Monday, February 18, 2008

முலாயம் பிரதமர் வேட்பாளர்



போயஸ் தோட்டத்து அம்மா கூட பிரதமாரவணும்னு கனவு கண்டாங்க போலிருக்கே. நாயுடுவும் (இரட்டை விரலைக் காட்டி) இன்ன பிறரும் அந்த ஆசைக்கு ஆப்பு வெச்சுட்டாங்க. தமிழ்நாட்டுக்கு 2011ல் பல முதல்வர்கள் மாதிரி இந்தியாவுக்கும் 2009ல் பல பிரதமர்கள் வருவாங்க போல.

ஏற்கனவே அத்வானிதான் பிரதமர் வேட்பாளர்னு பாஜக அறிவிச்சாங்க. அப்புறம் மாயாவதி தான் பல மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்திவருவதால் தானே பிரதமர் அப்படீன்னாங்க. மன்மோகன் சிங் - அவரைப் பத்தி யாரும் பிரதமர்னு சொல்ல மாட்டேங்கிறாங்களே :-)

என்னவோ போங்க ..!!!!!

:::::::::::::::::::::::::::::::::::::::::::

3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அதன் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வரு மான முலாயம் சிங் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு 100 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்றும், முலாயம் சிங் யாதவ் தலைமையில் அடுத்த ஆட்சி அமையும் என்றும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய முலாயம் சிங் யாதவ், ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அந்தந்த மாநிலங்கள் வளர்ச்சி பெற்று வருவதாக தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில் மட்டுமே தங்கள் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


படம்: நன்றி: தினமலர்

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

1 comment:

shakthi said...

pls visit www.lightink.wordpress.com