Sunday, July 6, 2008

சிரஞ்சீவி தாத்தாவானார்

ரஜினி தாத்தாவிற்குப் பிறகு இன்னொரு தென்னிந்திய சூப்பர் (மெகா) ஸ்டாரும் தாத்தாவாகிவிட்டார்.

* * * * *

புதுக்கட்சி துவங்கும் முன், நடிகர் சிரஞ்சீவி தாத்தாவானார்.கடந்த ஆண்டு ஐதராபாத் நகரைச் சேர்ந்த கிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து, தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, பெண் குழந்தைக்கு தாயானார். பிரசவத்திற்காக நேற்று முன்தினம் செகந்திராபாத் தாராபூர்வாலா நர்சிங் ஹோ மில் ஸ்ரீஜா அனுமதிக்கப்பட்டார்.


தகவல் அறிந்ததும் சிரஞ்சீவியின் மனைவி சுரேகா, மகன் ராம்சரண் தேஜா, தாய் மாமன் அல்லு அரவிந்த், பரத்வாஜின் பெற் றோர், மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர். சிசேரி யன் ஆபரேஷனுக்கு பின் பிறந்த குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்த செய்தி பரவியதும் மருத்துவமனை முன், சிரஞ்சீவியின் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்து சிரஞ்சீவி குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து சென்றனர்.

செய்தி: நன்றி: தினமலர்

No comments: