
திருமங்கலம் தொகுதி பச்சகோம்பன்பட்டியில் உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். உடன் மு.க.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்.
செய்தி: படம்: நன்றி: தினகரன்
Tuesday, January 6, 2009
பிரதர்ஸ்..!!!
Monday, December 1, 2008
குடும்பம் ஒரு கழகம்
அஞ்சுகம் அம்மாளின் முகத்தில் ஒரு புன்சிரிப்பு தென்படுகிறதே ? கவனித்தீர்களா ? இதெல்லாம் குருபெயர்ச்சியின் லீலையா ? எதற்கும் இந்தப் படத்தைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். (படத்தைக் கிளிக்கி பெரிதாக பார்க்கவும்)
செய்தி: படங்கள்: நன்றி: தினகரன் 2-டிசம்பர்- 2008

முதல்வர் கருணாநிதியை கலாநிதி மாறன், தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஏற்பாட்டால் நடந்த இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு கலாநிதி மாறன், அவரது சகோதரர் தயாநிதி மாறன் எம்.பி., மு.க.அழகிரி, அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க. தமிழரசு, முதல்வரின் மகள் செல்வி ஆகியோர் 2 கார்களில் வந்தனர். முதல்வருடன் அவர்கள் சுமார் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது தயாளு அம்மாள், மருமகன் செல்வம், அவரது மகள் டாக்டர் எழில், மருமகன் டாக்டர் ஜோதிமணி, ஸ்டாலின் மனைவி சாந்தா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், அழகிரி மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி, மருமகன் வெங்கடேசன், இன்னொரு மகள் அஞ்சுகம், மருமகன் விவேக், முதல்வரின் மகன் மு.க.தமிழரசு, அவரது மகன் அருள்நிதி, கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.
சந்திப்பு முடிந்து அனைவரும் 5.30 மணிக்கு வெளியில் வந்தனர். அப்போது முதல்வரிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி கேட்டனர். பத்திரிகையாளர்கள் அதிகமாக இருந்ததால், ‘அறிவாலயத்தில் முதல்வர் நிருபர்களை சந்திப்பார்’ என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் பின்னர் அவர்கள் சிஐடி காலனியில் உள்ள ராஜாத்தியம்மாள் வீட்டுக்கு சென்றனர்.
மாலை 6.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்த சந்திப்பு உங்களுக்கு எப்படி இருக்கிறது?
சந்தோஷமாக இருக்கிறது.
இந்த சந்திப்பு எதனால் நடந்தது?
இதயத்தால் நடந்தது.
தயாநிதி மாறனுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதா?
அதுபற்றி எல்லாம் இப்போது பேச விரும்பவில்லை.
உணர்வுபூர்வமாக எப்படி இருந்தீர்கள்?
எனக்கு கோபம் வரும் போதும், வருத்தம் வரும் போதும் எப்படி இருந்தேனோ அப்படித்தான் மகிழ்ச்சியின் போதும் இருந்தது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கூட அறிக்கை மோதல் நடந்தது. இதனிடையே இந்த திடீர் சந்திப்புக்கு என்ன காரணம்?
இதற்கு மூல காரணமாக இருந்து நிறைவேற்றி வைத்து எல்லோருக்கும் மகிழ்ச்சி தந்த பொறுப்பு மு.க.அழகிரியை சார்ந்தது. அவருடன் இணைந்து மு.க.ஸ்டாலின் செயல்பட்டு, இந்த நல்ல முடிவு ஏற்பட்டது.
குருபெயர்ச்சியால் ஏற்பட்ட விளைவா இது?
எங்கள் குருவையே நாங்கள் எதிர்த்த பிறகு, அந்த குருவுடன் இணைந்து செயல்பட்டதுதான் திராவிட இயக்க வரலாறு.
பேரன்கள் எல்லோரையும் பார்த்ததில் ஏற்பட்ட உணர்வு எப்படியிருந்தது?
கண்கள் பனித்தது. இதயம் இனித்தது.
அழகிரியின் மனமாற்றத்துக்கு என்ன காரணம்?
மனமிருந்தது எனவே மாற்றம் ஏற்பட்டது.
மதுரையில் சன்டிவி, கே டிவி தெரியாத நிலை இருந்தது. இதன் பிறகு சுமூக தீர்வு ஏற்படுமா?
கேளாதீர்கள். கிளறாதீர்கள்.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை. அப்படி இதை எடுத்து கொள்ளலாமா?
அது உங்கள் பொறுப்பு. அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.
அடுத்தகட்டமாக அரசியல் ரீதியாக தொலைகாட்சி ரீதியாக என்ன செய்வீர்கள்?
கலந்து பேசி தேவைப்படும் உரிய முடிவுகளை எடுப்போம்.
இந்த இணைப்பு விழாவுக்கு கனிமொழி வரவில்லையே?
எம்.பி.க்கள் குழுவுடன் விமான நிலையம் சென்று விட்டார். அதன் பிறகு தான் இவர்கள் வந்தார்கள். இப்போது திரும்பி வந்து கொண்டிருக்கிறார்.
தயாநிதி மாறன் மீண்டும் அரசியல் பணிகளில் ஈடுபடுவதாக தெரிவித்தாரா?
பேசுவதற்கு அவ்வளவு நேரம் கிடைக்கவில்லை.
நாளை டெல்லி செல்லும் எம்.பி.க்கள் குழுவில் பங்கேற்பாரா?
மனித சங்கிலிக்கு வந்தார் அல்லவா.
இனிமேலாவது எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம் என்று வாக்குறுதி தந்திருக்கிறீர்களா?
இந்த கேள்வி ஒன்று போதும். அவர்களின் உள்ளங்களை ஒன்றுபடுத்த.
சமரசத்தின் பின்னணி என்ன?
அழகிரி, ஸ்டாலின்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.
Monday, July 21, 2008
தயாநிதி மாறனுக்கு கி.வீரமணி பாராட்டு
மத்திய அரசுக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பேன் என்று அறிவித்ததற்காக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு தி.க. தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 22ம் தேதி நாடாளுமன்றத்தில் சந்திக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், “ஆட்சிக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பேன், திமுக கட்சிக்கும், தலைமைக்கும் விரோதமாக நான் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டேன்’’ என்று திமுகவின் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அறிவித்ததை, திராவிடர் கழகம் வரவேற்று மகிழ்கிறது, பாராட்டுகிறது.
‘அண்ணா சொன்ன, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றில் இருந்து நழுவ மாட்டேன்’ என்று அவர் கூறியிருப்பது மிகச் சரியானது. ‘நீர் அடித்து நீர் விலகாது’ என்பது பழமொழி. விலகக் கூடாது என்பது நியாயமும்கூட. ‘திமுகவை அழிக்க, வேறு எவராலும் முடியாது. ஆனால், அவர்களுக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று 1969ல் பெரியார் கூறிய அறிவுரை, காலத்தினால் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். அது என்றும் பொருந்தும்.
தயாநிதி மாறனின் இந்த தெளிந்த நிலைப்பாட்டினை, அவர் தொடர்புள்ள ஊடகங்களும் பின்பற்ற வேண்டும். அதன் மூலம், முதல்வரின் நல்லாட்சியின் பயன்கள் மேலும் தொடர வழி வகுக்கும் என்ற வேண்டுகோளையும் திராவிடர் கழகம் விடுக்கிறது. அண்ணா சொன்னது போல், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
செய்தி: நன்றி: தினகரன் 22 ஜூலை 2008 (சென்னை பதிப்பு)
பேரன்களை வாழ்த்துவது ஆபத்து: கருணாநிதி
இப்போதெல்லாம் பேரன்களை வாழ்த்துவது ஆபத்தில் முடிகிறது. ஆனாலும் இந்தப் பேரன் எனக்கு எதிராகப் போய்விட மாட்டான் என்ற நம்பிக்கையில் வாழ்த்துகிறேன் என்று மு.க.முத்துவின் மகன் முத்து அறிவுநிதியை வாழ்த்தினார் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி.
சென்னையில் நேற்று நடந்த ஒரு திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:
இன்று திரைப்படத் தணிக்கை என்பது அத்தனை சிரமமான விஷயமில்லை. ஆனால் நான் கதை-வசனம் எழுத ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் தணிக்கைத் துறைதான் திரைப்படத் துறைக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்தது.
அந்தக் கால கட்டத்தில் நான் அதிகம் சங்கடப்பட்டது சென்சாரிடம்தான். திரும்பிப்பார் என்றொரு படம். சிவாஜி நடித்தது. நான்தான் வசனம் எழுதினேன். அந்தப் படத்தின் தணிக்கையின்போது 4 ஆயிரம் அடிகளை வெட்டச் சொல்லி விட்டார்கள். எந்தக் காட்சியை வெட்ட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள நானும் படத்தின் இயக்குநர் காசிலிங்கமும் தினமும் 5 மாடிகளைக் கடந்து செல்ல வேண்டும்.
ஒரு நாள் அந்த சென்சார் அதிகாரியிடம், தினமும் இத்தனை மாடிகளை ஏறி வருகிறோமே, இதைப் பார்த்தும்கூட உங்களுக்குக் கருணை வரவில்லையா, என்று கேட்டேன். திருப்பதி மலைக்கு வந்து போவதைப் போல நினைத்துக் கொள்ளுங்கள். அந்த அளவு புண்ணிய இடம்தான் இதுவும் என்றார் என் கொள்கைகளைத் தெரிந்து கொண்டே.
பதிலுக்கு நான், அங்கும் இங்கும் ஒரே ரிசல்ட்தான் என்றேன். கடைசியில் பலரும் சொன்னதற்குப் பிறகு 2 ஆயிரம் அடி வெட்டினார்கள்.
நான் வசனம் எழுதிய எந்தப் படமும் சென்சாருக்குத் தப்பியதே இல்லை.
இன்று அந்த அளவு நெருக்கடி இல்லை. நினைப்பதை, நாட்டில் நடக்கும் விஷயங்களைத் திரையில் காட்டுமளவுக்கு சுதந்திரம் இருக்கிறது. அதை அருமையாகப் பயன்படுத்தி வருகிறார்கள் திரையுலகினர்.
நாளை உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு, இங்கே திரைப்பட விழாவில் இவர் உற்சாகமாகக் கலந்து கொள்கிறாரே என்று கூட கண்டனங்கள் எழலாம். ஆனால் அதையும்கூட உங்களுக்காகச் செய்கிற ஒரு தியாகமாகக் கருதி தாங்கிக் கொள்கிறேன்.
தமிழ்ப் பெயர்
இன்றைக்கு இந்தியாவிலேயே முழு வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களைக் காணுகிறீர்கள். ராஜாஜி மண்டபத்தில் படப்பிடிப்பு நடத்த முன்பு ஒரு லட்ச ரூபாய் கட்டணம். இப்போது அது வெறும் ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுவிட்டது.
இவ்வளவுக்கும் பிறகு நான் உங்களைக் கேட்பதென்ன....? நல்ல தமிழில் தலைப்புகளைச் சூட்டுங்கள் என்றுதானே. இதைக் கூடக் கேட்கக் கூடாதா... இவ்வளவு சலுகைகள் அளித்தும் கூட தமிழில் பெயர் வைக்காமல் ஏபிசிடி என்றெல்லாம் பெயர் சூட்டுகிறார்கள்.
சமீபத்தில் 70 படங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டவை ஆங்கிலம் அல்லது பிற மொழித் தலைப்புகள் கொண்டவை.
இனிமேலாவது நல்ல தூய தமிழில் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் தமிழ் என்று ஒப்புக் கொள்ளும் அளவுக்கு தலைப்புகளை வைப்போம். எதிர்காலத்தில் முழுக்க முழுக்க தமிழிலேயே படங்களை எடுப்போம். தமிழ்ப் பண்பாட்டைக் காப்போம் என்ற உறுதியைத் திரைத் துறையினர் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பேரனை வாழ்த்துவது ஆபத்து!
இந்தப் படத்தில் என் பேரன் அறிவுநிதி ஒரு பாடல் பாடி இருக்கிறான். அவன் மேலும் மேலும் இந்தத் துறையில் புகழ் பெற வாழ்த்துகிறேன். இப்போதெல்லாம் பேரன்களை வாழ்த்துவதே ஆபத்தாக முடிகிறது.
இருந்தாலும்கூட, இந்தப் பேரன் அப்படியெல்லாம் நடந்து கொள்ளமாட்டான் என்ற நம்பிக்கையோடு, நல்ல முறையில் வாழ்வான், என்னுடைய நிலையில் இவன் ஒருவனாவது நின்று என் பெயரைச் சொல்வான் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன் என்றார்.
செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்