கிருஷ்ணகிரி அருகே அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் சானிடரி நாப்கின் வெண்டிங் மெஷின் வைக்கப்பட்டுள்ளதால் மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 570 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்ற னர். மாதவிலக்கு நாட்களில் மாணவிகள் படும் சிரமங்களை நிலையை அறிந்த Ôயுனிசெப்Õ நிறுவனம், மாதவிலக்கின்போது ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் முறைகள் குறித்து 570 பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கும், அதில் பயிலும் சில மாணவிகளுக்கு பயிற்சி அளித்தது. அத்துடன், Ôபயப்பட எதுவுமில்லைÕ என்ற சிறிய புத்தகத்தை அச்சிட்டு அனைவருக்கும் விநியோகித்தது.
நாப்கினை வாங்க கிராமபுற மாணவிகள் மட்டுமல்லாமல் நகரில் வாழும் மாணவிகள் கூட வெட்கப்படுகின்றனர். இந்நிலையை போக்க, பள்ளிகளிலேயே இவர்களுக்கு சானிட்டரி நாப்கின் குறைந்த விலையில் கிடைக்க தேவையான நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் சந்தோஷ்பாபு எடுத்தார்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் முறையாக மேகலசின்னம்பள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான சானிடரி நாப்கின் வெண்டிங் மெஷினை வைத்துள்ளனர். இதில் 25 நாப்கின்கள் வைக்கப்படுகின்றன. நாள்தோறும் 20 நாப்கின்களை மாணவிகள் எடுத்து செல்கின்றனர்.
இந்த மெஷினில் ஒரு ரூபாய் நாணயம் இரண்டை போட்டால் ஒரு நாப்கின் வெளியே வரும். இந்த பள்ளியில் உள்ள மாணவிகள் மட்டுமின்றி அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகளும் இங்கு வந்து சானிடரி நாப்கின்களை எடுத்து செல்ல அனுமதிக்கின்றனர். மேலும், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரியூட்ட எரியூட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் முரளி கூறும்போது, சோதனைமுயற்சியாக எங்கள் பள்ளியில் இந்த சானிடரி நாப்கின் வெண்டிங் மெஷின் வைக்கப்பட்டுள்ளது. இது எங்கள் பள்ளி மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்றார்.
செய்தி, படம்: நன்றி: தினகரன் - சென்னை பதிப்பு 18-3-2008 பக்கம் 14
Monday, March 17, 2008
அரசு மகளிர் பள்ளியில் சானிடரி நாப்கின் வெண்டிங் மெஷின்
Friday, March 14, 2008
ராமதாஸ் ஒரு 'ஸ்பின் பெளலர்' : கருணாநிதி
பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு 'ஸ்பின் பெளலர்' மாதிரி.. அவர் வீசும் பந்து எங்கேயோ போய் 'பிட்ச்' ஆனாலும் சுற்றி, சுழன்று வந்து விக்கெட்டை எடுக்காமல் விடாது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
உரிமை, சண்டை, மிரட்டல், கெடு என்று ஆரம்பித்து மகா பல்டி, மெகா பல்டி அடித்து திடீரென ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதாக அறிவித்தார் ராமதாஸ்.
திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது என்ற ராமதாசின் இந்த முடிவை முதல்வர் கருணாநிதி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக முரசொலியில் அவர் எழுதியுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: மாநிலங்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளிடையே இறுதியாக ஒரு சுமூகமான முடிவு ஏற்படும் வகையில் முடிவெடுத்த பா.ம.க.வின் நிறுவன தலைவர் பற்றி?
பதில்: கிரிக்கெட் போட்டியில் சுழல் பந்து வீச்சாளர் பந்தை வீசும்போது, பந்து எங்கேயோ விழுவதைப்போலதான் தெரியும். ஆனால் அதன் பிறகு அந்த பந்து `ஸ்டம்ப்' மீது தாக்கி பந்து வீச்சாளருக்கு வெற்றியைத் தேடி தரும்.
கேள்வி: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக அணியிலே ஒரு இடம் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டதாக முதலில் செய்தி வந்தது. அதன் பின்னர் அந்த இடத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், ஆனால் அதற்காக அம்மையாருக்கு நன்றி என்றும் மதிமுக கூறியிருக்கிறதே?
பதில்: அம்மையாரின் அங்கீகாரமாவது கிடைத்ததே. அதற்காக நன்றி சொல்வது தவறா என்ன?
கேள்வி: நாடாளுமன்றத்தில் அவையையே நடத்த முடியாத அளவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்வதைப் பற்றி மக்களவைத் தலைவர் மனம் நொந்து போய், மக்களவை விதிகள் புத்தகத்தையே காந்தி சிலை முன்பு போட்டு கொளுத்துங்கள் என்று சொல்லி இருப்பது பற்றி?
பதில்: மகாத்மா காந்தியே மக்களவை தலைவராக இருந்தாலும் இப்படித்தான் சொல்லியிருப்பார்.
கேள்வி: ஜெயலலிதா பிறந்த நாள் பரிசு வழக்கில் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?
பதில்: ஜெயலலிதாவிற்கு இப்போது வயது 60, அவர் முதல்வராக பொறுப்பில் இருந்த போது தனது 44 வயதை கொண்டாடிய போது, அதாவது 16 ஆண்டுகளுக்கு முன் 1992ம் ஆண்டு அவருடைய பிறந்த நாளுக்காக 57 நபர்களிடம் இருந்து 89 வரைவு காசோலைகள் மூலம் ரூ.2 கோடி பரிசுப் பணம் வந்ததாகவும், முதல்வர் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா அந்த பணத்தை தனது சொந்த கணக்கிலே முதலீடு செய்ததாகவும், கூறி சிபிஐதான் இந்த வழக்கை தொடர்ந்தது.
16 ஆண்டு காலமாக இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி கால நீடிப்பு பெற்று வருகிறார்கள். அந்த வழக்கில்தான் தற்போது மேலும் இந்த வழக்கை நீடிக்கச் செய்யும் வகையில் அந்த கட்சியை சேர்ந்த செங்கோட்டையன் தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவிலேதான் தற்போது சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவிற்கு அமெரிக்காவில் இருந்து வந்த ரூ.1 லட்சம் டாலரை தன் கணக்கிலே வரவு வைத்து கொண்டார். அதைப் பற்றி கேள்வி எழுந்தபோது அந்த பணம் யாரிடம் இருந்து தனக்கு வந்தது என்பதே தெரியாது என்றார்.
அப்படிப்பட்டவர் பிறந்த நாளையொட்டி ரூ.2 கோடி பரிசுப் பணம் வந்தது என்று சொல்வதிலே என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
தாமதப்படும் நீதி, மறுக்கப்படும் நீதி என்ற ஒரு பழமொழிதான் இந்த நேரத்தில் என் நினைவுக்கு வருகிறது.
கேள்வி: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பாலின் கொள்முதல் விலையை மட்டுமே, தான் உயர்த்தியதாகவும், விற்பனை விலையை உயர்த்தவில்லை என்றும் அறிக்கை கொடுத்திருக்கிறாரே?
பதில்: இது முழு பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைக்கும் மோசடி என்று அந்தத் துறையின் அமைச்சர் மதிவாணன் விளக்கமாகச் சொல்லியிருந்தபோதிலும் அது பல ஏடுகளிலே வெளிவரவில்லை. பால் விலையைப் பொறுத்தவரை ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் இரண்டு மோசடிகளைச் செய்த பெருமைக்குரியவர்.
தற்போது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழகம் முழுவதிலும் லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின கோரிக்கையை பரிசீலனை செய்து பேச்சுவார்த்தை பல மணி நேரம் நடத்தி இறுதியாகத்தான் கொள்முதல் விலையையும், நுகர்வோருக்கு கட்டுப்படியாகக் கூடிய அளவிற்கு விற்பனை விலையையும் லிட்டர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் அறிக்கை விடுத்துள்ள ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கொள்முதல் விலையை உயர்த்தாமலேயே விற்பனை விலையை மட்டும் உயர்த்திய நிகழ்ச்சி நடைபெற்றதுண்டு.
நாள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமேயானால் 1.7.1993ல் கொள்முதல் விலையை ஒருபைசா கூட உயர்த்தாமலேயே, விற்பனை விலையை மட்டும் லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் உயர்த்தியவர்தான் ஜெயலலிதா.
1991-96ம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது பசும்பால் கொள்முதல் விலை 2 ரூபாய் 26 காசு அளவிற்கு உயர்த்தப்பட்டது.
ஆனால் நுகர்வோரிடம் லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் என்று உயர்த்தி விற்பனை செய்ய ஆணை பிறப்பித்தவர்தான் ஜெயலலிதா.
இதையெல்லாம் மக்கள் மறந்து விட்டார்கள் என்று கருதிக் கொண்டு அறிக்கையிலேயே எப்போதும் போல் பொய் புராணம் தீட்டியிருக்கிறார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் கருணாநிதி
Nandri: Thatstamil
Thursday, March 13, 2008
சன் டிவியில் என்.டி.டி.வி ராமாயணம்
வரும் ஞாயிறு (16/March) காலை 10.30 மணி முதல் வாராவாரம் சன் டிவியில் புதிய ராமாயணம் (என்டிடிவி இமாஜின் தொலைக்காட்சியில் வரும் இந்தி ராமாயணத்தின் டப்பிங்) ஒளிபரப்பாகிறது.
தாத்தா ராமரைக் கிண்டலடித்தும் ராமர் பாலத்தை தகர்த்தெறியும் முயற்சியில் இருக்க பேரன்களோ ராமாயணத்தைத் தமிழர்களுக்கு திணிக்க ? (பின்ன இந்தி டப்பிங்கை எப்படி சொல்வது என தெரியவில்லை) இருக்கிறார்கள். இந்த ராமாயணத்திலாவது ராமரைப் பற்றியும், பாலத்தைப் பற்றியும் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம். தமிழ் டப்பிங் வசனங்கள் எப்படி இருக்கும் என தெரியவில்லை. பார்க்கலாம்.
செய்தி: நன்றி: என்.டி.டி.வி
Wednesday, March 12, 2008
வங்கக் கடலில் புயல் சின்னம் !?
குளோபல் வார்மிங்கா ? இல்லை நாட்டுல நல்லவங்க அதிகரிசுட்டாங்களா ? என்னங்க இது மார்ச்சு மாசத்துல புயல் சின்னம், பலத்த மழை அப்படீன்னு ? என்னமோ போங்க. தண்ணிப் பிரச்னை இல்லாம இருந்தா சரிதான்.
செய்தி: நன்றி: மாலைமலர்
வங்கக் கடலில் புயல் சின்னம்: பலத்த மழை எச்சரிக்கை: 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்
சென்னை, மார்ச். 12-
வங்கக் கடலில் தமிழ்நாடு மற்றும் இலங்கை கடலோர பகுதியின் தென்மேற்கு திசையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நேற்று உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து புயலாக மாறும் நிலையில் உள்ளது.
இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் 36 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கில் இருந்து கிழக்கு நோக்கி 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் தென் தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வடபகுதியை விட தென் பகுதி மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, தேனி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் சின்னம் உருவானதின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. தாழ் வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இன்றும் இந்த மழை நீடிக்கும் என தெரிகிறது.
படம்: நன்றி: சி.என்.என்
Friday, March 7, 2008
பெண்கள் நாட்டின் கண்கள் !?
பெண்கள் நாட்டின் கண்கள்..! அட.. அட.. அட... யாருங்க இங்க வாரிசு/குடும்ப அரசியல்னு பேசறது..

படங்கள் நன்றி: தமிழ் முரசு.
வாழ்க பெண்கள் ! வளர்க அவர்தம் அரசியல் !
மார்ச் 8 - பெண்கள் தினம்.
Thursday, March 6, 2008
ரூ.5க்கு பெண்கள் காண்டம்
விரைவில் விற்பனைக்கு வருகிறது ரூ.5க்கு பெண்கள் காண்டம்
ஆணுறை போல பெண்களுக்கும் காண்டம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை அதிகம் என்பதாலும், உபயோகிக்கும் முறை பற்றி பெரியளவில் பிரசாரம் செய்யப்படாததாலும் இந்தியாவில் பெண்கள் காண்டம் அதிகம் விற்பனையாகவில்லை.
இதனால், பெண்கள் காண்டத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம்(என்.ஏ.சி.ஓ) இறங்கியுள்ளது. முதல்கட்டமாக இங்கிலாந்து நிறுவனத்திடமிருந்து 15 லட்சம் பெண்கள் காண்டத்தை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம் வாங்குகிறது. அவை தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள பெண்களுக்கு அடுத்த 8 மாதத்தில் விநியோகிக்கப்படவுள்ளன.
இதுகுறித்து என்.ஏ.சி.ஓ இயக்குனர் சுஜாதா ராவ் கூறுகையில், 'கடந்த 2006ம் ஆண்டில் ஐ.நா சுகாதார நிறுவனவத்திடமிருந்து 5 லட்சம் காண்டம் வாங்கினோம். அதை வைத்து 13 மாநிலங்களில் உள்ள 60 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்தினோம். இதில் 60 சதவீத பெண்கள், காண்டத்தை மீண்டும் வாங்கினர். இவர்களில் 98 சதவீதம் பேர் உபயோகிக்கும் முறை எளிதாகவும், சவுகரியமாகவும் உள்ளதாக தெரிவித்தனர். இந்த ஆய்வு வெற்றிகரமாக முடிந்ததால், பெண்கள் காண்டம் பற்றி மேலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டுமிட்டுள்ளோம்' என்றார்.
பெண்கள் காண்டம் ரூ.5க்கு விற்பது எப்படி சாத்தியமாகும் என்பது பற்றி காண்டம் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் லேடக்ஸ் லிமிடெட் கம்பெனியைச் சேர்ந்த மனோஜ் கோபாலகிருஷ்ணா கூறுகையில், ÔÔபெண்கள் காண்டம் தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதை இந்தியாவில் தயாரிக்க கொச்சியில் தற்போது புதிய தொழிற்சாலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில் உள்ள பெண்கள் சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 1 கோடி பெண்கள் காண்டம் தயாரிக்கப்படும். இதை தயாரிக்க சராசரியாக காண்டம் ஒன்றுக்கு ரூ.40 செலவாகும். ஆனாலும் விலையைக் குறைத்து 5 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்ÕÕ என்றார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கூறுகையில், ÔÔஆணுறை உபயோகிக்க ஆண்கள் மறுக்கும்போது, பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கும், தேவையற்ற கர்ப்பத்தை தவிர்ப்பதற்கும் இந்த காண்டம் பயன்படும்ÕÕ என்றார்.
செய்தி: படம்: நன்றி: தமிழ்முரசு
6-மார்ச்- 2008 பக்கம்-6 சென்னை பதிப்பு
Monday, March 3, 2008
கனிமொழியுடன் அந்துமணி ஃபோட்டோ
எப்டிங்க இது ? தினமலர் வாரமலர் அந்துமணி கனிமொழி கூட ? பின்னாடி நல்லியார்.
எந்த நிகழ்ச்சியில் இந்த ஃபோட்டோ எடுக்கப்பட்டது என யாருக்காவது தெரியுமா ?
படம் நன்றி: தினமலர் வாரமலர்