Thursday, February 26, 2009

கருணாநிதி - இராம. கோபாலன் சந்திப்பு

முதல்வர் கருணாநிதியை, இந்து முன்னணி அமைப்பாளர் இராம.கோபாலன் இன்று திடீரென சந்தித்துப் பேசினார். முதல்வர் கருணாநிதி தனது உண்ணாவிரத முடிவைக் கைவிட வேண்டும் என அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

இந்து முன்னணி அமைப்பாளர் இராம. கோபாலன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு இன்று திடீரென சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.

அப்போது அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கருணாநிதியிடம் நலம் விசாரித்த இராம. கோபாலன், வக்கீல்கள் - போலீஸாருக்கிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக உண்ணாவிரதம் இருப்பேன் என்ற அறிவிப்பை கைவிட வேண்டும். உங்களது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

No comments: