Thursday, May 8, 2008

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க அழகிரி விடுதலை

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க அழகிரி உட்பட அனைவரும் விடுதலை

வேலூர் : தமிழக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன்,படுகொலை செய்யப் பட்ட வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேர் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி ஆந்திர மாநிலம் சித்தூர் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிந்து வழக்கில் இன்று மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று கோர்ட்டில் மு.க அழகிரி உட்பட 13 பேரும் ஆஜராகி இருந்தனர். கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருபந்தது.

மே 08,2008,16:30 நன்றி: தினமலர்

No comments: