Tuesday, June 12, 2007

மும்பையை கலக்கும் தென்னக புரோகிதர்கள்

தமிழகத்தில் இருந்து சென்ற புரோகிதர்கள், வேத வித்தகர்களுக்கு மும்பையில் நல்ல வாய்ப்பும் வருமானமும் கிடைப்பதாக இங்கிருந்து சென்றவர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் இருந்து சென்று மும்பையில் செட்டிலாகிவிட்ட எம்.வி.கணேச சாஸ்திரி என்பவர், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தஞ்சை மாவட்டம் மெலட்டூர்தான் சொந்த ஊர். பெரிய குடும்பம், ஏராளமான பொறுப்புகள். சிறுவயதிலேயே வேதம் படித்த போதிலும் உள்ளூரிலும் சுற்றுவட்டாரத்திலும் பெரிதாக வேலை இல்லை. 45 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி மும்பை வந்தேன்.

15 ரூபாய் சம்பளத்துக்கு மாதுங்கா ராமர் கோயிலில் வேலைக்கு சேர்ந்தேன். கோயில் வாசலிலேயே படுத்துக் கொள்வேன். கோயில் அர்ச்சக பணிக்கும் வேதம் ஓதுவதற்கும் இங்கு நல்ல மதிப்பு, மரியாதை. காசும் நிறைய கிடைக்கிறது. கோயிலில் டூட்டி பார்த்ததுபோக மீதி நேரத்தில் கல்யாணம், காதுகுத்து, கிரகப்பிரவேசம், பெயர் சூட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறோம். அம்பானி குடும்பம், அமிதாப் குடும்பத்தில் ஏதாவது விசேஷம் என்றால் என்னைத்தான் கூப்பிடுவார்கள்.

தமிழ்நாடு, கேரளா என தென்மாநிலங்களைச் சேர்ந்த புரோகிதர்கள், அர்ச்சகர்கள் 200-க்கும் அதிகமானவர்கள் இப்போது மும்பையில் ஜாம்ஜாம் என்று இருக்கின்றனர்.

Nandri: Tamil Murasu
11-June-2007 - Page 6

Original News - From Times of India

No comments: