Friday, June 15, 2007

படம் பாத்துட்டீங்களா ?

இன்றே இப்படம் வெளியானது. நாட்டுக்கு மிகவும் தேவையான படம். நேற்றைய ஸ்டார்.... அட சும்மா பில்டப் தானுங்க்ணா.



பெரிதாகப் பார்க்க படத்தின் மீது க்ளிக்கவும்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் முதல்வர் கருணாநிதி நேற்று இரவு சந்தித்தார். அப்போது, மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழியை சோனியாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அருகில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ராஜாத்தி அம்மாள், கனிமொழியின் மகன் ஆதித்தியன்.

Nandri: Dinakaran
Page-7 - 15-June-2007

Tuesday, June 12, 2007

மும்பையை கலக்கும் தென்னக புரோகிதர்கள்

தமிழகத்தில் இருந்து சென்ற புரோகிதர்கள், வேத வித்தகர்களுக்கு மும்பையில் நல்ல வாய்ப்பும் வருமானமும் கிடைப்பதாக இங்கிருந்து சென்றவர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் இருந்து சென்று மும்பையில் செட்டிலாகிவிட்ட எம்.வி.கணேச சாஸ்திரி என்பவர், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தஞ்சை மாவட்டம் மெலட்டூர்தான் சொந்த ஊர். பெரிய குடும்பம், ஏராளமான பொறுப்புகள். சிறுவயதிலேயே வேதம் படித்த போதிலும் உள்ளூரிலும் சுற்றுவட்டாரத்திலும் பெரிதாக வேலை இல்லை. 45 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி மும்பை வந்தேன்.

15 ரூபாய் சம்பளத்துக்கு மாதுங்கா ராமர் கோயிலில் வேலைக்கு சேர்ந்தேன். கோயில் வாசலிலேயே படுத்துக் கொள்வேன். கோயில் அர்ச்சக பணிக்கும் வேதம் ஓதுவதற்கும் இங்கு நல்ல மதிப்பு, மரியாதை. காசும் நிறைய கிடைக்கிறது. கோயிலில் டூட்டி பார்த்ததுபோக மீதி நேரத்தில் கல்யாணம், காதுகுத்து, கிரகப்பிரவேசம், பெயர் சூட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறோம். அம்பானி குடும்பம், அமிதாப் குடும்பத்தில் ஏதாவது விசேஷம் என்றால் என்னைத்தான் கூப்பிடுவார்கள்.

தமிழ்நாடு, கேரளா என தென்மாநிலங்களைச் சேர்ந்த புரோகிதர்கள், அர்ச்சகர்கள் 200-க்கும் அதிகமானவர்கள் இப்போது மும்பையில் ஜாம்ஜாம் என்று இருக்கின்றனர்.

Nandri: Tamil Murasu
11-June-2007 - Page 6

Original News - From Times of India

Sunday, June 10, 2007

ஜனதா பூரி - ஜனதா சாப்பாடு

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் வட மாநில ரயில்வே ஸ்டேஷன்களில் அதிகளவு கேன்டீன்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தென்னக ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், மதுரை, ஜோலார்பேட்டை, ஈரோடு ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் இதே போன்ற கேன்டீன்கள் செயல்படுகின்றன. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் தலைமையிடம் சென்னையில் உள்ளது. கொச்சியில் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து நேரடியாக தரமான காய்கறிகள், சன் பிளவர் ஆயில், பொன்னி பச்சரிசி (உயர்ந்த ரகம்) போன்றவை நேரடியாக கேன்டீன்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன.


Image Source/Courtesy: Dinamalar

கடந்த புத்தாண்டு முதல் ரூ.10க்கு "ஜனதா டிபன்' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் 175 கிராம் எடையுள்ள ஏழு பூரிகள், 150 கிராம் எடையுள்ள உருளைக்கிழங்கு மசாலா, 10 கிராம் ஊறுகாய் ஆகியவை இடம் பெற்றிருந்தன. தற்போது ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் காலை மற்றும் மாலை நேரங்களில் பேக் செய்யப்பட்ட "ஜனதா பூரி' விற்பனை நடக்கிறது. நேற்று முன்தினம் முதல் ஈரோடு, மதுரை, ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் "ஜனதா சாப்பாடு' அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

தயிர் சாதம் 200 கிராம், புளி சாதம் 200 கிராம், எலுமிச்சம் ஊறுகாய் 10 கிராம், ஒரு பிளாஸ்டிக் ஸ்பூன் ஆகியவை தனித்தனியாக அழகாக பேக் செய்யப்பட்டு, அனைத்தும் ஒரு பேப்பர் பாக்கெட்டில் வைத்து விற்கப்படுகிறது. புளிசாதத்துக்கு பதில் 200 கிராம் எடையுள்ள சாம்பார் சாதமும் வாங்கிக் கொள்ளலாம்.

ஈரோடு நகரில் நடுத்தர ஓட்டல்களில் ரூ. 15க்கு "அன்லிமிட்' சாப்பாடு கிடைக்கிறது. இதில் அரிசி சாதம் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். சாம்பார், ரசம், வத்தல் குழம்பு, மோர், இரண்டு காய்கள், அப்பளம், ஊறுகாய் ஆகியவை ரூ. 15க்கு கிடைக்கிறது. சிறிய ஓட்டல்களில் அளவு சாப்பாடு ரூ. 12க்கு கிடைக்கிறது. இதில் 350 கிராம் எடைக்கு சாதமும், சாம்பார், ரசம், வத்தல் குழம்பு, மோர், இரண்டு காய்கள், அப்பளம், ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகிறது. உயர்தர ஓட்டல்களில் மதியம் "அன்லிமிட்' சாப்பாடு ரூ.20 முதல் விற்கப்படுகிறது.

ஆனால், ரயில்வே ஸ்டேஷனில் தயிர்சாதமும், புளிசாதமும் மட்டுமே கிடைக்கிறது. தொட்டுக்கொள்ள ஊறுகாய் மட்டும் தான்.மதியம் வேளையில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டு ரயில்கள் மட்டுமே வருகின்றன. அப்படியிருந்தும் "ஜனதா பூரி' 100 பார்சல்கள் வரை விற்பனையாகிறது. பூரி பார்சலை வெளியாட்களும் வாங்கிச் செல்கின்றனர் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. "ஜனதா பூரி'க்கு கிடைத்த வரவேற்பு "ஜனதா சாப்பாடு'க்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான்.

Nandri: Dinamalar

Friday, June 8, 2007

தமிழனைப் பற்றி கருணாநிதி கவிதை

அதிமுகவினர் தனது உருவ பொம்மைகளை எரித்து நடத்திய போராட்டம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி கவிதை எழுதியுள்ளார். பதுமைகளைக் கொளுத்தி பரவசம் காண்பது பண்பாடா ?

முதல்வரின் கவிதை

தமிழன் என்று நெஞ்சு நிமிர்த்துகிறாய்-
தயக்கமின்றி ஏற்றுக் கொள்ளத் தடையேதுமில்லை.

தமிழர்க்கு நான் தலைவனோ இல்லையை தமிழ்க் குலத்தின்
தலைக்கோடியில் இல்லாவிடினும் கடைக்கோடித் தமிழ்த் தொண்டன் நான்

எதிர்வரிசைத் தலைவியென்னை ஏற்றிப் போற்றிப் பாட வேண்டும்; என
என்றுமே நான் கேட்கவில்லை-

என் பிறந்த நாளுக்குக் கூட வாழ்த்து அவரிடம் எதிர்பார்க்கவில்லை-
நன் மொழி கூறாவிடினும்-

எரியீட்டி பாய்ச்சுதல் போல
எழுத்தெல்லாம் விஷமாக்கி அர்ச்சனை தேவைதானா

இட்லர் என்றும் கம்சன் என்றும் துரியன் என்றும்
எத்தனை வித வசைமாரி உண்டோ அத்தனையும் பொழிந்து விட்டு

அது எதிர் விளைவாய் எகிறி வரும்போது மட்டும்
ஒரு எரிமலையாய் பொங்கி சதித் திட்டம் வகுத்து

எதுவும் அறியாத் தொண்டர்களை ஏவியே விட்டு-என்னுருவப்
பதுமைகளைக் கொளுத்தி விட்டுப் பரவசம் காண்பதுதான் பண்பாடா

அந்தப் பண்பாட்டைப் பாராட்டி மகிழ்வதற்கும்
பழம் பகையை என் மீது உமிழ்வதற்கும்

பரபரப்பாய் ஒரு தமிழன் பாய்கின்றான்; அந்தோ
விறுவிறுப்பாய் வீசுகின்றான் கத்தியை முதுகில்-

அய்யகோ; அவனுந்தான் தன்னைத் தமிழன் என மெய்யாகச் சொல்லிக் கொள்கிறானா

அல்லால் நெஞ்சறிந்து பொய்யாகக் கூறித் திரிகின்றானா


Nandri: Thatstamil

அப்படியே இதையும் படிங்க

அதிமுகவை போல திமுக அராஜக வன்முறையில் ஈடுபட்டதில்லை- அன்பழகன்

Wednesday, June 6, 2007

ஆகஸ்ட் திட்டம் - குமுதம் ரிப்போர்ட்டர்

கலைஞர் குடும்பத்திலும் "ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாக கனிமொழிக்கு ஏதாவது செய்யுங்கள்... ஸ்டாலினை ஆட்சி பீடத்தில் அமர்த்துங்கள்... " என்றும் கலைஞருக்கு நெருக்கடி தந்திருக்கிறார்கள். அதனால்தான் இவ்வளவு விரைவாக கனிமொழி எம்.பி.யாக்கப்பட்டிருக்கிறார். ஸ்டாலினும் மிக விரைவில் பதவி உயர்வு அடைவார் என்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.


Image,News Courtesy: Kumudam Reporter

‘‘ஏன் எல்லோரும் ஆகஸ்டையே குறிவைக்கிறார்கள்...?’’ என்ற கேள்வியோடு கலைஞர் குடும்பத்திற்கும் மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமானவர்களை வலம் வந்தால், ‘எல்லாம் ஜோதிடம்தான் காரணம்!’ என்ற பதில் வந்து நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.

கலைஞர்_மாறன் இருவர் குடும்பத்திலும் உள்ள பெண்கள் கோயில், குளம் என்று போவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்கள் என்பது தவிர, ஜோதிடத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள் என்பதும் உள்வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த இரண்டு தரப்பும் தங்களுக்கு நெருக்கமான ஜோதிடர்களை ஆலோசித்ததில் ஒரே மாதிரியாக அவர்கள் சொன்ன தகவல், ‘வரும் ஆகஸ்ட் 5_ம் தேதியன்று நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி, ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல. அதனால் ஆட்சி அதிகாரம் கைமாறும். எதிரும் புதிருமானவர்கள் ஒன்றுசேரும் வகையில் விநோதமான அரசியல் மாற்றங்களும் நிகழும்!’ என்பதுதான்!

‘‘ஜோதிட ரீதியாக மட்டுமல்ல, யதார்த்தமும் அதை நோக்கித்தான் போகிறது என்பதால்தான் ஆகஸ்டுக்குள் சிலவற்றைச் செய்யச் சொல்லி கலைஞர் குடும்பத்தினர் வற்புறுத்த.... ‘ஆகஸ்ட் வரை பொறுத்திருங்கள். அதன்பிறகு நமது திட்டங்களைச் செயல்படுத்தலாம்’ என்று மாறன் சகோதரர்களும் அணை போடுகிறார்கள்’’ என்கிறார்கள் பிரச்னையின் இந்தப் பரிணாமத்தை உணர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலர்!

இப்படி, பகுத்தறிவைத் தாண்டி ஜோதிடம் தனது பங்களிப்பைச் செய்ய.... அரசியல் அனுபவம் கொண்ட கலைஞரும், இளமை ரத்தம் துள்ளும் மாறன் சகோதரர்களும் தங்கள் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் தர முனைந்திருக்கும் இந்த இரண்டாவது காண்டத்தின் முடிவை அறிந்துகொள்ள இரு குடும்பங்களின் உறுப்பினர்கள் மட்டுமல்ல; அதிர்ச்சி கலந்த, உணர்ச்சிகள் நிறைந்த மனநிலையோடு கழக உடன்பிறப்புகளும் காத்திருக்கிறார்கள்

Nandri: For full report read Kumudam Reporter

ஜெயலலிதா தேர்தலில் நிற்க முடியாது - கருணாநிதி

முதல்-அமைச்சர் கருணாநிதி கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதிய சட்டப்பேரவை அமையும் இடம் குறித்து இன்று நானும், தலைமை செயலாளரும், துறை செயலாளர்கள், பொதுப்பணித்துறை அமைச் சர், உள்ளாட்சி துறை அமைச்சர் ஆகியோர் விவாதித்தோம். விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஓமாந்தூரார் அரசினர் வளாகத்தில் புதிய சட்டப் பேரவை கட்டும் பணி தொடங்கும்.

கேள்வி:- அங்கு அடிக்கல் நாட்டு விழா எப்போது நடக்கும்?

பதில்:- ஒப்பந்தப்புள்ளி ஏற்றுக் கொள்ளபபட்ட பிறகு அடிக்கல் நாட்டு விழா நடக்கும்.

கே:- இது உலக அளவிலான `குளோபல்' டெண்டராக இருக்குமா?
ப:- ஆமாம்.

கே:- தற்போது அந்த வளாகத்திலே உள்ள கட்டிடங்கள் எல்லாம் அப்படியே இருக்குமா?
ப:- சில கட்டிடங்கள் அகற் றப்பட வேண்டியிருக்கும். ஏற்கனவே நான் சொன்னவாறு மற்றும் புதிதாக கட்டப்பட்ட ராஜாஜி மண்டபம், எம்.எல்.ஏ.க்களுக்கான புதிய குடி யிருப்பு கட்டிடம் ஆகியவை அகற்றப்பட மாட்டாது. பழைய எம்.எல்.ஏ.க்கள் விடுதி அகற்றப்படும். கட்டிடத்துக்கான வரை படம் வந்த பிறகு அது பற்றிய செலவு விவரங்கள் தெரிய வரும்.

கே:- அது என்ன வடிவில் அமைய வேண்டும் என்ற எண்ணம் ஏதாவது உங்கள் மனதில் உள்ளதா?
ப:- அது எப்படி அமைய வேண்டும், எதை மாற்ற வேண்டும் என்று யோசனை சொல்லும் உரிமை உண்டு.

கே:- சென்னையில் விதிமுறை மீறி 75 ஆயிரம் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறி இருக்கிறாரே?
ப:- நாங்கள் எப்படி யோசனை செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம் என்றால், அதனால் ஏற்படும் தொல்லை, சிரமம் ஆகியவற்றையும், பெரிய சீமான் அல்லது பூமான் ஆகியோருக்கு மட்டுமல்ல நடுத்தர மக்களின் வீடுகளும் வாணிப நிலையங்களுக்கும் ஏற்படும்இடைïறுகளை தவிர்ப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வந்து மறுஆய்வு செய்யக் கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் சுப்ரீம் கோர்ட் டின் முன்னாள் நீதிபதி மோகன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து இருக்கிறோம்.
இது குறித்து கோரிக்கைகள் அனைத்தையும் பற்றி ஆய்வு செய்து பாதிக்கப்படுகின்ற வீடுகளின் சார்பாக சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளகுழுவோடுநீதிபதி மோகன் தலைமையிலான குழுவினர் கலந்து பேசி இயன்றதை செய்யக்கூடும் என்பதற்காகவே அரசு நல் லெண்ணத்துடன் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

கே:- ஹெல்மெட் அணிவது பற்றி அரசாணைகள் செய்தி வெளியீடுகள் மாறி மாறி வருவதால் குழப்பம் ஏற்படுகிறரே?
ப:- ஹெல்மெட் அணிவதில் நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று செயல்படுத்துகிறோம். அப்படி செயல்படுத்தும் போது டெல்லி போன்ற மாநகரங்களில் இப்போது சென்னையில் தளர்த்தி இருப்பதை போல் வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்கிற பெண் களுக்கும், குழந்தைகளுக் கும் விதி விலக்கு அளிக்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த விதி விலக்கு இங்கேயும் தேவை என்று வேண்டுகோள்கள் நிறைய வந்த காரணத்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு இங்கேயும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கே:- பின்னால் அமர்ந்து செல்லும் ஆண்களுக்கு இந்த விதி விலக்கு கிடையாதா?
ப:- டெல்லியில் பெண்களுக்குத்தான் விதி விலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் நீதி மன்றத்தின் உத்தரவுபடி நடக்க வேண்டியதாக உள்ளது. அதை மீறிப்போக முடியாது.

கே:- ஹெல்மெட் பற்றி பல செய்தி வெளியீடுகள் வந்ததால் இதுவரை அணிந்தவர்கள் கூட இப்போது அணிந்து கொள்ளாத ஒரு நிலை ஏற்பட்டு விட்டதே?

ப:- இது போன்ற பிரச்சினைகளில் அரசின் சார்பில் விளக்கங்களைத்தான் தர முடியுமே தவிர அதிகாரம் செய்யக்கூடாது. இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதிகாரத்தைப் பயன்படுத்துவதை நான் தனிப்பட்ட முறை யில் விரும்பவில்லை. நீதிமன்றங் களின் கருத்தை நாம் மதிக்க வேண்டும்.

கே:- அரசின் சார்பில் நீங்கள் வெளியிட்ட ஆணையை எதிர்த்தே செயல் படும் நிலைமை உருவாகி இருக்கிறதே?
ப:- எந்த முடிவு எடுத்தாலும் மூர்ச்சுத்தனமாக அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. மக்களின் கருத்து வேறாக இருந்தால் அதற்கு தகுந்தபடி மாற்றிக் கொள்வதில் தவறு இல்லை.

கே:- ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறுவது அவர்களுக்கு நல்லது செய்வதுதானே?
ப:- அவரவர்களின் பாதுகாப்பில் அவரவர்களுக் குத் தான் பொறுப்பு. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது?

கே:- ஜுன் முதல் வாரத்தில் டெல்லிக்கு செல்வேன் என்று கூறியிருந்தீர்களே?
ப:- 13, 14, 15 ஆகிய நாட்களில் டெல்லியில் என்னை இருக் கும்படியும், என்னுடைய பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் டெல்லியிலிருந்து எனக்கு தகவல் வந்திருக்கிறது. அதன்படி அந்தத் தேதிகளில் டெல்லியில் இருப்பேன்.

கே:- கோடநாடு எஸ்டேட்டில் விதிமுறைகள் நிறைய மீறப்பட்டிருக்கிறதே, அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?
ப:- மீறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பற்றி சில பத்திரிகைகளைத் தவிர, வேறு நீங்கள் யாரும் வெளியிடவில்லையே! கோடநாடு மலைப் பிரதேசம். மலைப் பகுதிகளில் வீடுகள் கட்டுவ தென்றால் கூட சிறப்பு அனுமதிகளைப் பெற வேண் டும். அங்கே கட்டப்பட்டிருப்பது வீடு அல்ல. ஒரு மாளிகையே கட்டப்பட்டிருக்கிறது. (முதல் -அமைச்சர் செய்தியா ளர் களிடம் கோடநாடு மாளிகை யின் பல புகைப்படங்களைக்காட்டினார். அதைப் பார்த்து விட்டு அவர்களே அது வீடல்ல என்றும், மாளிகை என்றும் கூறுகிறார்கள்) அந்தப்பகுதியின் மொத்தப் பரப்பளவு 43,585 சதுர அடியாகும். அதிலே கட்டப்பட்டுள்ள கட்டிடம் 38 ஆயிரம் சதுர அடி. இதிலே மாளிகை கட்ட எந்த அனுமதியும், கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதியும் பெறவில்லை.
இது யாருக்குச் சொந்தம் என்று விசாரிப்பதற்குக் கூட அங்கே செல்கிற அதிகாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அது தனக்குச் சொந்தம் இல்லை என்றும், தங்குவதற்காகத்தான் அங்கே சென்றதாகவும் அது பெரிதுபடுத்தப்படுவதாகவும் கண்டித்து அறிக்கை வெளி யிட்டிருக்கிறார். அவருக்கும் சசிகலாவிற்கும் அந்த மாளிகையில் உள்ள தொடர்பை இன்றைக்குக் கூட நான் வெளியிட்டிருக்கிறேன்.

அந்த நிறுவனத்தின் முதலீட்டுக் கணக்கை எடுத்துப் பார்த்தால் கேபிடல் அக்கவுண்டில் சசிகலாவிற்கு 1.4.2005 அன்று ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் ஆரம்ப முதலீட்டுத் தொகையாக இருந்துள்ளது. அதுவே 31.3.2006 தேதியில் இவருடைய இறுதி முதலீட்டுத் தொகை யாக உள்ளது. அதைப் போலவே ஜெயலலிதாவின் பெயரில் அந்த நிறுவனத்தின் முதலீட்டுத் தொகை, 1.4.2005 அன்று ஆரம்ப முதலீட்டுத் தொகை ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயாகவும், 31.3.2006 அன்று இறுதி முதலீட்டுத் தொகை ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயாகவும் இருந்துள்ளது. இது நேற்று நான் வெளியிட்டிருந்த ஆதார பூர்வமான தகவல்.

இன்றைக்கு எனக்கு ஒரு பிரபல பத்திரிகையாளர் மூலம் கிடைத்த தகவல். அது எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியாது. இந்தச் சொத்துக் கணக்கை 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது வேட்பு மனுதாக்கல் செய்த நேரத்தில் ஜெயலலிதா குறிப்பிட வில்லை என்றும் மறைக்கப்பட்டிருப்ப தாகவும் தகவல். அது உண்மையானால் நிரூபிக்கப் பட்டால் எதிர்காலத்தில் ஜெயலலிதா தேர்தலில் நிற்கவும் முடியாது. ஏற்கனவே வென்றிருப்பதும் செல்லாது.

கே:- இதுசம்பந்தமாக உங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுப்பீர்களா?
ப:- இப்போதுதான் நீங்கள் இந்தக் கேள்வி மூலமாக இந்த யோசனையைச் சொல்லியிருக்கிறீர்கள். யோசிக்கலாம்.

கே:- விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
ப:- சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்கிடையே நாங்கள் ஏதோ சோதனை செய்யப்போவதாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது பொய்.

கே:- ஜெயலலிதா வீட்டின் முன்னால் அ.தி.மு.க. தொண்டர்கள் கூடிக்கொண்டிருக்கிறார்களே?
ப:-சோதனை நடக்கப்போவதாக அவர்களே பிரச் சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.

கே:- ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நீங்கள் இரட்டை அர்த்தம் தொனிக்கும்படியாக எழுதியிருப்பதாக கூறியிருக்கிறாரே.
ப:- இரட்டை அர்த்தம், இரட்டை இலை எல்லாம் அங்கேதான், இங்கே கிடையாது. இரட்டை அர்த்தத்துடன் நான் எழுதவில்லை. அவர் மது அருந்துவதாக நான் எழுதியிருப்பதாக அவர் கூறுகிறார். நான் அப்படிச் சொல்லவே இல்லை. அவர் தான் ஏற்கனவே ஒரு முறை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மது அருந்தி விட்டு சட்டசபைக்கு வருவ தாகச் சொன்னார். அப்படி யெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியாது.

கே:- நீங்கள் கோபம் அதிகம் என்று எழுதியிருப்பதை அவர்கள் தானாகவே மது அருந்தியது அதிகம் என்று சொன்னதாக சம்மந் தம் இல்லாமல் சொல்லி யிருக்கிறார், அதுபற்றி?
ப:- அதற்கு நான் என்ன செய்வது? சம்மந்தம் இல்லாமல் சொல்லியிருக்கிறார் என்று நீங்களே சொல்கிறீர்கள்.

கே:- கல்விக் கட்டணங்கள் அதிகமாக உள்ளதாக பா.ம.க. தெரிவித்திருப்பதை பற்றி?
ப:- அரசாங்க கல்லூரிகளில் அல்ல, ஏற்கனவே அ.தி. மு.க. ஆட்சிக்காலத்தில் உயர்த் தப்பட்ட கல்விக் கட்டணங்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சியில் பல மடங்கு குறைக்கப்பட்டு விட்டது. சுய நிதி கல்லூரிகளில் ஒரு சிலர் கட்டணத்தை உயர்த்தியிருப்பதை பா.ம.க. சார்பில் எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்கள். அது பற்றி அரசு கவனிக்கும்.

கே:- மதுரை இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்கிறீர்களா?
ப:- தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்கிறேன், தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Nandri: Maalai Malar

பந்தை சுவரில் எறிந்தால்.....

"பந்தை சுவரில் எறிந்தால் அது திரும்பவும் உங்கள் பக்கம் தான் விழும்,' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் அறிக்கைக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:தங்கள் அறிக்கையில் வள்ளுவரின் வாக்கான "யாகாவாராயினும் நாகாக்க' என்று எழுதியிருப்பது ஒரு வழிப்பாதை அல்ல என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பந்தை சுவரில் எறிந்தால் அது திரும்பவும் உங்கள் பக்கம் தான் விழும்.

ஐந்து தடவை தமிழகத்தை ஆண்ட முதல்வரை 84 வயதான ஒரு மூத்தவரின் பிறந்த நாள் அன்று எத்தகைய வார்த்தைகளால் நீங்கள் அர்ச்சனை செய்திருந்தீர்கள். தி.மு.க.,க்காரன் அதைத் தாங்கிக் கொள்வானா? நீங்கள் வினை விதைத்தால் வினையை அறுத்துத் தானே ஆக வேண்டும். மற்றவர்களை வசைபாட உங்களுக்கு மட்டும் தான் உரிமையா? அதற்கு மற்றவர்கள் பதில் கொடுத்தால் வாங்கிக் கொண்டு தானே ஆக வேண்டும். மங்கல விழாவாம் ஒரு மணவிழாவில் தி.மு.க.,வை அழிப்பேன் என்று நீங்கள் சத்தியமிட்டு சபதம் எடுப்பதாக அறிக்கையும் கொடுப்பீர்கள். அதற்கு நாங்கள் பதிலளிக்கக் கூடாதா? கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த மாறன் இறந்து கிடந்த போது கூட அரசியல் நாகரிகமே இல்லாமல் தங்கள் வீட்டு வாசலில் பட்டாசு கொளுத்தினீர்களே அதற்கு பெயர் பண்பாடா?

உங்கள் அறிக்கைகளில், உங்கள் பேச்சுகளில் நீங்கள் எந்த அளவிற்கு கண்ணியமாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்களோ அதே அளவிற்குத் தான் எங்கள் பக்கம் இருந்தும் வார்த்தைகள் வரும். இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்

Nandri: Dinamalar

Tuesday, June 5, 2007

குடிக்கும் பழக்கம் கிடையாது - ஜெயலலிதா

முதல்வரின் சிலேடையான விமர்சனங்களால் காட்டமடைந்த அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா திடீரென ஆவேசமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். ""எனக்கு 59 வயதாகிறது. இன்றுவரை என் வாழ்நாளில் நான் மதுவைத் தொட்டது கிடையாது. ஆனால், எனக்கு குடிப்பழக்கம் இருப்பதுபோல் கருணாநிதி தரக்குறைவாக விமர்சிக்கிறார்,'' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 3ம் தேதி அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அ.தி.மு.க., அலுவலகத்தை இடிக்க சி.எம்.டி.ஏ., சார்பில் நோட்டீஸ் அனுப்பிய தகவலை தெரிவித்தார். அன்று வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்ததுடன், தி.மு.க.,வை அழிக்கப் போவதாக சபதம் வெளியிட்டார். இதனால் கோபமடைந்த முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் கேள்விபதில் அறிக்கை வெளியிட்டார். கட்சிப் பத்திரிகையில், "இந்திரசித்து' என்ற பெயரில் கவிதையும் வெளிவந்துள்ளது.

இதனால் ஆவேசமடைந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க., தலைமை கட்டடத்தை இடிக்கச் சொல்லி சி.எம்.டி.ஏ.,வில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதை சட்டரீதியாக நாங்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம். ஆனால், இதைப்பற்றி கருணாநிதி பேசுகையில், ஒரு முதல்வர் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை நாகரிகம் கூட தெரியாமல் கீழ்த்தரமாக பேசியும் எழுதியும் வருகிறார்.

சைதாப்பேட்டை பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசும்போது, பெண் என்று கூட பாராமல், என்னை மிகவும் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். அதில், "தொட்டால் தொடக் கூடாது என்கிறார். உங்கள் வீடுதான் இல்லையே தொட வேண்டாம் என்கிறீர்களே' என்றும், "நான் வீட்டைத் தொடுவதைத் தான் சொல்கிறேன்' என்றும் சிலேடையாக பேசியுள்ளார். அவரது கேள்வியும் நானே, பதிலும் நானே பேட்டியில், தி.மு.க.,வை அழிப்பேன் என்று ஜெயலலிதா சவால் விட்டிருப்பது பற்றிய கேள்விக்கு "நேற்று கொஞ்சம் அதிகமாகி விட்டது போலும், அதாவது கோபம்' என்று மிகவும் கீழ்த்தரமான முறையில் பதில் சொல்லியிருக்கிறார். இதுவும் சிலேடைப் பேச்சுதான். இதில் இரட்டை அர்த்தம் இருக்கிறது. "நேற்று அதிகம் போலும்' என்று சொல்வதன் மூலம் எனக்கு குடிப்பழக்கம் உள்ளது போன்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார் என்றே பொதுவாக எவரும் எண்ணக்கூடிய வகையில் சொல்லி, பிறகு "அதாவது கோபம்' என்று சொல்லி இருக்கிறார்.

இதற்கான விளக்கங்களை நீதிமன்றத்தில் சொல்ல வாய்ப்பு இல்லாததால் இவற்றை இந்த அறிக்கை வாயிலாக சொல்கிறேன். எனக்கு 59 வயதாகிறது. இன்றுவரை என் வாழ்நாளில் நான் மதுவைத் தொட்டது கிடையாது. எனக்கு குடிப்பழக்கம் இல்லை. மது அருந்தும் பழக்கம் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். மது அருந்தும் பழக்கத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அறவே வெறுக்கிறேன். என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் எனக்கு நெருக்கமானவர்களுக்கும் என்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் இது நன்றாக தெரியும். குடிப்பழக்கம் உள்ளவர்கள் என் இல்லப் பணியிலோ, அலுவலகப் பணியிலோ இருக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

மேலும், சொல்ல இயலாத நா கூசுகிற வார்த்தைகளில் கவிதை எழுதி இருக்கிறார். இவர் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசி, எழுதிக்கொண்டு இருந்தால் பெண் சமுதாயமும் அ.தி.மு.க.,வினரும் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இப்படியெல்லாம் கீழ்த்தரமாக பேசி, எழுதி முதல்வர் பதவிக்கே களங்கம் ஏற்படுத்தி வருவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன். அடுக்குமாடி வணிக வளாக கட்டடங்களுக்குத்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வரைமுறைக்குள் அ.தி.மு.க., கட்டடம் வராது. அ.தி.மு.க., கட்டடத்தை இந்த பட்டியலில் சேர்த்திருப்பதன் நோக்கம், அ.தி.மு.க.,வை கோர்ட்டுக்கு சென்று தடை உத்தரவு பெற்றால் அதை வைத்துக்கொண்டு மற்ற வணிக வளாகங்களை காப்பாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் தான். கொடநாடு எஸ்டேட் கட்டடம் 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுமில்லை; அதில் 90 அறைகளும் இல்லை. அங்கு கட்டப்படுகிற கட்டடத்துக்கு முறையாக அனுமதி பெறப்பட்டு உள்ளது. இந்த உண்மை விவரங்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு நியாயம் பெறப்படும்.

முதல்வர் பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று கருணாநிதி நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும். முதல்வர் என்பவர் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என்பதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும். "யாகாவாராயினும் நா காக்க, காவாக்கால், சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' என்ற திருக்குறளை கருணாநிதிக்கு நினைவுபடுத்துகிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Nandri: Dinamalar
----------------------------------------------------------------------------

From Dinakaran:

ஜெயலலிதா அறிக்கை: குடிக்கும் பழக்கம் எனக்கு கிடையாது

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:

அதிமுக தலைமைக் கழக கட்டிடத்தை இடிக்கச் சொல்லி, சி.எம்.டி.ஏ.வில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதைச் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் நாங்கள் சந்திப்போம்.

ஆனால், அதைப் பற்றி கருணாநிதி கூறுகையில், ‘‘நேற்று கொஞ்சம் ‘அதிகமாகிவிட்டது’ போலும். அதாவது கோபம்’’ என்று சொல்லி இருக்கிறார். இதில் இரட்டை அர்த்தம் இருக்கிறது. ‘‘நேற்று அதிகம் போலும் என்று சொல்வதன் மூலம் எனக்கு குடிப்பழக்கம் உள்ளது என்பது போன்ற அர்த்தத்தில் சொல்லி இருக்கிறார். எனக்கு 59 வயதாகிறது. இன்று வரை என் வாழ்நாளில் நான் மதுவை தொட்டது கிடையாது. எனக்கு குடிப்பழக்கம் இல்லை. குடிப்பழக்கம் உள்ளவர்கள் என் இல்லப் பணியிலோ அலுவலக பணியிலோ இருக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்படி எல்லாம் எழுதி வருவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.

தலைமைக் கழகத்தைப் பற்றி நான் பேசினால், தொடர்பே இல்லாத கோடநாடு எஸ்டேட் பற்றி கருணாநிதி பேசுகிறார். அந்தக் கட்டிடம் 50 கோடி ரூபாயில் கட்டப்படவில்லை. அதில் 90 அறைகளும் இல்லை. அங்கு கட்டப்படும் கட்டிடத்துக்கு அனுமதி பெறப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Nandri: Dinakaran (6-June-2007)

தமிழ்நாடு காங்கிரஸ்: கிருஷ்ணசாமி விலகல் ?

வேட்பாளர் அறிவிப்பில் கடும் அதிருப்தி கிருஷ்ணசாமி விலகல்? சோனியாவிடம் ராஜினாமா அளிக்க திட்டம்

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு போட்டியிட, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர் பி.எஸ்.ஞானதேசிகனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஞானதேசிகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடனேயே கிருஷ்ணசாமியும், அவரது மகன் விஷ்ணு பிரசாத்தும் அங்கு சோனியா காந்தியை சந்தித்து பேசுவதற்காக டெல்லிக்கு சென்றுள்ளனர். கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவும் கிருஷ்ணசாமி முடிவெடுத்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு காங்கிரசில் பல்வேறு கோஷ்டிகள் இயங்கி வருகின்றன. இந்த கோஷ்டிகளின் காரணமாக கட்சியில் பூசல்கள் அவ்வப்போது வெடிப்பது வழக்கம். தமிழ்நாட்டிலிருந்து மாநிலங் களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ள 6 பேரில் ஒருவர் காங்கிரசிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட வேண்டும்.

திமுக சார்பில் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, அதிமுக சார்பில் மைத்ரேயன், இளவரசன் ஆகியோர் ஏற்கனவே அறிவிக்கப் பட்டு அவர்கள் அனைவரும் தங்கள் வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து விட்டனர். காங்கிரசில் ஒரு இடத்திற்கு வழக்கம் போலவே கட்சியில் கடும் போட்டி நிலவியது. காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி அந்த சீட்டை பெற்று விட பெரும் முயற்சி மேற் கொண்டார்.

அதே சமயம் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான ஜெயந்தி நட ராஜனும் அதற்கு முயற்சித்து வந்தார். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத் தின் மகன் கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி. அன்பரசு உட்பட பலரும் இந்த ஒரு இடத்திற்கு போட்டியிட்டனர். ஆனால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஓசைப்படாமல் தனது ஆதரவாளரும், தற்போதைய எம்.பி.யுமான ஞானதேசிகனுக்கு அந்த சீட்டை பெற்றுத் தந்து விட்டார்.

ஞானதேசிகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கிருஷ்ண சாமியும், ஜெயந்தி நடராஜனும் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. ஜெயந்தி நடராஜனை விட கிருஷ்ணசாமி பெரும் ஏமாற்ற மடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து கிருஷ்ணசாமியும், அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஷ்ணு பிரசாத்தும் நேற்று மாலை உடனடியாக ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு கட்சியின் மேலிட நிர்வாகி அகமது பட்டேலை சந்தித்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மாநில தலைமையை உதாசீனப்படுத்தி வருவதையே இது காட்டுவதாக உள்ளது என்றும், மாநில தலைவராக தான் இருந்த போதிலும் இன்னும் நிர்வாகிகளை நியமிக்க முடியாமல் இருப்பதற்கு ஜி.கே.வாசனின் முட்டுக்கட்டைதான் காரணம் என்று கிருஷ்ணசாமி சுட்டிக் காட்ட வுள்ளதாக தெரிகிறது.

மாநிலங்களவை இடத்தை வாசனின் ஆதரவாளருக்கு மீண்டும் அளித்திருப்பது தங்களை கட்சி மேலிடம் உதாசீனப்படுத்துவதையே காட்டுகிறது என்றும், இதன் காரணமாக கட்சியில் உள்ள அன்னிய பிரதிநிதிகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அகமது பட்டேலிடம் எடுத்துச் சொல்ல விருப்பதாக தெரிகிறது.

தாங்கள் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டதை கண்டித்தும், எந்தவித அதிகாரமும் இல்லாத தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருப்பதை விட அதை ராஜினாமா செய்வதே நல்லது என்று கிருஷ்ணசாமி கருதுவதாகவும், அநேகமாக இன்று கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட போவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஞானதேசிகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அதை புறக்கணிக்கும் விதமாகவும், கிருஷ்ணசாமியும் அவரது மகன் விஷ்ணு பிரசாத்தும் டெல்லி சென்று விட்டதாகவும் செய்திகள் தெரிவிக் கின்றன.

ஜி.கே.வாசனுடன் காங்கிரஸ் மேலிட பிரதிநிதி வீரப்ப மொய்லியும் சேர்ந்து கொண்டு கட்சித் தலைமை யிடம் தவறான தகவல்களை சொல்லி ஒவ்வொரு முறையும் மற்ற பிரிவினருக்கு அநீதி இழைத்து வருவதாக கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் குமுறலுடன் தெரிவித்தனர்.

இதற்கு தங்களது எதிர்ப்பை மேலிடத்திடம் எப்படியும் தெரிவித்து விடுவது என்ற நோக்கத்துடன் கிருஷ்ண சாமியும், அவரது மகனும் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக் கின்றன.

Nandri: MaalaiSudar

Monday, June 4, 2007

யார் அந்த சக்தி - ராமதாஸ் பேட்டி

முதலாளித்துவ சக்திகளுக்கு துணை போன தயாநிதிமாறனை இனம் கண்டு வெளியேற்றிய முதல்வர் கருணாநிதியின் முடிவு வரவேற்கத்தக்கது என்று அவரது பெயரை குறிப்பிடாமல் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இடித்து தள்ளுவதில் கருணை காட்டக் கூடாது என்றும் அவர் கூறினார்.

சென்னையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று அளித்த பேட்டியின் விவரம் வருமாறு: சென்னை மாநகரில் விதிமுறைகளுக்கு புறம்பாகவும், ஆக்கிரமிப்பு செய்தும் கட்டப்பட்ட சுமார் 75 ஆயிரம் கட்டிடங்களை இடித்து தள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில் யாருக்கும் எந்தவித கருணையும் காட்டப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித் துள்ளது

"யார் அந்த சக்தி'


முதலாளித்துவத்திற்கு ஆதரவாக செயல்பட்ட சக்தியை முதல்வர் வெளியேற்றியது வரவேற்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் கூறிய போது, அந்த சக்தி யார் என்று பத்திரிகையாளர்கள் திரும்ப திரும்ப அவரிடம் கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதில் அளித்த டாக்டர் ராமதாஸ், "அந்த சக்தி யார் என்பது உங்களுக்குத் தெரியும். அண்மையில் அந்த சக்தி வெளி யேற்றப்பட்டதும் உங்களுக்குத் தெரியும். அது குறித்து விரைவில் தனியாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நான் நடத்தவிருக்கிறேன்' என்றார்.
இதனை எதிர்த்து அரசு சார்பாக மறு ஆய்வு மனு செய்யவிருப்பதாகவும், இந்த சட்டத்தை திருத்த நீதிபதி மோகன் தலைமையில் குழு அமைக் கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இவை எதுவுமே கூடாது. இவ்வாறு சட்ட மீறல் செய்பவர்களை காப்பாற்ற சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பியது இதைத்தான் புலப்படுத்துகிறது. இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதையே பாமக விரும்புகிறது.

கல்விக்கடன் நிறைய பேருக்கு கிடைக்கவில்லை. எனவே அரசாங்கமே உயர்கல்விக்கு அரசு பங்களிப்புடன் கூடிய திட்டம் ஒன்றை உருவாக்கி 3 சதவிகித வட்டியில் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும்.

நில உச்சவரம்பு சட்டத்தை கொண்டு வந்ததைதான் தன்னுடைய வாழ்நாள் சாதனையாக முதலமைச்சர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவருடனே இருந்து கொண்டு முதலாளித்துவ கொள்கைகளை நோக்கிச் சென்ற ஒரு சக்தி பற்றி நான் முதல்வரிடம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்.


அவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். இப்போது அந்த சக்தியை இனம் கண்டு முதலமைச்சர் வெளியேற்றி இருக்கிறார். இந்த நடவடிக்கை காலம் கடந்தது என்றாலும், அது வரவேற்கத்தக்கதே.

பாலாற்றில் அணைக்கட்டும் பணியை ஆந்திர அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதனை தடுக்க தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே, உச்சநீதிமன்றத்தின் விடுமுறை காலம் முடியும் வரை காத்திருக்காமல் உடனடியாக ஒரு அவசர மனுவை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்து அதனை விசாரணைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

கல்விக் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி நாளை ஜி.கே.மணி தலைமையில் சென்னையிலும், தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கல்வி மையங்களிலும் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் ராமதாஸ்.

பின்னர் நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து ராமதாஸ் கூறியதாவது: ஹெல்மட் அணிவது, பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு தடை போன்ற சட்டங்களை மக்கள் வரவேற்று அவர்களே நடைமுறைப் படுத்தவேண்டும்.

நலிந்த, ஏழை மக்கள் எந்த பிரிவினராக இருந்தாலும் அவர்கள் உயர்கல்வி பெற அரசு உதவ வேண்டும். இந்தியாவும், இலங்கையும் இணைந்து கூட்டு ரோந்து செல்வதோ அல்லது ஒருங்கிணைந்த ரோந்து செல்வதோ கூடாது என்ற நெடுமாறனின் கருத்துதான் என்னுடைய கருத்து.

ஜனாதிபதி வேட்பாளரை பொறுத்த வரை தோழமைக் கட்சிகள்குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு பாமக ஆதரவு அளிக்கும். இலங்கை போராளிக்குழுக்களால் இந்தியாவுக்கு வான்வழி மற்றும் கடல்வழி மூலம் ஆபத்து வரும் என்று சொல்வது கடைந்தெடுத்த பித்தலாட்ட பொய்ப்பிரச்சாரம் ஆகும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

Nandri: MaalaiSudar

Sunday, June 3, 2007

நிதி குறைவு; செம்மறி ஆடு வரவு

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., தொண்டர்களை நேற்று சந்தித்து கருணாநிதி வாழ்த்து பெற்றார். "திருப்பதி' கோவில் போன்று தடுப்புகள் அமைக்கப்பட்டு, தொண்டர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு தி.மு.க., தலைவரைச் சந்திக்க அனுப்பப்பட்டனர். முதல்வரைக் காண வந்த தொண்டர்களுக்கு ஆவின் பால்கோவா வழங்கப்பட்டது. மேடையில் அமர்ந்திருந்த கருணாநிதி, தொண்டர்களிடம் இருந்து சால்வை உள்ளிட்ட பரிசுப் பொருள்களை பெற்றார்.

* முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளின் போது, உண்டியல் வைக்கப்பட்டு நிதி வசூலிக்கப்படுவது வழக்கம். நேற்றைய பிறந்தநாள் நிகழ்ச்சியில், முதல்வர் பொது நிவாரண நிதிக்காக மேடையில் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான தொண்டர்கள் சால்வையை கொடுத்து விட்டு நிதியளிக்காமல் சென்றவண்ணம் இருந்தனர். உண்டியலுக்கு அருகே நின்றிருந்த ஸ்டாலின் பார்வையில் பட வேண்டுமென்பதற்காக, முக்கிய நிர்வாகிகள் உண்டியலில் நிதி செலுத்திவிட்டுச் சென்றனர்.

* சேலத்தை அடுத்த குளத்துõரைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகி ஒருவர் செம்மறி ஆடு ஒன்றை மேடைக்கு அழைத்து வந்து பரிசளித்தார். "நாய், மான் குட்டி, மயில், பசு மாடு, குதிரை என பல விலங்குகளை ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் முதல்வருக்கு பரிசாகக் கொடுத்து வந்துள்ளேன். கடந்த பிறந்தநாளன்று நான்கு குட்டிகளோடு சேர்ந்த ஆட்டை பரிசளித்தேன்' என்று அந்த நிர்வாகி பெருமையாகக் கூறினார். ஆயிரக்கணக்கில் செலவு செய்து பேர் வாங்குபவர்களை விட, ஆட்டைக் கொடுத்து இவர் பெயரைத் தட்டிச் சென்று விட்டாரே என தி.மு.க.,வின் முன்னணி நிர்வாகிகள் "கமென்ட்' அடித்தனர்.

* திருவண்ணாமலை நகராட்சித் தலைவர் ஸ்ரீதர் தலைமையிலான தி.மு.க.,வினர், 84 கிலோ எடையுள்ள வெள்ளியிலான யானை சிலைகள் இரண்டினை முதல்வருக்கு பரிசாக வழங்கினர். அதேபோல், 84 தட்டுகளில் பிறந்தநாளுக்கான சீர்வரிசையும் வழங்கினர்.

* எம்.ஜி.ஆர்., காலத்தில் புகழ் பெற்றிருந்த "மாஜி' எம்.எல்.ஏ., நெகமம் கந்தசாமி, முதல்வரை சந்திக்க பின்வாசல் வழியாக வர முயற்சித்தார். போலீசார் அவரை உள்ளே விடாமல் வரிசையில் வருமாறு திருப்பி அனுப்பினர். இதனால் நொந்து போன அவர், புலம்பியபடி அங்கிருந்து சென்றார்.

* தொண்டர்களை ஒழுங்குபடுத்த, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

-------------
முதல்வர் கருணாநிதி தனது 84வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், சோனியா உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை சி.ஐ.டி., காலனியில் உள்ள முதல்வரின் வீட்டில் மரக்கன்று நடப்பட்டது. ஈ.வே.ரா., அண்ணாதுரை நினைவிடங்களில் மலர் அஞ்சலி செலுத்திய முதல்வர், அங்கு தன் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் 84 புறாக்களை பறக்க விட்டார். கோபாலபுரம் வீட்டில் கேக் வெட்டி முதல்வர் பிறந்தநாள் கொண்டாடினார். தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன், கருணாநிதிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, கம்யூ., செயலர்கள் வரதராஜன், பாண்டியன், நல்லகண்ணு, ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், பா.ஜ., தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் முதல்வரை வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், கவர்னர் பர்னாலா, சோனியா, மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் உள்ளிட்டோர் முதல்வருக்கு டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தனர். கவர்னர் பர்னாலா சார்பில் அவரது மகன், முதல்வருக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார். பூந்தமல்லி பகுதி தி.மு.க., நிர்வாகி புண்ணியகோடிஅலமேலு ஆகியோர் தம்பதியாக முதல்வர் வீட்டுக்கு வந்து, அவர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அரசு பணியாளர் சங்கத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் புத்தகம் ஒன்றையும், தமிழ் வளர்ச்சித்துறை பணியாளர் சங்க நிர்வாகி குமார் நுõறு நெல்லிக்கனிகளையும் முதல்வருக்கு பரிசாக வழங்கினர்.

காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, புதுவை காங்., தலைவர் நாராயணசாமி, மத்திய அமைச்சர்கள் ஆஸ்கர் பெர்னாண்டஸ், அன்புமணி, எம்.எல்.ஏ.,க்கள் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், யசோதா, ஞானசேகரன், வசந்தகுமார், எம்.ஜி.ஆர்., கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா, பாக்கியராஜ் உள்ளிட்டோர் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் துணைவேந்தர்கள் க.ப. அறவாணன், அவ்வை நடராஜன் உள்ளிட்டோர் முதல்வர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


Nandri: Dinamalar