Tuesday, November 4, 2008

ரஜினியின் பூர்வீகம் தமிழகமா..?

ரஜினி ரசிகர்களுடனான சந்திப்பின்போது... "உங்களுடைய பெற்றோரின் பூர்வீகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாட்டுக்குப்பம்; அங்கு உங்கள் பெற்றோருக்கு நினைவுச்சின்னம் எழுப்புவீர்களா?' என்று ஒரு கேள்வி வாசிக்கப்பட்டது



அதைக் கேட்டவுடன்... சற்று வியப்புடன் புன்முறுவல் பூத்த ரஜினிகாந்த், மீண்டும் அந்தக் கேள்வியை வாசிக்கச் சொன்னார். அதோடு "இந்தக் கேள்வியைக் கேட்டவர் இங்கு வந்திருக்கிறாரா?' எனக் கேட்க, அந்த கேள்வியைக் கேட்ட கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கார்த்திகேயன் எழுந்து நின்று ரஜினிக்கு மரியாதை தெரிவித்தார்.

இதையடுத்து அவரை சற்று உற்றுப் பார்த்த ரஜினிகாந்த் புன்னகைத் தவாறே... ""இந்தக் கேள்வியை நீங்களாகத்தான் கேட்டீர்களா? இல்லை... யார் சொல்லியாவது கேட்டீர்களா? என்றார். அதற்கு அந்த ரசிகர் "நானாகத்தான் கேட்டேன்'' என்றார்

"சரி... நீங்கள் சொல்வது பற்றி யோசிக்கிறேன்' என பதிலளித்தார் ரஜினிகாந்த். மகாராஷ்டிரத்தில் பிறந்து கர்நாடகத்தில் வளர்ந்து தமிழகத்தில் வாழ்ந்து வரும் ரஜினிகாந்த், பல ஆண்டுகளாகப் பொதுக்கூட்டங் களிலும் திரைப்படங்களிலும் "என்னை வாழ வைத்த தெய்வங்களாகிய தமிழ் மக்களே' என விளித்தும், அவரைக் கன்னடர் எனப் பலர் விமர் சித்து வருவதும் அறிந்ததே. இந்தச் சூழ்நிலையில் ரஜினியின் பெற்றோர், "தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்' என்ற அடிப்படையில் எழுந்த கேள்வி, ரஜினியை வெகுவாக ரசிக்க வைத்திருக்கலாம்.

செய்தி: படம்: நன்றி: தினமணி
4-நவம்பர்-2008: பக்கம் 12 - சென்னை பதிப்பு

*** *** *** *** ***

கடமையைச் செய்; பலனை "எதிர் பார்'!

தன்னுடைய பல படங்களில் "கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே' என்ற கீதாஉபதேசத்தை வச னங்களாக உச்சரித்தவர் ரஜினிகாந்த். ஆனால் ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ந்தபோது மேடையில் அமைக்கப்பட்டிருந்த "கடமையைச் செய்; பலனை எதிர் பார்' என்ற வாசகங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனர் ரசிகர்கள் உள்பட பலரையும் வியப்பில் ஆழ்த்தியது

ரஜினிகாந்தின் பிரம்மாண்டமான படத்தின் பின்னணியில் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த அந்த டிஜிட்டல் பேனர் வாசகங்களைப் பற்றிப் பேசும்போது..

""நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். அதற்கான பலனையும் எதிர்பாருங்கள். நான் கூட ஆரம்பத்தில் "கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே' என்ற கருத்தில் நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் நாம் சிரமப்பட்டு உழைக்கிறோம். ஏன் பலனை எதிர்பார்க்கக்கூடாது. எனவே நீங்கள் உழைத்ததற்கான பலனை எதிர்பாருங்கள். "கடமையைச் செய்; பலனை எதிர்பார்' என்பதுதான் நமது தத்துவம் என்றார் ரஜினிகாந்த்
இந்தக் கருத்து குறித்து ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது..

""இது எங்களுடைய தலைவர் அரசியலில் விரைவில் ஈடுபடுவார் என்பதைத்தான் காட்டுகிறது. ரஜினி தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்துவருகிறார். அதற்கான பலனும் அவருக்கு நிச்சயம் கிடைக்கும். இந்த வாசகங்களை ரஜினி தனக்காகச் சொல்லவில்லை. இத்தனை காலம் அவருடைய ரசிகர்களாகிய நாங்கள் நற்பணி, நலத்திட்டம் என தீவிரமாக உழைத்துவருகிறோம். அப்படிப்பட்ட எங்களுக்கு..

"உரிய பலன்' விரைவில் கிடைக்கும். அதை எதிர்பாருங்கள் என்பதை மறைமுகமாக உணர்த்துவதற்காகத்தான் இந்த வாசகங்கள்'' என்றார்.

No comments: