Monday, October 8, 2007

மற்றுமோரு படம் - இப்போ ஸ்டாலின்

தேர்தல் இப்போது இல்லை என்பதால், இப்தார் நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வரவில்லை'' என்று, அமைச்சர் ஸ்டாலின் பேசினார். இப்தார் நிகழ்ச்சி ஸ்டாலின் பங்கேற்பு.

(((இன்னும் திமுக தலைவர் தான் பாக்கி. ஆக ஸ்டாலினும் தயாராகிவிட்டார்.)))


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


இப்தார் நிகழ்ச்சி ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: ""தேர்தல் இப்போது இல்லை என்பதால், இப்தார் நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வரவில்லை'' என்று, அமைச்சர் ஸ்டாலின் பேசினார். தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் திருப்பூர் அல்தாப் தலைமை வகித்தார்.

அமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் இப்தார் நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைக்கிறீர்கள். சிறப்பு விருந்தினராக நான் வரவில்லை. உங்களில் ஒருவனாக வந்துள்ளேன். சில தலைவர்களுக்கு தேர்தல் வந்தால் தான் இப்தார் நினைவுக்கு வரும். ஓட்டுகளை பெறுவதற்காக இப்தார் நிகழ்ச்சி நடத்துவர். பிரதான எதிர்க்கட்சித் தலைவரே முன்னின்று இப்தார் விருந்து நடத்துவதாக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை. தேர்தல் நடக்கவுள்ளது என்றால் அவர் வந்திருப்பார். இப்போது தேர்தல் இல்லை என்று தெரிந்ததும் அவர் வரவில்லை.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, மைதீன்கான், தமிழக அரசின் சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச்செயலர் சையது சத்தார், கவிஞர் சல்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்

செய்தி / படம் நன்றி: தினமலர்

ராமதாஸ், கார்த்தி சிதம்பரம்

விஜயகாந்த்

No comments: