Thursday, July 3, 2008

கடவுள் ஏற்கும் வகையில் சேவை: கருணாநிதி

"ஏழைகளுக்கு உதவி செய்து, கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்,'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.

"இந்தியாவின் திருத்தூதர் புனித தோமையார்' என்ற திரைப்பட துவக்க விழா, சென்னை சாந்தோம் புனித தோமையார் சர்ச்சில் நேற்று நடந்தது. தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் வின்சென்ட் சின்னதுரை வரவேற்றார். சென்னை, மயிலை உயர் மறை மாவட்டத்தின் பிஷப் சின்னப்பா தலைமை வகித்தார். துணை பிஷப் லாரன்ஸ் பயஸ் முன்னிலை வகித்தார்.



படத்தைத் துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: எங்கள் ஆட்சிக்கு சிறுபான்மை ஆட்சி என்ற பெயரும் உண்டு. சிறுபான்மை சமுதாயத்தை சீர்தூக்கி விட வேண்டும்; பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த ஆட்சி நடக்கிறது. உலகத்தில் மூன்று கல்லறைகளில் பெருந்தகையாளர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ரோமில் ராயப்பர், ஸ்பெயினில் யாகப்பர், தமிழகத்தில் தோமையார். இவர்களில் தோமைய்யரை அய்யர் என அன்போடு அழைக்கின்றனர். அய்யர் என்று அழைக்கும் போது ஏதோ ஒரு பிரிவினரை அழைப்பதாக கருதக் கூடாது. உயர்ந்தோர், சிறந்தோர் என்ற பொருளில் தான் அழைக்கப்படுகிறது. சிறந்த ஒருவரை பாராட்டும் சொல்.

லாரன்ஸ் பயஸ் பேசும் போது, "கடவுள் நம்பிக்கை இல்லாத கருணாநிதியை ஏன் அழைக்க வேண்டும்?' என்று சிலர் கேட்டதாக கூறினார். கருணாநிதி சாதாரணமானவர். கடவுள் ஆயிரம், லட்சம், கோடி மடங்கு பெரியவர். கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா, இல்லையா? என்பது பிரச்னை அல்ல. கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்..



ஏழைகளுக்கு இரக்கம் காட்ட வேண்டும். நோயுற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நலிந்தோருக்கு நன்மை செய்ய வேண்டும். உதவி கேட்ட ஏழையை விரட்டினால், கடவுளை கும்பிடும் கைகளை கடவுளே மன்னிக்க மாட்டார். கடவுளுடன் அன்புவழி பயிற்சி; கருணை வழி பயிற்சி இருக்க வேண்டும். தோமையார், தான் கொண்ட கொள்கைக்காக உயிரை தியாகம் செய்தார். அவரது தியாகம், அவர் ஆற்றிய தொண்டு என்னை கவர்ந்தது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

விழாவில், புனித தோமையார் திரைப்பட ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் பால்ராஜ் லூர்துசாமி, பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். எர்னஸ்ட் பால் நன்றி கூறினார்.

செய்தி: படம்: நன்றி: தினமலர்

1 comment:

bala said...

சாம்பார்வடை அய்யா,

ஏழைகள் என்றால்,கனிமொழி,ஸ்டாலின்,அழகிரி பொன்ற கும்பல் தானே.கண்டிப்பாக அவங்களுக்கு உதவி புண்ணியம் பெற்று,ஏழைகளின் சிரிப்பில் இறவனைக் காண வாழ்த்துக்கள்.

பாலா