உளவு சொன்னவர் தானே இவர். நாங்கள் எத்தனையோ ஆற்காடு வீராசாமிகளைப் பார்த்திருக்கிறோம்."

சென்னை: திமுக, பாமக இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஆரம்பித்து வைத்த அறிக்கை போர் இப்போது அமைச்சர் வீராசாமிக்கும் ராமதாசுக்கும் இடையிலான தனிப்பட்ட மோதலாக மாறி, இப்போது கூட்டணியையே ஆட்டிப் பார்த்துக் கொண்டுள்ளது.

திமுக மாநாட்டுக்கு ராமதாசுக்கு இதுவரை மரியாதைக்குக்கு கூட அழைப்பு விடுக்காமல் தவிர்த்து வருகிறது அக் கட்சியின் தலைமை.

திமுக பொருளாளரும் மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

நேற்று ஆற்காடு வீராசாமியைத் தாக்கி மிகக் கடுமையான அறிக்கை விட்ட ராமதாஸ், பாமகவைச் சேர்ந்த ஒருவரின் திருமண விழாவில் பேசுகையில், மக்களுக்குத் தேவையான கல்வியை தனியாரிடம் கொடுத்துவிட்டு மதுக் கடைகளை மட்டும் அரசே ஏற்று நடத்துகிறது.

நம் சமுதாயம் இப்போது தான் முன்னேறி வருகிறது. ஆனால், அதை பொறுக்க முடியாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. நம் சமுதாயத்தை அழிக்கப் பார்க்கிறது. சாராயம் குடித்து நம் சமுதாய மக்கள் அழிகின்றனர்.

சமுதாயம் திருந்த வேண்டும் என்று தான் கல்விப் பணியில் இறங்கினோம். கோனேரிக்குப்பம் என்ற இடத்தில் 100 ஆண்டுகளாக காடுமேடாகக் கிடந்த நிலத்தை இஸ்லாமியர்களிடம் இருந்து வாங்கி கல்லூரி கட்டினோம். அதில் எங்கோ அரை ஏக்கர், ஒரு ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளதாம். ஆற்காடு வீராசாமி சொல்கிறார்.

வீராசாமியைப் பற்றி எனக்குத் தெரியாதா. மின் வாரியத்தில் கிளார்க்காக வேலை பார்த்தபோது ஆளும்கட்சி குறித்து எதிர்க் கட்சிக்கு உளவு சொன்னவர் தானே இவர். நாங்கள் எத்தனையோ ஆற்காடு வீராசாமிகளைப் பார்த்திருக்கிறோம்.

இன்று தமிழகம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. கேட்டால் நீ நிலத்தை அபகரித்துவிட்டாய் என்று பேசுகிறார் மின்சார அமைச்சர் என்று பேசிய ராமதாஸ் பல இடங்களில் வீராசாமியை கோபம் கொப்பளிக்க ஒருமையில் பிடித்து வாங்கினார்.

ஆற்காடு பதிலடி:

இந் நிலையில் ஆற்காடு வீராசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆத்திரம் அறிவுக்கு சத்ரு என்று அறிக்கை விட்டு விட்டு அவர் சவாலையேற்று நான் ஆதாரங்களைத் தெரிவித்த பிறகு அவரே ஆத்திரவயப்பட்டு அறிக்கை விடுகிறார்.

திருமண விழாக்களில் பேசுகிறார். என்னைப் பற்றி ஏதேதோ கூறுகிறார். ஒருமையில் என்னை விளித்து உருப்படாமல் போய் விடுவாய் என்கிறார். மின்வாரியத்தில் கிளார்க்காக வேலை பார்த்தாய் என்கிறார்.

இவைகளில் இருந்தே யார் ஆத்திரத்தில் பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆத்திரம் எப்போது வரும் என்றால், வாதத்தில் பலகீனம் ஏற்படும் போதுதான். அவர் சவால்விட்டு ஆதாரம் கேட்டதால்தான் நான் அவைகளை வெளியிட நேர்ந்தது. அவரே ஆதாரத்தை கேட்டுவிட்டு அதற்காக என் மீது இவ்வளவு வார்த்தைகளை வாரி இறைத்துள்ளார்.

பொது நலத்துக்காக நிலம் கையகப்படுத்துவது என்பது நீண்ட காலமாக இருந்து வரும் முறை என்று குறிப்பிட்டுள்ள டாக்டர், கடந்த ஓராண்டு காலமாகத்தான் அதற்கு எதிர்ப்பு தோன்றியுள்ளது என்றும் சொல்கிறார்.

அந்த எதிர்ப்புக்கெல்லாம் காரணம் சாட்சாத் இவர்தான் என்பதை இவரது மனசாட்சியே அறியும். வேறு சில தனியார் தங்கள் நிறுவனங்களைத் தொடங்க நூறு ஏக்கர், இருநூறு ஏக்கர் என்று நிலம் கையகப்படுத்துவதைத் தொடர்ந்து டாக்டர் எதிர்த்த காரணத்தில்தான் அவரே கல்லூரி தொடங்குவதற்காக 200க்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்திய விவரத்தை நான் கூற வேண்டியதாயிற்று.

உடனே அவர் நூறாண்டு காலத்திற்கு மேல் அங்கே எதுவுமே சாகுபடி செய்யவில்லை. களர் நிலம் என்று கூறிய பிறகு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலம் வாங்கப்படும் வரையில் அங்கே என்னென்ன பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன என்ற விவரத்தை அடங்கல் எண்களோடு நான் தெரிவிக்க நேர்ந்தது.

தற்போது சவுக்கு என்பது பயிரே இல்லை என்கிறார். சவுக்கு மட்டுமல்ல, பூஞ்செடி, நெல் போன்றவைகளும் அங்கே சாகுபடி செய்யப்பட்ட விவரத்தை நான் தெரிவித்திருக்கிறேன். டாக்டர் ராமதாஸ் எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறார். என்னையும் டாக்டர் ராமதாசையும் தெரிந்தவர்களுக்கு யார் கோபப்படுவார்கள் என்பது நன்றாகத் தெரியும்.

வன்னியர் சமுதாயத்திற்கே அவர்தான் பிரதிநிதி என்பதைப் போலவும், அவர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பதைப் போலவும், அந்த ஒட்டு மொத்த சமுதாயமே அவரிடம் இருப்பதைப் போலவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டுச் சரித்திரத்திலேயே இது வரையில்லாத அளவிற்கு வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் தற்போது கலைஞரின் ஆட்சிக் காலத்தில்தான் முக்கிய துறைகளுக்குப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். அது மாத்திரமல்ல முதன் முதலாக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த டி.ஜி.வெங்கட்ராமனை மத்திய அமைச்சராக அங்கம் வகிக்க செய்ததும் தலைவர் கலைஞர்தான்.

அதைப்போலவே கட்சியிலே கூட தலைமைக் கழகச் செயலாளர்களாக, மாவட்டக் கழகச் செயலாளர்களாக, ஒன்றியக் கழகச் செயலாளர்களாக மற்றும் பல்வேறு பொறுப்புகளிலே வன்னிய சமூகத்தினர் இருந்து வருகிறார்கள்.

திமுகவிலே மட்டுமல்ல, இன்னும் சில கட்சிகளிலும் வன்னியர் சமுதாயத்தினர் பொறுப்புகளில் உள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு கட்சியிலும் பல்லாயிரக்கணக்கான வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர்கள் இருந்து வருகிறார்கள்.

எனவே ஒன்றரை கோடி வன்னியர்களுக்கும் இவர்தான் பிரதிநிதி என்பதைப்போல கூறிக் கொள்வது விந்தையாக உள்ளது.

மேலும் அந்தக் கல்லூரியை அவர்கள் தொடங்குவது பற்றியும் எனக்கு எந்த வேறுபாடும் கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால் அந்தக் கல்லூரியின் தொடக்க விழாவின்போது, அன்றைய அரசாங்கம் அதற்கான அனுமதியை மறுத்து விட்ட நிலையிலும் தலைவர் கலைஞர் அந்த விழாவிற்காகச் சென்றபோது, அவரோடு சென்றவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் அந்தக் கல்லூரிக்காக வாங்கப்பட்ட இடம் முழுவதும் களர் நிலம் என்று கூறிய டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் குறிப்பிட்டிருக்கும் பரப்பளவு ஒரு ஹெக்டேர் அளவுக்குத்தான் உள்ளது என்று வழுக்கியிருக்கிறார். முதலில் இல்லவே இல்லை என்று சொன்னவர் தற்போது இந்த அளவிற்கு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அது போலவேதான் முதலில் அரசு புறம்போக்கு நிலம் என்று ஒப்புக்கொண்டு, ஆனால் அங்கே வேலி போடவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இதிலிருந்தே அவரது நியாயம் எந்த அளவிற்கு தடுமாறியுள்ளது என்பதை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்வார்கள்.

தன்னிடம் என்னைப்பற்றி ஏதோ பட்டியல் அவரிடம் உள்ளதாகவும், வீராசாமியைப் போல எத்தனையோ பேரை தான் சந்தித்திருப்பதாகவும் டாக்டர் ராமதாஸ் பேசியிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டியல் உண்டு. ஒவ்வொரு நபருக்கும், ஏன் ஒவ்வொரு கல்லூரிக்கும் அதுபோலவே ஒவ்வொரு தனியார் மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் பட்டியல் உண்டு.

என்னைப் பொறுத்தவரையில் டாக்டர் ராமதாஸ் கூறுவதற்கு முன்பே, வருமான வரித்துறை, வருவாய்க்கு மேல் சொத்துக் குவிப்பு என்பது போன்ற வழக்குகள் எல்லாம் வந்து அவற்றையெல்லாம் சந்தித்து என்னுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாகத்தான் உள்ளது.

அதுபற்றி டாக்டர் ராமதாஸ் எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் புரட்டிப் பார்த்துக் கொள்ளலாம். நான் கிளார்க்காக இருந்தேன் என்கிறார் டாக்டர் ராமதாஸ். கிளார்க்காக பணியாற்றுவது ஒன்றும் பாவமான தொழில் அல்ல.

பொது வாழ்க்கையில் ஈடுபட்டு எத்தனை முறை சிறை சென்றேன் என்ற கணக்கு எனக்குத் தெரியாது. மிசா காலத்திலே சிறையிலே அடைக்கப்பட்டு அடி வாங்கி இன்றளவும் என் காது கேட்காத நிலைமை உள்ளது ஒன்றே என்னைப் பற்றிய உண்மையை உலகத்திற்குத் தெரிவிக்கும்.

ஆனால் நான் சிறைபட்ட நேரத்தில் என்னுடைய குடும்பத்தினர் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைப் போல யாரும் மேலிடத்தைப் பார்த்து மன்னிப்பு கோரி மண்டியிடவில்லை என்ற வரலாறும் எனக்கு உண்டு. இறுதியாக ராமதாஸ் நான் உருப்படமாட்டேன் என்று சாபம் விடுத்திருக்கிறார். சாபம், விமோசனம் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட கட்சிதான் திமுக.

ஏழைகளின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் என்று சொன்ன அண்ணாவின் தம்பியாம் கருணாநிதியின் தலைமையில் கீழ் உள்ள நான் இவரது சாபத்திற்காக கவலைப்படவில்லை. அவர் நன்றாக வாழட்டும். எந்தக்கட்சிக்கும் துணை புரியாமல் தாங்களே தனியாக 2011ல் ஆட்சிக்கு வரப்போவதாகக் கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் மற்ற கட்சிக்கு துணை போய் ஆட்சிக்குக் கொண்டு வந்ததாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அப்படி ஆட்சியிலே ஒரு கட்சியை உட்கார வைத்து விட்டு அந்த ஒவ்வொரு கட்சிக்கும் எந்த அளவிற்கு துணை இருந்திருக்கிறார் என்ற சரித்திரம் தமிழகத்தின் வரலாற்றில் என்றுமே பசுமையாக இருக்கத்தான் செய்யும். நான் என்னிடம் இருக்கும் விபரங்களைத் தெரிவிக்கிறேன். இவை தவறு என்றால் டாக்டர் ராமதாஸ் நீதிமன்றத்தில் என் மீது வழக்கு தோடரலாம். அதை நான் சந்திக்கத் தயார் என ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

மாநாட்டுக்கு ராமதாசுக்கு அழைப்பில்லை:

இந் நிலையில் திருநெல்வேலியில் நடக்கும் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு ராமதாசுக்கு ஒரு மரியாதைக்காகக் கூட இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லையாம். இதை அவரே நிருபர்களிடம் தெரிவித்தார்.

Nandri: Thatstamil

Thursday, December 6, 2007

கனிமொழியின் கன்னிப் பேச்சுக்கு பிரதமர் பாராட்டு

கவிஞர் கனிமொழியின் கன்னிப் பேச்சுக்கு பிரதமர் பாராட்டு

அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து - உறுப்பினர் மேசையைத் தட்டி வரவேற்றனர்
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்

புதுடில்லி, டிச.5- தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்கள் 123 அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மாநிலங்களவையில் நேற்று (4-12-2007) கன்னிப் பேச்சு நிகழ்த்தினார். அப்போது, அவையில் இருந்த உறுப்பினர்கள் மேசையைத் தட்டி வரவேற்றனர். கனிமொழி தனது கன்னிப் பேச்சை நிறைவு செய்ததும், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், “மிகச் சிறந்த தங்கள் உரைக்கு எனது பாராட்டுகள் (Congratulation for your brilliant speech)” என்று குறிப்பு எழுதி அனுப்பி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் கபில்சிபல் அவர்கள் கனிமொழி அமர்ந்திருந்த இருக்கை அருகே வந்து கைகுலுக்கி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, சுரேஷ் பச்சோரி, ஆனந்த சர்மா, பட்டேல், சி.பி.எம். மாநிலங் களவை உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்துப் பாராட்டினர்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங் அமர்ந்திருந்த இருக்கை அருகே கவிஞர் கனிமொழி வந்து, பிரதமரிடம் வாழ்த்து பெற்றார்.

செய்தி: நன்றி: விடுதலை

கனிமொழியின் முழு பேச்சு விபரம் இங்கே

Tuesday, December 4, 2007

ஸ்டாலின் தலைமையை ஏற்க தயார்

ஸ்டாலின் தலைமையை ஏற்க ஆற்காடு, துரைமுருகன், வீரபாண்டி, கோ.சி மணி தயார்

சென்னை: நான் மட்டுமல்ல, கட்சியின் மூத்த தலைவர்களான துரைமுருகன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் உள்பட அனைவரும் ஸ்டாலின் தலைமையை ஏற்க தயாராகத்தான் இருக்கிறோம் என மின்துறை அமைச்சரும் திமுக பொருளாளருமான ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

தென்சென்னை மாவட்ட திமுக இளைஞரணி கூட்டம் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அமைச்சரும் திமுக பொருளாளருமான ஆற்காடு வீராசாமி பேசுகையில்,

திமுக சாதாரண இயக்கம் அல்ல. அண்ணா இட்ட கட்டளையை இன்று வரை கலைஞர் நிறைவேற்றி வருகிறார். அவரது வழியில் மு.க.ஸ்டாலின் அயராது பாடுபடுகிறார். பேராசிரியர் அன்பழகன் ஒரு திருமண விழாவில் பேசும்போது, ஸ்டாலின் தலைமை பதவிக்கு வருவதை ஏற்பதாக சுட்டிக் காட்டினார்.

அவர் மட்டுமல்ல. நானும் பல்வேறு கூட்டங்களில் பேசும்போது எதிர்காலத்தில் ஸ்டாலின் தலைமை பதவிக்கு வரவேண்டும். அதற்கு அவர் தகுதியானவர்தான் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

நான் மட்டுமல்ல. கட்சியின் மூத்த தலைவர்களான துரைமுருகன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் உள்பட அனைவரும் ஸ்டாலின் தலைமையை ஏற்க தயாராகத்தான் இருக்கிறோம்.

அதற்கு காரணம் ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் என்பதல்ல. 1976ம் ஆண்டு மிசா காலத்தில் இருந்து இன்று வரை பல்வேறு தியாகங்களை கட்சிக்காக செய்தவர் ஸ்டாலின். அவருக்கு கட்சியின் தலைமையை ஏற்று நடத்தும் தகுதி திறமை இருக்கிறது என்பதே இதற்கு காரணம் என்றார்.

பின்னர் ஸ்டாலின் பேசுகையில்,

அமைச்சர் ஆற்காடு வீராசாமி என்னை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நிகழ்வுகளை சுட்டிக் காட்டினார். 76ம் ஆண்டு மிசா காலத்தில் எனக்கு ஏற்பட்ட கொடுமைகளை சிறை அனுபவங்களையும் சுட்டிக்காட்டி பேசினார்.

நான் என்றும் அதை தியாகமாக கருதியதில்லை. கடமையாகத்தான் உணர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

67, 68ம் ஆண்டுகளில் கோபாலபுரம் இளைஞர் திமுக என்று என்னால் தொடங்கப்பட்ட இயக்கம் மதுரையில் 80ம் ஆண்டு இளைஞரணியாக உருவெடுத்தது. இப்போது தமிழகம் முழுவதும் இளைஞர் அணி கம்பீரமாக உலா வருகிறது.

திமுகவில் எல்லா அணிகளையும் விட இளைஞர் அணிக்குத்தான் தனி சிறப்பு. நெல்லையில் இளைஞரணி மாநாட்டை நடத்துகிறோம். அது வெற்றி மாநாடாக அமைய நீங்கள் அனைவரும் வரவேண்டும்.

நாட்டில் புதிதாக கட்சிகள் வரலாம். திடீர் திடீரென தலைவர்கள் வரலாம். வரக்கூடிய கட்சிகளுக்கு கொள்கை குறிக்கோள் இருக்கிறதா. அவர்களது ஒரே கொள்கை ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான். நான் தான் முதலமைச்சர் என்ற முடிவோடு கட்சி தொடங்குகிறார்கள்.

இன்றைக்கு புதிய கட்சிகளை பார்த்து சில இளைஞர்கள் தடுமாறலாம். அவர்களை நமது இளைஞர்கள் பக்குவப்படுத்த வேண்டும். நாம் பதவியை தேடி செல்ல கூடாது. பதவி நம்மை தேடி வரவேண்டும். நெல்லை மாநாட்டை தடுத்து நிறுத்த அதிமுக என்னென்னவோ திட்டமெல்லாம் போட்டது, எதுவும் எடுபடவில்லை என்றார் ஸ்டாலின்.

நெல்லை மாநாட்டில் ஸ்டாலின் துணை முதல்வர் பதவிக்கு உயர்த்தப்படலாம், முதல்வராகக் கூட முடி சூட்டப்படலாம் என்ற பேச்சு நிலவும் நிலையில் ஸ்டாலின் தலைமையை ஏற்கத் தயார் என ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: செய்தி: தட்ஸ்தமிழ்

Wednesday, November 28, 2007

மதுரைக்காரர்களே - இது நெசமா ?

குமுதம் ரிப்போர்ட்டரின் கவர் ஸ்டோரி - தமிழகத்தில் இப்போது எங்கு முக்கியக் கொலைகள் நடந்தாலும், அதில் ‘மதுரை நபர்’களின் பங்களிப்பும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு கூலிப் படைகளின் கோட்டையாக மதுரை மாறிவிட்டதோ என்ற அச்சம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் தமிழகத்தை அதிர வைத்த, திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைச்செல்வன் படுகொலையிலும் கூட, கொலைக் கும்பலில் இடம் பெற்ற கிருஷ்ணகுமார் (வயது 28), காக்கு வீரன் (வயது 27) ஆகிய இருவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள்.

கிருஷ்ணகுமார் மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்தவன். காக்கு வீரனின் வசிப்பிடம் மதுரை சோலையழகுபுரம். இதில் கிருஷ்ணகுமார் மீது மதுரை நகர போலீஸ் ஸ்டேஷன்களில் எந்த வழக்கும் இல்லை. ஆனால், மதுரை புறநகரிலுள்ள அவனியாபுரம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக அவன்மீது ஒரு வழக்கு இருக்கிறது. அதுபோல, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் டாக் ரவி கும்பல் வழிப்பறி செய்த வழக்கிலும் கிருஷ்ண குமாரின் பெயர் உள்ளதாம். காக்கு வீரன் மீது, கத்தியைக்காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக மதுரை ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷன்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறதாம்.

மதுரை செல்லூர் பகுதியில் 2005_ம் ஆண்டு பாண்டியராஜன் என்பவரைக் கொலை செய்த வழக்கிலும் காக்கு வீரனின் பெயர் இருந்திருக்கிறது. அந்த வழக்கிலிருந்து அண்மையில்தான் அவன் விடுதலையானானாம். இந்த இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் இருந்த சூழ்நிலையில், ஜாமீனில் வெளிவந்த பின் இவர்கள் தலைமறைவாகி விட்டனர். போலீஸார் இவர்களைத் தேடி வந்த நிலையில்தான் பூண்டி கலைச்செல்வன் வழக்கில் இருவரும் சிக்கியிருக்கிறார்கள்.

காக்கு வீரன், கிருஷ்ணகுமார் குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், குற்றம் செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கும் சிலரிடம் நாம் பேசிப் பார்த்தோம். “மதுரை ஆட்களுக்கு இதெல்லாம் சகஜ மப்பா’’ என கேஷ§வலாக ஆரம்பித்து நம்மிடம் பேசி னார்கள் அவர்கள்.

“இன்றைக்கு ஏதோ சுற்றுலா செல்வது போல ஹாயாக வெளியூருக்குப் போய் கொலை செய்து விட்டு வரும் ஆசாமிகள், மதுரையில் அதிகரித்து வருகிறார்கள். அதனால்தான் சமீபகாலமாக தமிழகத்தில் சென்னை உள்பட எங்கே கொலை நடந்தாலும், அதில் மதுரை நபர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.

பூண்டி கலைச்செல்வன் கொலையில் மதுரையைச் சேர்ந்த இருவர் சிக்கியிருக்கிறார்கள். வழக்கமாக கூலிப் படையாகச் செல்பவர்கள் யாரும் சிக்குவதில்லை. யாருக் காக அவர்கள் கொலை செய்கிறார்களோ, அவர்தான் பிடிபடுவார். தா.கிருட்டிணன், ஆலடி அருணா கொலை வழக்குகளிலெல்லாம் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் யாராவது கைதானார்களா? இல்லையே. கலைச்செல்வன் கொலையில் வெடிகுண்டு பயன்படுத்தியதால்தான் இந்த இருவரும் சிக்கினார்கள். இந்த இரண்டு பேரும் திருட்டு, வழிப்பறியில் வேண்டுமானால் எக்ஸ்பர்ட்டாக இருக்கலாம். ஆனால் கொலை அவர்களுக்குப் புதிது.

பொதுவாகக் கூலிப்படையில் செல்பவர்களுக்கு யாரைக் கொல்லப் போகிறோம்? கொல்லப்படும் நபரின் முக்கியத்துவம் என்ன? என்பதெல்லாம் தெரியாது. இந்தக் கொலைக்காகத் தங்களைப் பயன்படுத்துபவர்கள் எவ்வளவு பணம் வாங்குகிறார்கள் என்பதும் தெரியாது. ‘இந்த ஆளை வெட்டி வா’ என்றால் வெட்டிவிடுவார்கள். வேலையைப் பொறுத்து பணம் கிடைக்கும். அதுவும் சொற்பப் பணம்தான் கிடைக்கும்.

கூலிப்படையில் இடம் பெறும் ஆட்கள் அதிகபட்சமாக பத்து வருடம்தான் பரபரப்பாகச் செயல்பட முடியும். அதற்கிடையே போலீஸில் சிக்கிக் கொண்டால் அதோடு சரி. இவர்கள் குடும்பம் பெரிய அளவு வசதியாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. பலரது குடும்பங்கள் வறுமையில்தான் இருக்கின்றன. ஆனால் இவர்களை வைத்து வேலை வாங்கும் தாதாக்கள், ரவுடிகள் செழிப்பாக இருக்கிறார்கள். பணத்தில் புரள்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் எடுத்துக் கொண்டால் இருபத் தைந்து கூலிப்படைகள்தான் இருக்கும். இந்தக் கூலிப்படைகளை வைத்திருப்பவர்கள் மாற மாட்டார்கள். அவர்களுக்குக் கீழே இயங்கும் ஆட்கள்தான் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறிக்கொண்டே இருப்பார்கள். கூலிப் படைக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் விதமும் சுவாரஸ் யமானது.

இந்த வேலைக்கு ஆள் தேர்வு செய்யும் மையமே ஜெயில்தான். ஜெயிலில் உள்ள ஒவ்வொரு பிளாக்குமே ஏதாவது ஒரு ரவுடியின் கண்ட்ரோலில்தான் இருக்கும். விவசாயம், வேறு தொழில் இல்லாமல் சின்னச் சின்ன குற்றங்களைச் செய்துவிட்டு ஜெயிலுக்குப் போகிறவர்கள் இதில் ஏதாவது ஒரு ரவுடிக் குழுவிடம் தஞ்சமடைந்து விடுவார்கள். இப்படி புதிதாக ஜெயிலுக்கு வருபவர்களை அவர்களது சாதி, வட்டாரம் அல்லது அவர்கள் செய்த குற்றத்தின் அடிப்படையில் பெரிய ரவுடிகள் அரவணைத்துக் கொள்வார்கள்.

இப்படி, தாங்கள் அரவணைத்துக் கொண்ட புதிய கைதிகளின் திறமையை ஜெயிலுக்குள்ளேயே பெரிய ரவுடிகள் துல்லியமாக மதிப்பிட்டு விடுவார்கள். ‘இவனை வெளியே அனுப்பி எதற்கு பயன்படுத்தலாம்?’ என மனக் கணக்கு போடுவார்கள். அதிலும் இருபத்தைந்து வயதுக்குள், கட்டுமஸ்தாக இருக்கும் புதிய கைதிக்கு ஏக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அத்துடன், இந்தப் ‘புதுக் கைதி’ பற்றி வெளியே உள்ள தங்கள் ஆட்களுக்குத் தகவல் கொடுப்பார்கள். இவனது சேவை தேவையா? என்று கேட்டு வைப்பார்கள். ‘தேவை’ என வெளியே இருந்து சிக்னல் வந்தால், அந்தப் புதிய கைதிக்கே தெரியாமல் அவனை வெளியே கொண்டு வர கிடுகிடுவென வேலைகள் நடக்கும்.

முதல்கட்டமாக ரவுடியின் ஆட்கள் மனு போட்டு புதிய கைதியை ஜெயிலில் பார்க்க வருவார்கள். அவனுக்குத் தேவையானதை வாங்கி வந்து கொடுப்பார்கள். முதன் முதலில் ஜெயிலுக்குள் போனவனுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியும். ‘என்னைப் பெத்தவங்க கூட பார்க்க வரலை. நீங்கதாண்ணே பார்க்க வந்திருக்கீங்க’ என மாய்ந்து போவான். ‘உன்னை ஜாமீனில் வெளியே கொண்டு வர அண்ணன் சொல்லியிருக்கிறார். அதற்கான ஏற்பாடு செய்து வருகிறோம்’ என அவர்கள் சொல்லிய பிறகுதான், இதெல்லாம் ‘அண்ணனின் வேலை’ என அந்தக் கைதிக்குத் தெரியும். ‘உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போறேன்?’ என கண்ணீர் மல்க, ஜெயிலில் அந்த ரவுடிக்குக் கால் அமுக்கி விடுவான்.

அதன்பின் புதுக் கைதியை வெளியே எடுப்பதற்கான வேலைகள் மளமளவென நடக்கும். மதுரை கோர்ட்டிற்கு வெளியே போலி ஜாமீன்தாரர்களை சப்ளை செய்யும் புரோக்கர்கள் சிலரை அணுகி, ஒரு ஜாமீனுக்கு எண்ணூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்வரை கொடுத்தால், வி.ஏ.ஓ. சான்றிதழ், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஜாமீனில் வெளியே வருவதற்கான ஆவணங்களுடன், ஆட்களையும் தந்து விடுவார்கள். அதன்மூலம் புதிய கைதிக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் ஜாமீன் கிடைத்துவிடும். ஜெயிலைவிட்டுப் புறப்படும்முன் பெரிய ரவுடியை நன்றிப் பெருக்கோடு பார்த்து, ‘வாழ்நாளில் உங்களை மறக்கமாட்டேன்’ என காலில் விழுந்து கும்பிட்டு விட்டுப் புறப்படுவான். ‘வெளியே போய் நீ இவரைப் பார்’ என்று ரவுடி அண்ணன் வேண்டுகோள் விடுப்பார். அதை சிரமேற் கொண்டு அந்த நபரை புதிய கைதி பார்ப்பான். அங்கே யாரையாவது வெட்டவோ.. குத்தவோ அசைன்மெண்ட் ரெடியாக இருக்கும். இந்த இளைஞனால் அதைத் தட்ட முடியாது. செஞ்சோற்றுக் கடனாக நினைத்து அதைச் செய்வான். ஆக, ஒரு பிக்பாக்கெட் வழக்குக்காக ஜெயிலுக்குப் போனவன் கொலை செய்யும் கூலிப்படையாளாக மாறிவிடுவான்.

மதுரை ஜெயில், இன்றைக்கு கூலிப்படைக்கான ஆட்களைத் தயாராக்கும் கூடமாக மாறிவருகிறது என்று கூடச் சொல்லலாம். காரணம், மதுரையைச் சுற்றி ஆறு ஏழு மாவட்டங்களின் முக்கியக் குற்றவாளிகள் மதுரை ஜெயிலில்தான் அடைக்கப்படுகிறார்கள். அதுமட்டுமில்லாமல், வெளிமாவட்ட ஜெயில்களில் பிரச்னைக்குரிய நபராகக் கருதப்படும், ‘கமான்ட் பிரிஸனர்’ என அழைக்கப்படும், முக்கியக் குற்றவாளிகளையும் மதுரை ஜெயிலில் தான் அடைக்கிறார்கள். சின்ன குற்றங்களைச் செய்து ஜெயிலுக்குச் செல்பவர்கள் இதுபோன்ற பெரிய கிரிமினல்களின் ‘ஒளி வட்டத்துக்குள்’ சிக்கி கூலிப் படைகளில் ஐக்கியமாகி விடுகிறார்கள்.

இன்றைக்கு வெளி மாவட்டங்களில் இருக்கும் கூலிப் படையினர் மதுரை ஆட்களைத் தேர்வு செய்ய பல கார ணங்கள் இருக்கின்றன. அரிவாளோ, வெடிகுண்டோ வேலைக்குத் தேவையான சாமான்களை (ஆயுதங்களை) மதுரைக்காரர்களுக்கு சப்ளை செய்யத் தேவையில்லை. அவர்களே அதை வைத்திருப்பார்கள். அதோடு, செய்யும் வேலையைத் துல்லியமாகச் செய்வதோடு, குறைந்த கட்டணத்திலும் முடித்து விடுவார்கள். அதுமட்டுமல்ல, ஒரு விஷயம் முடிந்து போன பின்னர் அதுபற்றி இவர்கள் வாய் திறப்பதே இல்லை.

கூலிக்குத் தாக்குதல் நடத்துவதை, மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சிலர் குடிசைத் தொழில் போலவே செய்து வருகிறார்கள். கொலை செய்வது மட்டும்தான் இவர்களது வேலை என்று நினைத்துவிடக்கூடாது. மிரட்டல், லேசான ஊமைக்காயங்களை ஏற்படுத்துதல் போன்றவற்றையும் இவர்கள் செய்வார்கள். கூலிப்படையில் எந்த அசைன்மெண்டும் இல்லாத போது, திருப்பூர் பனியன் கம்பெனிகள், பெரிய நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அவ்வப்போது விசிட் செய்து வசூலித்துவிட்டு வரும் ஆட்கள் நிறையப் பேர் மதுரையில் இருக்கிறார்கள்.

இன்றைக்குத் தமிழகத்தின் பிரதான ஏழு ஜெயில் களில் உள்ள முக்கிய குற்றவாளிகளிடம் மொபைல் போன் இருக்கிறது. அவர்கள் ஜெயிலில் இருந்தபடியே வெளியே நடத்தவேண்டிய வேலைகளைத் துல்லியமாக ஆபரேட் செய்கிறார்கள். பிரபல கைதிகளை ஜெயில் நிர்வாகம் அவ்வளவாகக் கண்டுகொள்ளாது. காரணம், அவர் களைச் சீண்டினால் ஜெயிலின் அமைதியைக் கெடுத்து விடுவார்கள் என்ற பயம்தான்.

பூண்டி கலைச்செல்வன் கொலையைப் பார்த்தால் அதற்கான திட்டம் தீட்டப்பட்ட இடம் திருச்சி ஜெயில். கொலையாளிகளைத் தேர்வு செய்த இடம் மதுரை. சம்பவம் நடந்ததோ கொரடாச்சேரியில். ஜெயிலில் மொபைல் புழக்கம் இருக்கும் வரை கொலைக்காக அங்கு திட்டமிடுவதைத் தடுக்க முடியாது. இதற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமானால், மணல்மேடு சங்கர் தொடர்பான ஒரு விஷயத்தையே சொல்லலாம்.

மணல்மேடு சங்கரை என்கவுன்ட்டர் செய்ய போலீஸ் திட்டமிட்டிருந்தபோது, பெரிய இடத்து சிபாரிசுகள் மூலம் அவன் என்கவுன்ட்டர் லிஸ்ட்டில் இருந்து கழற்றி விடப்பட்டான். ஆனால் அவனது பெயர் மீண்டும் அந்த லிஸ்ட்டிற்குள் வந்துவிட்டது. ‘இப்படி வரச்செய்தது பூண்டி கலைச்செல்வன்தான்’ என்று ஜெயிலில் இருந்த மணல்மேடு சங்கரிடம் சிலர் மொபைலில் போட்டுக் கொடுத்தார்கள். இதைக் கேட்ட சங்கர் ஆடிப்போனான். அப்போதே பூண்டி கலைச்செல்வனுக்கு வேட்டு வைக்க மதுரையில் இருந்து ஒரு டீமை அனுப்பினான். என்ன காரணத்தினாலோ அந்த டீம் தங்கள் அசைன்மெண்டை நிறைவேற்ற முடியவில்லை. ‘கலைச்செல்வன் சபரிமலைக்கு மாலை போட்டிருந்ததால் அவரை வெட்டாமல் வந் தோம்’ என அந்த டீம் சாக்குப்போக்குச் சொல்லியது. இது நடந்து ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும்.

மணல்மேடு சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிறகு, அவனது ஆதரவாளர்களுக்கு பூண்டி கலைச்செல்வன் மீது கோபம் இருந்தது. ஆனால் அவர்கள் பொருளாதார ரீதியாக வலுவிழந்துவிட்டார்கள். அதுமட்டுமில்லாமல், சங்கருக்கு வேண்டிய பலர் பல்வேறு வழக்குகளில் சிக்கி கடலூர், திருச்சி உள்ளிட்ட ஜெயில்களில் அடைக்கப் பட்டு சிதறிப்போனார்கள்.

இந்தச் சூழ்நிலையில் பூண்டி கலைச்செல்வனைத் தீர்க்க அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் திட்டமிட்டார். அவரி டம் பணமிருந்தது. ஆட்கள் இல்லை. அப்போது அவர் மணல்மேடு சங்கரின் ஆதரவாளர்களை அணுகியிருக் கிறார். பண உதவி செய்யவும் தயாராகியிருக்கிறார். இந்த நிலையில், மதுரை ஜெயிலில் மணல்மேடு சங்கர் இருந்த போது அவனுடன் நட்பு பாராட்டிய கிருஷ்ணகுமாரும் காக்கு வீரனும் இந்தக் கூலிப்படைக்கு செலக்ட் ஆகியிருக்கிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு இதற்காகவே அவர்கள் வெளியே வந்தார்கள். இப்படி கூலிப்படை ஆளாகத் தொழிலில் இறங்கியவர்களின் கதி, புலிவாலைப் பிடித்தவன் கதிதான்’’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார்கள் அந்த கிரிமினல்கள்.

முன்பு தாதாவாக இருந்த ஒருவரிடம் பேசினோம்..

“மதுரையில் கொலைகள் செய்பவர்களில் எழுபத்தைந்து சதவிகிதம் பேர் ஏதோ மோட்டிவ், முன் விரோதம் காரணமாகத்தான் செய்வார்கள். இருபத் தைந்து சதவிகிதம் பேர் பணத்துக்காகக் கொலை செய்பவர்கள். இதில், ‘நான் திருந்திவிட்டேன்’ என்று நல்லவன் போல மதுரைப் பகுதியில் வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் ஒருவர், கூலிக்காக கொலைகள் செய்பவர். உடன் பிறந்த தம்பியையே சொத்துக்காகக் கொன்றவர்.

கூட்டமாக ஐம்பது பேர் இருந்தாலும் யாரைப் போட வேண்டுமோ, அந்த ஆளை கரெக்டாகப் போட்டுத் தள்ளும் சாமர்த்தியம் மதுரை ஆட்களுக்கு உண்டு. அதனால்தான் மதுரை ஆட்களை வெளியூர் கூலிப்படையினர் விரும்பித் தேர்ந்தெடுக்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த ஐந்து பேர் செய்யும் வேலையை மதுரையைச் சேர்ந்த ஓர் ஆள் சுத்தமாகச் செய்துவிட்டு வந்துவிடுவான். அதுவும் தைரியமாகச் செய்வதில் மதுரைக்காரர்கள் சூரர்கள். இப்படி திறமை ஒரு பக்கம் இருக்க, இவர்களது ரேட்டும் குறைவு. முன்பு திருநெல்வேலி, தூத்துக்குடி ரவுடிகள்தான் குறைந்த ரேட்டுக்குக் கூலியாகப் போய்க் கொண்டிருந்தார்கள். இப்போது தமிழ்நாட்டிலேயே மதுரை ரவுடிகளுக்குத்தான் ரேட் குறைவு.

வெளியூர்களில் ஒரு ரவுடி நினைத்தால் ரேஷன் கடையில்கூட மிரட்டி காசு வாங்கிவிட முடியும். ஆனால் மதுரையில் ரேஷன் கடைகளில் இருக்கிறவனே ‘நான் முன்னாள் ரவுடி’ என மாமூல் கேட்கப் போகிற ரவுடி யையே மிரட்டுவான். அதனால் செலவுக்குப் பணம் வேண்டும் என்பதற்காக, இப்படி குறைந்த ரேட்டுக்கு கூலிப்படைக்குப் போகிறார்கள். அதுமட்டுமில்லாமல், அவர்களுக்குத் தங்கள் மீதுள்ள வழக்கை நடத்துவதற்கும் பணம் தேவைப்படுகிறது. அதனால் இப்படி அடியாளாகப் போவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

கூலிப்படையில் இடம் பெறவும், கட்டப் பஞ்சாயத்து செய்வதற்காகவுமே மதுரையில் சிலர் அரிவாளைத் தூக்கும்நிலை ஏற்பட்டிருக்கிறது.. சட்டவிரோத செயல்களைச் செய்வதற்கு இந்த அடையாளங்கள் தேவைப்படுகின்றன. மதுரையில் முனிச்சாலை, வைகை வடகரை, ஆரப்பாளையம், சிந்தாமணி, கரிமேடு, புதூர், கரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் லட்சக்கணக்கில் கஞ்சா வியாபாரம் செய்பவர்கள் தங்களுக்கு பக்கபலமாக கூலிப்படையை வைத்திருக்கிறார்கள். இது குறித்து போலீஸ§க்கும் தெரியாமல் இல்லை.

மதுரையில் இப்போது கொலையின் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. ‘இங்கே தொட்டால் அங்கே வலிக்கும்’ என்பது அவர்களின் புது பாலிஸியாக இருக்கிறது. அதாவது, அரசியல் பிரமுகர்களை விட்டுவிட்டு அவர்களின் மகன்களைக் கொல்வதை ஒருவித ஸ்டைலாக இவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். மதுரை நகர தி.மு.க. செயலாளராக இருக்கும் வேலுச்சாமியின் மகன் சில ஆண்டுகளுக்கு முன்னர், கொலை செய்யப்பட்டார். சமீபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மாரிசாமியின் மகன் கொலையானார். சில தினங்களுக்கு முன்பு மதுரை தி.மு.க. பகுதிச் செயலாளர் முருகனின் மகன் கொலை செய்யப்பட்டார். அப்பாவை விட்டுவிட்டு மகனைக் கொலை செய்வது என்பது கொஞ்சம் அதிர்ச்சியோடு பார்க்க வேண்டிய விஷயம்.

சென்னை கிரிமினல் பணத்துக்காகக் கொலை செய்வான். நெல்லைக்காரன் சாதிக்காகக் கொலை செய்வான். மதுரைக்காரன் நட்புக்காகக் கொலை செய்வான். இந்த சூத்திரம் கூலிப்படையினர் எல்லோருக்கும் தெரியும். அதனால் மதுரைக்காரனை அணுகி, அவனுக்கு பத்து நாள் தண்ணியும், பரோட்டோவும் வாங்கிக்கொடுத்து செலவுக்குக் கொஞ்சமாகக் காசு கொடுத்து நட்பாக்கிக் கொள்வார்கள். பின்னர், ‘எனக்காக இதைச் செய் நண்பா’ என்பார்கள். இவனும் பாசத்தோடு அரிவாளைத் தூக்கிப் போய் கொலையைச் செய்து விடுகிறான். மதுரைக்காரங்க பாசக்கார பயலுக’’ என முடித்துக்கொண்டார் அந்த எக்ஸ் தாதா.

போலீஸ் வட்டாரத்தில் இதுபற்றிப் பேசினோம்.. “மதுரையில் ரவுடிகள் பெருக அரசியலும் சாதியும்தான் காரணம். இவர்கள் ரவுடித்தனம் செய்யத் தொடங்கிய வுடனேயே ஏதாவது ஓர் அரசியல் கட்சி அல்லது சாதி அமைப்புகளுக்குள் தங்களை ஐக்கியமாக்கிக் கொள்கிறார்கள்.

பொதுவாக எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்தக் கட்சியின் ஆதரவாளராகவே இவர்கள் ஒட்டிக் கொண்டிருப்பார்கள். இதில் யாரைப் பிடிப்பது? யாரை என்கவுன்ட்டர் செய்வது? இருந்தாலும் கடந்த பதினொரு மாதங்களில் மதுரையில் இருபத்தாறு பேரைக் குண்டர்கள் சட்டத்தில் கைது செய்திருக்கிறோம். ஐநூற்று ஐம்பத்தொரு ரவுடிகளை லிஸ்ட் எடுத்து கண்காணித்து வருகிறோம்’’ என்றார்கள் அவர்கள்.

வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசிப் பார்த்தோம். “கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மதுரையில் கொலைகள் அதிகரித்துள்ளன. மதுரையில் கூலிப்படை ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்பதற்கான அடையாளம்தான் இது. அதுமட்டுமில்லாமல், இதுவரை இரண்டு கொலைகளுக்கான துப்பு துலங்கவில்லை. காவல்துறை துணிச்சலான நடவடிக்கையில் இறங்கினால் தான் சட்டம் _ ஒழுங்கைப் பாதுகாக்க முடியும்.

சினிமாவிலும் சரி, சின்னத்திரையிலும் சரி, மதுரைக் காரர்கள் என்றாலே காலரைத் தூக்கி விட்டு, நாக்கை மடித்துக்காட்டி, வீச்சரிவாளைக் காட்டுவதைப் போல காண்பிக்கிறார்கள். இதைப் பார்க்கும் வெளி மாவட் டக்காரர்களுக்கு மதுரை என்றால் இப்படித்தானோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. மதுரைக்காரன் பென்சில் சீவுவதற்கே அரிவாளைப் பயன்படுத்துவான் போலிருக்கு என்ற தவறான எண்ணத்தையும் இந்த சினிமாக்களும், சீரியல்களும் ஏற்படுத்திவிடுகின்றன. எனவே, மதுரையின் இமேஜ் கெடாமல் பார்த்துக் கொள்வதில் மீடியாக் களுக்கும் பங்கிருக்கிறது’’ என வருத்தத்துடன் சொல்லி முடித்தனர் அவர்கள்.

மதுரை, கூலிப்படையாட்களின் கூடாரமாக மாறி விடாதபடி தடுக்கும் பொறுப்பு காவல்துறையின் கைகளில்தான் உள்ளது. மதுரை மக்களின் எதிர்பார்ப்பும் இது தான்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Friday, November 16, 2007

தமிழ் சினிமா பரிந்துரை- உங்கள் வாரிசுக்கு

சமீபத்தில் சில வாரங்களுக்கு முன் சர்வேசன் தனது பதிவில், தமிழில் 75 ஆண்டுகளில் சிறந்த படங்களாக குமுதம் பட்டியலை வெளியிட்டு தனது மற்றும் பிறரது விருப்ப பட்டியலையும் (பின்னூட்டங்களில்) வெளியிட்டிருந்தார். நான் இந்த பதிவில் கேட்பது வேறு.

தமிழ் வலைப்பதிவுலகில் புழங்கி வரும் பெரும்பாலானவர்கள் 20 வயது முதல் 60 வரையிலான பெருமக்கள். உங்கள் வருங்கால சந்ததியினருக்கு எந்த எந்த தமிழ் சினிமா படங்களை பார்க்கும் படி சிபாரிசு பண்ணுவீர்கள் அல்லது அதன் டிவிடியை வாங்கி இப்போதே சேமித்து வைப்பீர் ? (அதுவும் மோசர் பாயர் மற்றும் இன்ன பிற கம்பெனிகளின் குறைந்த விலை டிவிடி/சிடிக்கள் கிடைக்கும் போது)

இந்தப் படங்களை நீங்கள் சிபாரிசு செய்யும் (அல்லது சேமிக்கும்) காரணம் என்னவென்றும் பதிவிடலாம். எந்தப் படத்தை வருங்கால சந்ததியினர் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் (அவர்கள் விருப்பப்படி); உங்கள் பட்டியலில் உள்ள படங்களை ஒரு முறையேனும் அவர்களைப் பார்க்கச் செய்து உங்கள் காரணத்தை அவர்களிடம் சொல்லும் விதமாக இருக்கவேண்டும் உங்கள் லிஸ்ட்.

காரணங்கள் - சிறப்பான கதை, இயக்கம், திரைக்கதை, எடிட்டிங், ஒளிப்பதிவு, பாடல்கள், இசை, நடிப்பு, சண்டைக் காட்சிகள் என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அது உங்களை ஈர்த்ததுடன் உங்கள் மகன்/மகளை பார்க்கச் சொல்லும் படி இருக்கவேண்டும். அவர்கள் படங்களைக் காண்பார்களோ இல்லையோ - நமது ஆசையாக சில படங்களை அவர்கள் பார்க்கவைக்கவேண்டும் என நீங்கள் நினைக்கும் படங்களாக இருக்கவேண்டும்.

இந்த ஆட்டத்திற்கு நான் அழைக்கும் பதிவர்கள் (படம் தமிழ் திரைப்படமாக இருக்க வேண்டும் - பிற மொழிப் படங்களை வேறு லிஸ்டில் சேர்க்கலாம்)

- ஆசிப் மீரான்
- ரத்னேஷ்
- கோவி.கண்ணன்
- லக்கி லுக்
- இட்லி வடை
- பெயரிலி கனா.ரவன்னா
- செல்வராஜ்
- நா.கண்ணன்
- சுப்பையா சார்
- தேசிகன்
- டுபுக்கு
- ஐகாரஸ் பிரகாஷ்
- டி.பி.ஆர்.ஜோசப் சார்
- வற்றாயிருப்பு சுந்தர்
- மோகந்தாஸ்
- நாராயண் (உருப்படாதது நாராயண்)
- மூக்கு சுந்தர்
- ராமச்சந்திரன் உஷா
- துளசி டீச்சர்
- கனடா வெங்கட்
- தருமி சார்.
- அபுல் கலாம் ஆசாத்

எனது லிஸ்ட் வரும் பதிவுகளில் வரலாம் :-)

உங்கள் வரிசை எத்தனை படங்களை வேண்டுமென்றாலும் கொண்டிருக்கலாம். ஆனால் அதை இயக்குனர் அல்லது நடிகர்/நடிகை வகைப் படுத்தினால் நலம். மற்றவர்களுக்கு அது உதவியாக இருக்கலாம்.

உதாரணம்:

புராணப் படங்கள்
ரஜினிகாந்த் படங்கள்
பீம்சிங் படங்கள்
ஸ்ரீதர் படங்கள்
சிவாஜிகணேசன் படங்கள்
எம்.ஜி.ஆர் படங்கள்
சாவித்திரி படங்கள்
பத்மினி படங்கள்
கமல்ஹாசன் படங்கள்
பாலசந்தர் படங்கள்
சத்யராஜ் படங்கள்
பாலுமகேந்திரா படங்கள்
கே.எஸ்.ரவிக்குமார் படங்கள்
விசு படங்கள்
இளையராஜா (இசைக்காக)
நாகேஷ் படங்கள்
கவுண்டமணி செந்தில் படங்கள்
ராமராஜன் படங்கள்
வடிவேலு படங்கள்
விவேக் படங்கள்
etc etc

பதிவு இடுவோருக்கு நன்றி. நீங்களும் பிற பதிவர்களை இந்த ஆட்டத்திற்கு அழைக்கலாம்.
நான் கூப்பிடவிரும்பும் இன்னும் பல பதிவர்கள் பட்டியலில் அப்புறம்.

Friday, November 2, 2007

நடிகர் திலகம் மனைவி - கமலா - மறைவு.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் துணைவி கமலா அம்மாள். உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கமலா அம்மாள் சென்னையில் இன்று காலமானார். இதையடுத்து அவரது உடலுக்கு உறவினர்கள், திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

செய்தி: தினமலர்

சிவாஜி குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Tuesday, October 30, 2007

இப்போ என்ன பண்றாங்க ?

குமுதத்தின் லைட்ஸ் ஆன் சினிமா பகுதியில் மறந்து போன நடிக-நடிகையர் படம் போட்டு தற்போது என்ன செய்து வருகிறார்கள் என கட்டம் கட்டி வெளியிடுகிறார்கள்.

அதுபோல கீழ் காணும் பிரபலங்கள் இப்போ என்ன பண்றாங்க ? யாருக்கானும் தெரிந்தால் பின்னூட்டவும். பிரபலங்கள் லிஸ்டை நீட்டவும் நீட்டலாம்.

1. தயாநிதி மாறன் (தினகரன் அலுவலகம் செல்லுவது தவிர...) - இவரின் சேவை மீண்டும் (தமிழ்)நாட்டுக்குத் தேவை

2. சடகோபன் ரமேஷ் (முன்னாள் தமிழக / இந்திய கிரிக்கெட் வீரர் சினிமாவிலா ?)

3. எழுத்தாளர் சிவசங்கரி (இந்திய மொழிகளில் நாவலாசிரியர்கள் (அல்லது இலக்கியம் ?) பற்றிய ஆய்வுக்குப் பிறகு ?), அதே மாதிரி இந்துமதி, விமலா ரமணி போன்ற முந்தைய தலைமுறை பெண் எழுத்தாளர்கள்

4. யூகி சேது (டிவியில் பிரபலமான அரட்டை நிகழ்ச்சிக்குப் பிறகு, பஞ்ச தந்திரத்திற்குப்
பிறகு)

5. எம்.எஸ்.உதயமூர்த்தி (ஒரு காலத்தில் தன்னம்பிக்கை என்றால் கூப்பிடு இவரை என்ற அளவில் பல கட்டுரைகளும் மேடைப்பேச்சுகளும் வழங்கியவர்)

6. ஆர்.வி.உதயகுமார் (பொன்னுமணி, சின்னக்கவுண்டர், சிங்காரவேலன், எஜமான் எல்லாம் ஞாபகம் இருக்குல்ல)

7. பாலு ஜுவல்லர்ஸ் உரிமையாளர்கள், மற்றும் இன்னபிற நிதி நிறுவன தலைவர்கள் - அனுபவ், ஈஸ்வரி பைனான்ஸ் மற்றும் பல 24% வட்டிதருவதாகச் சொன்னவர்கள்

8. கவுண்டமணி (ரொம்ப மிஸ் பண்றோமுங்க)

9. குற்றாலீஸ்வரன் (இளம் வயதில் நீச்சலில் சாதனை புரிந்த வீரர்)

10. பூர்ணம் விஸ்வநாதன் (மகாநதிக்குப் பிறகு காணவில்லை)

11. நடிகர் ராமராஜன் (ஒரு காலத்தில் சில்வர் ஜூபிளி நாயகன், பிறகு மக்களவை எம்.பி - சிலகாலம் முன்பு குமுதத்தில் மிகவும் கஷ்டப்படுவதாக ஒரு பேட்டி.. ஆனால் அதன் பின் ?)

12. சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏ.வி.ரமணன் (எப்டி இருந்த நிகழ்ச்சி இப்போ
எப்டி ஆயிடுச்சு)

கிருஷ்ணசாமியை காத்த ராமர்

பரமக்குடி அருகே அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமியை ராமர் டாலர் வடிவத்தில் வந்து காப்பாற்றியதாக அவருடன் சென்ற கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவத்தின் போது, கிருஷ்ணசாமியை தாக்கியவர்கள் அவரது மார்பில் வேல் கம்பியால் குத்தியதாகவும், அவர் அணிந்திருந்த டாலரில் வேல் கம்பு பட்டு அது உடைந்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.

ராமர் டாலரை கிருஷ்ணசாமி அணிந்திருக்காவிடில் வேல் கம்பு இன்னும் ஆழமாக கிருஷ்ணசாமியின் உடலில் பாய்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்றும் அந்த பிரமுகர் தெரிவித்துள்ளார்.

சேது சமுத்திர திட்ட பிரச்சனையில் ராமர் இருக்கிறாரா? இல்லையா? என்ற சர்ச்சை பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் உயிரை ராமர் டாலர் வடிவத்தில் வந்து காப்பாற்றியதாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

News Source: Maalaisudar

Monday, October 29, 2007

கொடியும் மஞ்சள் !

இதை Innovation என்று சொல்வதா இல்லை Lateral thinking என்று சொல்வதா ? ஒரு தண்ணி லாரி முன்பு மக்கள் அலைமோதுவதும், அதற்காக பெரிய க்யூவில் நிற்பதும், அதனால் வரும் தள்ளு முள்ளுகளும் பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த வித தள்ளுமுள்ளுகளை கொஞ்சம் தவிர்க்க நிச்சயம் இந்த 17 பேர் ஒரே நேரத்தில் தண்ணீர் பிடிக்க உதவும் அமைப்பு உதவும். மேலும் குடத்தை வைக்க சிறிய பிளாட்ஃபார்ம் இருப்பதால் அங்கிருந்து தூக்கி நேரே இடுப்பில் வைக்கவும் இலகுவாக இருக்கும்.

பாராட்ட வேண்டிய டிசைன். இதுதான் இந்தியா / தமிழகம் போன்ற பகுதிகளுக்குத் தேவையான மக்களுக்கு உதவும் Innovation.

செய்தி / படங்கள் நன்றி: தினமலர்








செய்தி / படங்கள் நன்றி: தினமலர்

சென்னை: சத்ய சாய் அறக்கட்டளை சார்பாக சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் வாகனத்தை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.

கிருஷ்ணா நதிநீர் திட்டம் கடந்த 1983ம் ஆண்டு துவக்கப்பட்டது. எனினும், செப்டம்பர் 1996ல் சென்னைக்கு கிருஷ்ணா நீர் வந்து சேர்ந்தது. அப்போது முதல் இந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி வரை 27.07 டி.எம்.சி., தண்ணீர் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.512 கோடியை தமிழக அரசு தன் பங்காக ஆந்திரா அரசுக்கு வழங்கி உள்ளது. மேலும், தமிழகத்தில் நடந்த பணிகளுக்காக ரூ.214 கோடியை செலவு செய்துள்ளது.

கிருஷ்ணா நதிநீர் திட்டப்படி 1996 முதல் கணக்கிட்டால் ஆண்டுக்கு 12 டி.எம்.சி., தண்ணீர் வீதம் 120 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்திருக்க வேண்டும். 27.07 டி.எம்.சி., தான் கிடைத்துள்ளது. இதற்கு காரணம், ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லை வரையிலான 151 கி.மீ., துார கால்வாயில் ஏற்பட்ட உடைப்புகளால் ஏராளமான தண்ணீர் வீணாகியது தான்.

கண்டலேறு அணையில் துவங்கி தமிழக எல்லை வரையிலான கால்வாய்களில் ஏற்படும் இழப்பை தடுக்க வேண்டியது அவசியம் என்ற கருத்து சத்ய சாய் பாபாவை ஈர்த்தது. அதனடிப்படையில் இந்த கால்வாயை பலப்படுத்தும் பணியில் சத்ய சாய் நிறுவனம் இறங்கியது. ரூ.200 கோடி செலவில் 18 மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகளால் ஒரு சொட்டு நீர் கூட சேதாரமின்றி தமிழக எல்லைக்கு வந்து சேர காரணமாய் அமைந்தது. இதன்மூலம் சென்னை நகர மக்களின் தாகம் தீர்க்க நிரந்தர தீர்வாகவும் இது அமைந்தது.

இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து `ஜீரோ பாயின்ட்' முதல் பூண்டி நீர்த்தேக்கம் வரையிலான 25 கி.மீ., துாரம் கால்வாயையும், சத்ய சாய் நிறுவனம் ஏற்றுக் கொண்டு பணிகள் நடந்து வருகின்றன. தொடர்ச்சியாக போரூர், செம்பரம்பாக்கம், ரெட்ஹில்ஸ் ஏரிகளின் கரைகளையும் பலப்படுத்தித் தர சத்ய சாய் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. சென்னையின் சில மேடான பகுதிகளில், குறிப்பாக குடிசைப் பகுதிகளில், சென்னை குடிநீர் வாரியம், வாகனங்கள் மூலமாக அன்றாடம் குடிநீர் வழங்கிக் கொண்டு இருக்கிறது. தினமும் ஒன்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள 850 லாரி நடைகள் மற்றும் ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள 400 லாரி நடைகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இவ்வாறு குடிநீர் வழங்குவதற்காக சத்யசாய் பாபா, குடிநீர் வழங்கும் வாகனத்தை குடிசை வாழ் மக்களுக்காக வழங்கி உள்ளார். ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த டேங்கர் வாகனத்தைச் சுற்றி 17 குழாய்கள் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் குடங்களை மேடையில் வைத்து குழாய் மூலம் தண்ணீர் பெறலாம். இந்த அமைப்பில் ஒரே நேரத்தில் 17 பேர் துளி நீர் கூட சிந்தாமல், வீணாக்காமல் குடிநீர் பெறலாம்.

தற்போது சென்னை எட்டாவது மண்டலத்தில், 116வது வட்டத்தில் உள்ள சாய் நகர் (பக்ஸ் சாலை) பகுதிக்கு சென்னை குடிநீர் வாரியம் தினமும் ஆறு ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு லாரி நடைகள் மூலம் குடிநீர் வழங்கி வருகிறது. இப்பணியை தற்போது சத்ய சாய் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தில் இருந்து குடிநீரை பெற்று ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த வாகனம் மூலம் 116வது வார்டு பகுதியில் சாய் நகர் பகுதிக்கு நான்கு நடைகள் இலவசமாக வழங்க உள்ளது. இதனால், சாய் நகர் பகுதியில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் 200 குடும்பங்கள் பயன்பெறும். இந்த வாகனத்தின் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் இந்த வாகனத்தில் இருந்து குடத்தில் தண்ணீர் பிடித்தார். நிகழ்ச்சியின் போது, தலைமைச் செயலர் திரிபாதி, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் தீனபந்து ஆகியோர் உடனிருந்தனர்.சத்ய சாய் அறக்கட்டளையைச் சேர்ந்த சீனிவாசன், ரமணி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Friday, October 26, 2007

மகள் தந்தைக்காற்றும் உதவி ?

தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஓடிப்போய் திருமணம் செய்த பரபரப்பு ஆங்கில/தெலுங்கு மீடியாக்களில் பரபரக்க, தமிழ் வலைப்பதிவு உலகில் இதன் தாக்கத்தைக் காணோமே ?

ஒரு பெரிய மெகாஸ்டார் என்ற விதத்தைவிட ஒரு தந்தையாக அவர் மனம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். பெற்று வளர்த்த பெற்றோருக்குத் தெரியாதா தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பாக வாழ்க்கை அமைக்க ? அல்லது அப்படியே காதல் திருமணம் செய்ய விரும்பினாலும், பெற்றோரின் சம்மதத்தைப் பெறும் வகையில் நடந்து கொஞ்ச காலம் காத்திருந்து அவர்கள் சம்மதத்தையும் பெற்று செய்திருக்கலாமே ?

அப்படியென்ன ஓடிப்போய் திருமணம் செய்து பெற்றோர் பெயரை சந்தி சிரிக்க வைப்பது ?
மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து வந்து கஷ்டப்பட்டு முன்னேறிய - 30 வருடங்கள் உழைத்து புகழை ஈட்டிய ஒருவரது நிலையை ஒரே நாளில் சுக்குநூறாக்கி இந்தியா/உலகு முழுவதும் குடும்பத்திற்கு கெட்ட பெயர் விளைவித்து அப்படியென்ன ஒரு காதல் கத்தரிக்காய் !

ஓடிப்போதல் என்னும் இந்த கான்செப்ட் தமிழ் சூழலில் பல்லாண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும், இந்த மாதிரி கதைகள் கொண்ட தமிழ் சினிமாக்களை பார்த்து, வெற்றிப்படமாக்கும் தமிழர்கள் - தங்கள் வீட்டில் / சுற்றத்தில் இதுபோல் ஒரு சம்பவம் நடந்தால் எப்படிப் பார்க்கின்றனர்.

என்னதான் 21ஆம் நூற்றாண்டு, சமூக மாற்றங்கள் எனப் பேசினாலும், வீடு/சுற்றத்தில் இது போல நடந்தால் எத்தனை பேருக்கு இதனை ஏற்க மனம் வரும். அல்லது பெற்றோருக்கு அடங்க மறுக்கும் பெண்கள் அதிகமாகிவிட்டார்களா ?

மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு எமது ஆறுதல்கள். நீரும் உமது குடும்பத்தாரும் மீண்டும் சகஜ நிலைக்கு வர எமது பிரார்த்தனைகள்.

Sunday, October 21, 2007

டில்லியில் ராம்லீலா - சோனியா ஆரத்தி

ராவணன் ஒழிக்கப்பட்டதன் நினைவாக இந்த ராம் லீலா விழா கொண்டாடப்படுகிறது. ராவணனின் பிரமாண்ட உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகள் பிரியங்கா மற்றும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரும் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர்




செய்தி / படம்: நன்றி: தினமலர்

புதுடில்லி : தசரா பண்டிகையின் நிறைவு நாளையொட்டி, ராம் லீலா நிகழ்ச்சி நேற்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தசரா பண்டிகையின் நிறைவு விழா, நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ராம் லீலாவாக கொண்டாடப்பட்டது. ராவணன் ஒழிக்கப்பட்டதன் நினைவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதனால், தீமை ஒழிந்து நன்மை பிறக்கும் விழாவாக இதை மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

தலைநகர் டில்லி மற்றும் கோல்கட்டாவில் கொண்டாட்டம் "களை' கட்டியது. டில்லி ராம் லீலா மைதானத்தில் இந்நிகழ்ச்சி, நேற்று மாலை வெகு விமரிசையாக துவங்கியது. ராவணனின் பிரமாண்ட உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது.

விதவிதமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. ராமரின் வாழ்க்கையை விவரிக்கும் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராம் லீலா நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகள் பிரியங்கா மற்றும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரும் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர். ராம் லீலா நிகழ்ச்சியை முன்னிட்டு, டில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Wednesday, October 17, 2007

ரூ.642 கோடிக்கு நிலம் கைமாறல் - சென்னையில்

நேற்று விருது வாங்கிய ரஜினி இதைக் குறிப்பிட்டுதான் சொன்னாரா என தெரியவில்லை. சென்னையிலேயே (ஏன் தென்னிந்தியாவிலேயே) மிக அதிக விலைக்குப்போன ஒரு ரியல் எஸ்டேட் டீல் பற்றிய செய்தி.

சென்னை போட் க்ளப் / சேமியர்ஸ் சாலையில் இருக்கும் தங்கள் இடத்தை சென்னை ஆர்ச்டையோசீஸ் நிதெஷ் ஷெட்டியின் நிறுவனத்திற்கு ரூ.642 கோடிக்கு விற்றுள்ளனர். (66 வருட லீஸ்)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ரஜினி சொன்னது"பிள்ளைங்க அடையாறு போட்க்ளப்புல நிலமா வாங்கி தரச்சொன்னாங்க.. தாடிய எடுத்துட்டு மீசைக்கும், தலைக்கும் டை (சாயம்) அடிச்சுட்டு வந்தாத் தான் இந்த நிகழ்ச்சிக்கு வருவேன்னாங்க"
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ரஜினியாலேயே போட் கிளப் பகுதியில் நிலம் வாங்குவது குதிரைக்கொம்பு எனப் படுகையில் நிதேஷ் ஷெட்டி குருப் (இது பெங்களூர் குருப்) வாங்கியுள்ளது என்றால் பின்னணியில் யார் யார் உள்ளனரோ ?

642 கோடி (ரிஜிஸ்ட்ரேஷன் தவிர)என்றால் இன்னும் கட்டிடம் கட்டும் செலவு. இங்கு என்ன வரும்.. வெறென்ன மால் மற்றும் கடை, கண்ணி (கன்னிகளும் தான்), மல்டிப்ளெக்ஸ், காசு கொழிக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் தான்.

செய்தி / நன்றி: த எகனாமிக் டைம்ஸ் / சென்னை மெட்ரொ ப்ளொக்கர்ஸ்.

Nitesh estates has pipped heavyweights such as Unitech, DLF and HDFC Realty with a Rs 642-crore offer to bag a church property in the heart of Chennai city.

The deal gives the Bangalore-based real estate and construction player — managed by the 31-year-old Nitesh Shetty — access to a nine-acre plot just off the city’s high-profile Boat Club area.

At Rs 642 crore excluding registration, the transaction is the costliest land deal in south India and jostles for a place among the biggest deals nationally. The Chennai archdiocese had put the land parcel on Chamiers Road on a 66-year lease and called bid for the same, with some 30 expressions of interest coming in the initial round itself.

The just-concluded transaction could well be the fifth-largest land deal in India after Adani’s Rs 2,250-crore pact with HDIL, DLF’s Rs 1,675-crore acquisition of DCM Shriram property in Delhi, Unitech’s Rs 1,586-crore purchase in Noida and DLF’s Rs 702-crore acquisition of National Textile Mills’ land in Mumbai. Earlier this year, hospitality major Leela Group purchased a three-acre plot at Chanakyapuri in Delhi for Rs 635 crore.

The Chennai deal follows Citigroup’s $250-million investment into Nitesh Estates, as reported by ET last week. When contacted, a Chennai archdiocese representative declined to comment. Hugh Britto, senior vice-president, business development, at Nitesh Estates offered no comments. The deal size could well be in excess of Rs 700 crore, including registration value.

Sources said realty bigwigs like Sobha Developers and RMZ were in the fray. Unitech had tied up with local player Arihant for the bid. Unconfirmed bids suggested interest from corporate giants like Reliance Retail and ITC. It is believed that Nitesh could look at developing over one million sq ft of mixed use development on plot. The nearly a decade-old Nitesh group is in the midst of an expansion acorss key cities. It is also planning a foray into the hospitality industry and has plans to set up at least five luxury hotels.

Last year, Nitesh inked a definite deal to bring Ritz Carlton to India with the first property in Bangalore. While Nitesh is not the exclusive partner to Ritz Carlton in India, it could well be the preferred party for future expansion, sources said. The Ritz Carlton arrangement as well as an earlier investment by the $26-billion global hedge fund Och-Ziff have catapulted Nitesh into national limelight in recent times. Citigroup’s $250 million infusion was the biggest by the global financial powerhouse in the domestic realty sector.

Monday, October 15, 2007

ஜெ. மறு பரிசீலனைக்குத் தயாராக வேண்டும்

நான் நினைத்தேன். இந்த வார குமுதத்தில் சாவித்திரி கண்ணன் எழுதிவிட்டார்.

என்னைக் கேட்டால் பேசாமல் அதிமுகவினர் விஜய்காந்தை தலைவராக்கிவிடலாம். எம்.ஜி.ஆரின் வழி என்றும் சொல்லிக் கொள்ளலாம். திமுக எதிர்ப்பிலும் வீரியம் இருக்கும். மக்கள் ஆதரவும் இருக்கும். ஞாநி ஏன் இதைப் பற்றி எழுதல ? :-)

செய்தி / நன்றி: குமுதம்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஜெ. மறு பரிசீலனைக்குத் தயாராக வேண்டும் - சாவித்திரி கண்ணன்

தமிழகத்தின் பிரதான கட்சிகள் இரண்டில் ஒன்று அ.தி.மு.க. இன்று அது பலமான ஒரு எதிர்க்கட்சி. ஆனால் அந்த எதிர்க்கட்சிப் பாத்திரம் இன்று அதனிடமிருந்து பறி போய்விட்டது... என்று எண்ண வேண்டியுள்ளது.

பல நேரங்களில் ஜெயலலிதா எங்கேயிருக்கிறார்? என்ன செய்கிறார்...? தங்களை பாதிக்கும் சில பிரச்னைகளில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? என்பவை மக்களுக்கு அறிந்துகொள்ள முடியாத ரகசியமாக இருக்கிறது.

சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் சில இந்து இயக்கங்கள் நீதிமன்றம் சென்றபிறகு அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் அதிரடியாக களத்தில் இறங்கினர். உச்சநீதிமன்றம் சென்று பந்துக்கு தடை பெற்றனர்.

கருணாநிதி பந்த் நடத்தவில்லை என்று பணிவாகப் பின்வாங்கி, உண்ணாவிரதம், பந்த் என இரண்டையும் ஒரு சேர நடத்திவிட்டார். திங்கட்கிழமை நடந்து முடிந்த இந்தச் சம்பவத்திற்கு சனிக்கிழமை விலாவாரியாக அறிக்கை தருகிறார் ஜெயலலிதா.

இத்தனை தாமதம் ஏன்? தமிழகமக்களுக்கு ஜெயலலிதாவிடமிருந்து விடை கிடைக்காத கேள்வி களில் இதுவும் ஒன்று.

இதில் மட்டும் என்றில்லை, இந்த ஆண்டு இந்த ஆட்சியில் மக்கள் சந்தித்த மாநகராட்சிக்கு நடந்த மறுதேர்தல், குளறுபடியான கூட்டுறவு தேர்தல், சேலம் கோட்டம், முல்லைப்பெயரியாறு விவகாரம், பாலாறு பிரச்சினை, தூத்துக்குடி டைட்டானியம் ஆலை பிரச்னை...என எல்லாவற்றிலுமே அவர் மிக காலதாமதமாகவே தமது கருத்துக்களை பிரசவித்தார்.

சென்னை மாநகராட்சித் தேர்தலிலும், கூட்டுறவு தேர்தல்களிலும் அ.தி.மு.க. அங்கத்தினர்கள் பங்கேற்காமல் தவிர்த்தது அக்கட்சியை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி யுள்ளது. இது ஜனநாயக அமைப்பில் சந்திக்க வேண்டிய சவால்களிலிருந்து ஓடி ஒளிவதற்கு ஒப்பாகும்.

இதுவரை தமிழக அரசியலில் தி.மு.க. மற்றும் கருணாநிதி மீதான அதிருப்தியே ஜெயலலிதாவிற்கு அதிர்ஷ்டமாக கைகொடுத்துள்ளது. ஆனால் இன்று, ‘கருணாநிதியை விட் டால் ஜெயலலிதாதான்’ என்ற நிலைமை அடுத்த தேர்தல் வருவதற்குள்ளாகவே அடியோடு மாறிவிடக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன. விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் விஜயகாந்தும், சலசலப்பேற்படுத்திக் கொண்டிருக்கும் சரக்குமாரும் மாற்றுக்கட்சிகளையெல்லாம் தங்கள் அணுகுமுறையில் மாற்றம் செய்து கொள்ள நிர்பந்தித்துள்ளனர்.

ஒரு அரசியல் தலைவர் என்பவர் அணுகுவதற்கு எளிதானவராக இருக்க வேண்டும். அவரது கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களாலே கூட அவரை அணுகுவது சுலபமில்லை. கூட்டணிகட்சித் தலைவர்களுக்கம் எளிதில் சாத்தியமில்லை.

உள்ளாட்சித் தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட இடங்களில் கூட போட்டியிட வழியில்லாமல் அ.தி.மு.க.வினரால் தடுக்கப்பட்டனர் விடுதலைச் சிறுத்தைகள். மூன்று நாள் முயற்சி எடுத்தும் கூட்டணிக் கட்சித் தலைவியிடம் புகார் செய்யக்கூட வகையின்றி புறக்கணிக்கப்பட்டார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். எனவே திசைமாறி பறந்துவிட்டார். சமீபத்தில் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான அத்வானி, அ.தி.மு.க. தலைவரை சந்தித்துப் பேச ஆசைப்பட்டார். அனுமதி மறுக்கப்பட்டது.

அகில இந்திய அளவில் மூன்றாம் அணி அமைத்தார் ஜெயலலிதா. அந்த மூன்றாம் அணித்தலைவர்களில் சிலரும் இப்படிப்பட்ட மூக்கறுப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது என பகிரங்கமாக அறிக்கை தந்தனர்.

அறிக்கைகளின் மூலம் மட் டுமே அறியப்படுபவராக ஒரு கட்சித்தலைவர் இருந்தால் அவர் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ளார் என்பதே அர்த்தம்!.

அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு தி.மு.க.வும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு அதி.மு.க.வும் அழியாமல் தொடர்கிறதென்றால் அதற்கு அவர்கள் கட்சியை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்ததுதான் காரணம். நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், என்.வி.நடராஜன், சி.பி.சிற்றரசு, அன்பழகன், கருணாநிதி என்ற அடுத்த கட்டத் தலைவர்களைஅண்ணா அரவணைத்து தயார் செய்யா விட்டால் தி.மு.க. என்ற இயக்கம் அவரோடு தீர்ந்துபோயிருக்கும். அதே போல எம்.ஜி.ஆரும் எண்ணற்ற இரண்டாம் கட்டத் தலைவர்களை எழுச்சியோடு உருவாக்கினார்.

ஆனால் எம்.ஜி.ஆருக்குப்பிறகு அ.தி.மு.க.விற்கு தலைமை தாங்கிய ஜெயலலிதா அந்த இயக்கத்தை அடிமைகளின் கூடாரமாக வைத்திருக்கவே ஆசைப்படுகிறார். எம்.ஜி.ஆர். கட்சியையே குடும்பமாக பாவித்தார். ஜெயலலிதாவோ தன் தோழியின் குடும்பத்திற்கே இன்று கட்சியை அர்ப்பணித்துவிட்டார்.

கடந்த இருபதாண்டுகளில் அ.தி.மு.க. இழந்து வந்த தலைவர்கள் மற்றும் தளபதிகளின் பட்டியல் வெகு நீளமானது. அடுத்தடுத்த கட்டங்களாக க.ராஜாராம், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், கோவைத் தம்பி, ஆர்.எம்.வீரப்பன், அரங்கநாயகம் போன்ற மூத்தத் தலைவர்கள் ஒதுக்கப்பட்டனர். இப்போதும் பொன்னையன் போன்ற பல திறமையாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவிற்கு தன் செல்வாக்கு மற்றும் திறமையில் மட்டுமே அதீத நம்பிக்கை இருக்கலாம். உண்மையில் அவரது தன்நம்பிக்கைதான் அவருடைய பலம். அதுவே பலவீனமும் கூட! நினைத்ததை பேசும் மனோதிடம் உள்ளவர்தான்! சினிமாவில் வேஷமிட்டவர்தான் எனினும் நிஜத்தில் வேஷத்தை விரும்பாதவர். அவருக்கு எதிரி என்றால் எதிரிதான்! எதிரியிடம் நண்பனாக நடிக்கும் அரசியல் அவரால் முடியாது. இந்து மதத்தில் அவருக்கு மரியாதை உண்டு. கடவுள் நம்பிக்கையையும் எதற்காகவும் ஒளித்துக் கொண்ட தில்லை ஜெயலலிதா. ஆனால் ஒட்டு வங்கிக்காக மதவெறி அரசியலை கையியெலடுக்க விரும்பாதவர். இப்படி சில சிறப்புகள் அவருக்கு இருந்தாலும் வரலாற்றில் எந்த தனிப்பட்ட தலைவர் ஒருவரின் வெற்றிக்கும் அவர் தன்னைச் சார்ந்து வருபவர்களின் உழைப் பையும், திறமைகளையும் சாத்தியப்படுத்திக்கொண்டதே காரணமாயிருந்துள்ளது. ஜெயலலிதா தன்னையும், இயக்கச் செயல்பாடுகளையும் மறுபரிசீலினைக்கு உட்படுத்தியே ஆகவேண்டும். இல்லையெனில் அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் உள்ள செல்வாக்கு மக்களின் பரிசீலனைக்கு உட்பட்டே தீரும்..

Thursday, October 11, 2007

படம் - நெற்றியில் பொட்டில்லா கனிமொழி

அண்ணன் வழியில் தங்கையும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு. என்ன - எப்போதும் நெற்றியில் பொட்டுடன் வரும் கனிமொழி, இதற்கு மாத்திரம் பொட்டிடாமல் வந்து அவரும் அரசியலில் பால பாடம் கற்றுவிட்டார்.

பொட்டு இடுவது இடாதது அவரின் சொந்த விருப்பம். நீ யார் அதைக் கேட்க என சொல்ல வருவீர்களனால் - இங்கேயே ஜகா வாங்கிற்றேன். இதுவரை எத்தனை பொது நிகழ்ச்சிகளில் அவர் பொட்டுடன் வந்துள்ளார். எத்தனை நிகழ்ச்சிகளில் பொட்டில்லாமல் வந்துள்ளார் என ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற வாழ்த்துக்கள்.

செய்தி, படம் / நன்றி: தினமலர்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


சென்னை: ""சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கிடைக்க போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது,'' என்று கனிமொழி பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மகளிர் அணி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. மகளிர் அணி மாநில செயலர் பாத்திமா முசாபர் தலைமை வகித்தார். ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 200 ஏழை பெண்களுக்கு இலவச புடவைகள், 20 ஏழைகளுக்கு தையல் மிஷின்கள், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை ஆகியவற்றை ராஜ்யசபா எம்.பி., கனிமொழி வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: மத நம்பிக்கை இல்லாத என்னை இந்த விழாவிற்கு ஏன் அழைத்தார்கள் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. மத நம்பிக்கை என்பது எல்லாரையும் ஒன்றாக இணைக்கும் விஷயம். மனித நேயத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பெண்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். எந்த மதமும் மக்கள் நலனுக்காகதான் உள்ளது. மக்களை மேன்மை படுத்துகிறது. மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தருகிறது. மக்களை அடக்கி, ஒடுக்கி வைக்க மதம் உருவாகவில்லை என்பதை அடிப்படையில் புரிந்துக் கொள்ள வேண்டும். மதத்தின் பெயரால் பல நன்மையான காரியம் செய்யப்படுகிறது. ஒரு முன்னேற்ற பாதையில் செல்லும் போது அதை தடுப்பதற்காக மதகோட்பாடு பூதாகரமாக எழுகிறது. இந்த தருணத்தில் சுய பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. முதல்வர், சிறுபான்மை மக்கள் மீது அக்கறை கொண்டவர். தமிழக அரசும் சிறுபான்மை மக்களுக்கு அரணாக உள்ளது. அதன் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் கிடைக்க போராட வேண்டிய அவசியம் உள்ளது.

போர் குணமிக்கவர்கள் பெண்கள்:சச்சார் கமிட்டி அறிக்கையை பார்க்கும் போது மனம் பதறுகிறது. பல கேள்விகள் எழுகிறது. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு சமூகம் பின் தங்கியே இருக்கிறது என்பது வேதனையை தருகிறது. பெண்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைக்காக போராடுபவர்கள். எந்த மதமும், இயக்கமும் பெண்களை அடக்கி ஒடுக்கி வைக்க நினைப்பதில்லை. பெண்கள் முன்னேற வேண்டும் என்ற அக்கறையில் தான் செயல்படுகிறது. நமது சமூகத்தில் பெண்கள் அடக்கி வைக்கப்படுகின்றனர். அதனால், அவர்கள் போராட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெண்கள் போர் குணமிக்கவர்கள்; தைரியமிக்கவர்கள். இதையெல்லாம் மறந்து விட்டு பெண்கள் வாழ நினைப்பதில் அர்த்தமில்லை. ஆண்கள் அடக்கியாள வேண்டும். பெண்கள் அடங்கி போக வேண்டும் என்று உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்காதீர்கள். அப்படி சொன்னால் இப்படி தான் வாழ வேண்டும் என்ற சிறிய வட்டத்திற்குள் அவர்கள் வாழ கற்றுக் கொள்வார்கள். இதனால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கும். இவ்வாறு கனிமொழி பேசினார்.

அந்துமணியின் அப்பாவுக்கு விருது

அந்துமணி ரமேஷின் அப்பா - திரு டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி விருது பெற்ற விபரம் - இன்றைய தினமலரில் - படத்தில் இடமிருந்து மூன்றாம் இடத்தில்.

செய்தி-படம் / நன்றி: தினமலர்

அந்துமணிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என கேட்க வேண்டாம். எல்லாம் சும்மா பதிவு விளம்பரம் தான் :-)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


பத்திரிகையாளர்களை பாராட்டுவதே இல்லை

சென்னை :"பத்திரிகையாளர்கள் எவ்வளவு பணி செய்தாலும் இந்த சமுதாயம் அவர்களை பாராட்டுவதில்லை' என "தினமலர்' நாளிதழின் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

சென்னை புரோபஸ் கிளப் மற்றும் ரஷ்ய கலாசார மற்றும் அறிவியல் மையத்தின் சார்பில் சர்வதேச முதியோர் தினம் மற்றும் ரஷ்ய கலாசார மற்றும் அறிவியல் மையத்தின் 35வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் புரோபஸ் சிறப்பு விருது, "தினமலர்' நாளிதழின் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது. விருதினை முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல் வழங்கினார்.

கலை தம்பதியினர் மனோகர் மற்றும் மகிமாவுக்கும் புரோபஸ் சிறப்பு விருது வழங்கப்பட்டது. புரோபஸ் அங்கீகார விருது பாலசுப்ரமணியத்திற்கு வழங்கப்பட்டது."புரோபஸ் வே ஆப் சக்சஸ்புல் ஏஜிங்' நுõலினை வைத்தீஸ்வரன் வெளியிட முதல் பிரதியை முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல் பெற்றுக் கொண்டார். "புரோபஸ் வழங்கும் அருசுவை விருந்து' நுõலினை ஸ்டேப் பாங்க் ஆப் இந்தியா உதவி பொதுமேலாளர் வசுதா சுந்தரராஜன் வெளியிட முதல் பிரதியை இன்னர் வீல்ஸ் கிளப்பின் துணை தலைவர் நந்தினி பெற்றுக் கொண்டார். விழாவில் 75 வயதான சென்னை புரோபஸ் கிளப் உறுப்பினர்களும், 50 வருட திருமண வாழ்க்கையை நிறைவு செய்த தம்பதிகளும் கவுரவிக்கப்பட்டனர். புரோபஸ் கிளப்பால் நடத்தப்பட்ட செஸ் போட்டி மற்றும் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் "தினமலர்' நாளிதழின் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

என் வாழ்நாளில் இது ஒரு மறக்க முடியாத நாள். சென்னையில் கற்றவர்களும், பல துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களும் கூடி ஒரு பரிசை வழங்குவது அளவில்லா மகிழ்ச்சியளிக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், எனது சங்க கால நாணய ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் கொடுத்தது. அதே போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக பத்திரிகையாளர்களுக்கு நண்பர்களே கிடையாது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்களை கண்டால் வெறுப்பார்கள். அதனால் அவர்கள் வெறுப்பிற்கு ஆளாக வேண்டாம் என கருதி கூடுமானவரை ஒதுங்கியே இருப்பது வழக்கம்.பத்திரிகையாளர்கள் எவ்வளவு பணி செய்தாலும் இந்த சமுதாயம் அவர்களை பாராட்டாதது பெரிய குறை. ஒவ்வொரு பிரச்னையும் பத்திரிகையில் எழுதினால் தான் அதற்கு ஒரு முடிவு வருகிறது.

உதாரணமாக, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மாம்பலம் பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது என்றால், பத்திரிகையில் கலர் படத்துடன் செய்தி வெளியிட்டால் தான் நடவடிக்கை எடுக்கிறார்கள். இது பத்திரிகையின் முக்கியமான பணி. இந்தப் பணியை வேறு யாரும் செய்வதில்லை. தினசரி இதுபோன்ற பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். இந்த பணிக்கு 25 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களை அழைத்து பாராட்டு பத்திரம் கொடுத்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.இவ்வாறு டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல் :

முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல் பேசுகையில், "சாதனைகளை பாராட்டும் புரோபஸ் கிளப்பின் தன்மையை பாராட்டுகிறேன். மனிதர்களின் சாதனைகளை கொண்டாடுவதன் மூலமாக ஆக்கப்பூர்வமான சக்தியை உருவாக்குகிறோம். நாமும் சந்தோஷமாக இருந்து, மற்றவர்களுக்கு சந்தோஷத்தை வழங்கினால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். துடிதுடிப்புடன் இருக்கும் வரை நாம் வயதானவர்களாக ஆவதில்லை' என்றார்.ரஷ்ய கலாசார மற்றும் அறிவியல் மையத்தின் இயக்குனர் ஸ்டானிஸ்லேவ் சிமகோவ் சிறப்புரையாற்றினார். புரோபஸ் கிளப்பின் தலைவர் பாலாம்பாள் வரவேற்றார். செயலர் ஆதிமூலம் நன்றி கூறினார்.

Wednesday, October 10, 2007

ரொட்டி உணவும் - கெட்டி வாழ்வும் - கி.வீரமணி

தமிழர் தலைவர் (?) கி.வீரமணி எல்லோரையும் ரொட்டி (பிரட்) சாப்பிடச் சொல்லியுள்ளார். வாரத்தில் சில நாட்கள் அரிசி உணவைத் தவிர்த்து பிரட் சார்ந்த உணவு (சாண்விச், பர்கர் போன்றவை) சாப்பிட்டால் எல்லோரும் நலமாக வாழலாம் என்கிறார்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் புரா திட்டத்தை அமுல்படுத்துவது இருக்கட்டும். ஏற்கனவே நாட்டில் கோதுமை தட்டுப்பாடு என வீணாய்ப் போன கோதுமையை இறக்குமதி செய்து பலரும் வாங்கிக் கட்டிகொண்டிருக்கையில் தமிழர்கள் அரிசி உணவைக் குறைத்தால் இன்னும் என்னென்ன நிலைமை வரும் ?

தமிழர்தம் உணவான இட்லிவடைக்கும் சாம்பார் வடைக்கும் இப்படியுமொரு threatஆ :-)

பதியுங்கள் உங்கள் கருத்துகளை.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

செய்தி / நன்றி : விடுதலை

ரொட்டி உணவும் - கெட்டி வாழ்வும்!

இன்று (அக்டோபர் 8) உலக ரொட்டி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டில் உள்ள 365 நாள்களும் ஒவ்வொரு நாளில் ஒரு குறிப்பிட்ட பொருளை மய்யப்படுத்தி உலக நாள்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது!

பொதுவாக உணவு நாள் என்று அழைக்காமல், ரொட்டியை மய்யப்படுத்தி இப்படி ஒரு நாளா என்று சிலருக்குக் கேட்கத் தோன்றும்.

அரிசியையே முக்கிய உண்ணும் உணவுப் பொருளாகக் கருதுபவர்களைவிட உலகில் ரொட்டியை முக்கிய உணவாக (ளுவயயீடந குடிடின) உண்ணும் மக்கள் பல கோடிக் கணக்கில் உள்ளனர்.
ரொட்டியை உணவாகக் கொண்ட பழக்கம் இருந்த காரணத்தால்தான் 2000 ஆண்டுகளுக்கு முன் கிறித்தவர்கள் அவர்தம் கடவுளை வேண்டும் பிரார்த்தனையில்கூட, `இன்றைக்குத் தேவைப்படும் ரொட்டியை எங்களுக்குத் தாரும் பிதாவே என்று ரொட்டியைத்தான் கேட்டார்கள்! (அதிலே கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய செய்தி, ரொட்டியை அன்றாடம் தரச் சொல்லிக் கேட்கிறார்கள்; ஒட்டுமொத்தமாக சேமித்து இப்போது குளிர்பதன பெட்டியில் அல்லவா அடைத்து வைத்து) உண்டு, மகிழ்கின்றனர்!

பிரெஞ்சுப் புரட்சி வரலாற்று லூயி மன்னன் மனைவி மேரி அன்டாயினெனட் என்பவர் மக்கள் ரொட்டி கிடைக்கவில்லையே என்று பஞ்சத்தில் வாடியபோது, ``அவர்களை கேக் சாப்பிடச் சொல்லுங்கள் என்ற பொறுப்பற்ற விசித்திரமான அறிவுரை கூறிய சம்பவங்கள் வரலாற்றில் ஏராளம் உண்டு!

`கால் வயிற்றுக் கஞ்சி என்பது நம் நாட்டில் நாம் பயன்படுத்தும் சொல்லாட்சி. ஆனால், மேலைநாடுகளில், `ஒரு சிறு ரொட்டித் துண்டுக்கும் வழி இல்லை என்பது அவர்களின் சொல் வழக்கு; காரணம் அவர்களது உணவு ரொட்டிதான்!

இந்த ரொட்டியைத் தயாரிப்பதில்கூட ஒவ்வொரு வகையிலும் புத்தம் புது முறைகளைக் கையாண்டு, விதவிதமாகத் தயாரித்து நுகர்வோரை ஈர்க்கின்றனர்!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் முதல் முறையாக 1980 களில் சென்றபோது, அங்கு பெரிய பேரங்காடிகளில் ரொட்டி வாங்கிச் செல்வோரைக் கண்டு நானும், எனது நண்பர்களும் பெரிதும் ஆச்சரியப்பட்டுப் போனோம்! காரணம், ஒவ்வொருவர் கையிலும் ஒரு கைத்தடி போல் இரண்டு மடங்கு நீளமுள்ள ரொட்டியை வாங்கி லாவகமாகத் தூக்கிச் செல்கின்றனர். நாம் அரிசி வாங்கி சமைப்பதற்கு எடுத்துச் செல்வதுபோல அங்கே அவர்கள் அந்த நீண்ட ரொட்டியை வாங்கிக் கொண்டு சமையல் அறைப் பகுதியில் அப்படி மாட்டிவிட்டு ஒவ்வொரு வேளைக்கும், ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப வெட்டியெடுத்து, அதனுடன் உருளைக்கிழங்கை (குசநஉ குசநைள) தட்டு நிறைய வைத்துக்கொண்டு சாப்பிட்டுப் பசியாறுகின்றனர்! (`உருளைக்கிழங்கு வாய்வு என்றெல்லாம் கதை பேசுவது இல்லை!)

நமக்குக்கூட இந்த ரொட்டி உணவு ஒருவேளையாவது எடுத்துக்கொள்ளும் பழக்கம் வந்தால் மிகவும் நல்லது!

சிறுசிறு வகையில் பசி போக்கிட சான்ட்விச் (ளுயனேறஉ) என்பதை இப்போது இரண்டு துண்டு ரொட்டி (ளுடஉந) அதனுள் கோழி இறைச்சியோ, மாட்டு இறைச்சியோ அல்லது காய்கறிகள் மட்டும் சாப்பிடுவோர் அந்த சிறு `சான்ட் விச்சுக்குள் தக்காளி, வெள்ளரிப் பிஞ்சு இவற்றை இடையில் வைத்து சாப்பிடும் பழக்கம் இப்போது அலுவலகப் பணியாளர்கள், அவசரப் பணியாளர்கள் மத்தியில் அதிகம் பரவிக் கொண்டுள்ளது!

ரொட்டியில் பல வகையில் தயாரித்து, ஒரே வகையில் அனுதினமும் சாப்பிட்டால் அலுத்துப் போகும் என்பதால், `ரொட்டிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று பரவசப்பட்டுப் பாடும் வகையில் தயாரிக்கின்றனர்.

சிங்கப்பூரில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முதியவர்கள் கூட்டாகச் சேர்ந்து ரொட்டி தயாரிக்கத் தொடங்கி, இன்று அங்கே அவர்களால் தயாரிக்கப்படும் ரொட்டி மிகப்பெரிய வரவேற்புக்கு ஆளாகியுள்ளது!

வல்லத்தில் உள்ள நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பெரிதும் கிராமத்துப் பெண்களைக் கொண்டது - இந்த ரொட்டி தயாரிக்கும் தொழிலை நன்கு கற்றுக் கொண்டு, அவரவர் ஊருக்குச் சென்று, வங்கிகளில் கடன் பெற்று ரொட்டி தயாரித்து எளிய விலைக்கு - குறைந்த லாபத்துடன் வருவாயைப் பெற்று வசதியாக வாழ்வதைப் பார்த்து மகிழ்ச்சியடையலாம்!

`இனி ஒரு விதி செய்வோம்; அதை எந்த நாளும் காப்போம் வாரத்திற்கு குறைந்தபட்சம் 2 நாள்களுக்காவது ரொட்டி உணவை உண்போம்; அரிசிக்கு சற்று விடுமுறை அளிப்போம். அதன்மூலம் சர்க்கரை வியாதி ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்போம்.
இதனால் மகளிருக்குக் கூட இந்த சமையலறைப் பாரம் கொஞ்சம் குறையும் வாய்ப்பு ஏற்படக் கூடும்!


இட்லி தயாரிப்புக்கு எடுக்கும் நேரம், நினைப்பு, உழைப்பு இவற்றைவிட கடையிலிருந்து நல்ல ரொட்டியை வாங்கிக்கொண்டு வந்து கூடி உண்டு மகிழலாமே!
`என்ன தொடங்கலாமா? `நாளைமுதல் என்று சொன்னால் நடைமுறைக்கு வராது; `இன்று முதல் என்று கூறி மாற்றத்தைத் தொடங்கி மகிழுங்கள்.

இல்லத்தரசிகளுக்கு சற்று ஓய்வு தர இதுவும் ஒருவகை உதவியே. அதிலும் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களுக்கு `ரொட்டி பெரிதும் கைகொடுக்குமே

Tuesday, October 9, 2007

முதல்வருக்கு வைகோ பதிலடி

சேது சமுத்திர திட்டம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி எழுப்பிய கேள்விகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதில் அளித்துள்ளார்.

யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தாமல், அதே நேரத்தில் பெரிய கப்பல்கள் போகும் வகையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் குறித்து முதலமைச்சர் கருணாநிதிக்கு சில கேள்விகளை விடுத்து, என் குற்றச்சாட்டை அவர் மறுத்து நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன் என்று செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் நான் பேசியதற்கு முதலமைச்சர் கருணாநிதி, என் குற்றச்சாட்டை மறுக்க முடியாமல் சாமர்த்தியமாக திசை திருப்பி ஒரு விளக்கத்தை அளித்து உள்ளார்.

என் கேள்வி இதுதான், அண்ணா மறைந்த பின்பு 69 முதல் 98 செப்டம்பர் வரை கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலங்களில் எந்தப் பிரதமரிடமாவது டெல்லியில் சேதுகால்வாய்த் திட்டம் தமிழ்நாட்டுக்குத் தேவை என்று எழுத்து மூலமாக வற்புறுத்தி நேரடியாகப் பேசி இருக்கிறாரா? 69ல், 71ல், 89ல், 96ல் நான்கு முறை முதல்வரானபோது இந்தத் திட்டத்தை வலியுறுத்தி எந்தப் பிரதமரிடமும் இவர் கோரிக்கை வைக்கவே இல்லை.
தமிழர்களின் நூற்றாண்டு காலக்கோரிக்கையான அண்ணாவின் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வற்புறுத்தினாரா? கிடையவே கிடையாது. தமிழ்நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமையை அவர் செய்யவே இல்லை என்பது தான் என் குற்றச்சாட்டு.

அப்படி அவர் இதற்காக வாதாடியதாக நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன்' என அறிவித்தேன். தமிழக முதல்வர் 7ம் தேதி அன்று விடுத்துள்ள அறிக்கையில், என் கேள்வியையே திரித்து, "சேதுத் திட்டத்துக்காக கருணாநிதி இதுவரை எந்தப் பிரதமரிடமாவது எழுத்து மூலமாக கோரிக்கை வைத்ததை நிரூபித்தால், நான் அரசியலைவிட்டே விலகிக் கொள்கிறேன்' என்று நான் பேசியதாகக் கூறி விளக்கம் அளித்து உள்ளார்.

2002, மே 8ம் தேதி, அவர் பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தையும், 2002, அக்டோபர் 15ல் எழுதிய கடிதத்தையும் சாட்சிக்கு அழைத்து உள்ளார். இதனால் ஒன்று தெளிவு ஆகிறது. என் குற்றச்சாட்டை அவரால் மறுக்க முடியவில்லை. அதனால்தான் 1998ல் பிரதமர் வாஜ்பாய் அறிவித்த திட்டம் குறித்து, நான்கு ஆண்டுகள் கழித்து 2002ல் அவர் கடிதம் எழுதியதைக் காட்டுகிறார்.

ஆனால் அவரிடம் அரசியல் பெருந்தன்மை அணு அளவும் கிடையாது என்பதால்தான் அவர் எழுதிய அந்தக் கடிதத்தில் கூட 98ஆம் ஆண்டு, செப்டம்பர் 15ல் திமுக நடத்திய அண்ணாபெரியார் பிறந்தநாள் விழாப் பேரணியில், சென்னைக் கடற்கரையில் பிரதமர் வாஜ்பாய் "சேதுக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும்' என்று உறுதி அளித்ததைக் குறிப்பிடவே இல்லை.

நான் எழுப்பிய இன்னொரு குற்றச்சாட்டுக்கும், கேள்விக்கும் முதல்வரிடம் பதிலே இல்லை. அதுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. 2004ல் அமைந்தபோது அதற்கான குறைந்தபட்ச செயல்திட்டத்தை மன்மோகன் சிங்கும், பிரணாப் முகர்ஜியும் தயாரித்த போது, நான் நேரடியாக அவர்களைச் சந்தித்து சேதுக்கால்வாய்த் திட்டத்தை அக்குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி எழுத்து மூலமாக கோரிக்கை விண்ணப்பம் தந்து, அதில் இடம்பெறச் செய்தேன். ஆனால் சேதுக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கருணாநிதி சொல்லவும் இல்லை, கோரிக்கை தரவும் இல்லை. இதுகுறித்து மன்மோகன் சிங்கிடம் பேசவும் இல்லை.

ஆனால் அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நாகூசாமல் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம், சேதுக்கால்வாய்த் திட்டத்தை வற்புறுத்தியதாக ஒரு பச்சைப் பொய்யைத் துணிந்து அவிழ்த்து விட்டார். அன்றுவரை அவர் எங்கும் பேசாத ஒன்று இது. அப்படி அவ்வாறு மன்மோகன் சிங் அரசிடம் வற்புறுத்தியதாக நிரூபித்தால், நான் பொதுவாழ்வை விட்டே விலகுகிறேன் என அறைகூவல் விடுத்து இருந்தேன். முதலமைச்சர்
கருணாநிதி தந்து உள்ள விளக்கங்களில் இதற்குப் பதிலே இல்லை.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல வளமான வர்ணனை வார்த்தைகளுக்கு இடையில் பொய்களைச் சொருகுவதில் ஈடு இணையற்ற வல்லவர் கருணாநிதி ஆவார். அதனால்தான் 2002 மே மாதம் 8ந் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தில் "நான் பல சமயங்களில் பொறுப்பில் இருந்த பல பிரதமர்களிடம் இதைக் குறித்து வலியுறுத்தி உள்ளேன்' என்று அப்பட்டமான ஐமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைப் பதித்து விட்டார்.

சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதில் துளி அளவும் கருணாநிதிக்கு அக்கறை இல்லை என்பதால்தான் 2001, பிப்ரவரி 1ம் தேதி, சென்னையில் எண்ணூர் துணைத் துறைமுகத்தை பிரதமர் வாஜ்பாய் தொடங்கி வைத்த விழாவில், பங்கு ஏற்றுப் பேசிய அன்றைய முதல்வர் கருணாநிதி, தனது உரையில் துறைமுகங்களைப் பற்றிப் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி வலியுறுத்தவும் இல்லை. அதுபற்றிக் குறிப்பிடவும் இல்லை.

இத்திட்டம் குறித்துப் பேச வேண்டிய பொருத்தமான இடம் என்பதையும் பிரதமரிடம் வற்புறுத்த வேண்டியது கடமை என்பதையும், திட்டமிட்டே நிராகரித்து விட்டார் என்பது தான் உண்மை. ஆனால் கருணாநிதி தன் கடமையை மறந்தாலும், சேதுக் கால்வாய்த் திட்டத்தை அங்கே நினைவுறுத்தத் தவறினாலும், வாஜ்பாய் தன்னுடைய உரையில், "தமிழக மக்களின் நீண்டநாள் கனவாக இருந்துவரும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தோம். அந்த உறுதியை நாங்கள் மறக்கவில்லை. நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று குறிப்பிட்டார்.

சேதுக் கால்வாய்த் திட்டம் எப்படியும் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும். எந்த மதத்தினரின் உள்ளத்தையும் புண்படுத்திப் பேசாமல், கருமமே கண்ணாகச் செயல் ஆற்றுவது தான் இந்த வேளையில் தேவையான அணுகுமுறை ஆகும். உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இத்திட்டம் குறித்து மாற்று வழியைப் பரிசீலிப்பதாகச் சொல்லி மூன்று மாத காலம் அவகாசம் பெற்று இருக்கிறது. மாற்று வழி என்ற யோசனையையும் புறக்கணிக்கவில்லை' என்று ஒரு கட்டத்தில் தமிழக முதல்வருக்கு கூறினார்.

அமைக்கப்படுகின்றன சேதுக்கால்வாய் 14 மீட்டர் முதல் 15 மீட்டர் ஆழத்துக்குக் குறையாமல் அமைந்தால் தான் பெரிய கப்பல்கள் அக்கால்வாயில் செல்ல முடியும். ஆனால் தற்போது அமைக்கப்படுகிற சேது சமுத்திரக் கால்வாய் 10 மீட்டர் முதல் 12 மீட்டர் வரைதான் ஆழப்படுத்தப்படுவதாகத் தெரிய வருகிறது.

அப்படியானால் 80,000 டன் முதல், ஒரு லட்சம் டன் எடை உள்ள கப்பல்கள், பன்னாட்டுக் கப்பல்கள் இக்கால்வாய் வழியாகச் செல்லவே முடியாது. 30,000 அல்லது அதிகபட்சம் 40,000 டன் எடை உள்ள சிறிய கப்பல்கள் மட்டுமே இக்கால்வாயில் செல்ல முடியும் என்பதால், எந்த நோக்கத்துக்காக சேதுக் கால்வாய்த் திட்டம் அமைக்கப்படுகிறதோ, அந்த நோக்கமே நிறைவேறாமல் போய்விடும்.

மீனவ மக்களின் கவலையையும், ஐயத்தையும் போக்கிடும் வகையில், தகுந்த விளக்கங்களைத் தருவதுடன், பெரிய கப்பல்கள் செல்லுகிற விதத்தில் சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றி தமிழகத்தின் பொருளாதாரத்துக்கு வளம் சேர்க்க வழி காண வேண்டும்.

Source / Nandri: Maalaisudar

Monday, October 8, 2007

மற்றுமோரு படம் - இப்போ ஸ்டாலின்

தேர்தல் இப்போது இல்லை என்பதால், இப்தார் நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வரவில்லை'' என்று, அமைச்சர் ஸ்டாலின் பேசினார். இப்தார் நிகழ்ச்சி ஸ்டாலின் பங்கேற்பு.

(((இன்னும் திமுக தலைவர் தான் பாக்கி. ஆக ஸ்டாலினும் தயாராகிவிட்டார்.)))


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


இப்தார் நிகழ்ச்சி ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: ""தேர்தல் இப்போது இல்லை என்பதால், இப்தார் நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வரவில்லை'' என்று, அமைச்சர் ஸ்டாலின் பேசினார். தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் திருப்பூர் அல்தாப் தலைமை வகித்தார்.

அமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் இப்தார் நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைக்கிறீர்கள். சிறப்பு விருந்தினராக நான் வரவில்லை. உங்களில் ஒருவனாக வந்துள்ளேன். சில தலைவர்களுக்கு தேர்தல் வந்தால் தான் இப்தார் நினைவுக்கு வரும். ஓட்டுகளை பெறுவதற்காக இப்தார் நிகழ்ச்சி நடத்துவர். பிரதான எதிர்க்கட்சித் தலைவரே முன்னின்று இப்தார் விருந்து நடத்துவதாக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை. தேர்தல் நடக்கவுள்ளது என்றால் அவர் வந்திருப்பார். இப்போது தேர்தல் இல்லை என்று தெரிந்ததும் அவர் வரவில்லை.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, மைதீன்கான், தமிழக அரசின் சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச்செயலர் சையது சத்தார், கவிஞர் சல்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்

செய்தி / படம் நன்றி: தினமலர்

ராமதாஸ், கார்த்தி சிதம்பரம்

விஜயகாந்த்

கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி

கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி..

தொடர்புடைய சுட்டிகள் - இங்கே மற்றும் இங்கே


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எடியூரப்பா முதல்வர், குமாரசாமி துணை முதல்வர்

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்றாலும் பதவி என்றால் எதற்கும் இறங்கி வருவார்கள் - எதுவும் நடக்கும் - இன்னும் 20 மாதங்களுக்கு நல்ல வசூல் இருதரப்பினருக்கும்.

இந்த செய்தி உண்மையா ?
பார்க்க ரீடிஃப்

எடியூரப்பா முதல்வர், குமாரசாமி துணை முதல்வர் ?

எடியூரப்பா முதல்வர், குமாரசாமி துணை முதல்வர்

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்றாலும் பதவி என்றால் எதற்கும் இறங்கி வருவார்கள் - எதுவும் நடக்கும் - இன்னும் 20 மாதங்களுக்கு நல்ல வசூல் இருதரப்பினருக்கும்.

இந்த செய்தி உண்மையா ?
பார்க்க ரீடிஃப்

Wednesday, October 3, 2007

இந்தி மொழி வளர்ச்சி : டி.ஆர்.பாலு பாராட்டு

"இந்தி மொழியை வளர்ப்பதற்கு உண்டான உறுதியான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்பது பாராட்டுக்குரியது' என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

கப்பல் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் போர்ட் பிளேர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு பேசியதாவது:

இந்தியாவின் தேசிய மொழியான இந்தியை வளர்ப்பதற்கு உண்டான உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதற்காக கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகளை பாராட்டுகிறேன். எனது அமைச்சகம் சார்ந்த அறிக்கைகள், கடிதங்கள், ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்து கடிதப் போக்குவரத்துகளுமே இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மூலம் தான் நடைபெறுகின்றன. ஆண்டுக்கு இருமுறை இந்தி மொழி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்தி மொழி ஷீல்டு திட்டம் மூலம் இந்தி தெரியாத அதிகாரிகளுக்கும் இந்தி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதற்காக இணைச் செயலர் அந்தஸ்து அதிகாரியை தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்தியை வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தி ஆலோசனைக் குழுவின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. இந்த குழுவின் சார்பில் அளிக்கப்படும் ஆலோசனைகள், பரிந்துரைகள் அனைத்தையும் அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கும்படி அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பாலு பேசினார்.

Source / Nandri : Dinamalar

Sunday, September 30, 2007

இந்தியில் பேசிய கருணாநிதி - சி.என்.என். ஐ.பி.என்

தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியில் பேசியதாக சி.என்.என். ஐ.பி.என் தெரிவிக்கிறது.
"இந்துஸ்தான் ஹை தேஷ் ஹமாரா, ஜான் சே ஹை ஹம்கோ பியாரா, ஹிந்தி(து?) முஸ்லீம், சீக் இசாயீ ஆபஸ் மேன் ஹை பாய் பாய்" என மேற்கோள் சொல்லி பேசியதாகவும் செய்தி.

முழு செய்திக்கும் சுட்டி இங்கே: நன்றி: சி.என்.என்.ஐபிஎன்.

Defying SC ban, MK pulls a 'fast' one; speaks Hindi

Sandhya Ravishankar / CNN-IBN

Published on Monday , October 01, 2007 at 08:17 in Nation section


“Hindustan hai desh hamara, jaan se hai humko pyaara, Hindi, Muslim Sikh Isaai, aapas mein hain bhai bhai” (India is our country and Hindus, Muslims, Sikhs and Christians are all brethren.)


That’s Tamil Nadu Chief Minister M Karunanidhi, pioneer of the state’s anti-Hindi agitation, speaking the language he campaigned against many years ago - all to prove that he is secular and his comments on Lord Ram were not meant to hurt Hindu sentiments.


The DMK patriarch has called for a voluntary hunger strike in Tamil Nadu to press for the speedy implementation of the controversial Sethusamudram project. In fact, he is ready to defy the Supreme Court ban on the bandh called by him.


“I respect people's decision more than any court's verdict,” he said, addressing a meeting of party workers in Chennai.


Karunanidhi on Sunday accused state Opposition leader and AIADMK chief J Jayalalithaa of hypocrisy, pointing out how her own election manifesto in 2006 had promised to implement the project.


Pushed into a corner, Congress too, finally, broke its silence.


"How will this benefit Tamil Nadu? Well, it will bring ports and industry. They're spending Rs 2,500 cr on it. Where will this money go? It'll all come back to the people of Tamil Nadu,” Congress State Secretary M Krishnaswamy said.


While Karunanidhi accused his opposition of using Ram politics with an eye on the possible mid-term polls, his own coalition partners like Thol Thirumavalavan of the Dalit Panthers of India used Ram rhetoric to woo his Dalit electorate. Many allies like Tha Pandian of the CPI used his signature rebellion to rouse his atheist Communist votebank.


But amidst the political melee, it was Union Shipping Minister TR Baalu who seemed to have had the last word.


“I promise you that the first ship will go through the Sethusamudram channel in front of your eyes,” he said.


For now, it seems the battle, assuming epic proportions, will be fought in Tamil Nadu and the response to Karunanidhi's so-called voluntary strike, which may invite contempt of court proceedings, could be an indicator of the public mood in the state.

மூக்குக் கண்ணாடி பறிமாற்றம் ?

மற்ற செய்தித்தாள்களிலோ, இணைய தளத்திலோ வந்துள்ளதா என தெரியவில்லை. ஆனால் இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் எனக்குப் பட்டது. கருணாநிதியின் மனைவியார் கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறு தோன்றும் முதல் படம் இதுவென நினைக்கிறேன். அதுபோலவே சாதா கண்ணாடி அணிந்த கருணாநிதி படமும்.

சூப்பர் ஸ்டார் ? அடுத்த படம் எப்போ சார் ?




முதல்வர்-ரஜினி சந்திப்பு

சென்னை, செப். 30: முதலமைச்சர் மு.கருணாநிதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை அவரது கோபாலபுரம் வீட்டிற்கு சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் உடன் இருந்தார். "சந்திரமுகி' படத்தில் நடித்ததற்காக ரஜினிகாந்த்துக்கு தமிழக அரசு சிறந்த நடிகர் விருது அறிவித்திருந்தது.
.
விருதுகள் அறிவிக்கப்பட்ட போது வெளியூரில் இருந்ததால் ரஜினிகாந்த், முதலமைச்சரை சந்திக்கவில்லை. இன்று காலை தான் அவர் சென்னை திரும்பினார் என்றும், உடனடியாக முதலமைச்சரை சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.


படம்/ செய்தி: நன்றி: மாலைச்சுடர்

Friday, September 28, 2007

பந்த்துக்கு தடை இல்லை - ஆனால் ......

டவுசர் கிழியும் ஆனால் கிழியாது என்பது போல

அக்டோபர் 1ந் தேதி திமுக கூட்டணி அழைப்பு விடுத்துள்ள பந்த்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. எனினும் பந்த்தின்போது பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் அரசு தேவை யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
.
சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் வரும் 1ந் தேதி பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதனை எதிர்த்து அதிமுக சார்பில் அதன் அவைத் தலைவர் மதுசூதனன், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி, டிராபிக் ராமசாமி ஆகியோர் பொது நல மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பி.ஜோதிமணி ஆகியோரை கொண்ட முதலாவது அமர்வு நேற்று விசாரித்து. அதில் அவர்கள் கூறியதாவது:
அரசியல் கட்சிகள் விடுத்துள்ள இந்த பந்த்துக்கு அடிப்படை ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது. அரசியல் கட்சிகள் கூறியிருப்பது பந்த். அதை வேலை நிறுத்தம் என்றோ, கடையடைப்பு போராட்டம் என்றோ கூறுவதை ஏற்க முடியாது.

வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் இது தொடர்பாக பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. வழக்கு விசாரணை வரும் 24.10.2007க்கு தள்ளிவைக்கப்படுகிறது.
பந்த் நடைபெறும் நாளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என்றும், மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பு இராது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்துள்ளார்.

அதன்படி மாநில அரசு, காவல்துறை டிஜிபி, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் அக்டோபர் 1ந் தேதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ கட்டாயப்படுத்தி குடிமக்களின் அன்றாட வேலையில் குறுக்கிட்டால், அப்படி குறுக்கிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து உட்பட எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் அன்றைய தினம் இயல்பாக செயல்பட அரசு உறுதி செய்ய வேண்டும்.

இதை தடுக்க யாராவது முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்திரிகைகளில் விளம்பரம் வாயிலாக இதனை அரசு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த இடைக்கால தீர்ப்பில் கூறியிருந்தனர்.


Source: Nandri: Maalaisudar

Thursday, September 27, 2007

படம் - இன்னுமோர் புதிய காப்பி

பல வருடங்களாக கருணாநிதி பங்கேற்கும் இந்த நிகழ்வுப் படங்கள் காணக்கிடைக்கும். இந்த வருடம் விஜயகாந்தும் - தற்போது மருத்துவர் ராமதாசும் மற்றும் கார்த்தி சிதம்பரம்








படம் நன்றி: மாலைச்சுடர்

Wednesday, September 26, 2007

பிளஸ் 2 வரை பாடநூல்கள் இணைய தளத்தில்

ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாடநூல்கள் அனைத்தையும் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் தனது இணைய தளத்தில் நேற்று வெளியிட்டது.

பள்ளிப் பாடநூல்களை நியாயமான விலையில் ஒரே மாதிரியாக, உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்க, கடந்த 1970ம் ஆண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் நிறுவப்பட்டது.
இதன்மூலம் ஆங்கிலம், தமிழ் மற்றும் சிறுபான்மை மொழி வழிகளில் 502 தலைப்புகளில் பாட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், தமிழை முதல் மொழியாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் பாட நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர வெளிச்சந்தையிலும் பாடநூல்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் மாணவர்களின் முன்னேற்றம், ஆசிரியர் நலன் கருதி 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாட நூல்களை இணைய தளத்தில் வெளியிட அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு Ôநிக்Õ நிறுவனத்துடன் இணைந்து பணிகள் நடந்தன. இதையடுத்து 322 தலைப்புகளில் பாடப் பகுதிகள் இணைய தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் பொதுப் பாடநூல் தலைப்பு 162 (தமிழ் வழிப் பாடநூல் தலைப்புகள் 90, ஆங்கில வழி பாடநூல் தலைப்புகள் 72) உள்ளன. சிறுபான்மை பாடநூல் தலைப்புகள் 160 உள்ளன.
வகுப்பு வாரியாக பார்த்தால், 1 முதல் 5ம் வகுப்பு வரை 95 தலைப்புகளும், 6 முதல் 8ம் வகுப்பு வரை 73 தலைப்புகளும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 154 தலைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாடங்களை, விருப்பம்போல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். இந்த இணைய தளம் குறித்து அறிய விரும்புவோர் http://www.textbooksonline.tn.nic.in/ என்ற முகவரியில் பார்க்கலாம்.

இந்த புதிய இணைய தளத்தை தொடங்கி வைத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், Ôதற்போது 1150 மேனிலைப்பள்ளிகளிலும், 1500 உயர்நிலைப்பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் லேப்கள் அமைக்கப்பட உள்ளன.

அவற்றில் இந்த பாட நூல்களை மாணவர்களும், ஆசிரியர்களும் பார்க்கலாம். மேலும் பள்ளிப் பாடத்திட்டம் 5 ஆண்டுக்கு ஒரு முறைதான் திருத்தம் செய்யப்படுகின்றன.
ஆனால் தேவைக்கேற்ப அவற்றில் ஆண்டுதோறும் மாறுதல்களை கொண்டு வருவதற்காக பாடத்திட்ட மேம்பாட்டு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறதுÕ என்றார்.

இணைய தளத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில், தமிழ்நாட்டுப் பாடநூல் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அசோக் டோங்ரே வரவேற்றார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் எம்.குற்றாலிங்கம் தலைமை தாங்கினார்.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் எம்.விஜயகுமார், Ôநிக்Õ நிறுவன துணை இயக்குனர் ஜெனரல் மோகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்