Monday, June 23, 2008

1 செ.மீ சிறுத்த ஆனந்த விகடன்

இது வரை 17 செ.மீ x 13 செ.மீ யாக வெளிவந்த ஆனந்த விகடன் அதே 10 ரூபாய்க்கு கடந்த 2 வாரமாக 17 செமி x 12 செமி யாக வருகிறது. இதை எத்தனை பேர் கவனித்தனரோ.

பிஸ்கட், டூத்பேஸ்ட், டீ பொடி முதலிய பண்டங்கள் 100கிராம் இருந்தது 85 அல்லது 90 கிராம் (விலையும் அதிகம் ஆனால் அதே 100 கிராம் பாக்கிங்கில் 85 கிராம்) என்பது போல விகடனும் தனது வேலையைக் காட்டிவிட்டது.

நியூஸ் பிரிண்ட் விலை ஏறிவிட்டதுதான். இல்லையென்று சொல்லவில்லை. இத்தனை வருடங்களாக விலையை ஏற்றி அதை அறிவிப்பது தான் வழக்கம். ஆனால் அதுபோல் செய்யாமல் சொல்லாமல் கொள்ளாமல் சுமார் 17 x 1 செ.மி அளவு காகிதக் குறைப்பு என்பது நேர்மையாகத் தெரியவில்லை.

சமீபத்தில் குங்குமத்தில் வெளியான கட்டுரைப்படி

Sunday, June 22, 2008

விஜய் கொடி + சன் டிடிஎச்



நடிகர் விஜய் பிறந்தநாள் விழா, நற்பணி மன்ற கொடி அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது. கொடியை அறிமுகம் செய்கிறார் விஜய். அருகில் நடிகை நயன்தாரா.

x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x



x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

மதுரையில் மட்டும் சன் டிடிஎச் (அல்லது டாடா ஸ்கை, டிஷ் டிவி) எவ்வளவு விற்கும் ?



செய்தி: படங்கள்: தினகரன் 23 ஜூன் 2008 (சென்னை பதிப்பு)

Friday, June 20, 2008

மன்னிப்பு கேட்க மாட்டோம்- ராமதாஸ்

குரு பேச்சு குறித்து எழுந்த பிரச்சினை முடிந்து போன விஷயம். அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கவோ அல்லது வருத்தம் தெரிவிக்கவோ மாட்டோம், அது தேவையற்றது என டாக்டர் ராமதாஸ் கூறினார்.

இன்று நடந்த பாமக பொதுக் குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:

தனிப்பட்ட ஒரு பிரச்சினையை பொதுப் பிரச்சனையாக்கி அதற்கும் பாமகவையே பொறுப்பாக்கிவிட வேண்டும் என்ற திமுக திட்டத்தின் வெளிப்பாடுதான் இப்போது எழுந்துள்ள நிலைக்குக் காரணம். இந்த நிலைக்கு நானோ, பாமகவோ பொறுப்பல்ல.

வன்னியர் சங்க கல்விக் கோயிலை திறந்து வைத்ததே முதல்வர் கலைஞர்தான். ஆனால் அவருடைய மூத்த அமைச்சர் அதை பொறம்போக்கு என்கிறார். இதை நாங்கள் வேண்டுமானால் பொறுமையுடன் கேட்டுக் கொள்ளலாம். மாவீரன் குரு போன்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா...

குரு பேச்சு குறித்து எழுந்த பிரச்சினை முடிந்து போன விஷயம். அதற்காக மன்னிப்பு கேட்பதோ, வருத்தம் தெரிவிப்பதோ தேவையற்றது. அதை நாங்கள் செய்ய மாட்டோம்.

எங்களைப் பார்த்து வன்முறைக் கட்சி என்றும் சதி செய்கிறார்கள் என்றும் கலைஞர் குற்றம் சுமத்துகிறார்.

கலைஞரே, மனசாட்சியுடன் பேசுங்கள். வரலாற்றை மறந்து விடாதீர்கள். உங்கள் மீது உங்கள் கட்சிக்காரர்களைவிட அதிகம் மதிப்பு வைத்தவர்கள் நாங்கள். எங்களது கட்சியின் மாநாட்டுக்கு உங்களை சிறப்பு விருந்தினராக வரவழைத்து, மாநாட்டுப் பந்தல் முழுக்க பார்க்குமிடங்களிலெல்லாம் உங்கள் படங்களையும் சுவரொட்டிகளையும் வைத்தவர்கள்.

அப்போது நீங்கள் ஆற்காட்டாரைப் பார்த்து, உங்களால் கூட இப்படி மாநாடு நடத்த முடியாதே என்று கூறிப் பெருமைப்பட்டீர்கள். நாங்களா வன்முறையாளர்கள்? சரித்திரத்தை மறந்துவிடாதீர்கள்.


1977ல் நெருக்கடி நிலைக்குப் பிறகு மதுரைக்கு வந்த இந்திரா காந்தி அம்மையாரை பயங்கர ஆயுதங்களுடன் துரத்தித் துரத்தி கொல்ல முயன்றது யார்... திமுக அல்லவா... அவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மறைந்து மறைந்தல்லவா சென்னைக்கு வர வேண்டியிருந்தது. நீங்கள் எங்களைப் பார்த்து வன்முறையாளர்கள் என்பது நியாயமா...?

பாமக பதவிக்கு ஆசைப்படும் கட்சியல்ல. மானமும் கொள்கையும்தான் எங்களுக்குப் பெரிது. சில பத்திரிகையாளர்கள் எங்களைப் பற்றி எழுதும்போதெல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்றும், பதவிக்காக அணி மாறுபவர்கள் என்றும் எழுதுகிறார்கள்.

ஏன், திமுக அணி மாறியதே இல்லையா. பதவிக்கு சண்டை போட்டதில்லையா?. அப்படியா நாங்கள் நடந்து கொண்டோம். மத்திய அமைச்சரவையில் முக்கியப் பதவியைப் பிடிக்க திமுக என்னவெல்லாம் செய்தது? நாங்கள் அப்படியா நடந்து கொண்டோம்?

நண்பர்களே... பாமக அமைதி விரும்பி. வன்முறைக்கு எதிரான கட்சி. இந்த மண்ணிலே ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாது என்று அறவழியில் குரல் கொடுக்கும் அமைதி இயக்கம். அந்தக் கட்சியைப் பார்த்து கலைஞர் இப்படியெல்லாம் நெருப்பு வார்த்தைகளை அள்ளிக் கொட்டியது யார் செய்த சதி என்று புரியவில்லை.

இனி பாமகவின் பாதை புதிது. இந்தக் கூட்டணி உறவு முறிந்ததும், அடுத்து எடுக்கப்போகும் முடிவு குறித்தும் நீங்கள் என் முடிவுக்கு விட்டு விடுவதாகச் சொன்னீர்கள். ஆனால் நான் அதை உங்கள் முடிவுக்கே விட்டுவிட்டேன். அதுதான் பொதுக்குழு தீர்மானமாக வந்திருக்கிறது.

இனி பாமக வெற்றிப் பாதையில் வெற்றி நடைபோடும் என்றார்.

தீர்மான விவரம்:

முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

பாமக மீது மலிவான காரணங்களைக் கூறி கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுக செயல்பட்டுள்ளது. இந்த உள்நோக்கத்தின் அடிப்படையிலேயே திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல் பாமகவை நீக்கியிருப்பது, திமுகவின் தன்னிச்சையான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.

மன்னிப்பு கேட்கமாட்டேன்:

முன்னதாக, கூட்டணி முறிவுக்குக் காரணமானவரான காடுவெட்டி குரு பேசுகையில், நாங்கள் கட்சியின் சார்பில் நடத்திய மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பேசியதை ஒட்டுக் கேட்டதே பெரும் தவறு. தனிப்பட்ட கூட்டம் அது. கூட்டணிக் கூட்டணமோ அல்லது பொதுக் கூட்டமோ அல்ல.

அதில் பலரும் பலவிதமாகப் பேசுவார்கள். அதையெல்லாம் இவர்கள் ஒட்டுக் கேட்பதா. இதற்காக நாங்கள்தான் நியாயமாக கோபித்துக் கொள்ள வேண்டும். எங்கள் மீது தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்குத் தொடுத்து வருகின்றனர். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்.

அன்றைய கூட்டத்தில் நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என்றார் குரு.

Nandri: Thatstamil

-xxx-xxx-xxx-xxx-xxx-xxx-xxx-xxx-xxx-xxx

எந்த நிமிடமும் ராஜினாமா செய்ய தயார்-அன்புமணி

சென்னை: எங்களுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதால் இழப்பு எங்களுக்கல்ல, திமுகவுக்குத்தான். அய்யா (டாக்டர் ராமதாஸ்) உத்தரவிட்டால் எந்த நிமிடத்திலும் எங்கள் பதவியை ராஜினாமா செய்ய நானும் அமைச்சர் வேலுவும் தயாராக உள்ளோம் என்று மத்திய நலத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:

பாமகவுக்கோ அதன் நிறுவனரான அய்யாவுக்கோ பதவியோ புகழோ பெரிதல்ல. கொண்ட கொள்கைதான் முக்கியம். அய்யாவை தேடி வந்த பதவிகள் ஏராளம். அனால் அவர் எதையுமே விரும்பியதில்லை.

நாம் எல்லோருமே எப்போதுமே போராளிகளாக களத்தில் நிற்பவர்கள். பதவி நமக்கு ஒரு சுமைதான்.

மணல் கொள்ளை, கல்விக் கொள்ளை, மதுக் கடைகள் மூலம் பாட்டாளி மக்களிடம் அரசு அடிக்கும் கொள்ளை, சிறப்புப் பொருளாதார மண்டலம் எனும் பெயரில் விவசாயிகளிடம் அடிக்கும் கொள்ளை என பலவற்றை எதிர்த்து தொடர்ந்து களத்தில் போராடுபவர்கள் நாம்.

நம்மைப் போன்ற கொள்கைவாதிகளின் கூட்டணியை முறித்துக் கொண்டதால் இழப்பு நமக்கல்ல, திமுகவுக்குத்தான்.

எனக்கு பதவி முக்கியமல்ல. இந்தப் பதவியை எனக்குத் தரும்போதே அய்யா சொன்னார்: ஒரு வருடம்தான் பார்ப்பேன், நீ சரியாக செயல்படாவிட்டால் வேறு யாருக்காவது இதைக் கொடுத்துவிடுவேன் என்று.

அய்யா சொன்னால் அடுத்த நொடியே நானும் வேலுவும் பதவி விலகத் தயார் என்றார் அன்புமணி.

Thursday, June 19, 2008

தேர்தலில் தி.மு.க. தோற்கும்: வைகோ

"தமிழகம், புதுச்சேரியில் உள்ள நாற்பது லோக்சபா தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது,என்று வைகோ ஆரூடம் தெரிவித்தார். சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ம.தி.மு.க., மண் டல மாநாட்டில் வைகோ பேசியதாவது:

ம.தி.மு.க.,வை அழிக்க முதல்வர் கருணாநிதி போட்ட திட்டமெல்லாம் தவிடு பொடியாகி விட்டது. பலம் பொருந்திய உங்களுடன் மோதி வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறோம். அண்ணாதுரை உருவாக்கிய பாசத்துடிப்பு, தி.மு.க.,வில் அடங்கிப் போயுள்ளது. திராவிட இயக்க வரலாற்றின் புதிய பரிமாணமாக ம.தி.மு.க., உள்ளது. கோட்டையில், குடும்பத்தில், கூட்டணியில் குத்து வெட்டு நடந்து கொண்டிருக்கிறது. அதனால், முதல்வர் கருணாநிதி இப்போது பலவீனமாக உள்ளார். அவர் பலவீனமாக இருக்கும் போது அவர் மீது கடுமையான கணைகளை தொடுக்க விரும்பவில்லை. குடும்பத்தினருக்காக திராவிட இயக்கத் தலைவர்களை கருணாநிதி மறந்து வருகிறார்.


நிர்வாக சீர்கேடு காரணமாக ஏற்கனவே மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் வெட்டு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் சொத்தை கொள்ளையடிக்கும் விதத்தில் திருட்டு மின்சாரம் மூலம் கடலூரில் தி.மு.க., மாநாடு நடந்துள்ளது. வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணியை மக்கள் தூக்கி எறிவர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள நாற்பது லோக்சபா தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது.

நான்கு ஆண்டுகளாக ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்டுகள் இப்போது தவறான பொருளாதாரக் கொள்கையால் நாடு பாதிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகின்றனர். இவர்கள் நடத்தும் திட்டமிட்ட நாடகத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியை இழக்கப் போகின்றனர். குத்துச் சண்டையில் மொத்தம் 16 ரவுண்டுகள் உள்ளன. அதுபோல், நாங்கள் இப்போது 15வது ரவுண்டில் உள்ளோம். சினிமாவில் ஹீரோ கடைசியில் ஜெயிப்பது போல் ம.தி.மு.க., ஜெயிக்கும்.இவ்வாறு வைகோ பேசினார்.

செய்தி: நன்றி: தினமலர் 20 ஜூன் 2008 (சென்னை பதிப்பு)

Wednesday, June 18, 2008

குசேலன் - ஸ்பெஷல் ஸ்டில்ஸ்














குசேலன் படத்தில் ரஜினியுடன் ஒரு பாடல் காட்சியில் விஜய், அஜீத், விக்ரம், சூர்யா நடிக்கின்றனர்.

ரஜினி, நயன்தாரா, பசுபதி, மீனா நடிக்கும் படம் குசேலன். கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்தது. படம் பற்றி இயக்குனர் வாசு, நிருபர்களிடம் கூறியதாவது:

குசேலன் படத்துக்கு 82 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. டப்பிங்கும் முடிந்துவிட்டது. வரும் திங்கட்கிழமை முதல் இசை சேர்ப்பு பணி தொடங்கும். ரஜினிக்குரிய பஞ்ச் வசனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 75 ஆண்டு தமிழ் சினிமா வரலாறு பற்றிய பாடல் படத்தில் இடம் பெறுகிறது.

Ôசினிமா... சினிமா... எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர் இவர்கள் இருந்த சினிமா... இனிமேல் இதுபோல் வருமா வருமாÕ என்று அப்பாடல் தொடங்குகிறது. இப்பாடலை மட்டும் படமாக்க உள்ளோம். இதில் ரஜினியுடன் விஜய், அஜீத், விக்ரம், தனுஷ் உட்பட பல நடிகர்கள் நடிக்க உள்ளனர்.

பாடல் கேசட் ஜூன் 30ம் தேதி வெளியிடப்படும். உலகம் முழுவதும் சாய்மீரா நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கில் இப்படத்துக்கு ÔகதாநாயகடுÕ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ், இசை. அரவிந்த் கிருஷ்ணா, ஒளிப்பதிவு. ஜூலை மாதம் படம் ரிலீஸ். இவ்வாறு பி.வாசு கூறினார். தயாரிப்பாளர்கள் புஷ்பா கந்தசாமி, விஜயகுமார் உடனிருந்தனர்.

செய்தி: படங்கள்: நன்றி: தினகரன் 19 ஜூன் 2008 (சென்னை பதிப்பு)

Tuesday, June 17, 2008

லட்சுமணன் கோடு இனி இல்லை - ராமதாஸ்

லட்சுமணன் கோடு என்கிற எல்லைக்கோடு இனி எங்களுக்கு இல்லை, மக்கள் பிரச்னைகளுக்காக இன்னும் அதிகமாகக் குரல் கொடுப்போம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு மேற்கொண்டுள்ள முடிவைப் பார்க்கையில், ‘இவர்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் செய்கிறார்கள்Õ என்ற புகழ்பெற்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. திமுக முடிவுக்கு எந்த வகையிலும் நாங்கள் பொறுப்பல்ல. அவர்கள் எழுப்பியுள்ள பிரச்னையில் எங்கள் தரப்பு நியாயங்களை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியபடி இந்த விவகாரம் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்த ஒரு நிகழ்வு பற்றியது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடித்து வைக்கப்பட்டு விட்ட விவகாரம். முதல்வரால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட விவகாரம். ஆனாலும், 6 மாதங்கள் கழித்து அதனை பிரச்னையாக்கி, அரசியலாக்கி இருக்கிறார்கள்.

தனிமனித விவகாரங்களை, தனிமனிதர்கள் மீது ஏற்படும் கோபதாபங்களை அரசியலாக்கி, அதனை முன்னிறுத்தி கசப்பான அரசியல் முடிவுகளை அறிவிப்பது என்பது தி.மு.க.வுக்கு புதிதல்ல. முன்பு ஒரு முறை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக என்.சங்கரய்யா இருந்தபோது, அவர் மீது ஏற்பட்ட தனிப்பட்ட கோபத்தால் அந்தப் பொறுப்பில் அவர் இருக்கும் வரை, மார்க்சிஸ்ட் கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டோம் என்று அறிவித்து செயல்பட்டது தி.மு.க. இப்போது அந்தச் சரித்திரம் திரும்பியிருக்கிறது. தி.மு.க. இன்னமும் மாறவில்லை என்பதை மீண்டும் அடையாளம் காட்டியிருக்கிறது.

கூட்டணி என்கிறார்கள். தோழமைக் கட்சி என்கிறார்கள். ஆனால், முடிவை மட்டும் அவர்களே மேற்கொள்கிறார்கள். ஏனென்று கேட்டால், நடப்பது தி.மு.க. ஆட்சிதானே என்று முதல்வர் சொல்கிறார். அவர்கள் எடுக்கும் அத்தனை முடிவுகளையும் நட்புக் கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று சொன்னால், பிறகு நட்புக் கட்சிகள் தனியாக ஏன் கட்சி நடத்திக் கொண்டிருக்க வேண்டும். கட்சிகளைக் கலைத்துவிட்டு தி.மு.க.வோடு இணைந்து விட்டு கூட்டத்தோடு கூட்டமாக ‘வாழ்கÕ என்று குரல் கொடுத்துக் கொண்டுதானே இருக்க வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தி.மு.க. விரும்புகிறது என்பதைத்தான் அவர்களின் முடிவு எடுத்துக் காட்டுகிறது. அதற்கு எப்போதோ முடித்து வைக்கப்பட்டுவிட்ட ஒரு நிகழ்வை காரணமாகக் காட்டி பிரச்னையை திசைதிருப்பி பா.ம.க. மீது பழி சுமத்தியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட முடிவை தி.மு.க. எடுத்துவிட்டதே என்பதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. ஏனெனில், தி.மு.க.வின் முடிவு அதிர்ச்சியாக இல்லை. இதுவரை எங்களைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு அதற்குள் நின்று செயல்பட்டுக் கொண்டிருந்தோம். தோழமை என்கிற உணர்வு அவ்வப்போது குறுக்கிட்டதால், சில பிரச்னைகளில் சுதந்திரமாக எங்களது கருத்துக்களைத் தெரிவிக்க முடியாமல் இருந்து வந்தது. இப்போது ‘லட்சுமணன் கோடு’ என்கிற எல்லைக்கோடு இனி எங்களுக்கு இல்லை. மக்கள் பிரச்னைகளுக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் இன்னும் அதிகமாகக் குரல் கொடுப்போம். எங்கள் பயணம் நேரானது. லட்சியம் உறுதியானது. அதிலிருந்து கிஞ்சித்தும் மாற மாட்டோம்.

செய்தி: நன்றி: தினகரன் 18 ஜூன் 2008 (சென்னை பதிப்பு)

Friday, June 13, 2008

திமுக கூட்டணி: பாமக நீக்கம் ?

திமுக கூட்டணியில் பாமக நீடிக்க வேண்டுமா என்பது குறித்து திமுகவின் செயல் திட்ட குழு இன்னும் நான்கைந்து நாட்களில் கூடி முடிவெடுக்கும் என்று முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அறிவித்திருக்கிறார். அதுவரை அமைதிகாக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பாமகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ காடுவெட்டி குருவின் வன்முறையை தூண்டும் பேச்சு குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
.
தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் கூட்டணியில் பிளவு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் பட்டநிலையில், பாமக கூட்டணியில் நீடிக்குமா என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்று முதலமைச்சர் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் முரசொலி பத்திரிகையின் செய்தி ஆசிரியர் சேதுவின் மகன் பாலமுருகனுக்கும், நர்மதாவுக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. முதலமைச்சர் கருணாநிதி இந்த திருமணத்தை நடத்திவைத்தார்.

திருமண விழாவில் வாழ்த்துரை வழங்கிய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பாமகவின் போக்கு குறித்து அதிருப்தி தெரிவித்து, அக்கட்சியுடன் கூட்டணி வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினார்.

இறுதியாக மணமக்களை வாழ்த்தி பேசிய முதலமைச்சர் கருணாநிதி கூறியதாவது:
ஆற்காடு வீராசாமி ஒரு சிடியை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். என்னுடைய தலையை வெட்டினால் என்ன, வீராசாமியின் தலையை வெட்டினால் என்ன? அல்லது ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரின் தலையை வெட்டினால் என்ன? மத்திய அமைச்சர் ராஜாவின் தலையை வெட்டினால் என்ன? எல்லாத்தலைகளையும் வெட்டும் போது வழிகின்ற ரத்தம்தான் என் தலையை வெட்டினாலும் வழியும். இவ்வளவு பெரிய பாதகத்தை, படுகொலையை செய்வதற்கு தயாராக இருக்கின்றார். ஒரு கட்சியினுடைய பெரிய பிரமுகர். அவர் கூட ஏதோ சங்கத்தின் தலைவர் என்று சொன்னார்.காடுவெட்டி குரு என்று சொல்கிறார்கள்.

காடுவெட்டி குரு. அவர் காடுவெட்டினாலும் சரி, மரம் வெட்டினாலும் சரி, மனிதர்களையே வெட்டினாலும் சரி. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியில் தளபதி என்று சொல்வார்கள். அந்த தளபதியே போருக்கு தயாராகிவிட்டார். வெட்டுவார்கள், குத்துவார்கள் என்ற இந்த அச்சுறுத்தல் இன்று, நேற்றல்ல என்னுடைய ஆரம்பகால அரசியலிலேயே நான் கேட்டு, கேட்டு புளித்துப்போன சொற்கள்.

திருவாரூரில் இருந்து கிளம்பும் போதே வாய்க்கரிசியை வாங்கிக் கொண்டு புறப்பட்டவன்தான் நான் என்று சொல்வது வழக்கம். இன்று கூட ராமதாஸ் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக புகார் கூறி யிருக்கிறார். அதற்கு என்ன சாட்சி?
பெண்கள் வேண்டுமானால் வீட்டில் ஒட்டுகேட்கலாம். ஒட்டுகேட்பதற்கு நிறைய நடைமுறைகள் உள்ளன.

மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். எல்லோரும் ஓட்டு வேண்டுமானால் கேட்கலாம். ஒட்டுகேட்க முடியாது. இந்த பேச்சு ஆபத்தான பேச்சாகும். சதி திட்டம் தீட்டி இப்படி பேசியிருக்கலாம். யார், யார் சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை சிடியை போட்டு போலீஸ் உயரதிகாரிகள் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

இப்படிப்பட்ட கட்சியோடு எவ்வளவுநாள் உறவு என்று வீராசாமி கேட்டார். கேட்டவர் கட்சியின் பொருளாளர். அதை கேட்டவர் கட்சியின் தலைவர். இன்னொருவர் தலைமை கழகத்தின் முதன்மை செயலாளர். இவர்களெல்லாம் நாங்கள் இங்கே இருக்கிறோம். நாங்கள் உங்களுக்கு அளிக்கின்ற உறுதிமொழி இன்னும் நான்கைந்து நாட்களில் கடலூர் மாநாடு முடிந்த பிறகு கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழுவை கூட்டி இவர்களோடு (பாமக) உறவு நீடிக்க வேண்டுமா என்ற கேள்விக்கான பதிலை ஐந்து ஆறு நாட்களில் அளிப்பேன்.

ஏனென்றால் இவ்வளவு வன்முறைகளை, இவ்வளவு கடுமையான சொற்களை தாங்கி கொண்டுதான் ஒரு கூட்டணியில் இருக்க வேண்டும் என்றால், அதைவிட அவமானம் ஒன்றும் இருக்க முடியாது. அந்த அவமானத்தை எப்படி துடைப்பது. என்பதற்கு உயர்நிலை செயல் திட்ட குழுவிலே முடிவெடுப்போம்.

உங்களுடைய கொந்தளித்து கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு ஆறுதலாக இதனை தெரிவிக்கிறேன். அமைதியாக இதை அணுக வேண்டும். இதை பற்றி யாரும் அவரவர் வாய்க்கு வந்தவாறுயெல்லாம் பேசக்கூடாது. உண்மைநிலை தெரிகின்ற வரையில் இதை பற்றி விமர்சிக்கக்கூடாது.

நாம் அதற்குரிய நடவடிக்கை எடுக்கின்ற வரையில், எந்த நடவடிக்கையாக, எந்த முடிவாக இருந்தாலும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

Thursday, June 12, 2008

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் இறுதியில் வெல்லும்'

சன் டிவி மற்றும் அதனுடன் தொடர்புள்ள எவரோடும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று வீரவசனம் பேசிவிட்டு, இப்போது சன் சேனல்களை பெற அழகிரி துடிப்பது ஏன் என்று எஸ்சிவி கேள்வி எழுப்பியுள்ளது.

எஸ்சிவி நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரையில் ராயல் கேபிள் விஷன் சார்பில் பத்திரிகையாளர்களை சந்தித்த மு.க.அழகிரி தன்னிலை விளக்கம் தந்துள்ளார். தன்னிலை விளக்கத் தோடு விடாமல் எஸ்.சி.வி. மீது சில இட்டுக் கட்டிய குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதால், அதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப் பட்டிருக்கிறோம்.

எஸ்.சி.வி நிறுவனம் கேபிள் ஆபரேட்டர்களை துன்புறுத்தியதாகவும், அதற்கு ஆதாரமாக தன்னிடம் சி.டி. இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். எஸ்.சி.வி. துன்புறுத்தி இருந்தால் அதன் இணைப்பை பெற்று இத்தனை ஆண்டு காலம் எஸ்.சி.வி.யுடன் அவர்கள் இணைந்து பணியாற்றி இருப்பார்களா? இதுபோன்ற புகாரை இத்தனை ஆண்டுகளும் யாரும் கூறவில்லை. ஏன், கடந்த ஓராண்டு காலமாகக்கூட யாரும் கூறவில்லையே. இப்போது சில அதிகாரிகள் மூலம் யாரையாவது மிரட்டி இவர்களே சி.டி. தயாரித்திருக்கலாமே ஒழிய இது முற்றிலும் இட்டுக்கட்டிய குற்றச்சாட்டாகும்.

பெரும்பாலான ஆபரேட்டர்கள் அவர்களோடு இணைந்து விட்டதாகவும், சன் குழும இணைப்பு இல்லாததால் பொதுமக்கள் யாரும் கவலைப்படவில்லை என்றும் அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். அவர்களோடு இணைந்த ஆபரேட்டர்கள் எப்படி இணைந்தார்கள், ஏன் இணைந்தார்கள், எப்படிப்பட்ட நெருக்கடிகளினால் இணைந்தார்கள் என்பது அவர்களது மனசாட்சிக்கே தெரிந்த விவகாரம். பொதுமக்களும் அறிந்த விவகாரம். அதனுள் செல்ல நாங்கள் விரும்பவில்லை.

சன் டிவி குழும இணைப்பு இல்லாததால் பொதுமக்கள் குறிப்பாக தாய்மார்கள் அடைந்துள்ள கொதிப்பின் காரணமாகத்தானே தன்னிலை விளக்கம் அளிக்க புறப்பட்டிருக்கிறார்கள். பிறகு முழு பூசணியை சோற்றில் மறைக்கும் முயற்சியில் ஈடுபடலாமா? பொதுமக்கள் கொதிப்பு இல்லை என்றால் சன் குழும இணைப்பை பெற டிராய் மூலம் முயற்சிகள் நடைபெறுவதாக கூறுவது ஏன்?

பொதுமக்களுக்கு கேபிள் டி.வி. இணைப்புகளை குறைந்த கட்டணத்தில் தரவேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே மு.க.அழகிரிக்கு இருந்தால், அதிமுக ஆட்சி நடைபெற்றபோது ஆர்.சி.வி. நிறுவனத்தை தொடங்காதது ஏன்? சன் டிவி மற்றும் அதனோடு தொடர்புடையவர்களோடு ஒட்டுமில்லை உறவுமில்லை என்று சில நாட்களுக்கு முன்பு வீரவசனம் பேசிவிட்டு, இப்போது சன் குழும இணைப்பை பெற டிராய்க்கு போகப்போவதாகவும் நீதிமன்றம் மூலம் முயற்சிக்கப் போவதாகவும் துடியாய் துடிப்பது ஏன்?
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் இறுதியில் வெல்லும் என்பதை தவிர வேறு எதுவும் இப்போது கூற நாங்கள் விரும்பவில்லை.

இவ்வாறு எஸ்சிவி கூறியுள்ளது.


x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

தென்மாவட்டங்கள் முழுவதும் கேபிள் டிவியை தொடங்குவேன்





மதுரை, ஜூன் 13: தென் மாவட்ட்ங்கள் முழுவதும் கேபிள் டிவி தொடங்குவேன் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று நிருபர்களிடம் அழகிரி கூறியதாவது:

பொதுமக்கள் நலனுக்காக ராயல் கேபிள் விஷன் என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளோம். சன் நெட்வொர்க் சேனல்களை எங்களுக்கு தாருங்கள் என்று சன் குரூப்பை சேர்ந்த சேனல் பிளஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பம் அனுப்பினோம். பதில் இல்லை. கடிதம் அனுப்பினோம். அதற்கும் பதில் இல்லை. எனவே சன் சேனல்களை எங்களுக்கு வழங்க உத்தரவு போடுமாறு டிராய் அமைப்பில் மனு கொடுத்திருக்கிறோம்.

ஸ்டார் எங்களுக்கு 20 சேனல் தந்து விட்டது. ஜீ 25 சேனல் தந்து விட்டது. ராஜ் 3 சேனல் தந்திருக்கிறது. ஜெயா கூட தந்துவிட்டது. சன் மட்டும்தான் தரவில்லை.

நாங்கள் ஆபரேட்டர்களை இழுக்கவில்லை. அவர்களாகத்தான் எங்களிடம் வந்தார்கள். எஸ்சிவி தங்களை அடிமையாக வைத்திருந்ததாக கூறினார்கள். நீங்கள் வேறு, நான் வேறு இல்லை என்று சொல்லி சேர்த்துக் கொண்டேன்.

இவ்வாறு அழகிரி கூறினார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

? சன் உங்களுக்கு சிக்னல்கள் தரவில்லை என்கிறீர்கள். ஆனால் நேற்று சில இடங்களில் சன் டிவி தெரிந்தது. இது எப்படி?

?? இப்போது 85 சதவீத ஆபரேட்டர்கள் எங்களிடம் உள்ளனர். மீதிப்பேர் எஸ்சிவி இணைப்பில் உள்ளவர்கள். அவர்கள் ஒளிபரப்பி இருப்பார்கள்.

? உங்கள் ஆர்சிவி ஒளிபரப்பும் பகுதியிலேயே சன் டிவி தெரிந்ததே?

?? லோக்கல் ஆபரேட்டர்கள் ஏதாவது செய்திருக்கலாம். அது எனக்கு தெரியாது.

? சன் டிவி தெரியவில்லை என செய்தி அறிவிக்கிறீர்கள். கே டிவி, சன் நியூஸ், சன் மியூசிக் சேனல்களுக்கு அப்படி அறிவிப்பு செய்யவில்லையே?

?? சன் நெட்வொர்க்கிடம் நாங்கள் சன் பேக்கேஜ் கேட்டுதான் விண்ணப்பித்துள்ளோம். அதில் நீங்கள் சொல்கிற எல்லா சேனல்களும் அடங்கும்.

? தமிழகம் முழுவதும் உங்கள் கேபிள் கம்பெனியை விரிவுபடுத்த போகிறீர்களா?


?? முதல் கட்டமாக தென்மாவட்டங்களில் தொடங்கப் போகிறேன். சன் சேனல்கள் கிடைத்துவிட்டால் வேகமாக விரிவுபடுத்துவேன்.

? அரசு துவக்க உள்ள கேபிள் டிவியில் ஆபரேட்டர்கள் சேர வேண்டும் என்று முதல்வர் அறிவித்துள்ள நிலையில் நீங்கள் தனி கேபிள் துவக்கியுள்ளீர்களே?

?? அதைப் பற்றி எனக்கு தெரியாது. நாங்கள் தனியார். தனியாக தொழில் தொடங்கியுள்ளோம்.

இவ்வாறு அழகிரி கூறினார். பேட்டியின்போது ராயல் கேபிள் விஷன் நிர்வாக இயக்குனர் துரை அழகிரி, இயக்குனர்கள் ராஜபிரபு, நாகேஷ், மதுரை துணைமேயர் மன்னன், தமிழக அரசு மக்கள் தொடர்பு அதிகாரி சரவணன், உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் பாஸ்கரன், சாலி தளபதி ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி: படம்: நன்றி: தினகரன் 13 ஜூன் 2008 (சென்னை பதிப்பு)

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பி.கு: நீங்கள் கூகிள் ரீடர் அல்லது அது போன்ற செயலிகளால் பதிவுகளைப் படிப்பவரா ? வலைப்பதிவின் புதிய பகுதிகளான ' சொன்னாங்க..சொன்னாங்க,,!!' மற்றும் 'படம்..பப்படம்' பகுதியைக் காண வலைப்பதிவு முகவரிக்கு செல்லவும்.

Wednesday, June 11, 2008

யாரு ஸ்மார்ட் லுக்கிங் - ரஜினியா ? கமலா ?

இன்றைய 'ஹிண்டு'வின் கடைசிப் பக்கத்தில் வந்துள்ள இந்த போட்டோவைப் பார்த்துவிட்டு சொல்லவும். யார் ஸ்மார்ட் ? ரஜினியா ? கமலா ?



Exchanging notes: Rajinikanth and Kamal Haasan at the venue of a special screening of the film, in Chennai on Tuesday.

செய்தி: படம்: நன்றி: த ஹிண்டு

CHENNAI: While Kamal Haasan fans wait for the release of Dasavatharam, billed as his magnum opus, many celebrities from the tinsel world have already had a chance to watch the film. Kollywood’s crème, including superstar Rajinikanth, as well as others, were invited to special screenings here on Tuesday and Wednesday.

And when the film concluded, they were effusive in their praise of Kamal, and director K.S. Ravikumar.

“Extraordinary,” Rajinikanth is reported to have exclaimed on Tuesday. The superstar was apparently overwhelmed by the film and Kamal’s performance. Scenes built around the tsunami particularly came in for praise. Impressed by Kamal’s different avatars, Rajinikanth discussed the details with him during the intermission.

Yesteryear comedienne Manorama, who was moved to tears watching the film, called Kamal the “real ulaga nayagan [universal hero].” Stars Satyaraj, Sarath Kumar, Radhika, Suriya, Prabhu, ‘Jayam’ Ravi and Bharat, and directors Dharani and Vishnuvardhan, were at the screenings.

K. Balachander, who introduced Kamal to the film world, was reported to have been astonished by Dasavatharam. The veteran director, who spent a sleepless night on Tuesday after watching the film, visited Ravikumar and Kamal at their homes on Wednesday and presented them shawls.

Veteran actor Nagesh, who was at a preview, lauded Kamal for his performance.

Dasavatharam, set to be released on Friday, features Kamal Haasan in 10 roles. The film is a mix of action, humour and romance, and has some impressive special effects by Hollywood-fame Brian Jennings.

More pictures at The Hindu Gallery

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
பி.கு: நீங்கள் கூகிள் ரீடர் அல்லது அது போன்ற செயலிகளால் பதிவுகளைப் படிப்பவரா ? வலைப்பதிவின் புதிய பகுதிகளான ' சொன்னாங்க..சொன்னாங்க,,!!' மற்றும் 'படம்..பப்படம்' பகுதியைக் காண வலைப்பதிவு முகவரிக்கு செல்லவும்.

Monday, June 9, 2008

நாமக்கட்சி - தொடங்கினார் கார்த்திக்



நடிகர் கார்த்திக் தொடங்கினார் நாடாளும் மக்கள் கட்சி.

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை நடிகர் கார்த்திக் நேற்று தொடங்கினார். கட்சிக் கொடியையும் அவர் அறிமுகம் செய்தார்.


பார்வர்டு பிளாக் கட்சியில் தலைவராக நடிகர் கார்த்திக் இருந்தார். அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி அந்த கட்சி மேலிடம் அறிவித்தது. இதன்பின், புதிய கட்சி தொடங்குவது பற்றி தனது ஆதரவாளர்களிடம் கார்த்திக் ஆலோசித்து வந்தார். நேற்று அவர் புதிய கட்சியைத் தொடங்கினார். சென்னை தி.நகரில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

ஒரு குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட சமுதாயத்தினருக்காக இருந்த கட்சியை 12 மாவட்டத்திற்கு விரிவுபடுத்தினேன். அது மாபெரும் இயக்கமாக வளரும் நிலையில் என் பதவி பறிக்கப்பட்டது. இப்போது, ‘அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி’ என்ற புது கட்சியை தொடங்குகிறேன். சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நிறத்தில் கட்சிக் கொடி இருக்கும். கொடியில் முத்துராமலிங்கத் தேவர் படம் இடம் பெற்றிருக்கும். இதில் சில மாறுதல்கள் வரலாம்.

இனிமேல் நீங்கள் பார்க்கப் போகும் கார்த்திக் வித்தியாசமானவன். எங்கள் கட்சி மக்களின் உரிமையை பெற்றுத் தரும் இயக்கமாக இருக்கும். கட்சியின் பெயரை, கொள்கையை உறுதி செய்த பின், அதை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வேன்.

நான் இப்போதுதான் கட்சி ஆரம்பித்துள்ளேன். ஆரம்பித்தவுடனேயே, ‘இதை செய்வேன், அதை கிழித்து விடுவேன்’ என்று எல்லாம் நான் கூற மாட்டேன். தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப என்னால் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய பாடுபடுவேன்.
இவ்வாறு கார்த்திக் கூறினார்.

செய்தி: படம்: நன்றி: தினகரன் 10 ஜூன் 2008 (சென்னை பதிப்பு)

தசாவதாரம்..வியந்து போன கருணாநிதி!

உலக நாயகன் கமல்ஹாசனின் தசாவதாரத்தின், திரை அவதாரத்தைப் பார்த்து முதல்வர் கருணாநிதி பார்த்து, ரசித்து, வியந்து கமல்ஹாசனையும், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி மற்றும் குடும்பத்தினர், அமைச்சர்கள், கவிஞர் வைரமுத்து குடும்பத்தினர் ஆகியோருக்காக சென்னை போர்பிரேம்ஸ் திரையரங்கில் நேற்று மாலை சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

படம் பார்க்க வந்த முதல்வரை படத்தின் நாயகன் கமல் மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

படத்தை முழுவதும் பார்த்து முடித்த பிறகு கமலை அழைத்து வெகுவாகப் பாராட்டியுள்ளார் கலைஞர். "ரொம்ப உழைச்சிருக்கய்யா... இந்த கடுமையான உழைப்புக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

தசாவதாரத்தை ஆங்கிலத்தில் டப் செய்யாமலேயே ஹாலிவுட்டுக்குத் தாராளமாக கொண்டு செல்லலாம். அவர்களுக்கு நிகராக உன்னாலும் (கமல்) படத்தை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டாய் என்று பாராட்டித் தள்ளியுள்ளார் முதல்வர்.

படத்தின் ஒவ்வொரு காட்சியின்போதும் கமலிடம், "இது நீதானாய்யா... நம்பவே முடியலையே..." என்று வியந்து போனாராம்.

கலைஞருடன் படம் பார்த்த முக்கியப் பிரமுகர் ஒருவர், படம் குறித்து நம்மிடம் கூறுகையில், இந்த மாதிரி ஒரு படம் இதுவரை தமிழ் சினிமா சரித்திரத்தில் வந்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கமல் அற்புதம் செய்திருக்கிறார் என்றார் வியப்பு விலகாமல்.

கமல் போட்டிருக்கும் 10 வேடங்களில் ஒன்று 110 வயது கிழவர் கெட்டப். இது கமல்தானா என்று யாராலும் கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு மேக்கப் அதிசயம் நிகழ்த்தியிருக்கிறாராம் இந்த வேடத்தில்.

அதேபோல தெலுங்குப் பேசும் பாத்திரம் ஒன்றிலும் அசல் ஆந்திராக்காரராகவே மாறியிருக்கிறாராம்.

படத்தின் ஹைலைட் என்று சொல்லும் அளவுக்கு வந்திருப்பது நெல்லைத் தமிழ் பேசியபடி கலக்கும் கமல் அண்ணாச்சிதானாம்.

பரமக்குடியில் பிறந்து சென்னையில் வளரந்த கமல் என்ற நல்ல நடிகருக்குள்ளே இத்தனை தத்ரூபமாக ஒரு நெல்லை அண்ணாச்சி ஒளிந்திருப்பதைக் கண்டு வியந்து போன முதல்வரும் அவருடன் படம் பார்த்த இதர விஐபிக்களுமே கைத் தட்டி ரசித்திருக்கிறார்கள்.

இந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 45 நிமிடங்களுக்கு மேல் கிராபிக்ஸ் இடம் பெற்றுள்ள படமும் தசாவதாரம்தானாம். அதிலும் சுனாமியில் கமல் மாட்டிக்கொள்வது போன்ற காட்சிகளில் கிராஃபிக்ஸ் எது, நிஜம் எது என்று தெரிந்து கொள்ளவே முடியாத அளவுக்கு அத்தனை பெர்பக்ஷன் காட்டியிருக்கிறார்களாம்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வருகிற செவ்வாய்க்கிழமை தசாவதாரம் படத்தை ஆங்கில சப் டைட்டிலுடன் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

தசாவதாரம் வரும் 13ம் தேதி திரைக்கு வருகிறது
Nandri: Thatstamil

Wednesday, June 4, 2008

ஸ்டாலின் லண்டன் பயணம்

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை திடீரென்று லண்டனுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சிகிச்சைக்காக அவர் லண்டன் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

கட்சியில் தனது மூத்த சகோதரர் மு.க. அழகிரிக்கு பொறுப்பு கொடுப்பது தொடர்பாக ஸ்டாலினுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முதல்வருடன் கோபித்து கொண்டு அவர் சமீபத்தில் பெங்களூர் சென்றார்.

அங்குள்ள சகோதரி செல்வி வீட்டில் தங்கியிருந்தார். அங்கிருந்து அவர் வெளிநாடு செல்லவிருப்பதாக கூறப்பட்டது. முதல்வரின் பிறந்த நாளில் கலந்து கொண்டுவிட்டு பிறகு வெளிநாடு செல்லலாம் என்று தாயார் கூறிய யோசனையை தொடர்ந்து அவர் கடந்த 1-ந் தேதி சென்னை திரும்பினார்.

பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று முதல்வர் பிறந்த நாள் விழாவிலும் கலந்து கொண்டார். இன்று காலை 8.10 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் அவர் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் துணைவியார் துர்கா ஸ்டாலின் உடன் சென்றார்.

மேலும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படும் ராஜா சங்கர், ரெட்டி ஆகியோரும் அதே விமானத்தில் சென்றனர்.

லண்டனில் ஸ்டாலின் 10 நாட்கள் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. நுரையீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு ஸ்டாலின் சிகிச்சை செய்து கொள்ள லண்டன் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. தேவைப்பட்டால் அவர் லண்டனில் கூடுதல் நாட்கள் தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது.

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

Monday, June 2, 2008

கலைஞர் கருணாநிதி - 85


இன்று 85ஆம் பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவரின் எண்ணமும், எழுத்தும், தமிழ்பால் கொண்டுள்ள பற்றும் இன்னும் பலநாள் தேவை.

வாஜ்பாய், மன்மோகன் சிங், அத்வானி, அச்சுதானந்தன், ஜோதிபாசு, அப்துல் கலாம், அன்பழகன் என 75+ பெரியவர்கள் பலரும் இன்று நாட்டின் போக்கை நிர்ணயிப்பதில் இருக்கிறார்கள் / இருந்திருக்கிறார்கள். அவரவர்களும் அவர்கள் துறையில் கில்லாடிகள் தான். அவர்கள் கட்சிக்காகவும் அவர்கள் மாநிலத்துக்காகவும் பல வருடங்களாக பொதுவாழ்க்கையில் தங்களை அர்பணித்தவர்கள். இவர்கள் எல்லோரையும் விட தமிழக முதல்வருக்கு பல்துறையிலும் வித்தகம் உண்டு.

ஒரு அரசியல் தலைவர் 85 வயதில் இவ்வளவு பிரச்னைகளை (குடும்ப, தோழமைக் கட்சிகள், மக்கள் பிரச்னைகள்) சமாளித்து எல்லோரையும் அரவணைத்து ஓடத்தை செலுத்துகிறார் என்றால் அவரது உழைப்பையும் மதியூகத்தையும் வியக்க வேண்டும். உண்மையில் அவருக்கு இன்று பிரச்னையே கொடுக்காத ஒருவர் என்றால் அது ஜெயலலிதாதான். அவர் பாட்டுக்கு ஓய்வு என ஏதோ ஒரு எஸ்டேட்டிலோ பங்களாவிலோ இருந்துகொண்டு அவ்வப்போது அறிக்கைகளும், தெரு லெவெல் போராட்டங்களும் அறிவித்துக்கொண்டு கருணாநிதிக்கு குறைந்த தலைவலியாக இருக்கிறார்.

முதல்வர் கருணாநிதி என்ன செய்ய வேண்டும் (எனது பார்வையில்) :

1. வெகு விரைவில் ஸ்டாலினுக்கு அரசு பொறுப்பில் முக்கிய பதவியை (அது முதல்வர் பதவியோ இல்லை துணை முதல்வர் பதவியோ) கொடுத்து தான் ஆக்டிவாக இருக்கும் போதே அவருக்கு ஒரு coach ஆகவும் mentor ஆகவும் இருந்து வழிநடத்த வேண்டும். கருணாநிதியின் காலத்திற்குப் பிறகு ஸ்டாலினுக்கு mentor ஆக இருக்க நிச்சயம் யாரும் வரமாட்டார்கள் (அட்லீஸ்ட் பெரிய தலைகள்). அழகிரியைப் பிடிக்காத தற்போதைய அமைச்சர்கள் வேண்டுமானால் ஸ்டாலினுடன் சேர்ந்து அவருக்கு தவறான ஆலோசனைகளைத் தறமுயலலாம்.

2. அழகிரிக்குக் கட்சியில் முக்கிய பதவி கொடுத்தால் ஸ்டாலினால் சுதந்திரமாக செயல்படமுடியாது என்று எண்ணினால் அதை இருவரையும் கூப்பிட்டு பேசி முடிவெடுக்க வேண்டும். எந்த விதத்தில் கட்சிப் பொறுப்போ ஆட்சிப்பொறுப்போ பகிர்ந்தால் கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வராது என இருவரும் ஒத்துப்போகிறார்களோ அந்த விதத்தில் முடிவெடுக்கவேண்டும். இதனை இன்னும் தள்ளிப்போடுதல் நல்லதல்ல. it is too late already..!

3. கனிமொழிக்கு அமைச்சர் பதவிதான் வேண்டும் என்பது ஆலிவர் ரோடு இல்லாளின் நிபந்தனை என்றால் அதை சீக்கிரம் செயல்படுத்துவது புத்திசாலித்தனம். அமைச்சராக அவரின் பணியை ஆய்வு செய்து அவருக்கு வழிகாட்டியாக இருக்க இது தான் சரியான தருணம்.

4. சினிமாக் காரர்களின் குத்தாட்ட நிகழ்ச்சிகளை நிறுத்த வேண்டும் அல்லது அதற்கு ஊக்கம் கொடுக்கும் அளவில் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் போக்கை நிறுத்தவேண்டும்

5. நெஞ்சுக்கு நீதி 5ஆம் பாகத்தை விரைவில் எழுதி முடித்து வெளியிடவேண்டும்

6. தனது குடும்ப சொத்துக்கள் மற்றும் கட்சி சம்பந்தப்பட்ட சொத்து அல்லது விஷயங்களை எந்த மாதிரி அவர் விருப்பமோ அவ்வாறு பங்கிட்டு அதனை உயிலாகவோ தனது நம்பிக்கைக்குரியவரிடமோ சேர்த்தோ அல்லது அறிவித்து விடவோ வேண்டும். இப்படி ஒரு தலைவருக்குப் பின் இப்படியெல்லாம் சண்டையா என்கிற விதத்தில் அவருக்குப் பின் அடிதடிகள் நடைபெறாமலிருக்க இது உதவும்

7. தமிழ்நாட்டில் படிக்கும் எல்லா மாணவ / மாணவிகளும் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படிக்க கட்டாயமாக்கவேண்டும் (12ஆவது வரை). மற்றத் திட்டங்களான சிபிஎஸ் இ, மெட்ரிகுலேஷன், ஐசிஎஸ் இ போன்றவர்கள் பிரெஞ்சு, இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு என பாடதிட்டதிற்காக படித்தாலும், தமிழை ஒரு அடிஷனல் பாடமாக பயின்று பாஸ் செய்யவேண்டும் என சட்டம் இருக்கவேண்டும்

8. தொழில்துறையில் பின் தங்கிய மாவட்டங்களில் ஒரு தொழிற்சாலையாவது இன்னும் ஒரு வருடத்தில் துவங்கிடவேண்டும் (சமீபத்தில் பெரம்பலூர் / அரியலூரில் எம்.ஆர்.எஃப் தொழிற்சாலைக்கான ஒப்பந்தம் போல)

9. தமிழகத்தின் எல்லா ஆறு, ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, தூர்வாரி மழை நீரை சேமித்துவைத்து வளம் பெருக வழிகாணவேண்டும்

10. அட்லீஸ்ட் இன்னும் 10 ஆண்டுகளாவது அவர் உடல்நலம் முழு ஃபிட்னஸ் லெவலில் இருக்குமாதிரி தினமும் யோகாவும், உடற்பயிற்சியும், ஓய்வும் எடுத்து தமிழக அரசியலுக்கு வழிகட்டியாக இருக்க வேண்டும்.

இதில் எத்தனை நிறைவேறும் என்பது இன்னும் ஒரு வருடத்திற்குப் பிறகு பார்ப்போம்.

படம்: நன்றி: தினகரன்

Sunday, June 1, 2008

சேது-ராம்: கருணாநிதி பிறந்த நாள் செய்தி




செய்தி: படம்: நன்றி: தினகரன் (2- ஜூன் 2008 - சென்னை பதிப்பு)