Tuesday, December 8, 2009

அரசியலில் இருந்து கலைஞர் ஓய்வு பெறக்கூடாது: மு.க.ஸ்டாலின்

முதல்- அமைச்சர் கருணாநிதி சமீபத்தில் ஒரு விழாவில் பேசும்போது, கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பொதுமக்களில் ஒருவராக இருப்பேன் என்று கூறினார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு அளிக்கும் பதில் என்ன என்பதை அறிய பலரும் ஆவலாக இருந்தனர்.

இந்த நிலையில் கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக, துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று எழும்பூரில் உள்ள கூவம் ஆற்றில் நடைபெறும் சீரமைப்பு பணியை நேரில் பார்த்தார்.

அப்போது பத்திரிகையாளர்கள், முதல்-அமைச்சர் கருணாநிதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு, அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருக்கிறாரே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர்.

இதற்கு துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-

ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் கலைஞர். அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெறக்கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

செய்தி: நன்றி: மாலைமலர்

No comments: